Tag: வீதி விபத்து
கோர விபத்தில் ஒருவர் பலி
கோர விபத்தில் ஒருவர் பலி
கோர விபத்தில் ஒருவர் பலி ,அனுராதபுரம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவும் வானும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த, ஆட்டோ ஒன்றும் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானையால் ஏற்பட்ட வீதி விபத்து
குறித்த வீதியில் காட்டு யானை வந்து வீதியைக் கடக்கும் மேற்பட்ட பொழுது அதனை கண்டு அச்சமடைந்த ஆட்டோ சாரதி திடீரென தனது ஆட்டோவை திரும்ப முற்பட்ட பொழுது அருகில் பயணித்த வானுடன் மோதி ஆட்டோ நொறுங்கி சிதறியது.
இதன் பொழுது அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
பதட்டம் அடையாது ஆட்டோ சாரதி தனது ஆட்டோவை செலுத்தி இருந்தால் அல்லது ,சற்று நின்று பயணத்தில் இருந்தால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என ,மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் பலியாகும் உயிர்கள்
யுத்தம் இல்லாத காலப்பகுதியில் தற்பொழுது அனுராதாபுரம் மற்றும் தமிழருடைய வன்னி பகுதிகளில் எங்கும் ,யானைகள் உடைய நடமாட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன .
அதனால் மக்களுடைய வீடுகள் சொத்துக்கள் மனித உயிர்கள் என அழிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு யானைக்கு அச்சமிட்ட ஆட்டோ சாரதி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,வான் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக ,காவல்துறை வட்டாரங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

வீதி விபத்து 14 பேர் காயம்
வீதி விபத்து 14 பேர் காயம்
வீதி விபத்து 14 பேர் காயம், மன்னர் மதவாசி பிரதான வீதி முருகன் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாகன விபத்து .
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .
வாகனம் மின்காபத்துடன் மோதி விபத்து
வேகமாக பயணித்த வாகனம் மின்காபத்துடன் மோதியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
கல்முனையிலிருந்து மன்னார் மரச்சுக்கட்டி பிரதேசத்துக்கு வருகை தந்த வாகனம், முருகன் இசை மாலை தாழ்வு நரிக்காடு வலது பகுதியில் உள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விபத்தில் காயம் அடைந்த அனைவரும் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர்கள் வயோதிகப் பெண் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாகனத்தில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிய வருகின்றது .
இலங்கையில் இவ்வாறான வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்பட்டு வருகின்றன.
சாரதிகள் வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து வேகமாக வாகனங்களை செலுத்தி செல்வதன் காரணத்தினால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக மக்களும் காவல்துறையும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் இவ்வாறான வாகன விபத்துகளினால், பலர் பலியாகி காயம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் பெண் பலி எகிறும் விபத்துக்கள்
விபத்தில் பெண் பலி எகிறும் விபத்துக்கள்
நாட்டின் இருவேறு பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (11) இரவு கவுடுபெலெலல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 வயது குழந்தையும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஓட்டனரான பெண் உயிரிழந்துள்ளார்..
உயிரிழந்தவர் பள்ளியவத்தை, மஹவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கவுடுபெலெலல்ல பிரதேசத்தில் கிளை வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்ட போது அனுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பெண் பலி எகிறும் விபத்துக்கள்
சடலம் மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை பஸ்யால – மீரிகம வீதியில் பொஹொன்னறுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பஸ்யால பகுதியிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதியை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
பள்ளத்தில் கவிழ்ந்த லொறி தப்பித்த லொறி சாரதி
பள்ளத்தில் கவிழ்ந்த லொறி தப்பித்த லொறி சாரதி
நுவரெலியா பதுளை பிரதான வீதியில் பதுளை நோக்கி பயணித்த லொறி ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது .
ஐம்பது அடி பள்ளதாக்கில் லொறி வீழ்ந்த நொறுங்கியது ,இதன் பொழுது பலத்த காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
பள்ளத்தில் கவிழ்ந்த லொறி தப்பித்த லொறி சாரதி
இந்த லொறி பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன்மை குறிப்பிட தக்கது .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

ரயில் ஆட்டோ நேரடி மோதல் ரயிலால் சிதறிய ஆட்டோ
ரயில் ஆட்டோ நேரடி மோதல் ரயிலால் சிதறிய ஆட்டோ
ரயில் ஆட்டோ என்பன நேரடியா மோதியதில் ரயிலில் பயணித்த நால்வர் படு காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
அனுராதபுரத்தில் இருந்து பொலியத்த நோக்கி பயணித்த கொண்டிருந்த ,ஆட்டோ ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
ரயில் ஆட்டோ நேரடி மோதல் ரயிலால் சிதறிய ஆட்டோ
இந்த ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த ரயில் ஆட்டோ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் இடம்பெற்று வரும் வாகன விபத்துக்களில் சிக்கி,
நாள்தோறும் ,நான்கிற்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளதாக,
செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிடதக்கது .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
அமெரிக்கா வீதி விபத்து 5 பேர் மரணம்
அமெரிக்கா வீதி விபத்து 5 பேர் மரணம்
அமெரிக்கா ,Texas ; அமெரிக்கா கிழக்கு Texas அதி வேகசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஐந்து பேர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா டெக்ஸாஸ் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் இந்த உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ள்ளது .
இந்த வீதி விபத்தினால் குறித்த வீதி போக்குவரத்து பலமணி நேரம் தடை பட்டது .
இந்த அமெரிக்கா வீதி விபத்து தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
மனித உயிர் குடிக்கும் வீதி – 6 மணித்தியாலத்திற்கு ஒருவர் பலி – அச்சத்தில் மக்கள்
மனித உயிர் குடிக்கும் வீதி – 6 மணித்தியாலத்திற்கு ஒருவர் பலி – அச்சத்தில் மக்கள்
இந்தியா -அரியானா பகுதியில் ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கும் ஒருவர் என்ற கணக்கில் வீதி விபத்தில் பலியாகி வருகின்றனர் ,
இவர்கள் அனைவரும் சாலை வழியே நடந்து செல்லும் மக்கள் என்ற புள்ளி விபரமே மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கடித்துள்ளது .
கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி மட்டும் சுமார் 5118 பேர் பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது ,
இந்தியாவில் அதிக ஆபத்தான வீதி உயிர் குடிக்கும் சாலையாக அரியானா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது



















