Author: நலன் விரும்பி
யாழில் கள்ள சாராயம் காய்ச்சிய கும்பல் மடக்கி பிடிப்பு
யாழில் கள்ள சாராயம் காய்ச்சிய கும்பல் மடக்கி பிடிப்பு
கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு
கோப்பாய், குப்பிளாவத்தையில் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பு உற்பத்தி
செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
அங்கு 45 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு
பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக் கோட்டை
மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி பெரியளவில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

- பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்

- மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளை

- இன்று முதல் அனைத்து விரைவுச்சாலை பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

- பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்

- மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளை

- இன்று முதல் அனைத்து விரைவுச்சாலை பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

பாகிஸ்தான் இராணுவம் வெறியாட்டம் – இந்தியா இராணுவத்தினர் சுட்டுக்கொலை
பாகிஸ்தான் இராணுவம் வெறியாட்டம் – இந்தியா இராணுவத்தினர் சுட்டுக்கொலை
இந்தியா காஸ்மீர் பகுதி எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
இந்தியா இராணுவத்தினர் மீது திடீரென பாகிஸ்தானை இராணுவம் தாக்குதல் நடத்தியது
இதில் இரண்டு இராணுவத்தினர் பலியாகினர் ,மேலும் ஒருவர் பலத்த
சூட்டும் காயங்களுக்கு உள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை
தாம் நடத்துவோம் என இந்தியா இராணுவம் அறிவித்துள்ளது

பெண்ணோடு உலாவிய காவல்துறை அதிகாரி க்கு – ஆப்பு
பெண்ணோடு உலாவிய காவல்துறை அதிகாரி பதவி நீக்கம்
இலங்கையில் காவல்துறை அதிகாரி ஒருவர் தனிமை படுத்தல் விதிகளுக்கு
முரணாக பெண் ஒருவரை அழைத்து வந்து நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த
வேளையில் அவர் ,தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற
குற்ற சாட்டில் பதவி விலக்கல் செய்ய பட்டுள்ளார்
மேலும் அதே பெண்ணும் இவரும் தனி நபர்களாக தனிமை படுத்த பட்டுள்ளனர் ,
இந்த செயல்பாடுகள் இலங்கை காவல்துறைக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது

புலனாய்வு கட்டமைப்பின் கீழ் கொவிட் 19 (COVID 19) முழுமையாக இல்லாதொழிக்க முடியும். அரச புலனாய்வுப் பிரிவு
புலனாய்வு கட்டமைப்பின் கீழ் கொவிட் 19 (COVID 19) முழுமையாக இல்லாதொழிக்க முடியும். அரச புலனாய்வுப் பிரிவு
30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலமைத்துவத்தின்
எண்ணக்கருவிற்கு அமைவாக கொவிட் 19 வைரசை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு
என்று அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா தெரிவித்தார்.
சுகாதாரத்துடன் தொடர்புபட்ட இந்த நோய் தொற்றை தடுப்பதில் புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில்
தனிப்பட்டவர்களின் பிரத்தியோக தகவல்களுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாது. இதற்கான உறுதியை எம்மால் தெரிவிக்க
முடியும். எமது பணி நோயை இல்லாதொழிப்பதற்கு சுகாதார பிரிவின் நோயை தடுப்பதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகும் என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்க தொலைக்காட்சி ஒன்றிற்கு இன்று காலை வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.
தற்பொழுது இந்த வைரசு தொற்று நாட்டில் முழுமையாக
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளுளோம். நாட்டிலிருந்து இதனை முழுமையாக
இல்லாதொழிப்பதற்கான வலிமை சுகாதார பிரிவைப் போன்று பாதுகாப்பு தரப்பினருக்கும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
உலகில் புலனாய்வுத் துறையில் முன்னணியில் விளங்கும்
நாடுகளைப் போன்று இலங்கைப் புலனாய்வுப் பிரிவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார். உலகில் இஸ்ரேல் போன் நாடுகள் புலனாய்வுத்
துறையில் முன்னணியில் திகழ்கின்றன. இருப்பினும் இவ்வாறான நாடுகளின் புலனாய்வு விடயங்களை நாம் பின்பற்றவில்லை. எமது நாட்டுக்கென புலனாய்வு சேவையொன்று எம்மிடம் உண்டு. இதன்
மூலமே எவறாலும் முடிவுக்கு கொண்டு வரமுடியாத என்று தெரிவிக்கப்பட்ட 30 வருட கால யுத்தத்தை நாம் வெற்றிகரமாக நிறைவு செய்தோம். இதற்கு தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ அப்போது தலமை தாங்கினார். அவரது எண்ணக்கருவிற்கு அமைவாக விடயங்களின் அடிப்படையிலே தற்பொழுது இந்த
கொவிட் 19 தொற்றை இல்லாதொழிப்பதற்கு புலனாய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
குற்றச்செயல்கள் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றிலேயே புலனாய்வு பிரிவினர் பாரிய நடவடிக்கைகளில்
மேற்கொள்கின்றனர். கொவிட் 19 எஎன்பது சுகாதார துறையுடன் சம்பந்தப்பட்ட நோய்த தொடர்பான விடயமாகும். இதில் இலங்கை
புலனாய்வு பிரிவு தமது பணியை எவ்வாறு முன்னெடுக்கின்றது குறித்து அவர் விவரித்தார்.
கடந்த ஓரிரு தினங்களில் 400 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கை திடீரென 600 ஆக அதிகரித்தது. இதற்கான காரணத்தை
விளக்குகையில், இந்த நோய் மார்ச் மாத காலப்பகுதியிலே இலங்கையில் வேகமாக பரவ ஆரம்பித்தது. இதற்கு முன்னதாக நாம் இந்த நோய் எவ்வாறு எத்துறைகள் மூலம் பரவ ஆரம்பித்தது
என்பதை 31 கொத்து அடிப்படையில் வகுத்து கொண்டோம். அதன் அடிப்படையில் சுற்றுலா பயணிகள், இரத்தினக்கல் வர்த்தகம், போதைப்பொருள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்,
விசேடமாக இத்தாலி போன்ற நாடுகளில்ருந்து வந்தவர்கள், சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவணையில் ஈடுபட்டிருந்தவர்கள் போனற பிரிவுகளின் அடிப்படையில் நாம்
எமது புலனாய்வு நடவடிக்கைகளை நாம் விரிவுபடுத்தினோம். இதற்கமைவாக விசேடமாக சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்த
நோயினால் பரிக்கப்பட்டிருந்ததை அடையாளங் கண்டோம். இவர்களுள் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருளை பெற்றுள்ளார். இதனை விற்பனை செய்தவருக்கு கொரோனா
தொற்று இருக்கவில்லை ஆனால் போதைப்பொருளை வாங்கியவருக்கு கொரோனா தொற்று காணப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்தவர் தொடர்பு
கொண்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு மட்டத்தில் நாம் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தகவல்களை பெற்று சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கினோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சுதுவெல்ல பகுதியில் அடையாளங் காணப்பட்ட கொவிட் 19 நோயாளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கடற்படையினர் அந்தப் பகுதியை முடக்குவதிலும் பாதுகாப்பு
வேலியை அமைப்பதிலும் தீவிரமாக ஈடபட்டிருந்தனர். இதனாலேயே வெலிசறை கடற்படை வீரர்கள் இந்த நோய்த்தொற்றக்குள்ளார்கள். இவர்களில் சிலர் விடுமுறையில்
வீடுகளுக்குச் சென்றிருந்தனர். இந்த கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டது. விடுமுறையில் சென்றிருந்த கடற்படை வீரர்கள் தொடர்புபட்டிருந்த குடும்ப உறுப்பினர்கள், நெருக்கமாக
பழகியவர்கள், அயலவர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கலாக சுமார் 800 பேரை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதார நடவடிக்கைகளுக்குமாக சுகாதார அதிகாரிகள் ஒழுங்குகளை
மேற்கொண்டனர். வெலிசறை முகாமில் 2000 வீரர்கள் இருக்கின்றனர். விடுமுறையில் சென்றிருந்தவர்கள் 500 பேர். முகாமைச் சேர்ந்த வீரர்கள் தமது முன்னைய முகவரியில் அல்லாது
வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர். அதாவது திருமணத்திற்குப் பின்னர் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரது
தகவல்களும் திரட்டப்பட்டன. என்றும் அவர் விபரித்தார். தற்பொழுது 88 233 பேர் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

3000 இராணுவ வாகனங்களுடன் சிரியாவுக்குள் நுழைந்த துருக்கிய இராணுவம்
3000 இராணுவ வாகனங்களுடன் சிரியாவுக்குள் நுழைந்த துருக்கிய இராணுவம்
துருக்கிய இராணுவம் தமது எல்லைகள் கடந்து வடக்கு இட்லி பகுதியில் நிலை கொண்டுள்ளன,
சுமார் மூவாயிரம் இராணுவ வாகனங்கள் ,ஆயுத தளபாடங்களுடன் இட்லியை ஆக்கிரமிக்க காத்துள்ளனர் .
தொடர்ந்தும் சிரியா மற்றும் துருக்கிய படைகளுக்கு இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
6,335 டிரக்குகளுடன் ,10,300 துருப்பினருடன் அப்போலோ பகுதிக்கு அண்மையில் மட்டும்
நிலை கொண்டுள்ளனர் என சிரியா அரச படைகள் தெரிவித்துள்ளன
இவை துருக்கியின் அத்து மீறல் செயல் பாடு என சிரியா அறிவித்துள்ளது

கொரனோ அவலம் -உணவுக்காக 4 கிலோ மீட்டர் காத்திருந்த மக்கள் – அதிர்ச்சி video
கொரனோ அவலம் -உணவுக்காக 4 கிலோ மீட்டர் காத்திருந்த மக்கள் – அதிர்ச்சி video
கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் 4 கிலோ மீட்டர் தூரம் காத்துக்கிடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உணவுக்காக 4 கிலோ மீட்டர் தூரம் காத்துக்கிடந்த மக்கள் – அதிர்ச்சி சம்பவம்
உணவுக்காக காத்துக்கிடந்த மக்கள்
ஜோகனஸ்பர்க்:
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 190 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு 33 லட்சம் பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில், வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு நாடுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் தங்கள் வேலைகளையும், வருமானத்தையும்
இழந்துள்ளனர். இதனால் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தென் ஆப்ரிக்காவிலும் வைரஸ் பரவி வருகிறது. அந்நாட்டில் 5 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு 116 பேர் பலியாகியுள்ளனர்.
வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் தென் ஆப்ரிக்காவில் மார்ச் 27-ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பலர் வருமானம் இழந்து ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

People queue for more than two miles to collect food parcels in South Africa pic.twitter.com/PwS6mDqz9o
— The Independent (@Independent) May 1, 2020
மேல்மாகாணத்தில் கொரோனா நோய் – சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மேல்மாகாணத்தில் கொரோனா நோய் – சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மேல்மாகாணத்தில் கொரோனா (கொவிட் 19) நிiலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தற்பொழுது மேல் மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது வரையில் பல்வேறு நோய் அனர்த்த குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு பிசீஆர்
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இருப்பினும் நிலைமை மேலும் 100 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக
தெரிவிக்க முடியாது. இந்த கட்டுப்பாடு எமது கையிலிருந்து நழுவிச் செல்லவில்லை என்பதுடன் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொறுப்புடன் தெரிவிக்க முடியும்.
எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரையில், திங்கட்கிழமையளவில் நாட்டு நிலைமையை வழமையான நிலமைக்கு கொண்டு வரமுடிகின்றமை அல்லது இல்லாமை தொடர்பில் எதிர்வுகூற
முடியாது. இருப்பினும் வெசாக் காலப்பகுதி வரை இந்த கடுங்கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க
சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் மேலும் சில காலம் செல்லும் வரையில் சுகாதரர ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம்
ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக நாளாந்த கடமைகளை மேற்கொள்வது கட்டாயமாகும்.
நேற்றைய (30.04.2020) தினத்தில் 1397 Pஊசு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனைகளுக்கு அமைவாக நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றமை
சிறிய எண்ணிக்கையிலாகும். இருப்பினும் Pஊசு பரிசோதனை நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பொதுவான எண்ணிக்கை 1500 ஆக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இந்த பரிசோதனைகளுக்கு
உட்படுத்தப்படும் குழுக்கள் எவை என்பது எதிர்நோக்கும் நிலைமைக்கு அமைய தீர்மானிக்கப்படும். தேவையேற்படுமாயின் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீசுPஆர் பரிசோதனையின்
எண்ணிக்கையை 3000 வரையில் அதிகரிப்பதற்கு தற்பொழுது ஆற்றல் உண்டு. பல்கலைக்கழக கட்டமைப்பு இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதினால் தொடர்ந்து
மேற்கொள்ளப்படும் பரிசோதனை எண்ணிக்கைகளை இவ்வாறு அதிகரிப்பதற்கு ஆற்றல் கிட்டியுள்ளது. சீனாவினால் நன்கொடை என்ற ரீதியில் கிடைக்கப்பெற்ற உபகரண தொகுதிகளைப் போன்று,
பயன்படுத்தப்படும் எத்தகைய பீசுPஆர் பரிசோதனை உபகரணங்களாக இருந்த போதிலும் அவற்றின் துல்லியமா செயற்பாடுகள் தொடர்பாக அடிக்கடி பரிசோதனை
(எயடனைவைல) மேற்கொள்ளப்படும். இதனால் பரிசோதனைகளின் பெறுபேறுகள் தொடர்பில் தாம் திருப்திக் கொள்வதாகவும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இருப்பினும் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தாக்கத்திற்கான முக்கிய சாதகமாவது பொதுமக்களினால் தொடர்ந்தும் சுகாதார
ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதே ஆகும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார

லண்டனில் சிறுவன் சுட்டுக் கொலை – இருவருக்கு கழுத்து வெட்டு
லண்டனில் சிறுவன் சுட்டுக் கொலை – இருவருக்கு கழுத்து வெட்டு
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9,30 மணியளவில் Kerry Drive, Upminster, பகுதியில் 11 வயது சிறுவன் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளான் .
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டனர் .
இதில் கழுத்தில் பலமான வெட்டு காயங்களுடன் இவர்கள் காணப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
ஆபத்தான நிலையில் இருவரு சிகிச்சை பெற்று வருகின்ற்னர் ,துப்பாக்கிகள்
மீட்க பட்டுள்ளன ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரிய
வரவில்லை ,போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கொரனோ கிருமியை உருவாக்கியது சீனா – ஆதாரம் பார்த்தேன் அமெரிக்கா டிரம்ப் அறிவிப்பு
கொரனோ கிருமியை உருவாக்கியது சீனா – ஆதாரம் பார்த்தேன் அமெரிக்கா டிரம்ப் அறிவிப்பு
உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை பரப்பியது சீனா என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மீளவும் குற்றம் சுமதியுள்ளார்
சீனாவின் குவான் மாகாணத்தில் உள்ள உரு மறைப்பு செய்ய பட்ட ஆய்வு கூடத்தில் வைத்து இந்த கொரனோ கிருமிகள் உருவாக்க
பட்டன எனவும் ,அந்த ஆதாரங்களை தான் பார்வை இட்டுள்ளதாக டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்
சீனா இவ்வாறு செய்த இந்த பெரும் அபாயகாரமான வேலைக்கு எங்களுக்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் தவறின் பெரும்
விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா அதிபர் மிரட்டியுளளார் ,
இவரது மிரட்டலுக்கு சீனா அடங்கி போகுமா..? அப்படி போவதற்கு என்ன ஈராக்கா என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்
இந்த கிருமிகளை தயாரித்த அமெரிக்கா உள்ளிட்ட ,சீனர்களை ,அமெரிக்கா உளவுத்துறை கைது செய்து வைத்துள்ளது ,
இவ்வாறான பலமான ஆதாரங்களை தன்னகத்தே வைத்துள்ள போதும் சீனாவை அடிபணிய வைத்திட அமெரிக்காவினால் முடியுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
நேரடியாக முதன் முதலாக தான் ஆதாரத்தை பார்த்தேன் என டிரம்ப் கூறுவதில் இருந்து சீனாவின் அபாயகர விளையாட்டு
எதுவரை சென்றுள்ளது என்பதும் , சீனா மேலும் என்ன சதிகளை செய்ய போகிறது என்பதையும் அமெரிக்கா நான்கே அறிந்துளளது
அப்படி என்றால் திட்டமிட்ட படி சீனா மீது அமெரிக்கா கூட்டணி நாடுகள்
இணைந்து தாக்குதலை நாடத்துமா ..? இங்கிருந்து மூன்றாம் உலக யுத்தம் வெடிக்குமா ..?
என்ற பரபரப்பு எழுந்துள்ளது ,கொரனோ பரப்பியா சீனாவுக்கு எதிராகா
சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திட ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா முயன்று வருகின்றன .
சர்வதேச நீதிமன்றினால் கூட சீனாவை அடக்கிட முடியுமா என்பதே சந்தேகம் ஆகிறது .
பார்க்கலாம் ஏதோ ஒன்று விபரிதமாக நடக்க போகிறது ,அது என்ன என்பது சில நாட்களில் தெரியவரும் .

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 690
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 690
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது..
நோயாளகளில் 162 பேர் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-05-01 22:03:44
690
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
521
சிகிச்சை பெறும் நோயாளிகள்
25
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
162
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
7
இறப்பு எண்ணிக்கை

அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்
தற்போது அதிகரித்துள்ளது
கடந்த தினம் வெள்ளிக் கிழமை மட்டும் ஒரே நாளில் 30 ஆயிரத்து 787 பேர்
புதிதாக இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான
நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதுவரை 62 ஆயிரத்து 406 பேர் பலியாகியுள்ளனர்
மேலும்
இந்த நோயினால் பத்து லட்சத்து 62 ஆயிரத்து 446 பேர் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
உலக நாடுகளின் முதன்மையாக அமெரிக்காவே பாரிய அழிவை சந்தித்துள்ளது .
அரேபிய நாடுகள் மீது போர் தொடுத்து அந்த மக்களை கொன்று குவித்த அமெரிக்கா இப்பொழுது தனது நாட்டில் பல்லாயிரம்
மக்களை நாள் தோறும் பலி கொடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
அந்த மக்களின் சாப கேடே இந்த பேரழிவு என பாதிக்க பட்ட நாட்டு மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

அவுஸ்ரேலியாவில் மக்களை கத்தியால் வெட்டிய பயங்கரம் – ஏழு பேர் காயம் – ஒருவர் பலி
அவுஸ்ரேலியாவில் மக்களை கத்தியால் வெட்டிய பயங்கரம் – ஏழு பேர் காயம் – ஒருவர் பலி
அவுஸ்ரேலியா Western Australia’s Pilbara பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கி
மற்றும் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினார் . இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார் ,மேலும் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர்
கத்திமுனையில் சிசு மற்றும் தாயை கடத்திய நபர் இந்த படுகொலை செயலை புரிந்துள்ளார் ,
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

தற்போது கடைத்தெரு எங்கும் இரத்தம் சிந்திய நிலையில் காண படுகிறது
போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது, கொலையாளி
கைது செய்யப் பட்டுள்ளார்
இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

அவுஸ்ரேலியாவில் மக்களை 
மணல் கொள்ளை -கப்பம் தர மறுத்ததால் மக்களை தாக்கிய போலீஸ் video
மணல் கொள்ளை -கப்பம் தர மறுத்ததால் மக்களை தாக்கிய போலீஸ்
யாழ்பாணடம் வடமராட்சியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட குழுக்களுக்கு இடையில் தற்போது நேரடி மோதல் ஒன்று இடம்பெற்றுளளது
இந்த மோதலின் பின்புலத்தில் காக்கி சட்டைகள் மறைந்து உள்ளதும்
,அவர்களுக்கு மணல் கொள்ளையர்கள் லொறி ஒன்றுக்கு குறித்த தொகை ஒன்று கப்பமாக வழங்கி வருகின்றனர் .
இவர்கள் அதிகம் கேட்ட பணத்தினை வழங்க மறுத்ததினால் ,இவர்களின்
மணல் ஏற்றுமதியை தடுக்கும் நோக்குடன் போலீசாரை ஏவிவிட்டு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
பிரபல அரசியல் கட்சி ஒன்றின் கீழ் இயங்கும் இந்த மணல் கொள்ளை மாபியா வர்த்தகதிற்கு முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமை தாங்குகிறார்
அந்த பண பங்கீடு காரணமாக இந்த மோதல் ,தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது
கோட்டபாய ஆட்சிக்கு வந்ததும் மணலை தாராளமாக அள்ளிடலாம் என தடை எடுத்தமை இங்கே குறிப்பிட தக்கது
அது தவிர சில ஊடகங்களுக்கு செய்தியாளர்களாக உள்ள சிலரும் இந்த மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களாக உள்ளனர் .
அவர்களும் இவ்வாறு தமது எயமானர்களை காப்பாற்றும் நகர்விலும் ஈடுபட்டு எதிர் மறையான செய்திகளை வழங்கி வருகின்றனர்
மணல் கொள்ளை மாபியாக்கள் பின்புலத்தை இனியாவது சமூக நல அக்கறை கொண்டவர்கள் ,அவர்களிடம் உள்ள
காணொளிகளை வெளியிட்டு அந்த முக்கிய அரசியல் கட்சிகளின் முகமூடி கிழிக்க உதவுங்கள் ,
தேர்தலில் தோற்கடித்து விரட்ட உடனே புரியுங்கள் உறவுகளே. இது நமது வேண்டுதலாகும் .

புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழு -யாழில் கைவரிசை
புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழு -யாழில் கைவரிசை
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் முக மூடி அணிந்த நிலையில் கையில்
வாள்கள்,மற்றும் கத்திகளுடன் வீடுகளுக்குள் நுழைந்தான் கொள்ளை
கும்பல் அங்கிருந்து தங்க நகைகள் ,மிதிவண்டிகள் என்பனவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுள்ளன .
இவ்வாறு மூன்று வீடுகளில் இந்த கொள்ளை சமபவம் இடம்பெற்றுள்ளது ,
ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டிருந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
இது பொலிஸாரின் ஆதரவுடன் இயங்கும் புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழுவே இந்த செயலில்
ஈடுபாட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது ,வீதிகள் எங்கும் காவல்துறையின்
சுற்றுக்காவல் நாடவடிக்கையில் ஈடுபடும் பொழுதே இந்த துணிகர கொலை
சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் சந்தேகத்தை அதிகரித்துள்ளது

70 லட்சம் பெண்கள் கர்ப்பம் -கொரனோ வேளையில் நடந்த கொடுமை
70 லட்சம் பெண்கள் கர்ப்பம் -கொரனோ வேளையில் நடந்த கொடுமை
உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ நோயின் காரணமாக ஊரடங்கு மற்றும் ,மருந்து பொருட்களுக்கு தட்டு பாடு நிலவுகிறது
இந்த கால பகுதியில் மாட்டும் உலகளாவிய ரீதியில் சுமார் எழுபது லட்சம்
பெண்கள் கர்ப்பம் அடைந்துள்ளனர் என உலக சுகாதா மையம் தெரிவித்துள்ளது
கருத்தடை சாதனங்கள் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக
இந்த கர்ப்பம் தரிப்பு நிகழ்ந்துள்ளது எனவும் ,இதில் மருத்துவ மனையில்
கருக்கலைப்பு விகிதம் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஆண்டு தோறும் முப்பது லட்சத்திற்கு அதிகமான கரு கலைப்பு இடம்பெற்று
வருகிறது ,இது ஒரு சிசு படுகொலை என்பதாக கத்தோலிக்க சபைகள் போர்க்கொடி தூக்கியுள்ளன
பாவத்தின் பலனால் பாவத்தை சுமக்கும் இந்த சிசு கொலையை தடுத்து
நிறுத்த பல்வேறு பட்ட விடயங்கள் நிகழும் பொழுதும் இதனை தடுத்திட இயலவில்லை

காவல்துறை அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து
காவல்துறை அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து
இலங்கை காவல்துறை அதிகாரிகளின் விடுமுறைகள் யாவும் எதிர்வரும்
பதின் ஐந்தாம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது
நாட்டில்
நிலவி வரும் அசாதாரண சூழ் நிலையிற் கருத்தில் கொண்டே இந்த இரத்து அமுலாக்க பட்டுள்ளது
என காவலதுறை தலைமையகம் அறிவித்துள்ளது

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

- பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்

- மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளை

- இன்று முதல் அனைத்து விரைவுச்சாலை பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

யாழில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த பெண்
யாழில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த பெண்
யாழ்ப்பாண போதனா வைசத்திய சாலையில் இளம் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார்
இவ்வாறு குழந்தைகளை பிரசவித்த பெண் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு
உள்ளாக்க பட்ட நிலையில் தற்போது தாயும் சேயும் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
ஒரே தடவையில் நான்கு குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த சிசுக்களை
பார்வையிட குறித்த பெண்ணின் வீட்டை அந்த கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளதுடன் ,
அவர்களுக்கான அன்பளிப்புக்களும் குவிந்த வண்ணம் உள்ளது
ஒரு குடும்பத்தில் பிறந்த இந்த சிசுக்களினாலே அந்த கிராமமே மகிழ்ச்சியில் உறைந்துள்ளது

யாழில் பாண் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்
யாழில் பாண் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்
யாழ்ப்பாணத்தில் கடிந்த நள்ளிரவு முதல் உடனை அமுலுக்கு வரும் ஜீலையில்
450 கிலோ கிராம் பாணின் விலை மூன்று ரூபாவால் அதிரடியாக அதிகரிக்க பட்டுள்ளது
மக்களின் வாழ்வியல் சுமையை குறைப்பேன் என ஆளும் அரசு அறிவித்து
வந்த நிலையில் பாணின் விலை ஒரே தடவையில் மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரனோ வேளையில் மக்கள் பெரிதும் வறுமையில் சிக்கியுள்ள காலப்பகுதியில்
இந்த பாணின் விலை அதிகரிக்க பட்டுள்ளது ,ஆளும் அரசு மீது மக்கள் விரக்தி கொள்ள வைக்கும் செயல் பாட்டை அதிகரித்துள்ளது
இது கோட்டபாய அரசு மக்கள் விரோதத்தை தாமாக வலிந்து உருவாககிய ஒன்றாக பார்க்கக் படுகிறது

ஊரடங்கு வேளை -மருந்துகள் இன்றி ஒரே கிராமத்தில் 30 பேர் பலி
ஊரடங்கு வேளை -மருந்துகள் இன்றி ஒரே கிராமத்தில் 30 பேர் பலி
இலங்கையில் கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்க பட்டிருந்தது
இந்த காலத்தில் மருந்துகள் கொள்வனவு செய்ய முடியாத நிலையில்
திடீர் நோய்களுக்கு உள்ளான சுமார் முப்பது பேர் காலி மாவட்டத்த்தில் மட்டும் பலியாகியுள்ளனர்
இதேபோல இயற்கையை மரணங்கள் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்றுள்ளது ,
இவற்றை இணைத்தால் 300 மரணங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
நாளாந்த மக்கள் இறப்பு விகிதம் தொடர்பில் உரிய புள்ளி விபரங்கள் வெளியிடப்படவில்லை

நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும்
உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தனதெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிதி வசதியை வழங்குவதற்கும், மூடப்பட்ட நெல் ஆலைகளை மீள
திறப்பதற்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 20ஆம் திகதியிலிருந்து பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை
கொள்வனவு செய்வதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட மேலதிக 16 வகைக்கான உற்பத்திகளை ஊக்குவித்தல். மக்கள் வங்கியினால் அஸ்வென்ன
என்ற (அறுவடை) பெயரில் 30 இலட்சம் ரூபா வரையில் விசேட கடன் முறையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் 200 விசேட கொத்து
உர விவசாய கிராமங்களை ஏற்படுத்வும் திட்டமிடப்பட்டுள்ளது 50 பசுமை பூங்கா மற்றும் அறுவடைகளை விற்பனை செய்யும் 200
விற்பனை நிலையங்களை ஏற்படுத்துதல். இம்முறை ஐந்து லட்சத்து 23 ஆயிரம் ஹெக்டெயர் விளைச்சலுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம்
விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.








