Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் வாய் சண்டையில் – வெட்டி வீச பட்ட மீனவர் கை

முல்லையில் வாய் சண்டையில் – வெட்டி வீச பட்ட மீனவர் கை

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் அமைந்துள்ள வாடியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கத்தி வெட்டில் முடிவடைந்துள்ளது.

கடந்த 17 ஆம் திகதி மாலை நாயாற்று வாடிப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புத்தளம், மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த மீனவர்கள் வாடி அமைத்து தொழில் செய்து வருகின்றார்கள்.

இவர்களில் புத்தளம் கலாவத்தை பகுதியினை சேர்ந்த 41 அகவையுடைய மீனவர் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கத்தியால் வெட்டிய குற்றவாளியான மன்னாரை சேர்ந்த நபரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்


    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
    Posted in Uncategorized

    இத்தாலியில் இருந்து துப்பாக்கி சூட்டு காயத்துடன் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்

    இத்தாலியில் இருந்து துப்பாக்கி சூட்டு காயத்துடன் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்

    துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான காயத்துடன் கூடிய சடலம் ஒன்று துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு

    எடுத்துவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

    32 வயதுடைய கம்பஹா, நெதுன்கம பகுதியை சேர்ந்த குறித்த நபரின் சடலம் நேற்று (18) மாலை 4 மணியளவில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    குறித்த நபர் இத்தாலி, ஏப்ரிலியா நகரில் கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    குறித்த நபர் கடமையாற்றி நிறுவனத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் அதன் பின்னர் அவருடைய சடலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் 40 லட்சம் பெறுமதியான பொருட்கள் 9 பாடசாலைகளில் திருட்டு

      யாழில் 40 லட்சம் பெறுமதியான பொருட்கள் 9 பாடசாலைகளில் திருட்டு

      யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

      வட்டுக்கோட்டை, முழங்காவில், குமுழமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

      சந்தேக நபர்கள் மூவரும் இணைந்து கடந்த நான்கு மாதங்களில் யாழ்ப்பாணம் மானிப்பாய், காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பூநகரி பொலிஸ் பிரிவுகளில் உள்ள 9 பாடசாலைகளை

      இரவு வேளைகளில் உடைத்து பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடியுள்ளனர். திருடிய பொருள்களில் ஒரு பகுதியை விற்பனை செய்தும் உள்ளனர்.

      செம்மணியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

      சாவகச்சேரி மகளிர் கல்லூரி, புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயம், மாவிட்டபுரம் வீமன்காமம் மகா வித்தியாலயம், கைதடி கலைவாணி வித்தியாலயம், கட்டுடை சைவ

      வித்தியாலயம், இளவாலை மெய்கண்டான் வித்தியாலயம், கீரிமலை வலித்தூண்டல் றோ.க.த.க பாடசாலை மற்றும் பூநகரி மத்திய கல்லூரி ஆகியவற்றிலேயே சந்தேக நபர்களால் பொருள்கள் திருட்டப்பட்டுள்ளன.

      இந்தப் பாடசாலைகளில் இரண்டில் இருதடவைகள் திருட்டுப் போயுள்ளன.

      ஒளி எறிவு படக் காட்டமைவு (Projector), கணினிகள், அதிதிறன் பலகைகள் (Smart Board), மடிகணினிகள் உள்ளிட்ட 40 லட்சம் பெறுமதியான பொருள்கள் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

      சந்தேக நபர்கள் திருட்டுக்குப் பயன்படுத்தியதாக முழங்காவிலைச் சேர்ந்தவரிடமிருந்து பட்டா படி வாகனம் ஒன்றும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரிடமிருந்து முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

      பாடசாலை உபகரணங்களை அடையாளம் காண்பிக்க அதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

      சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் நாளை பாடசாலைகள் மீழ ஆரம்பம்

        இலங்கையில் நாளை பாடசாலைகள் மீழ ஆரம்பம்

        இலங்கையில் இரண்டாம் தவணை காரணமாக விடுப்பு விட பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பமாகிறது

        ,நாளை முதல் நாள் என்பதால் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்

        மேலும் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஏற்றவாறு மாணவர்கள் உள்வாங்க பட்டு

        கற்றல் நடவடிக்கை மேற்கொள்ள படும் என தெரிவிக்க படுகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை 618 பேர் மரணம்

          இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை 618 பேர் மரணம்

          இலங்கையில் இதுவரை இடம்பெற்று வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 618

          பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் தொடர்ந்து இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து வருகின்றமை

          இங்கே குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            மியன்மார் இராணுவம் சிறைபிடித்த 12 இலங்கை மீனவர்கள் விடுதலை

            மியன்மார் இராணுவம் சிறைபிடித்த 12 இலங்கை மீனவர்கள் விடுதலை

            மியன்மார் கடல் படையினரால் கைது செய்ய பட இலங்கையை சேர்ந்த 12 மீனவர்கள் அந்த கடல்

            படையினரால் இப்பொழுது விடுதலை செய்ய பட்டுள்ளனர்

            மாசி மாதம் அவர்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய

            பட்ட இவர்களை விடுதலை செய்துள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன் – தவராசா கூக்குரல்

              கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன் – தவராசா கூக்குரல்

              இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி

              சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

              தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆணையைப் பெற்றுத் தமிழர்களின் தலைமைத்துவத்தைச் சுமந்து திறம்பட வழிநடத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிது சிறிதாக மக்கள் ஆணையை

              இழந்து செல்லும் சூழ்நிலையில், அதற்கான காரணங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

              கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இன்னும் சரியான முறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

              பதவி நிலைகள் உரியவர்களுக்கு அளிக்கப்படாத இடைவெளியில், கட்சியின் இருப்பைச் சிதைக்கும் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

              இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஓர் ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்படவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தன்னைக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் போன்று

              பிரதிபலித்தபடி தொடர்ந்தும் சர்ச்சையான கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து வருவது கட்சியின் அரசியல் இருப்பிற்கும் உறுதிப்பாட்டிற்கும் சவாலாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

                Posted in இலங்கை செய்திகள்

                மலையகத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்று போட்டி photo

                மலையகத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்று போட்டி

                கிரிகெட் சுற்று போட்டி

                “ஒற்றுமையே எமது பலம்”

                இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன

                இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையே எமது பலம் என்று கூறுகின்றார் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன அவர்கள்

                புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி கல்லூரியில் கடந்த காலங்களில் கல்வி பயின்ற பழைய மாணவர்களை ஒன்றினைத்து 11 பேர் கொண்ட 16 அணிகள் உறுவாக்கபட்டு குறித்த அணிகளுக்கு இடையில் கிரிகெட் மென்பந்து சுற்றுப்போட்டி 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

                கல்லூரியின் அதிபர் எஸ்.சந்திரமோகன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எம். கவாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சுற்போட்டியை கடந்த 16.04.2021 ஆம் திகதி கிராமிய

                வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள்இ நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன அவர்களினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கபட்டது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

                தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்.

                இன்று நம் நாட்டில் மக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக இனம் மதம் மொழி சாதி அரசியல் தோட்டம் ஊர் ரீதயாக பிரிக்கபட்டே இருக்கின்றோம். இது இந்த நாட்டுக்கும் எமக்கும் எமது சமூகத்திற்கும் உகந்த ஒன்று அல்ல நாம் இளைஞர்கள் என்ற ரீதியில் ஒன்றுமையாக இருந்து எமது

                சமூகத்தையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும். இதற்கு இந்த கிரிகெட் போட்டி ஒரு நல்ல சந்தர்ப்பம். இதில் எப்படி ஒன்றுமையாக இருக்கின்றோமோ அதேபோல் நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் இங்கு கட்சி அரசியல் ரீதியாக வரவில்லை. உங்களில் ஒருவனாகவே

                வந்திருக்கின்றேன். ஒற்றுமையே எமது பலம். இந்த பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஊடாக புணர்நிர்மானம் செய்ய இரண்டு

                மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளேன். தொடர்ந்து இந்த பாடசாலையின் அபிவிருத்தியில் உங்களுடன் தோல் நிற்பேன் என்று கூறினார்

                .

                இந் நிகழ்வில் சமய பெரியார்கள் கல்வி அதிகாரிகள் பிரஜாசத்தி பணிப்பாளர் பாரத் அருள்சாமி அயல் பாடசாலைகளின் அதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட நலன் விரும்பிகள் கலந்துக் கொண்டனர்.

                தொடர்ந்து நடைபெற்ற இந்த கிரிகெட் சுற்றுபோட்டி 17.04.2021 மாலை முடிவுற்றது. இந்த போட்டியின் முதலாவது வெற்றி கின்ணத்தையும் பணப்பரிசையும் 2014 ஆம் கல்வி பயின்ற

                பழைய மாணவர் அணி வெற்றிக் கொண்டதுடன் இரண்டாம் இடத்தை 2009 ஆம் ஆண்டு கல்வி பயின்ற பழைய மாணவர் அணியும் மூன்றாம் இடத்தை 2010 ஆம் ஆண்டு கல்வி பயின்ற பழைய மாணவர் அணியும் பெற்றுக் கொண்டது

                கிரிகெட் சுற்று போட்டி

                கிரிகெட் சுற்று போட்டி
                  Posted in Uncategorized

                  போலீசார் திடீர் சோதனை – குடிகாரர் 1834 பேர் கைது

                  போலீசார் திடீர் சோதனை – குடிகாரர் 1834 பேர் கைது

                  இலங்கை` வீதிகள் நாள்தோறும் இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ,போலீசார் தீவிர சோதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்

                  இந்த சோதனை நடவடிக்கையின் பொழுது கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 1834 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                  மேலும் முக்கிய நுழைவு சாலைகளில் சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இந்த கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என நம்ப படுகிறது

                  Police raid – drunk 1834 arrested

                    Posted in இலங்கை செய்திகள்

                    தடம்புரண்ட இராணுவ வண்டி – இரு சிப்பாய்கள் காயம்

                    தடம்புரண்ட இராணுவ வண்டி – இரு சிப்பாய்கள் காயம்

                    இலங்கை வவுனியா ஓமந்தை சோதனை சாவடிக்கு அருகில் இராணுவத்தினர் பிக்கப் ரக வண்டி

                    ஒன்று விபத்தில் சிக்கியத்தில் அதில் பயணித்த இரு இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்

                    காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                    இந்த விபத்து தொடர்பனா விசாரணைகள் இடப்பெற்ற வண்ணம் உள்ளன

                    தடம்புரண்ட இராணுவ வண்டி
                    தடம்புரண்ட இராணுவ வண்டி
                      Posted in Uncategorized

                      கோட்டா அரசுக்கு ஆபத்தாக மாறிய தமிழ் இன அழிப்பு

                      கோட்டா அரசுக்கு ஆபத்தாக மாறிய தமிழ் இன அழிப்பு

                      ஆளும் கோட்டா சகோதரர்கள் ஆட்சியில் நடத்த பட்ட மிக பெரும் தமிழ் இனப் படுகொலைக்கு நீதி கோரி உலக சமுதாயம்

                      போராடி வருகிறது ,12 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் குற்றவாளிகள் தண்டிக்க படாது உள்ளது ,உலக சமதத்துவதை பாதித்துள்ளது

                      இதனை அடுத்து பிரிட்டன் தலைமையில் ஏற் படுத்த பட்ட போர்க்குற்றம் தொடர்பான விடயங்கள் ஐநாவில் பாரப்படுத்த பட்டுள்ளது

                      எதிர்வரும் காலங்களில் இலங்கை மிக நெருக்கடிகளை சந்திக்கும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

                      தமிழர்களை கொன்று ,புலிகளை அழித்து விட்டோம் என மார் தட்டும் இலங்கைக்கு இந்த தீர்ப்பு பெரும் இடியாக மாறும் என அந்த வட்டாரங்கள் இடித்து கூறுகின்றன

                      (war) crimes
                      (war) crimes
                        Posted in இலங்கை செய்திகள்

                        பெண்ணை பேரூந்தால் இடித்து கொன்ற சாராதி

                        பெண்ணை பேரூந்தால் இடித்து கொன்ற சாராதி

                        இலங்கை கதிர்காமம் பகுதியில் உள்ள பஸ் டிப்போ ஒன்றில் ,குறித்த பேரூந்து நிலையத்தில்

                        பயணித்த பெண் ஒருவரை அரச பேரூந்து ஒன்று இடித்து வீழ்த்தி கொன்றுள்ள சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        மேற்படி விபத்து அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் பதிவகையுள்ள நிலையில்,சாரதி ,நடத்துனர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                        மேற்படி விபத்து காட்சி வைரலாகி வருகிறது

                        இடித்து கொன்ற சாராதி
                        இடித்து கொன்ற சாராதி
                          Posted in இலங்கை செய்திகள்

                          கோட்டாவால் என் உயிருக்கு ஆபத்து – பாதுகாப்பை பாலப்படுத்துக -விஜயதாச கோரிக்கை

                          கோட்டாவால் என் உயிருக்கு ஆபத்து – பாதுகாப்பை பாலப்படுத்துக -விஜயதாச கோரிக்கை

                          இலங்கையின் முன்னாள் நீதி அமைச்சர் வியஜாதச தனது உயிருக்கு ஆளும் ஜனாதிபதி

                          கோத்தபாயாவினால ஆபத்து உள்ளது எனவும் ,இதனால் தனது பாதுகாப்பை பலப்படுத்த படி IGP க்கு கடிதம் எழுதியுள்ளார்

                          முன்னாள் அமைச்சர் ஒருவருக்கே நாட்டில் இவ்விதம் கொலை அச்சுறுத்தல் உள்ளது எனின்

                          சாதாரண மக்களின் வாழ்வியல் எவ்வாறு இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள முடியும் என்பதே இந்த நிகழ்வுகளின் வெளிப்பாடாக உள்ளது

                          இவரது ஆட்சியில் நாள் தோறும் நீர் ஏரிகளில் மனித சடலங்கள் மிதந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                          விஜயதாச
                          விஜயதாச
                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – 52 பேர் மரணம்

                            இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – 52 பேர் மரணம்

                            இலங்கையில் கடந்த ஐந்து நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி இதுவரை ஐம்பத்தி இரண்டு பேர் மரணமாகியுள்ளனர்

                            மேலும் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்

                            சாரதிகள் அலட்சியமும் ,வீதி போக்குவரத்து விதிகளை பின்பற்ற தவறியதன் காரணமாக இந்த உயிர்பலிகள் இடம்பெற்றுள்ளன

                            பல்லாயிரம் போலீசார் குவிக்க பட்டுள்ள பொழுதும் இந்த மனித உயிர் பலிகளை தடுக்க முடியாது போலீசார் திணறி வருகின்றனர்

                              Posted in இலங்கை செய்திகள்

                              நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிறை காணப்பட்டு வருகிறது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

                              நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிறை காணப்பட்டு வருகிறது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

                              பைஷல் இஸ்மாயில் –

                              எமது நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிறை காணப்பட்டு வருகிறது என்றும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டுக்கு புதிய துறைகளைக்

                              கற்ற துறை சார்ந்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். இதனை அரசாங்கத்தினால் மட்டும் செய்துவிட முடியாது என்று கல்வி மறுசீலமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

                              பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

                              கலந்துகொண்டார், விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மாலைதீவுக்கான தூதுவர் ஒமர் ரஸ்ஸாக், பிரதித் தூதுவர் அஸ்லம் சாகிர், சிறைச்சாலை ஆணையாளர் மலின் லியனகே, முன்னாள் கொழும்பு மாகாண சபை அங்கத்தவரும் மனித

                              உரிமைகள் அமைப்பின் ஆளுநருமான எ.ஜே.முஹம்மட் பாயிஸ், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி எஸ் சந்திரசேகரம் உள்ளிட்ட பல உள்நாட்டு வெளிநாட்டு கல்விமான்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

                              இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இன்று இலங்கையின் பொருளாதார கல்வி வளர்ச்சியில் கணிசமான பங்கினை தனியார் துறையை துறையினரே வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அமேசன்

                              உயர் கல்வி நிறுவனத்தின் சேவை உண்மையில் பாராட்டத்தக்கது. இந்த நிறுவனம் வெறும் புத்தக கல்வியை மட்டும் மையமாக கொள்ளாமல், மாணவர்களுக்கிடையே சுய வேலைத்திட்டங்கள், (Individual Project) பயிற்சி பட்டறைகள் (practical workshops), வெளிநாட்டு மாணவர்களின்

                              தொடர்பாடல், (Foreign Students exchange), பல உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கை சாத்தி, மாணவர்களுக்கு Individual Training போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயாரித்து அனுப்புகின்ற நிறுவனமாக இயங்கி வருகின்றது.

                              எதிர்வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிகமாக தேவைப்படுகின்ற தொழிற்துறையான Robertic Engineering,Green Technology, Solor Technology, Hybrid technology, Cloud Computing, Automated System, Mobile

                              Technology, Wireless technology, போன்ற துறைகளுடன் தொடர்புடைய பாடநெகளையும் இந்த கல்வி நிறுவனம் வெகுவிரைவில் ஆரம்பிக்க உள்ளதை நான் பாராட்டுகின்றேன் என்றார்.

                              உலகை மாற்றுவதற்கான முதல் சக்தி, கல்வி அறிவு எவருக்கு நல்ல கல்வி அறிவு ஞானம் இருக்கிறதோ அவர்கள் எந்த துறையில் பயணித்தாலும் வெற்றி பெறுவது நிச்சயம் இந்த

                              அடிப்படையில் பம்பலப்பிட்டி அமேசன் உயர்கல்வி நிறுவனம் சுமார் 10 வருடங்களாக ஏனைய கல்வி நிறுவனங்களை விடவும் மாறுபட்ட முறையில் தனது கல்வி நடவடிக்கைகளை

                              முன்னெடுத்து வருகின்ற அதேவேளை பல சமூக சேவைகளையும், பல இலவச புலமைப்பரிசில் திட்டங்களையும் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

                              இந்த பட்டமளிப்பு விழாவில் 140 மாணவர்கள் உளவியலும் உளவளத்துணையும், ஆசிரியர் பயிற்சி நெறி, தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், போன்ற பல துறைகளுக்கான பட்டச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

                              அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
                              அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
                                Posted in Uncategorized

                                இந்தியா இராணுவத்தின் வெடிகுண்டுகள் – இலங்கையில் மீட்பு

                                இந்தியா இராணுவத்தின் வெடிகுண்டுகள் – இலங்கையில் மீட்பு

                                இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் இரு கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளது.

                                வவுனியா, ஈரப்பெரியகுளம், நவகமுவ பகுதியில் குறித்த இரு கைக்குண்டுகளும் நேற்று (16) மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

                                குறித்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மழை காரணமாக மண் அரித்துச் செல்லப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதையடுத்து ஈரப்பெரியகுளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

                                இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த இரு கைக்குண்டுகளும் இந்திய இராணுவத்தால்

                                பயன்படுத்தப்படுகின்ற மில்ஸ் 36 வகையைச் சேர்ந்த கைக்குண்டுகள் எனவும், அவை செயலிழந்து காணப்பட்டமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

                                குறித்த இரு கைக்குண்டுகளையும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள்

                                இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று அப்பகுதியில் நிலத்தை அகழ்ந்து தேடுதல் மேற்கொள்ளவும் பொலிசாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                                  Posted in Uncategorized

                                  வீதி விபத்துக்களில் 40 பேர் மரணம் – வேடிக்கை பார்க்கும் சிங்கள பொலிஸ்

                                  வீதி விபத்துக்களில் 40 பேர் மரணம் – வேடிக்கை பார்க்கும் சிங்கள பொலிஸ்

                                  இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் இடம் பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி நாற்பது பேர் பலியாகியுள்ளனர்

                                  நாள்தோறும் விபத்துக்களில் சிக்கி பலர் பலியாகி வருகின்றனர்
                                  இவ்விதம் ஏற்படுகின்ற

                                  விபத்துக்களை தடுத்து மக்களை காப்பற்ற வேண்டிய போலீசார் அவர் தம் கடமையில் இருந்து

                                  செயல் பட தவறியதன் விளைவே இந்த விபத்துகளுக்கு ன்காரணம் என தெரிவிக்க படுகிறது

                                    Posted in Uncategorized

                                    புலிகளை மீள் உருவாக்கம் செய்திட முயன்ற 4 பேர் யாழில் கைது

                                    புலிகளை மீள் உருவாக்கம் செய்திட முயன்ற 4 பேர் யாழில் கைது

                                    இலங்கை யாழ்ப்பாண பகுதியில் முன்னாள் விடுதலை புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில்

                                    ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் நான்கு பேர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                                    இவ்வாறு கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,இந்தியாவில்

                                    ஆயுதங்களுடன் கைது செய்ய பட்டவர்களுடன் இவர்கள் நேரடி உரையாடலில் இருந்தமையால் இந்த கைது இடம்பெற்றுள்ளது

                                      Posted in Uncategorized

                                      இணைய தளங்களுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் கோட்டா அரசு

                                      இணைய தளங்களுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் கோட்டா அரசு

                                      இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக இணையத்தளங்கள் ஊடாக போலியான செய்திகளை பரப்பி பொய்யான

                                      குற்ற சாட்டுக்களை முன் வைக்கும் இணைய தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும்

                                      ,அவ்விதமான நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் .ஆளும் அரசு அமைச்சரவை ஒப்புதலுடன் புதிய சட்ட திருத்தும் ஒன்றை ஏற்படுத்தவுள்ளது

                                      அடக்கி ஆளும் அடக்குமுறை ஆட்சியின் நீட்சியின் ஒரு பகுதியாக இது பார்க்க படுகிறது

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        இலங்கையில் தந்தை, மகளின் கண்டுபிடிப்பு

                                        இலங்கையில் தந்தை தந்தை, மகளின் கண்டுபிடிப்பு

                                        நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் கண்டுபிடித்துள்ளனர்.

                                        பிளாஸ்டிக் உள்ளிட்ட இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களால் இத்தனை காலமும் பேனா தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.

                                        இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களால் மட்டும் நாளொன்றுக்கு 80 கிலோ கிராம் அளவுக்கு பேனாக்கள் வீசப்பட்டு வருவதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

                                        இந்த செய்தியை அவதானித்த கண்டி பகுதியைச் சேர்ந்த சச்சினி கிறிஸ்டினா சுகிர்தன், இதற்கான மாற்றுத் திட்டத்தை சிந்தித்துள்ளார்.

                                        இந்த விடயம் தொடர்பில் தான், தனது தந்தையான சுகிர்தனுடனும் கலந்துரையாடியுள்ளதாக கிறிஸ்டினா தெரிவித்தார்.

                                        “இலங்கையில் கொவிட் தொற்றின் முதலாவது அலை ஏற்பட்டிருந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான முடக்க நிலையின் போதே, இந்த திட்டத்தை நான் சிந்திக்கத் தொடங்கினேன். இயற்கைக்கு பாதிப்பு இல்லாத பேனா ஒன்றை தயாரிக்க முடிவெடுத்தேன்,” என்று அவர் கூறினார்.

                                        தன்னால் தயாரிக்கப்பட்டுள்ள பேனா, பயன்படுத்தப்பட்ட பின்னர், வெளியில் வீசப்படும் பட்சத்தில், அதில் இருந்து மரங்கள் வளரும் வகையில் இந்த பேனா தயாரிக்கப்பட்டுள்ளது.

                                        முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள பேனாவில், சிறிய வகையிலான செடிகள் மாத்திரமே வளரும் என பேனாவை தயாரித்த கிறிஸ்டினா கூறுகிறார்.

                                        பேனாவின் அளவு சிறியதாக உள்ளதால், சிறிய விதைகளை மாத்திரமே பேனாவில் உள்ளடக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

                                        எதிர்வரும் காலங்களில் பெரிய மரக்கன்றுகள் வளரும் வகையில், இந்த பேனாவை தயாரிக்க தானும், தனது தந்தையும் எதிர்பார்த்துள்ளதாக கிறிஸ்டினா நம்பிக்கை தெரிவித்தார்.

                                        தன்னால் தயாரிக்கப்பட்டுள்ள பேனா, 96 சதவீதம் இயற்கையுடன் ஒன்றிணைந்து செல்லும் என்றும் முதல் கட்டமாக, பேனாவில் மரக்கறி கன்றுகள், பூக்கன்றுகள் மற்றும் ஆயுர்வேத செடிகள் போன்ற விதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

                                        இந்த பேனாவின் பின்புறத்தில் மரக்கறி, பூக்கன்று மற்றும் ஆயர்வேத செடிகளின் விதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பேனாவின் பின்புறத்தில் இருந்தே, இந்த செடி துளிர்விட ஆரம்பிக்கின்றன.

                                        இந்த பேனாவை, பின்புறமாக, மண்ணில் நட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த பேனா, பயன்பாட்டிற்குப் பின்னர், மண்ணில் நடப்பட்டு ஒன்று முதல் இரண்டு வாரங்களில் கன்று வளரும் என அவர் தெரிவித்தார்.

                                        குறிப்பாக நடப்படும் பேனாவுக்கு, உரிய வகையில் நீர் சேர்க்கப்படுவதாக இருந்தால், அந்த செடி உரிய வகையில் வளரும் என பேனாவை தயாரித்த கிறிஸ்டினா தெரிவிக்கிறார்.

                                        இந்த பேனாவில் உள்ளடக்கப்பட்டுள்ள விதைகள் அனைத்தும், உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, பேனாவுக்குள் அடைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

                                        இந்த பேனாவின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, அண்மையில், இந்த பேனாவை தயாரித்த கிரிஷ்டினா, அவரது தந்தை சுகிர்தன் ஆகியோரை அழைத்து, ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது இந்த பேனாவின் உற்பத்தியை விரிவுபடுத்த அரசாங்கம் உதவி செய்யும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாக பேனாவை தயாரித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

                                        அதேபோன்று, இந்த பேனாவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒத்துழைப்பையும் இலங்கை அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளது.

                                        இலங்கையிலுள்ள அரச பாடசாலை மாணவர்களுக்கு இந்த பேனாவின் பயன்பாட்டை அதிகரிப்பதே தமது நோக்கம் என அவர் கூறுகிறார். இதேபோன்று, பேனாவின் உற்பத்தியை அதிகரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தமது மற்றுமொரு நோக்கம் என்று கே.சுகிர்தன் தெரிவித்தார்.

                                        இலங்கையை விடவும், வெளிநாடுகளில் வாழ்வோர் இயற்கையுடன் ஒன்றிணைந்து செல்வதற்கு முக்கியத்தும் வழங்குவதாகவும் அதனால், வெளிநாடுகளில் வாழ்வோருக்கு இந்த பேனாவை மிக இலகுவாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

                                        எதிர்வரும் காலங்களில் இந்த பேனாவின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் கே.சுகிர்தன் நம்பிக்கை தெரிவித்தார்.