Tag: போதையில்
போதையில் ரயிலை செலுத்திய சாரதி
போதையில் ரயிலை செலுத்திய சாரதி
போதையில் ரயிலை செலுத்திய சாரதி மக்களால் துரத்தி பிடிப்பு ,கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலை போதையில் செலுத்தி கொண்டிருந்த சாரதி கைது .
ஒன்றை செலுத்திக் கொண்டிருந்த சாரதி அளவுக்கு அதிகமாக மதுபானத்தை அருந்திவிட்டு அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது .
குறித்த சாரதி கண்டிக்கு அருகில் சொல்கம் என்ற இடத்தில் ரயிலை நிறுத்திவிட்டு ரயிலிருந்த தப்பி ஓடிய நிலையில் ,அவரை மக்கள் துரத்தி பிடித்து ரயில்வே துறைகள் அதிகாரிகள் ஒப்படைத்தனர் .
தொடரூந்தை விட்டு தப்பி ஓடிய சாரதி
அந்த ரயிலை உதவி சாரதி மூலம் , ரயில் தற்போது உரிய ரயில்வே நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதிக மது போதை காரணமாக ரயிலை செலுத்தி சென்ற இந்த சாரதி மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இவர் பணியில் இருந்து நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு வாய்ந்த நிலையில் வண்டிகளை செலுத்தி செல்ல வேண்டிய இவ்வாறான சாரதிகள் அத்துமறி இவ்வாறு ரயிலை செலுத்தி செல்வது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பாதுகாப்பான ரயில்வே கடமைகளை கடந்து செல்ல வேண்டிய இந்த ரயிலில் இவ்வாறு ரயில்வே சாரதிகள் மதுவை அருந்திவிட்டு செலுத்து செல்வதால் ,
அந்த ரயில்வே கடவைகளில் பயணிக்கும் மக்களும் இரயில் பயணிக்கும் மக்களும் பலியாக வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்படுவதாக மக்கள் கூட்டம் சுமத்தி இருக்கின்றனர் .
ஆபத்தாக மாறிய தொடரூந்து பயணம்
கைது செய்யப்பட்ட ரயில் சாரதி , தற்பொழுது தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார் .
ரயிலில் பயணித்த மக்கள் அலறி அடித்து சம்பவங்கள் ,தற்பொழுது வெளியாகி உள்ளது .
தொடரூந்து சாரதி தப்பியோடும் காட்சிகள் தற்போது அதனை படம் பிடித்த சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருவதான தகவல்களும் வெளியாகி வருகின்றன.
இலங்கை எதை நோக்கி எங்கு செல்கிறது என்பது தொடர்பான ,விடயங்கள் இதன் ஊடாகவும் காணமுடிகின்றது .
பேருந்து விபத்துக்கள் மதுவை அருந்திவிட்டு ,தப்பி ஓடுதல் என்பன ,இலங்கை கட்டுக்கடங்காத தலை தெறித்து ஓடுவதையே இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

கணவன் போதையில் மனைவியின் அறைக்குச் சென்ற நண்பன்
கணவன் போதையில் மனைவியின் அறைக்குச் சென்ற நண்பன்
மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை திருமணம் கடந்த உறவில் ஈடுபட வருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (06) உத்தரவிட்டார்.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நண்பன் ஒருவரின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சென்று வந்துள்ள நிலையில் சம்பவ தினமான கடந்த 3 ம் திகதி இரவு குறித்த நண்பனின் வீட்டிற்கு சென்ற இளைஞன் அங்கு கதைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் நண்பனுடன் இணைந்து மது அருந்திவிட்டு அவருடன் வீட்டின் வெளியில் படுத்துறங்கியதுடன் குறித்த இளைஞன் வீட்டின் மண்டபத்தில் உறங்கியுள்ளார்.
இதன்போது நண்பனின் மனைவி அறையில் கதவை பூட்டாது தனிமையில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் நண்பனின் மனைவி உறங்கி கொண்டிருந்த அறைக்கு சென்ற இளைஞன் அவரை எழுப்பி தன்னுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட வருமாறு அழைத்துள்ளார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அவரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் மதுபோதையில் இருந்த கணவன் காலையில் நித்திரையில் இருந்து எழுந்த போது மனைவியின் முகத்தில் உள்ள வீக்கத்தை கண்டு வினவிய நிலையில் மனைவி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தம்பதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அதன்படி, பொலிசார் குறித்த இளைஞனை நேற்று கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்திய நிலையில் அவரை
எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.










