Tag: ரவுடி கும்பல் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்
கிளிநொச்சி இளைஞர்கள் மீது ரவுடி கும்பல் தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 14/09/2023
கிளிநொச்சி இளைஞர்கள் மீது ரவுடி கும்பல் தாக்குதல்
கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதி விநாயகர் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (13) இரவு அலங்கார பணிகளில் ஈடுப்பட்டிருந்த இளைஞர்கள் மீது அதே கிராமத்தைச் சேர்ந்த இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நான்கு இளைஞர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மூவர் இன்றைய தினம்(14) அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் வைத்தியசாலையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இனந்தெரியாதோர் குழுவினர் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வருபவர்கள் என பிரதேசமக்கள் தெரிவித்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வுby நிருபர் காவலன்
- எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்புby நிருபர் காவலன்
- மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைதுby நிருபர் காவலன்
- ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலிby நிருபர் காவலன்
- நான்கு வங்கி அதிகாரிகள் கைதுby நிருபர் காவலன்












