Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஆடம்பர வாகனங்களை திருட்டுதனமாக இறக்குமதி செய்த அமைச்சர்
ஆடம்பர வாகனங்களை திருட்டுதனமாக இறக்குமதி செய்த அமைச்சர்
வெளிநாடு ஒன்றில் இருந்து ஆடம்பர Hummers ரக வாகனங்கள் இரண்டினை அமைச்சர் ஒருவர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது .
கொழும்பு துறைமுகத்தில் கொண்டனர் மூலம் ,வந்திறங்கிய இந்த ஆடம்பர Hummers வாகனங்களே சட்டவிரோதமாக இறக்குமதி, செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிது .
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு ,வரி செலுத்தாது இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையே ,சட்டவிரோதமாக, இறக்குமதி செய்யப் பட்டுள்ளது என படுகிறது .
இலங்கை அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா .
நாய்களை நஞ்சு வைத்து கொன்ற பயங்கரம்
நாய்களை நஞ்சு வைத்து கொன்ற பயங்கரம்
இலங்கை பட்டிவெள்ள பகுதியில் ஆறுக்கு மேற்பட்ட நாய்கள் நஞ்சு வைத்து கொலை செய்யப் பட்டுள்ளன .
இதில் குட்டி ஈன்ற நாய் ஒன்றும் ,இவ்வாறு நஞ்சு வைத்து கொலை செய்யப் பட்டுள்ளது .
மிகவும் திடகாத்திரமான நாய்கள் ,இருந்திருப்பது பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இறந்த தாயில் சென்று குட்டி பாலூட்டும் காட்சிகள் பார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது .
அருகில் உள்ள கோழி பண்ணை வைத்துள்ள நபரே ,இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம்
நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம்
நீண்டகாலமாக பல்வேறு நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான வழிகாட்டல் நூல் இன்று (11) காலை கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.
நோய் நிவாரணம், சிகிச்சை, புனர்வாழ்வளிப்பு, நோயாளர்களின் மனநலம் மற்றும் ஆன்மீக மேம்பாடு என்பனவற்றுக்கான வழிகாட்டல்களை உள்ளடக்கியதாக, இது
அமைந்துள்ளது என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் திருமதி லக்ஷ்மி சேமதுங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் பொது மக்கள் சுகாதார சேவை பிரிவும் இலங்கை நிவாரண சேவை ஆய்வு நிலையமும் இணைந்து நூலை தொகுத்துள்ளன.
உலக சுகாதார ஸ்தாபனம் வளவாளர் பங்களிப்பை வழங்கியுள்ளது.
பகிடிவதையால் 169 மாணவர்கள் கல்வியை விட்டு ஓட்டம் .
பகிடிவதையால் 169 மாணவர்கள் கல்வியை விட்டு ஓட்டம் .
இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்த்தில், மூத்த மாணவர்களினால் இளைய மாணவர்களுக்கு நடத்த பட்ட பகிடிவதை காரணமாக ,169 மாணவர்கள் கல்வியை கைவிட்டு, வீடுகளுக்கு தப்பி ஓடியுளளதாக ,அந்த பல்கலைக்கழக பீடாதிபதி தெரிவித்துள்ளார் .
கடந்த 13 வருடங்களில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இலங்கையில் பகிடிவதை இடம்பெற்றால் ,அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க படும் என்கின்ற சட்டம் ,அமூல் அப்டுத்த பட்டால்
இவ்வாறு மாணவர்கள்கல்வியை இடை விட்டு தப்பி ஓடமாட்டார்கள் என்பது குறிப்பிட தக்கது.
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

சந்திரிக்காவுடன் கூட்டணி வைக்க தயாராகும் ரணில் கொதிக்கும் ராஜபக்சாக்கள்
சந்திரிக்காவுடன் கூட்டணி வைக்க தயாராகும் ரணில் கொதிக்கும் ராஜபக்சாக்கள்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் ,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தமது ஆட்சியில் அங்கம் வகிக்கும் நிலைக்கு இட்டு செல்கிறார் .
முக்கிய சில பதவி களை வழங்கி அவரை தமது ஆட்சியுடன் இணைத்து செல்லும் நகர்வில் ஈடுபட்டு செல்கிறார் .
இது தமது கட்சியை பல படுத்துவதுடன் .உலக நாடுகளின் நன்மதிப்பை பெற்று கொள்ளும் நோக்குடன் ரணில் விக்கிரமசிங்கா பயணிக்கிறார் ..
இந்த ரணிலின் திடீர் நகர்வு ராஜபக்ஸ்சா குடும்பத்தை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ராஜபக்ச குடும்பம் ,வீதிக்கு செல்லும் இடர் நிறைந்த காலமாக மாற்றம் பெறும் என்பதை சமகால நிலவரங்கள் காண்பிக்கின்றன.
.
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

சிரட்டை கைவினைப் பொருள் முல்லைத்தீவில் அசத்திய பெண்கள்
சிரட்டை கைவினைப் பொருள் முல்லைத்தீவில் அசத்திய பெண்கள்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில், சிரட்டை கைவினைப் பொருள் பயிற்சி நெறியினை நிறைவுசெய்த, 20பெண் தலைமைத்துவக் குடும்ப அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அவர்களினால் தயாரிக்க பட்ட ,சிரட்டைக் கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர் ரவிகரன் அவர்கள் கலந்து சிறப்பித்து ,பயனாளர்களை பாராட்டி ,ஆக்கமும் ஊக்கமும் ,வழங்கினார் .
பெண்களினால் எப்போதும் தணித்து வாழ்ந்திட முடியும் என்பதை ,இந்த நிகழ்வின் ஊடாக நிரூபித்து காட்டியுள்ளனர் .
சிரட்டை கைவினைப் பொருள் முல்லைத்தீவில் அசத்திய பெண்கள்
எம்மிடம் உள்ள பொருட்களை மைய படுத்தி ,அதன் ஊடாகவே எமது வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்திட முடியும் என்கின்ற ,முன் அறிவிப்பை , இந்த துணிச்சல் மிக்க பெண்கள் அசத்தி காட்டியுள்ளனர் .
இந்த கைவினை பொருட்களை பார்க்கும் பொழுது, மெய் சிலிர்க்க வைக்கிறது .இதனை அமேசான் போன்ற தளங்களில் விறபனைக்கு விடலாம் .
உலக மக்கள் ,குறிப்பாக வெள்ளையர்கள் அதிகம் இதனை விரும்பி வாங்கி கொள்வார்கள் ,நீங்களே விலையை தீர்மானிக்கலாம் .
இவ்வாறான தொழிலில் நம்பிக்கை ,விரைவு வினியோகம் என்பனவை முக்கியமானதாகும் .அதனை கவனத்தில் கொண்டு செயல் பட்டால் நமது இலங்கை தன்ணிறைவு உள்ள நாடக மாற்றம் பெறும் .





- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள் வணக்கநிகழ்வு.
லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள் வணக்கநிகழ்வு.
இலங்கை – இந்திய கூட்டுச்சதியால் பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 35 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்டு பலாலி படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த
இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
யாழ். மாவட்ட தளபதி
லெப்.கேணல் குமரப்பா
(பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
திருமலை மாவட்ட தளபதி
லெப்.கேணல் புலேந்திரன்
(குணநாயகம் தருமராசா – பாலையூற்று, திருகோணமலை.)
மேஜர் அப்துல்லா
(கணபதிப்பிள்ளை நகுலகுமார் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.)
கப்டன் பழனி
(பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
கப்டன் கரன்
(வைத்திலிங்கம் மனோகரன் – சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.)
கப்டன் மிரேஸ்
(தவராஜா மோகனராஜா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
கப்டன் நளன்
(கணபதிப்பிளளை குணேந்திரராஜா – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.)
லெப்டினன்ட் அன்பழகன்
(தேசோமயானந்தம் உத்தமசிகாமணி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
லெப்டினன்ட் தவக்குமார்
(சோமசுந்தரம் பாக்கியராஜா – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட்
(கபிரியேல் பேனாட் மரியநாயகம் – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார்
(ஞானபிரகாசம் பிரான்சிஸ் அலோசியஸ் – மணற்காடு, யாழ்ப்பாணம்.)
இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்ட போது 06.10.1987 அன்று
கப்டன் ரகுவப்பா
(இராஜமாணிக்கம் ரகுமான் – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்.)
ஆகியோரும் வீரசாவினைத் தழுவிக் கொண்டார்கள்.
இன்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் இலண்டன் சட்டன் பகுதியில் நினைவு கூரப்பட்டது .
நிகழ்வின் பொதுச்சுடரினை திருமதி சாமினி கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியினை லெப்டினன் கேணல் புலேந்திரன் அவர்களின் மகன் திரு. சீலன் அவர்கள் ஏற்றிவைத்தார் . தொடர்ந்து ஈகைச்சுடரினை திருமதி சுஜி ஆனந்த் ஏற்றி வைத்தார் .
தாயாக விடுதலை போரிலே வீரச்சாவை தழுவி கொண்ட மாவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தபட்டது .
தொடர்ந்து, திருவுருவப்படத்திற்கான மலர்மாலையை சுபாசினி மற்றும் றஜனி அவர்களும் அணிவித்தார்கள்.
லெப் கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள் வணக்கநிகழ்வு
தொடர்ந்து மக்கள் மலர்வணக்கம் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தினார்கள் .
இந்நிகழ்வில் எழுச்சி நடனங்கள், நினைவெழுச்சி உரைகளை தொடர்ந்து 2022 ல் எக்செல் ( Exel) மண்டபத்தில் நடைபெற இருக்கும் மாவீரர்நாள் பற்றிய விடயங்கள் மக்களுடன்பகிரப்பட்டு துண்டுப் பிரசுரங்களும் கையளிக்கபட்டது.
நிறைவாகத் தமிழீழ தேசியக்கொடி கையேந்தலுடன்,
தமிழீழம் கிடைக்கும் வரை தொடந்து பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.




- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

இலங்கை இராணுவத்தினர் 1500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவத்தினர் 1500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவம் தோற்றம் பெற்று 73 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ,இலங்கை இராணுவத்தின் முக்கிய நிலைகளில் உள்ள 372 அதிகாரிகளுக்கும் ,அதன் கீழ் நிலையில் உள்ள 1,127 இராணுவ சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது .
இராணுவ தளபதியின் பரிந்துரையினால் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் ஒப்புதலுடன், இந்த பதவி உயர்வுகள் வழங்க பட்டுள்ளன .
இந்த வருடத்தில் மட்டும் 7.499 பேருக்கு இலங்கை இராணுவம் பதவி உயர்வு வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது .
மக்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை
மக்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை
அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர
முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நேற்று (09) மோசமாக நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸாருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
மக்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை
பிள்ளைகளுடன் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்களிடம் பொலிஸார் கடுமையாக
நடந்துக்கொண்டு அவர்களது மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் அச்சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட உயர்
அதிகாரிகள் தொடர்பில் தகவல்களை வழங்க வேண்டுமென
பொதுமக்களிடம் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள்
சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாரிய விபத்து ஒருவர் மரணம் 6 பேர் காயம்
பாரிய விபத்து ஒருவர் மரணம் 6 பேர் காயம்
இலங்கை அத்துருகிரிய வெளிப்பகுதியில் அமைக்க பட்ட அதிவேக சுற்றுவட்ட பகுதியில் கார் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது ஒருவர் மரணமாகியும் ,ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இலங்கையில் நாள் தோறும் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
யாழ் மீனவர்கள் வலையில் சிக்கிய சுறா மகிழ்ச்சியில் மீனவர்கள்
யாழ் மீனவர்கள் வலையில் சிக்கிய சுறா மகிழ்ச்சியில் மீனவர்கள்
யாழ்ப்பாண பருத்துறை மீனவர்கள் வலையில் 14 சுறா மீன்கள் சிக்கியுள்ளன .
இவை யாவும் 2000 கிலோவுக்கு அதிகமானவை என தெரிவிக்க படுகிறது .
இதன் இன்றைய இலங்கை மதிப்பு 19 லட்சம் என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த மீன்கள் கொழும்புக்கு கூலர் வாகனங்கள் மூலம் ஏற்றுமதி செய்ய பட்டுள்ளது என்கின்றனர் மீனவர்கள் .
இந்த பெரிய சுறா மீன்கள் சிக்கிய நிலையில் பருத்துறை மீனவர்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.
தெரிவுக் குழு தீர்மானம் எடுக்காவிட்டால் சர்வசன வாக்கெடுப்பொன்று நடத்தப்படுமாம்
தெரிவுக் குழு தீர்மானம் எடுக்காவிட்டால் சர்வசன வாக்கெடுப்பொன்று நடத்தப்படுமாம்
பாராளுமன்றத் தேர்தல் முறை தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை முன்மொழிவதாகவும், அந்த தெரிவுக்குழு, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்காவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
• தேர்தல் முறையில் பல திருத்தங்கள்
• உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைப்பதற்கு நடவடிக்கை
• தேர்தல்களுக்கு செலவிடப்படும் நிதி தொடர்பில் வரையறை
• அரசியல் கட்சி விதிகள் தொடர்பில் கவனம்
• உறுப்பினர்களின் நடத்தை மற்றும் நெறிமுறைகள் தொடர்பில் புதிய விதிகள் பாராளுமன்றத்தில் முன்வைப்பு
• அரசியல் கட்சிகள், போராட்டத்தின் பக்கம் சாய்ந்தாலும், போராட்டம், அரசியல் கட்சிகளின் பக்கம் சாயவில்லை.
-ஜனாதிபதி தெரிவிப்பு.
தெரிவுக் குழு தீர்மானம் எடுக்காவிட்டால் சர்வசன வாக்கெடுப்பொன்று நடத்தப்படுமாம்
நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தற்போதுள்ள அரசியல் முறை மையினை நிராகரிப்பதால், அவர்கள் விரும்பிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
அதன்படி, அடுத்த தேர்தலுக்கு முன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள்) உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இலிருந்து 4000 வரை குறைக்கப்படும் என்றும் “மக்கள் சபை” வேலைத்திட்டமும்
அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரம் தவிசாளர் என்ற ஒற்றைத்
தலைவருக்குச் செல்வதற்குப் பதிலாக தவிசாளர் தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அடுத்த பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு சட்ட வரைவு தயாரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசியலில் ஊழல் தலைதூக்க முக்கிய காரணம் விருப்பு வாக்கு முறையே என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உடனடியாக விருப்பு வாக்கு முறையற்ற பட்டியல் முறை அல்லது கலப்பு முறை ஒன்றை (ஒற்றை மற்றும் விகிதாசார முறை) கொண்ட தேர்தல்
முறைமைக்கு செல்ல வேண்டும் எனவும் தேர்தலில் செலவிடப்படும் நிதிக்கும் தேர்தல் சட்டம் மூலம் வரையறைகள் இடப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தெரிவுக் குழு தீர்மானம் எடுக்காவிட்டால் சர்வசன வாக்கெடுப்பொன்று நடத்தப்படுமாம்
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,
இன்று இந்த நாட்டில் இரண்டு பிரதான பிரச்சினைகள் உள்ளன.
ஒன்று பொருளாதாரத்தின் வீழ்ச்சி. இரண்டாவது, நாட்டின் பெரும்பான்மையான மக்களால் இந்த நாட்டின் அரசியல் முறைமை நிராகரிக்கப்பட்டுள்ளமை ஆகும். இந்தப் பொருளாதாரச் சரிவு அரசியல் முறைமையினால் ஏற்பட்டது என்று பலர் கூறுகின்றனர்.
பொருளாதாரத்திற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் கதைத்துள்ளோம். ஆனால் அரசியல் வேலைத்திட்டத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இன்று எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாட்டின் அரசியல் முறைமை தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர்
. பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களையும் தியவன்னா ஆற்றில் தள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.
அவ்வாறு தனி நபர்கள் கூறவில்லை. அரசியல் முறைமையை அவர்கள் ஏற்காததால் தான் அவ்வாறு கூறுகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் இந்தப் போராட்டங்களை அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கவில்லை. அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு மக்கள் வரவில்லை.
மக்கள் தனித்தனியாக முன் வந்தனர். துரதிர்ஷ்டவசமாக, மே மற்றும் ஜூன் மாதங்களில், ஒவ்வொரு அரசியல் அமைப்பும் இந்த எதிர்ப்பு இயக்கத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டன.
அதனுடன் வன்முறையும் வெடித்தது. வன்முறையின் மூலம் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி இடம்பெற்றது .
அதனால் அன்றைய போராட்டம் வீழ்ச்சி அடைந்தது.
இந்த அரசியல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் தற்போதும் கூறுகின்றனர். வன்முறையை யாரும் விரும்புவதில்லை.
இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த மனோபாவத்தை மாற்றிக்கொண்டே நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
கட்சி முறைமையினால் பாராளுமன்றத்தில் இன்று பல்வேறு குழுக்கள் உருவாகியுள்ளன. நான் ஜனாதிபதியாவதற்கு ஆளுங்கட்சியின் ஆதரவைப் பெற்றேன். இது ஒரு இரகசியம் அல்ல.
சிறு பகுதியினர் மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர். அதனால் எனக்கு இரு தரப்பிலும் வாக்குகள் கிடைத்தன.
குறுகிய கட்சி பேதமின்றி மக்கள் நலனுக்காக நான் பணியாற்றுகிறேன். தற்போது எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, பாராளுமன்றத்தில் தேசிய சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் குழுக்கள் போன்ற குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இவைகளை நிறைவு செய்ய முடியவில்லை.
சிலர் தேசிய சபையில் இணைந்துள்ளார்கள் சிலர் வருவதில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்றே நாடு எதிர்பார்க்கிறது. நாம் இத்தோடு நின்றுவிடக் கூடாது.
மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை சிந்தித்து அதன்படி செயல்பட வேண்டும். கிராம மட்ட அரசியலால் மக்கள் சலிப்படைந்து விட்டதால் இன்று புதிய கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். அது அரசாங்கமல்ல, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, மக்கள் சபை முறையை முன்வைத்துள்ளார்.
ஒவ்வொரு தொகுதியிலும், அந்த கிராமத்தில் உள்ள பொது அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒரு குழுவாக பணிகளை செய்ய வேண்டும்.
அதுதான் மக்கள் சபை ஆகும். அந்த முறை நல்லது. இந்த அமைப்பு முன்பு கிராமோதய சபை என்ற பெயரில் இருந்தது.
அது அரசாங்கத்துடன் தொடர்புடையதொன்று, இது அரசாங்கத்துடன் தொடர்புடையது அல்ல. இந்த மக்கள் சபைத் திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கிறோம்.
மக்கள் சபைகள் இயங்கும் போது பிரதேச சபைகளுடன் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். மக்கள் சபைகளை அகற்ற பிரதேச சபைகளுக்கு அனுமதி இல்லை.
நாம் எப்படி இணைந்து செயல்பட வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும். பிரதேச சபை முறைமை தொடர்பில் பல கேள்விகள் உள்ளன. பல பிரதேச சபைகள் இலாபம் கூட பெறுவதில்லை. வரிப்பணத்தை நம்பி இருக்கிறார்கள்.
பணம் பெறும் நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் சம்பளம் வழங்குவதற்கு அப்பணத்தை பயன்படுத்துகின்றன. எனவே இந்த முறையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
ஆனால் கடந்த முறை நான்காயிரம், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், எட்டாயிரமாக அதிகரிக்கப்பட்டனர். நாடு அவ்வாறு கேட்கவில்லை.
கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி இந்த பணியை செய்தார்கள். எனவே, அடுத்த தேர்தலுக்கு முன்னர் எட்டாயிரத்தை நான்காயிரமாக குறைக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் அந்தச் சட்டங்களைத் திருத்துவோம். இந்த திட்டத்தை அங்கிருந்து ஆரம்பிக்கலாம். மேலும் மற்றொரு அவசர திருத்தம் உள்ளது. இந்தப் பிரதேச சபைகளின் நிறைவேற்றுத் தலைவர்களாக தவிசாளர்கள் உள்ளனர்.
இதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பிரதேச சபை முறைக்கு முன்னர், நகர சபைகள் மற்றும் கிராம சபைகள் இருந்தபோது அத்தகைய அதிகாரம் இருக்கவில்லை. எனவே பிரதேச சபைகளின் நிறைவேற்று அதிகாரத்தை நிறைவேற்றுக் குழுவிற்கு வழங்குவோம் .
அதன் தலைவர் தான் பிரதேச சபையின் தவிசாளர். இப்போது நிதிக் குழுக்கள் உள்ளன. அவ்வாறான ஒரு நிறைவேற்றுக் குழுவை உருவாக்குவோம்.
அடுத்த பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்த இரண்டு விடயங்களையும் நிறைவேற்ற வேண்டும். அதற்குத் தேவையான சட்ட வரைவை தயார் செய்யுமாறு அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம்.
மேலும் விருப்பு வாக்கு முறையை பலர் விரும்புவதில்லை. விருப்பு வாக்கு முறைமை பற்றி யாரும் முதலில் சிந்திக்கவில்லை. ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் மிக ஆழமாக சிந்தித்து 1975 இல் பட்டியல் முறையை முன்மொழிந்தார்.அது ஏனைய கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .
அதன்படி நாம் நகர சபைத் தேர்தலை நடத்தினோம். மாநகர சபைத் தேர்தல் நடந்தது. மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் நடைபெற்றது.
அந்த முறைமையை வெற்றிகரமாக நாம் முன்னெடுத்துச் சென்றோம்.
ஆனால் 1988 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இருந்த கட்சிகள் திடீரென பட்டியல் முறைக்குப் பதிலாக விருப்பு வாக்கு முறையைக் கொண்டு வர முடிவு செய்தன.
ஒரு விருப்பு வாக்கு அல்ல, 03 விருப்பு வாக்குளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டது. அதேபோல், 196 ஆக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 ஆக அதிகரித்தனர்.
இந்நாட்டு அரசியலில் ஊழல் மோசடிகளுக்கு முக்கிய காரணம் விருப்பு வாக்கு முறையே ஆகும். எனவே நாம் புதிய தேர்தல் முறையொன்றைத் தயார் செய்ய வேண்டும்.
விருப்பு வாக்கு முறை இல்லாத பட்டியல் முறை அல்லது கலப்பு முறை (ஒற்றை மற்றும் விகித முறை) இவ்விரண்டில் ஒன்று பற்றி கலந்துரையாடிய பின்னர் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்.
எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் தீர்மானம் எடுத்து புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும்.
அப்போது பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இன்று கட்சிகளிடையே உடன்பாடு இல்லை. பிரதான கட்சிகளுக்கு ஒன்று கூறுகின்றனர், சிறிய கட்சிகளுக்கு ஒன்றை கூறுகின்றனர்.
இப்படி முன்னோக்கிச் செல்ல முடியாது. அரசியல் கட்சிகள் இது தொடர்பில் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
நான் நீதி அமைச்சருடனும் கலந்துரையாடினேன். நாம் பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானிப்பதற்கு தெரிவுக்குழுவொன்றை முன்மொழிய இருக்கிறோம். இதை தள்ளிப் போட முடியாது.
ஏனெனில் ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் தீர்மானமெடுக்க முடியாவிட்டால், நான் எந்த முறை சிறந்தது என்று மக்களின் கருத்துகளைப் பெற சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவேன்.
இதுபற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும். அந்த முறை குறித்து பேசப்பட்டு வருகிறது.
கலந்துரையாடி பொருத்தமான ஒரு முறை தெரிவு செய்யப்படும்.
எனவே பாராளுமன்றத்தின் தெரிவுக் குழு அது தொடர்பான செயற்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நான் இது தொடர்பான பொறுப்பை மக்கள் முன்னிலையில் விட்டுவிடுவேன்.
நாம் இதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இன்று தேர்தலுக்காக அதிக பணம் செலவிடப்படுகிறது. நான் 77 இல் பழைய முறையில் தான் தேர்தலில் போட்டியிட்டேன்.
அப்போது செலவு கட்டுப்படுத்தப்பட்டது. இன்று, சிலர் தேர்தலுக்காக 20-30, 50 மில்லியன் செலவிடுகின்றனர்.
இவற்றை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது? இந்த தேர்தல் முறையால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடைபட்டுள்ளனர். அப்படியானால், தேர்தல் சட்டத்தின் மூலம் தேர்தலுக்குச் செலவழிக்கக்கூடிய பணத்திற்கு வரையறைகள் வேண்டும்.
77 இல் தேர்தலில் நான் போட்டியிட்ட போது அந்த வரையறைகள் இருந்தன. அப்படித்தான் எமக்கு பணியாற்ற வேண்டியிருந்தது. போஸ்டர் ஒட்ட முடியவில்லை.
அப்படியானால், தேர்தலில் செலவிடப்படும் பணத்துக்குக் கட்டுப்பாடுகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மற்றுமொறு விடயமும் இருக்கிறது.இன்று நமது அரசியல் கட்சிகளில் இளைஞர்கள் இல்லை. பலர் பழையவர்களுடன் பெயரளவில் வேலை செய்கிறார்கள்.
அப்படியானால், அரசியல் கட்சிகளின் யாப்பு, அவற்றின் செயல்பாடு, உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி, மத்திய குழுக்களைத் தேர்ந்தெடுப்பது, எப்படி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது என்று விடயங்கள் குறித்தும் தனியான சட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.
தற்போது ஜெர்மனி போன்ற நாடுகளில் அரசியல் கட்சி சட்டம் என்று சட்டங்கள் உள்ளன. அதன்படி செயல்பட வேண்டும். நிதி வசூலிப்பது எப்படி, நிதி வசூலிக்க முடியாத சந்தர்ப்பங்கள் என்ன என்பதற்கான விதிகள் உள்ளன.
அப்போதுதான் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட முடியும். அதற்கு எதிராக யார் வேண்டுமானாலும் நீதிமன்றம் செல்லலாம்.
வெளிப்படைத்தன்மை இருப்பதால், தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்த நாட்டு பாராளுமன்றம், அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுக்கின்றன. தேர்தலுக்கும் பணம் வழங்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்களில் இருந்து பெறாமல் பாராளுமன்றத்தினால் பணம் கொடுப்பது நல்லது. அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவிலும் இந்த முறை உள்ளது. அப்படியானால், இந்தச் சட்டங்களை நாமும் கொண்டு வர வேண்டும். அதுபற்றி ஆலோசனைகளை வழங்க தனியான ஆணைக்குழு ஒன்றை நியமிக்க எதிர்பார்க்கிறேன்.
இவை அனைத்தும் அடுத்த வருடத்துக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒரு புதிய பொருளாதாரத்துடன், ஒரு புதிய அணுகுமுறை இருக்க வேண்டும். மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது என சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்கள் ஒழுக்கத்தை மீறியிருந்தால் உறுப்பினர்களுக்கு எதிராகச் செயல்பட முடியும். இதை எப்படியாவது வலுப்படுத்துவதற்காக பிரித்தானிய பாராளுமன்றத்தில் செய்வது போல், உறுப்பினர்களின் நடத்தை மற்றும் நெறிமுறைகள் குறித்த விதிகளை பாராளுமன்றத்தில் முன்வைப்பேன்.
அதற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இங்கிலாந்தில், Parliamentary Standard Act சட்டம் உள்ளது, அவ்வாறு செயல்படவில்லை என்றால், அது குறித்து அறிவிக்கப்படும்.
அப்படித் அறிவிக்கும் போது மக்கள் ஆணை காரணமாக வெளியேற்றப்படுவார்கள். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
அண்மையில் கூட ஒருவர் விவாதத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விதிகள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் கொண்டு வந்து இந்த திருத்தங்களைச் மேற்கொண்டால் மக்களின் நம்பிக்கையைப் பெறலாம். அப்போது அடுத்த தேர்தலில் பலர் வாக்களிப்பார்கள்.
85% ஆனோர் வாக்களிக்க வேண்டும்.
மனப்பாங்கு ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும். இன்னும் ஊர்வலம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை. இப்போது என்ன நடந்திருக்கிறது என்றால் அரசியல் கட்சிகள் தமக்கு ஆதரவைப் பெறுவதற்காக போராட்டத்தின் பக்கம் சாய்ந்துள்ளன.
போராட்டம் அரசியல் கட்சிகளில் சார்ந்து இல்லை. மக்களின் அபிப்பிராயங்களுக்கு ஏற்ப விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டுவந்து பாராளுமன்றத்திற்கு மக்கள் விரும்புபவர்களை நியமிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இந்த வேலையைத்தான் எதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டும்.
இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, சிரேஷ்ட உப தவிசாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அகில விராஜ் காரியவசம், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர்
ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த மற்றும் சட்டத்தரணிகள், விசேட வைத்திய
நிபுணர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.
3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இலக்கு
இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 34 ஐ கடந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே பணியகம் எதிர்பார்த்துள்ளது.
நாட்டில் வருடாந்தம் வெளிநாட்டு வேலைகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை பொதுவாக இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் மூன்று
3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
இலட்சத்திற்கும் இடைப்பட்டதாக காணப்படும். மத்திய வங்கியின் அறிக்கையின்படி,
2014ஆம் ஆண்டு அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இதன் எண்ணிக்கை 3 லட்சத்து 703 ஆகும்.
2016ஆம் ஆண்டு முதல், வெளிநாட்டு வேலைகளுக்கான செல்வோரின் எண்ணிக்கை படிப்படையாக குறைவடைந்த நிலையில் 2020ஆம் ஆண்டில், கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு,
குறித்த எண்ணிக்கை 53 ஆயிரத்து 711 ஆக குறைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்கள் படகுகளை கல் வீசி உடைத்த சிங்கள கடற்படை
தமிழக மீனவர்கள் படகுகளை கல் வீசி உடைத்த சிங்கள கடற்படை
இந்தியா கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் படகுகள் மீது ,இலங்கை சிங்கள கடல் படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர் ,
சில மீனவர்கள் படகுகள் மீது ,தமதகு கடல் பாடி கப்பல்களை மோதி செத்த பாடசுத்தியுள்ளனர் .
சிங்கள கடற்படையினர் அத்துமீறிய செயலினால் ,மீன்படியே கைவிட்டு கரை திரும்பினார் .
தொடரு சிங்கள இராணுவத்தின் கெடுபிடியால் தமிழக மீனவர்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.
இலங்கை வரும் எட்டப்பன் எரிக் சொல்கெம்
இலங்கை வரும் எட்டப்பன் எரிக் சொல்கெம்
இலங்கை வருகிறார் தமிழின கொலையாளி எட்டப்பன் எரிக் சோல்கெம் .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பேன் பேரில் இலங்கை வருகிறார் எரிக் சொல்கெம் .
மூன்றாம் உலக நாடுகளின் அனுசரணையுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் பொழுது ,சமாதான குழுவின் தலைவராக எரிக் சொல்கெம் நியமிக்க பட்டார் .
இவரே இலங்கையில் விடுதலை புலிகள் அழிவிற்கு மிக பெரும் காரணியாக செயல் பட்டார் .
அவ்வாறான நபரே மீளவும் இன்று இலங்கைக்கு, ரணில் அழைப்பை ஏற்று செல்கின்றார் .
இவரின் ஊடக தமிழர்களை நசுக்க செயல் திட்டம் இடம்பெறுவதாக எதிர் பார்க்க படுகிறது .
வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணம்
வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணம்
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணித்துள்ளனர் என இலங்கை அரசு
தெரிவித்துள்ளது .
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து ,அதிகளவான மக்கள் கடவு சீட்டுக்கு விண்ணப்பம் செய்தனர் .
இந்த விண்ணப்பத்தின் பொழுது 409,919 ஆண்களும் 290,814 கடவுசீட்டை பெற்றுள்ளனர் என்கிறது இலங்கை அரசு .
விபத்தில் சிக்கி காவல்துறை அதிகாரி மாரணம்
விபத்தில் சிக்கி காவல்துறை அதிகாரி மாரணம்
பேருவளை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியதில் காவல்துறை அதிகாரி பலியாகியுள்ளார் .
மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
காயம்,அடைந்தவர்களின் காவல்துறை ஊழியர் ஒருவர் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் மீன்களின் விலைகள் திடீரென குறைவு
இலங்கையில் மீன்களின் விலைகள் திடீரென குறைவு
இலங்கையில் திடீரென சிறிய மீன்களின் விலைகள் குறைவடைந்துள்ளது .
மீனவர்கள் கடலுக்கு சென்று அதிகளவு மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் ,
இந்த மீன் விலை திடீரென குறைந்துள்ளது என்கிறது மீனவர் வர்த்தக சங்கம் .
இந்த விலையானது இவ்விதம் தொடர்ச்சியாகா வீழ்ச்சி நிலையில் இருக்குமா என்பது சந்தேகமே .
இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்களை சிறை பிடித்த சிங்கள கடல் படை
இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்களை சிறை பிடித்த சிங்கள கடல் படை
இந்தியா கச்சத்தீவு கடல் பரப்புக்குள் உள்ளே உள்ள எல்லையில் ,மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த, இந்திய மீனவர் படகை ,அத்துமீறி நுழைந்த சிங்கள கடல் படை சிறை பிடித்துள்ளது .
இந்தியா கடற்படைக்கு தகவல் வழங்க பட்டதை அடுத்து ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இந்திய கடல் படையினர் விசாரணைகளை நடத்தினர் .
அதன் பின்னர் குறித்த காங்கேயன் என்ற மீன்பிடி படகுடன் ,அதில் பயணித்தவர்கள் விடுவிக்க பட்டனர் .
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக,இந்தியா செயல் படும் என அறிவித்தது .
அதன் பின்னர் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பில் விலகி இருந்த மறு நாள் ,இந்த அத்து மீறலை சிங்கள கடற்படை மேற்கொண்டுள்ளது குறிப்பிட தக்கது.
இலங்கை ரசியா விமான பயணங்கள் அதிகரிப்பு
இலங்கை ரசியா விமான பயணங்கள் அதிகரிப்பு
இலங்கை ரசியா விமான பயணங்கள் திடீரென அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் வீழ்ந்து போன உல்லாச பயணத்துறையை மீளவும் அதிகரிக்கும் முகமாக, இந்த பயணிகள் விமான போக்குவரத்து மீளவும் அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையர்கள் ஏழுபேர் ரசியா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ,தடுத்து வைக்க பட்டு ,வதைகளிக்கிற்கு உள்ளாக்க பட்ட நிலையில், உக்கிரேன் இராணுவத்தால் விடுவிக்க பட்டனர் .
இலங்கை ரசியா விமான பயணங்கள் அதிகரிப்பு
அதன் பின்னரான கால பகுதியில், இந்த பயணிகள் விமான போக்குவரத்து ,ரசியா இலங்கைக்கு இடையில் ஆரம்பிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் ,அரசியல் இராயத்தந்திர ரீதியிலான ஒத்துழைப்புக்கள் தொடரும் என தெரிவிக்க படுகிறது .
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை




























