Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கண்டி பாடசாலைகளுக்கு பூட்டு
கண்டி பாடசாலைகளுக்கு பூட்டு
கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் பாடசாலைகள் நடைபெறாது என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்தார்.
பாடசாலைகள் மூடப்படும் மூன்று நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை மூன்று நாட்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
by நிருபர் காவலன் - 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
by நிருபர் காவலன் - பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
by நிருபர் காவலன் - 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
by நிருபர் காவலன் - கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன
by நிருபர் காவலன்
விமான நிலைய சொகுசு பேருந்துகள் சேவையிலிருந்து விலகல்
விமான நிலைய சொகுசு பேருந்துகள் சேவையிலிருந்து விலகல்
விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் 187 வழி எண் சொகுசு பேருந்தின் சாரதிகள் நேற்று (26) முதல் பேருந்து சேவையில் இருந்து விலகியுள்ளனர்.
கட்டுநாயக்க 18ஆவது மைல்கல் சந்தியில் பேரூந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தடை விதித்தமையே இதற்குக் காரணம்.
விமான நிலையம் – கோட்டை பாதையில் சுமார் 71 சொகுசு பேருந்துகள் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக பயணிக்கின்றன.
விமான நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அந்த பேருந்துகளுக்கு பயணிகள் ஏற்றும் பிரதான பேருந்து நிலையமாக நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள 18 ஆவது மைல்கல் சந்தியில் உள்ள பேருந்து நிறுத்துமிடமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாகாண போக்குவரத்து அதிகாரசபையால் அந்த பேரூந்து நிலையத்தில் இருந்து சொகுசு பேரூந்துகளுக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல தடை விதித்துள்ளமையால் பேருந்து உரிமையாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
விமான நிலைய சொகுசு பேருந்துகள் சேவையிலிருந்து விலகல்
18வது மைல்கல் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல மறுப்பதால் சொகுசு பேருந்துகளின் வருவாய் குறைந்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க எதிர்பார்க்கும் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அனைத்து காரணங்களையும் முன்னிறுத்தி நேற்று முதல் பேருந்து சாரதிகள் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் வேன் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் வேனில் சென்ற மற்றுமொருவரும் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (26) காலை 5 மணி அளவில் நிகழ்ந்துள்ளது குறித்த வேன் டிக்கோயா பகுதியில் உள்ள வாகன திருத்தம் நிலையத்துக்கு சென்று லிந்துலை மட்டுகலை தோட்டத்திற்கு செல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
சாரதி வாகனத்தை செலுத்தும் போது ஏதோ ஒரு விஷப்பூச்சி தன்னை தாக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சாரதி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த விபத்தில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம் முற்றாக சேதம் அடைந்துள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
by நிருபர் காவலன் - 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
by நிருபர் காவலன் - பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
by நிருபர் காவலன் - 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
by நிருபர் காவலன் - கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன
by நிருபர் காவலன் - 14 சுரங்கத் தொழிலாளர்கள் பலி
by நிருபர் காவலன் - 30,000 மெட்ரிக் டன் நெல் அரைக்கப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளது
by நிருபர் காவலன் - சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது
by நிருபர் காவலன் - லங்கா மெட்ரோ டிரான்சிட்டை விரிவுபடுத்த ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான நிதிக்கு ஒப்புதல்
by நிருபர் காவலன் - நொரோச்சோலை நிலக்கரி கொள்முதலுக்கு இரண்டு விநியோகஸ்தர்கள் தேர்வு
by நிருபர் காவலன்
வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்
வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்
மொலகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மாவனல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (26) காலை விபத்துக்குள்ளானதுடன், மொலகொட பிரதேசத்தில் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் போது பேருந்தில் பயணிகள் இருந்ததாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தனியார் பேருந்துகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்
கண்டியில் இருந்து பாணந்துறை நோக்கி அதிகாலை 05.35 மணியளவில் புறப்பட்ட தனியார் பேருந்து மாவனெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான பேருந்துடன் வேகமாக முன்னோக்கி செல்ல முற்பட்ட வேளையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, பாணந்துறை பேரூந்து முன்னோக்கிச் சென்றதுடன், சிறிது தூரம் சென்ற பின், வீதியில் சென்றவர்கள் கைகளில் தடிகளுடன் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்க முற்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த எவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்காததால், விபத்து தொடர்பில் மற்றைய பஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிஸார் தெரிவித்தன
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்
வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் எலிக்காய்ச்சல் நோய்க்கு வழிவகுக்கும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறைந்தளவு நீர் உள்ள இடங்களில் குளிப்பதன் மூலம் தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதவேளை, குடிநீர் விற்பனை செய்யும் இடங்களை கண்காணித்து வருவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கூறியுள்ளது
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
சர்வமத குருமார்கள் மீது கொலை அச்சுறுத்தல்
சர்வமத குருமார்கள் மீது கொலை அச்சுறுத்தல்
மயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிப்பது,
இலங்கை அரசின் பேராதரவுடன் புத்த பிக்குகளும், சிங்களக் காடையர்களும் மீண்டுமொருமுறை அரங்கேற்றியுள்ள அடாவடித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கடந்த 23 ஆம் திகதியன்று மயிலத்தனை மடு மக்களின் கோரிக்கைக்கு இணங்க அங்கு சென்றிருந்த சர்வமத குருமார்கள், ஊடகவியலாளர்கள் அடங்கிய குழு மக்களை சந்தித்து விட்டு திரும்பி வரும் வழியில் பெளத்த பிக்கு உள்ளிட்ட காடையர்களால் வழிமறிக்கப்பட்டு மிலேச்சத்தனமாக நடாத்தப்பட்டுள்ளனர். கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சர்வமத குருமார்கள் மீது கொலை அச்சுறுத்தல்
அதை அடக்க உதவிக்கு அழைக்கப்பட்ட போலிஸாரும் வந்து, நடந்தேறிய காடைத்தனத்தின் காரணகர்த்தாவான பிக்குவின் காலில் விழுந்து வணங்கிய பின்பே நிலைமைகளை ஆராய்கின்றனர்.
இப்படியான பண்புகள், கலாசாரப் பிறழ்வுகள் கொண்ட பிக்குகளை வளர்த்துவிடும் அல்லது முன்னிலைப்படுத்தும் அரசும் மக்களும் இனத்துவேசத்துக்கு நெய்யூற்றி வளர்ப்பவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இப்படியான சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல. தொடரான இவ்வாறான சம்பவங்கள் தமிழ் மக்களிடையே உயிர் பயத்தையும் அச்ச நிலையும் உருவாக்கி வருகின்றது.
காலத்திற்கு காலம் இப்படியான நிகழ்வுகளுக்கு கண்டனத்தை தெரிவிப்பதுடன் நிறுத்தப்போகிறோமா?
இந்த சம்பவங்களை அறியும் சர்வதேச ராஜதந்திரிகள், இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவில்லை, இனிமேல் சேர்ந்து வாழவும் முடியாது என்ற உண்மையை உணர்ந்து எமது மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கேட்டு நிற்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன
யாழில் வீடொன்றினுள் நுழைந்து கொள்ளை
யாழில் வீடொன்றினுள் நுழைந்து கொள்ளை
யாழ்ப்பாணம் – பலாலி, தெற்கு வசாவிளான் பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த திருடர்கள் 25 பவுண் நகைகளையும், 40,000 ருபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (24) காலை இடம் பெற்றுள்ளது.
காலை 10 மணிக்கு 11 மணிக்கு இடையில் வீட்டிலிருந்து வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் சென்ற போது வீட்டினுள் நுழைந்த திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 பவுண் நகைகளையும் 40,000 ரூபா பணமும் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் வீடொன்றினுள் நுழைந்து கொள்ளை
சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீட்டுக்கு வந்த தடவியல் பொலிஸார், கைரேகை நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மோப்ப நாயின் உதவியுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டது சந்தேக நபர்களின் கைவிரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை திருட்டு நபர்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் பிடுங்கி எடுத்து சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
மது போதையில் இருந்த 6 புலம்பெயர் தமிழர்கள் கைது
மது போதையில் இருந்த 6 புலம்பெயர் தமிழர்கள் கைது
மது போதையில் குழப்பம் விளைவித்த 6 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று 24 ஆம் திகதி பொழுதை கழித்துள்ளனர்.
அதன் போது, அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என, கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவை சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.
மது போதையில் இருந்த 6 புலம்பெயர் தமிழர்கள் கைது
அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 6 ஆண்களையும் 4 பெண்களையுமாக 10 பேரையும் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, 6 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனேடியன் பிரஜைகள் எனவும், ஒருவர் இலண்டன் பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி
நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.
நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி
உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் முன்னமே குழந்தை மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது.
சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்
இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்
கொலைகள் உட்பட பல குற்றங்களுக்காகத் தேடப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போது, இந்திய மத்திய குற்றப்பிரிவு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“கொத அசங்க” என அழைக்கப்படும் அமில நுவன், “சுட்டா” என்றழைக்கப்படும் ரங்க பிரசாத் மற்றும் கசுன் குமார சங்க ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியதற்காக விவேக் நகரில் வசிக்கும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரங்கபிரசாத் மீது இரண்டு தாக்குதல் குற்றச்சாட்டுக்களும், அமில நுவன் மீது 05 கொலைகள் மற்றும் கசுன் குமார சங்க மீது 04 கொலைகள் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்
இலங்கையில் கைது செய்யப்படுவதை தவிர்க்கவே அவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் சுமார் 15 நாட்களுக்கு முன்பு கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்துள்ளனர், மேலும் அவர்களிடமிருந்து 13 கைப்பேசிகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் இந்தியாவிற்கு வர உதவிய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை இந்திய மத்திய குற்றப்பிரிவு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
கஜேந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரினார் டிலான்
கஜேந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரினார் டிலான்
எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டையும் சுற்றிவளைக்க எவருக்கும் இடமளிக்க
முடியாது என்றும் கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க
உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுயாதீன எதிரணி எம்.பியான
டிலான் பெரேரா சபையில் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இலங்கை கிரிக்கெட் தொடர்பான சபை ஒத்திவைப்பு
வேளை விவாதம் இடம்பெற்றது.
அதன் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலத்தின் வீட்டை சுற்றிவளைக்கவுள்ளதாக குழுவொன்று அறிவித்துள்ளமை
தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே டிலான் பெரேரா இவ்வாறு
கோரிக்கை விடுத்தார்.
கஜேந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரினார் டிலான்
மேலும் தெரிவிக்கையில், “கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, நாளை (இன்று) பாராளுமன்ற
தெரிவுக்குழுவுக்கு வர வேண்டும் என்ற போதும், அவரால் வர முடியாது என்று கூறியுள்ளார்.
அதற்கு காரணம் அவரின் கொழும்பிலுள்ள வீட்டை குழுவொன்று சுற்றி வளைக்கவுள்ளதாக
தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் சென்றே
இவ்வாறு சுற்றிவளைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயமே.
கஜேந்திரகுமார் எம்.பியின் தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டவராக இருக்கின்றார். இது
தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்க வேண்டும். ஒவ்வொருக்கும் வேண்டியவாறு
எம்.பிக்களின் வீடுகளை சுற்றிவளைக்க இடமளிக்க முடியாது.
இதனால் தயவு செய்து அவருக்கும், அவரின் வீட்டுக்கும் தேவையான பாதுகாப்பை உடனடியாக
அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் சமன் பிரிய ஹேரத், இந்த விடயம்
தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
by நிருபர் காவலன் - 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
by நிருபர் காவலன் - பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
by நிருபர் காவலன் - 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
by நிருபர் காவலன் - கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன
by நிருபர் காவலன்
பச்சை குத்தியவர்களுக்கு எச்சரிக்கை
பச்சை குத்தியவர்களுக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக பச்சை குத்தியவர்களிடம் இருந்து இனி இரத்த தானம் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார்.
இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றாததால் ஆபத்து மேலும் தீவிரமடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இரத்த தானம் செய்பவரின் இரத்தம் கூறுகளாக பிரிக்கப்படுவதால், இரத்தம் பெறுபவர்களின் உயிருக்கு தேவையற்ற ஆபத்துக்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தேசிய இரத்தமாற்ற சேவை தீர்மானித்துள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, பச்சை குத்துதல், தோல் குத்துதல் போன்ற செயல்களைச் செய்பவர்கள், ஒரு வருடத்திற்கு இரத்த தானம் செய்பவர்களாகத் தொடர்பு கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுளள்து
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
by நிருபர் காவலன் - ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
by நிருபர் காவலன் - 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
by நிருபர் காவலன் - பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
by நிருபர் காவலன் - 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
by நிருபர் காவலன்
பழிக்கு பழி வாங்கவே வீட்டை எரித்தோம்
பழிக்கு பழி வாங்கவே வீட்டை எரித்தோம்
பழிக்கு பழி வாங்கவே சண்டிலிப்பாயில் வீடொன்றினை உடைத்து வீட்டிற்கு தீ வைத்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக, சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்த வன்முறை கும்பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததுடன் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு வீட்டின் உடைமைகளை சேதமாக்கி, உடமைகளுக்கும் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.
அதில் சுமார் 20 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகின.
பழிக்கு பழி வாங்கவே வீட்டை எரித்தோம்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இருவரை புதன்கிழமை (23) கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது , இதற்கு முதல் நடந்த வன்முறை சம்பவம் ஒன்றிற்கு பழி வாங்கவே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் , இரண்டு வாள்கள் , இரும்பு கம்பி ஒன்று என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 06 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களையும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் வீடெரிப்பு சம்பவங்கள் , வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் வன்முறை கும்பல்களை கைது செய்வதற்கு, யாழ்.மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனவிரத்தின் வழிகாட்டலில் , யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் கீழ் குறித்த மூன்று சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்
சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் இன்றையதினம்(25) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 22 ம் திகதியன்று முல்லைதீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர
அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று (25) காலை
9.30 மணி முதல் 10.30 மணி வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்தது
இந்த அடையாள புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச் சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள கண்டன போராட்டத்தினை மேற்கொண்டன.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
அம்பாறையில் ஐஸ் மழை
அம்பாறையில் ஐஸ் மழை
அம்பாறை, பதியதலாவ பிரதேசத்தில் ஐஸ் கட்டியுடன் வீசிய பலத்த காற்றினால் பாரிய மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் வீட்டின் கூரைகளும் தூக்கி வீசப்பட்டுள்ளன.
எதிர்பாராத விதமாக திடீரென்று ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பதியத்தலாவ முழு பிரதேச மக்களும் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அம்பாறை- பதியத்தலாவ வீதி, மட்டக்களப்பு- பதுளை வீதி, கண்டி வீதி போன்ற இடங்களில் பாரிய மரங்கள் வீழ்ந்ததால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது, தூர இடங்களுக்கு அவசரமாக செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதைகளை பயன்படுத்தியதாக பதியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறையில் ஐஸ் மழை
பதியத்தலாவ கனிஷ்ட வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடத்தில் மரமொன்று முறிந்து விழுந்ததால் கட்டிடம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் அருகிலிருந்த தற்காலிக வகுப்பறை தொகுதியின் கூரை பலத்த காற்றினால் தூர வீசப்பட்டுள்ளது.
இதே வேளையில் மின்சாரமும் தடைப்பட்டிருந்ததால் பிரதேசமெங்கும் இருளில் மூழ்கியிருந்ததாகவும் மகா ஓயா இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் அம்பாறையிலிருந்து மேலதிக ஊழியர்களை வரவழைத்து மின்சார வினியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான தற்காலிக ஏற்பாடுகளை பதியத்தலாவ பிரதேச செயலகம் மேற்கொண்டிருந்ததாக பிரதேச செயலக நிர்வாக உத்தியோஸ்தர் தெரிவித்தார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
இரத்மலானை கொலை சந்தேக நபர் கைது
இரத்மலானை கொலை சந்தேக நபர் கைது
இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ரத்மலானையைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 21ஆம் திகதி இரத்மலானை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள கடையொன்றில் வைத்து நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
அத்திப்பட்டி போல வயலூர் கிராமம்
அத்திப்பட்டி போல வயலூர் கிராமம்
இந்தியாவின் அத்திப்பட்டி போன்று காணாமல் போன கிராமமாக வயலூர் கிராமம் அமைந்துள்ளதாகவும் 38 வருடங்கள் பூர்த்தியாவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்குவிதி கட்டுப்பாடுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“ஏற்றுமதி இறக்குமதி தொடர்பாகவும் வெளிநாட்டு கடன்கள் தொடர்பாகவும் இங்கே பேசப்படுகின்றது. இது வளமான எழில் மிக்க நாடாகும். ஆனால் பொருத்தமான நிகழ்ச்சி நிரல் இன்றி வெளிநாட்டவர்களிடம் கையேந்தும் நிலையிலேயே நாடு இருக்கின்றது.
அத்திப்பட்டி போல வயலூர் கிராமம்
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தங்களின் அரசியல் அதிகாரங்களை முன்னிருத்தி அவர்களுக்கு தேவையான வேலைகளையே செய்தார்களே தவிர மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என்பது தற்போதைய பொருளாதார பின்னடைவு எடுத்துக் காட்டுகின்றது.
எவ்வாறாயினும் இனவாத, மதவாத சிந்தனை கொண்ட அரசாட்சி நடப்பதும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாகும். இந்த நாட்டு மக்களை தெளிவான சிந்தனையோடு ஆட்சியாளர்கள் அனுகவில்லை.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் போராட்டம் முதன் முதலில் இடம்பெற்ற, இந்தியாவில் அத்திப்பட்டி கிராமம் போன்று அழிக்கப்பட்டு காணாமல் போன கிராமமாக திருக்கோவில் பிரதேசத்தில் வயலூர் கிராமம் அமைந்துள்ளது.
இதற்கு 38 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்க ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன கிராமமாக இது இருக்கின்றது.
1985 ஓகஸ்ட் 25ஆம் திகதி யுத்த நிறுத்த சமாதான திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் அப்பாவி விவசாயிகள் கொல்லப்பட்டு கிராமமே அழிக்கப்பட்ட கிராமமாக இது உள்ளது.
இனிமேலும் இன ரீதியிலான அடக்குமுறை இருக்கக் கூடாது என்று கோருவதுடன், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்காக நான் இந்த சபையில் அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன்” என்றார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
சார்ல்ஸை சந்தித்தார் ஜூலி சங்
சார்ல்ஸை சந்தித்தார் ஜூலி சங்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ல்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, புதன்கிழமை (23) இடம்பெற்றது.
சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மற்றும் வடக்கு மாகாணத்துக்கான அவரது முன்னுரிமைகள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு நாம் எவ்வாறு மேலும் ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து ஆளுனரிடம் கேட்டறிந்ததாக டுவிட்டரில் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.
சார்ல்ஸை சந்தித்தார் ஜூலி சங்
பிராந்தியத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளை நேரடியாகப் புரிந்துகொள்வதற்கும், அமெரிக்க உதவி மற்றும் ஒத்துழைப்புக்கான கூடுதல் வாய்ப்புகளை ஆராய்வதற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பலாலி விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஐயம் ஒன்றை மேற்கொண்ட அவர் பல்வேறு இடங்களிற்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
விலைகள் மேலதிக நடவடிக்கை வேண்டும்
விலைகள் மேலதிக நடவடிக்கை வேண்டும்
யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் விற்கப்படும் உணவு பண்டங்களின் விலை தொடர்பில் உரிய தரப்பினர்கள் அறிவுறுத்தல்களை செவி சாய்க்காவிட்டால் மேலதிக நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியும் இதுவரை எழுத்து மூலமான உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் ஒரு கப் பால் தேனீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவது தொடர்பில் அரசாங்க அதிபரை செவ்வாய்க்கிழமை (22) தொடர்பு கொண்டு வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விலைகள் மேலதிக நடவடிக்கை வேண்டும்
அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சிற்றுண்டி உரிமையாளர்கள் வர்த்தக சங்கத்தினர் உணவகத்தினர் மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்கள் சார்ந்தவர்களுடனான உயர் மட்ட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் உணவு பண்டங்களின் மாறுபட்ட விலைகள் தொடர்பில் பேசப்பட்ட நிலையில் உணவக உரிமையாளர்கள் தமக்குள்ளே ஒரு சங்கமாக இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி விலைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு அறியத் தருமாறு கூறினேன். அதற்கான கால எல்லையும் முடிவடைந்த நிலையில் பதில் தரவில்லை.
நல்லூர் சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரை சம்பவம் தொடர்பில் நேரில் சென்று பார்வையிடுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்” என்றார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
சரத் வீரசேகரவுக்கு எதிராக நடவடிக்கை
சரத் வீரசேகரவுக்கு எதிராக நடவடிக்கை
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி என்று கூறி அவரை சாடிய சரத் வீரசேகர எம்.பிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி. மேலும் பேசுகையில்,
“முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை சரத் வீரசேகர எம்.பி. இந்த பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளார். நீதிபதியின் மனைவி என்று அவர்களது தனிப்பட்ட விடயங்களை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதுடன் நீதிபதியை ஒரு மனநோயாளி என்று முறையற்ற வகையில் விமர்சித்துள்ளார்.
சரத் வீரசேகரவுக்கு எதிராக நடவடிக்கை
பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் 83 ஆவது பிரிவுக்கு அமைய நீதிபதிகளையும், நீதிமன்ற நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது. ஆனால் சரத் வீரசேகர தனது உரையின் போது நீதிபதியின் பெயரை சுட்டிக்காட்டி அவரை விமர்சித்துள்ளார் .இவை பாரதூரமானது. நிலையியற்கட்டளை 83 ஐ அப்பட்டமாக மீறும் செயல்.
சரத் வீரசேகர எம்.பி. இதற்கு முன்னரும் பாராளுமன்ற சிறப்புரிமை ஊடாக நீதிபதியை கடுமையாக விமர்சித்தார். இவரது கருத்துக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டதுடன், நீதிபதிகள், சட்டத்தரணிகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அவர் மீண்டும் இவ்வாறு நீதிபதியை விமர்சித்துள்ளார். ஆகவே இவ்விடயம் குறித்து சரத் வீரசேகர எம்.பி. மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
அத்துடன் அவர் ஒரு முறை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் எனது பெயரைக்குறிப்பிட்டு நான் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார். அதனை நான் நிராகரிக்கின்றேன். நான் எந்தவொரு நீதிபதியின் பெயரையும் குறிப்பிடவில்லை” என்றார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்

























