Author: நலன் விரும்பி
பாடசாலைகள் மீண்டும் 25 ஆம் திகதி ஆரம்பம் – வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த திட்டம்
பாடசாலைகள் மீண்டும் 25 ஆம் திகதி ஆரம்பம் – வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த திட்டம்
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைவாக வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலிருந்து அல்லது இணையவழி கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி முதல் அது தொடர்பான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன், முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது.
அதேநேரம், திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வாராந்தம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 தினங்களில் மாத்திரம் பாடசாலைகளை நடத்துவதற்கு தீ ர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நடத்தப்படாத புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பததில்
கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ
கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ
கனடா ரொராண்டோ பகுதியில் உள்ள வாகன நெரிசல் கொண்ட சாலை ஒன்றில் கம்பியால் கார் சாரதியை தாக்க சென்ற தமிழர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காணொளியில் உள்ளவர் இலங்கை தமிழர் என நம்ப படுகிறது .தனது காருக்குள் இருந்து யக்கை தூக்கி சென்று சாரதியை தாக்கிட செல்லும் இவரது ரவுடி தனத்தை 8,407,062 views மக்கள் பார்வை இட்டுள்ளனர்.
தற்போது வரை இந்த காணொளி வைரலாகிய வண்ணம் உள்ளது 8.44 நிமிடத்தில் இருந்து பார்க்கவும் ..
கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ
காரில் உள்ள கமராவில் இவரது வன்முறை தோய்ந்த மிரட்டல் சம்பவங்கள் யாவும் ஆதாரமாக பதிவாகி கொண்டுள்ளது என்பதை அறியாத இவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் .
கனடா quebec வேகா வீதியில் தரை இறங்கிய விமானம்
வந்த நாடுகளில் அதன் விதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதை விடுத்து இலங்கையை போல எண்ணி இந்த நாடுகளில் இவ்விதம் செயல் படும் அநாகரிக செயல் பாடுகள் ஒட்டு மொத்த இலங்கை வாழ் தமிழர்களுக்கு அவப்பெயரை உருவாக்கி விடுகிறது .
கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் ,மக்கள் கருத்தில் இவரை கழுவி ஊற்றியுள்ளனர் .
இப்பொழுது வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் இந்த காணொளியை குறித்த நபர் பார்க்கும் பொழுது தனது தவறு என்ன என்பதை அவரே புரிந்து கொள்வார் .தவிர அவரது நண்பர்களும் இதனை கண்டு தெளிவார்களாக .
ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு
ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு
இலங்கை ,கொழும்பு ; இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு வாக்களித்த 134 பேரையும் வீட்டுக்கு அனுப்புவோம் என போராட்ட காரர்கள் தெரிவித்துள்ளனர் .
மக்கள் விரோதி மற்றும் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க மகிந்தாவினால் நியமிக்க பட்ட ரணில் விக்கிரமசிங்க முப்பது நாளுக்குள் வீட்டுக்கு செல்வார் என போராட்ட கார்கள் தெரிவித்துள்ளனர் .
மேலும் ரணில் விக்கிரமசிங்காவிற்கு வாக்களித்த 134 பேரையும் மக்கள் கவனித்து கொள்வார்கள் என்கின்றனர்.
எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி குத்துக்கரணம்
அவ்வாறு எனினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் உள்ளிட்ட 134 எம்பிக்கள் வீடுகள் போராட்ட காரர்களினால் முற்றுகையிட பட போகிறது .
மேலும் இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விட்டார்.
நீங்கள் உங்கள் வேலைகளை பாருங்கள் என போராட்டக்கார்களை பார்த்து மகிந்த ராஜபக்ச கேவலமாக கூறிய வார்த்தை. போராட்ட கார்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.
ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு
வரும் வாரம் அளவில் போராட்டம் மீளவும் உக்கிரம் பெறும் என எதிர் பார்க்க படுகிறது .
மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பவர்களை குறிவைத்து கைது செய்யும் நகர்வில் ரணில் உத்தரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
போராட்டக்காரர்கள் கூறுவது போன்று மீளவும் நாடு முடக்க பட்டால்
இலங்கை வரலாற்றில் குறைந்த நாட்கள் ஜனாதிபதியாக அங்கம் வகித்த பெருமை ரணிலுக்கு சாரும் என்பதை அடித்து கூறலாம் .
சிக்கிய 125 கிலோ போதைவஸ்து அதிர்ச்சியில் பொலிஸ்
சிக்கிய 125 கிலோ போதைவஸ்து அதிர்ச்சியில் பொலிஸ்
பிரிட்டன் ; பிரிட்டனில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு டீசல் ஜெனரேட்டர் இயந்திரம் ஒன்றுக்குள் மறைத்து வைக்க பட்ட நிலையில் கடத்தி செல்ல பட்ட 125 கிலோ போதைவஸ்து சுங்கப்பிரிவினரிடம் சிக்கியது .
பிரிட்டனில் இருந்து மிக லாவகமாக அனுப்பி வைக்க பட்ட இந்த போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு பிரிட்டன் அதிகாரிகளை மிரள வைத்துள்ளது.
லண்டன் புறநகர் பகுதிகளில் இயங்கி வந்த மூன்று இயந்திர தொழில்துறை நிறுவனங்களும் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டது.
சிக்கிய 125 கிலோ போதைவஸ்து அதிர்ச்சியில் பொலிஸ்
அப்பொழுது இதேபோல இயந்திரம் ஒன்று தயாரான நிலையில் வைக்க பட்டதும் அதற்குள் இருந்தும் போதைவஸ்து மற்றும் கஞ்சா என்பனவும் மீட்க பட்டன.
போதைவஸ்து கடத்திய நீர்மூழ்கி கப்பல்கள் துரத்தி பிடித்த கடற்படை
போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறை பிடிப்பு
மேலும் பொலிசார் நடத்திய சோதனையில் திருட பட்ட நகைகள் மற்றும் வாகனங்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளது.
கைதான போதைவஸ்து கடத்தல் காரர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு
ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பாரளுமன்றினால் நியமிக்க பட்டுள்ள ரணில் விக்கிரசிங்கா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்க தயாராகிறது .
நரி ரணில் குட்டையை குழப்பி மீனை பிடித்து ஆட்சியில் ஏறி அமர்ந்தார் .அதே குட்டையை மீள குழப்பிட மக்கள் போராட்டம் தயாராகி வருகிறது.
இரும்பு கரம் கொண்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதி மாளிகைகள் என்பன பாதுகாப்பு இறுக்கம் மேற்கொள்ள பட்டுள்ளது .
ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு
கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார்
இருந்த பொழுதும் இந்த இராணுவ தடைகளை உடைத்து மக்கள் போராட்டம் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.
ரணில் ஜனாதிபதி என்ற அறிவிப்பு போராட்ட காரர்கள் மத்தியில் கொதிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது .
பொம்மை ரணில் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதில் தனது நாட்களை கழிப்பார் என்கின்ற நிலையில் மக்கள் போராட்டம் மீள வெடிக்க தயாராகி வருகிறது.
இவ்வாறு ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தால் இலங்கையில் குறுகிய நாட்கள் ஜனாதிபதியாக அங்கம் வகித்தவர் என்ற பெருமையை ரணில் தட்டி செல்வர் என்பதாகும்.
இவ்வாறு எனினும் 18 மதங்களில் ரணில் ஆட்சி கவிழ்க்க படும் நிலையே உள்ளது.
இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்
இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்
இலங்கை . கொழும்பு ; இலங்கையின் புதிய ஜனாதிபதியின் கீழ் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் இனவாதியுமான தினேஷ் குணவர்தன இலங்கை பிரதமராக நியமிக்க படவுள்ளார்.
ரணில் ஆட்சியின் கீழ் தினேஸ்குணவர்தன பிரதமராக பொறுப்பு வகிக்க உள்ளார் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
யார் பிரதமராக வந்தாலும் தமிழருக்கு பயனில்லை சுமந்திரன் கூவல்
இதன் பின்புலம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது நமது கணிப்பு.
நாடாளும் புதிய அரசின் நாடகம் அரங்கேற்றம் நடக்கிறது .மக்கள் புரட்சி வெடிக்க தயராகிறது .
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக உடைந்து வாக்களித்த கோலம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக உடைந்து வாக்களித்த கோலம்
இலங்கை பாராளுமன்றில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார் .இவரது வெற்றி முதலே தீர்மானிக்க பட்ட ஒன்று என்பதை இன்றைய நிகழ்வு எடுத்து காட்டியுள்ளது .
மொட்டு கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியான ரணில் தனது அரசியல் விளையாட்டை எதிர்காலத்தில் தொடருவாரா என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .
தான் நாட்டின் ஜனாதிபதியான நிலையில் தனது பாராளுமன்ற பேச்சை சுருக்கி கொண்ட ரணில் தந்திர நகர்வு ஆரம்பிக்க பட்டு விட்டதை எடுத்து காட்டியது .
ரணிலை ஆதரிக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது என்கின்ற வாதம் போலியானது என வெளிப்படுத்த பட்டது .
தமிழ் தேசிய கூட்டமைப்பை சஜித் மற்றும் அழகப்பெரும ஆகியோர் சந்தித்து உரையாடினர்.
அதில் சஜித் பக்கம் வாக்கு அளிக்க உள்ளவர்களும் அதேபோல மொட்டு கட்சியின் பக்கம் உள்ள உறுப்பினர்கள் விபரமும் வெளியானது.
ஊடக நபர் ஒருவர் பிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் காட்சி படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
அதனை இந்த காட்சியில் நீங்கள் கண்டு கொள்ள முடியும் .தள்ளாடும் சம்பந்தர் அரசியல் சித்து விளையாட்டு மக்களே இதில் தெரிகிறது அல்லவா .
இருவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து வாக்களித்து வாக்கு சிதறலை மேற்கொண்டுள்ளது படத்தை உற்று கவனியுங்கள் .
ரணில் ஜனாதிபதியானார் பாராளுமன்றில் வாக்கெடுப்பில் வெற்றி
ரணில் ஜனாதிபதியானார் பாராளுமன்றில் வாக்கெடுப்பில் வெற்றி
இலங்கை பாரளுமன்றின் இடம்பெற்ற தேர்தல் மூலம் ரணில்விக்கிரமசிங்க
134 அதிக வாக்குகளை பெற்று இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
டலஸ் அழக பெருமா 82 மற்றும் அனுரகுமார திசாநாயக்க 3 வாக்குகளை பெற்றுள்ளனர்
ரணில் போட்டு கொடுத்த திட்டமிடல்கள் அடிப்படையில் இந்த பொம்மை வாக்கெடுப்பு இடம்பெற்று நரி ரணில்விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார் .
திட்டமிட்ட படியே மகிந்தா கட்சியின் மகத்தான ஆதரவுடன் ரணில் விக்கிரசிங்க மகத்தான வெற்றியை பெற்றுள்ளார்.
அளிக்கப்படாதா வாக்குகளாக இரண்டு உள்ளன -மேலும் நிராகரிக்க பட்ட வாக்குகளாக நான்கு பதிவாகியுள்ளன .
பாராளுமன்றில் ஜனாதிபதி தெரிவு நாடகம் முடிவுக்கு வந்தது .
கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார் கணிப்பு சரியானது
வாக்கெடுப்பை சுற்றி மகிந்தா குழு டக்கிளஸ் பேச்சு
வாக்கெடுப்பை சுற்றி மகிந்தா குழு டக்கிளஸ் பேச்சு
பாரளுமன்றில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
இவ்வேளை மகிந்த அணியினர் வாக்கு பெட்டி அருகில் மிரட்டும் தொனியில் உள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.
மகிந்த ராஜபக்ச வாக்கு என்கின்றவர்களை தமக்கு சாதகமாக செயல்படுமாறு வேண்டுகின்ற சைகைகள் வழங்குவதை போன்ற தோற்றம் இந்த காட்சிகள் ஊடக காண முடிகிறது.
மகிந்த அணியினர் தமக்கு அதிக வெற்றிவாய்ப்பு என்கின்ற விதத்திலும் தமது ஆதரவு நபரே ஜனாதிபதியாவர் என்கின்ற நிலையிலும் உள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர் பார்க்க படுகிறது.
நான்கு வாக்கெடுப்புக்கள் செல்லுபடியற்றதாக மாற்றம்
நான்கு வாக்கெடுப்புக்கள் செல்லுபடியற்றதாக மாற்றம்
இலங்கை பாரளுமன்றில் இடம்பெற்று வரும் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில்
இதுவரை மூன்று வாக்குகள் செல்லுபடியற்றதாக இடம்பெற்றுள்ளது.
இந்த செல்லுபடியற்ற வாக்குகளை யார் பதிவு செய்தார்கள் என்பது தெரியவில்லை ,தொடர்ந்து வாக்குகள் எண்ண பட்டு கொண்டுள்ளன
பாராளுமன்றம் தற்போது பரபரப்பில் உறைந்துள்ளது.
இரு காயேந்திரனும் வாக்கெடுப்பை புறக்கணிப்பு
இரு காயேந்திரனும் வாக்கெடுப்பை புறக்கணிப்பு
இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு பாராளுமன்றில் இடம்பெற்ற வண்னம் உள்ளது .
இவ்வேளை இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது செல்வராசா காயே ந்திரன் மற்றும் காயேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்
இவ்வாறு இவர்கள் புறக்கணிப்பு செய்திடும் நிலைக்கு சென்றதன் பின்புலத்தில் பணபெட்டிகள் கைமாறி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கை பாராளுமன்றை சுற்றி கடும் பாதுகாப்பு
இலங்கை பாராளுமன்றை சுற்றி கடும் பாதுகாப்பு
இலங்கை பாராளுமன்றில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
யார் இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற பர பரப்பான நிலை தோற்றம் பெற்று வரும் நிலையில் முன்னால் ஜனாதிபதி மகிந் ராஜபக்ச பதட்டத்தில் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.
இவ்வேளை பாரளுமன்றை சுற்றி இராணுவம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர் ,
தமது ஆதரவு ஜனாதிபதியை தெரிவு செய்வதில் மகிந்த அணியினர் தீவிரமாக உள்ளனர்.
டலஸ் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி நிலைக்குமா ரணில் விடுவாரா
டலஸ் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி நிலைக்குமா ரணில் விடுவாரா
இலங்கை ;இன்று ஆரம்பமாகியது ஒரு ஒருமித்த பயணத்தின் தொடங்கமாகும் எனவும், பாராளுமன்னத்திற்கு அப்பால் மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும்
போராட்டத்திற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தீர்மானித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இத்தருணத்தில் நாட்டு மக்களுக்காக வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர்,இந்நாட்டின் அரசியலுக்கு உண்மையான புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
டலஸ் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி நிலைக்குமா ரணில் விடுவாரா
இந்நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்த வன்னம் பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும்
அமுல்படுத்துவதற்கும், நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அர்ப்பணிப்புடன்
இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,இந்நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஒரே
நோக்கம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
இடைக்கால ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர்
கலந்து கொண்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இடைக்கால ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாளை இடம் பெறுகிறது என்பதோடு,
இதில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன தமது ஆதரவை நாடாளுமன்ற உறுப்பினர்
டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்
அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்
தெற்கு பிரான்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக காடுகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .
இந்த தீயினை கட்டுப்படுத்த 170 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.
தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் அதிக வெப்ப நிலை காணப்படுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
அமெரிக்காவில் எரியும் காடும் 1 200 ஏக்கர் நாசம்
பிரான்ஸ் ஸ்பெயினில் அதிக வெப்பம் திணறும் மக்கள்
வீடுகளில் இருந்து மக்கள் வெளியேயற்ற பட்டுள்ளனர்.
சுற்று சூழலை பாதுகாக்க தவறிய மனிதன் செயல் பாட்டால் தற்போது காடுகள் பற்றி எரியும் நிலைக்கு மாற்ற பட்டுள்ளன.
காடுகள் அழிக்க பட்டு வீடுகள் கட்டப் பட்டதால் பூமி அதிக வெப்பத்தை சந்தித்து வருகிறது.
அதிகூடிய 50c வெப்பம் 250 பேர் மரணம்
சுட்டெரிக்கும் வெயில் கனடாவில் 719 பேர் மரணம்
இயற்கைக்கு எதிராக மனிதன் மாறியதால் அதிக வெப்பம் ஏற்பட்டு அதுவே மக்களை கொலை செய்கின்ற நிலைக்கு தள்ள பட்டுள்ளது.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் அந்த நாடும் மக்களும் செழித்து வாழ்வார்கள் என்கின்ற நிலை எழும்.
அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்
அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்
அமெரிக்காவின் Lieutenant General Michael Kurilla முக்கிய தளபதி ஒருவர் சிரியாவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .
இவரது இந்த பயணம் அதி முக்கியதத்துவம் வாய்ந்த ஒன்றாக கருத படுகிறது.
அமெரிக்கா இராணுவ முகாமில் வெடிப்பு சத்தங்கள்
அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல்
சிரியா மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச படைகள் தாக்குதலை நடத்தி வருகின்ற பொழுதும் ரசியாவின் கடும் எதிர்ப்பினால் அது கை கூடவில்லை .
இவ்வாறான நிலையில் அமெரிக்கா இராணுவ தளபதி திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிது.
அமெரிக்கா இராணுவத்தினர் ரசியாவினால் கைது
போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்
அமெரிக்கா இராணுவ படையணியின் முக்கிய தளபதியின் இந்த பயணத்தின் பின்னர் முக்கிய தாக்குதல் நகர்வுகள் உள்ளடங்கி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ஜனாதிபதி போட்டி சஜித் பிரேமதாசா திடீர் விலகல்
ஜனாதிபதி போட்டி சஜித் பிரேமதாசா திடீர் விலகல்
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச விலகுவதாக அறிவித்துள்ளார் .
புதிய ஜனாதிபதியை தெருவு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல்
பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சஜித் பிரேமதாசாவின் இந்த திடீர் விலகல் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி தெரிவு தொடர்பில் மனோ கணேசன் அறிவிப்பு
கட்சிகளுக்குள் இடம்பெற்ற பேரம் பேச்சுக்களின் பின்னர் இந்த முடிவு எட்ட பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி
பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி
பிரிட்டனில் இன்று திங்கட் கிழமை அதிக வெப்பம் காணப்பட்டது
இந்த வெப்பநிலை 40C ஆக பதிவானது ,இந்த வெப்பம் காரணமாக போக்குவரத்து பாதிக்க பட்டதுடன் பல பகுதிகளில் பாடசாலைகள் அடித்து மூடப்பட்டன.மக்கள் அவதிபட்டனர் .
மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை வெளிப்படுத்த பட்ட நிலையில் வெப்ப பாதிப்பு தவிர்க்க பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை செய்வாய்க் கிழமை இது போன்ற அதிக வெப்ப காலநிலை காணப்படும் என அறிவிக்க பட்டுள்ளது .
நாளைக்கும் இந்த அதிக வெப்ப நிலை ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.
கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து
கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து
சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழனப்படுகொலையாளியுமான கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிராக மலேசியத் தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள்ளனர்.
தலைநகர் கோலாலபம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் பினாங்கு மாநில் துணை முதல்வரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுப் பிரதிநிதியுமாகிய பேரா.இராமசாமி அவர்களது தலைமையில்
அணிதிரண்ட தமிழர்கள், இனப்படுகொலையினை சிங்கப்பூர் வெளியேற்றி சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும் என்ற முழக்கத்தினை எழுப்பினர்.
மலேசியத் தமிழர் அரசியல் பிரதிநிதகளான சதீஸ் முனியாண்டி, டேவிட் மர்செல் உட்பட பல தமிழர் அமைப்பினர் இதில் பங்கெடுத்திருந்தனர்.
சிங்கப்பூர் தூதரைச் சந்தித்து கோரிக்கை மனுவினை கையளித்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிங்கப்பூரில் இருந்து
வெளியேற்றப்பட்டு சர்வதேச நீதிமன்றிடம் இனப்படுகொலையாளியான கோத்தபாயாவை கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையிகை முன்வைத்தனர்.

சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள்,
சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின்
ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையார் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை
இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை
இலங்கை கொழும்பு ; இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்ட பாடு காரணமாக பாடசலைகள் யாவும் எதிர்வரும் 20தம திகதி வரை விடுமுறை விடுக்க பட்டுள்ளது .
அதன் பின்னர் வழமை போன்று அணைத்து பாடசாலைகளும் இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் பாடசாலைகளிற்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து பாதிக்க பட்டமையினாலும் ஆசிரியர்களுக்கு
ஊதியம் வழங்கப்படுவதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்த விடுமுறை விக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கோத்தாவை கைது செய் சட்டத்தின் முன் நிறுத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழுத்தம்
கோத்தாவை கைது செய் சட்டத்தின் முன் நிறுத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழுத்தம்
பிரான்ஸ் ; தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என்ற தொடர்
போராட்டங்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் இடம்பெற இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின்
கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையாhர் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார்.
அந்தவகையில் தற்போது ஒரு நாட்டின் அதிபருக்குரிய இராஜீக வரப்பிரசாதங்கள் ஏதுமன்ற ஓர் சாதாரண பொதுமகனாக சிங்கப்பூரில்
நிற்கின்ற சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவை, சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, மலேசியா என பல்வேறு நாடுகளிலும் உள்ள சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால்
கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற இருப்பதோடு கோரிக்கை மனுவும் கையளிக்கப்படவுள்ளது.
கோத்தபாய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என
ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள்
தெரிவிக்கின்றது. தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான
குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான
குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது. இந்தக் கொள்கை மூன்றாம்
நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது. வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்கு உட்படுத்தவும்,
தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.
இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான
கோத்தபாய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை
நாம் வலுவாக முன்வைக்கின்றோம் என தெரவித்துள்ள நா.தமிழீழ அரசாங்கம்,
தமிழினத்தின் மீது இனப்படுகொலையினை புரிந்தவர்களுக்கு எதிரான உளவியல் யுத்தமாகவும் இது
உள்ளதென அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.












