Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால்
பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால்
பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால் ,யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.<
யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம் ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நேற்றைய தினம் (30) நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜாவின் தலைமையில், மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும்
உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களின் பங்கேற்போடு நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நாளை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில், மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவிடம் நேரில் சமர்ப்பிக்கப்படவுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ;
எதிர்வரும் 2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், உள்நாட்டு தமிழ் வாக்காளர்களிடையேயும், புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ்
மத்தியிலும், அரசியற் கட்சிகளுக்குள்ளும் எழுந்துள்ள பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஆழமாகவும், விசாலமாகவும் கருத்தூன்றி ஆராய்ந்து, பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு காலம் எம்மை நிர்ப்பந்தித்திருக்கிறது.
அதனடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினராகிய நாங்கள், கட்சியினுடைய இணக்க விதிகளுக்கு உட்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும், சிவில் சமூகம் மற்றும் மதகுருமார்களுடனும், பொதுமக்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடி
பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில், 2024.08.30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டக் கிளையாக ஒன்றிணைந்து, ஏகமனதாக எடுத்த கீழ்வரும் தீர்மானத்தை, மத்திய செயற்குழுவின் அனுமதிக்காக தயவுடன் முன்னளிப்புச் செய்கின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற நிலைப்பாட்டை பொறுப்போடு ஆராய்ந்து, நிகழ்கால இலங்கையினுடைய ஆட்புல
ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தமிழ் மக்களினுடைய இனத்தேசிய அடிப்படையில் நின்று பொருத்தமான உபாயம் ஒன்றை நாம் சிந்திப்பது காலத்தேவையானது என்று நம்புகின்றோம்.
போருக்குப் பிந்திய 15 ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில், எதிர்பார்க்கப்பட்ட நற்பலன்களை விட பிரதிகூலமான வெளிப்பாடுகளையே தமிழ்மக்கள் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது என்பது கசப்பானது எனினும் அதுவே உண்மையானது ஆகும். போர் ஒன்றின் பின்னராக தோல்வியடைந்த
மனநிலையில் விடப்பட்ட தமிழ்ச்சமூகத்தை அதிலிருந்து மீட்டெடுக்கும் பணியையே எமது அரசியல் இயக்கம் பிரதான பணியாகக் கொண்டிருந்தது. எனினும் உள்நாட்டுக்கு உள்ளேயும், சர்வதேச சமூகத்தோடு இணைந்தும், எமது இராஜதந்திர, புத்திபூர்வமான அணுகுமுறைகள் ஊடாகவும் எமது
மக்களின் வலிகளுக்கு நிவாரணம் வழங்கவோ, அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்பவோ இயலாதிருந்திருக்கின்றோம் என்பதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பம் ஒன்றை இந்தத் தேர்தல் எங்களுக்குத் தந்திருக்கின்றது.
கூருணர்வு மிக்க அரசியல் திறன், அணுகுமுறை மற்றும் சர்வதேச சமூகத்தின் வாஞ்சையைப் பெற்றுக்கொள்ளல் என்பதில் நிலைதளர்ந்து போயுள்ள சூழல் குறித்து தமிழ்த்தேசிய ஆர்வலர்களிடமும், அறிவுஜீவிகளிடமும், சாதாரண
பொதுமக்களிடமும் எதிர்காலம் பற்றிய ஐயுறு நிலை அதிகம் வளர்ந்துள்ளமையை மக்கள் பிரதிபலித்து வருகிறார்கள் என்பதை எம்மால் உணர முடிகிறது.
மேற்படி இக்கட்டான சந்தர்ப்பம் ஒன்றில் போரின்போதும், போருக்குப் பின்னரும் நிகழ்ந்துவரும் இழப்புகளுக்கு பரிகாரம் காணவும், சர்வதேச அணுகுமுறைகளில் விருத்தியை ஏற்படுத்தவும், ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை வலுப்படுத்தி சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்தில் நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டை வழிப்படுத்தவும், மீள நிகழாமையை வலியுறுத்தி தாயகத்தில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரவும் முன்னகர்ந்து செல்லவேண்டிய தலைமைத்துவத்தை எமது மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.
அறிவுபூர்வமானது என்று நம்பப்படும் கருத்தியல்களுக்கும், எமது மக்களினுடைய உணர்வு நிலைகளுக்கும் இடையிலான போராட்டமாக இந்தத் தேர்தல்களம் விரிந்துள்ளமையால், மக்கள் எது சாத்தியம் என்று நம்புகின்றார்களோ, அவற்றைக் கவனமாக ஆராய்ந்து, தமிழ்த்தேசிய
உணர்வுத் தளத்துடன் இணைந்த தீர்மானம் ஒன்றை, அதன் உயிர்நாடியாக விளங்குகின்ற இலக்கைத் தமிழரசுக் கட்சி தீர்க்கமான முறையில்
முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே பெரும்பான்மைத் தமிழ் மக்களுடைய கருத்துநிலையாக உள்ளது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
மேற்படி விடயங்கள் ஒவ்வொன்றையும் மக்கள் மத்தியிலும், அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பொதுசன அபிப்பிராயமாகப் பெற்று எமது மாவட்டக் கிளையும், பிரதேசக் கிளைகளும், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களும் இணைந்து, கள யதார்த்தத்தின் அடிப்படையில்
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய கொள்கை நிலைப்பாட்டைப் பாதுகாத்து, மக்கள் மத்தியில் எமது அரசியல் இயக்கம் நெருங்கிச் செயற்படும் வகையில் தாயகத்தின் சிவில் அமைப்புகளினாலும், தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள பெரும்பான்மைக் கட்சிகளினாலும் முன்மொழியப்பட்டுள்ள
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற ஏகமனதான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம் என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகிறோம் – என்றுள்ளது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல்
அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல்
அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல் ,லெபனான்ஹிஸ்புல்லா போராளிகள் படையினர் இஸ்ரேல் ராணுவத்தின் கோலன் குன்று முகாம்களை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் இஸ்திரேலிய தளம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ஆயுத பகுதிகளை இலக்கு வைத்து போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தின .
தற்கொலை வெட்டி குண்டு விமானங்கள் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில், இஸ்திரேலிய ஆக்கிரமிப்பு வல்லாதிக்க படை முகாம்கள் பலத்தை சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான ஆயுத தளபாடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகள் தெரிவு செய்து இந்த விமானங்கள் நடத்தியதாகவும் ,
இதனால் இஸ்திரேலியா ராணுவத்தினருக்கு அதனுடைய ஆளனி ஆயுதங்களுக்கும் பலத்தை சேதங்களை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக லெபனான் போர்படைகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு இஸ்ரேலை இடைவிடாது தொடராக லெபனான் போர் படைகள் நடத்தி வருகின்றன.
இவர்களது இந்த தாக்குதினால் இழப்பையும் துயரையும் இஸ்ரேலிய படைகள் சந்தித்த வண்ணமுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
எனினும் போர்படைகள் நடத்திய இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்களை இஸ்ரேலிய இராணுவம் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது .
பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா
பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா
பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா ,இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் மிக வருகின்ற நிலையில் ,
கூட்டமைப்பின் சார்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ள புது வேட்பாளரான அரியேந்திரன் அவர்களுக்கு வாக்கினை அளிக்குமாறு, மருத்துவர் அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.
ஒன்றுபட்டு தமிழ் மக்கள் ஒன்று கூடி நிற்பதை நாங்கள் இந்த தேர்தலில் காட்ட வேண்டும் எனவும் ,
ஆதலால் அவருக்கு பாரிய அளவிலான மக்கள் திரண்டு வந்து வாக்குகளை அளிக்க வேண்டும் என ,அவர் பேரன்புடன் மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.
என்னை நேசிக்கின்ற மக்களது அன்பு உண்மையாக இருந்தால் அரியேந்திரன் அவர்களுக்கு நேரடியாக வந்து லட்சக்கணக்கான மக்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும்,
அதுவே தான் தங்களுடைய இறையாண்மையுடன் கூடிய அரசியலை பெற்றுவிடுவதற்கு உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகளுக்கு எதிரானவர் என அர்ச்சனா ராமநாதன் காணப்பட்ட பொழுதும் ,
அவ்வாறான பரப்புரைகள் அவருக்கு எதிராக செய்யப்பட்டு வந்த பொழுதும் அதை உடைத்து எறிந்து நான் தமிழன், தமிழனாக தமிழனுக்கு உதவுவோம் என அவர் தெரிவித்துள்ளது வியப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இருண்ட காலத்தில் இருந்து எம்மிடம் அடக்கு முறையின் உச்சத்தில் இருந்து விடுதலை பெற வேண்டுமாக இருந்தால் ,எம்மவர்கள் எம்மோடு என்றும் இணைந்து இருப்பார்கள் என்கின்ற ஒற்றுமையை ,எடுத்துக்காட்டு விதமாக அர்ச்சுனாவின் இந்த குரல் காணப்படுகின்றது.
தடைகளை உடைத்து படைகளை நகர்த்தி வெற்றி கொடியை நாட்ட வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் இருப்பதால் ,
நாங்கள் ஒன்றித்து பயணிக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை அர்ஜுனார் இராமநாதனின் இந்த பொது வேட்பாளருக்கான ஆதரவு எடுத்துக்காட்டுகிறது.
அர்ச்சனா புதிய இணையம் ஆரம்பம்
அர்ச்சனா புதிய இணையம் ஆரம்பம்
அர்ச்சனா புதிய இணையம் ஆரம்பம் ,அர்ச்சுனா ராமநாதன் பெயரில் புதிதாக இளையதளமுண்டு உருவாக்கப்பட்டுள்ளது அதன் ஊடாக அவரது செய்திகள் எது பெரும் காலங்களில் எடுத்து வர பணம் அவரது அணுகினர் தெரிவித்திருக்கின்றனர்.
அர்ச்சுனா நியூஸ் என்கின்ற இந்த இணையதளமே தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது இதன் ஊடாக அவரது செய்திகள் மற்றும் அவர் தொடர்பான அனைத்து செய்திகளும் உடனுக்குடன் வெளியிடப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
அர்ச்சனாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள மக்களினால் இந்த இணையதளம் உடனடியாக வேகமாக உருவாக்கப்பட்டு, அவரது படைப்புகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகெல்லாம் பரந்து கிடக்கின்ற மனிதர்களை ஒன்று திரட்டி அவர்கள் ஊடாக மேற்படி பணியினை மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகின்றது.
விழுந்து கிடக்கின்ற ஒரு தமிழினத்தினுடைய எழுச்சிக்காக போராட வந்திருக்கும் பறையாக அர்ச்சனா ராமநாதன் காணப்படுகின்றார் .
காலத்தின் தேவைகள் தமிழ் மக்கள் அவரிடம் கையளித்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.
அதனால் தான் அர்ச்சனா நியூஸ் டாட் காம் archchunanews . com மற்றும் அர்ச்சனா யூடூப் archchunanews என்கின்ற பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றனர் .
இந்த இரண்டின் ஊடாகவும் இந்த செய்திகள் எடுத்துப் பரப்படும் எனவும் மக்களை தம்மோடு இணைந்திருக்கும் படி அவர்கள் சார்பாக மக்கள் இடம் வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது .
அதற்கான இணைப்பு இந்த பகுதியில் மேலே வழங்கப்படுகிறது.
தேர்தல் வேளையில் இராணுவ பாதுகாப்பு தீவிரம்
தேர்தல் வேளையில் இராணுவ பாதுகாப்பு தீவிரம்
தேர்தல் வேளையில் இராணுவ பாதுகாப்பு தீவிரம் ,இலங்கையில் தேர்தல் இடம்பெறவுளையில் தற்போது ராணுவம் போலீசார் தீவிர சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலைகளில் தோற்றமளித்துள்ள காவலரின் ஊடாக துளிர் சோதனைகளை நடத்துவதும் மோட்டு சைக்கிள் மற்றும் இராணுவ வண்டிகளில் பயணிக்கின்ற ராணுவத்திலும் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் நின்று சோதனைகளை நடத்தி பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ராணுவம் போலீசார் குவிக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ஆயுத போலீசார் தமது தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர்.
சில இடங்களில் மோப்ப நாய்களுடன் இராணுவத்தினர் செல்வதை அவதானிக்க முடிவதாக நேரில் கண்ட சாட்சிகள் இப்படியும் தெரிவிக்கின்றனர்.
வரலாறு காணாத அளவில் மிக பெரும் எண்ணிக்கையில் ஜனாதிபதி வேட்பாளராக 38க்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுவதான புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அவ்வார நிலையில் தற்போது வீதிகள் எங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது .
இந்த வடிவத்தை பார்க்கின்ற பொழுது குண்டுகள் அல்லது கலவரங்கள் வெடிக்கலாம் என்பதை அஞ்ச வைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்
இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்
இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்,இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பரப்புங்கள் மிக சூடாக சூடு பிடித்துள்ளது ,அடுத்து இந்த தேர்தல் காலப் பகுதியில் அங்கு பெரும் குண்டு வெடிப்புகள் கலவரங்கள் இடம்பெறலாம் என அஞ்சப்படுகிறது.
தமது கட்சிகள் வென்றெடுப்பதற்காக வேகமான பரப்பினர்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இவ்வாறான காலப்பகுதியிலேயே இந்த கூண்டுகள் வெடிப்பதன் ஊடாக சிங்களம் தமிழ் மக்களை மிரட்டி அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது.
கோத்தபாய ராஜபக்ச பதவி இழந்ததன் பின்னர் அங்கு மிகப்பெரும் குண்டு வெடிப்புகள் இடம் பெற்றிருந்தன அது போன்ற ஒரு நிகழ்வு இப்போ இடம் பெறக் கூடும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.
தமது அரசியல் நலம் கருதி அவர்கள் எதையும் செய்ய வல்லவர்கள் என்பதற்கான ஒரு விடயமாக இதை பார்க்க முடிகின்றது.
கூண்டு வெடிப்பின் ஊடாக மக்களை அச்சுறுத்துவதன் ஊடாகவே இந்த தேர்தலில் தாங்கள் வெற்றி கொடி கட்டலாமென அடக்கி ஆண்ட பேரினவாத பூதம் கருதுகிறது.
இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத எதிர்மறை மாற்றங்கள் நிகழ்வுகள் இடம்பெறும் எனவும் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு அவர்களுக்கு செல்கின்ற பொழுது ,
அவரது பொது இடங்களில் கூறுகின்ற பொழுது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் இப்பொழுது வெடித்து பறக்கின்றன.
தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு
தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு
தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு ,தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு ஆதரவு ஆனால் கட்சி வெகு விரைவில் முடிவு எடுக்கும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்
சூரியப் பிரதீபா சூரியமூர்த்தி தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிகவும் முக்கியமான விடயம் பொது வேட்பாளர் பற்றிய ஆதரிப்பற்றியது அதாவது நான் தனிப்பட்ட சூரிய பிரதிபாவாக சொல்ல வேண்டுமாக இருந்தால் இது உண்மையிலேயே மிக ஒரு நல்ல விடயமாக நான் பார்க்கின்றேன் ஏனெனில் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே
தலைமையின் கீழ் செயல்பட முன் வந்திருப்பது எங்களுக்கு கிடைத்த மாபெரும் ஒரு வெற்றியாகும் எனவே இந்த பொது வேட்பாளர் என்கின்ற எந்த
ஒரு விடையத்தின் பின்னால் தமிழர் அனைவரும் ஒன்றாக நிற்பது மிக மகிழ்ச்சியானது நான் ஒரு விஷயம் எனவே நான் அதனை ஆதரிக்கின்றேன்.
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயம் தமிழர்கள் அனைவரும் அல்லது தமிழரசிகள்
கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு பொது வேட்பாளர் என்ற நிறுத்தி இருப்பது தங்களுடைய ஒற்றுமையின் ஒரு அடையாளமாக நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம்.
உலகமே எங்களை திரும்பி பார்த்து தமிழர் வந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள் அல்லது தமிழில் சமூகம் என்று ஒரு குடையின் கீழ் வந்திருக்கின்ற ஒரு சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது என்பது மிகவும் வரவேற்கத்தக்கூறு விடயம் தமிழர் விடுதலை கூட்டணியினுடைய
செயலாளர் நடத்திக் கொண்டிருக்கின்றது அதன் முடிவில் நான் மிக விரைவில் எங்களுடைய முடிவே என்ன என்பதனை நிச்சயமாக வெகுவிரைவில் அறிவிக்கும் என தெரிவித்தார்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது
லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது
லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது ,இலங்கை மத்தியகமா போலீஸ் காவல்துறை பகுதியில் கடமையாற்றும் ஒரு போலீஸ் அதிகாரி லஞ்சம் பெற சென்ற போது கையும் மையமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆழக்குழுவின் அதிகாரிகளினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தற்போது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு நீதிமன்றத்தில் பரப்படுத்த பட்டுள்ளார் .
இலங்கை காவல்துறையினர் கையூட்டு பெற்றதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதை இந்த விடயங்கள் மூலமும் எடுத்துக்காட்டுகின்றனர்.
மக்கள் சமூகத்தை காப்பாற்றும் அவருடைய கடமையை பணியாற்ற வந்த இவர்கள் தமது தனிநலன் சார்ந்து லஞ்ச உடை பெற்று தமது குடும்பங்களுக்காக அவர் செல்வந்தராக வாழ்வதற்காக வந்தார்கள் என்பதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது.
குற்றவாளிகள் தப்பித்து செல்வதற்கும் பல்வேறுப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இவர்களது இந்த விடயங்கள் மிகப்பெரும் நெருக்கடியையும் உடனையும் ஏற்படுத்துவதை காண முடிகின்றது.
போத்த வைத்து லஞ்ச ஊழல் மற்றும் அரசியல்வாதிகள் வர்த்தகர்களிடம் இவ்வாறு லஞ்சத்தை பெற்று அவர்கள் அவருக்கு உடனடியாக செயல்படுவதான விடயம் உண்மைதான் என்பதை மேற்படி முடியும் எடுத்துக்காட்டுவதாகவும் ஒரு முறை அம்பலப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்
முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்
முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில் ,புட்டும் தேங்காய் பூவும்..
அமைச்சர் ரபூப் ஹக்கீம் சொன்ன கருத்துக்குரிய பதில்
எல்லாம் வல்ல முருகப்பெருமானுக்கு சகல இனத்தையும் ஆளும் தமிழ்த்தலைவன் முருகனுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்.
உலகமே வியந்து போக்கும் நல்லூரான் மண்ணில் சகோதர மதத்தை பின்பற்றுபவர்கள் நிற்பது தமிழனின் எம்மதமும் சம்மதம் என்பதற்குரிய சான்றாக இப்படத்தை நான் பார்க்கிறேன்…
இந்து மதம் மட்டுமே எம்மதம் சம்மதம் என்று சொல்லிக் கொள்கிறது..
வாழ்க எனது நல்லூரான்..
அரோகரா..
முருகப்பெருமானுக்கு அரோகரா..
முருகன் இப்போதுதான் ஏன் உலகத்தை சுற்றி வந்தார் ஆண்டியாகவும் அம்மணமாகவும் என்று விளங்கிக் கொள்கிறேன்..
அந்தத் தத்துவத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை இப்போதுதான் விளங்கிக் கொள்கிறேன்..
காலத்தாலும் கபடத்தாலும் அழிக்க முடியாதவன் எனது முருகப்பெருமான்..
முருகனின் சன்னதியில் முஸ்லிம் ஒருவரின் சமாதி இருக்கிறது என்பதையும் நாம் சொல்லிக் கொண்டாக வேண்டும்..
(புட்டும் தேங்காய் பூவும் என்று ரவுக் கபிம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
தயவுசெய்து கோவிக்க வேண்டாம்..
புட்டு எது தேங்காய் பூ எது?
இனம் சம்பந்தமான பதிவு அல்ல..
சத்தியமாக தெரியாததால் கேட்கிறேன்..) இவ்வாறு அர்ச்சுனா இரமானதகன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

ஹக்கீம் ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்
ஹக்கீம் ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்
ஹக்கீம் ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் ,ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் என்ற சுவரொட்டிகள் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
ஜனதிபதி தேர்தல் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 2024 ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது. ஐக்கிய மக்கள்
சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க அம்பாறை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்ப்புகள் எழுந்த வண்ணமுள்ளன.
ரவுப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது ஆதரவினை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியிருந்தனர்.
மேலும் கிழக்கில் ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் என்ற சுவரொட்டிகளும் கிழக்கு மாகாணத்தில் பரவலாக ஓட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம் அரசியல் தலைமைகளான ஹக்கீம் மற்றும் ரிஷாத் அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஏமாற்று அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் சுயநல அரசியல் ஒழிய வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் .
இப்பொழுது இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு என்ன விடயங்களை செய்ய போகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது அந்த அம்ச கோரிக்கையை வெளியிட்டுள்ளார் .
இதன் ஊடக மிக பெரும் வெற்றியை மக்கள் மத்தியில் இருந்து பெற்று கொள்வேன் என அவர் எதிர்பார்க்கின்றார் என தெரிவிக்க பட்டுள்ளது .
பர பரப்பாக இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டிகள் இடம்பெற்று வருகின்றன .
ஆகவே இந்த தேர்தலில் பலத்த குளறி படிகள் இடம்பெறும் என்பதாக வருகினர் கட்சிகளின் பேச்சளார்கள் ,தலைவர்கள் பேச்சுக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன .
தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை
தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை
தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை தந்துள்ளனர் ,இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை தருகின்றனர் .
இவர்கள் இலங்கையில் தேர்தல் சுலபமாக இடம்பெறுகின்றனவா என்பதை கண்காணிப்பார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .
பங்காளதேஸ் போன்று இலங்கையில் கலவரம் வெடிக்கலாம் என எதிர்பார்க்க படும் இவ்வேளையில் ,இந்த கண்காணிப்பாளர் வருகை தந்துள்ளனர் .
பலத்த போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ,இந்த தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது .
ரணில் விக்கிரமசிங்கா தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் .
அதற்காக கட்சிகளை விலைக்கு வாங்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது .
அவ்வாறான நிலையிலேயே இப்பொழுது தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் குழு வருகை தந்துள்ளமை குறிப்பிட தக்கது.
தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி
தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி
தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி ,இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபத்தி தேர்தலில் பாரியளவு வன்முறையை ஏற்படுத்த பெரும் சதி நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதக விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார் .
தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக இந்த சதி நடவடிக்கையில் இவர்கள் களம் இறங்க உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தேர்தலில் தோற்றுவிடுவோம் என் அஞ்சும் மகிந்த குடும்பம் மிக பெரும் வன்முறை ஒன்றை நடத்திட தயாராகி வருகின்றனர் .
இதன் ஊடக மிக பெரும் உயிரிழப்புக்கள் சொத்து சேதங்கள் என்பன இடம்பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .
சிங்கள மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதை இந்த விடயம் கோடிட்டு காட்டுகின்றன.
உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா
உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா
உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா ,உங்கள் வாக்கை தீர்மானிப்பதற்குரிய சகல உரிமையும் தமிழனுக்கு உண்டு..
நான் ஜனாதிபதி தேர்தலில் இருந்து முற்றாக கருத்து தெரிவிப்பதை நிறுத்தி விடுகிறேன்..
உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள்.
எந்த சிங்கள ஜனாதிபதியும் தமிழரின் கோரிக்கைகளுக்கு மன சுத்தியுடன் செவி சாய்க்க மாட்டார்கள் என்பது வரலாறு..
ஆனால் இந்த தேர்தலானது தமிழர்களின் வாக்கை மட்டுமே நம்பி இருப்பதால் ஒருமுறை முயன்று பார்க்கலாம் என்று யோசித்தேன்..
அனுராவிடன் கதைக்கும்போது இந்திமா மூலம் அவர்கள் தமிழருக்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொண்டேன்..
சஜித் பிரேமதாஸ் அவர்களுடன் அவர் அழைத்து வர சொன்னதால் கண்டியிலிருந்து கொழும்பு வந்து சென்று கதைத்தேன்..
அவர் என்னை அவர் கட்சியில் சேர்ப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்..
ஒரு தமிழனாக நான் மாட்டேன் என்று சொன்னேன்..
ஆனால் அவரை ஆதரிப்பதற்கு ஒரு மக்களை அணுகக்கூடிய ஜனாதிபதியாக நான் கருதியே அவரிடம் சென்றேன்..
ஆனால் தமிழ் முஸ்லிம் உறவுகளின் விரிசலை அவர் மேலும் மேலும் வலுப்படுத்தினாரே ஒழிய இன ஒற்றுமையை அவர் அந்த மேடையில் வலுப்படுத்தவில்லை..
முஸ்லிம் அரசியல்வாதிகள் நான் மேடையில் இருப்பதை விரும்பவில்லை..
அவர் அதை கையாண்ட பக்குவம் ஒரு முதிர்ச்சியற்ற ஜனாதிபதி என்பதை எடுத்துக்காட்டியது..
நான் மேடையில் இருந்து இறங்கி வந்து மறுபடியும் சொன்னேன் ஒரு தமிழனை நீங்கள் இவ்வாறு நடத்துவது உங்களுக்கு தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை இல்லாமல் பண்ணும். அவருடைய பாதுகாப்பு உத்தியோகத்தரிடம திரும்பவும் சொல்லவும் என்று..
எனக்கு தன்னுடைய காரில் இருக்குமாறும் தான் வந்து கதைப்பதாகவும் சொல்லப்பட்டது..
அவர் காரில் ஏறி இருப்பதற்கு தமிழன் முப்பது வருடம் தன் உயிரை மாய்த்து ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தவில்லை..
அவ்வாறு நான் ஏறி இருந்திருந்தால் சில வேளைகளில் பொதுமக்கள் நான் ஏதோ டீல் கதைப்பதாக நினைத்திருப்பார்கள்..
இதனால்தான் எனது தொலைபேசிகள் எப்போதுமே ரெக்கார்ட்டில் இருக்கும்..
சுயநலவாதிகள் எனக்கு எதிராக திரும்புகின்ற போது நான் எப்போதுமே அவர் ரெக்கார்டிங் களை அவர்களுக்கு காட்டுவது வழக்கம்..
சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருந்தால் மட்டுமே அவர்கள் கதைத்ததை நான் பொதுமக்களுக்கு காட்டுவது வழக்கம்..
மைந்தன் சிவா எனப்படுகின்ற மிகவும் ஒரு அடி முட்டாள் என்னைப் பற்றி எழுதிய பின்பு தான் அவர்கள் முஸ்லிம்களூடாக அதை பரப்பப்பட்ட போது
பாராளுமன்ற உறுப்பினர் திஸஸ அத்தநாயக்க விடம் மற்றும் ராதாகிருஷ்ணன் எம்பி இரு வருடமும் சொல்லிவிட்டு தான் நான் அந்த ரெக்கார்டிங் வெளியில் பொது மக்களுக்காக விட்டேன்..
தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக தமிழ் மக்களை அடக்கி வைக்கும் போது எனது சுயமரியாதையை இழந்து சஜித் பிரேமதாச அவர்களுக்கு நான் ஒருபோதும் உதவ முடியாது..
இதிலிருந்து சஜித் பிரேமதாச, தான் பக்குவம் அற்றவர் அல்லது அவரின் பின்னால் இருப்பவர்கள் அவரை பகடைக்காயாக பயன்படுத்தி
பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளை பெறவே முயற்சிக்கிறார்களே அன்றி அவரை ஜனாதிபதியாக மாற்றிப் பார்க்க எந்த ஒரு முயற்சியை எடுக்கவில்லை.. இவை முக்கியமாக முஸ்லிம் எம்பி களுக்கானது..
இதிலிருந்து சஜித் பிரேமதாஸ் அவர்களின் அத்தியாயம் முடிக்கப்படுகிறது..
அவர் அவ்வாறு நடந்து கொண்டமைக்குரிய முக்கியமான காரணம் உமா சந்திர பிரகாஷ் எனப்படுகின்ற முட்டாள் என்பது அவருக்கு இப்போது தெரிந்திருக்கிறது..
நான் எனது தொலைபேசிகள் அனைத்தையுமே முடிவுறுத்தி விட்டேன்…
இனிமேல் சஜித் பிரேமதாச அத்தியாயம் விடைபெறுகிறது..
ரணில் விக்ரமசிங்க அவர்கள் முழு தமிழ் எம்பிக்களும் டீல் அடித்து தன்னுடன் இருப்பதால் தமிழ் வாக்குகள் கிடைக்கும் என நினைத்து தமிழர்களின்
பிரதிநிதியாக இதுவரை காலமும் எமது பொதுமக்களை ஏமாற்றிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் வெல்லலாம் என நினைக்கிறார்கள்..
முக்கியமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னுடைய நம்பிக்கை வலயத்தில் இருந்து நான் இழந்ததுக்கு காரணம் எனது முன்னாள் சட்டவாளர் சிலஸ்டின் அவர்கள் மட்டுமே..
அவர்கள் அமைச்சரின் ஏகப்பிரதிநிதியாக எனது மற்றுமொரு சட்டவாளர் அன்டன் புனித நாயகன் அவர்களுடன் சேர்ந்து என்னை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் ஆளாக காட்டுவதற்கு திட்டமிட்ட ரீதியில் ஆஸ்திரேலியாவில்
வசிக்கின்ற எனக்கு சார்பாக உதவி செய்து கொண்டிருந்து சுமந்திரனின் அடியாளான பாலா விக்னேஷ்வரன் அவர்களுடன் இணைந்து என்னை இபிடிபி ஆக காட்டி தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பதற்காக செய்த முயற்சிகள்.
அதுமட்டுமல்ல ஏழாம் திகதி நான் மன்னார் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போது பொதுமக்களை சந்திக்க விடாமல் அண்டன் புனித நாயகம் அவர்கள் தனது காரில் ஏற்றி அங்கும் இங்குமாக அலைத்து திட்டமிட்ட ரீதியில் மக்களை
என்மேல் கோபப்பட செய்து மறுபடியும் புதுமைதானத்தில் கொண்டே இறக்கி குழப்பம் செய்தது பாலா விக்னேஸ்வரனுடனும் அண்டன் புனித நாயகத்துடனும் எனது தொடர்புகளை நிறுத்திக் கொண்டதற்குரிய காரணம்..
இவர்கள் எனக்கு உதவுவது போன்று திட்டமிட்ட ரீதியில் என்னை எனது மக்கள் ஆதரவை குறைப்பதற்கு முயன்ற போது எல்லாம் அறிந்து கொண்ட நான் அமைதியாக இருந்தேன்…
மேலும் அஜித் எனப்படும் சாவகச்சேரியை சேர்ந்த டக்ளஸ் அவர்களின் கையாள் திட்டமிட்ட ரீதியில் என்னை வளைத்து போட முயன்றதும் அவர்களுடைய தொடர்பையும் துண்டித்துக் கொண்டேன்..
அது தவிர தம்பிராசா எனப்படுகின்ற எனக்கு யார் என்றே தெரியாத ஒருவர் என்னை உரிமை கூறுகின்ற போது நான் அவரிடமிருந்தும் தொடர்புகளை எப்போதோ அறுத்து கொண்டேன்..
இராமநாதன் அர்ச்சுனா எனப்படுகின்ற வைத்தியரை அரசியலால் கொலை செய்ய நடந்த சதிகள் இவை மட்டுமல்ல இதற்கு மேலும் மேலும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது..
எனக்கு ஒன்று ஒரு நம்பிக்கையான நட்பு வட்டம் சாவகச்சேரியில் இருக்கிறது..
அவர்கள் தான் என்னை சாவகச்சேரியில் தூக்கி வைத்து சந்தோசம் கொண்டார்கள்..
நான் அவர்களுடன் மீண்டும் போய் இணையும் வரை தயவுசெய்து எனது சாவகச்சேரி நட்பு வட்டம் பொறுமையாக இருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..
இப்போது அனுராவிக்கோ சஜித்துக்கோ ரணிலுக்கோ என் சார்பில் எந்த ஆதரவும் கொடுப்பதற்கு தயாராக இல்லை..
புது வேட்பாளர் பற்றிய மக்களின் கருத்து அவர்களுடைய சுய சிந்தனை சரியாக இருந்தால் ஒற்றுமையாக பொது வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை அளிக்கலாம்..
ஆனால் மீண்டும் ஒரு விடயம் சொல்ல விரும்புகிறேன்…
அனுரா அவர்கள் ஜனாதிபதியானால் ரணில் அவர்கள் அவரிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு ஒதுங்க போவதில்லை..
அனுரா அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள் அல்லது இராணுவத்தால் கொல்லப்படுவார்.. அப்போது பொதுமக்கள் பாதையில் இறங்கி இந்த நாடு மீண்டும் ஒரு 1987 போன்ற பட்டலாந்து படுகொலையை சந்திக்கும்..
அதற்குரிய அமெரிக்காவின் ஆதரவும் இந்தியாவின் ஆதரவும் ரணில் அவர்களுக்கு தாராளமாக உண்டு..
இராணுவ ஆட்சி நிறுவப்படுமாயின் பல தலைவர்கள் கொலை செய்யப்படலாம்..
பொதுமக்கள் கொத்துக்கொத்தாக பாதைகளில் சுட்டுக் கொல்லப்படலாம்..
இவை எனது எதிர்கூறல் மட்டுமே..
சஜித் அவர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் அதே பாதாள லோக அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை..
பாராளுமன்றம் ஒருபோதும் கலைக்கப்படாது..
மாகாண சபை தேர்தலோ உள்ளூர் ஆட்சி சபை தேர்தலோ மீண்டும் வைக்கப்படும்..
அனுரா அவர்கள் காணாமல் ஆக்கப்படுவார்கள்..
பொதுமக்கள் கிளர்ச்சி எழும்.. மீண்டும் கொலைகள் நடந்தேறும்..
ரணில் அவர்கள் ஜனாதிபதி ஆனாலும் அதே பாதாள கூட்டங்கள் அதே பாராளுமன்ற உறுப்பினர்கள் அதே தமிழ் மக்களுக்கான எதிரான கெடுபிடிகள் எப்போதுமே இருக்கும்..
இன்னும் ஐந்து வருடங்களுக்கு இராணுவமயமாக்கல் மேலும் விஸ்தரிக்கப்பட்டு தமிழர்களின் இனம் அழிக்கப்படும்..
முஸ்லிம்கள் எப்போதுமே ரணிலுடன் இருப்பதால் தமிழர் எதிரான திட்டமிட்ட இனவெளிப்பு கட்டாயம் நடந்தேறும்..
கடந்த வருடத்தில் மட்டும் 80,000 தமிழர்கள் இலங்கையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்..
வெளிநாட்டு உதவி உள்ள தமிழர்கள் வெளியேறுவார்கள்..
நான் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்படுவேன்..
மீண்டும் அதே தமிழ் எம்பிக்கள் பொத்துவில் இருந்து புண்ணாக்கை கொண்டு வந்து பொதுமக்களை ஏமாற்றுவார்கள்.
அதே புலம்பெயர் தமிழர் கூட்டங்கள் ஒரு சில புலிக்கொடிகளுடன் சீமானுடன் அங்கேயும் இங்கேயும் ஓடித் தெரியும்..
எல்லா கடைகளிலும் உண்டியல் வைக்கப்படும்…
மீண்டும் பொதுமக்கள் வெளிநாட்டில் குளிர்களில் உழைக்கின்ற பணங்கள் சேர்க்கப்பட்டு ஐநா சபை மற்றும் சர்வதேச உதவிகளுடன் தமிழருக்கு நீதி கிடைக்கும் என இன்னும் ஒரு இருபது வருடம் இழுத்தடிக்கப்படும்..
தமிழின விகிதாசாரம் மெல்ல மெல்லமாக அழிக்கப்பட்டு இன்னும் இருபது முப்பது வருடங்களில் தமிழினம் இலங்கையை விட்டு மொத்தமாக வெளியேறும்..
நானும் இதர பல தமிழர்களும் காணாமல் ஆக்கப்படுவோம்..
இவற்றிற்கு உள்ளே சிறந்த தெரிவு எதுவென்பது பொது வேட்பாளராக இருந்தால் அங்கேயும் பிரச்சனைகள் உள்ளது..
பொது வேட்பாளரை வைத்துக்கொண்டு ஐநாவிற்கு போய் நீதி கிடைத்த வரலாறு 2009 இல் இருந்து இன்றுவரை நடக்கவில்லை..
பொது வேட்பாளர் என சொல்லப்படுகின்ற கூட்டங்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் நன்றாக பணங்களை சேர்த்து பிள்ளைகளுக்கு ஹெலிகாப்டரில் சாமத்திய வீடும் ரீச்சா மற்றும் ஐ பி சி போன்ற ஊடகங்களை நடத்தியும் மிச்சம் இருக்கின்ற தமிழர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும்..
எமக்கென உள்ள தலைமை வெற்றிடமாக உள்ளது என சிவனடியான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்..
நல்லதொரு தலைமையை தேடுங்கள்..
அது நிச்சயமாக சுமந்திரனோ சாணக்கியனோ ஸ்ரீதரனனோ அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவோ அல்லது அரிய நேந்திரனோ அல்ல..
இவைதான் எனக்குத் தெரிந்த அரசியல் அறிவு..
இவை பிழை என்றால் சரியான கருத்தை சொல்லுங்கள்..
ஒரு உண்மையான தலைமை தமிழனுக்கு கிடைக்கும் வரை யாழ்ப்பாணமோ மட்டக்களப்போ மிஞ்சப் போவதில்லை..
நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்..
நான் ஏற்கனவே வைத்திய சேவையில் இருந்து விலக்கப்பட்டு விட்டேன் திட்டமிட்ட ரீதியில்..
பெரும்பாலும் காணாமல் ஆக்கப்படுவேன்..
என்னை எதிர்த்த ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தானே நொந்து கொள்ளும் நாட்கள் விரைவில் வரும்..
எனக்குத் தெரிந்தவை எல்லாம் தமிழனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே..
இருந்தேன் சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த அட்டூழியங்களை வெளியில் சொன்னேன்..
மன்னர் போய் சிந்துஜாவின் நீதியை கேட்டேன்..
அவை சம்பந்தமாக எனது தமிழ் உறவுகளாலேயே விமர்சிக்கப்பட்டேன்..
இப்போது கூட ஓடிக்கொண்டே இருக்கிறேன்..
உயிருக்கு பயந்து அல்ல.
உயிருக்கு பயந்தவன் முஸ்லிம் மேடையில் இருந்து இறங்கி நான் போய் வருகிறேன் என சொல்லிவிட்டு வந்திருக்க மாட்டான்..
உயிருக்கு பயந்தவன் சஜித் பிரேமதாசவின் ஓடியோ லீக் பண்ணி இருக்க மாட்டான்..
உயிருக்கு பயந்தவன் இவ்வளவு விமர்சனங்களையும் தெளிவாக முகப்புத்தகத்தில் எழுத மாட்டான்..
என் தொழிலை இழந்து இருக்கிறேன்..
என் குடும்பத்தை என்னால் சென்று பார்க்க முடியாது..
எனது உடலையும் பேராதனை வைத்தியசாலைக்கு இப்போதோ எழுதிக் கொடுத்து விட்டேன் முதன் முதலாக..
எனது உறுப்புகள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டு விட்டன..
என் உயிரை தமிழனுக்காக கொடுத்திருக்கிறேன்..
என் எதிரிகளுக்கு என் என்ன வேண்டும்??
தமிழனாக தமிழனுக்கு பிறந்தேன்..
என் உயிர் மூச்சு இருக்கும் வரை தமிழுக்காக எனது இதயம் துடித்துக் கொண்டிருக்கும்..
உங்களால் முடிந்தால் இவற்றில் ஒன்றையேனும் செய்து பாருங்கள்..
குடும்பம் தொழில் உயிர் உடல்..
ஒன்றையேனும் செய்துவிட்டு பதிவிடுங்கள்..
இருந்தால் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு..
எப்படி வசதி?
தமிழனின் தாகம்…..
மக்களால் அதிகம் விரும்பப்பட்ட விரும்பப்படுகின்ற தமிழ் மெடிக்கல் அட்மின்..
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

வெற்றியாளன் நானே அனுரா முழக்கம்
வெற்றியாளன் நானே அனுரா முழக்கம்
வெற்றியாளன் நானே அனுரா முழக்கம் .இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் நானே வெற்றியாளன் என அனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார் .
பலத்த போட்டிகளும் வேகமான பரப்புரைகளை இடம்பெற்று வரும் கால பகுதியில் இப்பொழுது இவ்விதம் முழங்கியுள்ளார் .
தோற்க போகிறவர்களும் நாங்களே வெற்றியாளர்கள் என்ற தேர்தல் கால பகுதியில் முழங்கி வருகின்றனர் ,
ஆகவே இந்த தேர்தல் இப்பொழுது சூடு பிடித்துள்ளது
நாடு ஆபத்தான பாதையில் ரணில்
நாடு ஆபத்தான பாதையில் ரணில்
நாடு ஆபத்தான பாதையில் ரணில் ,நாடு மிக ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருப்பதாக குண்டு ஒன்றை போட்டு இருக்கிறார்.
எமது நாடும் மக்களும் நன்றாக இருக்க வேண்டுமாக இருந்தால் , வரி அதிகரிப்பதற்காகவே நாட்டையும் நாட்டு மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பலப்படுத்த முடியுமென ரணில் விக்கிரமசிங்க தேர்தல் கூட்ட பரப்புரையின் போது தெரிவித்துள்ளார் .
சர்வதேச நாணய நிதியம் வரிக்குறைப்பை அதிகரிக்கப்பட்ட வேண்டும் என்கின்ற பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன் வைத்து கடனை வழங்கி இருந்தது.
தேர்தலை மையமாக வைத்து நடவடிக்கையில் ரணில் அரசாட்சி ஈடுபட்டது அதனை அடுத்து தற்போது இந்த விடயத்தை அவர் தெரிவித்திருக்கின்றார்.
இதனுடைய நோக்கம் தேர்தல் முடிவுற்றதும் அதில் மிகவும் அதிகரிக்கப்பட்டு மக்களது தலைகள் மீது பொருளாதார சுமைகள் விலைவாசிகள் அதிகரிக்கப்பட்டு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தப்படும் என்பதாய் அவரது பேச்சாக அமைகின்றது.
கோடிகளை கொள்ளையடித்து தமது கோட்டைகளை பலப்படுத்தி சுகபோக வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்ற அரசியல் வாதிகளுக்கு மக்கள் தொடர்பாக அக்கறை இல்லை என்பதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

மனைவிக்கு தீ மூட்டிய கணவர்
மனைவிக்கு தீ மூட்டிய கணவர்
மனைவிக்கு தீ மூட்டிய கணவர் ,குடும்பத் தகராறில் கணவனால் மனைவிக்கு தீ வைத்து எரித்ததில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது .
இந்தச் சம்பவம் அச்சுவேலியில் பிரதேசத்தில் , ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில், இரு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா (வயது 28) என்பவரே படுகாயமடைந்துள்ளார் .
குறித்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் இடையே முரண்பாடு இருந்து வந்துள்ள நிலையில், மது போதையில் வந்த கணவன் அவருடன் முரண்
பட்டுள்ளார். இந் நிலையில் பெண்ணின் அபயக்குரல் சத்தம் கேட்டதும் அவர்களின் வீட்டின் அருகே வசித்து வந்த பெண்ணின் சகோதரன் உதவிக்கு ஓடி பார்த்த போதுஅவரது சகோதரி தீயில் எரிந்துகொண்டிருந்துள்ளார் .
உடனடியாக அயலவர்களின் உதவியுடன் பெண் மீட்கப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
இதனிடையே, அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்ட பெண்ணின் கணவரும் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது
பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது
பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது ,நீர்கொழும்பு கடற்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்களுடன் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 43 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் மேல் மாகாண உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கலால் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த சுற்றிவளைப்பு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் 10 இளம் பெண்களும் 33 இளைஞர்களும் இருந்துள்ளனர்.
முகநூல் ஊடாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வந்துள்ள இவர்கள் தங்காலை, மாரவில, கிரிந்திவெல, ஹிகுராக்கொட, பூகொட, நீர்கொழும்பு, ஜாஎல, திகன, ஹொரண ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது
செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம்
செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம்
செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம் ,மருத்துவ மாபியாக்கள் வலையமைப்பில் வீதி உலா வரும் விருந்தகமே செந்தூரா உனக்கொரு செந்தமிழின் பதில் மடல் .
கற்றவனாக காட்டி கொள்ளும் செத்தவனே உனக்கொரு செந்தமிழன் ஏற்ற மடல் .
கோமாளிகள் இந்த மன்றில் இப்படியும் உலவி கொண்டுள்ளார்கள் என்பதற்கு உந்தன் பித்தலாட்டங்கள் ஒரு உதாரணம் என்பதை இப்பொழுது கண்டு கொள் ,
உனக்காக எழுதப்பட்ட ஒரு மடல் காதில் போட்டு வாயைஆட்டு வா .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு












































