போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்

விமான பறப்பு கட்டணம் அதிகரிப்பு

விமான பறப்பு கட்டணம் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டின் விமானச் சுழற்சி வசதிக் கட்டண விதிமுறைகள் எண். 1ஐத் திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை (09) கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த யோசனைக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது.

கொழும்பு விமான தகவல் வலயத்தின் ஊடாக பறக்கும் விமானங்களுக்கு விமான போக்குவரத்து கட்டணத்தை விதிக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டு விமான

போக்குவரத்து வசதிகள் ஒழுங்குமுறைகள் இயற்றப்பட்டன.குறித்த விதிமுறைகள் கடந்த காலத்தில் திருத்தப்படவில்லை என அரசாங்கம் கூறுகிறது.

எனவே, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் கொள்கைகள் மற்றும் தற்போதைய உலகளாவிய போக்குகளைக் கருத்தில் கொண்டு, விமான போக்குவரத்து

விமான பறப்பு கட்டணம் அதிகரிப்பு

வசதிகள் விதிமுறைகள் திருத்தப்பட்டு, விமானப் போக்குவரத்து வசதிகள் விதிமுறைகள் 2023 எண் 1 என வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் புஹுரிய சந்தியில் நேற்றிரவு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியோரம் வாகனங்களைச் சோதனை

செய்து கொண்டிருந்த போது, கந்தளாயிலிருந்து கடுவலை நோக்கிச் சென்ற டிப்பர் ட்ரக் பொலிஸ் கான்ஸ்டபிளை மோதியுள்ளது.

படுகாயமடைந்த நிலையில், குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்
Posted in இலங்கை செய்திகள்

கணவரை காணவில்லை; மனைவி முறைப்பாடு

கணவரை காணவில்லை; மனைவி முறைப்பாடு

வவுனியா – சிதம்பரம், முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த 4ஆம் திகதி முதல் காணவில்லை என அவரின்

மனைவி சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

வீட்டிலிருந்த குறித்த நபர் கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று வரை வீடு திரும்பவில்லை.

இதனை அடுத்து அவரின் மனைவியினால் கணவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கணவரை காணவில்லை; மனைவி முறைப்பாடு

வீட்டிலிருந்து அவர் வெளியேறுகையில் நீல நிறம் சரம் மற்றும் ரோஸ் கலர் சட்டையும் அணிந்து சென்றிருந்தார்.

எனவே இவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0776289460 (மகன்), 0774136383 (மனைவி), 0762477411 (மகள்) ஆகிய இலக்கத்திற்கு அறிவித்து உதவுமாறு தெரிவித்துள்ளனர்

மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு

மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு

தென்மராட்சி – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஞாயிற்றுக் கிழமை (08) காலை தனது கால்நடைகளை கொண்டு சென்ற பெண் ஒருவரால் குறித்த ஆயுதங்கள் வயல் பகுதியில் பற்றையோரமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு

இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ஆயுதங்களை பார்வையிட்டதுடன் அவ்விடத்தில் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவினை பெற்று குறித்த ஆயுதங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்

களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை கிழித்தெறியும் சமூக ஊடக அடக்குமுறைச் சட்டத்தை நீக்கும் நோக்கில் களுத்துறை நகரில் திங்கட்கிழமை (09)

ஆரம்பிக்கப்படவுள்ள மக்கள் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். .

களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பொலிஸ் நிலையங்களில் இருந்து கலவர எதிர்ப்பு குழுக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் காணப்பட்டனர்.

களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்

தலவ்வ, போதி வளாகம் மற்றும் இரண்டு களுத்துறை பாலங்களுக்கு இடையில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமை உட்பட பல இடங்களில் பொலிஸ்

குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவப் படையினர் களுத்துறை நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லயன் கொள்ளையடித்த கும்பல் கைது
Posted in இலங்கை செய்திகள்

ATM இலிருந்து கோடி கொள்ளை

ATM இலிருந்து கோடி கொள்ளை

புத்தளம் – மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் இருந்து சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் சனிக்கிழமை (07) இரவு 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது, மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் ATM இயந்திரத்தை நோக்கி முகங்களை மறைத்த மூவர் மோட்டார் சைக்கிளில் வந்தமை குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கமெராவில் பதிவாகியுள்ளது.

ATM இலிருந்து கோடி கொள்ளை

அங்கு வருகை தந்த கொள்ளையர்கள், ATM இயந்திரம் பழுது என்றும் அதனை திருத்தப்போவதாகவும் கூறி, திறப்பு ஒன்றின் மூலம் ATM இயந்திரத்தின் பின் கதவைத் திறந்து பணம் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்குள்ளே சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனையடுத்து, இரகசிய இலக்கங்களை உட்செலுத்தி குறித்த ATM இயந்திரத்தை திறந்த கொள்ளையர்கள் அந்த இயந்திரத்தில் இருந்த சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துணிகரமான கொள்ளைச் சம்பவத்தில் ATM இயந்திரத்திரத்திற்கோ அல்லது பாதுகாப்பு அறையின் கதவுக்கோ எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தனியார் வங்கியுடன் தொடர்புடைய ஒருசிலரின் உதவியுடன் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் பொலிஸ் தடயவியல் பிரிவினரும், கைரேகை பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் காமினி விக்ரமசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிக்குவுக்கு அடங்கியோர் எங்களை அடக்குகின்றனர்
Posted in இலங்கை செய்திகள்

பிக்குவுக்கு அடங்கியோர் எங்களை அடக்குகின்றனர்

பிக்குவுக்கு அடங்கியோர் எங்களை அடக்குகின்றனர்

பௌத்த பிக்கு பொலிஸாரின் தொப்பியை, ஸ்டாரை கழட்டு கேடுகெட்ட வார்த்தைகளினால் திட்டும்போது அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த பொலிஸார், அமைதியான முறையில் போராட வந்த எங்களை அடக்குவதற்கு

முற்படுவதானது இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு ஒரு சட்டம் என்பதை வெளிப்படுத்துகின்றதாக மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சட்ட விரோத குடியேற்ற வாசிகளின் ஆக்கிரமிப்பினை தடுத்துநிறுத்துமாறு கோரி அப்பகுதியை சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 24 நாட்களாக போராடிவருகின்றனர்.

செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தருவதை முன்னிட்டு செங்கலடி-கொம்மாதுறை பகுதியில் பாரிய கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

பிக்குவுக்கு அடங்கியோர் எங்களை அடக்குகின்றனர்

இதன்போது கொம்மாதுறை சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித்தடைகள் போடப்பட்டு நீர்பாய்ச்சும் இயந்திரம், கண்ணீப்புகை இயந்திரங்கள் கொண்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாகவும் வீதியை மறித்து போராடிமுடியாது எனவும் கோரிய நிலையிலேயே போராட்டமானது கடுமையாக மாறி பொலிஸாரின் தடையினை மீறிசெல்ல முற்பட்ட நிலையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பெரும் இழுபறி நிலையேற்பட்ட அதேநேரம் தடையினை உடைத்துச்செல்ல போராட்டக்காரர்கள் முற்பட்ட நிலையில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

போராட்டத்தின் போது தடையை உடைத்துச்செல்ல முற்பட்ட பொலிஸார் அவர்களை தடுத்த நிலையில் பெரும் களேபரம் ஏற்பட்டது.இதன்போது தடையினையுடைத்துச்செல்ல முற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர் சங்க தலைவி மீது பொலிஸார் தாக்குதல் முயற்சிகளை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் எம்.பிக்களான

ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிக்குவுக்கு அடங்கியோர் எங்களை அடக்குகின்றனர்

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் கால்நடை பண்ணையாளர்களும் சட்டத்தரணி சுகாஸ{டனும் வாய்கத்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக வாழைச்சேனை-மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதன் காரணமாக மாற்று வழியூடாக போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டன.

முறிந்த மரம் தப்பிய மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

முறிந்த மரம் தப்பிய மக்கள்

முறிந்த மரம் தப்பிய மக்கள்

பெய்து வரும் அடை மழையுடன், பெரகல – வெள்ளவாய ஏ4 வீதிக்கு கீழே பிளாக்வுட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) காலை பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலை 8 மணியளவில் வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பலர் 99இல் தப்பியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முறிந்த மரம் தப்பிய மக்கள்

வீதியில் பாறைகள் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் பகுதி நூறு அடிக்கு மேல் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பண்டாரவளை- எல்ல -வெல்லவாய வீதி மாற்று வீதியாக பயன்படுத்துமாறு மண்சரிவு அபாயம் உள்ளதால் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மாற்றுப் வீதியாக ஹலத்துதென்ன கிராவணகம நிகபோத ஊடாக வெல்லவாய செல்லும் குறுகிய வீதியையும் பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சிங்களவர்களை துரத்துகின்றார்கள் பொங்கினார் அம்பிட்டிய
Posted in இலங்கை செய்திகள்

சிங்களவர்களை துரத்துகின்றார்கள் பொங்கினார் அம்பிட்டிய

சிங்களவர்களை துரத்துகின்றார்கள் பொங்கினார் அம்பிட்டிய

பாரம்பரிய மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி, அங்கு

அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் மேற்படி பயிர்செய்கையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பாரளுமன்ற உறுப்பினர்

இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிங்களவர்களை துரத்துகின்றார்கள் பொங்கினார் அம்பிட்டிய

ஜனாதிபதியே கேளுங்கள் சிங்களவர்களை துரத்துகின்றார்கள், சாணக்கியன், தொண்டமான் எமக்கு வேண்டாம், இனவாதம் தூண்ட வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியவாறு இவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, தங்கள் கால்நடைகளின் பாரம்பரிய மேய்ச்சற்தரையாக விளங்கும் மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களை அகற்றி அங்கு தமது கால்நடைகளை பாதுகாப்பாக

மேய்ப்பதற்கு இடமளிக்குமாறு கோரிய கால்நடை வளர்ப்பளர்களின் தொடர் போராட்டமானது இன்றுடன் 23 நாட்களாக இடம்பெறுகின்றமையும் குறிப்பிடப்படுகின்றது

வீடியோ

மோடி புட்டீன் திடீர் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

பிரதமர் மோடியை கொல்ல சதி

பிரதமர் மோடியை கொல்ல சதி

டெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவித்து ரூ.500 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியை படுகொலை செய்வோம்,

நரேந்திர மோடி ஸ்டேடியத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து மும்பை காவல் துறை மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் மோடியை கொல்ல சதி

மத்திய பாதுகாப்பு பிரிவு ஒன்றுக்கு மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், ‘‘சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவிக்க வேண்டும். ரூ.500 கோடி தர வேண்டும். இல்லையென்றால், பிரதமர் நரேந்திர மோடியை

படுகொலை செய்வோம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தையும் குண்டுவைத்து தகர்ப்போம். இந்தியாவில் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. நாங்களும் சிலவற்றை வாங்க வேண்டும்.

நீங்கள் எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தாலும், நீங்கள் எங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியாது. நீங்கள் பேச விரும்பினால், நாங்கள் கூறியதை

செய்யுங்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-மெயில்எங்கிருந்து வந்தது என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

வீடியோ

இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை

இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை

இலங்கையில் ஏழு குண்டுகள் தொடராக வெடிக்க போகின்றன என சஜித் பிரேமதாசா எச்சரிக்கை விடுத்துள்ளார் .

அரச பத்திரிகை ஒன்றில் இந்த தகவல் வெளியிட்டுள்ளதாகவும் ,அது தொடர்பான உண்மை தன்மையை எடுத்து விளக்கும் படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை

மைத்திரி ஆட்சி கால பகுதியில் தொடராக தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன . அது போன்ற தொடர் குண்டு தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்ட படுகின்றன .

சிறையில் உள்ள ஐ எஸ் தீவிரவாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .

வீடியோ

சிங்கள இராணுவ கொமாண்டோ சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

சிங்கள இராணுவ கொமாண்டோ சுட்டு கொலை

சிங்கள இராணுவ கொமாண்டோ சுட்டு கொலை

இலங்கை சிங்கள இராணுவத்தை சேர்ந்த கொமாண்டோ படை சிப்ப்பாய் ஒருவர் அதே சிங்கள இராணுவத்தினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .

தலங்கமாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்ஸ் சம்பவம் தொடர்பில் தேட பட்டு வந்த கொமாண்டோ சிப்பாய் இவ்வாறு சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .

கொலை செய்யப்பட்ட கொமாண்டோ சடலம் மீட்க பட்டுள்ளது .

இலங்கையில் இடம் பெறும் அதிமான துப்பாக்கி சூடு சம்பவங்கள் சிங்கள இராணுவத்தில் இருந்து தப்பி சென்ற சிங்கள இராணுவ சிப்பாய்கள் மேற்கொண்டு வருகின்றனர் .

அவ்வாறான புள்ளி விபரம் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்

காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமந்த தொழிற்ச்சாலையின் பாதுகாவலரை கட்டி போட்டு அங்கிருந்து இரும்பு பொருட்களை நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார் .

இந்த திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் .

யாழ்ப்பாணத்தில் தொடரும் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் ,வழிப்பறி கொள்ளையர் அட்டகாசத்தினால் , மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர் .

வீடியோ

யாழ்ப்பாணத்தில் ஞான வைரவர் ஆலயம் முன்பாக புத்தர் சிலை
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஞான வைரவர் ஆலயம் முன்பாக புத்தர் சிலை

யாழ்ப்பாணத்தில் ஞான வைரவர் ஆலயம் முன்பாக புத்தர் சிலை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் உள்ள ஞான வைரவர் ஆலயத்தின் முன்பாக புத்தர் சிலை ஒன்று முளைத்துள்ளது .

குறித்த ஆலயத்தை பார்த்து கொண்டிருக்கும் வகையில் இந்த புத்தர் சிலை வைக்க பட்டுள்ளது .

ஆளும் ரணில் விக்கிரமசிங்க ஆடசியில் தமிழர் பகுதிகளில் இவரது புத்தர் சிலைகள் தொடராக முளைத்த வண்ணம் உள்ளது .

தமிழர் பகுதிகள் திட்டமிடப்பட்ட இன சுத்திகரிப்புக்கு உழைக்கும் நோக்குடன், இவ்வாறான செயல்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

வீடியோ

மட்டக்களப்பில் ரணிலுக்கு பெரிய பதாகை
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் ரணிலுக்கு பெரிய பதாகை

மட்டக்களப்பில் ரணிலுக்கு பெரிய பதாகை

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பயணம் செய்யவுள்ளார் .

அதனால் அவருக்கு மிக பெரும் பதாகை ஒன்று வைக்க பட்டுளள்து ,சமாதானத்தின் தேவன் ரணில் லஞ்ச ஊழல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கும் இவ்வேளையில் அவருக்கு பதாகை வைத்து கொண்டாடுகிறது ஒரு கூட்டம்

அடிப்படை தமிழர் பிரச்சனையை தீர்க்க மறுக்கும் ரணில் தமிழர்கள் ஓட்டை கேட்டு ஓடி வருவது வெட்க கேடு என்கிறது தமிழர் தேசம் .

வீடியோ

மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் டிட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் அட்டகாசம்

மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் மீசாலை மேற்கு பகுத்தியில் வீடு ஒன்றுக்குள் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் அதே வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர் .

வீட்டின் கதவை உடைத்த ஆவா கும்பல் அங்கிருந்த தொலைக்காட்சி,மோட்டார்சைக்கிள் மற்றும் உடைமைகள் என்பனவற்றைதீ எவைத்து எரித்தனர் .

மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் டிட்டகாசம்

பின்னர் அங்கிருந்தடித்து தப்பி சென்றுள்ளனர் .

வீட்டில் இருந் பெண்கள் போட்ட அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து அவர்களை காப்பாற்றினர் .

உடைமைகள் சேதமாக்க பட்ட பொழுதும் ,அங்கிருந்த மக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .

யாழ்ப்பாணத்தில் தொடரும் இவ்விதமான ரவுடி கும்பலின் செயல்பாடுகள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

ரணிலை வாட்டி எடுத்த ஜெர்மன் ஊடகம் தடுமாறிய ரணில் விக்கிரமசிங்க

ரணிலை வாட்டி எடுத்த ஜெர்மன் ஊடகம் தடுமாறிய ரணில் விக்கிரமசிங்க

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஜெர்மன் ஊடகம் ஒன்றில் சிக்கி தடுமாறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .

பொய்யில் உருண்டு லஞ்ச ஊழலில் முழ்கியுள்ள ரணில் ,மகிந்தா அசரங்கத்தின் பித்தலாட்டங்கள் ,உடைத்து கக்கியது அந்த ஜெர்மன் ஊடகம் .

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் ,நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகள் தொடர்பில் தோண்டி எடுத்து கேள்விகளை கேட்டது .

ரணிலை வாட்டி எடுத்த ஜெர்மன் ஊடகம் தடுமாறிய ரணில் விக்கிரமசிங்க

அவர்களின் துல்லியமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது ரணில் விக்கிரமசிங்கா திணறினர் .

ஜெர்மன் பயணத்தில் வாயை கொடுத்து மாட்டி கொண்ட ரணில் நிலை பரிதாபகரமாக உள்ளது .

சர்வதேச விசாரணைக்கு ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டேன் என அவர் சூளுரைத்தார் .,

இலங்கையில் தமிழ் இனஅழிப்பு இடம்பெறவில்லை என வாய் கூசாது தெரிவித்துள்ளார் ,

சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

இலங்கை புரிந்த தமிழின படுகொலைக்கு இலங்கையை சர்வதேச நீதிமன்றி முன்னிலை படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முழங்கியுள்ளார் .

முல்லைதீவு மாவட்டத்த நீதிபதி சற்குணராஜா நாட்டை விட்டு மிரட்ட பட்டு துரதியடிக்க பட்ட விடயம் தொடர்பில், பாரளுமன்றில் உரையாற்றும் பொழுதே இந்த விடயத்தை முன் வைத்தார் .

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

ஆண்டுகளாக ஆண்டு வரும் ஆளும் சிங்கள பவுத்த இனவாதிகள் ,தமது நலன்கள் கருதி சட்டங்களை மாற்றுகள் ,தமிழ் நீதிபதிகளை மிரட்டி அடக்கி ஆண்டு வருகின்றனர் .

இது ரணில் அரசாங்கத்தின் வாங்குறோத்து நிலையை காட்டுகிறது .எனவே தமிழர்களை புறம்தள்ளி நசுக்கி ஒடுக்குவதன் மூலம் இலங்கை சுதந்திரமும் நின்மதியாக வாழமுடியாது என இடித்து கூறினார் .

வீடியோ

மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்

மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்

இலங்கை மீனவர்க்ளுக்கு இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் பட்டுளள்து .சீனா அரசினால் இலங்கை கடல்வாழ் மீனவர்களுக்கு இந்த உதவி திட்டம் வழங்க பட்டது .

அதன் அடிப்படியில் இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளதாக அரசு அறிவித்த்துள்ளது .

மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்

சீனா அக்குடியரசினால் 4.5 லீட்டர் எரிபொருள் வழங்க பட்டது ,அதன் சந்தை பெறுமதி 1080 மில்லியன் ரூபாவாகும் .

மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்

அதன் திட்டத்த்தின் படி முதல் கட்டமாக கொழும்பு ,களுத்துறை ,காலி ,மாத்தறை ,தங்களை ,கல்முனை ,மட்டக்களப்பு ,திருகோணமலை ,யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு ,புத்தளம் ,சிலாபம் ,நீர்கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு வழங்க பட்டன .

அதனை அடுத்து இப்பொழுது இந்த இரண்டாம் கட்ட இலவச இணைப்பு வழங்கி வைக்கும்நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

வீடியோ

பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி

பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி

இலங்கை கொள்ளுப்பிட்டி டூப்பிளிகேஷன் வீதியில் பயணிகள் பேரூந்து ஒன்றின் மீது இரட்ஷத மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் அதில் பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர் .

அதே பேரூந்தில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் யாவரும் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி

அரச பேரூந்தின் மீதே இந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் ,அந்த பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது .

இந்த் பேரூந்து விபத்தினால் அந்த சாலை போக்குவரத்தில் தடை ஏற்பட்டது .எமனாக மாறிய மரத்தினால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ