Author: நலன் விரும்பி
இலங்கையில் கொரானாவுக்கு ஒரே நாளில் 7 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு ஒரே நாளில் 7 பேர் மரணம்
இலங்கையில் வேகமாக கொரனோ பரவி வருகிறது ஏழுபேர் பலியாகியுள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகிய பின்னர் தற்போது கொரனோ மரணங்கள் அதிகரிக்க பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்து வருகிறது .
இதன் மூலம் மக்களை வீடுகளுக்குள் முடக்கிட இந்த வார அறிவிப்பை இலங்கை அரசு புரிந்த வண்ணம் உள்ளது.
ரணிலுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்புக்கள் அதிரடியாகி வெளியாகிய வண்னம் உள்ளதான உள்நோக்கு
இலங்கை அடித்து பூட்டும் நிகழ்விற்கு செல்ல போகிறது என்பதாக உள்ளது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.
நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.
கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றி வந்த சில மாகாண திணைக்களத் தலைவர்களை வேறு திணைக்களங்களுக்கு
இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்கவிற்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளராக கடமையாற்றிய திருமதி. ஆர்.வளர்மதி மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும், மாகாண கல்வித்
திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய என்.சிவலிங்கம் மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.
மாகாண கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய ஏ.எல்.எம்.அஸ்மி கல்முனை மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாண கலாசார பணிப்பாளராக கடமையாற்றிய எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராக பணியாற்றிய (திருமதி) எஸ்.சரணியா மாகாண கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளராகவும், மாகாண கூட்டுறவுச்
சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றிய ஏ.ஜி.தேவேந்திரன் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராக கடமையாற்றிய கே.இளந்துடுதன் மாகாண கூட்டுறவு சேவைகள்
ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த இடமாற்றங்களைப் பெற்ற அதிகாரிகள் இன்று (02) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்து விசேட
கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலின்போது இடமாற்றங்களைப் பெற்றவர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இடமாற்றங்களைப் பெற்ற சகல அதிகாரிகளும் தங்களுக்கான கடமைகளை உடனடியாக பொறுப்பேற்றுக்கொள்ளுமாறும்,
அதில் எந்த மாற்றங்களும் இடம்பெறாது என்று கிழக்கு மாகாண ஆளுநர் சகல அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளார்.
பைஷல் இஸ்மாயில் –
யாழில் வாள்களுடன் திருடர்கள் மடக்கி பிடிப்பு
யாழில் வாள்களுடன் திருடர்கள் மடக்கி பிடிப்பு
இலங்கை .யாழ்ப்பாணம் ; வட்டுக்கோட்டை பகுதியில் வாள்களுடன் நடமாடிய திருடர்கள் மக்களினால் பிடிக்க பட்டனர் .
வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த மூவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொழுது அவர்களை கண்ணுற்ற மக்கள் அவர்களை துரத்தினர்.
இதன் பொழுதே ,அவர்கள் தப்பிக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது .
அவ்வேளை வாள்களை போட்டு இருவர் தப்பித்து ஓடியுள்ளனர் .
ஒருவர் மக்களினால் பிடிக்க பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்க பட்டுள்ளார்.
மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை
மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை
இலங்கை மலையகம் நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இதுவரை மூவர் பலியாகியுள்ளனர்.
மேலும் சிலரை காணவில்லை என தெரிவிக்க படுகிறது .
காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
மழை அதனால் ஏற்பட்ட மண்சரிவு வெள்ளத்தில் சிக்கிய இந்தஅனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்ப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
இலங்கையில் பொதுவில் முதல் காலி வரையிலான கடல் பகுதியில் புயல் வீசுவதால் மீனவர் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.
இந்த புயலானாது மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், இதனால் கடலில் கொந்தளிப்பு காணப்படலாம் என தெரிவிக்க படுகிறது.
கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது.
கோட்டபாயவுக்கு சிங்கப்பூரில் சலுகை இல்லை
கோட்டபாயவுக்கு சிங்கப்பூரில் சலுகை இல்லை
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் ஓடி பதுங்கியுள்ளார் .
இவர் சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ள கோட்டபாயாவுக்கு சிங்கப்பூர் அரசு எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது,
கோட்டபாயவை கைது செய்ய கோரி சிங்கப்பூரில் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் கோட்டபாய உள்ளார்.
இதனால் இலங்கை திரும்பிட கோட்டபாய முனைகிறார் .
இலங்கையில் மக்கள் இவருக்கு எதிராக உள்ளதினால் அவரை சுற்றிவளைத்து தாக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அதனால் என்னவோ இப்பொழுது கோட்டபாய தொடர்பிலான இவ்விதமான தகவல்களை இலங்கை நாள்தோறும் கசிய விட்ட வண்ணம் உள்ளது.
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் மோதல் ஒருவர் காயம்
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் மோதல் ஒருவர் காயம்
இலங்கை ; யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரி பொருள் வாங்கிட வரிசையில் காத்து நின்றவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
எரிபொருள் பெற்றிட காத்திருக்கும் மக்களுக்குள் இடையில் புகுந்திட மேற்கொள்ளும் செயல்பாடுகளினால்
மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது.
அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்
அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்
கார் மாற்றும் வான் என்பன நேரெதிர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
இரண்டு வாகனங்களும் மோதிய வேளையில் கார் வெடித்து தீ பற்றி கொண்டது .
ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட ஏழுபேர் பலியாகியுள்ளனர்.
சிறுவரக்ளை ஏற்றிய வண்ணம் காரை ஓட்டி சென்ற பெண் தவறான வழியூடாக காரினை செலுத்தி சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏன் இவ்வாறு தவறான வழியின் ஊடாக சிறுவர்களுடன் காரினை செலுத்தி சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
காயமடைந்த இருவர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த கோர விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்
லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்
லண்டன் கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் தீ புகைக்குள் பறந்த பயணிகள் விமானங்கள் .
லண்டன் கீத்திரோ விமான நிலையத்தின் டெமினல் இரண்டின் அருகே பாரிய தீ பற்றி பிடித்துள்ளது .
இதன் பொழுது அந்த பகுதி வழியாக பறந்து கொண்டிருந்த விமானங்கள் அந்த புகையில் சிக்கிய படியே பறந்து சென்றன .
நூறுக்கு மேற்பட்ட விமானங்கள் இந்த புகைக்குள்ளால் பறந்துள்ளன .
கீத்திரோ விமான நிலையத்தில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு விமானம் என்ற அடிப்படையில் இங்கே இறங்கி செல்வதாக தெரிவிக்க படுகிறது .
அவ்வாறான நிலையில் இந்த தீ விபத்து பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .
விமானங்கள் இவ்விதம் ஆபத்தான வழியூடாக பறக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
லண்டன் ; கிழக்கு லண்டன் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ஆமை ஒன்று காணப்பட்டதால் அந்த வழி போக்குவரத்து தடை பட்டது .
கிழக்கு லண்டன் Norwich and Cambridge. இடையில் பயணிக்கும் ரயில்வே தண்டவாளத்தில் காயமடைந்த நிலையில் ஆமை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது.
குறித்த ஆமையை அவ்வழியால் பயணித்த பயணிகளில் ஒருவர் படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில் குறித்த பகுதியில் தண்டவாளத்தில் ஆமை ஒன்று உள்ளது எனவும் காயமுற்ற நிலையில் உயிருடன் உள்ளது என அவர் பதிவிட்ட நிலையில் இந்த காட்சி பதிவு விலங்குகள் அமைப்பின் கவனத்திற்கு ரயில்வே நிலையத்தின் கவனத்திற்கும் பறந்து சென்றது .
லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
விரைந்து செயல் பட்ட ரயில்வே அதிகாரிகள் அந்த வழி ரயில் போக்குவரத்தை தடை செய்து ஆமையை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த ஆமை ரயில்வே தண்டவாளத்தில் காணப்பட்டத்தை அடுத்து மதியம் ஒன்று முப்பது மணியளவில் ரயில்வே பயணம் சில மணிநேரம் தடை பட்டது .
விலகுங்கள் மீது மக்கள் எவ்விதம் அக்கறையுடன் உள்ளனர் என்பதனை இந்த ஆமை மீட்பு விடயங்கள் எடுத்து காட்டுகிறது .
ஆனால் நம்ம இலங்கை இந்தியாவில் கண்ணுற்றால் அதனை கல்லால் அடித்து கொன்று விடுவார்கள்.
இது அவர்கள் சிந்தனை ,வெள்ளையர் நாடுகளை போல விழிப்புணர்வு அற்ற தேசமாக இலங்கை இந்திய மக்கள் வசித்து வருவது கவனிக்க தக்கது.
பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு
பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு
பிரான்ஸ் ; தெற்கு பிரான்ஸ் நாட்டின் Gignac, பகுதியில் உள்ள நீச்சல் தடாகம் ஒன்றில் பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
நீச்சல் குளத்தில் சடலமாகா மீட்க பட்ட பிரிட்டன் தம்பதிகள் எண்பது வயதுடையவர்கள் என அடையாளம் காண பட்டுள்ளது.
எவ்வாறு இந்த நீச்சல் குளத்தில் பலியானார்கள் என்பது தொடர்பில் தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
குறித்த பிரிட்டன் தம்பதிகள் சடலத்தை அவர் தம் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்
கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய சிங்கப்பூரில் தங்கியுள்ளார்.
அங்கு தங்கி இருக்கு இவரை போர்குற்றத்தில் கைது செய்யுமாறு தமிழர்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதனால் கோட்டபாய எவ்வேளையும் கைது செய்யும் வாய்ப்பு ஏற்படலாம் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .
இதனால் சிங்கப்பூரில் இருந்து கோட்டபாய வேறு நாடு ஒன்றுக்கு செல்ல திட்டமிடுகிறார் என்கிறது முக்கிய தரப்பு வட்டாரங்கள்.
கோட்டபாய அரேபிய நாடு ஒன்றை இலக்கு வைத்து நகரவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்
இலங்கை சென்றால் மீளவும் அங்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையில் கோட்டபாய சிக்கியுள்ளார் .
இலங்கையில் கோட்டபாயவை சிங்களவர்கள் துரத்திட வெளி நாடுகளில் தமிழர்கள் துரத்துகின்றனர் .
ஆக மொத்தம் இலங்கை சிங்கள தமிழ் மக்களினால் கோட்டாபய விரட்ட பட்ட வண்ணம் உளளார் .
முள்ளி வாய்க்கால் மக்களின் சாபத்தின் அவலம் இப்பொழுது கோட்டபாயவை துரத்துகிறது .
கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் இன்று காலை (01) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த என்.மதிவண்ணன் மட்டக்களப்பு மாநகர சபையின்
ஆணையாளராக கடந்த 2022.03.31 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட
வெற்றிடத்திற்கு இலங்கை நிருவாக சேவை தரம் – II யைச் சேர்ந்த ஏ.ஜீ.தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டார்.

இவர், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு,
சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முதளிதரன், உதவிப் பணிப்பாளர் திருமதி எஸ்.சரண்யா,

நிருவாக உத்தியோகத்தர் எ.சுவேந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பைஷல் இஸ்மாயில் –
யாழ் சித்த போதனா வைத்தியசாலையில் மூலிகை தகவல் மையம் ஆரம்பித்து வைப்பு
இலங்கை ,யாழ்ப்பாணம் ; யாழ் சித்த போதனா வைத்தியசாலையில் மூலிகை தகவல் மையம் ஆரம்பித்து வைப்பு
பொதுமக்களின் சந்தேகங்களை தீர்த்துவைக்க வைத்திய கலாநிதிகள்
பைஷல் இஸ்மாயில் –
யாழ். கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் மூலிகைகள் மற்றும் நச்சுத்தாவரங்களை பற்றிய தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும்
வகையில் மூலிகை தகவல் மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.ஜெபநாமக்கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் காணப்படும் நச்சுத் தாவரங்கள் மற்றும் அவை தொடர்பான விடயங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
, அவை தொடர்பான அனைத்து விடயங்களையும் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது பற்றிய முழுமையான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சித்த மருத்துவ பேரரறிஞர்கள் மற்றும் சித்த மருத்துவக் கலாநிதிகள்
ஆகியோர்களின் வழி காட்டலின் கீழ் மூலிகை தகவல் மையம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இன்றைய போக்குவரத்து பிரச்சனை மற்றும் மூலிகை தகவல் மையத்துக்கு வருகை தர முடியாதவர்களின் பிரச்சினைகளையும்
கருத்திற்கொண்டு அவர்களுக்கு எழுகின்ற சந்தேகங்களை 021 – 2057104, 077 0661005 தொலைபேசி ஊடாகவோ அல்லது வட்சப் ஊடாகவோ அல்லது
mpicjaffna@gmail.com மின்னஞ்சல் ஊடாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
இலங்கை ,வவுனியா – நேற்று வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
ஆயுதங்களுடன் வருகை தந்த ரவுடி கும்பல் இவரை படுகோரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளது .
சடலத்தில் இவரது கை ஒன்று முற்றாக வெட்டி வீச பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது .
சடலம் மீட்க பட்டு உடல் கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.
இவரது கொலைக்கான காரணம் தெரியவில்லை .இவ்வாறு வெட்டி கொலை செய்ய பட்டவர் குடும்பஸ்தர் என்பது குறிப்பிட தக்கது .
ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்
ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்
இலங்கை,கொழும்பு ,. வீரவில விமானப்படை தளத்தில் பணியாற்றும் விமான படையை சேர்ந்த இராணுவ சிப்பாய் ரயிலுடன் மோதி பலியாகியுள்ளார் .
இவர்கள் பயணித்த வான் ரயிலுடன் மோதியதில் சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் .மேலும் ஒருவர் படுக்கையாமடைந்துள்ளார் .
காயமடைந்தவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.
.பாதுகாப்பற்ற ரயில்வே கடவையை கடக்கும் பொழுதே ரயிலுடன் வான் மோதி இந்த விபத்து சம்பவம் இடமேற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது .
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு
இலங்கை ,கொழும்பு ; இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் பாரூக் புர்கி, 2022 ஜூலை 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அபிவிருத்தியடைந்து வரும் இருதரப்பு உறவுகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்
கலந்துரையாடியதுடன், பல துறைகளில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து திருப்தியை வெளிப்படுத்தினார். இரு வழி உறவுகளை
வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் தீர்மானித்தனர்.
பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளில் கடினமான காலங்களில் பாகிஸ்தான்
அரசாங்கம் வழங்கிய உறுதியான மற்றும் நிலையான ஆதரவை அமைச்சர் பாராட்டினார்.
சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் மீண்டும் சேவையில்
சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் மீண்டும் சேவையில்
இலங்கை ,கொழும்பு ; சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் இன்று (01) முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிக்கையில் ,டயர் மற்றும் உதிரிப்பாகத் தட்டுப்பாட்டினால் இந்த பஸ்கள் சேவையில் இருந்து அகற்றப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
105 டிப்போக்களில் இந்த பஸ்கள் பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. இவ்வாறான பின்னணியில் தற்போது குறித்த
பஸ்கள் செப்பனிடப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி
இலங்கை ,கிளிநொச்சி ; தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயார் என்கிறார் சிறீதரன் எம்.பி
தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயாராகவே நாங்கள் இருக்கிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சி இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது குறித்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம் அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்கவோடும் நாம் பேசுவோம்.
ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேசியிருக்கிறோம் கோத்தபாய ராஜபக்ஷவுடனும் ஒரு தடவை
பேசியிருக்கிறோம் இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்களோ அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்
ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதியன்று பாராளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார் இவர் தனது அக்கிராசன உரையில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிப்பாரா?
அல்லது முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச போன்று அனுராதபுரத்தில் பதவியேற்ற போதும் சரி தனது அக்கிராசன உரையிலும் சரி மக்களால்
விரட்டியடிக்கப்படும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாதது போன்று இவரும் செயற்படுவாரா? எனும் சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது
40 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள ஜனாதிபதி இந்த நாடு இப்படி பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போவதற்கு பிரதான காரணமாக இருந்தது ஒரு இனத்தின் மீது நடைபெற்ற போர்தான் என்பதை புரிந்து
வைத்திருப்பார் எம் மீது நடைபெற்ற இனவழிப்பின் பங்காளியாக இருந்தவர் எமது விடுதலைப் போராட்டத்தை சூழ்ச்சியால் பிரித்த ரணில் விக்கிரமசிங்க நாட்டின்
பொருளாதார நிலையை சீர் செய்ய வேண்டும் என்றால் முதலில் இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்
குறித்த சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பிலும் பொருளாதார பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
அவர்களுடன்
வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.
மக்கள் கொந்தளிப்பை தணிக்க எரிபொருள் விலையை குறைக்கும் ரணில்
மக்கள் கொந்தளிப்பை தணிக்க எரிபொருள் விலையை குறைக்கும் ரணில்
இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் எட்டாவது புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எரிபொருள் விலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளார் .
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் ஐம்பது முதல் நூறு ரூபா வரை குறைக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நாடத்தினால் அது தனது அரசியல் வாழ்வை முடக்கிவிட்டும் என்பதால் ரணில் விக்கிரமசிங்க இந்த அதிரடி விலை குறைப்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளார் .
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளதாலும் இந்த விடயம் கண்துடைப்பு நாடகமாக அரங்கேற்ற படுகிறது .
இந்த எரிபொருள் விலை குறைப்பின் பின்னர் இலங்கையில் ஆளும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி நிலைத்து நிற்குமா .மக்கள் கோபம் தணியுமா என்பதே கேள்வியாக உள்ளது .

























