Posted in இலங்கை செய்திகள்

மதுபான விற்பனை நிலையங்கள் அடித்து பூடட உத்தரவு

மதுபான விற்பனை நிலையங்கள் அடித்து பூடட உத்தரவு

நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.

பொதுநிர்வாக உள் நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

2020 வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான சாலைகள் , இறைச்சி விற்பனை நிலையங்கள், இறைச்சிக்காக விலங்குகளை

உயிரிழக்கச் செய்யும் நிலையங்கள், சூதாட்ட நிலையங்கள் (ரேஸ் புக்கி), கஷினோ நிலையங்கள் , கிளப்புக்கள் ஆகிவற்றை மூடுதல்

2564 ஸ்ரீ பௌத்த வருடமான 2020 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி மற்றும் 08ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் வெசாக் தினமாக

பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்முறை வெசாக் வைபவத்தை முன்னிட்டு 2020ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி தொடக்கம் மே

மாதம் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

  1. இதே போன்று நீரோகிகம பரமலஹாய் சதுட்ட பரம தனயய் என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்கம் வெசாக்கை பிரகடனப்படுத்தியுள்ளது.
  2. இதனால் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 06, 07 மற்றும் 08 ஆகிய 3 தினங்களில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து இறைச்சி
  3. விற்பனை நிலையங்களை மூடுவதற்கும், சிறப்பங்காடி நிலையங்களில் (சுப்பர் மார்க்கெட்) மதுபான விற்பனையை
  4. நிறுத்துவதற்கும் , விலங்குகளை உயிரிழக்கச் செய்யும் நிலையங்கள் , சூதாட்ட நிலையங்கள் (ரேஸ் புக்கி) கஷினோ
  5. நிலையங்கள் மற்றும் கிளப்புக்களை மூடுவதற்கும் இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் சிறப்பங்காடி
  6. நிலையங்களில் (சுப்பர் மார்க்கெட்) இறைச்சி விற்பனையை நிறத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தயவுடன் அறிவிக்கின்றோம்.

எஸ் ஹெட்டிஆராச்சி
செயலாளர்
அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு

பிரதிகள்

  1. ஜனாதிபதியின் செயலாளர்
  2. பிரதமரின் செயலாளர்
  3. செயலாளர் வெகுஜன ஊடக அமைச்சு
  4. செயலாளர் புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு
  5. பொலிஸ் மா அதிபர் , இலங்கை பொலிஸ்
  6. கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம்
  7. பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம்
  8. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
  9. மேலதிக செயலாளர், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரிவு
மதுபான விற்பனை
மதுபான விற்பனை
      Posted in இலங்கை செய்திகள்

      கொரோனா தொற்று எண்ணிக்கை 751ஆக அதிகரிப்பு

      கொரோனா தொற்று எண்ணிக்கை 751ஆக அதிகரிப்பு

      கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 751ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் புதிதாக 33 பேர் இனங்காணப்பட்டனர்.

      நேற்று புதிதாக அடையாளங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 33 நோயாளிகளில் 31 பேர் கடற்படையைச்

        சேர்ந்தவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

        மற்ற இரண்டு நோயாளிகளும் கடற்படை வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

        தொற்றுக்குள்ளான இரண்டு நோயாளிகளும் 13 வயது பிள்ளை மற்றும் 70 வயது பெண் என்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

        இதற்கமைவாக இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 751ஆக உயர்வடைந்துள்ளது.

        இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 751 பேரில் 549 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

        இந்தநிலையில் நேற்றைய தினம் நாட்டில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

        அதன்படி இதுவரையில் 194 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

        கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் ஒருவர் உயிரிழந்தார். அதற்கமைய இலங்கையில் கொரோனா

        தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயிர்வடைந்துள்ளது.

        இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 137 பேர்

        கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்தள்ளது.

        கொரோனா தொற்று
        கொரோனா தொற்று
            Posted in இலங்கை செய்திகள்

            சிகை அலங்கார நிலையங்கள் ,சலூன்கள் ஆகியவற்றை திறப்பதற்கு நடவடிகை

            சிகை அலங்கார நிலையங்கள் ,சலூன்கள் ஆகியவற்றை திறப்பதற்கு நடவடிகை

            COVID 19 தொற்றின் காரணமாக அரசாங்கத்தினால் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சிகை அலங்கார

            நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அமைவாகவும் சிகை அலங்கார துறைக்கான சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்படவுள்ளன.

              இந்த சட்ட கட்டமைப்பு உள்ளடக்கிய வழிகாட்டிக்காக நடைமுறை பிரச்சினைகளை அறிந்து கொண்டு புதிய விடயங்களை

              உள்ளடக்கும் நோக்கத்தைக் கொண்டு சுகாதார அமைச்சு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் திருமதி பவித்ரா தேவி

              வன்னியாராச்சி தலமையிலும் சிகையலங்கார துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் நேற்றைய தினம் (4) மாலை சுகாதார அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

              இதன்போது சுகாதார அமைச்சரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. சிகை அலங்காரத் துறைக்கான சட்டங்களை

              வகுப்பது வேறு எந்த நிறுவனமும் அல்ல என்றும் இதனை சுகாதர அமைச்சினால் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

              இதே போன்று நாளாந்த சேவைகளை வழங்கும் பொழுதுசகாதார அமைச்சினால் வழங்கப்படும் அறுவுறுத்தல்கள் வழங்கப்பட்ட

              சிகை அலங்காரம் உள்ளிட்ட சேவை இடங்கலாக அத்தியாவசிய சேவையை மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை

              மேற்கொள்ளுமாறும் அதற்காக உரிய இடவசதி ஏற்பாடு செய்ய வேண்டும். சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்படும் பாதுகாப்பு

              முறையை சரியான முறையில் கடைபிடித்து சேவையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

              இதே போன்று சிகை அலங்கார சேவை முறையாக முன்னெடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை

              உள்ளடக்கிய வழிகாட்டியொன்றை சமர்ப்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார

              வைத்திய அதிகாரிகள் ஊடாக இந்த நடவடிக்கை கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனறும் அறிவி;ககப்பட்ட்து

              இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் சிகை அலங்காரத்துறையின் முக்கியஸ்தரகளுடன் இன்று

              பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களது கோரிக்கை சிகை அலங்கார நிலையங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம்

              ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதாகும். இவர்களது கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு இந்த நிலையங்களை

              திறப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறை பாரிய அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் உலகில்

              பல நாடுகளில் பரவியுள்ள இந்த தொற்று நோயை இலங்கையில் கட்டுப்பதக்கூடிய நிலமை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

              இத்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய போதிலும் இந்த சந்தர்ப்பத்தில் நாடு குறித்து

              சிந்தித்து மிகப் பொறுப்புடன் சேவைi மேற்கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொண்டுள்ளளோம். விசேடமாக சமூக இடைவெளியை

              முன்னெடுத்து சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து உங்கள் நிறவனங்களுக்கு வரும் நபர்களுக்கு சேவையை வழங்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

              இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சிகை அலங்காரத் துறையைச் சேர்ந்த முன்னோடிகளினால் COVID 19 காரணமாக

              சிகை அலங்கார நிலையங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்த போதிலும் பெரும்பாலான நிலையங்களின்

              நடவடிக்கைகள் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்வதற்கு செயல்படுவதாக தெரிவித்தனர் இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் என்று சுட்டிக்காட்டினர்.

              தற்பொழுது A,B,C ஆகிய சிகையலங்காரத் துறை தரத்திற்கு அமைவாக இதுதுறையில் சுமார் 2 இலட்சம் பேர்

              வாழ்வாதாரத்திற்காக தங்கியுள்ளனர்.. இதனால் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் சுகாதார பாதுகாப்பு

              நடைமுறைகளை கடைபிடித்து தமது சேவையை முன்னெடுப்பதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.

              கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக பேச்சுவார்ததைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை தொடர்பில் தமது நன்றியை சுகாதார அமைச்சுக்குத் தெரிவிப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டனர்.

              இந்த நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, பிரதிப் பணிப்பாளர் நாயகம் எல்.ரி.கம்லத், சுற்றாடல் மற்றும் தொழில் சுகாதார அலகின்

              பணிப்பாளலர் வைத்தியர் திலக் சிறிவர்தன, சிகை மற்றும் சிகை அலங்கார தொடர்பான இலங்கை நிறுவனங்களின் தலைவர்

              திருமதி கருணாரத்ன அதன் அங்கத்தவர்களான திருமதி ரமணி பெர்னாண்டோ , முன்னணி சிகை அலங்கார கலைஞர்களான ரம்சி

              ரஹ்மான், ரோஹான் பீரிஸ், சஞ்சீவ குமார பெரும உள்ளிட்டர் பலர் கலந்து கொண்டனர்.

              சலூன்கள்
              சலூன்கள்
                  Posted in இலங்கை செய்திகள்

                  ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் -இதனை நீங்கள் செய்யலாம்

                  ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் -இதனை நீங்கள் செய்யலாம்

                  ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு?

                  ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு?

                  மேலதிக விளக்கம்

                    01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது?

                    கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
                    ஏனைய மாவட்டங்களில் இன்று (04) முதல் மே 06, புதன் வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை நடைமுறையில்

                    இருக்கும். இம்மாவட்டங்களில் மே 06 புதன், இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 11 திங்கள் அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.

                    02.ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இயல்பு வாழ்க்கையையும் நிறுவன செயற்பாடுகளையும் வழமை நிலைக்கு கொண்டுவருதல் எப்போது ஆரம்பமாகும்?

                    கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில்

                    இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருதல் மே 11 திங்கள் முதல் ஆரம்பமாகும்.


                    இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்று (04) முதல் ஆரம்பிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும், இவ்வாரத்தில் 04 வார விடுமுறை நாட்கள் உள்ளதால் மே 11க்கு மாற்றப்பட்டுள்ளது.

                      03.இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவரும் ஆரம்ப பணிகள் எவ்வாறு இடம்பெறும்?

                      கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அரச, தனியார் துறை நிறுவனங்கள் மே 11 திங்கள் முதல் திறந்திருக்க வேண்டும்.

                      இதற்காக தற்போது முதல் திட்டமிடுமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


                      நிறுவனங்களை திறந்து பணிகளை மேற்கொள்ளும் போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக

                      பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.


                      தனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00மணிக்கு திறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


                      அரச, தனியார் துறை நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.

                      போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள், புகையிரதங்கள் பயணிகள் போக்குவரத்துக்காக அரச, தனியார் துறையில் தொழிலுக்காக செல்வோருக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

                      04.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு எத்தகைய விடயங்களுக்காக அனுமதி வழங்கப்படும்?

                      கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய் நிவாரணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்

                      வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
                      வீடுகளில் இருந்து வெளிச்செல்வது உணவு மற்றும் மருந்துப்

                      பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமேயாகும்.

                      1. தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களுக்கு ஏற்ப வீடுகளை விட்டும் வெளிச்செல்வதற்கு வழங்கப்படும் அனுமதி எப்பிரதேசங்களுக்கு ஏற்புடையது? எப்போது முதல்?

                      · ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டும்.

                      · மே 11 திங்கள் முதல்

                      · ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வேலையில் அது ஏற்புடையதாகாது

                      ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படினும் மேற்படி அறிவுறைகளை பின்பற்றி மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

                      ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும், பொருளாதார மற்றும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வரும் பணிகள்

                      இடம்பெறுவதுடன், வைரஸ் பரவலை தடுப்பதற்காக மக்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதே இந்த ஏற்பாடுகளின் முக்கிய நோக்கமாகும்.

                      மேற்படி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக ஏலவே வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

                      ஜனாதிபதி ஊடகப் பிரிவு

                      ஊரடங்கு சட்டம் அமுலில்
                      ஊரடங்கு சட்டம் அமுலில்
                          Posted in இலங்கை செய்திகள்

                          கிளிநொச்சி மாவட்ட சிறுபோக முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்

                          கிளிநொச்சி மாவட்ட சிறுபோக முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்

                          சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தித்திட்டத்தின் கீழ் 2020 ஆண்டின் சிறுபோகம் முன்னேற்றம் தொடர்பிலான

                          கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றது.

                          மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி R.கேதீஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துடையாடலில் மாவட்ட

                            விவசாயப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவை திணைக்களம்

                            விவசாயத்திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

                            சௌபாக்கியா தேசிய உணவுத்திட்டத்தினை நடை முறைப்படுத்துவதில்

                              உள்ள இடர்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் குறித்த காலப்பகுதிக்குள்

                              அடைவுமட்டத்தினை எட்டுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டன.

                              கிளிநொச்சி மாவட்ட
                              கிளிநொச்சி மாவட்ட
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மட்டக்களப்பில் கொரோனா தொற்று – அர்பணிப்புடன் செயற்பட்ட தலைவர்களுக்கு அரசாங்க அதிபர் பாராட்டு

                                  மட்டக்களப்பில் கொரோனா தொற்று – அர்பணிப்புடன் செயற்பட்ட தலைவர்களுக்கு அரசாங்க அதிபர் பாராட்டு

                                  மட்டக்களப்பில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட

                                  கொரோனா தடுப்பு செயலனியினால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

                                  இதனடிப்படையில் உள்ளுராட்சி சபைகள் தொற்று நீக்கல் விசிறல் முதல் மக்கள் ஒன்று கூடும் சந்தை போன்ற இடங்களை

                                    முகாமைத்துவம் செய்வது வரையிலான அனைத்து விடயங்களிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இம்மாவட்டத்தில் கொரோனா

                                    தொற்று பரவாமலிருக்க இவர்களின் பங்களிப்பு மேலானது என பாராட்டப்படவேண்டியது அவசியம் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

                                    அரசாங்க அதிபர் பதவியேற்று முதன்முறையாக உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களை சந்திக்கும் கூட்டம் இன்று (4) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது

                                    அரசாங்க அதிபர் இதனை தெரிவித்தார். ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தமையினால் உள்ளுர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் குறிப்பாக மரக்கறி உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல் பல

                                    சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்காக மாவட்ட செயலகத்தினால் மரக்கறி உற்பத்திகளைக் இரண்டு தடவைகள்

                                    கொள்வணவு செய்து அனைத்து பிரதேச செயலகங்கள் வாயிலாக விற்பனை செய்ய நவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றியளித்துள்ளது.

                                      இதேபோன்று எமது மாவட்டத்தில் காணப்படுகின்ற மரக்கறி, மீன், பால் போன்ற உள்ளுர் உற்பத்திகளை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களுக்கும், மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கும் நியாய

                                      விலையில் விற்பனை செய்ய மொத்த வியாபாரிகளையும், சில்லறை வியாபாரிகளையும் ஒருங்கிணைப்புச் செய்து மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முன்வரவேண்டும்

                                      என அரசாங்க அதிபர் உள்ளுராட்சி சபைத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார். மேலும் பலவிடயங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

                                      இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப் பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி

                                      முகுந்தன், மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் ரீ. பிரகாஸ், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி. சரவனபவான், நகர சபைத்

                                      தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்களும் கலந்துகொண்டனர்.

                                      மட்டக்களப்பில் கொரோனா
                                      மட்டக்களப்பில் கொரோனா
                                          Posted in இலங்கை செய்திகள்

                                          மூடப்பட்டிருந்து சில பகுதிகள் மீள திறப்பு

                                          மூடப்பட்டிருந்து சில பகுதிகள் மீள திறப்பு

                                          கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்து நாவலப்பிட்டி நகரம் இன்று திறக்கப்பட்டது.

                                          கடைகள் மற்றும் பொது இடங்கள் முழுமையாக கிருமி ஒழிப்புக்கு பின்னர் இன்று நகரம் திறக்கப்பட்டது

                                          நகரத்திற்குள் நுழையும் மக்களுக்கு நகரம் முழுவதும் ஒலிபெருக்கிகள் மூலம் பொது மக்களுக்கு போலிசார் கொரோனா குறித்து தெளிவுபடுத்தினர்.

                                            கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு கடற்படை வீரர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாவலபிட்டிய நகரம் சமீபத்தில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

                                            இதேவேளை கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட கண்டி

                                            மாவட்டத்தின் அக்குரணை பகுதியும் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பகுதியும் நேற்று மீள திறக்கப்பட்டன.

                                            குறித்த பகுதிகளில் இறுதி நோயாளி அடையாளம் காணப்பட்ட நாள் முதல் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை

                                            மேற்கொள்ளப்பட்டிருந்ததாக ,இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

                                            அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் குறித்த பகுதிகளை மீண்டும் திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். .


                                            இதேவேளை கொரோனா தொற்று காரணமாகவும் ஒருவர் உயிரிழந்திருந்தமையாலும் மூடப்பட்டிருந்த மருதானை ,மாமுல் அருஸ் மாவத்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

                                            .மாமுல் அரூஸ் மாவத்தை தொடர்மாடிக் குடியிருப்பைச் சேர்ந்த 302 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு புனானை கண்காணிப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

                                            அதனைத் தொடர்ந்து கடந்த 17 ஆம் திகதி அவர்களின் தனிமைப்படுத்தல் காலப்பகுதியை நிறைவு செய்த பின்னர்

                                            வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.ன்று முதல் 14 நாட்களுக்கு அவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டனர்.

                                            சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு 14 நாட்கள் நிறைவுற்ற நிலையில், குறித்த பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது

                                            நாவலப்பிட்டி
                                            நாவலப்பிட்டி
                                                Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                கிழக்கு லண்டன் பள்ளி வாசல்களில் குவிக்க படும் மனித சடலங்கள்

                                                கிழக்கு லண்டன் பள்ளி வாசல்களில் குவிக்க படும் மனித சடலங்கள்

                                                பிரிட்டன் கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்று தாற்காலிக கொரனோ
                                                சுடலையாக மாற்றம் பெற்றுள்ளது

                                                கொரனோ நோயினால் இறந்தவர்கள் சடலங்கள் இந்த பள்ளி வாசலுக்குள் வைக்க

                                                பட்டு ,உடல்கள் இறுதி நல்லடக்கம் செய்வதற்கு அந்த பள்ளி வாசல் ஒதுக்கியுள்ளது

                                                அதிகம் ஐந்து வேளை தொழும் பள்ளிவாசல் இவ்வாறு ஒதுக்க பட்டுள்ளது ,எதிர் காலத்தில் அதன் பாதிப்பு பலமாக இருக்கும் என நம்ப படுகிறது

                                                கிழக்கு லண்டன் அலை
                                                கிழக்கு லண்டன் அலை
                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                    293 இலங்கை கடற்படைக்கு கொரனோ

                                                    293 இலங்கை கடற்படைக்கு கொரனோ

                                                    இலங்கையில் பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 293 கடற்படையினர்

                                                    பாதிக்க பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

                                                    பாதிக்க பட்ட அனைவரும் சிறப்பு இடைத்தங்கல் தனிமை பாடுதல் முகாமில்

                                                    வைத்துச சிகிச்சை வழங்க பட்டு வருகிறது,இதுவரை இந்த நோயின்

                                                      தாக்குதலில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் .706 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                      தொடர்ந்து ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் மஹூல் படுத்த பட்டுள்ளது

                                                      293 இலங்கை கடற்படைக்கு
                                                      293 இலங்கை கடற்படைக்கு
                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                        இராணுவத்தை கொல்ல பழுதடைந்த மீன்களை எடுத்து சென்றவர் மடக்கி பிடிப்பு

                                                        இராணுவத்தை கொல்ல பழுதடைந்த மீன்களை எடுத்து சென்றவர் மடக்கி பிடிப்பு

                                                        இலங்கை அக்ரும்பிட்டிய ஐராணுவ முகாமில் உள்ளவர்களுக்கு சேமித்து

                                                        வழங்க பாடுவதற்கு டிரக் ஒன்றில் எடுத்துஸ் எல்லா பட்ட மீன்கள் பாரிமுதஹ்லஸ் எய்ய பட்டுள்ளன எ.

                                                        பாவனைக்கு உதவாத இவ்வகையான மீன்களை எடுத்துஸ் என்ற பொழுது

                                                          காவல்துறையினரால் அந்த வண்டி சோதனைக்கு உட்படுத்த பட்ட பொழுது இந்த விடயம் அம்பலமாகியுள்ளது

                                                          இந்த மீன்களை உட்கொண்டிருந்தால் அவர்கள் இருந்திருக்கும் நிலை

                                                          ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்க படுகிறது.சுமார் 200 கிலோ மீன்கள் இவ்வாறு மீட்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                                                          இராணுவத்தை கொல்ல
                                                          இராணுவத்தை கொல்ல
                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                            லண்டனில் இருந்த து 208 பேரை காவி சென்ற இலங்கை விமானம்

                                                            லண்டனில் இருந்த து 208 பேரை காவி சென்ற இலங்கை விமானம்

                                                            பிரிட்டனில் தவித்து கொண்டிருந்த 208 இலங்கையரை காவிய படி இலங்கை எயார்லைங்கா விமானம் ஒன்று இலங்கை சென்றுள்ளது .

                                                            இதில் பயணித்த அனைவரும் 21 நாட்கள் தனிமை படுத்தலின் பின்னர்

                                                            அவர் தம் குடும்ப உறவுகளுடன் இணைத்து கொள்வார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                                                                Posted in இலங்கை செய்திகள்

                                                                மிருசுவில் பகுதியில் வாள் வெட்டு – ஒருவர் வெட்டி கொலை

                                                                மிருசுவில் பகுதியில் வாள் வெட்டு – ஒருவர் வெட்டி கொலை

                                                                மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்

                                                                ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

                                                                இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

                                                                சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார்.

                                                                  படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு

                                                                  மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

                                                                  உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்த்தால்

                                                                  ஒருவர் உயிரிழப்புக் காரணமானது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

                                                                  மிருசுவில் பகுதியில் வாள்
                                                                  மிருசுவில் பகுதியில் வாள்
                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      சாராய கடையை உடைத்து திருடிய குடி மகன்கள்

                                                                      சாராய கடையை உடைத்து திருடிய குடி மகன்கள்

                                                                      திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகரிலுள்ள

                                                                      மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

                                                                      கொட்டகலை நகரிலுள்ள பொலிஸ் சோதணைசாவடிக்கு 100 மீட்டர் தொலைவிலுள்ள

                                                                      மதுபானம் விற்பனை நிலையமே நேற்றிரவு இனம் தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

                                                                        மதுபான விற்பனை நிலையம் உடைக்கபட்டுள்ளமை தொடர்பில் உரிமையாளரின்

                                                                        முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

                                                                        சாராய கடையை உடைத்து
                                                                        சாராய கடையை உடைத்து

                                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                                            தனிமை படுத்தப்பட்ட களுத்துரை& கண்டி மாவட்டங்கள் விடுவிப்பு

                                                                            தனிமை படுத்தப்பட்ட களுத்துரை& கண்டி மாவட்டங்கள் விடுவிப்பு

                                                                            ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான

                                                                            ஊடக சந்திப்பு நேற்று மதியம் (3) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும்,

                                                                            பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

                                                                              “களுத்துரை மாவட்டத்தில் அமைந்துள்ள பேருவலையிலுள்ள முடக்கப்பட்ட பன்னில பிரதேசம், கண்டி மாவட்டத்திலுள்ள

                                                                              சீனகொட்டுவ மற்றும் அக்குரனை ஆகிய பிரதேசங்கள் இன்று 3 ஆம் திகதி மருத்துவ ஆலோசனையின் பிரகாரம்

                                                                              விடுவிக்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசங்கள் ஏனைய பிரதேசங்களை போன்று இயல்பு நிலையில் இயங்கும்.

                                                                              லன்டனில் இருந்து இன்று மாலை மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 207 பேர் இலங்கை வரவுள்ளனர். அவர்கள்

                                                                              தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்டவுள்ளனர்.

                                                                              இராணுவத்தினரால் நிருவகிக்கப்பட்டு வரும் தம்மின்ன (9) மற்றும் வெலிகந்தை(2) தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 11 பேர்

                                                                              கொண்ட மேலும் ஒரு குழுவினர், மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

                                                                              முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 4917 பேர் இன்று 3 ஆம் திகதியுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

                                                                              அதேவேளை, கோவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய

                                                                              தொடர்புகளை பேணிய 1023 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

                                                                              முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 36 தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரையில் 4635 பேர் தனிமைப்படுத்தலில்

                                                                              உள்ளனர் என லெப்டின்ன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்தார்.

                                                                              சுருக்கம் :

                                                                              இதுவரை மொத்தம் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை -4917

                                                                              தற்பொழுது மொத்தமாக தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள்- 4635

                                                                              மொத்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் – 36

                                                                              தனிமை படுத்தப்பட்ட
                                                                              தனிமை படுத்தப்பட்ட
                                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                                              நாளை முதல் அரச ஓய்வூதிய காரர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு

                                                                              நாளை முதல் அரச ஓய்வூதிய காரர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு

                                                                              அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு நாளையும் நாளை மறுதினமும் வழங்கப்படவுள்ளது.

                                                                              இதற்கான ஒழுங்குகளை பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை முற்கொண்டுள்ளது.இதுதொடர்பாக செயலணி விடுத்துள்ள

                                                                              அறிக்கை பின்வருமாறு:
                                                                              பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் ஊடக அறிக்கை


                                                                                2020.05.03
                                                                                அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதியம் வழமையாக ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி செலுத்தப்படுவது வழமை. இருப்பினும் வெசாக் நோன்மதி மற்றும் வார இறுதி விடுமுறை

                                                                                தினம் இடம்பெறுவதினால், மே மாதத்திற்கான ஓய்வூதியத்தை மே மாதம் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


                                                                                மேலும் ஓய்வூதியகாரர்களுக்கு ஏப்ரல் மாத ஓய்வூதியத்தைப் பெற்றக் கொள்வதற்கு அரசாங்கம் வசதி செய்த வகையில் இந்த மாதமும் , மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள்

                                                                                ஆகியோரின் வழிகாட்டல்களின் கீழ் கிராம உத்தியோகத்தர்கள் அடங்கலாக கிராம மட்டத்தில் அரச கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளின் அமைப்புக்கள் , முப்படை மற்றும் இலங்கை

                                                                                போக்குவரத்து சபையுடன் இணைந்து அனைத்து பிரதேச செயலாளர் பிரிவவுகளிலும் உள்ள ஓய்வூதியகாரர்களை

                                                                                வங்கிகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் , அங்கு அவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக மருந்தகங்களுக்கும் அழைத்துச் செல்வதற்கும் வைத்திய

                                                                                சிகிச்சையை (கிளினிக்) மேற்கொள்வதற்காக அருகில் உள்ள மருத்துவ மற்றும் ஆயர்வேத வைத்திய நிலையங்களுக்கு

                                                                                அழைத்துச் செல்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதை இதன் மூலம் அறியத்தருகின்றோம்.

                                                                                நாளை முதல் அரச
                                                                                நாளை முதல் அரச
                                                                                Posted in இலங்கை செய்திகள்

                                                                                தமிழர் வீடுகளுக்கு முதலை விட்ட இராணுவம் – பதறி ஓடிய மக்கள்

                                                                                தமிழர் வீடுகளுக்கு முதலை விட்ட இராணுவம் – பதறி ஓடிய மக்கள்

                                                                                கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தமிழர் வீடுகளுக்குள் இலங்கை அரச இராணுவத்தினர் முதலை விட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

                                                                                இந்த பகுதியில் குளங்கள் ,ஆறுகள்,ஏதும் இல்லாத நிலையில் இந்த முதலைகள் திடீரென வீடுகளுக்குள் நுழைந்துள்ளது,முதலை விடப் பட்ட பகுதிக்கு அருகில் இராணுவ முகாம்கள் உள்ளன

                                                                                கொடிகாமம்,கிளிநொச்சி ,இயக்கச்சி பகுதியில் இந்த முதலைகள் விட பட்டுள்ளன ,வீட்டு தாவரத்தில் உறங்கி கொண்டிருந்த சிறு பிள்ளை ஒன்றை முதலை உண்ண விரைந்து வந்துள்ளது ,

                                                                                  இதனை கண்டு நாய் குரைத்து ஒலி எழுப்பிய நிலையில் சுதாகரித்து கொண்ட மக்கள் வீ,ட்டின் முற்ற பகுதியில் வந்த பொழுது முதலையை கண்டுள்ளனர்

                                                                                  நாயின் குரைத்து இருக்க விட்டால் அந்த சிசுவை முதலை தின்று இருக்கும் என பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் ,

                                                                                  ஊரடங்கு வேளையில் இராணுவத்தினர் ,வீடுகளுக்கு அருகில் இவ்வாறு முதலைகளை விட்டு செல்கின்றனர் ,

                                                                                  மதம் பிடித்த யானைகளை ஆனையிறவு ,ஊரியன் ,கண்டாவளை ,பகுதிகளில் இராணுவத்தினர் விட்டுச சென்றுள்ளனர்
                                                                                  ,
                                                                                  இந்த யானைகள் மக்களின் பயன் தரும் மரங்கள் ,மற்றும் மக்களை அடித்து கொன்றுள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன .

                                                                                  மக்கள் இந்த விடயங்களை வெளியில் கூற முடியாத நிலையில் அச்சத்தில் உறைந்துள்ளனர் ,

                                                                                  இறுதி போர் முடிவடைந்த நிலையில் தமிழர் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                                                                                  தமிழர் வீடுகளுக்கு முதலை
                                                                                  தமிழர் வீடுகளுக்கு முதலை
                                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                                      முல்லை,வவுனியாவில் கிணற்றில் இருந்து ஆண் ,பெண் சடலமாக மீட்பு

                                                                                      முல்லை,வவுனியாவில் கிணற்றில் இருந்து ஆண் ,பெண் சடலமாக மீட்பு

                                                                                      முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் பெற்றவர்கள் இருவரையும் இழந்து

                                                                                      வசித்து வந்த இளம் வாலிபர் ஒருவர் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்

                                                                                      தாயின் ,தாயாருடன் வசித்து வந்த மாணவன் அவர் தங்கி இருந்த வீட்டு கிணற்றில்

                                                                                      இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் ,நீர் எடுத்துவர சென்ற இவரை காணவில்லை என தேடிய பொழுது ,எங்கும் கிடைக்கவில்லை

                                                                                        கிணற்றுக்குள் நீர் அள்ளிட சென்ற பொழுது ,அங்கு அவர் சடலமாக மிதந்துள்ளார் ,

                                                                                        இவர் எவ்வாறு இந்த கிணற்றில் வீழ்ந்து இறந்தார் என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

                                                                                        இதைப்போலவே வவுனியா செட்டி குளம் பகுதியில் கிணறு ஒன்றில் பெண் ஒருவர் இறந்த நிலையில் மீட்க பட்டுளளார்

                                                                                        இவருடன் கடந்த ஒருவாரத்தில் பத்து பேர் சடலமாக மீட்க பட்டுள்ளனர் ,தமிழர் பகுதியில் தொடரும் இவ்வாறான மர்ம கொலைகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                                                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                                                            பளையில் காணமல் போனவர் – அழுகிய நிலையில் சடலமாக மீட்பு -தொடரும் கொலைகள் photo

                                                                                            பளையில் காணமல் போனவர் – அழுகிய நிலையில் சடலமாக மீட்பு -தொடரும் கொலைகள்

                                                                                            பளையில் காணாமல் போன கல்லூரி மாணவன் ஆனையிறவு புலோப்பளை கடல் நீரேரி -பகுதியில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

                                                                                            கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இந்த மாணவனை தேடி குடும்ப உறவினர்கள் காவல் துறையில் முறைபாடு செய்திருந்தனர்

                                                                                            இவ்வாறான நிலையில் தற்போது புலோப்பளை கடல் நீரேரி பகுதியில் அழுகிய நிலையில் இவர்

                                                                                              சடலமாக மீட்க பட்டுள்ளார் .இவர் மர்ம நபர்களினால் கடத்த பட்டு சித்திரவதை வதை செய்ய பட்ட பின்னர்

                                                                                              படுகொலை செய்ய பட்டு ,ஆட்கள் அற்ற ஆனையிறவு பகுதியில் வீச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                                                                              கடந்த ஒரு வாரத்தில் மட்டும் யாழ்ப்பாண பகுதியை மையமாக வைத்து இவ்வாறு எட்டு கொலைகள் இடம்பெற்றுள்ளன .

                                                                                              அரசியல் வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன

                                                                                              இந்த அப்பாவி வாலிபனும் நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தார் என சட்ட வைத்திய அதிகாரி மரண சான்றிதழ் வழங்குவார் ,இவ்வாறே பலருக்கு வழங்க பட்டு வருகிறது ,

                                                                                              இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ள குழுக்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை,இந்த தொடர் கொலைகளினால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர்

                                                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                                                  தமிழர்களை கைவிட்ட கூட்டமைப்பு -வீட்டுக்கு வந்தால் செருப்படி – மக்கள் குமுறல்

                                                                                                  தமிழர்களை கைவிட்ட கூட்டமைப்பு -வீட்டுக்கு வந்தால் செருப்படி – மக்கள் குமுறல்

                                                                                                  இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,இதனால் அன்றாடம் கூலிகள் பெரும்

                                                                                                  இடர்களுக்குள் சிக்கி வருகின்றனர் .
                                                                                                  ஒருவேளை கூட உண்ணமுடியாத நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கின்றனர் .

                                                                                                  இவ்வேளை தம்மை பிரதி நிதிப் படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்கள் எவரும் தமது நிலைகளை

                                                                                                    கண்டறிந்து உதவிட முன்வரவில்லை என பாதிக்க பட்ட மக்கள் தமது உள்ள குமுறலை நமக்கு தெரிவித்துள்னர்

                                                                                                    தேர்தல் வந்தால் மட்டும் புலிகளின் வீர வசனங்களை பேசிய படி வீடு தேடி வரும் இவர்கள் ,தேர்தல் முடிந்ததும் மறந்து விடுகின்றனர் என குமுறியுள்ளனர் .

                                                                                                    இலங்கை அரச காவல்துறையினர் அப்பாவி மக்கள் மீது போலி குற்ற சாட்டுக்களை சுமத்தி தாக்க படுவதும் ,அதற்கு எதிராக

                                                                                                    இவர்கள் எதுவும் செய்திட இயலாமல் இருப்பதையும் சுட்டி காட்டும் மக்கள்

                                                                                                    இம்முறை தேர்தலில் இவர்களை தோற்கடிப்பதுடன் ,நாம் யாருக்கு வாக்கு அளிக்க மாட்டோம் என்கின்றனர் .

                                                                                                    இது மக்களின் கோபத்தின் வெளிப்பாட்டு நிலையாக அமைந்துள்ளது ,இதனை தடுக்க கூட்டமைப்பினர் என்ன செய்ய போகின்றனர் ..? இவ்வாறு நோக்கின் கூட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியே

                                                                                                    தமிழர்களை கைவிட்ட
                                                                                                    தமிழர்களை கைவிட்ட
                                                                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                                                                        சிறையில் இருந்து ஆறுவர் தப்பின் ஓட முயற்சி – ஒருவர் பலி

                                                                                                        சிறையில் இருந்து ஆறுவர் தப்பின் ஓட முயற்சி – ஒருவர் பலி

                                                                                                        இலங்கை மகர சிறையில் சிறை வைக்க பட்டிருந்த ஆறு கைதிகள் அந்த

                                                                                                        சிறை சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சிகளை மேற்கொண்டனர் .

                                                                                                        இதன் பொழுது அவர்களை காவல் துறையினர் தூரத்தி சென்றனர் ,

                                                                                                        இதில் மரம் ஒன்றில் ஏறியவர் அதில் இருந்து வீழ்ந்து பலியானார் .

                                                                                                        மேலும் ஐவர் கைது செய்ய பட்டனர்

                                                                                                        இந்த சம்பவத்தில் கைதிகளை துரத்தி சென்ற இரு காவல் துறையினரும்

                                                                                                          படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                                                                                          மேலதிக விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருவதுடன் ,குறித்த சிறை பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது

                                                                                                          சிறையில் இருந்து ஆறுவர்
                                                                                                          சிறையில் இருந்து ஆறுவர்