Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் முஸ்லீம் பள்ளிவாசல் எரிப்பு – பொலிசார் குவிப்பு

அமெரிக்காவில் முஸ்லீம் பள்ளிவாசல் எரிப்பு – பொலிசார் குவிப்பு

அமெரிக்காவில் கொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்

Cape Girardeau, Missouri பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களின் வணக்கத் தளமான பள்ளிவாசலை ,நபர் ஒருவர் தீ வைத்து எரித்துள்ளார்

இந்த தீ வைப்பு சம்பவத்தில் பலமாக மசூதி பாதிக்க பட்டுள்ளது ,
குறித்த

    தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்பு பட்ட நபர் கைது செய்ய பட்டுள்ளார்

    தற்போது ரமளான் நோன்பு காலத்தில் இந்த செயல் இடம் பெற்றுள்ளது

    இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    அமெரிக்காவில் முஸ்லீம்
    அமெரிக்காவில் முஸ்லீம்
        Posted in உலக செய்திகள்

        1,300 கி.மீ. நடந்தே ஊருக்கு வந்த திருக்கோவிலூர் வாலிபர்

        1,300 கி.மீ. நடந்தே ஊருக்கு வந்த திருக்கோவிலூர் வாலிபர்

        மராட்டிய மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திருக்கோவிலூருக்கு 1,300 கி.மீ. நடந்தே வந்த வாலிபரை குடும்பத்தார் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தனர்.

        16 நாளில் 1,300 கி.மீ. நடந்தே ஊருக்கு வந்த திருக்கோவிலூர் வாலிபர்


        முகையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
        திருக்கோவிலூர்:

          கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சு.கொல்லூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர் மராட்டிய

          மாநிலம் உஷா நகரில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக

          அங்கு வேலை இன்றி தவித்தார். உணவும் கிடைக்காததால் சொந்த ஊருக்கு பயணிக்க முடிவு செய்தார். அதன்படி சதீஷ்குமார் கடந்த

          14-ந் தேதி சொந்த ஊருக்கு நடக்க தொடங்கினார். ஐதராபாத், பெங்களூரு வழியாக இரவு-பகல் என பாராமல் நடந்தே வந்தார்.

          அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தன்னார்வலர்கள், போலீசார் உணவு வழங்கினார்கள்.

          நேற்று காலை சதீஷ்குமார் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அதன் பின்னர் அங்கிருந்து திருக்கோவிலூர் நோக்கி நடந்து வந்து

          கொண்டிருந்தார். வரும் வழியில் வெறையூர் போலீசார் சதீஷ் குமாரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

          வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவரை ஊருக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

          இதையடுத்து முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ-.வுக்கு அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொன்முடி பேசியதால் சதீஷ்குமார் விடுவிக்கப்பட்டார்.

          இது குறித்து உடனடியாக செல்போன் மூலம் சதீஷ்குமாரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கொல்லூர் கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெறையூர்

          கிராமத்துக்கு உறவினர்கள் விரைந்தனர். அங்கிருந்த சதீஷ் குமாரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவரை பார்த்ததும்

          குடும்பத்தார் மகிழ்ச்சி அடைந்தனர். இவர் 16 நாட்களில் 1,300 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்ததாக தெரிவித்தார்

          1 300 கி மீ நடந்தே ஊருக்கு
          1 300 கி மீ நடந்தே ஊருக்கு
              Posted in உலக செய்திகள்

              100 சடலத்துடன் வீதியில் நிற்கும் லொறி – அமெரிக்காவில் கொரனோ அவலம் photo

              100 சடலத்துடன் வீதியில் நிற்கும் லொறி – அமெரிக்காவில் கொரனோ அவலம் photo

              அமெரிக்காவில் நாள் தோறும் கொரனோ நோயினால் மக்கள் ஆயிரக்கணக்கில்

              பலியாகி வருவதால் சடலங்களை வைக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது .


              இதனால் குளிரூட்ட பட்ட லொறிகளுக்கு மூடைகள் போல அடுக்கி வைக்க

                பட்ட நிலையில் 100 மனித சடலங்களுடன் லொறிகள் வீதியில் நிறுத்த பட்டுள்ளன

                இதுவரை 12 லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் , 70 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர் ,

                தொடர்ந்து வரும் நாட்களில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது

                100 சடலத்துடன்
                100 சடலத்துடன்
                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் கொரோனா தொற்றுக்கு 649 பாதிப்பு

                இலங்கையில் கொரோனா தொற்றுக்கு 649 பாதிப்பு

                இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரனோ நோயின் தாக்குதலில்

                சிக்கி இதுவரை 649 பேர் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

                மேலும் இதுவரை இந்த நோயில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,
                அது தவிர

                இராணுவத்தில் 250 க்கும் மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,

                மீளவும் ஊரடங்கு நாடு தழுவிய நிலையில் பிறப்பிக்க பட்டுள்ளது ,இந்த

                  நோயானது தற்போது வேகமாக பரவி வருவதால் உயிரிழப்புக்கள் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

                  இலங்கையில் கொரோனா
                  இலங்கையில் கொரோனா
                      Posted in இலங்கை செய்திகள்

                      பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்

                      பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்

                      கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி கற்று வந்த முள்ளியாடியை சேர்ந்த


                      அனோச் எனும் மாணவன் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளார்

                      2109 ஆண்டு கா ,பொ ,சா ,பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில்

                      திடீரென இவர் காணாமல் போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                        உறவினர்கள் வீடுகளிலும் இவரை காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் .


                        மகனை காணாத துயரில் குடும்பத்தினர் கண்ணீரில் தவிக்கின்றனர் .

                        இவரை யாரவது கண்ணுற்றால் அவர்களது குடும்பத்தினருக்கோ ,அல்லது அருகில் உள்ள காவல்துறையினருக்கோ ,


                        அல்லது ஊடகங்களுக்கோ தெரிவிக்குமாறு மன்றாடி வேண்ட படுகிறது

                        பளை மத்திய கல்லூரி
                        பளை மத்திய கல்லூரி
                            Posted in இலங்கை செய்திகள்

                            கரை நகரில் கடலுக்குள் பாய்ந்த பேரூந்து – photo

                            கரை நகரில் கடலுக்குள் பாய்ந்த பேரூந்து – photo

                            இன்று மதியம் இரண்டு மணியளவில் காரைநகர் பகுதியில் அரச பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியது

                            காரை நகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த

                            பேருந்தே சாரதியின் கட்டு பாட்டை இழந்து பாலத்தை உடைத்து கடலுக்குள் பாய்ந்து விபத்தில் சிக்கியது .

                            இதில் டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .
                            பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது

                              யாழ்ப்பாணம் கொழும்பு நோக்கிய பயணத்தில் ஈடுபடும் பெருந்தே இன்று இங்கே விபத்தில் சிக்கியுள்ளது

                              குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்ற்னர்

                                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                  வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்

                                  வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்

                                  இலங்கை மாவெனெல்ல பகுதியில் கணவன் மனவிக்கு இடையில் பலத்த சண்டை மூண்டுள்ளது .


                                  இவ்வேளை மனைவி கணவனுக்கு தொடர்ந்து எதிர் தர்க்கம் புரிந்த வாய் கட்டி

                                  வந்ததால் ஆத்திரமுற்ற கணவன் அவரை சமையலறை கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியும் ,குத்தியும் படுகொலை செய்துள்ளார்

                                  இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி சடலம் மீட்க பட்டு மரண பரி சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

                                  கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்யப் பட்டுளளார்,

                                  மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,இவ்வாறான குற்றங்கள் நாள்தோறும் இலங்கையில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                                  வாய் காட்டிய மனைவியை
                                  வாய் காட்டிய மனைவியை
                                      Posted in உலக செய்திகள்

                                      ஆட்டின் மேலே சவாரி செய்யும் பூனை – வைரலாகும் video

                                      ஆட்டின் மேலே சவாரி செய்யும் பூனை – வைரலாகும் video

                                      பூனை ஒன்றின் சுட்டி செயல் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது ,

                                      ஆட்டின் மேலே பூனை ஒன்று ஏறி சவாரி செய்யும் காட்சி தான் அது .

                                      ஆடோ பூனையை தாக்காமல் விட்டு அப்படியே சுமந்து செல்கிறது
                                      இரண்டு நிமிடம் அடங்கிய இந்த காணொளி ரெம்பவே வைரலாகி வருகிறது

                                      ஆட்டின் மேலே சவாரி
                                      ஆட்டின் மேலே சவாரி
                                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                          பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video

                                          பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video

                                          பிரிட்டனில் பதின் ஐந்து வயது ஆசிய நாட்டு சிறுவன் ஒருவனை காவல்

                                          துறையினர் கைது செய்கின்றனர் ,அப்பொழுது அவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயல்கின்றார்

                                          இவ்வேளை அவரை நிலத்தில் போட்டு கால் ,மற்றும் கைகளினால் சரமரியாக அந்த சிறுவன் உடல் மீது தாக்குகின்றனர்

                                          இந்த சம்பவத்தை படம் பிடித்த நபர் ஒருவர் காட்சியை வெளியிட்ட நிலையில்

                                            ,குறித்த போலீசார் ,மனித உரிமை மீறல் ,மற்றும் பல்வேறு குற்ற சாட்டின்

                                            கீழ் கைது செய்யப் பட்டு விசாரணைக்கு உட்படுத்த படும் நிலைக்கு சென்றுள்ளனர்

                                            காவல் துறையினர் கைது செய்யும் பொழுது இவ்வாறு தாக்குதல் ஆகாது என்பது

                                            ,விதி, தாம் போலீசார் என்ற நிலையில் இவ்விதம் செயல் பட்ட சிலர் ,பின்னாட்களில்

                                            இது போன்ற காணொளிகள் வெளியான நிலையில், அவர்கள் வேலை

                                            பறி போனதுடன் ,சிறையில் வாடிய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளமை குறிப்பிட தக்கது

                                            https://www.youtube.com/watch?v=qUSrB55b5gA
                                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                வடக்கு லண்டனில் பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு – 20 பேர் பாதிப்பு photo

                                                வடக்கு லண்டனில் பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு – 20 பேர் பாதிப்பு photo

                                                வடக்கு லண்டன் Wood Green பகுதியில் உள்ள தொடர் குடியிருப்பு

                                                திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் கூரையில் திடீரென தீ பற்றி கொண்டது ,

                                                சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த 70 தீயணைப்பு வீரர்கள்

                                                ,பலமணித்தியாலம் போராடி தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

                                                இங்கு எழுந்த அதிக புகை காரணமாக இருபது பேர் கடும் மூச்சு திணறலுக்கும்

                                                உள்ளாகினர் ,அவர்களுக்கு ஆம்புலன்சில் வைத்துசிகிச்சை அளிக்க பட்டது


                                                இந்த தீப் பரவலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

                                                போலீசா விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                                                போலீசார் விசாரணைகளைம் மேற் கொண்டு வருகின்றார்

                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                    இரவு 8 மணியிலிருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

                                                    இரவு 8 மணியிலிருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

                                                    கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர

                                                    ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5 .00 மணிக்கு ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

                                                    இந்த மாவட்டங்களில் ,இன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்

                                                      படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திததி வரையில்

                                                      அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

                                                      அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

                                                      இரவு 8 மணியிலிருந்து
                                                      இரவு 8 மணியிலிருந்து
                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          இலங்கையில் 19 பேர் கொரோனாவால் பாதிப்பு

                                                          இலங்கையில் 19 பேர் கொரோனாவால் பாதிப்பு

                                                          இலங்கை நாடு தழுவிய ரீதியில் 19 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                                          அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு

                                                          உள்ளானவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

                                                          இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 136 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்..

                                                          கொரோனா
                                                          கொரோனா
                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              உயித்த ஞாயிறு தாக்குதல் – புதிய தகவல்கள் கண்டறியப்ட்டுள்ளதாக பொலிஸ் தெரிவிப்பு

                                                              உயித்த ஞாயிறு தாக்குதல் – புதிய தகவல்கள் கண்டறியப்ட்டுள்ளதாக பொலிஸ் தெரிவிப்பு

                                                              கடந்த வருடம் இடம்பெற்ற உயித்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சஹரான் புத்தளம்

                                                              பிரதேசத்தில் சில குழுக்களுக்கு ஆயுத பயிற்சிகளும், கருத்தரங்குகளையும் நடத்தியிருப்பதாக பொலிஸ்

                                                              ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

                                                              அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கடந்த வருடம் இடம்பெற்ற உயித்த ஞாயிறுயன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்

                                                                குறித்த விசாரனைகளில் தற்போதைய நிலைமை குறித்து விபரித்த அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புதிய தளத்திற்கு வந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்..


                                                                திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்ட இடம் ஒன்று, ஒரு வருடத்துக்கு பின்னர் கண்டறியப்பட்டுள்ளது. புத்தளத்தை மையப்படுத்தி இயங்கிய அமைப்பொன்று தொடர்பில் தகவல்கள் கிடைத்துளள்ன.

                                                                குறித்த அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, அந்த இடத்தில் அடிப்படைவாத நடவடிக்கைகளுக்குள் அவர்களை ஈடுபடுத்தும் விதமான போதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.

                                                                உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரானும் குண்டுத் தாக்குதலை நடாத்திய மேலும்

                                                                சில குண்டுதாரிகளும் அவர்களுக்கான அடிப்படைவாத போதனைகளை மேற்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

                                                                தோப்பூர் பகுதி ஆயுத பயிற்சி முகாமில் துப்பாக்கி செயன்முறை பயிற்சி ஊடாக போதிக்கப்பட்டுள்ளதாகவும், புத்தளம் பகுதியில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ள சிலருக்கு பலஸ்தீன் – இஸ்ரேல் யுத்த

                                                                காட்சிகள், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்கள் உள்ளிட்ட விடயங்கள் வீடியோ வடிவில் காண்பிக்கப்பட்டும் அடிப்படைவாத சிந்தனை

                                                                தூபமிடப்பட்டுள்ளதாகவும் இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

                                                                தற்போது தடுப்புக்காவலில் உள்ள அராபி பாடவாலையில் தங்கியிருந்த 14 வயதான மத்ரஸ மாணவன் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இந்த

                                                                மாணவன் உள்ளிட்ட சந்தேக நபர்களை இந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது மாணவன் பயிற்சி வழங்க்கப்பட்ட இடத்தை காட்டியுள்ளார். ஆனால் அங்கு தற்போது புதிதாக

                                                                கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதினால் இதனை உறுதி செய்வதில் பிரச்சினையிருப்பதாகவும் பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

                                                                உயித்த ஞாயிறு தாக்குதல்
                                                                உயித்த ஞாயிறு தாக்குதல்
                                                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                    பிரிட்டனில் கொரனோ வைரசால் 26,000 பேர் பலி

                                                                    பிரிட்டனில் கொரனோ வைரசால் 26,000 பேர் பலி

                                                                    பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை

                                                                    இருபத்தி ஆறாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மருத்துவமனை மற்றும் ,

                                                                    அதற்கு வெளியில் தங்கி இருந்து பலியானவர்கள் புள்ளி விபரம் வெளியிட பட்டது

                                                                      மருத்துவ மனைக்கு வெளியில் 6,500 பேர் பலியாகியுள்ளனர் ,தொடர்ந்து

                                                                      பிரிட்டனில் வழமைக்கு அதிகாமாக உயிர் பலிகள் அதிகரித்து செல்கிறது ,

                                                                      மே மாத இறுதிக்குள் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கும்
                                                                      எனவும்

                                                                      ஐம்பதாயிரத்தை பலி எண்ணிக்கை நெருங்கும் என நிபுணர்கள் கருத் துரைத்துள்ளனர்

                                                                      பிரிட்டனில் கொரனோ வைரசால்
                                                                      பிரிட்டனில் கொரனோ வைரசால்
                                                                          Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                                                                          காணாமல் போன கனடா இராணுவ உலங்குவானூர்தி – தேடும் கடற்படை

                                                                          காணாமல் போன கனடா இராணுவ உலங்குவானூர்தி – தேடும் கடற்படை

                                                                          கனடா அரச இராணுவத்திற்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று திடீரென காணமல் போயுள்ளது

                                                                          இத்தாலியில் இருந்து கிரேக் கடல் பகுதிக்கு மேலாக பறப்பில் ஈடு பட்டு கொண்டிருந்த பொழுது இந்த வானூர்தி காணமால் போயுள்ள்ளது

                                                                          மேற்படி உலங்கு வானூர்தியானது கடலுக்குள் வீழ்ந்து நொறுங்கி இருக்க கூடும் என நம்ப படுகிறது


                                                                            வான் படையினர் மற்றும் கடல் படையினர் குறித்த வானூர்தியை தேடிய வண்ணம் உள்ளனர் .

                                                                            இன்று புதன் கிழமை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது ,மேற்படி உலங்கு

                                                                            வானூர்தியில் பயணித்த மூன்று விமானங்கள் ,மற்றும் சிப்பாய்கள் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது

                                                                            கனடா
                                                                            கனடா
                                                                                Posted in இலங்கை செய்திகள்

                                                                                மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனை

                                                                                மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனை

                                                                                சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனை ஆரம்பம்

                                                                                கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள மேற்கொள்வதற்கான விசேட பீசீஆர் பரிசோதனை

                                                                                மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று

                                                                                (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநட்டில் வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம் இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

                                                                                இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய பீசீஆர் பரிசோதனை கடந்த திங்கட்கிளமை முதல்

                                                                                நடைபெற்றுவருவதாகவும் இதுவரை 143 பேருக்கான பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நால்வருக்கு

                                                                                கோரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில்

                                                                                வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலும் இதற்கு முன்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையில்

                                                                                அனுமதிக்கப்பட்டு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 101 நோயாளர்களில் 8 பேர் கொரோனா நோய் உறுதி

                                                                                செய்யப்பட்டதுடன் இவர்களில் ஒருவரே இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்தார்.

                                                                                கொரோன பரிசோதனை நிலையமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டிருந்ததினைத் தொடர்ந்து இதற்கான தனி அலகு ஸ்தாபிக்கப்பட்டு, இங்கு வரும் கொரோனா

                                                                                நோயாளர்களை அல்லது கோரோனா நோய் தொற்று அறிகுறி காணப்படுபவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக பிரிவு

                                                                                அமைக்கப்படடிருந்தது. தற்போது பீசீஆர் பரிசோதனை மேற்கௌ;வதனையடுத்து இரண்டாவது வகைப்படுத்தல் பிரிவு

                                                                                ஒன்று அவசர மற்றும் விபத்து பிரிவுக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

                                                                                  தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகின்ற நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நோயாளர்களுக்காக

                                                                                  சமுக இடைவெளி பேணி அமரக்கூடியவாறு மேலதிக ஆசன வசதிகள், கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கிளினிக் சிகிச்சைக்காக வருபவர்களுக்கான மருந்து விநியோகம் தபால்

                                                                                  சேவை மூலம் வழங்கப்பட்டிருப்பதுடன் தற்போது இங்கு வருபவர்கள் இடைவெளிபேணி மருந்துகளைப் பெற்றுக் கொள்ள

                                                                                  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

                                                                                  மேலும் பொதுமக்கள் வீடுகளில் இருப்பதுடன் அவசிய தேவைக்காக மாத்திரம் வெளியில் வருமாறும், முகக்கவசம் அணிதல், கைகளை

                                                                                  சுகாதார முறைப்படி சவர்க்காரமிட்டு அடிக்கடி கழுவிக் கொள்தல், சமுக இடைவெளியினைப் பேணுதல் போன்ற விடயங்களைக்

                                                                                  கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களைக் அவர் கேட்டுக் கொண்டார்.

                                                                                  இவ்வூடகவியலாளர் மாநாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலனி பிரதனியும், மயக்க மருந்து விசேட வைத்திய நிபுனருமான டாக்கடர் எஸ். மதனழகன்

                                                                                  =நுன்னுயிரியல் தொற்றுநோய் விசேட நிபுனர் டாக்டர் வைதேகிஇ மருத்துவ ஆய்வுகூட தொழினுட்ப அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஸாகிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

                                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                                  நாளையுடன் காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்கள்

                                                                                  நாளையுடன் காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்கள்

                                                                                  நாளையுடன் (29) காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்களிகளின் கால எல்லை; மே மாதம் 31ஆம் திகதி

                                                                                  வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தள்ளார்.

                                                                                  இருப்பினும் பொதுவான அலுவல்களுக்கான அவசரகால அனுமதிப்பத்திரம் புதிதாக பெற்றுக் கொள்வது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்

                                                                                      இன்று கொழும்பில் நடைபெற்ற செயதியாளர்களுடனான சந்திப்பில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம்

                                                                                      ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் தற்பொழுது ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு

                                                                                      தற்காலிகமாக நீக்கப்பட்டது. நேற்றைய தினம் (28) இந்த மாவட்டங்களின் நகரங்களுக்கு பொதுமக்களின் வருகை

                                                                                      குறைவாகவே காணப்பட்டது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் வீதிகளில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிவது

                                                                                      கட்டாயமாகும். இவ்வாறான பின்புலத்தில் முகக் கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டிருந்த பிள்ளையொன்று

                                                                                      பொலிஸ் அதிகாரியொருவரினால் முகக் கவசத்தை அணிந்து கொள்வதற்காக தமது பணத்தை வழங்கும் அளவிற்கு கருணை

                                                                                      உள்ளம் வெளிப்படுத்தியமை காணக்கூடியதாக இருந்ததாகவும் கூறினார்.

                                                                                      ஏனைய மாவட்டமொன்றிலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் அத்தியாவசிய சேவை

                                                                                        வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை கந்தளாய் அக்போபுர பாதுகாப்பு சாவடியில் மேற்கnhள்ளப்பகிறது அங்கு நபர்கள் கிருமி ஒழிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

                                                                                        இருப்பினும் இவ்வாறு வந்த சில வாகனங்களின் சாரதிகளுக்கு அவர் குடியிருக்கும் பிரதேசத்தில் சுகாதார பரிசோதகரினால்

                                                                                        வழங்கப்படும் சுகாதார அறிக்கை இல்லாததினால் திருப்பி அனுப்பப்பட்டார்.

                                                                                        ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 07 மற்றும் 08

                                                                                        குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அவ்வாறானோர் நாளைய தினம் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்காக எந்தவகையிலும்

                                                                                        குறிப்பிட்ட இடங்களைத் தவிர பிற இடங்களுக்கு செல்வதற்கு இடமளிக்க மாட்டாது.


                                                                                        கொழும்பு , கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே மாதம் அதிகாலை 5 மணி வரையில் அமுலில் இருக்கும்.

                                                                                        மிகவும் அனர்த்தமிக்க மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதில்

                                                                                        இராணுவத்தின் உடனடி செயலணி அதிகாரிகள் ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ள

                                                                                        ஊரடங்கு
                                                                                        ஊரடங்கு
                                                                                          Posted in உலக செய்திகள்

                                                                                          கொரியாவில் 38 பேர் பலி -10 பேர் உயிருக்கு போராட்டம் photo

                                                                                          கொரியாவில் 38 பேர் பலி -10 பேர் உயிருக்கு போராட்டம் photo

                                                                                          தென் கொரியாவின் Seoul. பகுதியில் உள்ள கசங்கரியில் திடீர் தீ பரவலினால் அவ்வேளை அங்கிருந்த முபத்தி எட்டு பேர் பலியாகியுள்ளனர்

                                                                                          மேலும் பத்து பேர் பலத்த தீ ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


                                                                                            இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரிய வரவில்லை

                                                                                            தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                                                                            Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                                                            பிரிட்டனில் கொரனோ நோயால் சிக்கி 601 பேர் பலி

                                                                                            பிரிட்டனில் கொரனோ நோயால் சிக்கி 601 பேர் பலி

                                                                                            பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்

                                                                                            601 பேர் பலியாகியுள்ளனர் , இதுவரை 22,370 பேர் சாவடைந்துள்ளனர் .


                                                                                            170 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                                                            இந்த நோயின் தாக்குதலிலும் அதிகம் அமெரிக்கா பாதிக்க பட்டுள்ளது ,அங்கு ஒரு மில்லியனுக்கு மேல் பாதக்க பட்டுள்ளனர்

                                                                                              67 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்
                                                                                              இன்று மட்டும்

                                                                                              சுமார் 2500 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள துயரம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                                                                                              பிரிட்டனில் கொரனோ
                                                                                              பிரிட்டனில் கொரனோ
                                                                                                Posted in இலங்கை செய்திகள்

                                                                                                நாளை முதல் 4 திகதிவரை ஊரடங்கு அமூல்

                                                                                                நாளை முதல் 4 திகதிவரை ஊரடங்கு அமூல்

                                                                                                இலங்கையில் நாழி இரவு எட்டு மையில் இருந்து நான்காம் திகதி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது

                                                                                                இந்த புதிய நடைமுறையின் கீழ் மக்கள் வசிக்க வேண்டியது அவசியமாகிறது ,

                                                                                                இந்த கால எல்லைக்குள் அத்து மீறி வீதிகளில் உலாவினால் கைது செய்ய

                                                                                                படுவதுடன் தனிமை படுத்தலுக்கும் உள்ளாக்க படுவீர்கள்
                                                                                                என தெரிவிக்க பட்டுள்ளது

                                                                                                நாடு முழுவதும் இந்த் ஊரடங்கு அமூல் படுத்த படுகிறது

                                                                                                நாளை முதல் 4 திகதி
                                                                                                நாளை முதல் 4 திகதி