Tag: தமிழ் மக்கள்
பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள் தான் சாணக்கியன்
பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள் தான் சாணக்கியன்
நேற்று (24) இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போது Online Safety Bill எனும் பெயரில் கொண்டு வரப்பட்ட சட்ட மூலம் தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் 30, 40 ஆண்டுகளாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டது. Online Safety Bill சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளை இங்கு நான் கூற விரும்புகின்றேன்.
இந்த Online Safety Bill சட்ட மூலம் ஊடாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் ஒரு பிரச்சனைக்கு எதிராக ஒரு பாரிய கடையடைப்பு போராட்டம் அல்லது ஹர்த்தால் அறிவித்தால் அந்த அறிவித்தலை வழங்குபவர்களை இந்த Online Safety Bill ஊடாக கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
அதே போல 15 வருடங்களாக காணாமல் போன எமது உறவுகளுக்காக தாய்மார்களும், உறவினர்களும் வீதி வீதியாக போராடி 2,000 இற்கும் மேற்பட்ட நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை Online Safety Bill சட்ட மூலத்தினூடாக கைது செய்யக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
தற்போது நாங்கள் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை நிலம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். மயிலத்தமடு மாதவனையில் சட்டவிரோதமாக குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயமே ஆகும்.
பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள் தான் சாணக்கியன்
அரசாங்கம் நமது வடக்கு, கிழக்கில் காணப்படும் மக்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காகவும் பெரும்பான்மை சமூகத்தினரை மேலும் அதிகரிக்க சட்ட விரோத குடியேற்ற வேலை திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என அறிவித்தால் அதற்கு கூட Online Safety Bill சட்ட மூலம் சட்ட விரோதமான செயற்பாடு என மேற்கோள் காட்டும்.
ஜனாதிபதி அவருடைய பினாமிகளாக ஐந்து பேரை நியமிப்பதை அரசியல் Constitution Council அனுமதித்தாலும் கூட இந்த ஐந்து பேர் மாத்திரம் இனி வரும் காலங்களில் எவை சரியான கருத்துக்கள், எவை பிழையான கருத்துக்கள் என கூறும் அளவிற்கு மாறிவிடலாம்.
இன்று ஒரு அமைச்சர் இருக்கலாம் நாளை இன்னும் ஒருவர் மாறலாம். மாற்றமடையும் அமைச்சர்களுடைய செயல்பாடுகள் எங்களுக்கு தெரியாது. அமைச்சர் விரும்பினால் திறமை உள்ளவர் ஒருவரை நியமித்து நாளைய தினம் அவருடைய தொலைபேசி மற்றும் மடிக்கணினி என்பவற்றை எடுத்து என்ன இருக்கிறது என்பதை ஒரு நீதிமன்றத்தின் உத்தரவின்றி மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.
கனகபுரம் மாவீரர் நாள் வீடியோ திரண்ட தமிழ் மக்கள்
கனகபுரம் மாவீரர் நாள் வீடியோ திரண்ட தமிழ் மக்கள்
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை
- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய
- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை
- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு
- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்
























