கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

நுவரெலியா பிரதேச செயலகத்தின் கீழ்,பொருளாதார ரீதியில் பின்தங்கிய இருபது பாடசாலைகளைச் சேர்ந்த 7500 மாணவர்களுக்கு, அப்பியாச கொப்பிகள் திங்கட்கிழமை (31) வழங்கிவைக்கப்பட்டன.

பெரெண்டினா நிறுவனத்தின் அறிவிச்சுடர் கல்வி மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில்,பிரதம விருந்தினராக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட கலந்து சிறப்பித்தார். மற்றும் நுவரெலியா வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பெரெண்டினா நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் சக உத்தியோகத்தர்கள் . அதிபர்கள் , ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை காப்போம் நிறுவனத்தினால் கற்றல்

உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (23) மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

மட்டு. ஊடக அமையத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம

காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அதிதியாக இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரன் (திலிப்) கலந்துகொண்டு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணிகளை வழங்கி வைத்தார்.

இலங்கை பத்திரிகை பேரவையின் 22வது ஆண்டின் மருத்துவக் கட்டுரைக்கான உயர் ஊடகவியல் தேசிய விருதைப்பெற்ற ஊடகவியலாளர் மட்டு.துஷாரா மற்றும் சமூக விழிப்புணர்வு, கலை கலாசார மருத்துவ

ஆக்கங்களை பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்தி வருகின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் ஆகியோர்களை இந்நிகழ்வின்போது

காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரனால் பாராட்டி ஞாபகச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், காப்போம் நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அபு அலா –

No posts found.
தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு

தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு

திருகோணமலை – புல்மோட்டை கமநல சேவை நிலையத்தில் ஆண்டாங்குள விவசாயிகளுக்கென களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பசளைகளை பிரிதொரு பிரதேசத்துக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்த செயற்பாட்டை குச்சவெளி

பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்தி பசளைகளை ஆண்டாங்குள விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.

புல்மோட்டை கமநல சேவை நிலையத்தினால் இந்த விடயம் முன்னெடுக்கப்படுவதை அறிந்து கொண்ட ஆண்டாங்குள விவசாயிகள்

தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு
தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு

குறித்த விடயத்தை குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கமநல திணைக்கள ஆணையாளரை தொடர்பு கொண்டு

ஆண்டங்குள விவசாயிகளின் நிலமையை தெளிவுபடுத்திய பின்னர் மாவட்ட கமநல உதவி ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாக ஆண்டாங்குள

விவசாயிகளுக்கு உரிய பசளைகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனை முன்னெடுத்த தவிசாளருக்கு ஆண்டாங்குள விவசாயிகள் நன்றிகளைத் தெரிவித்தனர்.

பைஷல் இஸ்மாயில் –