புயலில் அடித்து செல்ல பட்ட 30 படகுகள் -இந்தோனேசியாவில் மிதப்பு

Spread the love

புயலில் அடித்து செல்ல பட்ட 30 படகுகள் -இந்தோனேசியாவில் மிதப்பு

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கைக்கு சொந்தமான 30 படகுகள்

இந்தோனேசியாவை அண்டிய கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த படகுகளில் 180 மீனவர்கள் வரையில் பயணித்துள்ளதுடன் அவர்களுக்கு

எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் பயணித்த படகுகள் அனைத்தும் இந்தோனேசியாவின் கடற்பகுதிக்கு அடித்துச் செல்ப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்தோனேசியா, நிகோபர் தீவுகள் மற்றும் இந்திய அதிகாரிகளை தெளிவுப்படுத்தியுள்ளதாக மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலநிலை சீரடைந்தவுடன் 180 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்துவர

நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஆனால் தேவை ஏற்படின் உரிய நடவடிக்கைகளை

எடுக்கவுள்ளதாகவும் மீன்பிடி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *