இராணுவ முகம் அருகில் கவிழ்ந்த வாகனம்
இலங்கை திருகோணமலை சீனக்குடா விமானப்படை தளத்திற்கு அருகில் ,வான் ஒன்று ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
சீனக்குடா விமானப்படை இராணுவ முகாம் பகுதியில், உள்ள வளைவு ஒன்றில் திரும்புகையில் ,வேகமாக பயணித்த வாகனம் ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது .
வாகனம் கவிழ்ந்த பொழுதும் ,அதனை செலுத்திய சாரதி காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டார் .
சாரதியின் அலட்சிய போக்கே ,மேற்படி வாகன விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நாள் தோறும் வீதி விபத்துக்களில் சிக்கி, நான்கிற்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .