கடைக்குள் புகுந்த பேரூந்து இந்தியாவில் நடந்த பயங்கரம்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

கடைக்குள் புகுந்த பேரூந்து தப்பிய மாணவர்கள்

கடைக்குள் புகுந்த பேரூந்து தப்பிய மாணவர்கள்

இந்தியா தமிழகம் சங்ககிரி அருகே பயணித்த பள்ளி பேரூந்து ஒன்று ,அருகே இருந்த பேக்கரிக்குள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பள்ளி மாணவர்களை ஏற்றிய படி பயணித்த பேருந்து ,முடக்கு ஒன்றில் திரும்பும் பொழுது ,எதிரே பயணித்த லொறியுடன் மோதி விபத்தில் சிக்கியது .

இதன் பொழுது லொறியினால் பேரூந்து இழுத்து செல்ல பட்டு ,பேக்கரி கடைக்குள் நுழைந்தது .

கடைக்குள் புகுந்த பேரூந்து தப்பிய மாணவர்கள்

இதன் பொழுது கடை மற்றும் பேரூந்து சேதமானது .எனினும் பேரூந்தில் பயணித்த மாணவர் உயிர் ஆபத்தின்றி தப்பித்து கொண்டனர் .

மேற்படி பேரூந்து கடைக்குள் புகுந்த காட்சிகள், வைரலாகிய வண்ணம் உள்ளது .

குறித்த பேரூந்து விபத்து தொடர்பில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

லொறி மற்றும் பேரூந்து சாரதிகள் காயமடைந்த நிலையில் ,மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .