Posted in Uncategorized

சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க கோரிக்கை

சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க கோரிக்கை

இலங்கையின் இன்றைய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் ஏற்றி விசாரிக்க


கோரி ஐம்பது பக்க அறிக்கை ஜாஸ்மின் சுகாகாவினால் வழங்க பட்டுள்ளது ,மேலும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கோரி பிரிட்டனிடம் வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது

இறுதிப்போரில் பொழுது ,காணாமல் போதல்,படுகொலைகள் என்பனவற்றை முன் நின்று நடத்திய கொலை

வெறியர் சவேந்திர சில்வா என மேற்படி ஐம்பது பக்க பக்கத்தினுள் ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் சுட்டி காட்ட பட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் கோரிக்கைகளை தட்டி கழித்து ,மனித

உரிமைகளிற்கு மதிப்பு அளிக்காது சிங்கள தேசம் செயல் பட்டு வருகின்ற நிலையில் இந்த விடயம் முன் வைக்க பட்டு வருகிறது

இலங்கை இராணுவவத்திற்கு எதிராக பாரிய நிதி வழங்க பட்டு அதில் இவர்கள் பேசி வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    யாழில் பொங்கல் கொண்டாடிய வெள்ளையர்கள் PHOTO

    யாழில் பொங்கல் கொண்டாடிய வெள்ளையர்கள் PHOTO

    இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பகுதியில் தமிழர் தேசத்தின் பண்பாட்டு அரசியலின் எழுச்சிவடிமாக ‘தமிழர் திருநாள்’ நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

    யாழ் முற்றவெளியில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வானது தமிழர் தாயக உறவுகள், மலையக உறவுகள் அனைவரதும் பொதுப் பொங்கலிடலாக 108 பானைகள் வைக்கப்பட்ட

    தமிழர் திருநாளாக அமைந்திருந்தது. இதனை தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டு

    செய்திருக்க,வடக்கு, கிழக்கு மற்றும் மலையக இளைஞர்கள் ஒருங்கிணைத்திருந்தனர்.

    2009ம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சி பகுதியில் தமிழர் தரப்பினால் பண்பாட்ட எழச்சி நிகழ்வாக

    முன்னெடுக்கப்பட்டிருந்தது. 2009க்கு பின்னராக தற்போது பத்து ஆண்டுகளின் பின் தற்போது கூட்டுப்பொங்கலாக இது அமைந்துள்ளது.

    யாழ்பாணத்துக்கு சுற்றுலாச்சென்றிருந்த பல வெளிநாட்டினரும் உற்சாகத்தோடு, தமிழர் திருநாள் நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர்.

    பண்பாட்டு தளத்தில் தமிழர்களாய் ஒருங்கிணைவது காலத்தின் கட்டயமாக அமைந்துள்ளதோடு, பண்பாட்டு எழுச்சியே தமிழர்களின் அரசியல் எழச்சிக்கும் சமூக

    விழிப்புக்கு அவசியமாக உள்ளது என ‘தமிழர் திருநாள்’ ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

    இதன் ஒரு செயல்முனைப்பாக பண்பாட்டு தளத்தில் தமிழர்களை ஒருங்கிணைக்கு வகையில் ‘தமிழர் திருநாள்’ நிகழ்வுக்கான பிரச்சாரங்கள்

    முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு, பல பொது அமைப்புக்கள், பொதுமக்கள், கலைஞர்கள் என அனைவரதும்

    பங்களிப்போடு தமிழர் திருநாள் நிகழ்வினை இவ்வாண்டு முன்கை எடுத்துள்ளதாகவும், வருங்காலத்தில் தமிழர்

    தாயகத்தின் மிகப்பெரும் பண்பாட்டு எழுச்சி நிகழ்வாக ‘தமிழர் திருநாள்’ அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தாயகப்பகுதியில், தமிழர்களின் வழிபாட்டு உரிமை, பண்பாட்டு உரிமைகள்

    அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில், ‘தமிழர் திருநாள்’ எனும் பண்பாட்டு அரசியல் முன்னெடுப்பென்பது

    கவனத்தில் கொள்ளத்தக்கது என சமூக, அரசியல் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    மேற்படி தகவலை நாடுகடந்த அரசு செய்தி பிரிவினர் எமக்கு அனுப்பி வைத்தனர் ,இவர்கள் ஒரு நிகழ்வு முடிவுற்று

    ஒருவாரம் கழிந்த பின்னே ந்த காட்சிகளை அனுப்பி வைகின்றனர்

    ஒழுங்கற்ற விதத்தில் இயங்கும் ஒரு குழப்பகரமான அமைப்பு இது என்பது இந்த நிகழ்வின் ஊடே மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது

    யாழில் பொங்கல் கொண்டாடிய வெள்ளையர்கள்
    யாழில் பொங்கல் கொண்டாடிய வெள்ளையர்கள்
    யாழில் பொங்கல் கொண்டாடிய வெள்ளையர்கள்