Tag: தலிபான்
தலிபான் ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை நடத்தியது
தலிபான் ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை நடத்தியது
தலிபான் ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை நடத்தியது ,இரு தரப்பிலிருந்தும் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் முரண்பாடான விபத்துக்களுக்கு மத்தியில், ஆப்கானிஸ்தானின் காந்தஹார்
மாகாணத்தில் உள்ள தலிபான் இராணுவ தளங்கள் மீது
மாகாணத்தில் உள்ள தலிபான் இராணுவ தளங்கள் மீது அந்நாட்டின் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காந்தஹார் மாகாணத்தில் உள்ள தலிபான் ராணுவத்திற்கு சொந்தமான இஸ்மத் ராணுவ தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை
நடத்தியதாக பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் செய்தி நிறுவனமான கொராசன் டைரி தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான் வான்வெளியில் பாகிஸ்தானிய ட்ரோன்களும் காணப்பட்டன, ஏனெனில் அவை மேலும் தலிபான் இராணுவ நிலைகளை அடையாளம் கண்டு குறிவைக்கும் முயற்சிகள் தொடர்ந்தன.
தலிபான்களுக்கும் பாகிஸ்தான் படைகளுக்கும் இடையிலான இரவு நேர மோதல்களில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறிய சிறிது
பாகிஸ்தான் வட்டாரங்கள் இந்தக் கூற்றை நிராகரித்துள்ளன
நேரத்திலேயே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வட்டாரங்கள் இந்தக் கூற்றை நிராகரித்துள்ளன, இஸ்லாமாபாத் விரைவில் ஆப்கானிஸ்தானில் பெரும் உயிரிழப்புகள் மற்றும் பாகிஸ்தான்
துருப்புக்களால் தாலிபான் எல்லை புறக்காவல் நிலையங்கள் கைப்பற்றப்பட்டதற்கான வலுவான மற்றும் மறுக்க முடியாத ஆதாரங்களை வெளியிடும் என்று வலியுறுத்தியுள்ளன.
பாகிஸ்தான் இராணுவம் 19 தாலிபான் எல்லைச் சாவடிகளைக் கைப்பற்றியதாகவும், தலிபான் போராளிகளுக்கு பெரும் இழப்புகளை
ஏற்படுத்தியதாகவும், தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் போராளிக்குழுவின் டஜன் கணக்கான உறுப்பினர்களைக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதியும் பிரதமரும் முன்னதாக தனித்தனி அறிக்கைகளை வெளியிட்டு, ஆப்கானிஸ்தான் தாலிபானின் ஆக்கிரமிப்பு மற்றும்
ஒருதலைப்பட்ச ஆத்திரமூட்டல்களை கடுமையாகக் கண்டித்துள்ளனர், மேலும் பயங்கரவாதத்தை அடக்குவதில் எந்த மெத்தனமும் காட்டக்கூடாது என்று காபூலை எச்சரித்துள்ளனர்.
அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது
அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது
அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது ,இடதுசாரி தலைவர்கள் அதிகாரத்துக்கு வந்த எந்த நாடும் முன்னேற்றமடைந்தும் இல்லை.
அந்த நாட்டு மக்கள் அழகான வாழ்க்கை வாழ்ந்ததும் இல்லை, கியுபா, வெனிசுலா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும் என ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்ட அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தின் நோக்கமாக இருப்பது, வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதாகும்.
ஆனால் இடதுசாரி தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கும் நாட்டில் எங்காவது வளமான நாடு அழகான வாழ்க்கை இருக்குமானால் அந்த நாட்டை இவர்கள் காட்ட வேண்டும்.
கியுபாவின் இடதுசாரி கொள்கையுடைய ஆட்சியாளரான பிடல் கஸ்ட்ரோ சிறந்த ஜனநாயக தலைவர். ஆனால் அவருக்கு அவது நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் போனது.
கியுபாவை வளமான நாடாக்கவோ அந்நாட்டு மக்களுக்கு அழகான வாழ்கையையை ஏற்படுத்திக்கொடுக்கவோ முடியவில்லை. கியுபா உலக நாடுகளில் இருந்து தனிப்பட்டு, ஒதுக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது.
அனுரகுமார திஸாநாயக்கவும் இடதுசாரி கொள்கையுடைய தலைவர். இரண்டு தடவைகள் ஆயுத முனையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தவர்.
அவரே தற்போது ஜனநாயக முறையில் அரசியல் கட்சி ஊடாக அதிகாரத்துக்கு வர முயற்சிக்கிறார்.
அவர்களின் எதிர்காலம் அனைவருக்கும் தெரியும். நாட்டில் வன்முறையை தோற்றுவித்து பல அழிவுகளை மேற்கொண்டவர்கள்.
அதனால் அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் எவ்வாறான நிலை ஏற்படும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
அதேபோன்று வெனிசுலா நாட்டின் தலைவரும் இடதுசாரி கொள்கையுடையவர். அவரின் ஆட்சியின் கீழ் இருந்து 70இலட்சம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
உலக எரிபொருள் உற்பத்தியில் 4ஆவது இடத்தில் வெனிசுலா இருக்கிறது. என்றாலும் அவர்களுக்கு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாமல் போயிருக்கிறது.
அந்த நாட்டு தலைவருக்கும் வெனிசுலாவை வளமான நாடாக்கவோ அந்நாட்டு மக்களுக்கு அழகான வாழ்கையையை ஏற்படுத்திக்கொடுக்கவோ முடியாமல் போயிருக்கிறது.
ஆசியாவில் வட கொரியாவில் இடதுசாரி கொள்கையுடைய ஆட்சியாளரே இருந்து வருகிறார் அங்கு தனி ஆட்சியே இடம்பெறுகிறது. ஜனநாயகம் இல்லை. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் ஒன்றும் தெரியாது.
அந்த நாடும் உலகில் ஏனைய நாடுகளில் இருந்து ஒதுக்கப்பட்டு, சர்வதேச நாடுகளுடன் எந்த தொடர்பும் இல்லாத நாடாகவே இருந்து வருகிறது.
அதேபோன்று சீனாவில் இடதுசாரி கொள்கையுடைய கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரமே இருக்கிறது.
வேறு கட்சிகள் அங்கு இல்லை. அந்த நாடு வளமான நாடு. ஆனால் அந்த நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம் இல்லை.ஊடக, கலாசார சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நாடாகும்.
அதனால் இடதுசாரி கொள்கையுடைய தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கும் எந்த நாட்டிலும் அனுரகுமார ஏற்படுத்தப்போகும், வளமும் இல்லை.
அந்த மக்களுக்கு அழகான வாழ்க்கையும் இல்லை. அதேநேரம் அடிப்படைவாத கொள்கையுடைய தலிபான் ஆட்சியை போன்ற ஆட்சிக்கே அனுரகுமார முயற்சிக்கிறார்.
அந்த நிலைக்கு எமது நாட்டை கொண்டு செல்ல மக்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.
ஈரான் முக்கிய நபரை விடுவித்த தலிபான்|Taliban |Ethiri News iran |today iran tamil news
ஈரான் முக்கிய நபரை விடுவித்த தலிபான்|Taliban |Ethiri News iran |today iran tamil news
தாலிபான்களால் சிறை பிடிக்க பட்டிருந்த ஈரான் முக்கிய நபர் திடீர் விடுதலை ,
உள்ளே நடந்த இரகசிய டீல் ,அடுத்து நடக்க போகும் அந்த கூட்டு நகர்வு ,அலறும் எதிரிகள் ,
- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்by நிருபர் காவலன்
- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்by நிருபர் காவலன்
- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவுby நிருபர் காவலன்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
பள்ளி வாசலுக்குள் வெடித்த குண்டு 20 பேர் மரணம் 40 பேர் காயம்
பள்ளி வாசலுக்குள் வெடித்த குண்டு 20 பேர் மரணம் 40 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் வடக்கு காபூல் பகுதியில் ,பள்ளி வாசல் ஒன்றுக்குள் குண்டு வெடித்து சிதறியது . ,இதன் போது 20 பேர் மரணமாகியும் ,40 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் வசம் நாடு வீழ்ச்சியடைந்த பின்னர், நாள்தோறும் பள்ளிவாசல் மற்றும் பொது இடங்களில் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது .
இதனால் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
தலிபான்கள் சிவில் நிர்வாகம் முடக்க படும் ,தாக்குதலாக இவை பார்க்க படுகிறது .
இவ்வாறு தொடர்நதுகுண்டு தாக்குதல்கள் இடம்பெற்றால் ,தலிபான்கள் ஆட்சியும் நாட்டில் சீர்குலைக்க பட்டு , புதிய ஆட்சி பீடம் ,அரியணையில் ஏறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாடு தமது கட்டு பாட்டுக்குள், வீழ்ந்த நிகழ்வு நாளினை, தலிபான் போராளிகள் ,குதூகலமாக கொண்டாடி வருகின்றனர் .
தலிபான்கள், உலக நாடுகளினால் ,பயங்கரவாதைகள் என சித்தரிக்க பட்டு தடை விதிக்க பட்டிருந்தது.
,அவ்வாறான தீவிரவாதிகள் , இன்று ஒரு நாட்டை ஆட்சி செய்கின்றனர்.
உலக வல்லரசுகள். தமது நலனுக்கு , ஒரு போராளி குழுவை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி ,அந்த அமைப்பின் மீது பழிவாங்கும் துடைத்தழிப்பு தாக்குதலை நடத்தும் .
அவ்வாறு தான் ,தலிபான்கள் மீது அமெரிக்கா கூட்டு நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தின .
ஆனால் முடிவில் ,இன்று ஆப்கானிஸ்தான் ,தலிபான்கள் வசம் வீழ்ந்துள்ளது .
அரச இராணுவம் பயன் படுத்தி வந்த , அனைத்து விதமான ஆயுத தள பாடங்களும் ,தலிபான்கள் வசம் வீழ்ந்தது .
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
தற்போது போர் விமானங்கள் ,யுத்த டாங்கிகள்,ஏவுகணைகள் வரை தலிபான்கள் தமது வச படுத்தியதுடன் ,புதிய ஆயுத தளபாடங்களையும் உத்தியோக பூர்வமாக தயாரித்து வருகின்றனர்.
உலகில் தடை செய்ய பட்ட ,ஒரு போராளி குழு ,ஒரு நாட்டை ஆக்கிரமித்து ,அந்த அரசை ஒட வைத்து ,வெற்றி கண்டது எனின் ,தற்காலத்தில் தலிபான்கள் தான் என்பது வரலாறாக படிந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் புகும் நாடுகள் , ஆட்சி கவிழ்க்க பட்டு ,அந்த நாடு போராளிகள் வசம் சென்றுள்ள, வரலாறு தலிபான்கள் மூலம் மீளவும் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் இரண்டாவது பாதுகாப்பு நிறைந்த நகரமாக வர்ணிக்க படும் பகுதியில் வைத்து தலிபான்களின் முக்கிய தளபதி Rahimullah Haqqani அவர்கள் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுளளார் .
இவரது மதவாத பள்ளிக்குள் உடலில் வெடிகுண்டு நிரப்பிய படி சென்ற நபர் நடத்திய மனித வெடிக்கு தாக்குதலின் போதே இந்த தளபதி பலியாகியுளளார்.
இவருடன் மேலும் பத்து பேர் இந்த தாக்குதலில் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர்.
தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
இவர் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .
தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பின்னர் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல் உத்தியை பயன் படுத்தி அவர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்து நடத்த பட்டு வருகிறது .
இவ்வாறன தாக்குதல் தாலிபான்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணம் பயன்படுத்த தடை
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணம் பயன்படுத்த தடை
ஆப்கானிஸ்தானில் கடைகளில், சந்தைகளில் அமெரிக்க டாலர் பரவலாக புழக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணம் பயன்படுத்த தடை- தலிபான்கள் அதிரடியால் புதிய நெருக்கடி
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. எந்த நேரமும் துப்பாக்கியும், கையுமாக அலைந்து கொண்டிருக்கிற தலிபான்களின் நிர்வாகம் அங்கு வந்து
விட்டது. தலிபான்கள் அங்கு ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததைத்தொடர்ந்து, பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டு சொத்துகளை அமெரிக்க ரிசர்வ் வங்கியும்,
ஐரோப்பிய மத்திய வங்கிகளும் முடக்கி உள்ளன. சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கூட ஆப்கானிஸ்தானுக்கு எந்த நிதி உதவியும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டன.
இதனால் ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. இந்த நிலையில் புதிய நெருக்கடியாக, அங்கு வெளிநாட்டு பணத்தை பயன்படுத்துவதற்கு தலிபான்கள் அதிரடியாக
தடை விதித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும்,
வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், பொதுமக்களும் இனி எல்லா பரிமாற்றங்களையும் ஆப்கானியைக்கொண்டு (ஆப்கானிஸ்தான் பணம்) மட்டுமே செய்ய வேண்டும். வெளிநாட்டு
பணங்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. யாரேனும் மீறி பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது வரும்” என கூறி உள்ளார்.
பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான்கள் கூறி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடைகளில், சந்தைகளில் அமெரிக்க டாலர் பரவலாக புழக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தலிபான்கள் ஆட்சியில் இரட்டை குண்டு வெடிப்பு
தலிபான்கள் ஆட்சியில் இரட்டை குண்டு வெடிப்பு
ஆப்கான் நாட்டில் தற்போது தலிபான்கள் ஆண்டு வருகின்றனர் ,இவர்களது ஆட்சியில் தற்போது இரட்டை குண்டு தாக்குதல் ஒரே நாளில் இடம் பெற்றுள்ளது
சம்பவ இடத்தில் பத்து பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS

தலை முடி ஆடம்பரமாக வெட்டினால் சிறை -தலிபான்கள் அதிரடி அறிவிப்பு
தலை முடி ஆடம்பரமாக வெட்டினால் சிறை -தலிபான்கள் அதிரடி அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு, அடுத்தடுத்து தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
அந்த வகையில் அந்த நாட்டில் ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை வெட்டுவதற்கோ, மழிப்பதற்கோ முடிதிருத்தம் செய்யும் தொழிலாளிகளுக்குத் தடை விதித்து தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
அதேபோல வித வித வடிவிலான சிகை அலங்காரம் செய்து கொள்வதையும் தலிபான்கள், ஹெல்மண்ட் மாகாணத்தில் தடை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், சலூன்களில் பாட்டு மற்றும் இசை சார்ந்து எதையும் ஒலிக்கச் செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
தலிபான் அமைப்பின் பழமைவாத கொள்கைகளால் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவதாக தொடர்ந்து
செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், முடி திருத்தம் செய்வதிலும் அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன..
தாடி அகற்ற தலிபான்கள் தடை – கடுப்பில் ஆண்கள்
தாடி அகற்ற தலிபான்கள் தடை – கடுப்பில் ஆண்கள்
ஆப்கான் நாட்டில் ஆண்கள் அனைவரும் தாடி வளர்க்க வேண்டும் என தலிபான்கள்
அறிவித்துள்ளனர்
தாடியை முகத்தில் இருந்து நீக்கம் செய்தல் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க படும் என்ற
அறிவிப்பு ஆண்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
குற்றங்கள் செய்தால் அந்த தண்டனை உறுதி- தலிபான்
குற்றங்கள் செய்தால் அந்த தண்டனை உறுதி- தலிபான்
எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றியதைபோல மத சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் சிறைத்துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
குற்றங்கள் செய்தால் அந்த தண்டனை உறுதி- தலிபான்களின் அதிர்ச்சி அறிவிப்பு
தலிபான் தலைவர்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலிபான்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைத்து உள்ளனர். அங்கு ஷரியத் சட்டப்படி ஆட்சி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குற்றங்கள் செய்தால் கை-கால்கள் வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். முன்பு தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் சிறைத்துறை பொறுப்பாளர் முல்லா நூருதீன் துராபி கூறியதாவது:-
எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றியதை போல மத சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும். மரண தண்டனைகள், கை-கால்களை வெட்டுதல் போன்ற தண்டனைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ஆப்கானிஸ்தானில் கெடுபிடிகளை அதிகரிக்கும் தலிபான்கள்
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுப்புகளை துண்டிக்கும் தண்டனை மிகவும் அத்தியாவசியமானது. 1990-ம் ஆண்டுகளில் இந்த தண்டனைகள் பொது இடங்களில் நிறைவேற்றப்பட்டன.
இந்த தடவை பொதுமக்கள் முன்னிலையில் இல்லாமல் தனி இடங்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படலாம். முன்பு பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை எழுந்தது தேவை இல்லாதது. எங்களது சட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்று யாரும் எங்களுக்கு சொல்லத்தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முந்தைய தலிபான்கள் ஆட்சியின்போது நிதித்துறை அமைச்சராக இருந்த துராபி இசையை கேட்பவர்களுக்கு தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கினார்.
காபூல் விளையாட்டு மைதானத்தில் மரண தண்டனைகளை நிறைவேற்றியது உள்ளிட்ட மிக கடுமையான செயலுக்காக ஐ.நா.வின் தடை பட்டியலில் அவர் இடம் பெற்றுள்ளார்.
மகளிர் நல அமைச்சகத்தை கலைத்த தலிபான்
மகளிர் நல அமைச்சகத்தை கலைத்த தலிபான்
ஆப்கானிஸ்தானின் பெண்கள் விவகார அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் வரக்கூடாது என்று தலிபான்கள் திருப்பி அனுப்பி விட்டனர்.
மகளிர் நல அமைச்சகத்தை கலைத்த தலிபான்- அதுக்கு என்ன பெயர் மாற்றியுள்ளார்கள் தெரியுமா?
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். 33 பேர் கொண்ட அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை.
தலிபான்கள் ஆட்சியை பிடித்ததால் ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமை கேள்விக்குறியாகி உள்ளது என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஏற்கனவே ஆட்சியில் தலிபான்கள் இருந்தபோது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். பெண்கள் வேலைக்கு செல்வதை தடை செய்திருந்தனர். தற்போது அதுபோன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தலிபான்கள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் அவர்கள் பெண்கள் மீதான பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பெண்கள் விவகார அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் வரக்கூடாது என்று திருப்பி அனுப்பி விட்டனர். இதே போல பல இடங்களில் வேலைக்கு செல்லும் பெண்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் பெண்கள்
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மகளிர் நல அமைச்சகத்தை தலிபான்கள் கலைத்துள்ளனர். அந்த அமைச்சகத்துக்கு பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகம் என்று பெயரை மாற்றி உள்ளனர்.
இந்த அமைச்சகம் ஏற்கனவே 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது செயல்பாட்டில் இருந்தது. இந்த அமைச்சகம் சார்பில் பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள். உறவினர்களுடன் செல்லாமல் தனியாக செல்லும் பெண்களுக்கு தண்டனை கொடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வே தூதரகத்தைக் கைப்பற்றிய பின்னர் தலிபான் செய்த அட்டூழியம்
நார்வே தூதரகத்தைக் கைப்பற்றிய பின்னர் தலிபான் செய்த அட்டூழியம்
தலிபான், வெளிநாடுகளின் தூதர கட்டிடங்களை எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்திருந்தனர். ஆனால் அவர்களின் செயல்பாடு அதற்கு மாறாக உள்ளது.
காபூலில் உள்ள நார்வே தூதரகத்தைக் கைப்பற்றிய பின்னர் தலிபான் செய்த அட்டூழியம்
நார்வே தூதரகத்தில் தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது தலிபான் அமைப்பு. தற்போது அரசமைப்பதில் தலிபான் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.
அதே நேரத்தில் தலிபான்களின் பழமைவாத கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும் கொதிப்பில் உள்ள ஒரு பகுதி மக்கள், அவர்களுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரமற்றத் தன்மை நிலவி வருகிறது.
இந்நிலையில் காபூலில் இருக்கும் நார்வே நாட்டுத் தூதரகத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான், பல அட்டூழியங்களை அங்கு நிகழ்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Taliban has now taken over the Norwegian Embassy in Kabul. Say they will return it to us later. But first wine bottles are to be smashed and childrens’ books destroyed. Guns apparently less dangerous. Foto: Aftenposten, Norway
— Ambassador Sigvald Hauge (@NorwayAmbIran) September 8, 2021
இது குறித்து ஈரான் நாட்டுக்கான நார்வே தூதர் சிக்வால்டு ஹாக், ‘தலிபான்கள், தற்போது காபூலில் இருக்கும் நார்வே தூதரகத்தைக் கைப்பற்றியுள்ளனர். எங்கள் நாட்டுத் தூதரகத்தை மீண்டும் ஒப்படைப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் அங்கிருக்கும் ஒயின் பாட்டில்களை உடைத்துள்ளனர். சிறுவர்களுக்கான புத்தகங்களை அழித்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை துப்பாக்கிகள் மிக ஆபத்துக் குறைவானவை போல’ என்று வருத்தத்துடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் தலிபான், வெளிநாடுகளின் தூதர கட்டிடங்களை எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்திருந்தனர். ஆனால் அவர்களின் செயல்பாடு அதற்கு மாறாக உள்ளது.
ஆப்கான் முழுவதும் எமது காட்டு பாட்டில் – தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கான் முழுவதும் எமது காட்டு பாட்டில் – தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கான் முழுவதும் தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தாலிபான்களை அறிவித்துள்ளனர் ,இறுதியாக போரிடம்பெற்ற இறுதி மாநிலமும் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்
அரச இராணுவம் தலிபான்கள் வசம் சரண் அடைந்துள்ளனர் ,
அங்கு குவிக்க பட்டிருந்த முள் ஆயுத தளபாடங்களும் மீட்க பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்
சீனா எங்களின் முக்கிய கூட்டாளி- தலிபான்கள் அறிவிப்பு
சீனா எங்களின் முக்கிய கூட்டாளி- தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம் என தலிபான்கள் தெரிவித்தனர்.
சீனா எங்களின் முக்கிய கூட்டாளி- தலிபான்கள் அறிவிப்பு
ஜபிபஹுல்லா முஜாஹித்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறியதாவது:
சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஓர் அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம், நவீனமயமாக்கலாம். அதோடு சீனாவின் மூலமாக உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எங்கள் சுரங்க தயாரிப்புகளை எடுத்துச் செல்லலாம். சீனாவை ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்க முயற்சிக்கும் சீனாவின் ‘ஒன் பெல்ட், ஒன் ரோடு’ முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என கூறினார்
தலிபான் அரச இராணுவம் கடும் மோதல் – 350 போராளிகள் படுகொலை
தலிபான் அரச இராணுவம் கடும் மோதல் – 350 போராளிகள் படுகொலை
ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி இடம்பெற்று வருகிறது ,ஆனாலும் இராணுவம் ஒருபகுதியில் முடக்க பட்ட நிலையில் தொடர்ந்து உக்கிரமோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவ்வேளை கடந்த இரு நாடுகளில் அரச இராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையில் இடம்பெற்ற
மோதல்களில் சிக்கி 350 தலிபான்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் 35 பேர் உயிருடன் சிறை பிடிக்க பட்டுள்ளனர் என பிராந்திய வல்லரசின் இராணுவம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
விமான நிலையம் மீது தற்கொலை தாக்குதல் -அடங்குமா தலிபான் ..?
விமான நிலையம் மீது தற்கொலை தாக்குதல் -அடங்குமா தலிபான் ..?
ஆப்கான் தலைநகர் காபூல் விமான தளம் மீது திடீரென தற்கொலை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி ஆறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர்
ஒரு வாரத்தில் இடம் பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாக பதிவாகியுள்ளது
தொடர்ந்து இது போன்ற குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
இராணுவம் மீது தாலிபான்கள் திடீர் தாக்குதல் – 6 பேர் மரணம்
இராணுவம் மீது தாலிபான்கள் திடீர் தாக்குதல் – 6 பேர் மரணம்
ஆப்கானிஸ்தான் அரச இராணுவத்தினரின் சோதனை காவலரனை இலக்கு வைத்து தாலிபான்
போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ஆறு இராணுவத்தினர் பலியாகினர் ,மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் .
கடந்த வாரம் தாலிபான்கள் மீது அரச இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலில் இருநூறு தாலிபான்கள் பலியாகினர்
அதனை அடுத்து அரச இராணுவத்தினர் இலக்குகளை குறிவைத்து பரவலான தாக்குதல்களை போராளிகள் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது























