கோர விபத்தில் ஒருவர் பலி
கோர விபத்தில் ஒருவர் பலி ,அனுராதபுரம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவும் வானும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த, ஆட்டோ ஒன்றும் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானையால் ஏற்பட்ட வீதி விபத்து
குறித்த வீதியில் காட்டு யானை வந்து வீதியைக் கடக்கும் மேற்பட்ட பொழுது அதனை கண்டு அச்சமடைந்த ஆட்டோ சாரதி திடீரென தனது ஆட்டோவை திரும்ப முற்பட்ட பொழுது அருகில் பயணித்த வானுடன் மோதி ஆட்டோ நொறுங்கி சிதறியது.
இதன் பொழுது அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
பதட்டம் அடையாது ஆட்டோ சாரதி தனது ஆட்டோவை செலுத்தி இருந்தால் அல்லது ,சற்று நின்று பயணத்தில் இருந்தால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என ,மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் பலியாகும் உயிர்கள்
யுத்தம் இல்லாத காலப்பகுதியில் தற்பொழுது அனுராதாபுரம் மற்றும் தமிழருடைய வன்னி பகுதிகளில் எங்கும் ,யானைகள் உடைய நடமாட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன .
அதனால் மக்களுடைய வீடுகள் சொத்துக்கள் மனித உயிர்கள் என அழிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு யானைக்கு அச்சமிட்ட ஆட்டோ சாரதி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,வான் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக ,காவல்துறை வட்டாரங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது

- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் போக்குவரத்து தடை

- ஈரான் முழுதும் தாக்குவோம் டிரம்ப் மிரட்டல்
- பிரிட்டன் தளங்களிலிருந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களைப் பறக்க ஈரான் எச்சரிக்கை










