துவரகா பேச்சு|பிரபாகரன் மகள் துவரகா|Maaveerar Naal 2023|thuvraga|Prabhakaran's daughter Dwaraka
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளை பெற்ற தலைவர் மகள் துவாரகா

பிள்ளை பெற்ற தலைவர் மகள் துவாரகா

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மகள் பிள்ளை பெற்ற தலைவர் மகள் துவாரகா பிள்ளை பெற்ற
நிகழ்ந்துள்ளது

மாவீரர் நாளில் அவர் மக்கள் முன் உரையாற்றி இருந்தார்

இந்த உரையில் அப்படி இப்படி பேசப்பட்டு அவை .
சர்ச்சையை கிளப்பியது ,மேலும் அவர் வாடகை வாய் என்பது அம்பலமாகியது .

பிள்ளை பெற்ற தலைவர் மகள் துவாரகா

துவாரகா இப்பொழுது சுவிஸ் நாட்டில் வசித்து வருகிறாராம் ,இவருக்கு பிள்ள ஒன்று உள்ளது என விடயம் அறிந்த வட்டாரங்கள் .தெரிவிக்கின்றன

,பிரபகாரனை அப்பாவாக்கி கொள்ளையடித்து ஏப்பம் இட இவர்கள் திட்டம் போட்டு செயல்பட்டுள்ளனர் .

அதற்கு கள்ள மட்டை நபர் தலைமை தங்கி இந்தியாவில் உள்ள காசி கூட்டத்தை வாடகைக்கு அமர்த்தி கொள்ளையடிக்க போட்ட நாடகம் அம்பல பட்டுள்ளது .

இவர்கள் தொடர்பில் தமிழரை எச்சரிக்கையாக இருக்கும் படி கோரப்பட்டுள்ளது

video

7 நாடுகளுக்கு இலவச வீசா நிபந்தனைகள் இதோ
Posted in இலங்கை செய்திகள்

7 நாடுகளுக்கு இலவச வீசா நிபந்தனைகள் இதோ

7 நாடுகளுக்கு இலவச வீசா நிபந்தனைகள் இதோ

2024.03.01 ஆம் திகதி வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் சுற்றுலாக் கைத்தொழிலை கட்டியெழுப்பும் முன்னோடி

நிகழ்ச்சித்திட்டமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய நிபந்தனைகள் கீழே… 01. இராஜதந்திர, உத்தியோகபூர்வ, பொது அலுவல்கள், சேவைகள் மற்றும் ஆரம்ப கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும்

மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளின் பிரஜைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டணம் இன்றி இலவசமாக வீசாவைப் பெற்றுக்கொள்ள முடியும். 02. 2024.03.31 ஆம் திகதி வரை மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளின் பிரஜைகள்

7 நாடுகளுக்கு இலவச வீசா நிபந்தனைகள் இதோ

இலங்கைக்கு வருவதற்கு முன்னர் கட்டாயம் இலத்திரனியல் பயண அனுமதிக்காக (ETA) விண்ணப்பித்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். இதற்காக எவ்வித கட்டணமும்

அறவிடப்படமாட்டாது. 03. இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகள் 30 நாட்கள் கட்டணம் இன்றிய இலவச வீசா காலத்தை அனுபவிக்க முடியும். அத்தோடு இலங்கைக்கு வருகைத்தந்த முதல் நாளில் இருந்து 30 நாட்களுக்குள்

இருமுறை நுழைவு வசதி வழங்கப்படுகின்றது. 04. இந்தத் திட்டத்தின் கீழ் இலவச இலத்திரனியல் பயண அனுமதிக்கு (ETA)2024.03.31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும். 05. வருகைத் தந்த நாளில் இருந்து 30 நாட்களுக்கான இந்த இலவச இலத்திரனியல் பயண அனுமதி (ETA)காலம் 2024.03.31ஆம் திகதி

அல்லது அதற்கு முன்னர் முடிவடையும் சந்தர்ப்பத்தில் விண்ணப்பதாரி மேலும் வீசா நீட்டிப்பைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்.

எனினும், 2024.03.31 ஆம் திகதிக்குப் பின்னர் வீசாவின் 30 நாள் இலவச செல்லுபடிகாலம் முடிவடையும் சந்தர்ப்பத்தில்அதற்கான வீசா கட்டணத்தைச் செலுத்தி நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

06. தயவுசெய்து மேலே குறிப்பிடப்பட்ட ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கு மாத்திரம் இந்த விசேட இலவச வீசா திட்டம் அமுலில் இருக்கும் என்பதை கவனத்திற்கொள்ளவும்.

ஏனைய நாட்டுப் பிரஜைகள் இலத்திரனியல் பயண அனுமதிக்கு (ETA) விண்ணப்பிக்கும் போது அமுலிலுள்ள பொதுவான நடைமுறைகள் மற்றும் விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும்.

video

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு

வட்டுக்கோட்டை இளைஞர் மரணம் தொடர்பில் குறித்த இளைஞரின் சகோதரர், தந்தை, அவருடன் கைதான இளைஞர் உள்ளிட்ட ஐந்து பேர், நேற்று

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.

சாட்சி பதிவுகளையடுத்து வழக்கை எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை முன்னெடுத்து, மற்றுமொரு சந்தேகநபரையும் கைது செய்யுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இடைத்தரகர்கள் குறித்து இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இடைத்தரகர்கள் குறித்து இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

இடைத்தரகர்கள் குறித்து இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

கொழும்பு, நவம்பர் 28 (தமிழ் மிரர்) – இஸ்ரேலில் பராமரிப்பாளர்களாக பணிபுரிவதற்காக இலங்கை பிரஜைகளை ஆட்சேர்ப்பு செய்யும்

செயல்பாட்டில் மேலதிக கட்டணங்களை அறிவிடுதல் உள்ளிட்ட எந்தவித இடைத்தரகர்கள் தலையீடும் இருக்கக்கூடாது என, இஸ்ரேலிய அதிகாரிகள் இலங்கைக்கு திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக அறிய கிடைக்கின்றது.

இடைத்தரகர்கள் குறித்து இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

வேலை தேடும் இலங்கையர்களிடம் பல்வேறு வழிகள் மூலம் இடைத்தரகர்கள் மேலதிக பணம் பெறுவதாக அண்மையில் செய்தி வெளியாகி இருந்தது.

இதேவேளை, மத்திய ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் பணியாளர்களை அனுப்பும் போட்டி நடவடிக்கையின் காரணமாக

ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துமாறு இஸ்ரேல், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது

ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது

உடுகம வைத்தியசாலையில் தாதி ஒருவர் ஓய்வறையில் ஆடை மாற்றும் போது அதை கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த அதே

வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் உடுகம பொலிஸாரால் திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் உடுகம வைத்தியசாலையின் ஊழியராக கடமை புரியும் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது

குறிப்பிட்ட தாதி குளியலறையில் ஆடை மாற்றும் போது காணொளி எடுக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்

பிரகாரம், சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை உடுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாத பெறுபேறு வெளியாகும் திகதி
Posted in இலங்கை செய்திகள்

சாத பெறுபேறு வெளியாகும் திகதி

சாத பெறுபேறு வெளியாகும் திகதி

சாத பெறுபேறு வெளியாகும் திகதி கொழும்பு, நவம்பர் 28 (தமிழ் மிரர்) – நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சை

பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அடுத்த 3 நாட்களுக்குள் பரீட்சை பெறுபேறுகள்

வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

video

அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்
Posted in இலங்கை செய்திகள்

அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்

அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்

நடிகர் அஜித் நடித்த தென்னிந்திய திரைப்படமான ”சிட்டிசன்”என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமமே காணாமல் போகும்.அதேபோன்றே இன்னும் ஒரு

50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவு அங்கு இருக்காது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான வினோ நோகராதலிங்கம் குற்றம்சாட்டினார்.

அப்படி ஒரு தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்யும் வேலைகளையே அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட்

என்ற நிறுவனமும் அரசும் கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் மன்னார் தீவில் முன்னெடுப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் சுற்றாடல்துறை அமைச்சுக்கான செலவீனத்

தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு அல்லது கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் அங்கு அகழ்வுப்பணிகளை செய்துகொண்டிருக்கின்றது.

மன்னார் தீவு மக்களின் விருப்பத்துக்கு மாறாக,அவர்களின் எதிர்ப்பையும் மீறி மன்னார் மாவட்டம் ஒரு காலத்தில் முற்றாக கடலுக்குள் மூழ்கக் கூடியவாறு இந்த கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான

திட்டமிடல்கள் அரசின்,அரச நிறுவனங்களின் ஆதரவோடு டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களோடு சேர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

மன்னார் மாவட்ட மக்கள் இந்த அகழ்வாராய்ச்சிப்பணியை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் அல்லது அங்கே கனிய மணல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றது.

இதனூடாக அங்குள்ள சாதாரண மக்களை ஏமாற்றி சுமார் 2000 முதல் 3000 ஏக்கர் வரையான காணிகளை அந்த மக்களின் வறுமை, அவர்களின்

அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் விலை பேசி ஏறக்குறைய மன்னார் தீவில் மட்டும் 2600 மில்லியன் ரூபாவுக்கு காணிகள்


வாங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

கனகபுரம் மாவீரர் நாள் வீடியோ திரண்ட தமிழ் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

கனகபுரம் மாவீரர் நாள் வீடியோ திரண்ட தமிழ் மக்கள்

கனகபுரம் மாவீரர் நாள் வீடியோ திரண்ட தமிழ் மக்கள்

video

https://www.youtube.com/watch?v=QSm3LkZ85p4
சீமான் மாவீரர் நாள் எழுச்சியுரை 2023! திருச்சியில் வரலாறு பதிவானது! | Seeman Speech Maaveerar Naal
Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

சீமான் மாவீரர் நாள் எழுச்சியுரை 2023! திருச்சியில் வரலாறு பதிவானது! | Seeman Speech Maaveerar Naal

சீமான் மாவீரர் நாள் எழுச்சியுரை 2023! திருச்சியில் வரலாறு பதிவானது! | Seeman Speech Maaveerar Naal

seeman full speach

https://www.youtube.com/watch?v=gDbPfV4bous
மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video

மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம்

video

மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video
மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video
யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video

யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மாவீரர் நாள்

கார்த்திகை கண்ணீர் சொரியும் மாவீரர் நாள்

video

https://www.youtube.com/watch?v=emAzxxT0YRM
துவரகா பேச்சு|பிரபாகரன் மகள் துவரகா|Maaveerar Naal 2023|thuvraga|Prabhakaran's daughter Dwaraka
Posted in இலங்கை செய்திகள்

துவரகா பேச்சு|பிரபாகரன் மகள் துவரகா|Maaveerar Naal 2023|thuvraga|Prabhakaran’s daughter Dwaraka


துவரகா பேச்சு|பிரபாகரன் மகள் துவரகா|Maaveerar Naal 2023|thuvraga|Prabhakaran’s daughter Dwaraka

பிரபாகரன் மகள் துவாரகா மாவீர நாள் பேச்சு 2023 ,போலி துவரகா


என்பது அடையாள படுத்த பட்டுள்ளது|Maaveerar Naal 2023|thuvraga|Prabhakaran’s daughter Dwaraka

video

பிரபாகரன் மகள் துவாராக இன்று மக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார்
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரன் மகள் துவாராக இன்று மக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார் live video in

பிரபாகரன் மகள் துவாராக இன்று மக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மகள் மக்கள் முன்பாக தோன்றி இன்று பேசுகிறார் என்ற தகவலை புலி அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது .

எதிர் பார்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள இவரது வருகை மற்றும் பேச்சு எதிர்ப்பரப்பை கிளப்பியுள்ளது

உண்மையில் இவர் பிரபாகரன் புதல்வி தானா அல்லது வாடகை வாயா என்பது தொடர்பில் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது

https://www.youtube.com/watch?v=jfMxXFRrs7U

video

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் இன்று முழுமையான கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளில அனைவரும்
கலந்துகொள்ள வேண்டும் என்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் நுளம்புகள் பெருகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 74 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது


பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று (27) முதல் மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.

குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இது கூடவுள்ளது.

ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 09 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 6 மனுக்களை ஆராய சிறப்புரிமைக் குழு இன்றும் நாளையும் (28) நாளை மறுதினமும் (29) கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இது தொடர்பான முறைப்பாடுகளை இந்த வாரம் முன்னுரிமை வழங்கி விசாரிக்குமாறு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது

இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேராவுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம், நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி விடுத்த

அச்சுறுத்தல், இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவிற்கு எதிரான முறைப்பாடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு என்பன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஆகியோருக்கு எதிரான முறைப்பாடு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிரான முறைப்பாடு இங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த முறைப்பாடுகளை அவசரமாக விசாரித்து வரவு செலவுத் திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்
Posted in இலங்கை செய்திகள்

குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்

குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் பிரதான போதைப்பொருள் வியாபாரி

ஒருவரின் தாயையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பண்டாரகம மற்றும் அலுபோமுல்ல பிரதேசங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகம பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கிக் கணக்கில் வழமைக்கு மாறாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதையும் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து அந்த பணம் விரைவாக எடுக்கப்படுவதை அவதானித்த விசாரணை

அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்கு அமைய 34 வயதான சந்தேக நபர் மற்றும் பிரதான கடத்தல்காரரின் 67 வயதான தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்

குடு சலிந்துவின் பண முகாமையாளர் என கருதப்படும் “லோகு முதலாலி” என அழைக்கப்படும் பிரதீப் நிஷாந்த என்ற சந்தேகபரே கைதாகியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் இவர், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டிய பணத்தை வங்கி கணக்கில் வரவு வைப்பதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தில் 3 கோடி ரூபாயானது, கட்டுமானத்தில் உள்ள வீட்டின் நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு அடியில் கொங்கிரீட் போட்டு சீல் வைக்கப்பட்டிருந்த இரகசிய அறையில் இருந்துள்ளது.

அத்துடன், அலுபோமுல்லையில் உள்ள கடத்தல்காரருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட

குற்றவாளியான குடு சலிந்துவின் பெயரில் வெளியிடப்பட்ட 21 வவுசார் ஆவணங்களையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல் video
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல் video

தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல் video

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 69 தாவது பிறந்த நாளை உலகம் மக்கள் கொண்டாடி வருகின்றனர்

லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் தனது இல்லத்தில் உள்ள தலைவர் படத்தின் முன்பாக ,அவரை வணங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

இந்த காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல்

கடல் கடந்து வந்த பொழுதும் ,மண்ணில் பிறவாது இந்த நாடுகளில் பிறந்து ,வளர்த்த பொழுதும் எமது தேசியத்தையும் மண்ணையும் நேசிக்கும் இவ்வாறான குழந்தைகள் நினைவு திறனும் ,பற்றும் போற்றுதலுக்கும் உரியது

நய வஞ்சகத்தால் தலைவர் பிரபாகரன் வீழ்த்த பட்டு அந்த போர் மழுங்கடிக்க பட்ட பொழுதும் ,விழுதுகள் அவரது கனவை தாங்கி பயணிக்கும் இந்த விடயங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது .

வாழ்த்துக்கள் அம்மாடி .

video

தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா

தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் 69 அகவை நாளில் ,தமது இல்லத்தில் கேக் வெட்டி தலைவன் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த தேனிசை செல்லப்பா குடும்பம் .

தலைவரும் தமிழீழமும் செழித்து , வளம் பெற தனது மதுர குரலினால் பலத்தை வழங்கி ஈழம்
உயிர்ப்போடு துடிக்க நின்றவர் தேனிசை செல்லப்பா .

தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா

அவ்வாறான தேனிசை செல்லப்பா அவர்கள் தலைவர் பிறந்த நாளில் தனது உள மகிழ்வை இவ்விதம் வெளிக்காட்டியுள்ளார் .

இவரை போல தமிழர்கள் பலர் தமது தலைவனை நினைவு கூர்ந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் .

தேசம் அழிந்தாலும் ,தேச புதல்வர்கள் மறைந்தாலும் ,
அவர்கள் விட்டு சென்ற வழி தடங்கல் தமிழர் மனதில் இருந்து விலகாது என்பதற்கு இந்த நிகழ்வுகள் உதாரணமாகும்

தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா
தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா
தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா
பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கொள்கை நாட்டி நடந்தவன்
கொடி நாட்டி தேசம் ஆண்டவன்
வல்வை ஊரில் பிறந்தவன்
வையம் வியந்திட வைத்தவன்

பெரும் சமராடி வென்றவன்
பெரும் தலைவனாகி நின்றவன்
நஞ்சு உடல் தரித்தவன்
நய வஞ்சகத்தால் வீழ்ந்தவன்

ஈழம் கனவய் கொண்டவன்
ஈகம் தந்தே உயர்ந்தவன்
போரில் வெல்ல பயந்தவன்
பொறுக்கி ஒன்றால் வீழ்ந்தவன்

ஆளும் காலம் இல்லை தான்
ஆறா வலிகள் நெஞ்சில் தான்
அகவை உந்தன் நாளிலே
அண்ணா உன்னை வாழ்த்துகிறோம் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-11-2023