Posted in இலங்கை செய்திகள்

மாளிகாவத்தை நெரிசலில் பலியான சம்பவம் – 7 பேருக்கு விளக்கமறியல்

மாளிகாவத்தை நெரிசலில் பலியான சம்பவம் – 7 பேருக்கு விளக்கமறியல்

கொழும்பு – மாளிகாவத்தையில் நேற்று இடம்பெற்ற பண பங்கீடு சம்பவம்

தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரை எதிர்வரும் ஜூன் மாதம் நான்காம்

திகதி வரையில் விளக்கமறியளில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவு பிறப்பித்தது.

கொழும்பு – மாளிகாவத்தையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பணம்

பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள்

உயிரிழந்துள்ளனர்.68, 62, 59 வயதுடைய பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த நெரிசலில் சிக்கிய மேலும் 9 பேர் காயமடைந்;து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ஊடரங்கு சட்டம் அமுவில் உள்ள வேளையில் பணப்பகிர்வு இடம்பெற்றிருப்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மாளிகாவத்தை நெரிசலில்
மாளிகாவத்தை நெரிசலில்
      Posted in இலங்கை செய்திகள்

      ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு

      ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு

      கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு

      சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

      மே 24, ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

      கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை

      23, சனி இரவு 8.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 26,

      செவ்வாய் அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும். இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 8.00 மணி

      முதல் அதிகாலை 5.00 மணி வரை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

      கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கையை

      வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் நாளைய தினமும் நடைமுறையில் இருக்கும்

      அதேநேரம் மே,26 செவ்வாய் முதல் முன்னர் போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

      முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு

      சட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

          Posted in இலங்கை செய்திகள்

          யாழ் மாவட்டத்தில் வீடுகளில் நுளம்பு பெருக்கம்

          யாழ் மாவட்டத்தில் வீடுகளில் நுளம்பு பெருக்கம்

          யாழ் மாவட்டத்தில் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் வீட்டு உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை

          மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண பிராந்திய தொற்றுநோயியலாளர் வைத்தியர் S.மோகன குமார் தெரிவித்துள்ளார்.

          யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பாகவும் விழிப்பாக இருக்க

          வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் கொரோனா மற்றும் டெங்கு நோய்கள் தொடர்பாக அக்கறையுடன்

          சிந்தித்து செயற்பட்டால் மட்டுமே இந்த இரண்டு தொற்று நோய்களிலிருந்து வெற்றிகரமாக எங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும் கேட்டுகொண்டார்.

          உங்கள் வீடுகளில் உட்பகுதி மற்றும் சுற்றாடல் பகுதிகளில் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் உள்ளனவா என்பதை

          பரிசோதனை செய்து அப்புறப்படுத்த நடவடிக்கை நீங்களாகவே மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பரிசோதனையின்

          போது உங்கள் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் அடையாளப்படுத்தப்படுமேயானால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

          தற்பொழுது கொரோனா நோய் தொற்று அபாயம் தொடர்பில் நாம் அனைவரும் செயற்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்றி லிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சுகாதாரத்துறையினர்

          மற்றும் ஏனைய துறையினர் தொடர்ச்சியாக முயற்சித்து வரும் நிலையில் தற்போது நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக

          டெங்கு பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் எமது பிரதேசத்தில் கூடுதலாக காணப்படுகின்றது.

          கடந்த காலங்களில் டெங்கு தாக்கத்தினால் எமது மக்கள் பட்ட இன்னல்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே எனவே மக்கள் கொரோனா மற்றும் டெங்கு

          நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார திணைக்களத்தினரால் வழங்கப்படும் நடைமுறையினை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்.

              Posted in இலங்கை செய்திகள்

              அரேபிய நாடுகளில் வசிக்கும் 350 இலங்கையர்க்ளுக்கு கொரனோ

              அரேபிய நாடுகளில் வசிக்கும் 350 இலங்கையர்க்ளுக்கு கொரனோ

              இலங்கையை விட்டு அரேபிய நாடுகளில் வேலை தேடி சென்ற

              சுமார் 350 இலங்கையர்க்ளுக்கு கொரனோ நோயானது

              தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
              சவுதியில்

              பெரும்பாலான வெளி நாட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாடு அறிவித்திருந்தது

              தற்போது மேற்படி பாதிப்பு புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன

              குறித்த நபர்களது குடும்பங்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளன

                  Posted in இலங்கை செய்திகள்

                  வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்க நடவடிக்கை – கடுப்பில் வைத்தியர்கள்

                  வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்க நடவடிக்கை – கடுப்பில் வைத்தியர்கள்

                  வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 60 தொடக்கம் 61 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

                  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

                  இதன் போது நேற்று நடைபெற்ற அமைச்சரவையின் கூட்டத்தில் வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை இவ்வாறு

                  அதிகரிக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

                  வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக இருந்த போதிலும் விசேட வைத்தியர்கள் 63 வயது வரை பணியாற்று முடியும் என்று

                  தெரிவித்த அமைச்சர் ,இதேபோன்று ஏனைய அனைத்து தொலில் நுட்ப அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பாக

                  பரிதுரைகளை வழங்க குழு ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      சுவாச நோய் குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                      சுவாச நோய் குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                      தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் சுவாச நோய் Respiratory

                      ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

                      இதனால் சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனைகளை கடைபிடி ப்பது

                      முக்கியமானது என்று பிரிவன் பிரதான வைத்தியர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தள்ளார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1045 ஆக உயர்வு

                          இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1045 ஆக உயர்வு

                          இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1045 ஆக அதிகரித்துள்ளது.

                          இன்றைய தினத்தில் (2020.05.21) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 17 பதிய நோயாளர்கள்;

                          பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

                          இந்த நோயாளர்களில் இருவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த

                          கடற்படை அங்கத்தவர்கள். ஏனை 15 பேர் கிராகம தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு

                          உட்படுத்தப்பட்டுள்ளவர்கள். இவர்கள் டுபாயில் இருந்து வந்தவர்கள்.

                          இன்றைய தினத்தில் இதுவரையில் இலங்கையில் பதிவான கொரேனா வைரசு நோயாளர்களில் 604 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

                          இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 432 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

                          நேற்றைய தினத்தில் (2020.05.20) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின் எண்ணிக்கை 1108 ஆவதுடன் இத்தினத்தில்

                          அடையாளங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 01 ஆகும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

                              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                              யாழில் மனைவியுடன் கள்ள காதல் – காதலர்களை கட்டி வைத்து அடித்த கணவன்

                              யாழில் மனைவியுடன் கள்ள காதல் – காதலர்களை கட்டி வைத்து அடித்த கணவன்

                              யாழ்ப்பாணத்தில் தற்போது கள்ள காதல் சமாச்சாரம் அதிகரித்து வருகிறது


                              திருமணம் முடித்த பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை பாலியல் உறவுகள் அதிகரித்து செல்கிறது

                              இதனை கட்டு படுத்த முடியாத நிலையில் கணவன் ,மற்றும் பெற்றோர்கள் உள்ளனர் .


                              சம்பவ தினம் அன்று மனைவியின் கைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசி வந்த வாலிபர்கள் ,தகாத உறவு அழைத்துள்ளனர்

                              கணவன் வீட்டில் இருந்துள்ளார் ,இதனை அறியாத வாலிபர்கள் வாலிபர்கள் வழமை போன்று பாலியல் உரையாடல்கள் அடங்கிய

                              பதிவுகளை அனுப்பினார் ,இதனை அவதானித்த கணவன் மேற்படி விடயம் தொடர்பாக மனைவியிடம் வினவிய பொழுது அவர் நடந்தவற்றை விபிரித்துள்ளார்

                              அதே மனைவியை கொண்டு அழைப்பை ஏற்படுத்திய கணவர் அவர்களை மறைவான இடம் ஒன்றுக்கு வருமாறு அழைத்துள்ளனர்

                              பெண்ணின் பேச்சை நம்பி இரு வாலிபர்களும் காரில் வந்துள்ளனர்
                              அவ்வளவு தான் அங்கு கணவன் ,மற்றும் அவர்கள் நண்பர்கள்

                              மறைந்து காத்திருந்தனர் .இருவரை பிடித்து கட்டி வைத்து அடித்து நையப்புடைத்து விரட்டியுள்ளனர்

                              ஆமா உங்க மனைவி ஒழுங்கா இருந்தா ஏன் இவங்க வர போறானுக இவ்வாறு சந்தியடி வம்பர்கள் கேள்வியையையும் எழுப்பிட தவறவில்லை

                              யாழில் மனைவியுடன் கள்ள
                              யாழில் மனைவியுடன் கள்ள
                                  Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                                  போருக்கு பின் இலங்கையில் நடப்பது என்ன ..?- வெளிவர காத்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்

                                  போருக்கு பின் இலங்கையில் நடப்பது என்ன ..?- வெளிவர காத்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்

                                  இலங்கையி, இறுதி போர் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற தன் பின்னர் ,இலங்கையில்

                                  போருக்கு பிந்திய காலத்தில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான பல்வேறு


                                  பட்ட விடயங்கள் அடங்கிய ஆவண பதிவுகளை ஐரோப்பிய முக்கிய வெள்ளையர் ஊடகங்கள் காட்சி படுத்தி வருகிறது

                                  பத்து ஆண்டுகளில் தமிழர் பகுதிகளில் தமிழர்கள் சந்திக்கும் இன்னல்களை இது விவரிக்கிறது .
                                  இதுவரை வெளிவராத பல திடுக்கிடும் தகவல்கள் ,

                                  சிங்கள இராணுவ புலனாய்வாளர்களின் பல்வேறு பட்ட நாசகார தகவல்கள் சிங்கள இராணுவ அதிகாரிகள் மூலமே பெற பட்டு ஆவணமாக பட்டுள்ளதாம்

                                  அப்படி என்றால் இந்த காட்சிகள் வெளிவந்தால் கண்டிப்பாக சிங்கள இராணுவத்தில் , இரட்டை உளவாளிகளாக விளங்கும் முக்கிய

                                  சிங்கள இராணுவ தளபதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற படும் என அடித்து கூறலாம்

                                  எப்படி எப்போது இந்த ஆதாரங்கங்கள் வெளிவரும் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும் ,

                                  இது வெளிவந்தால் ஆளும் அரசாட்சி நிச்சமயமாக கவிழ்க்க படும் நிலையை இது ஏற்படுத்தும் ,

                                  ஏன் எனில் தமிழர்கள் பட்டது போலவே சிங்களவர்கள் பட்ட இன்னல்களும் காட்சி படுத்த பட்டுள்ளனவாம்

                                  விடயம் கொஞ்சம் வில்லங்கமானது ,தமிழர் அரசியல் தலைவர்கள் சிலரது தலையும் இதில் உருள போகிறது


                                  இதனை ஆவண படுத்திய அந்த நல்ல உள்ளங்களுக்கு உலக மக்கள் நன்றிகளை கூற கடமை படுவார் என்பது காட்சிகள் வெளிவந்த முதல் தெரியவரும்

                                  மீண்டும் சொல்கிறோம் சிங்கள அரசு தனக்கு தானே புதைகுழி வெட்டி கொள்கிறது ,

                                  அவர்களுக்கு ஆலோசகராக இருக்கும் தமிழர்கள் மாற்றி யோசித்து விடயத்தை விளங்க படுத்தி தீர்வு நோக்கி வேகமாக நகர வேண்டும்

                                  தவறின் மிக பெரும் அபாயத்தை இலங்கை மத்தி சந்திக்க போகிறது,சொலவ்து நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் ..ஆபத்து மிக அருகில் ….!

                                  • மாறன் –
                                      Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                                      சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்

                                      சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்

                                      இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளை கொச்சை படுத்தி பேசிய சுமந்திரனின் சர்ச்சை பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின

                                      அதனை அடுத்து எழுந்த மக்கள் கொந்தளிப்பபை தணிக்க சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பட்டு அவர் அந்த கட்சியில் இருந்து நீக்க படுவார் என எதிர் பார்க்க பட்டது

                                      ஆனால் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எவ்வித நகர்வையும் மேற்கொள்ளவில்லை


                                      கடந்த பத்து ஆண்டுகளாக தமிழீழ விடுதலை போரை கொச்சை படுத்தி பேசி வரும் சுமந்திரன் மீது செருப்படி நடத்த பட்டது

                                      ஆறாத வலியோடு பயணிக்கும் தமிழர்கள் மனதில் ஓங்கி அறை விட்டது போலவே சுமந்திரன் செயல் பாடுகள் அமைய பெற்றன

                                      கோத்தபாயவின் ஜனாதிபதி சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வை பெற்று தர போகின்றார் ..?

                                      ,புலிகள் ஆயுத போரை ஏற்று கொள்ள முடியாது என்பன போன்ற பல்வேறு பட்ட இழிநிலை பிரச்சாரங்களை சுமந்திரன் ,சம்பந்தரும் மேற்கொண்ட வண்ணமே உள்ளனர்

                                      ஆனால் சுமந்திரன் விடும் தவறுகள் அனைத்திற்கும் ஆதரவு வழங்கிய படியே சம்பந்தர் பயணிக்கின்றார்

                                      வரும் பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் ,சம்பந்தரை மக்கள் தோற்கடிக்க வேண்டும் ,

                                      இவர்கள் பதவிகள் அகற்ற பட்டு புதிய தலைவர்கள் நியமிக்க பட்டு கட்சி மறுசீரமைப்புக்கு உள்ளாக்க பட வேண்டும்

                                      இதனை செய்திட தவறினால் விக்கினேஸ்வரன் தலமையிலான அணியினரை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் ,

                                      அவர்கள் முள்ளி வாய்க்கால் படுகொலையினை தமிழ் இன அழிப்பு என்றே கூறி வருகின்றனர்


                                      ,ஆனால் தமிழ் தேசிய் கூட்டமைப்பு சுமந்திரன் ,சம்பந்தன் ,அது ஒரு போர்க்குற்றம் என்ற முழங்கி செல்கின்றனர்

                                      சுமந்திரன் புரியும் இழி செயல்களை இனியும் அனுமதிக்க முடியாது ,ஒன்று பட்டு மக்கள் எழுவதன் மூலமே

                                      தமிழர் தேசிய அறவழி போரை முன்னெடுத்து செல்ல முடியும் என்பதே,சுமந்திரன் செயல் பாடுகள் உணர்த்தியுள்ளன

                                      • வன்னி மைந்தன் –
                                          Posted in இலங்கை செய்திகள்

                                          தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்

                                          தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்

                                          இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பேரினவாத அரசு


                                          வீதிகளில் இராணுவ காவலரண்கள் அமைத்து இராணுவம் குவிக்க பட்டுள்ளது

                                          போர் வெறியுடன் தமிழர்களை அடக்கியாளும் நிலையில் சிங்கள பவுத்த

                                          இனவெறி இராணுவம் வீதியில் குவிக்க பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கவுரவ ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்

                                          போர் குணங்களுடன் ,போர்கால பகுதியில் எவ்விதம் நாட மாடினார்களோ

                                          அதே போன்ற செயலுடன் இராணுவம் வீதிகளில் இறக்கிவிட பட்டுள்ளது ,

                                          அனைவரும் புது முகங்கள் ,எனவும் தமது வாகனங்களை சோதனை செய்திட

                                          இராணுவத்தினர் தம்மை தாக்காத குறையாக அவர்கள் பார்வை மற்றும் உடல் அசைவுகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்

                                          மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஒரு பாரளுமன்ற உறுப்பினருக்கே இவ்வாறான

                                          நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எவ்விதம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும் ,இது தான் இன்றைய இலங்கை

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              இலவச நிவாரணம் வாங்க முண்டியடித்த நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி

                                              இலவச நிவாரணம் வாங்க முண்டியடித்த நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி

                                              இலங்கை மாளிகாவத்தை பகுதியில் இலவசமாக தனியார் வழங்கிய

                                              உணவு பொருட்டாக்களை வாங்கிட முண்டித்த மக்கள் கூட்ட நெரிசலை

                                              சிக்கி மூன்று பெண்கள் மூச்சு திணறி பலியாகினர்
                                              மேலும்

                                              நால்வர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                              மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  இலங்கையில் ஓட்டுக்கு காசு – தேர்தல் ஆணையம் ஆப்பு – கடுப்பில் கோட்டா

                                                  இலங்கையில் ஓட்டுக்கு காசு – தேர்தல் ஆணையம் ஆப்பு – கடுப்பில் கோட்டா

                                                  இலங்கையில் பாராளுமனற தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் மக்களை

                                                  கவரும் நோக்குடன் இந்தியாவை போல ஓட்டுக்கு பணம் வழங்கும் புதிய

                                                  நடைமுறையை மகிந்த குடும்ப ஆட்சி தொடக்கி வைத்துள்ளது

                                                  சமுர்த்தி நிறுவனத்தின் ஊடாக இந்த உதவிகள் கிராமம் தோறும் மக்களுக்கு வழங்க பட்டு வருகின்றன


                                                  இவை தேர்தல் நோக்கம் கொண்டவை என்ற நிலையில் தேர்தல் ஆணையாளர் கோட்டபாய மற்றும் மகிந்தவுக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளார்

                                                  இதனால் கோட்டா ,மகிந்த கடுப்பில் உறைந்துள்ளனர்

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு – நடப்பது என்ன ..?

                                                      யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு – நடப்பது என்ன ..?

                                                      யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ளள பாடசாலை ஒன்றின்

                                                      மாணவர் ஒருவர் காரைநகரில் தாயின் தயார் வீட்டில் தூக்கில்

                                                      தொங்கிய நிலையில் சடலமாக

                                                      மீட்க பட்டுள்ளார் இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தாரா அல்லது

                                                      கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டாரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது

                                                      இதுவரை யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று வாரத்திற்குள்ளாக 24 பேர்

                                                      இவ்விதம் மர்மமான முறையில் இறந்துள்ளமை குறிப்பிட தக்கது

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          புயலில் அடித்து செல்ல பட்ட 30 படகுகள் -இந்தோனேசியாவில் மிதப்பு

                                                          புயலில் அடித்து செல்ல பட்ட 30 படகுகள் -இந்தோனேசியாவில் மிதப்பு

                                                          சீரற்ற காலநிலை காரணமாக இலங்கைக்கு சொந்தமான 30 படகுகள்

                                                          இந்தோனேசியாவை அண்டிய கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.

                                                          அந்த படகுகளில் 180 மீனவர்கள் வரையில் பயணித்துள்ளதுடன் அவர்களுக்கு

                                                          எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

                                                          சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் பயணித்த படகுகள் அனைத்தும் இந்தோனேசியாவின் கடற்பகுதிக்கு அடித்துச் செல்ப்பட்டுள்ளது.

                                                          இது தொடர்பில் இந்தோனேசியா, நிகோபர் தீவுகள் மற்றும் இந்திய அதிகாரிகளை தெளிவுப்படுத்தியுள்ளதாக மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.

                                                          காலநிலை சீரடைந்தவுடன் 180 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்துவர

                                                          நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஆனால் தேவை ஏற்படின் உரிய நடவடிக்கைகளை

                                                          எடுக்கவுள்ளதாகவும் மீன்பிடி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              தொற்றுநோய் ஆபத்தில்லாத பிரதேசங்களில் பஸ் சேவைகள்

                                                              தொற்றுநோய் ஆபத்தில்லாத பிரதேசங்களில் பஸ் சேவைகள்

                                                              ஆபத்தானவையாக கண்டறியப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று மாகாணங்களுக்கு இடையிலான

                                                              பஸ் சேவைகள் நடத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

                                                              கொவிட்-19 நெருக்கடி காரணமாக, சில கட்டுப்பாடுகளுடன் பொதுப் போக்குவரத்து சேவைகளை நடத்துமாறு சுகாதார

                                                              சேவைகள் ஆலோசனை வழங்கியுள்ளன. இந்த ஆலோசனைகளுக்கு அமைய சேவைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

                                                              இதன் பிரகாரம், வேலைக்காக செல்லும் அரச-தனியார் ஊழியர்களுக்கு மாத்திரமே பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியம் அற்ற

                                                              தேவைகளுக்காக பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது. நிலைமை சீரடையும்

                                                              பட்சத்தில், எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைக்குக் கொண்டு வரக்கூடியதாக இருக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

                                                              ரயில் சேவையில், முன்பதிவு இன்றி அலுவலகம் நோக்கி பயணிக்கும் அரச-தனியார் ஊழியர்களுக்கு போக்குவரத்து

                                                              வசதிகளை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுடன் கூடிய பயணிகளுக்கு வசதிகள் வழங்கும் முறை

                                                              அமுலாக்கப்பட்டது. எனினும், 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவுகள் மேற்

                                                              கொள்ளப்பட்டிருந்தாலும், ஒன்பதாயிரம் பேர் வரை மாத்திரமே ரயில்களில் பயணித்திருக்கிறார்கள்.

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  கொழும்பு மா நகர வீதி வாகன தரிப்பிட கட்டண வசூல் மீண்டும் ஆரம்பம்

                                                                  கொழும்பு மா நகர வீதி வாகன தரிப்பிட கட்டண வசூல் மீண்டும் ஆரம்பம்

                                                                  கொழும்பு மா நகர வீதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தரிப்பிட கட்டண வசூல் நாளை முதல் மீண்டும்

                                                                  நடைமுறை;ப்படுத்தப்படும் என்று கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      578 கடற்படை சிப்பாய்களுக்கு கொரனோ தொற்று

                                                                      578 கடற்படை சிப்பாய்களுக்கு கொரனோ தொற்று

                                                                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் சிக்கி இதுவரை 578

                                                                      சிங்கள கடற்படை சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு

                                                                      உள்ளாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          யாழில் கள்ள காதல் உறவில் பிறந்த சிசுவை – மலசலகூடக் குழிக்குள் வீசிய பெண் கைது

                                                                          யாழில் கள்ள காதல் உறவில் பிறந்த சிசுவை – மலசலகூடக் குழிக்குள் வீசிய பெண் கைது

                                                                          பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

                                                                          புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.

                                                                          நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது.

                                                                          சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார்.

                                                                          நான்கு நாள்கள் ஆகிய நிலையில் சிசுவின் உடல் அழுகி, அயலில் உள்ள

                                                                          குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

                                                                          சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், தாயாரைக் கைது செய்தனர்.

                                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                                              ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரத்தை பாவிப்பதற்கு ஜனாதிபதி முற்படுகிறாரா? வைத்திய கலாநிதி சிவமோகன் கேள்வி

                                                                              ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரத்தை பாவிப்பதற்கு ஜனாதிபதி முற்படுகிறாரா? வைத்திய கலாநிதி சிவமோகன் கேள்வி

                                                                              முள்ளிவாய்க்காலில் மே 18 ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின் எமது தமிழினப் போராட்டத்தை அகிம்சை போராட்டமாக

                                                                              முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழர்களுக்கும் உள்ளது


                                                                              அந்த கடமையானது ஈழத்தமிழர்கள் உட்பட அதிகப்படியான உலகத் தமிழர்கள் அனைவருக்கும் உள்ளது அந்த விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது

                                                                              உலகெங்கும் தோன்றிய விடுதலைப் போராட்டங்கள் அதற்கான ஒரு முடிவு வரும்வரை அமைதி கொண்டதில்லை அதே நிலமையில்தான் ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள்

                                                                              எவரும் எந்த கருத்தையும் சொல்லி விட்டுப் போகலாம் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை ரீதியான பொறுப்பு ஈழத்தமிழர்களுக்கான விடுதலையை பெற்றுக் கொள்வது மட்டுமே

                                                                              அதுவும் சுயாட்சி ரீதியில் சிங்களவர்களுடன் எமது உரிமைகளை சரிக்கு சமனாக பகிர்ந்து கொள்ள வேண்டியவர்களாக நாங்கள்

                                                                              இருக்கின்றோம் அந்த அடிப்படையில் மட்டுமே நாங்கள் எமது அரசியல் பயணத்தை செய்கின்றோம் யாருக்கும் அடிமைகளாக

                                                                              எமது உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கு எந்த ஒரு ஈழத்தமிழனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்

                                                                              தமிழ் மக்களால் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் கோவிட் 19 சட்டங்களுக்கு உட்பட்டு அடக்கு முறைகளையும்மீறி நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது

                                                                              அதே நேரம் இலங்கை அரசாங்கம் பல்லாயிரக் கணக்கானோர் முன்னிலையில் இராணுவ வெற்றியை கொண்டாடப் போகிறார்கள்

                                                                              அங்கு கோவிட் 19 சட்டம் மதிக்கப்படுமா?
                                                                              இதிலிருந்து இவர்களின் பேரினவாத ரீதியான எண்ணங்கள் வெளிப்படுகிறது

                                                                              எனவே எப்படி முள்ளிவாய்க்கால் நிகழ்வை மிகவும் குறைந்த நபர்களுடன் நினைவு கூர்ந்தது போல் இராணுவ வெற்றியை

                                                                              ஐம்பதிற்கு உட்பட்ட இராணுவத்தினரை வைத்தே கொண்டாடப்பட வேண்டும்

                                                                              ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து கூடுவார்களானால் அவர்களே கோவிட் 19 சட்டத்தை மீறியவர்களாவார்கள் எனவே ஒரு

                                                                              சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசு இனவேற்றுமை காட்டக் கூடாது அப்படி வெற்றிக் கொண்டாட்டத்தை

                                                                              அதிகளவானவர்களுடன் கொண்டாடுவார்களானால் எந்த சட்டங்களையும் நடைமுறைப்படுத்த அருகதையற்றவர்களாகவே கணிக்கப்படுவார்கள்

                                                                              இன்று ஐநா சபையில் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்கான பொறுப்புக் கூறலை ஏற்றுக் கொண்டு மீள் நிகழாமையை உறுதிப்படுத்திக் நல்லினக்க ரீதியான அரசியல்

                                                                              நிலைப்பாட்டை எடுப்பதாக ஏற்றுக் கொண்ட இந்த இலங்கை அரசு ஒன்பது ஆண்டுகள் கடந்து ஐநா சபையில் அதை தூக்கி எறிந்தது எனவே இதற்கான ஒரு சரியா முடிவை சர்வதேசம் உடனடியாக

                                                                              எடுக்க வேண்டும் கொரோனா நோய் தமிழர்களை ஒருபோதும் கொன்றுவிடப் போவதில்லை ஆனால் இனப்பாகுபாடு கொண்ட

                                                                              இந்த அரசு மீண்டும் எம்மீதான இனப்படுகொலைகள் நடத்துவதற்கு காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவே தமிழர்கள் உணர்கிறார்கள்

                                                                              ஏனெனில் இன்று சகல அதிகாரங்களுக்கும் பெருந்தொகையான இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி இந்த அரசு சென்று கொண்டிருக்கிறது ஜனாதிபதி

                                                                              என்பவருக்கான அதிகாரம் 19வது திருத்தத்தின் கீழ் ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்தப்பட்டு சுதந்திர ஆணைக் குழு சுதந்திர தேர்தல் ஆணக் குழு என்று பல்வேறு ஆணைக்குழுக்கள்

                                                                              நியமிக்கப்பட்டிருந்தது இவை அனைத்தையும் உருக்குலைத்து இல்லாத அதிகாரத்தை பாவிப்பதற்கு தற்போது ஜனாதிபதி முற்படுவதாகவே தெரிகிறது

                                                                              அதில் ஒரு இடையூறு வருமிடத்து இலங்கை இராணுவ ஆட்சியாக மாற்றுவதற்கான கைங்கரியங்கள் மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகினறன எனவே இந்த விடயத்தில்

                                                                              அனைத்து தமிழ் சிங்கள மக்களும் ஒன்று சேர்ந்து இவ்வாறான விடயங்களை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்று

                                                                              வன்னியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்