Author: நலன் விரும்பி
முல்லையில் கத்தி குத்து – உயிருக்கு போராடும் பாதிக்க பட்டவர்
முல்லையில் கத்தி குத்து – உயிருக்கு போராடும் பாதிக்க பட்டவர்
முல்லைதீவு நீராவிப்[பிட்டி பகுதியில் நபர் ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த கத்தி குத்து தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் தற்போது யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில்
அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
முரசுமோட்டையில் -ஆட்டிறைச்சியுடன் சாராய விருந்துபசார சலுகைக்கு விலைபோன அரச அதிகாரிகள் – VIDEO
ஆட்டிறைச்சியுடன் சாராய விருந்துபசார சலுகைக்கு அரச அதிகாரிகள் விலைபோயுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளே இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர்
. முரசுமோட்டை பகுதியில் பெரும்பாக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தியின் உத்தரவுக்கு அமைவாக 6 ஏக்கர் செய்கை நிலம் அழிக்கப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மை நிலையை ஆராய இன்று ஊடகவியலாளர்கள் சிலர் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சென்றனர். விவசாயிகள்
எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பெரும்பாக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தியிடம் வினவியபோது தெளிவான விடயங்களை வழங்க மறுத்தார்.
ஊடகவியலாளர்களாக அல்லாது பொதுமகனாக விளக்கம் வழங்கப்பட வேண்டும் எனவும், விளக்கத்தை தெளிவாக வழங்குமாறும் அவரிடம் வினவினர். ஆனாலும், தனது அரச வேலைக்கு
இடையூறாக காணப்படுவதாகவும், தனக்கு விளக்கமாக விடயங்களை வழங்க முடியாது எனவும் பெரும்பாக உத்தியோகத்தரான சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறிதத் விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு முறைப்பாடடு புத்தகம் அல்லது முறைப்பாட்டு பெட்டி உள்ளதா என அங்கிருந்த உத்தியுாகத்தர்களிடம் வினவியபோது அவ்வாறான எதுவும் இல்லை என தெரிவித்ததுடன், குறித்த பெரும்பாக உத்தியோகத்தரிடம்
வினவினர். குறித்த புத்தகம் அங்கேதும் இருக்கும் எடுத்து அவர்களிடம் கொடுங்கள் என அசாட்டாக பதிலளித்துள்ளார். இதன்போது புதிதாக எவ்விடயமும் குறிப்பிடப்படாத குறிப்பு புதிய புத்தகம் ஒன்று உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டதுடன், அப்புத்தகத்தில் ஊடகவியலாளர்கள் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.
கிளிநொச்சியில் சிறுபோக செய்கை இடம்பெற்று வரும் நிலையில் காலபோகம் மேற்கொண்டவர்களே சிறுபோகம் செய்ய வேண்டும் என பெரும்பாக உத்தியோகத்தரின்
தன்னிச்சையான முடிவு விவசாயிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் உண்மைநிலையை அறிய சென்ற போதே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக உண்மைநிலையை கண்டறிய முடிந்தது. இரண்டு போகங்கள் செய்யக்கூடிய காணியில்
காலபோக செய்கை இவ்வருட ஆரம்ப பகுதியில் நிறைவடைந்தது. தற்போது சிறுபோக செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் காலபோகம் செய்தவர்களே சிறுபோக செய்கையும் மேற்கொள்ள வேண்டும் என கமநல சேவைகள் திணைக்களம் கட்டுப்பாடு ஒன்றை தாமே முன்வைத்துள்ளது.
ஆனாலும் குறித்த வரையறையானது மாவட்ட விவசாய திட்டமிடல் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும், அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பெரும்பாக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தி தெரிவிக்கின்றார்.
காலபோக செய்கை மேற்கொள்வதற்காக பல காணி உரிமையாளர்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு குத்தகைக்கு வழங்கியும், உறவினர் நண்பர்களிற்கு வழங்கியும் உள்ளனர்.
இதனால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக செய்கையை காணி உரிமையாளர்கள் மேற்கொள்ளவோ அல்லது வேறு நபர்களிற்கு குத்தகைக்க வழங்கவோ முடியாத நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் முரசுமோட்டை பகுதியில் காணி உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட 6 ஏக்கர் செய்கை மேற்கொள்ளப்பட்ட காணி குறித்த பெரும்பாக உத்தியோகத்தரினால்
காலபோகம் செய்த நபருக்கு அழித்து விதைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் காணி உரிமையாளர் 119 ஊடாக பொலிசாருக்கு அவசர அழைப்பு விடுத்து நடவடிக்கை மேற்கொள்ள முயன்றபோது குறிதத் காணியை அழித்து விதைப்பதற்கு பெரும்பாக
உத்தியோகத்தர் சுந்தரமூர்தியே அறிவுறுத்தியதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட விவசாயி குறிப்பிடுகின்றார்.
குத்தகைக்கு வழங்கப்பட்ட நபருடனான ஒப்பந்தமானது சட்டத்தரணி ஊடக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது எனவும், காணி உரிமையாளரான தாம் சிறுபோக செய்கை
மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டபோது பெரும்பாக உத்தியோகத்தர் கடமையை செய்வதற்கு இழுத்தடிப்பு மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவிக்கின்றார்.
கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களிற்கு ஆடு அடிச்சு, சாராயத்துடன் விருந்து வைத்த சம்பவம் தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவிக்கின்றார்.
காலபோக செய்கை மேற்கொண்டவர்கள்தான் சிறுபோக செய்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெரும்பாக உத்தியுாகத்தர்
குறிப்பிட்ட புாதிலும், குறித்த கூட்டறிக்கையின் குறிப்பினை காண்பிக்குமாறு கேட்டபோது அக்குறுிப்பு தமக்கு கிடைக்கவில்லை என்று சாட்டுப்போக்கினையே அவர் கூறினார்.
குறித்த விடயத்தின் உண்மைத்தன்மையை அறிவதற்கு மாவட்ட செயலகத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சிலரை நேரடியாக சந்தித்து வினவியபோது, அவ்வாறான கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
பெரும்பாக உத்தியோகத்தர் தொடர்பில் விவசாயிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை அறிந்து, விவசாயிகளிற்கு நேர்மையாக மேற்கொள்ளவேண்டிய சேவைகளை மேற்கொள்ளத்தவறியமை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுமக்களின் கருத்தை கேட்க தவறியமை, முறைப்பாட்டு புத்தகம் அல்லது முறைப்பாட்டு பெட்டியை அலுவலகத்தில் காண்பிக்க தவறியமை, எடுக்கப்படாத தீர்மானம் ஒன்றை
நடைமுறைப்படுத்த முற்றப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கிளிநொச்சி கமநலசேவைகள் திணைக்கள பெரும்பாக உத்தியுாகத்தர் சுந்தரமூர்த்தி மீது விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிருபர் – சங்கிலியன்
தீவிரவாத தேரர்கள், இன்னொரு “ரவுண்ட்” ஆடப்பார்க்கிறார்கள்-மனோ கணேசன்
பெளத்த அமைப்புகளுக்கு அரசு தடை எனக்கூறி, தீவிரவாத தேரர்கள், இன்னொரு “ரவுண்ட்” ஆடப்பார்க்கிறார்கள்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர் ஆகிய பெளத்த தீவிரர்கள், இப்போது புதிய பாடல் ஒன்றை பாடுகிறார்கள்.
இந்த அரசு தமது பெளத்த அமைப்புகளை தடை செய்ய போகிறது என்ற புரளியை கிளப்பி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.
உண்மையில் இந்நாடு உருப்பட வேண்டுமானால், பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தடை செய்யத்தான் வேண்டும். நான் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரிப்பேன்.
ஆனால், இந்த அரசு இப்போது இவர்களை தடை செய்து தற்கொலை செய்ய போவதில்லை என தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
முஸ்லிம் அரசியல்வாதிகள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ரிசாத், ரவுப் மீது, உயிர்த்த ஞாயிறு குண்டு தொடர்பில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கான சாட்சியம் இல்லை. அப்படி சாட்சியங்கள் இருந்தால், இந்த அரசே சும்மா விடாது.
தேரர்களிடம் சாட்சியம் இருந்தால் அதை விசாரணை கமிசனிடம் அவர்கள் தர வேண்டும். ஆனால், அப்படி இவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை.
தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மட்டுமே இருக்கிறது. தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி பேசும் இவர்கள் தமது அடிப்படைவாத, இனவாதத்தை தேசபக்தியாக காட்டுகிறார்கள்.
ஆகவே இன்று, அரசின் பிரதான கட்சியில் உள்ள தீவிரவாதிகளையும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட நபர்களையும் கொண்டு, எதிரணியிலும் சிங்கள பெளத்த தீவிரர்கள்
கிடைத்தால், அவர்களையும் சேர்த்து, இந்த அரசின் மீதான சிங்கள மக்களின் அதிருப்தியை திசை திருப்பி, மீண்டும் ஒருமுறை சிங்கள பெளத்த அரசு ஒன்றை அமைக்க முயல்கிறார்கள்.
அதாவது இன்னொரு ரவுன்ட் வர முயல்கிறார்கள்.
இனிவரும் மாற்று அரசு, ஒரு சிங்கள பெளத்த அரசாக இருப்பதை நாம் ஏற்க முடியாது. உலகமும் ஏற்காது. அது ஒரு இலங்கை (ஸ்ரீலங்கா) அரசாக மட்டுமே இருக்க முடியும்.
இல்லாவிட்டால் அடுத்த இரண்டு வருடத்தில், இலங்கை நாடு அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் தோற்றுப்போன நாடாக உலகில் ஒதுக்கப்படும். அதன்பிறகு சாம்பலில் இருந்து எழுந்து வர வேண்டியதுதான்
ஈழத்தமிழர்களின் உற்ற தோழர் – அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு !
ஈழத்தமிழர்களின் உற்ற தோழர் – அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு !
அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் மேற்சபை உறுப்பினருமாகிய ஈழத்தமிழர்களின் மதிப்புக்குரிய ராம்சி கிளர்க்கின் மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை ‘வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு’ என்று அமெரிக்க அரசு அறிவித்த போது, சட்டத்தரணி என்ற முறையில் ராம்சி கிளர்க் அவர்கள,; அதனை எதிர்த்து விடுதலைப் புலிகள் சார்பில் வழக்காடியிருந்தவர்.
அன்னாரின் இழப்பு தனது ஈழத்தமிழர் தேசத்தின் இரங்கலைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதியும், சுதந்திர அரசியல் இறைமையும் கொண்ட தமிழீழ அரசை நிறுவிக்
கொள்வதற்குமான ஈழத்தமிழர் போரட்டத்தின் அயரா ஆதரவாளரான விளங்கிய அமரர் ரம்சி கிளர்க், ஈழத்தமிழர்களின் மதிப்புக்குரிய கூட்டளியாகத் திகழ்ந்தார் என தெரிவித்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொலம்பியா மாநில அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாட்டு அமைப்பு அல்லவென்றும், அது ஒரு மெய்ந்நிலை அரசாங்கம் என்றும், தமிழீழ
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் பன்னாட்டுச் சட்டக் கொள்கைகளின் படி நடப்பது’ என்றும் தனது வாதுரையின் போது குரல் கொடுத்திருந்தவர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தேசிய விடுதலை இயக்கம் ஆகும், ஈழத்தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்றும் ஆகும் அமரர் கிளர்க் உறுதியாக நம்பினார்.
பொதுவெளிகளிலோ அல்லது சகசட்டத் தரணிகளுடனும் கல்வியாளர்களுடனும் தனிப்பட்ட உரையாடல்களிலோ இதைச் சொல்ல அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் சட்ட அறிவுரையினை அமரர் கிளர்க் அவர்கள் வழங்கி வந்தார்.
இறுதி போரின் போது தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாவதற்கு எதிராகக் கிளர்க் குரல் கொடுத்தார். அமெரிக்காவில் தமிழர்கள் ஒழுங்கு செய்த போராட்டங்களிலும் கலந்து கொண்டார். குறிப்பாக நியு யோர்க்கில் 5 ஈழத் தமிழர்கள் மேற்கொண்டிருந்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்தினை நிறைவு செய்து வைத்தவர்.
2009ம் ஆண்டு பெரும் இனஅழிப்பு போரின் மூலம் தமிழர் தேசம் ஆக்கிரமிப்பு உள்ளான பின்னர், ஈழத்தமிழ் மக்களிள் அரசியல் பெருவிருப்பின் ஜனநாய வடிவமாக இலங்கைத்தீவுக்கு வெளியே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோற்றம் பெற துணையாக விளங்கிய வளப்பெருமக்களில் அமரர்
கிளர்க் அவர்களும் ஒருவர். 2010ம் ஆண்டு நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அரசவைத் தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியு யோர்க் தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார்.
தேர்தல் ஆணையர் பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் நிறைவேற்றினார் என்பதற்கு சான்றாக, வாக்குப்பெட்டிகள் தனது வீட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அமரர் வலியுறுத்தினார் என ரம்பி கிளார்க்கை நினைவுகூரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருத்திரகுமாரன்,
இத்தகைய நேர்மை கொண்டு தமது கடமையை அணுகியதன் வாயிலாக அவர் தமது சீரிய பண்பைக் காட்டியது மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள்பால் பெருமதிப்பையும், பன்னாட்டுலகின் செயலின்மைக்கு நடுவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேவை பற்றிய ஆழ்ந்த புரிதலையும் வெளிப்படுத்தினார் என குறிப்பிடுகின்றார்.
பிலடெல்பியாவில் உள்ள அமெரிக்காவின் அரசமைப்புக் கூடத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக் அமர்வில் கலந்து கொண்டடதோடு, கடந்த பத்தாண்டு காலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினராகவும் அங்கம் வகித்துள்ளார்.
‘ராம்சே உயர்ந்த கொள்கைப் பற்றுறுதியும் பெருந்தன்மையும் மிக்கவர். எமது இலட்சியத்தில் முழுமனதாக நம்பிக்கை கொண்டிருந்தவர். எமது முதல் கூட்டத்தில் எம்மோடிருக்க வேண்டி நியு
யோர்க்கிலிருந்து பிலடெல்பியாவுக்குத் தொடருந்தில் வந்தவர் என்பது மட்டுமல்லாது பயணக் கட்டணத்தை நாம் கொடுக்க முன்வந்த போதும் அதனை அவர் ஏற்க மறுத்து விட்டார்’ என மேலும் ரம்சி பற்றிய நினைவுகளை பிரதமர் உருத்திரகுமாரன் கூர்ந்தார்.
2013ம் ஆண்டு தமிழீழ சுதந்தர சாசனம் முரசறையப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை மே 18 – தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், ‘முள்ளிவாய்க்கால் நினைவுச் சொற்பொழிவு’ நிகழ்வின் முதலுரையினை அமரர் ரம்சி கிளார்க் அவர்கள் 2015ம் ஆண்டு அவர்கள் வழங்கினார்.
என சமகாலத்தில் கருத்துவாக்கம் பெற்றுள்ள ‘சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்’ என்ற நிலைப்பாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
முன்கையெடுத்திருந்த ‘மில்லியன் கையெழுத்து போhரட்டத்தின்’ முதல் கையெழுத்தினை அமரர் அவர்களே இட்டார் என்பது வரலாற்று பதிவாகவுள்ளது. முதல் மூன்று மாதக் காலத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட கையொப்பங்களை இவ்வியக்கம் திரட்டியிருந்தது.
இதேவேளை கருத்துரையினையும், அரசியல் வெளிப்பாட்டு உரிமையினையும் பறிக்கின்ற சிறிலங்காவின் அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தை எதிர்த்து ஐ.நா மனித உரிமைக்குழுவுக்கு விண்ணப்பம் செய்தவர்களில் அமரர் கிளர்க்கும் ஒருவர்.
‘கடந்த 25 ஆண்டுக் காலம் ராம்சியுடன் பழகவும் சேர்ந்து உழைக்கவுமான பெரும்பேறு பெற்றேன், எனக்கு தோழராக மட்டுமின்றி எனக்குத் தந்தைபோலவும் விளங்கினார் என குறிப்பிடும் பிரதமர்
வி.உருத்திரகுமாரன். நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எமது விடுதலைப் போராட்டத்துக்கு அவரது நினைவு என்பது, ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
நினைவூட்டல்: நாட்டுப்பற்றாளர் நாள் 2021 – மெல்பேர்ண் அறிவித்தல்
நினைவூட்டல்: நாட்டுப்பற்றாளர் நாள் 2021 – மெல்பேர்ண் அறிவித்தல்
நாட்டுப்பற்றாளர் நாள் – 2021 – மெல்பேர்ண் (அறிவித்தல்)
பாரத தேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து
ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 33-ஆவது ஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்திற்குப் பின்புலமாக நின்றுழைத்துச் சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்-பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவு கூருகின்ற
நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குடும்ப வாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.
எமது சுதந்திரமான வாழ்வுக்காக முப்பது நாட்கள் தியாக வேள்வியில் தன்னை உருக்கி தன்னுயிர் ஈந்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும்
நினைவுகூருகின்ற இப்புனிதமான நிகழ்வில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள், பள்ளிமாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நடைபெறும் இடம்: St John’s Parish Hall, 52 Yarra Street, Heidelberg, Vic 3084
காலம்: 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: மாலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை.
மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 & 0406 429 107.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – விக்ரோறியா, அவுஸ்திரேலியா.
—
மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com
முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்
முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்
முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு சென்ற விவசாயிகள் மூவர் திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணமாகியுள்ளனர்
வயலுக்கு நீர்விட சென்றவேளை இந்த தாக்குதல் சமபவம் இடம் பெற்றுள்ளது
இறந்தவர்கள் ,வாற்றாப்பளை,குமுழமுனை மத்தி,,குமுழமுனை மேற்கு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்
- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்
- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா
- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்
- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது
- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்
சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க கோரிக்கை
சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க கோரிக்கை
இலங்கையின் இன்றைய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் ஏற்றி விசாரிக்க
கோரி ஐம்பது பக்க அறிக்கை ஜாஸ்மின் சுகாகாவினால் வழங்க பட்டுள்ளது ,மேலும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கோரி பிரிட்டனிடம் வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது
இறுதிப்போரில் பொழுது ,காணாமல் போதல்,படுகொலைகள் என்பனவற்றை முன் நின்று நடத்திய கொலை
வெறியர் சவேந்திர சில்வா என மேற்படி ஐம்பது பக்க பக்கத்தினுள் ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் சுட்டி காட்ட பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் கோரிக்கைகளை தட்டி கழித்து ,மனித
உரிமைகளிற்கு மதிப்பு அளிக்காது சிங்கள தேசம் செயல் பட்டு வருகின்ற நிலையில் இந்த விடயம் முன் வைக்க பட்டு வருகிறது
இலங்கை இராணுவவத்திற்கு எதிராக பாரிய நிதி வழங்க பட்டு அதில் இவர்கள் பேசி வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
ஆற்றில் மிதந்த மனித தலை – நடந்தது என்ன – விசாரணையில் பொலிஸ்
ஆற்றில் மிதந்த மனித தலை – நடந்தது என்ன – விசாரணையில் பொலிஸ்
இலங்கை மாத்தறை பகுதியில் நீரோடை ஒன்றுக்குள் அழுகிய நிலையில் மனித தலை ஒன்று மிதந்து வந்துள்ளது ,
இதனை கண்ணுற்ற மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் மேற்படி நபரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
கோட்டா ஆட்சியில் ஆறுகளில் இவ்விதம் மனித சடலங்கள் மிதந்து வருகிறது ,இது கொலையா
,அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஆற்றில் குளிக்க சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி மரணம் – சடலத்தை தேடும் இராணுவம்
ஆற்றில் குளிக்க சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி மரணம் – சடலத்தை தேடும் இராணுவம்
இலங்கை வேலி ஓயா பகுதியில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற நால்வர் நீரில் மூழ்கினர்
,இதில் இருவர் காப்பாற்ற பட்டனர் ,ஆனால் தந்தை ,மகன் நீரில் டித்து செல்ல பட்டு பலியாகியுள்ளனர்
இவ்வாறு பலியானவர்கள் சடலங்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகிறது ,இதுவரை சடலங்கள் கண்டு பிடிக்க படவில்லை
தேடும் பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன
சாதாரண உடையில் போலீசார் -இவர்களை கைது செய்ய வேட்டை
சாதாரண உடையில் போலீசார் -இவர்களை கைது செய்ய வேட்டை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக அரசு பல்வேறு பட்ட
விழிப்புணர்வுகளை தெரிவித்து வருகிறது ,ஆனால் மக்களோ அதனை பின்தொடரது அலட்சியமாக சென்று வருகின்றனர்
இவ்வாறு விதி மீறல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தற்பொழுது மக்கள் சாதாரண உடையில் காவல்துறையினர் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
முகக்கவம் அணியாது செல்பவர்களை கண்ட இடத்தில கைது செய்யவும் ,தண்டம் அறவிடவும் இந்த போலீசார் முயல்வார்கள் என நம்ப படுகிறது
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுளள சீரற்ற காலநிலை காரணமாக மலை பகுதி வழியாக செல்லும் மக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பதுளை பிரதான வீதி, நுவரெலியா சாலைகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது , ஆதலால்
இவ் வழியாக பயணப்படுபவர்களை மிக விழிப்பாக செல்லும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பாறைகள் உருண்டு வீதிகளில் விழலாம் என எதிர் பார்க்க படுகிறது ,மக்களே யாக்கிரதை
வேலைக்கு சென்ற இலங்கை பெண்களுக்கு நடந்த கொடூரம் – சவுதியில் நடந்த பயங்கரம்
வேலைக்கு சென்ற இலங்கை பெண்களுக்கு நடந்த கொடூரம் – சவுதியில் நடந்த பயங்கரம்
இலங்கையில் இருந்து வேலை வாய்ப்பு தேடி ,முஸ்லீம் நாடான சவுதிக்கு வீட்டு வேலைகளில் ஈடுபட்டு
வந்த 41 பெண்கள் பலர் பல்வேறு பட்ட துன்பியல் நிகழ்வுகளிற்கு உள்ளான நிலையில் அகதிகள் பராமரிப்பு முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர்
இவர்கள் அனைவரும் தமது தாயகத்திற்கு உயிருடன் செல்லும் நோக்குடன் அங்கு தங்கியுள்ளனர் ,பாலியல்,
மற்றும் சொல்லென்னா துன்பியலுக்கு உள்ளான நிலையில் கண்ணீருடன் குறித்த பெண்கள் தத்தளித்த வண்ணம்உள்ளனர்
இவ்வாறு தவிக்கும் அவர்களை அழைத்து வரும் முயற்சியில் மனித உரிமை அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன
1,600 யாழ்ப்பாண தமிழர்கள் இலங்கை இராணுவத்தில் இணைவு
1,600 யாழ்ப்பாண தமிழர்கள் இலங்கை இராணுவத்தில் இணைவு
இலங்கை இராணுவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுமார் 1.600 பேர் இராணுவத்தில்
இணைந்துள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்
தமிழர்கள் சிங்கள இராணுவத்தில் இணைத்து கொள்ள படுவதில்லை ,
ஆசை வார்த்தை காட்டி இவ்வாறு பலநூறு தமிழர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர்
இதில் இணைந்த பெண்கள் பலர் பலத்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இருந்தமையும் ,தற்கொலை செய்து கொண்டமை இங்கே குறிப்பிட தக்கது
20 MORE SRILNKA NEWS READ CLICK HERE
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்
- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்
- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா
புத்தாண்டு தினத்தில் பத்து பேர் மரணம் – சோகமான குடும்பம்
புத்தாண்டு தினத்தில் பத்து பேர் மரணம் – சோகமான குடும்பம்
இலங்கையில் இடம்பெற்ற புத்தாண்டு தின நிகழ்வின் பொழுது பல்வேறு பட்ட விபத்துக்களில்
சிக்கி பத்து பேர் பலியாகியுள்ளனர் ,169 பேர் படுகாயமடைந்துள்ளனர்
பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டிருந்த பொழுதும் இந்த விபத்துக்களை தடுக்க முடியவில்லை
மேலும் இதே காலத்தில் போதையில் வாகனம் செலுத்தி சென்ற நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது
செய்ய பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
இலங்கையில் இருந்து கடல்வழியாக வருபவர்களை தடுக்க 5 உளவு விமானத்தை வழங்கிய அவுஸ்ரேலியா
இலங்கையில் இருந்து கடல்வழியாக வருபவர்களை தடுக்க 5 உளவு விமானத்தை வழங்கிய அவுஸ்ரேலியா
இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குள் நுழைபவரக்ளை தடுத்து அவர்களை கைது
செய்திடும் நோக்குடன் ஐந்து உளவு விமானங்களை இலங்கைக்கு இலவசமாக அவுஸ்ரேலிய வழங்கியுள்ளது
மகிந்த காலத்தில் கப்பல் ஊடாக அவுஸ்ரேலியாவுக்குள் பலநூறு பேர் மகிந்த மகனால் கடத்த பட்டனர்
அவ்வாறான ஒரு கடத்தல் இப் பொழுது இடம்பெறலாம் என்பதால்,அவுஸ்ரேலிய முந்தி கொண்டு
இந்த அன்பளிப்பை செய்துள்ளமை கவனிக்க தக்கது
யாழில் நடந்த கோரவிபத்து – கண்முன்னே இறந்த சகோதரன்
யாழில் நடந்த கோரவிபத்து – கண்முன்னே இறந்த சகோதரன்
யாழ்ப்பாண நாவலர் வீதியில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த இரு சகோதரர்கள் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியது
இதில் சம்பவ இடத்தில எட்டு வயது சிறுவன் பலியாகியும் 12 வயது சிறுவன் படுகாயமடைந்த
நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார்
சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது ,மேற்படி விபத்து
தொடர்பான விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன
போதையில் வாகனம் ஒட்டிய 758 பேர் கைது
போதையில் வாகனம் ஒட்டிய 758 பேர் கைது
இலங்கையில் புத்தண்டு தினத்தன்று மட்டும் போதையில் வாகனம் ஓட்டி சென்ற சுமார் 758 பேரை
தாம் கைது செய்துள்ளதாக வீதி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்
புத்தாண்டு தின நிகழ்வுகளில் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின்
விசேட சேவையினரால் இந்த கைதுகள் இடம் பெற்றுள்ளது
இவ்வாறான கைதின் மூலம் பெரும் விபத்துக்கள் மற்றும் உயிர்ப் பலிகள் தடுக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர் மரணம்
பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர் மரணம்
பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஆரம்பகாலத் தலைவர் திரு. பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்கள் 09.04.2021 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
தமிழீழம் யாழ் மடத்தடியை பிறப்பிடமாக கொண்ட திரு.பிரான்சிஸ் சேவியர் 1982 காலப்பகுதியில் புலம்பெயர்ந்து பிரான்ஸ் மண்ணில் குடியேறினார். 1986 ம் ஆண்டு தனது குடும்பத்தையும்
பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்துக்கொண்ட இவர் புலம்பெயர்ந்து பிரான்ஸ் மண்ணில் வாழ்ந்த காலம் தொட்டு இவரும் இவரது குடும்பமும் சிறீலங்கா அரசாங்கத்தின் தமிழர் மீதான
ஒடுக்குமுறைகளை எதிர்த்தும், மனிதாபிமான செயற்பாடுகள், மனித உரிமை, புனர்வாழ்வு நடவடிக்கைகள் என தமிழீழ மக்களின் விடுதலைச் செயற்பாடுகளில் இணைந்து பணியாற்றினார்.
இரண்டாம் கட்ட ஈழப்போர் காலத்தில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்பட்டபோது பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழம் 1990ம் ஆண்டு ஆரம்பமாகியது.
அதன் ஆரம்பகால தலைவராக திரு.பிரான்சிஸ் சேவியர் அவர்களும், செயலாளராக திருமதி மகேஸ்வரி பிரான்சிஸ் சேவியர் அவர்களும் இணைந்து பணியாற்றினார்கள்.
புலம்பெயர் வாழ் தமிழ் சமூகத்தின் மத்தியில் தாயக மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணக் கருவை விதைக்கவைக்க சிறுதுளி பெரு வெள்ளம் உண்டியல் திட்டத்தை
நடைமுறைப்படுத்தியவர். அன்றைய காலத்தில் உண்டியல்களை தனது கைப்பட உருவாக்கிய பெருமைக்குரியவர்.
தாய்மண்ணுக்கான இவரது செயற்பாடுகளுக்கு இவரது துணைவியார் பெரும் பக்கபலமாக இருந்தார். 03.04.1992ம் ஆண்டு இவரது துணைவியார் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
அவரது இழப்பு இவரை வெகுவாக பாதித்தது. அதன் விளைவாக சமூக செயற்பாடுகளில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.
தாயக மக்கள் மீது அன்பும் கரிசனையும் கொண்ட இவர் தாயகத்தில் நடந்த பேரவலங்கள் கொடுமைகள் துயரங்களை கேள்வியுற்று மனம் வருந்தினார்.
தாயக மக்களின் நல்வாழ்வுக்காக பிரான்சில் உருவாகிய புனர்வாழ்வுக் கழகம் இன்றும் தனது சேவையை ஆற்றி வருகின்றது. எந்த நோக்கத்திற்காக இப்பெருமகனார் உறுதுணையாக
நின்றாரோ அந்த நோக்கத்திற்காக தொடர்ந்தும் பணியாற்றுவதே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாகும்.
தமிழீழ மக்கள் மீது கரிசனை கொண்ட சமூக சேவையாளனின் இழப்பால் துயருறும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள், உறவினர் மற்றும் நண்பர்களுடன் நாமும் சேர்ந்து துயரை பகிர்கின்றோம்.
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்
பணிப்பாளர்
செ.சுந்தரவேல்
27 பொருட்களுக்கான சலுகை விலையை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க திட்டம்
27 பொருட்களுக்கான சலுகை விலையை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க திட்டம்
27 பொருட்களுக்கு சதோச நிறுவனம் சலுகை வழங்கின்றது. நுகர்வோரின் கோரிக்கைக்கு அமைய இந்த
நடைமுறையை மேலும் மூன்று மாதங்களுக்கு அமுற்படுத்த எதிர்பார்ப்பதாக சதோச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருவதாக இதனால் நுகர்வோரை ஏனைய வியாபாரிகளால் ஏமாற்றுவதற்கு ஏமாற்ற முடியவில்லை.
சந்தையின் தீர்மானமிக்க சக்தியாக சதோச நிறுவனம் செயற்படுகின்றது. சலுகைப் பொதிக்கு
பாரிய கிராக்கி நிலவுகின்றது என்று சதோச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
போதையில் வாகனங்களை செலுத்துவோருக்கு பொலிசார் எச்சரிக்கை
போதையில் வாகனங்களை செலுத்துவோருக்கு பொலிசார் எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தில் மது போதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை சட்டத்தின் பிடியில் சிக்க
வைக்கும் விசேட தேடுதல் நடவடிக்கை எதிர்வரும் 20ம் திகதி வரை முன்னெடுக்கப்படும். என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மது போதையில் வாகனத்தை செலுத்துவோருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது. இவர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறோனரின் வாகனங்களையும் பொலிசார் கைப்பற்றுவார்கள் என்று தெரிவித்த அவர்,வாகன
விபத்துக் காரணமாக நேற்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களாவர்.
மது போதையுடன் பயணிக்கும் சாரதிகளுக்கு மேலதிகமாக வீதிச் சட்டங்களை மீறுவோரையும் சட்டத்தின்
முன் நிறுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா











