Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் ஒரேநாளில் -12 பேர் மரணம்

வீதி விபத்தில் ஒரேநாளில் -12 பேர் மரணம்

இலங்கையில் காந்த 24 மணித்தியாலத்தில் நடந்த வீதி விபத்துக்களில்

சிக்கி சுமார் 12 பேர் மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாக ஏற்படும் இவ்விதமான விபத்துக்களில்

சிக்கி பெரும் தொகையில் ஒரேநாளில் மக்கள் பலி இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

Posted in இலங்கை செய்திகள்

அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக சிங்கள புதிய காணொளி வெளியீடு

அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக சிங்கள புதிய காணொளி வெளியீடு

இலங்கையில் இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் ஆலோசகர்

ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் சிறுவர் ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் எனவும் ,இவர் ஆயுத பயிற்சி பெற்றவர்

எனவும் கூறி அவரை உடனே கைது செய்ய வேண்டும் என இலங்கை அரசு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது

அதில் விடுதலை புலிகள் தொடர்ப்பிலான பாரிய குற்றச் சாட்டுக்களை சிங்கள அரச பயங்கரவாதம் வைத்துள்ளது ,புலிகளை துடைத்து அழித்துவிட்டோம் என்கிறது

ஆனால் இப்பொழுது அவர்கள் மீள் எழுச்சி கொள்கின்றார்கள் என்ற கோணத்தில் போலியான பரப்புரையை புரிந்து ,ஐக்கிய நாடுகள்

மனித உரிமையை திசை திருப்பும் நகர்வில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா

கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா

கிளிநொச்சி பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர்

சுற்றிவளைப்பின் பொழுது மறைத்து வைக்க பட்டிருந்த சுமார் 2,685 கிலோ கஞ்சா மீட்க பட்டுள்ளது

போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

புலிகளை அழித்த நோர்வே அனுசரணை சாமாதான ஓப்பந்தம்

புலிகளை அழித்த நோர்வே அனுசரணை சாமாதான ஓப்பந்தம் –

இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடர் அமர்வு தொடர்பில் தனது அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ

அரசாங்கம், தமிழ் ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக, 2002ம் ஆண்டு இதேநாளில் (பெப்ரவரி 22) நோர்வே

அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் குறித்தும் தனதறிக்கையில் குறித்துரைத்துள்ளது.

குறிப்பாக இந்த சமாதான ஒப்பந்தத்தின் ஊடான சர்வதேச சக்திகளின் தலையீட்டின் காரணமாக மனித உரிமைகள்

பாதுகாக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கிட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழர்களுக்கு, அடுத்தடுத்த நிகழ்ந்தேறிய நிகழ்வுகள், 2009 முள்ளிவாய்க்கால்

இனப்படுகொலை முடிவாக நிரூபித்திருந்ததோடு, ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சக்திகள் தமது புவிசார் அரசியல் காரணிகளை

கருத்தில்கொண்டு தமிழர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்த விடயத்தினை வெளிக்காட்டிய 2012 வெளிவந்த ஐ.நா. உள்ளக

மறுஆய்வு அறிக்கையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று, சிறிலங்கா தொடர்பாக முகன்மை குழு ஐ.நாவில் சமர்ப்பித்த ஆரம்ப (ணநசழ னசயகவ) தீர்மானம வரைவு, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களால்

பாதிக்கப்பட்டவர்களுக்கு பூச்சிய (ணநசழ ) வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சிய பொறுப்புக்கூறலை வழங்குகிறது என்பதோடு,

நாங்கள் தார்மீக கோபம் அடைகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைத்துள்ளது.

2009ம் ஆண்டு பெரும் இனப்படுகொலையொன்றின் ஊடாக தமிழர் தேசம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தீவில் தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான

அரசியல்வெளி என்ற நிலையில், தமிழர்கள் மீண்டும் சர்வதேச நிறுவனங்களை, குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையை , நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக திரும்பவும் நாடினார்கள் என்பதனை

சுட்டிக்காட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், போரின் போதோ அதற்குப் பின்னரோ தமிழர்களுக்கு எதிரான

இனப்படுகொலையினை புரிந்தவர்கள் எவருக்கும் தண்டனையோ, எதிரான வழக்கோ தொடரப்படவில்லை; எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தனதறிக்கையில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அசராங்கம்,

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிறிலங்காவை பரிந்துரைப்பதன் மூலம் மட்டுமே பொறுப்புக்கூறலை அடைய முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஐ.நா உயர்

ஆணையாளர் பேரவைக்கு அனுப்பிய தனது அறிக்கையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பு நாடுகளை

வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளார். ஐ.நாவின் முன்னாள் உயர் ஸ்தானிகர்கள், முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும்

சிறிலங்கா தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர்களின் நிபுணர் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் கடந்த பெப்ரவரி 18ம் நாளன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டுமென ஐ.நா மனித உரிமைச்சபை உறுப்பு நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில் எழுதியுள்ளனர். இந்த கோரிக்கை சமீபத்திய பி 2

பி பேரணியில் (பொத்துவில் முதல் பொலிகண்டி வரை) பல்லாயிரக்கணக்கான மக்களால் உறுதிப்படுத்தப்பட்டது. 2011ம்

முதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இக்கோரிக்கையினை ஐ.நாவுக்கான மனுவில் தெரிவித்திருந்ததோடு,ஒரு மில்லியன் கையொப்பங்களை பெற்று வலியுறுத்தி 2015ம் ஆண்டில் வலியுறுத்தியிருந்தது.

சிறிலங்கா தொடர்பான முகன்மை குழு சமர்ப்பித்த ஆரம்ப (Zero Draft Resolution) தீர்மானம வரைவு, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள்

புரிந்தவைர்களை பொறப்புக்கூற வைப்பதில் தோல்வியடைகிறது. நீதிக்காக போராடும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பூச்சிய ( Zero )

வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சிய பொறுப்புக்கூறலை வழங்குகிறது. இதனால் நாங்கள் தார்மீக கோபம் அடைகிறோம்.

பேரவையின் கடமைகளையும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதற்கான உலகளாவிய அறைகூவலை பூர்த்தி செய்யவும் ஒரு புதிய தீர்மானத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கிறது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த அமர்வு ‘மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் மிக உயர்ந்த நியமங்களை நிலைநிறுத்துவது’, ‘மனிதனின்

முழுமையான செயல்பாட்டை ஊக்குவித்தல்’ உள்ளிட்ட நோக்கத்தையும் கொள்கைகளையும் நிலைநிறுத்துவதோடு மேம்படுத்துதல், ‘நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித

உரிமைகளை காக்கும் கடமைகள்’,’ மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு பங்களிப்பு செய்தல் ‘ ஆகியவற்றை காப்பாற்ற வேண்டும். என குறித்துரைத்துள்ளதோடு,

உலகெங்கிலும் உள்ள இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு ஆளானவர்கள்

நீதிக்காக மனித உரிமைகள் பேரவையையே நாடுகின்றனர் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்தி – நீதிமன்றத்தினை நாட வேண்டிவரும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்தி – நீதிமன்றத்தினை நாட வேண்டிவரும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் அமைதியான முறையில், பிரென்சு மண்ணில் மேற்கொண்டு வரும் அரசியல் செயற்பாடுகளுக்கு, ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின்

செய்திகள் குந்தகம் விளைவிப்பதாக குற்றஞச்சாட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அராங்சகத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள், இவ்விடயத்தில் உண்மைத்தன்மை வெளிக்கொணர நீதிமன்றத்தில் முறையிட வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் தலைநகர் பரிசின் அமைந்துள்ள தமிழர் வர்த்தக மையப்பகுதியாக லாச்சப்பலில், வர்த்தக நிலையமொன்றின் மறைவிடத்தில் இருந்து, காவல்துறை சோதனையொன்றின் போது மீட்கப்பட்ட தங்கம், பெருமளவு பணம் தொடர்பில் விடுதலைப் புலிகளை இணைத்து செய்தி வெளியிட்டிருந்தமை பிரான்ஸ் தமிழர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட நபர், ‘விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்றும், இலங்கையின் பிரிவினைவாத செயற்பாடுகளுக்காக பண சேகரிப்பில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் செய்தியில் குறிப்பிட்டிருந்தமை தமிழ்உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இவ்வியடம் தொடர்பில் பிரதான பிரென்சு ஊடகங்களுக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்த கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகளின் கடிதத்தில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட நபருக்கும் தமிழீழ புலிகளின் இயக்கத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த இந்த சந்தேகங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. உண்மை முற்றிலும் வேறுபட்டது.

இந்த உண்மைகளின் யதார்த்தத்தை எந்தவொரு விசாரணையும் செய்யாமல் இத்தகைய குற்றச்சாட்டுகள் பிரெஞ்சு ஊடக ;பரப்பில் பரப்பப்படும் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது.

சட்டத்தின் ஆட்சி கொண்ட பிரான்ஸ் நாட்டில் நாங்கள் இருக்கிறோம். இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான நீதிக்கும், அரசியல் இறமைக்குமான வெளி இல்லா நிலையில், நாங்கள் பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி வாழ்ந்து வருகின்றோம்.

தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களாகிய நாம் எமக்கான நீதி கோரி போராடி வருவதோடு, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழ்மக்களாகிய நாம், எமக்கான நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் பிரென்சு மண்ணில் நாம் அமைதியான முறையி;ல் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு இவ்வாறான ஆதரமற்ற செய்திகள் குந்தகம் விளைவிப்பதாக கருதுகின்றோம்.

எங்கள் கருத்துக்களை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுவதோடு,செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உங்கள் ஆதாரங்களின் உண்மைத்தன்மை குறித்து உங்கள் விழிப்புணர்வை நாங்கள் கேட்கிறோம்.

எங்கள் கோரிக்கை உங்களின் கவனத்திற்கு ஈர்க்கவில்லை என்றால், இந்த விடயத்தில் நீதிமன்றத்தினை நாட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தமது கடித்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு எதிராக இந்தியா செல்படாது – இலங்கை ஆரூடம்

இலங்கைக்கு எதிராக இந்தியா செல்படாது – இலங்கை ஆரூடம்

இலங்கையுடன் மிக சிறந்த நட்புடனும் ,பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்புடன் செயல்படுகிறது ,இவ்வாறான வேளையில்

இந்தியா எமக்கு எதிராக ஒரு போதும் செயல்படாது என பீரீஸ் தெரிவித்துள்ளார்

கொழும்பு துறைமுக விடயம் பெரும் சல சலப்பை ஏற்படுத்திய நிலையில் மேற்படி விடயத்தை இவர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகை

பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகை

பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான்கான் இன்று இலங்கைக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ,

இரண்டு நாட்கள் இங்கே தங்கி இருக்கும் இவர் இரு நாடுகளுக்கு இடையிலான அபிவிருத்தி ,மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பேசுவார்

எனவும் புதிய ஒப்பந்தங்களில கைச்சாத்திடுவார் எனவும் தெரிவிக்க பட்டுளள்து

இவரது இந்த வருகை இந்தியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு வந்தடைந்த 500,000 கொரனோ தடுப்பூசிகள்

இலங்கைக்கு வந்தடைந்த 500,000 கொரனோ தடுப்பூசிகள்

இலங்கைக்கு சுமார் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளது

பிரிட்டன் Oxford-AstraZeneca மருந்துகளே இவ்விதம் வந்தடைந்துள்ளது

இதனை அடுத்து வரும் நாட்களில் பல லட்சம் பேருக்கு இந்த ஊசிகள் செலுத்த படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

மரணவீட்டுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்தது – 13 பேர் காயம்

மரணவீட்டுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்தது – 13 பேர் காயம்

இலங்கை நுவரெலியா நானு ஓயா பகுதியில் பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று

சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து விபத்தில்சிக்கியது ,இதன்பொழுது

அதில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்


மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த பொழுதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஐநா மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பம் – நெருக்கடியில் இலங்கை

ஐநா மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பம் – நெருக்கடியில் இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பமாகிறது

நாற்பத்தி ஆறாவது கூட்டத் தொடரில் இலங்கை புரிந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரேரணைகள் கடுமையான மொழிவுகளுடன் முன் வைக்க பட்டுள்ளன

இந்த விடயத்தில் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ,இந்த கூட்ட தொடர் தமிழர்கள் எதிர்பார்க்கும்

தீர்வினை பெற்று தருமா என்பதை முடிவில் தெரிய வரும் என தமிழர் தேசம் நம்புகிறது

Posted in இலங்கை செய்திகள்

நெடுந்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம் – கண்ணீரில் உறவுகள்

நெடுந்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம் – கண்ணீரில் உறவுகள்

இலங்கை நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி சென்ற இரு

மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது


சமீப நாட்களாக தமிழர் பகுதிகளில் பலர் மர்மமாக படுகொலை செய்யப்பட்டு

வரும் நிலையில் இந்த காணாமல் போதலும் இடம்பெற்றுள்ளது இங்கே சுட்டி காட்ட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்

தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்

இலங்கை யாழ்பாணம் தொண்டமனாறு கடல் பகுதியில் நீராட

சென்ற பதினேழு வயது வாலிபர் ஒருவர் நீரலையில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளார்

எனினும் அவர் மீட்க பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் 445 பேர் மரணம்

இலங்கையில் கொரனோவால் 445 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 445 பேர் இதுவரை மரணமாகியுள்ளனர்

தொடர்ந்து இந்த நோயின் பரவல் கட்டு படுத்த நடவடிக்கை மேற்கொள்ள

பட்டு வருகின்ற பொழுதும் ,மக்கள் உயிர் பலியை தடுக்க முடியாது அரச நிர்வாகம் தினறி வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

இலங்கை கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்

பொலீஸ் விசாரணை

,தற்போது நாம் கிளிநொச்சி காவல்துறையினரை தொடர்பு கொண்டு வினவியபோது இறப்பை உறுதி படுத்திய அவர்கள் இது ஒரு தற்கொலை என்றனர்

நாம் இது திட்டமிப்பட்ட படு கொலையாக உள்ளதாக சந்தேகம் உள்ளது என்ற பொழுது ,விசாரணைகள் இப்பொழுது ஆரம்பிக்க

பட்டுள்ளது என்றும் ,விரைவில் இது தொடர்பான முழுமையான விபாரங்கள் தெரிய படுத்த படும் என போலிசார் நமக்கு தெரிவித்தனர்

பளை,முரசுமோட்டை வாலிபர்

பளை,முரசுமோட்டையை பூர்வீகமாக கொண்ட சுமார் நாப்பது வயது மதிக்க தக்க இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்

சகோதரன் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார் இன்னும் வரவில்லை என அவரை தேடி சென்ற பொழுது ,அவரது வாகனம் குறித்த பகுதியில் நிற்பதை கண்ணுற்ற சகோதரன் ஒடி சென்று பார்த்த

பொழுது அவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி உற்றுள்ளனர் ,அதன் பின்னர் போலீசாருக்கு தெரிய படுத்த பட்டுள்ளது

சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த படுகிறது

kirupa

மர்ம கொலைகள்

கோத்தபாயவின் ஆட்சியில் தொடராக இவ்விதமான மர்ம கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,தனி நபர் ,அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது

இறந்தவர் இவ்விதமான தற்கொலையில் ஈடுபடும் சிந்தனை கொண்டவர் அல்ல என்பதே உறவினர்கள் வாதமாக உள்ளது

இந்த மர்ம கொலைகள் பின்னால் உள்ளவர்கள் கண்டுபிடிக்க பட்டு தண்டிக்க படுவார்களா ..?

யாழில் கடலில் வாலிபர் சடலம் – இந்த செய்தியை பாருங்கள் மர்ம கொலைகள் பட்டியல் தெரிய வரும் ,கோட்டா அரசின் மக்களை அச்சுறுத்தும் கொலைகளில் இதுவும் ஒன்று

Posted in இலங்கை செய்திகள்

ஸ்ரீ கருமாரி அம்மன் அரநெறி பாடசாலை photo

ஸ்ரீ கருமாரி அம்மன் அரநெறி பாடசாலை

புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்டம் நண்பர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கருமாரி அம்மன் அரநெறி பாடசாலை

மாணவர்களின் பொங்கள் விழா நேற்று (21) ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பொழுது பொங்கள் பொங்கள் பூஜை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கள் ஆகியன நடைபெற்றன.

Posted in இலங்கை செய்திகள்

புத்தர்சிலை உடைத்தவர் சகோதரி – முஸ்லீம் தீவிரவாதி என கைது

இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதம் மேற்கொண்ட முஸ்லீம் மக்களுக்கு எதிரான சொத்தழிப்பு ,மற்றும் மனித குல தாக்குதலினால் கொதித்து போன முசுலீம் வாலிபர்கள் சிலர் இணைந்து புத்தர் சிலைகளை உடைத்தெறிந்தனர்

பொய் வழக்கு

அவ்விதம் உடைக்க பட்ட நபர்களது குடும்பங்களை சேர்ந்த பெண்களை ,இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலின்

பொழுது சகரான் பயிற்சி வழங்கியதாக கூறி கைது செய்யப் பட்டுள்ளனர்

இந்திய போலீசாரை மிஞ்சிய பொய்வழக்கு பதிவு செய்து பழிவாங்கும் அரசியலில் ஆளும் இரத்த தமிழ் இனக் கொலையாளி கோட்டா அரச நிர்வாகம் மேற்கொண்ட வண்ணம் உள்ளது

புலிகள் எழுச்சி

தமிழர்கள் சிலர் வடக்கில் மீளவும் புலிகளை எழுச்சி கொள்ள செய்யு போராட்டத்தை ஆரம்பிக்க முற்பட்டார்கள் என

ஆயுதங்களுடன் கைது செய்தனர் ,இவ்வாறு கைது செய்தவர்களில் பலர் புனர்வாழ்வு பெற்று சமூக வாழ்வில் இணைக்க பட்டவர்கள் ஆகும்

Posted in இலங்கை செய்திகள்

சகரானிடம் பயிற்சி பெற்ற இளம் பெண் குண்டுதாரி கைது

இலங்கையில் தொடராக இடம் பெற்ற பாரிய குண்டு வெடிப்புக்களை முன் நின்று நடத்திய இலங்கை முஸ்லீம்

இலங்கை முஸ்லீம் பயங்கரவாதி

பயங்கரவாதி சகரானிடம் பயிற்சி பெற்ற இருபத்தி நான்கு வயது பெண்மணி ஒருவர் குற்ற தடுப்பு பிரிவினரல கைது செய்ய பட்டுள்ளார்

விசாரணை

கைதானவர் உரிய முறை விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,

இடம்பெற்று வரும் விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் அம்பலத்திற்கு வர கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

பாகிஸ்தான் அதிபர் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை வருகை

எதிர் வரும் வாரம் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இலங்கை வரவுள்ள நிலையில் அவருக்குரிய

பாதுகாப்பினை வழங்கும் நோக்குடன் இலங்கைக்கு அவரது பாதுகாப்பு துறையினர் வருகை தந்துள்ளனர்

அவர் செல்ல போகும் சாலைகள் ,மற்றும் தங்குமிடங்கள் என்பனவற்றை

இவர்கள் ஆராய்ந்ததன் பின்னரே அவர் அங்கு வருகை தரவுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

இலங்கை நெத்திபலகம பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் முற்றி படுகொலையில் முடிந்துள்ளது

முப்பத்தி எட்டு வயதுடைய நபரை இவ்வாறு படுகொலை செய்ய பட்டுள்ளார் ,

சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,மேற்படி

கொலையை புரிந்த நபர் கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுளளார்


இலங்கையில் இவ்விதமான மரணங்கள் தற்போது அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

ஒரே நாளில் வீதி விபத்தில் 15 பேர் மரணம்

ஒரே நாளில் வீதி விபத்தில் 15 பேர் மரணம்

இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்

இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி பதின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்

இவர்களில் எட்டு பாதை சாரிகள் மற்றும் ஊந்துருளி ஓட்டுனர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்

இலங்கையில் நாள்தோறும் விபத்துக்களில் நால்வர்

பலியாகிவருகின்றனர் என்ற புள்ளி விபரம் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது