அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது

அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது

அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது , ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்துள்ளதாக அவரது உறவுகள் தெரிவித்து கொண்டனர் .

இலங்கையில் இருந்து உயிர் ஆபத்து தஞ்சம் கோரி அஸ்ரேலியாவில் தஞ்சம் அடைந்த இவர், 30 வருடங்கள் கழித்து மீளவும் தனது தாய் நாட்டை பார்ப்பதற்காக, பல கனவுகளை சுமந்து ஆசை ஆசையுடன் சென்று இருக்கின்றார் .

கனவுகள் நினைவாகும்

அவரது அந்தக் கனவுகள் நினைவாகும் என்கின்ற கற்பனை விடயம் நினவு பெறுவதற்கு முன்னதாகவே ,அங்கே எதிர்பாராத சம்பவம் ஒன்று அவருக்கு இடம்பெற்றது.

இலங்கையினுடைய அரச புலனாய்வு துறையால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவுகள் தெரிவிக்கின்றனர் .

தனது தாய்நாடு சென்று அங்கு பாரிய பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, ஒரு முன்னோட்டத்தை பார்த்து வருவதற்காக சென்ற இவருக்கு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

எமது நாட்டுக்கு வருகை தருவதற்கு இலங்கைவாழ் தமிழ் மக்கள் எவருக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இலங்கை ஆளும் அரசு தெரிவித்து வருகிறது .

இலங்கையின் விமான நிலையத்தில்

இந்த வேளையில் தனது தாய் நாடு சென்று தனது தாய் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பு நோக்குடன், பொருளாதார நடவடிக்கை கருதி இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்தவர் ,இலங்கையின் விமான நிலையத்தில் பயங்கரவாத குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்கின்ற வகையில் அந்த குற்றச்சாட்டை மையமாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .

தமிழிழ விடுதலை புலிகள்

இலங்கையில் தமிழிழ விடுதலை புலிகள் அழிக்கப்பட்டு 15 ஆண்டுகளை எட்டுகின்ற இந்த வேளையில் மீளவும் புலிகளுடைய பெயரைச்சொல்லி புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களை இழக்க வைத்து இலங்கை அரச பயங்கரவாதம் கைதுகளை மேற்கொண்டு வருகின்றது .

இந்த நடவடிக்கையானது இலங்கைக்கு வருகின்ற தமிழர்கள் நாங்கள் கைது செய்வோம் என்கின்ற விடயத்தினை ரணில் அரசாட்சியில் எடுத்து கூறப்பட்டுள்ளது .

ஆதலால் இலங்கை செல்வதற்கு பல வெளிநாட்டு தமிழர்கள் வெளிநாட்டு செல்வந்தர்கள் அச்சத்தில் இருக்கின்றனர் .

முதலீடுகளுக்கு பாதுகாப்பு

தமது முதலீடுகளுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் அவர்கள் தற்பொழுது இந்தியா தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதற்கு காரணம் யார் என்பதை இலங்கை ஆலமரசுகள் முடிவெடுத்து செயலாற்ற வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும்.

பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்

பேரூந்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் ,வைத்தியசாலைக்கு பயணித்த பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது .

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது, தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் இணைந்து கல்வீச்சு தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் சிலாபம் சாலைக்கு சொந்தமான, அரச பேருந்து ஒன்றின் மீதே ,விஷமிகள் இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மஹரகம அபேக்‌ஷா , வைத்தியசாலைக்கு செல்லும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு இடையில் ,இடம்பெறுகின்ற போட்டி முறுகல் காரணமாகவே, இந்த கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

புத்தளத்தில் இருந்து நாள்தோறும் பெருமளவிலான மக்கள், மஹரகம அபேக்‌ஷா மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர் .

அவ்வாறு மஹரகம அபேக்‌ஷா மருத்துவமனைக்கு சென்று வரும் மக்கள் பயன் பாட்டை தடுக்கும் நோக்குடன், இந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அந்த பேருந்தை பயன்படுத்தி ,பயண போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ,பயணிகள் கண்ணீர் மல்கத் தெரிவித்திருக்கின்றனர் .

கல்வீச்சு தாக்குதலை மேற்கண்ட 25 மற்றும் 30 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளளனர் .

கைதானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவிக்கின்றனர் .

இலங்கையில் இவ்வாறு பேருந்துகள் மீது ,கல்வீச்சு தாக்குதல் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை, குறிப்பிடத்தக்கது.

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம், இலங்கையில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .

இதன் பொழுது அந்த பேருந்தில் பயணித்த, 13 பாடசாலை மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய மாணவர்கள்

மாலபே – ராஹுலபாடசாலை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி உள்ளதாக ,அந்த பாடசாலையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பயணித்த பேருந்து ,நீரோடை ஒன்றை கடக்க முற்பட்ட பொழுது, ,அதற்கு அருகில் விழுந்து கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பேருந்து விபத்து தொடர்பான, புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேருந்து சரிந்த நிலையில் காணப்படுகின்றது .

சாரதிகளின் அலட்சியமும் ,வீதி விதிமுறைகளை பின்பற்றாமயே, இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்து விபத்து தொடர்பான, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக , இலங்கை காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பேருந்தை மீட்கும் நடவடிக்கையில் ,மீட்பு குழுக்கள் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றன.

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல் ,ஹவுதி படைகளின் தாக்குதலில் இரண்டு கப்பல்கள் பற்றி எரிகின்றன.

ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த இஸ்ரேல் உடைய ஆதரவு சரக்கு கப்பல்களை இலக்கவைத்து, ஏமன் ஹவுதி அன்சர் இல்லா படைகள் கப்பல் ஏவுகணைகளை கொண்டு கடும் தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலில் இஸ்திரேலியா ஆதரவு சரக்கு கப்பல்கள் இரண்டும் பற்றி எரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமும் இந்த இரண்டு கப்பல்களும் எரிவதை ஒப்புக்கொண்டுள்ளன.

கப்பல்களில் பயணித்தவர்களுக்கு ஏதும் உயிர் சேதங்கள்

எனினும் அந்தக் கப்பல்களில் பயணித்தவர்களுக்கு ஏதும் உயிர் சேதங்கள் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக ஏதும் தெரிய வரவில்லை .

காசாவில் உள்ள மறைவிடம் ஒன்றில் இஸ்திரேலியா ராணுவத்தின் விசேட கமாண்டோ படையினர் நேற்று சிறை மீட்டு சென்றனர் .

அப்பொழுது அதன் அருகில் தங்கி இருந்த ,அப்பாவி மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தினர் .

இந்த தாக்குதலில் 210க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் .

அந்த மக்கள் படுகொலைக்கும், இன அழிப்புக்கும் எதிராகவே,செங்கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த ,இந்த சரக்கு கப்பல்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கப்பல்கள் தீயில் எரிவு

மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள பொழுதும் ,இரண்டு கப்பல்கள் தீயில் எரிந்து கொண்டதாக தாக இஸ்ரேலிய ஆதரவு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.

இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தில் காசாவுக்கு இடையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

காசாவின் பல்வேறுபட்ட பகுதிகள் இதுவரை சுடுகாடாக காட்சி அளிக்கின்றது .

அகதிகளாக வீதிகளில் தாங்கியுள்ள மக்கள் மீது, இஸ்திரேலியா படைகளது செங்கடல் மற்றும் இடன் வளைகுடா பகுதியில் ,பயணிக்கும் சரக்கு கப்பல்கள் ராணுவ காப்பல்களை இலக்கு வைத்து ,தொடர் தாக்குதலை ஹவுதிகள் நடத்திக் கொண்டு உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

வீடியோ

தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி
Posted in இலங்கை செய்திகள்

தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி

தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி

தமிழிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி களத்தில் இறங்கியது. தமிழீழ உதை பந்தாட்ட மகளிர் அணியினர் கடந்த தினம் போட்டியினில் கலந்துகொண்டு அபார சாதனையை படைத்து களம் திரும்பினார் .

தமிழில் விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழீழ என வர்ணிக்கப்பட்ட தமிழீழ அணியினர் தற்பொழுது உருவாக்கப்பட்டு களமாட விடப்பட்டனர் .

அவ்வாறு கடந்த தினம் மைதானம் ஒன்றில் தமிழீழ பெண்கள் அணியினர் களமிறங்கி உதை பந்தாட்டத்தில் தமது வெற்றி கொடியை நாட்டி சென்றுள்ளனர் .

கோளினை டிலக்சிகா அடித்து சாதனை

முதலாவதாக களமிறங்கிய இந்த அணியினர் விளையாட்டை ஆரம்பித்தனர் .

அப்பொழுது முதலாவது கோளினை டிலக்சிகா அவர்கள் அடித்து சாதனை படைத்தார் .

மிகச் சிறந்த ஆட்டநாயகியாக தமிழீழ குழுவில் நேற்று இடம் பிடித்து சாதனை படைத்தார் .

மிகத் திறம்பட விளையாடி இந்த அணியினர் உடைய விளையாட்டினை கண்ணுற்ற உலகளாவிய தமிழ் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .

தமிழீழம் என்கின்ற பெயரை தமது ஆடையில் எழுதி அந்த தமிழ் சொல் உடனே மைதானத்தில் விளையாடினர் .

விடுதலைப் புலிகள் என்ற பெயர்

தமிழீழம் விடுதலைப் புலிகள் என்ற பெயர் இருந்தாலே உலக அரங்கில் சமூக வலைத்தளங்கள் தடைகள் விதிக்கப்பட்டு வருகிறது .

அவ்வாறான நிலையில் தொலைக்காட்சிகள் சமூக ஊடகங்கள் முதல் வெளிநாட்டு ஊடகங்கள் வரை தமிழ் ஈழம் என்கின்ற இந்த பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது .

தமிழீழம் அணியினர் என்ற பெயருடன் தமிழீழ மகளிர் படையணி அணிகள் தமது போட்டியில் கலந்து கொண்டனர்.

மிக இறுக்கமான சமர் ஆட்டத்தின் பொழுது இரண்டு கோள்களை போட்டு எதிரணிகள் வெற்றி பெற்றனர் .

மைதானத்தில் முதலாவது கோளினை டிலக்சிகா போட்டு அசத்தல்

முதன் முதலாக தமது மைதானத்தில் முதலாவது கோளினை டிலக்சிகா போட்டு அசத்திய நிலையில் இந்த வெற்றி சாதகமாக மாறியாது .

டிலக்சிகா ஆடுகள நாயகர்களாக அந்த களமுனையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது .

மேலும் ஐந்து கோள்கள் அடிக்கப்பட்ட நிலையிலும் ஐந்து கோள்களை தமிழீழ அணியின் கீப்பர் பிடித்து சாதனை நிகழ்த்தினார் .

ஆனாலும் அவரது இலக்கை தவறி இரண்டு கோள்கள் நெட்டுக்குள்ளே பாய்ந்து எதிரணியின் வெற்றியை தீர்மானித்தது .

இந்த தமிழீழ அணியினர் விளையாட்டு மிகவும் உச்சமானதாக இருந்ததாக சமூக வலைத்தளங்களில் ,மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்து வருவதுடன் ,அவர்களுக்கு தமது பிராத்தனையும் தெரிவித்துள்ளனர்.

பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி

பணி புறக்கணிப்பால் பயணிகள் அவதி

பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி ,இலங்கையில் ரயில் சாரதிகள் பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி .

இலங்கையில் ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிபு புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மக்கள் ரயில் போக்குவரத்து பலமாக பாதிப்படைந்துள்ளது .

சம்பள உயர்வு கோரி இந்தச் சாரதிகள் பணி புறக்கணிப்பு

சம்பள உயர்வு கோரி இந்தச் சாரதிகள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

தமது கோரிக்களுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்றால் தொழிற்சங்கர் நடவடிக்கைகள் தொடர்ந்தும் கடுமையாக்கப்படும் எனவும் தொடர்ந்து நீடிக்கும் இரவு அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

எவ்வாறாயினும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது .

இதனை அடுத்து அரசை அதிகாரிகளுக்கு நெருக்கடிகளை வழங்கும் முகமாக நடவடிக்கையை மேற்கொள்ள கூடும் என்பதால் தற்பொழுது பதட்டம் நிலவுகிறது .

அரசாங்கத்தை தர்ம சங்கடப்படுத்தும் நோக்கில் 21 பேரால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொழிற்சங்க நடவடிக்கை

அதனை அடுத்து அந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட 21 பேரும் கைது செய்யப்படலாம் எனவும் அவர்களுக்கு எதிரான ஒழுக்காட்டு நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எல்லாம் என்கின்ற தகவல்களும் வெளி யாகியுள்ளது .

இதுபோன்று முன்னர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டவர் அதிகாரிகள் அரச ஊழியர்கள் திடீரென அரசு அமைச்சரினால் பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது.

இவ்வாறு இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால் ஆளுமரசு இவர்களை அடக்கி ஒடுக்கி தமக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வோர்களுக்கு மிரட்டல் விடுவதற்கான ஒரு அடக்குமுறையாகவே பார்க்க முடியும் என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

பெண்களை வைத்து நடந்த மோசடி
Posted in இலங்கை செய்திகள்

பெண்களை வைத்து நடந்த மோசடி

பெண்களை வைத்து நடந்த மோசடி

பெண்களை வைத்து நடந்த மோசடி ,வேலை பெற்று தருவதாக தெரிவித்து பெண்களை அடைத்து வைத்து பாலியல் வீடியோக்கள் எடுத்து விற்பனை செய்த தம்பதிகள் மடக்கி பிடிப்பு .

இலங்கையில் வெளிநாடு செல்வதற்கான வேலைவாய்ப்பு நிலையம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக விளம்பரத்தை நடத்தி கவர்ச்சிகரப் பெண்களை தமது வீட்டுக்கு அழைத்து தம்பதிகள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது .

பாலியல் தொல்லை

இவ்வாறு பாலியல் தொல்லைகளில் தொந்தரவுகளை வழங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

சில நாட்களுக்கு முன்னதாக இந்த விளம்பரத்தை கண்ணுற்ற பெண்கள் இருவர் அந்த நிறுவனத்துக்கு சென்று தமது விண்ணப்பங்களை கோரி இருந்தனர் .

அதனை அடுத்து வீட்டுக்கு அழைத்த அந்த தம்பதியினர் அவர்களுக்கு வேலை பார்ப்பதாக வேலை பெற்று தருவதாக தெரிவித்து பாலியல் வீடியோக்களை எடுத்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து நுகோடை போலீசார் தமது விசாரணகளை ஆரம்பித்து கைது செய்திருக்கின்றனர் .

பெண்களை இவ்வாறு விற்பனை

இதுவரை இவர்கள் பல்வேறுபட்ட பெண்களை இவ்வாறு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த நான்கு வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை ஏமாற்றி பாலியல் காணொளிகளை பிடித்து, சந்தையில் பெற்று பல கோடிகளை சம்பாதித்துள்ள தான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .

இந்த சம்பவத்தை அடுத்து தற்பொழுது இலங்கை போலீசார் குற்றப்பிரிவினை இணைந்து பாரிய விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர் .

விசாரணை முடிவிலேயே எத்தனை பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்ட என்பது தொடர்பாகவும், எவ்வாறு வீடியோக்கள் எடுத்து எங்கு விற்பனை செய்தது என்பது தெரிய வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விடயம் தற்பொழுது இலங்கை மக்கள் மத்தியில் வரும் பர பரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது

இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா

இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா

இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா, இந்தியாவிற்கு பயணத்தை மேற்கொண்டார் ரணில் விக்கிரமசிங்கா .

இலங்கை ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கா இந்தியாவில் பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பயணத்தினை மேற்கொண்டுள்ளார் .

இந்தியாவின் மூன்றாவது பிரதமராக மோடி

இந்தியாவின் மூன்றாவது பிரதமராக மூன்றாவது முறையாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டதை எடுத்து .அவரது பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இந்தியாவிற்கு அவசர அவசரமாக தனது பயணத்தை மேற்கொண்டார் .

இன்று மாலை இந்தியாவில் இடம்பெற இருக்கின்ற இந்த பதவியேற்பு நிகழ்வில்லையே கலந்து கொள்வதற்காக இவர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த காலங்களில் இந்தியாவே இலங்கைக்கு பாரிய ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேற்கொண்டு வழங்கி வந்தது.

அதனை அடுத்து தற்பொழுது பாரதப் பிரதமர் பதவியேற்பு விழா மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுவதால் ,அவரது நிகழ்வு கலந்து கொள்வதற்காக அவர்களது அழைப்பினை ஏற்று இலங்கையின் ஜனாதியாக விக்கிரமசிங்கா பறந்து சென்றுள்ளார்.

இந்த நிகழ்வில் மேலும் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன .

நாடெங்கும் கனமழை
Posted in இலங்கை செய்திகள்

நாடெங்கும் கனமழை

நாடெங்கும் கனமழை

நாடெங்கும் கனமழை இலங்கையில் இன்று நாடெங்கும் கனமழை பொழியும் எனவும் மக்களை இவளை எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மேல் சப்பரம் முக வடமேற்கு தென் மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதிக அளவான மழை பொழிவு

நுவரெலியா சப்புர முகா மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மில்லி மீட்டருக்கு மேல் அதிக அளவான மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கு மற்றும் வடமத்தியமானங்களும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பாரிய மழை வீழ்ச்சி ஏற்படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இதனால் வெள்ளப்பெருக்குள் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

இலங்கையின் பல்வேறுபட்ட குளங்களில் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிவதால் தாழ் நிலா பகுதிகளை நோக்கி வெள்ளம் அடித்துப் பாய்வதால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர் .

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்

வீடுகளுக்குள் மற்றும் சொத்துக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மக்கள் செய்வதறியாத திணறி வருகின்றனர்.

இவ்வாறான காலப் பகுதியில் மேற்படி மாவட்டங்களில் மீளவும் அதிகளவிலான மழை பொழிச்சி ஏற்படும் என்கின்ற விடயம் அப்பகுதி வாழ் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா விகிதம் அரசு பண உதவி வழங்கியிருந்தது .

அவ்வாறான நிலையில் தற்போது மக்களை மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் ,அதிக மழை வீழ்ச்சி இந்த ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி
Posted in இலங்கை செய்திகள்

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி ,போலீஸ் அதிகாரி மீது கணவன் மனைவி திடீர் தாக்குதல் .

இலங்கை களுத்துறை பகுதியில் நீதிமன்றம் ஒன்றுக்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த கணவன் மனைவி இணைந்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கடும் தாக்குதலை நடத்தினர்.

நீதிமன்ற வளாகத்திற்கு விசாரணைக்காக வருகை தந்த கணவன் மனைவி ஆகியோரை வழிமறித்த போலீஸ் அதிகாரி .பெண் அணிந்திருந்த உடையானது நீதிமன்றத்திற்கு பொருத்தமற்றது என தெரிவித்துள்ளார் .

கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம்

இதனை அடுத்து காவல்துறை அதிகாரிக்கும் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது .

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் உச்சம் அடைந்து முட்டி வெடித்த நிலையில் ,கணவன் மனைவி இணைந்து காவல்துறை அதிகாரியை சரமரியாக தாக்கினர்.

இதன் பொழுது பலத்த காயமடைந்த கான்ஸ்டபிள் அதிகாரி தரத்திலான காவல்துறை அதிகாரி தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நீதிமன்றங்களுக்கு வருகை தருகின்ற மக்கள் இந்த உடை தான் அணிந்து வருகை தர வேண்டும் என்கின்ற சட்ட ஏதும் இலங்கையில் காணப்படவில்லை .

ஆனால் போலீசார் வேண்டுமென்றே இந்த பெண் கணவன் மனைவி மீது விஷமத்தனமாக வலிந்து சீண்டும் நடவடிக்கை ஈடுபட்டு அவர்களை திசை திருப்ப நடவடிக்கை ஈடுபட்டதான தகவலாகவே இந்த சம்பவம் காணப்படுகிறது .

லஞ்சம் பெறுவதற்காக நடவடிக்கை

அல்லது இந்த அதிகாரி அவர்களும் லஞ்சம் பெறுவதற்காக இவ்வாறான ஒரு விடயத்தை கையாண்டாரா என்கின்ற விடயங்களும் தற்பொழுது விழுந்து வெடிக்கின்றன .

இலங்கையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை லஞ்சம் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், இந்த சம்பவம் பல்வேறுபட்ட சர்ச்சைகளையும் பேசு பொருளையும் ஏற்படுத்தி உள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக இலங்கை சகா காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

கழுத்துறை நீதிமன்ற வளாகத்தில் இலங்கை காவல்துறை அதிகாரி மீது நடத்த பட்ட இந்த தாக்குதல், சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்ல ,தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்
Posted in இலங்கை செய்திகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள் என மஹிந்த ராஜபக்சவின் கட்சி உறுப்பினர்கள் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளனர் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் ,அதனுடைய பேச்சாளராகவும் விளங்கிய சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர், தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் என ஸ்ரீலங்கா பெரமுனா தெரிவித்துள்ளது .

தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ,ரோகித அபய குணவர்த்தன தெரிவித்த இந்த விடயம் தற்பொழுது பெரும் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

ஊடகங்களை சந்தித்து பேசும் பொழுது இலங்கையை ஆண்ட ஜனாதிபதியான, மஹிந்த ராஜபக்சா , தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு முன் வந்ததார் .

தீர்வினை குழப்பிய சம்பந்தன் சுமந்திரன்

ஆனால் அந்த தீர்வினை குழப்பி அடித்ததில் ,சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தீவிரமாக செய்யப்பட்டார்கள் .

தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ,இலங்கையினுடைய ஜனாதிபதிகள் தயாராகி வந்ததாகவும் ,அதனை தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் இவ்வாறானவர்களே குழப்பி வருவதாக அவர் இதன் ஊடாக தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகள் ஒன்றுபட மறுத்து ,இரண்டு பட்டு நிற்பதும் ,அவர்களை சாதுரியமாக இலங்கையினுடைய ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்தி வருகின்றன .

அந்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகளை குழப்புவதாக, இதன் ஊடாக பார்க்கப்படுகிறது .

எதிர்வரும் தேர்தலில் சம்பந்தன் சுமந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தை அடுத்து ,அவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார் .

இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம்

சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம் இதுவரை உள்ளது .

அவ்வாறான மன நிலையே தற்பொழுது சிங்கள அமைச்சர் ஒருவரும் உள்ளதாக தெரிவித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலும் சம்பந்தன் சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்கள் நிலவுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன.

எதிர்வரும் தேர்தலில் மொட்டுக்கட்சி வெற்றியை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

மக்களினால் விரட்டி அடிக்கப்பட்ட இந்த கட்சி ,எவ்வாறு இந்த தேர்தலில் வெற்றி பெறப் போகிறது என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்ற நிலையில் ,இந்த விடயம் தற்பொழுது சூடு பிடித்துள்ளது குறிப்பிட தக்கது .

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை

இலங்கை பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை முழு வடிவம் இதோ .

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் சரமரியாக பேசிய விடயம் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது .

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, இதுவரை தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட வருவதாக அவர தெரிவித்துள்ளார் .

தமிழர்களையும் இலங்கையினுடைய ஒரு குடிகளாக ஏற்று, அவர்களுக்கான சம உரிமைகள் வழங்கப்படுகின்ற பொழுதுதான் ,மக்கள் ஒன்றாக வாழுகின்ற ஒரு ஒற்றை ஆட்சி நாடாக இதனை பார்க்க முடியும் என்பதாக அவரது கருத்து பதியப் பெற்றிருக்கிறது .

தமிழ் மக்களுக்கான உடனடியான உரிய தீர்வினை வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கப்பட விட்டால் , இந்த நாடு மிகப்பெரும் பேரழிவில் இருந்து மீளவும் எழுச்சி பெற முடியாது என்கின்ற ,விடயத்தினை ஆணித்தரமாக அவர் அங்கு தெரிவித்தார் .

அது தவிர அனுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ,அமைச்ச ஒருவர் தமிழ் கைதி ஒருவருடைய தலையில் காலை வைத்து, சப்பாத்தை நக்கும் படி கூறியதாக தெரிவித்துள்ளார் .

அவ்வாறான அமைச்சர் தற்பொழுது தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் எனவும் ,அவர்களுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாகவும் அவர் சூட்டிக் காட்டியுள்ளார் .

மேலும் சில தமிழ் அரசியல் தலைவர்களுக்கு மதுபான பத்திரங்கள் வழங்கி ,அதனூடாக தமது பக்கம் இழுத்து அரசியலை நகர்த்துகின்ற நடவடிக்கையில் இலங்கையினுடைய ஜனாதிபதி ரனில் விக்கிரம சிங்கா ஈடுபட்டு ,உள்ளதான குற்றச்சாட்டினையும் ,சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .

சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி

சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி வர வேற்பையும் அவரது திறமையையும் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அவரது நல்லெண்ண வெளிப்பாட்டையும் இதனூடாக காண்பித்துள்ளது .

அதனால் பல்வேறுபட்ட முரண்பாடுகளுக்கு நிலையில் சிக்கித் தவித்த தமிழர்களும் ,இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை வரவேற்று உள்ளதாகவே பேசப்படுகின்றது .

சாணக்கியன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விரோதியாகவும், மக்களினால் அருவருக்கப்படுகின்ற அல்லது ஒதுக்கப்படுகின்ற, சுமந்திரன் வலது கையாக செயல்படுவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .

தேர்தல் வருகின்ற பொழுது பாராளுமன்றத்தில் ஏறி இவ்வாறு ,மக்களுக்கு எண்ணங்களை தூண்டிவிட .

உணர்ச்சிகரமாக பேசி தாங்கள் தமிழர்களின் ஏகப்பிரதிகள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே, திருவாளர் சாணக்கியன் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளதாக, ஒரு சில கருத்துக்களும் வரத்தான் செய்கின்றன.

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை ,இலங்கையில் வாகனச் சாரதிகள் மூன்று ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டுமென, இலங்கை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

வாகனங்களை ஓட்டிச் செல்கின்ற ,வாகன சாரதிகள் தம்முடன் அல்லது வாகனத்துடன் ,வாகன காப்புறுதி , சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் .

கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு

இந்த முக்கியமான குறிப்புகள் அடிப்படையில் இவற்றை எடுத்துச் செல்லாதவர்கள், கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாகன காப்பீடு சான்றிதழ் வாகனத் தகுதிகளை, சான்றிதழ் தேவை என்பனவே இவை அடங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி ஆவணங்கள் இல்லாது வாகனங்களை செலுத்தி செல்கின்ற சாரதிகள், போலீசாரினால் கைது செய்யப்பட்டு, அவர்கள் விளக்கமுடியில் வைக்கப்படக்கூடிய ஆபத்து காணப்படுகிறது.

இலங்கை தமிழ் மக்களே

எனவே இலங்கை தமிழ் மக்களே உங்களது வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் மேலே கூறப்பட்ட விடயங்களை ,உடனடியாகவே எடுத்துச் செல்லுங்கள் .

அவ்வாறு எடுத்துச் செல்ல தவறுகின்ற பட்சத்தில் நீங்கள் தண்டம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் .

குற்றத்தண்டம் செலுத்தப்பட்டு சிறையில் வாடக்கூடிய அவலமும் காணப்படுகிறது .

ஆதலால் வண்டிகளை செலுத்தி செல்கின்ற பொழுது ,மேற்படி ஆவணங்களை எடுத்துச் செல்ல தவற கூடாது என்று விடையத்தின் மூலம் , இலங்கை மக்களுக்கு இலங்கை போலீசார் எச்சரிக்கை கொடுத்திருக்கின்றனர்.

வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு

வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு

வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு ,யாழ்ப்பாணத்தில் வாள்கள் மீட்பு.

யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து வீடு ஒன்று சுற்றி வளைக்கக்கப்பட்டது .

இதன் பொழுது சுன்னாகம் ஈவினை பகுதியில் வெளிநாட்டு பிரையை ஒருவருக்கு சொந்தமான வீடு ஒன்றை திடீரென சுற்றிவளைத்தனார் .

அதன்பொழுது அங்கிருந்து வாள்கள் கத்திகள் கோடரிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வாள்கள் கூறிய ஆயுதங்கள் மீட்பு

வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்திருந்த நபரது வீட்டிலேயே இந்த வாள்கள் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ள, செயல் பர பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறுபட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற வகையில், தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இங்கு பல வாள்கள் மீட்கப்பட்டதை அடுத்து ,தற்போது சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் .

ஆவா குழு

யாழ்ப்பாணத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஆவா குழு உள்ளிட்ட பல வாள்வெட்டு குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு ,வாள்வெட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன .

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இந்த நபருடைய வீடு, எவ்வாறு இவர்களுக்கு கிடைக்கப்பெற்றது .

யார் அந்த நபர் எனவும் விசாரணை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

விரைவில் வெளிநாட்டில் உள்ள இந்த வீட்டினுடைய உரிமையாளர்கள் ,மற்றும் அவர்களது தொடர்பு பட்டவர்கள், கைது செய்யப்பட கூடும் என்கின்ற விடயங்கள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது ,இலங்கை இரத்தினபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தங்கப் புதையல்களை தேடி ஐவர் கைது .

தங்க புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐவரை கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சி இரத்தினபுரம் அன்பு முகாம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதையல் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ளது .

ஐந்து பேர் கைது

அந்த தகவலை அடுத்து அதனை தோண்டி எடுப்பதற்காக ,அங்கு அகழ்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போலீஸ் அதிகாரி ,ஆசிரியர் உள்ளிட்ட ஐவர் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு இலத்திரனியல் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சமீப காலமாக தமிழிழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் ,அவர்களது தங்கம் பணம் மற்றும் இதர பொருட்களை மீட்பதற்காக இவ்வாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிங்கள போலீஸ் அதிகாரிகள் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

விடுதலை புலிகள்

தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாய் மண்ணில் முற்றாக அழிக்கப்பட்டு, 14 வருடங்கள் கழிவுற்ற நிலையிலும் தமிழிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கம் பணம் என்பதுவற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் சிங்கள பெரும்பான்மை வாதிகள் ஈடுபட்டு வருகின்றநர் .

இவ்வாறான தங்க புதையல் தேடும் செயல் தொடர்கிறது .

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பல தங்கங்கள் ,ஆயுதங்கள் என்பனவவற்றை மீட்ட மாற்று குழுக்களும் ,அவற்றை வைத்து கோடீஸ்வரராக இலங்கையில் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்தாயிரம் ரூபா உதவி தொகை
Posted in இலங்கை செய்திகள்

பத்தாயிரம் ரூபா உதவி தொகை

பத்தாயிரம் ரூபா உதவி தொகை

பத்தாயிரம் ரூபா உதவி தொகை ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்க படுகிறது .

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வந்த சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக ஆளும் அரசு தெரிவித்துள்ளது .

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட அரச அதிகாரிகள் அந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக முதற்கட்டமாக 10,000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆண்டுதோறும் இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்ற மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .

அதிகம் மழை வீழ்ச்சி

அதிகம் மழை வீழ்ச்சி காரணமாக குளங்கள் நிரம்பி வழிந்ததால் வான் உடைத்து வெள்ளம் பாய்ந்ததில்,தாழ் நில பகுதியில் உள்ள பல ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன .

இந்த வெள்ளத்தினால் லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டனர் .

அதனை எடுத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் திருத்தம் செய்வதற்கும் அதனை சுத்தம் செய்வதற்குமாக இலங்கை ஆளும் அரசினால் தற்பொழுது இந்த 10,000 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் மக்களை குஷி படுத்த ,தற்பொழுது இவ்விதம் அரசு பத்தாயிரம் ரூபாய் நிதிகளை வழங்கிவருகிறது .

அந்த மக்களை குசி படுத்தி அவர்களது வாக்கு வங்கிகளை சுருட்டிக்கொள்ளவே , இவ்வாறு நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துக்கொண்டனர்.

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி
Posted in இலங்கை செய்திகள்

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி , குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைவு .

என்டேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில், தந்தை மகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த ரயில் கடவையை காரொண்டு கடக்க முற்பட்ட பொழுது வேகமாக வந்த ரயிலில் மோதுண்டு அதில் பயணித்த தந்தையும் மகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய கார் பலத்தை சேதங்களுக்கு உள்ளார நிலையில் தற்போது காணப்படுகின்றது .

ஆபத்தான ரயில் கடவை

ஆபத்தான ரயில் கடவையில் ரயில் வருவதை அவதானிக்காது, கார் கடந்து செல்ல முற்பட்ட பொழுதே ,அந்த ரயிலில் மோதி தந்தையும் மகளும் பரிதாபகரமாக பலியாகி இருக்கின்றனர்.

அபாய கடவைகளுக்கு அருகில் பயணிக்கின்ற பொழுது, மக்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு வேண்டுதல் விடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும் இவ்வாறான விபத்துக்கள் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது.

பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவ மருத்துவ பரிசோதனை க்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற விபத்தில், தினமும் நால்வர் பலியாகி வருவதாகவும், 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருவதான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது .

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு ,பிக்கு தாக்குதலில் ஒருவர் மரணம் .

இலங்கை கிரியுள்ள அயலந்தவா மாராவில் பிரதேசத்தில் வீடொன்றில் தங்கி இருந்தவரை பிக்கு தாக்கியதில் அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போதை குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிக்கு,

மது போதை குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிக்கு, விகாரையிலிருந்து தப்பிச் சென்று தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

அப்பொழுதே அங்கு இருந்த நபர் ஒருவரை, போதை தலைக்கேறிய நிலையில் அவரை அடித்து படுகொலை செய்துள்ளார் .

பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தற்பொழுது பலியாகி இருக்கின்றார் .

கொலையை புரிந்த பிக்கு தற்பொழுது தலைமறைவு

இந்த படுகொலையை புரிந்த பிக்கு, தற்பொழுது தலைமறைவாகி உள்ளதை அடுத்து ,அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் , நடவடிக்கையில் குற்ற தடுப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக துறவிகள் என அழைக்கப்படும் பிக்குகளினால், மக்கள் ,மாணவர்கள், பெண்கள், என பலதரப்பட்டவரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்ற வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .

இது புத்த பிக்குகள் மீதும், துறவிகள் மீதும் ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்ற செயலாகவே பார்க்கப்படுகின்றது .

ஒருவர் செய்கின்ற செயலினால் ,அனைத்து துறவிகளுக்கும், இழுக்கு ஏற்பட்டு வருவதாகவும் ,புத்த மகாசங்கத்தை சேர்ந்த, சார்பு நபர்கள் தெரிவித்தது வருகின்றனர்.

வனராஜா விபத்தில் மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வனராஜா விபத்தில் மூவர் காயம்

வனராஜா விபத்தில் மூவர் காயம்

வனராஜா விபத்தில் மூவர் காயம் ஹட்டன்- வனராஜா கல்பள்ளி பகுதியில் கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச்

சேர்ந்த மூவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாமிமலை பகுதியில் மரண வீடொன்றுக்கு வந்த குழுவினர் கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, ​​கார் வீதியை விட்டு விலகி வனராஜா கல்பள்ளிய பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் டிக்கோயா- கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

​​காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலை யில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Error: View 9293b2au4w may not exist
திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள் நாவலப்பிட்டி – குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொலஸ்பாகை மீனகொல்ல பிரதேசத்தில் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளன.

இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் வேனும் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப் பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணை களை குறுந்துவத்த பொலிஸார் மற்றும் கைரேகை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.