குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து
Posted in இலங்கை செய்திகள்

குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து

குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து

மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் பயணித்த அதி சொகுசு கார் மெகொட கஜுகஹயத்தெனிய பிரதேசத்தில்
வீதியை விட்டு விலகி வீடொன்றின் சுவரை கவிழ்த்து வீட்டின் முன்பகுதியில் மோதி நின்றுள்ளது.

    கரை ஒதுங்கிய படகில் 47 துப்பாக்கிகள் மீட்பு
    Posted in உலக செய்திகள்

    கரை ஒதுங்கிய படகில் 47 துப்பாக்கிகள் மீட்பு

    கரை ஒதுங்கிய படகில் 47 துப்பாக்கிகள் மீட்பு

    மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகில் ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் அடையாளம் தெரியாத படகு ஒன்றும், ராய்காட் மாவட்டத்தில் உள்ள பரத்கோல் என்ற இடத்தில் ஒரு படகும் இருப்பதை பொலிசார் கண்டறிந்தனர்.

    முன்னதாக ,மும்பையில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் படகு ஒன்று பணியாளர்கள் இல்லாமல் இருப்பதை சில உள்ளூர்வாசிகள் பார்த்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவம் தொடர்பில் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது:

    எந்தவொரு பயங்கரவாத கோணமும் உறுதிப்படுத்தப்படவில்லை. நாங்கள் எதையும் நிராகரிக்கவில்லை. அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்கிறோம். பொலிசார் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளனர். படகில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது.

    படகு அவுஸ்திரேலிய பிரஜைக்கு சொந்தமானது. படகின் இயந்திரம் கடலில் உடைந்ததாகவும், அந்தப் படகில் இருந்தவர்கள் கொரிய படகு மூலம் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது என்றார் ஃபட்னவீஸ்.

    முன்னதாக, ராய்காட் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் துதே மற்றும்
    பிற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படகை சோதனையிட்டனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    காய்ச்சல் நீடித்தால் அதன் அறிகுறி கொரனோ

    காய்ச்சல் நீடித்தால் அதன் அறிகுறி கொரனோ

    ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள்

    வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

    சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இரண்டாவது நாளில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால்இ உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுங்கள்.

    இவ்வாறான நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு ரெபிட் ஆன்டிஜென் பரிசோதனை அல்லது டெங்கு ஆன்டிஜென் பரிசோதனை ஒன்றை மேற்கொள்வது அவசியம்.

    மேலும், காய்ச்சல் ஏற்பட்டு வீட்டில் இருக்கும் நிலைமையில், பரசிட்டமோலை மாத்திரம் கொடுப்பது சிறந்தது. அத்துடன்,


    அவர்களை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட
    வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

      ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ரணில் சந்திப்பு
      Posted in இலங்கை செய்திகள்

      ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ரணில் சந்திப்பு

      ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ரணில் சந்திப்பு

      ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது.

      ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக்

      அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார் (David Mclachlan-Karr), ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹெனா சிங்கர் (Hanaa Singer) மற்றும் ஐக்கிய நாடுகளின்

      வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி (Andreas Karpati) ஆகியோர் கலந்து கொண்டனர்.

      ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, ஜனாதிபதியின் இளைஞர் மற்றும் நிலையான அபிவிருத்தி
      விவகாரப் பணிப்பாளர் ரந்துல அபேதீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து கஞ்சா விற்பனை

        பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து கஞ்சா விற்பனை

        பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

        சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய

        பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.

        இச்சோதனையின் போது சந்தேகநபரிடம் இருந்து 710 மில்லிகிராம் கேரளா கஞ்சாஇ இலத்திரனியல் தராசு மற்றும் 13500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

        சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கை வந்தடைந்த மசகு எண்ணெய் கப்பல்

          இலங்கை வந்தடைந்த மசகு எண்ணெய் கப்பல்

          இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பலில் மசகு எண்ணெய் தரையிறக்கும் பணி இன்று (18) ஆரம்பிக்கப்பட உள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

          100,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெ அடங்கிய குறித்த கப்பல் கடந்த 13ஆம் திகதி இரவு நாட்டை வந்தடைந்தது.

          அதன் ஆய்வக பரிசோதனையின் பின்னர், இன்று முதல் மசகு எண்ணெய் தரையிறக்கும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளது.

          இதன்படி, தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளையும் இந்த வாரம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

          அத்துடன் மேலுமொரு மசகு எண்ணெய் கப்பல் எதிர்வரும் 23 மற்றும் 29ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடைய உள்ளது.

          இந்த கப்பலில் 120,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

          இந்த இரண்டு மசகு எண்ணெய் கப்பல்களும் ரஷ்ய நிறுவனம் ஒன்றிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

            இராணுவ முகம் அருகில் கவிழ்ந்த வாகனம்
            Posted in இலங்கை செய்திகள்

            இராணுவ முகம் அருகில் கவிழ்ந்த வாகனம்

            இராணுவ முகம் அருகில் கவிழ்ந்த வாகனம்

            இலங்கை திருகோணமலை சீனக்குடா விமானப்படை தளத்திற்கு அருகில் ,வான் ஒன்று ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

            சீனக்குடா விமானப்படை இராணுவ முகாம் பகுதியில், உள்ள வளைவு ஒன்றில் திரும்புகையில் ,வேகமாக பயணித்த வாகனம் ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது .


            வாகனம் கவிழ்ந்த பொழுதும் ,அதனை செலுத்திய சாரதி காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டார் .

            சாரதியின் அலட்சிய போக்கே ,மேற்படி வாகன விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

            இலங்கையில் நாள் தோறும் வீதி விபத்துக்களில் சிக்கி, நான்கிற்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

              தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு
              Posted in இலங்கை செய்திகள்

              தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு

              தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு

              திருகோணமலை – புல்மோட்டை கமநல சேவை நிலையத்தில் ஆண்டாங்குள விவசாயிகளுக்கென களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பசளைகளை பிரிதொரு பிரதேசத்துக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்த செயற்பாட்டை குச்சவெளி

              பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்தி பசளைகளை ஆண்டாங்குள விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.

              புல்மோட்டை கமநல சேவை நிலையத்தினால் இந்த விடயம் முன்னெடுக்கப்படுவதை அறிந்து கொண்ட ஆண்டாங்குள விவசாயிகள்

              தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு
              தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு

              குறித்த விடயத்தை குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

              இவ்விடயம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கமநல திணைக்கள ஆணையாளரை தொடர்பு கொண்டு

              ஆண்டங்குள விவசாயிகளின் நிலமையை தெளிவுபடுத்திய பின்னர் மாவட்ட கமநல உதவி ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாக ஆண்டாங்குள

              விவசாயிகளுக்கு உரிய பசளைகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

              இதனை முன்னெடுத்த தவிசாளருக்கு ஆண்டாங்குள விவசாயிகள் நன்றிகளைத் தெரிவித்தனர்.

              பைஷல் இஸ்மாயில் –

                Posted in இலங்கை செய்திகள்

                புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

                புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

                யாழ்ப்பாணத்தில் சிறுமிகள் இருவரை கடத்தி சென்று தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டில் ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

                அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டது.

                சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

                இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிகள் இருவர் வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் வந்து பேருந்து நிலையத்தில் இருந்துள்ளனர்.

                அவர்கள் தொடர்பில் அறிந்த ஆண் ஒருவர், சிறுமிகள் இருவரையும் அழைத்துச் சென்று சாவகச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

                புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

                நேற்று முன்தினம் அந்த விடுதியிலிருந்து வெளியேறிய மூவரும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்.

                அன்றைய தினம் இரவு வாகனம் ஒன்றில் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் என மேலும் நால்வர் இணைந்து வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாழ் பற்றைக் காட்டுக்குள் சிறுமிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.

                அதன்போது சிறுமி ஒருவர் சாதுரியமாகப் பேசி வாகனத்திலிருந்து இறங்கி எழுதுமட்டுவாழில் மக்கள் வாழும் பகுதிக்கு வந்துள்ளார்.

                வீதியில் சென்றவர்களிடம் நடந்தவற்றை தப்பிவந்த சிறுமி தெரிவித்த நிலையில் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கபட்டது.

                மற்றைய சிறுமியுடன் சென்ற ஐவரும் மறுநாள் யாழ்ப்பாணம் நகருக்கு அழைத்து வந்து சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

                சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

                சிறுமிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

                வீட்டைவிட்டு வெளியேறி வந்து துர்நடத்தையில் ஈடுபட்டமையினால் சிறுமிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

                  பெண் எம்பி வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது
                  Posted in இலங்கை செய்திகள்

                  பெண் எம்பி வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது

                  பெண் எம்பி வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது

                  இலங்கையின் MP Kokila Harshani Gunawardena’s எம்பியின் வீட்டுக்குள் நுழைய முயன்ற வாலிபர் கைது செய்ய பட்டுள்ளார் .

                  இருபத்தி ஐந்து வயதுடைய, வாலிபர் ஒருவர் ,இந்த எம்பியின் வீட்டுக்குள், நுழைய முன்றபோது ,காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்.

                  இந்த வாலிபர் ஏன் .இந்த எம்பியின் வீட்டுக்குள். நுழைய முயன்றார் என்பது தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                  வாலிபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றது .

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் பாதுகாப்பு இறுக்கம் இராணுவம் பெருமிதம்

                    இலங்கையில் பாதுகாப்பு இறுக்கம் இராணுவம் பெருமிதம்

                    இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்பது சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு அதிக கவனத்தை கொண்டதாக

                    காணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (ஆகஸ்ட் 17) தெரிவித்தார்.

                    நாட்டில் காணப்படும் சகல விதமான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டி அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

                    தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நடத்தப்படும் “ஆராய்ச்சிக் கருத்தரங்கம் – 2022′ வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் உரையாற்றினார்.

                    இலங்கையில் பாதுகாப்பு இறுக்கம் இராணுவம் பெருமிதம்

                    இந்த கருத்தரங்கு தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதுடன் நாட்டின் நிரந்தரமான அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி

                    செய்வதற்காக எதிர்கால சவால்களை எதிர்கொள்வதிலும் பங்களிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

                    மேற்படி கருத்தரங்கிற்கு வருகை தந்த பிரதம அதிதியான பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன மற்றும் பிரதம பேச்சாளராக கலந்துக்கொண்ட முன்னாள்

                    ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகிய இருவரையும் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வரவேற்றார்.

                    பாதுகாப்பு ஆராய்ச்சியை மேம்படுத்தவும், தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான ஆராய்ச்சி சிந்தனைகளை ஆராய்வதற்கான சூழலை உருவாக்கவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த முதலாவது ஆராய்ச்சி

                    கருத்தரங்கு ‘ பல்நிலை பாதுகாப்பு இயக்கவியலை ஆராய்தல்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இரத்மலானையிலுள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல

                    பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டதாரி கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

                    ஒரு நாட்டின் பிரஜைகள், பொருளாதாரம் மற்றும் பிற நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நாட்டின் அரசாங்கத்தின் திறன் என தேசிய பாதுகாப்பை வரையறுத்த பாதுகாப்பு செயலாளர், நிகழ்காலத்தில் இராணுவமல்லாத தன்மையின்

                    பின்னணியில் பாதுகாப்பின் நோக்கம் பரந்தளவில் பொருளாதார பாதுகாப்பு, அரசியல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, மனித

                    பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதைச் சுற்றியே உள்ளது எனக்கூறினார்.

                    அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ பலம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கங்கள் பயன்படுத்தும் பல்வேறு தந்திரோபாய முறைகளை சுட்டிக்காட்டிய அவர். அதன் பாரம்பரியமாக மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும்

                    இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான இராணுவப் பாதுகாப்பு, வெளிப்புற படையெடுப்புகள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகளிலிருந்து நாட்டைப்

                    பாதுகாப்பதில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வான குடிமகனின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அதிக மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நோக்கி அமைதியாக நகர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

                    ‘தேசிய பாதுகாப்பு’ மற்றும் ‘மனித பாதுகாப்பு’ ஆகியவற்றுக்கு இடையேயான கருத்தியல் வளர்ச்சிகள் மற்றும் வேறுபாடுகளை மேற்கோள் காட்டி, நாட்டின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்பு இயக்கவியலில் இன்று

                    இலங்கையில் பாதுகாப்பு இறுக்கம் இராணுவம் பெருமிதம்

                    உலகளாவிய தொற்றுநோய்களை நிர்வகித்தல், காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் மாற்றியமைத்தல், சுத்தமான நீரைப் பேணுதல், நம்பகமான உணவு விநியோகத்தை பராமரித்தல், தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் சொத்துக்களை

                    பாதுகாத்தல், பொருளாதார மற்றும் அரசியல் இக்கட்டான சூழ்நிலைகளைக் கையாள்வது மற்றும் பல சர்வதேச காரணிகலின் தாக்கத்திற்கு மத்தியில் அரசின்

                    இறையாண்மையைப் பாதுகாக்கும் திறன் ஆகியவற்றையும் உள்ளடக்கும் எனவும் தெரிவித்தார்.

                    ஆயுத மற்றும் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமான மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமடைதல் மற்றும் அதன் விளைவாக கடல் மட்ட உயர்வு மற்றும் வானிலை மாற்றங்கள், அதிகரித்த கடல் மாசுபாடு மற்றும் கடல் சுற்றுச்சூழல் தாக்கம்,

                    குறையும் மீன்வளம், கடல் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை அதிகரிப்பு, இயற்கை அனர்த்தங்களினால் இந்து பெருங்கடலில் சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்

                    ஆகியன இந்து சமுத்திரத்தில் இலங்கையின் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

                    தலைமை உரையை ஆற்றிய லலித் வீரதுங்க அவர்கள் நவீன பாதுகாப்பு அமைப்புகள் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மாத்திரமன்றி இராணுவம் அல்லாத மற்றும் கலப்பு

                    அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுக்கக்கூடியளவில் அமைந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

                    மூன்று அமர்வுகளைக் கொண்ட இக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வின் போது கல்லூரியின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கருணாசேகர வரவேற்புரையை நிகழ்த்தினார்.

                    கல்வியாளர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடையே இணைப்பு வலையமைப்பை வளர்ப்பதற்கும், இன்றைய பாதுகாப்புச் சவால்களுடன்

                    தொடர்புடைய அறிவுசார்ந்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் இது போன்ற ஆராய்ச்சிக் கருத்தரங்கங்கள் உதவியாக அமையும்.

                    இந்நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாருக்கும் திரு.லலித் வீரதுங்க அவர்களுக்கும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கருணாசேகர நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

                    பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர், வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு

                    இணைப்பாளர்கள், ஆலோசகர்கள், புத்திஜீவிகள், சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் உயர்
                    அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

                      இலங்கையில் மின்சாரா ஆட்டோ பயன்பாட்டுக்கு வந்தது
                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் மின்சாரா ஆட்டோ பயன்பாட்டுக்கு வந்தது

                      இலங்கையில் மின்சாரா ஆட்டோ பயன்பாட்டுக்கு வந்தது

                      இலங்கையில் மின்சாரா ஆட்டோ ,மக்கள் பயன் பாட்டுக்கு வந்துள்ளது .

                      இல்;இலங்கையில் ஏற்பட்டுள்ள ,எரிபொருள் நெருக்கடிக்கு, மாற்று திட்டமாக இந்த மின்சார ஆட்டோ தயாரிக்க பட்டுள்ளது .

                      அமெரிக்கா மாறறும் ,இலங்கை நிருவனங்கள், இணைந்து தயாரித்துள்ள, இந்த ஆட்டோ தற்போது ,மக்கள் பாவனைக்கு விட பட்டுள்ளது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        வெளிநாடு செல்ல முயன்ற10 பேர் கைது

                        வெளிநாடு செல்ல முயன்ற10 பேர் கைது

                        இலங்கையில் இருந்து காடல் வழியாக வெளிநாடு செல்ல தயராகி கொண்டிருந்த 10 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்.

                        ஆபத்தான கடல் வழியாக , வெளிநாட்டுக்கு இலங்கையர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.

                        அவ்வாறு , தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து ,படகு மூலம் ,வெளிநாடு ,செல்ல தயாராகி கொண்டிருந்த வேளை இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

                        கைதானவர்கள் ,கடற்படை விசாரணைகளின் பின்னர் .,காவல்துறையிடம் பார்ப்படுத்த பட்டுள்ளனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கொக்கைனுடன் போலந்து நாட்டவர கைது இதன் பெறுமதி 24.5 கோடி

                          கொக்கைனுடன் போலந்து நாட்டவர கைது இதன் பெறுமதி 24.5 கோடி

                          சுமார் 24.5 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் போலந்து நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

                          இவர் கொலம்பியாவில் இருந்து கட்டார் ஊடாக கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                          சந்தேகநபரின் பயணப் பையில் இருந்து 5 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

                          அத்துடன், குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

                            Posted in உலக செய்திகள்

                            லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை

                            லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை

                            பிரிட்டன் லண்டன் கென்ட் பகுதியில் ,கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கு ஏற்படும் எனவும் ,இவ்வேளை மக்களை விழிப்பாக, இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

                            அதிகம் வெப்பம் காரணமாக ,காடுகள் முதல் ,வீடுகள் வரை, எரிந்து அழிந்துள்ளன .

                            அவ்விதமான அதிக வெப்பம் நிலவிய, சில வாரங்களில் மீள ,மழை வெள்ளம் புயல் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

                            பருவகாலங்கள் மாற்றத்தின் சுழற்சியால் ,மழை ,வெள்ளம் ,புயல் ,வெப்பத்தினால் , மக்கள் பெரிதும் துயரினை, சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                              பள்ளி வாசலுக்குள் வெடித்த குண்டு 20 பேர் மரணம் 40 பேர் காயம்
                              Posted in உலக செய்திகள்

                              பள்ளி வாசலுக்குள் வெடித்த குண்டு 20 பேர் மரணம் 40 பேர் காயம்

                              பள்ளி வாசலுக்குள் வெடித்த குண்டு 20 பேர் மரணம் 40 பேர் காயம்

                              ஆப்கானிஸ்தான் தலைநகர் வடக்கு காபூல் பகுதியில் ,பள்ளி வாசல் ஒன்றுக்குள் குண்டு வெடித்து சிதறியது . ,இதன் போது 20 பேர் மரணமாகியும் ,40 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

                              தலிபான்கள் வசம் நாடு வீழ்ச்சியடைந்த பின்னர், நாள்தோறும் பள்ளிவாசல் மற்றும் பொது இடங்களில் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது .

                              இதனால் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

                              தலிபான்கள் சிவில் நிர்வாகம் முடக்க படும் ,தாக்குதலாக இவை பார்க்க படுகிறது .

                              இவ்வாறு தொடர்நதுகுண்டு தாக்குதல்கள் இடம்பெற்றால் ,தலிபான்கள் ஆட்சியும் நாட்டில் சீர்குலைக்க பட்டு , புதிய ஆட்சி பீடம் ,அரியணையில் ஏறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                                வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
                                Posted in இலங்கை செய்திகள்

                                பெண்ணை வீடு புகுந்து கட்டி கொலை செய்து நகை கொள்ளை

                                பெண்ணை வீடு புகுந்து கட்டி கொலை செய்து நகை கொள்ளை

                                இலங்கை உகுரஸ்ஸபிட்டிய பகுதியில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், பெண் ஒருவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பியுள்ளனர் .

                                இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் ,பெண்ணின் வாய் ,கை ,கால்களை, கட்டி போட்டு அவர் அணிந்திருந்த, தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர் .

                                பெண் படுகொலை செய்யப்பட்ட பட்ட நிலையில் ,சடலமாக மீட்க பட்டார் .

                                மீட்க பட்ட பெண்ணின் சடலம் ,உடல்கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

                                கொள்ளையர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

                                இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் சீனா கப்பல் தமிழக கடற்கரையோரங்கள் பாதுகாப்பு இறுக்கம்

                                இலங்கையில் சீனா கப்பல் தமிழக கடற்கரையோரங்கள் பாதுகாப்பு இறுக்கம்

                                சீனா ஆய்வு கப்பல் இலங்கை துறைமுகத்தில் தரித்துள்ளது.

                                சீனாவின் இந்த கப்பல் வருகையை அடுத்து ,தமிழகத்தின் கடல் கரையோரங்கள் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது.

                                ஆறு போர் கப்பல்கள், மற்றும் உலங்குவானூர்திகள் , விமானங்கள் என்பன ரோந்து கண்காணிப்பில் ஈடுபடுத்த பட்டுள்ளன.

                                சீனாவின் இந்த ஆய்வு கப்பல் ,இலங்கை வந்தடைந்துள்ளது .அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது .

                                  இலங்கையில் நடிகர் மம்முட்டி சனத் ஜெயசூரியா சந்தித்தார்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் நடிகர் மம்முட்டி சனத் ஜெயசூரியா சந்தித்தார்

                                  இலங்கையில் நடிகர் மம்முட்டி சனத் ஜெயசூரியா சந்தித்தார்

                                  இலங்கையில் நடிகர் மம்முட்டி திரைப்படம் ஒன்றில் நாடித்திட வந்துள்ளார் .

                                  இவரை இலங்கை கிரிக்கட் வீர்ரர் சனத் ஜெயசூரிய சந்தித்துள்ளார் .

                                  மம்முட்டியை, தான் சந்தித்துள்ளதாக, சனத் ஜெயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் .

                                  மம்முட்டி சனத் ஜெயசூரியா இருவருக்கும் இடையில் நிலவிய நட்பின் காரணமாக, இந்த சநதிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

                                    யாழில் பகிடிவதை பேராசியர் மாணவர்கள் தற்கொலை முயற்சி
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    யாழில் பகிடிவதை பேராசியர் மாணவர்கள் தற்கொலை முயற்சி

                                    யாழில் பகிடிவதை பேராசியர் மாணவர்கள் தற்கொலை முயற்சி

                                    யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசியரையர் அறுவர் உள்ளிட்ட மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

                                    துணை துறை தலைவர் பதவியில் உள்ள ஒருவர் வெளிநாடு சென்று கல்வி கற்க முனைந்துள்ளார் .

                                    ஆனால் அந்த பதவி பறிபோய் விடும் என்ற பீதியில் ,அவர் வெளிநாடு செல்லாது அங்கே கல்வியை தொடர்ந்துள்ளார் .

                                    யாழில் பகிடிவதை பேராசியர் மாணவர்கள் தற்கொலை முயற்சி

                                    இதனால புதிதாக துறை தலைவர் கிடைக்க பெறவிருந்த பேராசிரியர் , யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் முன்னிலையில் ,உடலில் எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார் .

                                    இவரால் இதே பல்கலைக்கழகத்தில் ,18 மாணவர்கள்பகிடிவதை புரிந்தனர் எனவும் ,அதில் சில மாணவர்கள் பெயரை குறிப்பிட்டு, இவர்களே மாபியாக்கள் என திட்டிய நிலையில் ,

                                    மாணவர் ஒருவனும் ,மாணவியும் வீட்டிற்குள் தூக்கு மாட்டி தற்கொலை செய்திட முனைந்துள்ளனர்.

                                    மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.