மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்
Spread the love

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பவர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அதன்படி, மாவட்டத்தில் முதலாவது அரசியல் கட்சி நேற்று நண்பகல் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியே இவ்வாறு வேட்புமனுத் தாக்கல் செய்தது .

இதேவேளை நேற்றைய தினம் வி. லவக்குமார் தலைமையிலான சுயேட்சை குழுவொன்றும் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரி ஜேஜே முரளிதரன் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.