Tag: தீப்பிடித்து
திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ்
திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ்
திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ் ,கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மாதம்பே-கவுடுவாவ பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இன்று (10) காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட பஸ்ஸில் சம்பவம் இடம்பெற்ற போது சுமார் 50 பயணிகள் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பஸ் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்
திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்
திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்,பாதுக்கை மஹிங்கல, பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டியும் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன.
ஹொரணை மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் சென்ற போதிலும் வாகனங்கள் இரண்டும் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்தே காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏலத் தோட்டத்தில் அமைந்துள்ள இந்த நிலத்துக்குள் யாரும் நுழைய முடியாது என்றும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த வாகனங்களுக்கு யாராவது தீ வைத்தனரா அல்லது ஒரு வாகனம் தீப்பிடித்ததால் மற்றைய வாகனமும் தீப்பிடித்து எரிந்ததா? என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்














