கோர விபத்தில் ஒருவர் பலி
கோர விபத்தில் ஒருவர் பலி ,அனுராதபுரம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவும் வானும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த, ஆட்டோ ஒன்றும் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானையால் ஏற்பட்ட வீதி விபத்து
குறித்த வீதியில் காட்டு யானை வந்து வீதியைக் கடக்கும் மேற்பட்ட பொழுது அதனை கண்டு அச்சமடைந்த ஆட்டோ சாரதி திடீரென தனது ஆட்டோவை திரும்ப முற்பட்ட பொழுது அருகில் பயணித்த வானுடன் மோதி ஆட்டோ நொறுங்கி சிதறியது.
இதன் பொழுது அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
பதட்டம் அடையாது ஆட்டோ சாரதி தனது ஆட்டோவை செலுத்தி இருந்தால் அல்லது ,சற்று நின்று பயணத்தில் இருந்தால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என ,மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் பலியாகும் உயிர்கள்
யுத்தம் இல்லாத காலப்பகுதியில் தற்பொழுது அனுராதாபுரம் மற்றும் தமிழருடைய வன்னி பகுதிகளில் எங்கும் ,யானைகள் உடைய நடமாட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன .
அதனால் மக்களுடைய வீடுகள் சொத்துக்கள் மனித உயிர்கள் என அழிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு யானைக்கு அச்சமிட்ட ஆட்டோ சாரதி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,வான் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக ,காவல்துறை வட்டாரங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை










