Category: இந்தியா செய்திகள்
இந்தியா செய்திகள்,இந்தியா நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் தமிழக செய்திகள் யாவும் , பாரத தேசத்தின் ,பர பரப்பு ஊடகங்களில் வெளியாகி வருகிறது
ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை
ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை
இந்தியா பிகார் மாநிலத்தில் ஒன்பது பேரை கொன்று திணற புலியை போலீசார் சுட்டு கொன்றுள்ளனர் .
மக்களினால் வழங்க பட்ட தகவல்களுக்கு அமைய, இருநூறு காவல்துறையினர் ,தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் .
இதன் பொழுது காட்டுக்குள் பதுங்கி இருந்த ,புலி சுட்டு கொலை செய்ய பட்டுள்ளது .
இந்த புலி கொலை செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

உணவில் நச்சு தன்மை 50 பேர் மருத்துவ மனையில் அனுமதி
உணவில் நச்சு தன்மை 50 பேர் மருத்துவ மனையில் அனுமதி
தமிழகம் காஞ்சி புரம் ம் அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வரும் பணியாளர்கள் நேற்று இரவு ,அங்குள்ள உணவகத்தில் உணவு அருந்தினர் .
அந்த உணவகத்தில் உணவு அருந்திய ஊழியர்களில் 55 பேர் மயக்கம் ,மற்றும் வாந்தி ,தலை சுற்றுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .
குறித்த தனியார் நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் வழங்க பட்ட உணவு ,நச்சு தன்மை அடைந்த நிலையில் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்

- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

கடைக்குள் புகுந்த பேரூந்து தப்பிய மாணவர்கள்
கடைக்குள் புகுந்த பேரூந்து தப்பிய மாணவர்கள்
இந்தியா தமிழகம் சங்ககிரி அருகே பயணித்த பள்ளி பேரூந்து ஒன்று ,அருகே இருந்த பேக்கரிக்குள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பள்ளி மாணவர்களை ஏற்றிய படி பயணித்த பேருந்து ,முடக்கு ஒன்றில் திரும்பும் பொழுது ,எதிரே பயணித்த லொறியுடன் மோதி விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது லொறியினால் பேரூந்து இழுத்து செல்ல பட்டு ,பேக்கரி கடைக்குள் நுழைந்தது .
கடைக்குள் புகுந்த பேரூந்து தப்பிய மாணவர்கள்
இதன் பொழுது கடை மற்றும் பேரூந்து சேதமானது .எனினும் பேரூந்தில் பயணித்த மாணவர் உயிர் ஆபத்தின்றி தப்பித்து கொண்டனர் .
மேற்படி பேரூந்து கடைக்குள் புகுந்த காட்சிகள், வைரலாகிய வண்ணம் உள்ளது .
குறித்த பேரூந்து விபத்து தொடர்பில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
லொறி மற்றும் பேரூந்து சாரதிகள் காயமடைந்த நிலையில் ,மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்

- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்களை சிறை பிடித்த சிங்கள கடல் படை
இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்களை சிறை பிடித்த சிங்கள கடல் படை
இந்தியா கச்சத்தீவு கடல் பரப்புக்குள் உள்ளே உள்ள எல்லையில் ,மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த, இந்திய மீனவர் படகை ,அத்துமீறி நுழைந்த சிங்கள கடல் படை சிறை பிடித்துள்ளது .
இந்தியா கடற்படைக்கு தகவல் வழங்க பட்டதை அடுத்து ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இந்திய கடல் படையினர் விசாரணைகளை நடத்தினர் .
அதன் பின்னர் குறித்த காங்கேயன் என்ற மீன்பிடி படகுடன் ,அதில் பயணித்தவர்கள் விடுவிக்க பட்டனர் .
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக,இந்தியா செயல் படும் என அறிவித்தது .
அதன் பின்னர் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பில் விலகி இருந்த மறு நாள் ,இந்த அத்து மீறலை சிங்கள கடற்படை மேற்கொண்டுள்ளது குறிப்பிட தக்கது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு
பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு
பெரியார் உணவகங்களை திறந்து இலவசமாக மக்களுக்கு சாப்பாடு வழங்க உள்ளோம் என ,உதயநிதி அறிவித்துள்ளார் .
நிகழ்வு ஒன்றில் பேசும் பொழுது ,அம்மா உணவகங்களை மூடாமல் ,அதற்கு பதிலாக பெரியார் உணவகங்களை திறந்து , இலவசமாக உணவு வழங்குவோம் என உதயநிதி அறிவித்துளளார் .
ஆளும் தமிழக அரசு எதிரிகளை நேரடியாக பந்தாடுவதை தவிர்த்து ,நாகரிக அரசியலுக்குள் பயணிக்கும் நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளதை ,சமீபகால தமிழக அரசின் செயல் ஊடாக அவதானிக்க முடிகிறது .
பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு
வன்முறை தோய்ந்த வன்ம அரசியல் நகர்வுகள் தொடர்கின்ற வேளையில் ,திடிரென நவ நாகரீக பண்பியல் அரசியலுக்கு திராவிட முன்னேற்ற கழகம் நுழைந்து பயணிப்பது கவலையை ஏற்படுத்துகிறது .
தவிர இது மக்கள் மத்தியில் ஒருவித புதிய எழுச்சியையும் ஏற்படுத்தி வருகிறது .
கருணாநிதி மறைவின் பின்னர் ,திமுக ஸ்டாலின் தலைமையில் ,அங்கம் வகிக்கும் அரசியல் நகர்வு, சற்று மாறுபட்ட கோணத்தில் ,மக்களை அணுகி செல்வதாக தோற்ற பாடு நிலவுகிறது .
இது ஆரோக்கிய அரசியலுக்கு தேவையான, சூழல் நிறைந்த ஒன்றாகவும் ,ஒற்றுமை பேணும் நிலையாகவும் காணப்படுகிறது .
பெரியார் உணவகங்கள் திறந்து இலவசமகா உணவு வழங்குவோம், என்கினற உதயநிதி பேச்சு ,வைரலாகிய வண்ணம் உள்ளது .
கடலில் மிதந்த கஞ்சா பொதிகள்
கடலில் மிதந்த கஞ்சா பொதிகள்
தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் தீடை கடல் பகுதியில் நேற்று முன்தினம் (26) மாலை இந்திய கடலோர காவல்
படையின் ரோந்து கப்பலான ஹோவர் கிராப்ட் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சாக்கு முடை கடலில் மிதந்து வந்துள்ளது.
இதையடுத்து கடலோர காவல் படையினர் மிதந்து வந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்துப் பார்த்ததில் அதில் கஞ்சா பொதிகள் இருந்தமை தெரியவந்தது.
இதையடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள், சுமார் 50 கிலோகிராம் என்றும் இது எப்படி கடலில் மிதந்து வந்தது, யாரேனும் கடத்தல் காரர்கள்
ரோந்து கப்பலை கண்டதும் கடலில் போட்டுவிட்டு தப்பிச் சென்றார்களா என்ற கோணத்தில்,
இந்திய கடலோர காவல் படையினர் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண்
இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண்
india ;இந்தியாவில் 24 வயதுடைய Kshama Bindu என்ற இளம் பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ள விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இயல்பாக திருமணம் என்றால் ஆண் பெண் இணைவது திருமணமாகும் .
அது கடந்து ஓரினத் திருமணம் பெண்ணும் பெண்ணும் அல்லது ஆணும் ஆணும் செய்து கொள்ளவர்கள் .
பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது
பள்ளி மாணவனை அழைத்து சென்று ரகசிய திருமணம் செய்த ஆசிரியை
ஆனால் இங்கே யாவற்றுக்கும் முரணாக தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளாராம் இந்த பெண் .

இது என்னங்கடா என்று நீங்கள் மட்டும் அல்ல இந்த உலகமே விசித்திரமாக பார்க்கிறது .
இந்த பெண் திருமணத்தை கேள்வியுற்ற நெட்டிசன்கள் கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர் .
என்னத்த சொல்ல எல்லாம் தனிமனித சுதந்திரம் சாமிகளா .கேள்வி கேட்கப்படாது
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்
நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி
நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி
கொட்டல் ஒன்றில் நடிகரொருவருடன் நடிகை தங்கி இருந்ததை அறிந்த மனைவி நடிகையை இருப்பால் அடித்த காட்சிகள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
படங்களில் நடத்திட நடிகர் மாருடன் இவ்வாறு நடிகைகள் தங்குவது இயல்பான ஒன்றாக திரையுலகில் இடம்பெற்று வருகிறது .
அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .
நடிகருடன் நடிகை கொட்டலில் தங்கிய விவகாரமும் மனைவி செருப்பால் அடிக்க வந்த செயலும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதெல்லாம் சினிமாவில் சகாயமப்பா .
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இந்தியா ;மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார்.
வயது 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில்
தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில்,
ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி நடிகை மீனா கணவர் வித்யாசாகர் நேற்று (28.06.2022) உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி, நாசர், மன்சூர் அலிகான், நடிகைகள் சினேகா,
சங்கீதா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல திரையுலகினர் நேரில் சென்று வித்யாசாகர்
உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு
எடுத்துச்செல்லப்பட்டது. ஊர்வலம் மின்மயானத்தை அடைந்ததும் அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
அவருடைய மனைவி மீனா இறுதி சடங்குகளை செய்தார். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பீகாரில் கலவரம் பேரூந்து எரிப்பு
பீகாரில் கலவரம் பேரூந்து எரிப்பு
இந்திய செய்திகள்.எதிரி செய்திகள் .
மத்திய பிரதேச பீகாரில் இடம்பெற்று வரும் கலவரத்தில் ,போராட்ட காரர்களினால் பேரூந்துகள் தீ வைத்து எரிக்க பட்டுள்ளன.
தொடரும் இந்த கலவரம் பேரூந்து எரிப்பை அடுத்து ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.
பீகாரில் தொடரும் கலவரம் வன்முறை மேற்கொண்ட 199 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .அரச மற்றும் மக்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களே இதுவரை கைது செய்ய பட்டுள்ளனர்.
தொடர்ந்து போராட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்திய தம்பதிகள் குளிரில் சிக்கி மரணம்
கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்திய தம்பதிகள் குளிரில் சிக்கி மரணம்
கனடா நாட்டுக்கு அதன் எல்லையோரமாக கால் நடையாக நுழைய முயன்ற இந்திய
தம்பதிகள் குளிரில் நடுங்கி இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
39 மற்றும் 37 வயதுடைய தம்பதிகள் மற்றும் 11 வயது உள்ளிட்ட இரண்டு சிறுமிகள் அடங்கலாக நால்வர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
அதிக சினோ கொண்ட நாடுகளை அடையாளம் காணாது இலங்கை இந்தியாவின்
வெப்ப நிலையை கருத்தில் கொண்டு ஆசிய நாட்டவர் நுழைவதால் ,ஆளை கொள்ளும்
குளிரில் சிக்கி இறந்து வருகின்றமை கண்ணீர் கதையயாக தொடர்கின்றமை குறிப்பிட தக்கது
13 மக்களை சுட்டு கொன்ற இந்திய இராணுவம் – வாகனங்கள் எரிப்பு
13 மக்களை சுட்டு கொன்ற இந்திய இராணுவம் – வாகனங்கள் எரிப்பு
இந்தியா நாகலாந்தில் போராட்டக்காரர்களை இலக்கு வைத்து இந்தியாஇராணுவம் சூட்டு தாக்குதலை நடத்தியது
இதன் பொழுது 13 அப்பாவி மக்கள் பலியாகினர் , மேலும் பலர் காயமடைந்துள்ளனர் ,அரச
மற்றும் இராணுவ வாகனங்கள் என்பனவும் தீ வைத்து எரிக்க பட்டுள்ளன
தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது
இந்தியா இராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பலத்த கண்டனம் எழுந்துள்ளது
அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா
அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா
இந்தியா கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் பாடசாலையில் கல்வி கற்று வந்த 13 மாணவர்களுக்கு
புதிய கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு அடையளம் காணப்பட்டவர்கள் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
மக்களை தொடர்ந்து சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிந்து கொள்ளும் படி வலியுறுத்த பட்டு வருகிறது
வெள்ளத்தில் சிக்கி 34 பேர் மரணம்
வெள்ளத்தில் சிக்கி 34 பேர் மரணம்
இந்திய ஆந்திர பகுதியில் பொழிந்து வரும் கன மழையில் சிக்கி
இதுவரை முப்பத்தி நான்கு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்
1,05,000 கன அடி வெள்ளம்- 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை
1,05,000 கன அடி வெள்ளம்- 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை
பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது ஆற்றினை கடக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
100 ஆண்டுக்கு பின் வாலாஜா பாலாற்றில் 1,05,000 கன அடி வெள்ளம்- 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை
வாலாஜா பாலாற்றில் சீறிப்பாய்ந்து செல்லும் 1,05,000 கனஅடி வெள்ளம்
:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு நீர்வரத்து 1,05,000 கனஅடியாக உயர்ந்துள்ளதால் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதனால் பாலாற்றின் கரையோரங்களில் உள்ள 30க்கும் அதிகமான கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் கனமழை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத வகையில் சுமார் 100 வருடங்களுக்கு பின்பு வாலாஜா அணைக்கட்டு தடுப்பணைக்கு பொன்னை
மற்றும் பாலாற்றிலிருந்து நீர்வரத்து அதிகரித்து தற்போது தடுப்பணைக்கு 1,05,000 கன அடி நீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் உள்ள சாதம்பாக்கம், திருமலைச்சேரி, பூண்டி, சுமைதாங்கி உள்ளிட்ட 30-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது, ஆற்றினை கடக்க முயற்சி
செய்ய வேண்டாம் எனவும் தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று வருவாய்த்துறை
அதிகாரிகள் பொதுமக்களை மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
வாலாஜா அடுத்த சாதிக்பாட்சா நகர் பாலாற்றை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை பாலாற்று வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளில் வசித்து வந்த 1200-
க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாலாறு அணைக்கட்டில் அதிகாலை 3 மணியளவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இத்தாலி பிரதமருடன் மோடி சந்திப்பு
இத்தாலி பிரதமருடன் மோடி சந்திப்பு
இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் மோடி ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும்கமிஷன் தலைவர்களையும் சந்தித்தார்.
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில்
ரோம் நகரில் 2 நாட்கள் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
மேலும், இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலக தலைவர்கள் மாநாடு வரும் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடக்கிறது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பின்பேரில் இந்த மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று தனி விமானத்தில் இத்தாலி
புறப்பட்டு தலைநகர் ரோம் சென்றடைந்தார். ரோம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பயணத்தில் நேபாளம், இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளில் புதிதாக பொறுப்பேற்ற
பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் பருவநிலை மாறுபாடு உச்சிமாநாட்டிலும் பங்கேற்கிறார்.
ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்
ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்
ஆர்யன் கானின் ஜாமீன் மனுக்கள் கீழ் நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
போதைப் பொருள் வழக்கு- ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்
ஆர்யன் கான்
சொகுசு கப்பலில் போதை விருந்து தொடர்பாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்,
அர்பாஸ் மெர்சன்ட், முன்முன் தமேச்சா உள்ளிட்ட சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் ஜாமீன் வழங்கக் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதேபோல் அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆர்யன் கான் சார்பில் முகுல் ரோகத்கி, முன்முன் தமேச்சா சார்பில் அலி காஷிப் கான் தேஷ்முக், அர்பாஸ் மெர்ச்சன்ட் சார்பில் அமித் தேசாய் ஆகியோர் வாதாடினர்.
மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஆர்யன் கானுக்கு இன்று ஜாமீன் வழங்கி
மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா கியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்தியாவின் 5,000 km செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவின் 5,000 km செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியா தனது பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை
சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5
ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக
ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி
அழிக்கும் திறன்கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாக தெரிவிhttp://ethirinews.com/க்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்… ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நமீபியா
தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்-ஸ்டாலின் அறிவிப்பு
தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்-ஸ்டாலின் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து
காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பட்டாசுக்கடை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
மு.க. ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் உள்ள பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில்
ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து
மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில்
இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் #CMRF நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’’ எனப்பதிவிட்டுள்ளார்
இந்தியா செல்லும் பிரிட்டன் மக்கள் 10 நாள் தனிமை – அதிரடி அறிவிப்பு
இந்தியா செல்லும் பிரிட்டன் மக்கள் 10 நாள் தனிமை – அதிரடி அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் விவகாரத்தில் இங்கிலாந்து முடிவுக்கு, இந்திய அரசு பரஸ்பர நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டினர் 10 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்: இந்தியா பரஸ்பர நடவடிக்கை எனத் தகவல்
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து
வருகிறது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்து நிறுவனம் கண்டுபிடித்தது. ஆனால் இந்தியாவில் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு நபர்கள் இங்கிலாந்து வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் தொழில் அதிபர்கள், மாணவர்களுக்கு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து இந்திய அரசு பலமுறை இங்கிலாந்திடம் பேசி பார்த்தது. ஆனால், இங்கிலாந்து அரசு இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டினர் இந்தியாவுக்கு வந்தால் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பரஸ்பர நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடைமுறை அக்டோபர் 4-ந்தேதியில் இருந்து அமலுக்கு வர இருப்பதாக தெரிகிறது.











