Tag: மனித தலை
கரை ஒதுங்கிய மனித தலை பதட்டம்
கரை ஒதுங்கிய மனித தலை பதட்டம்
கரை ஒதுங்கிய மனித தலை பதட்டம் ,மொரகல்லாவில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை கரை ஒதுங்கியது
பிரபலமான சுற்றுலா விடுதி
அலுத்கம, மொரகல்லாவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா விடுதிக்குப் பின்புறம் அமைந்துள்ள கடற்கரையில், துண்டிக்கப்பட்ட மனிதத் தலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, இன்று காலை (23) பெறப்பட்ட ஒரு தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. அதனைத்
தொடர்ந்து, அலுத்கம பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணை
கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் ஒரு ஆணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது; இருப்பினும், அவரது அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று பொலிஸ் கூறியது.
இந்தச் சம்பவம் குறித்து அலுத்கம பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு

- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்

- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு

- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை

- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

ஆற்றில் மிதந்து வந்த மனித தலை – அதிர்ச்சியில் பொலிஸ்
ஆற்றில் மிதந்து வந்த மனித தலை – அதிர்ச்சியில் பொலிஸ்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்தின் கீழுள்ள ஆற்றில் இன்று 3 மணியளவில் சடலமொன்றில் தலை மிதந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய
தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
ஓட்டமாவடிப் பாலத்தினால் நபரொருவர் சென்று கொண்டிருந்த போது ஆற்றில் சடலமொன்றின் தலை மிதந்த நிலையில் காணப்படுவதை கண்டுள்ள நிலையில், கிரான் பகுதியில் ஆற்றில்
காணாமல் போன மாணவர்ளின் சடலமோ என்ற சந்தேகத்தில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த நபரின் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன், கல்குடா சுழியோடிகள் இரண்டு படகுகளில் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் மிதந்தது சடலமா, அல்லது ஏதும் கழிவுப் பொருட்களா என பொலிஸார் மற்றும்
சுழியோடிகள் சந்தேகத்தோடு ஆற்றில் பல்வேறு பகுதிகளிலும் தேடிக் கொண்டிருப்பதை காண
முடிவதுடன், இதனை கேள்வியுற்ற மக்கள் ஓட்டமாவடி பாலத்தில் குவிந்து காணப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
ஆற்றில் மிதந்த மனித தலை – நடந்தது என்ன – விசாரணையில் பொலிஸ்
ஆற்றில் மிதந்த மனித தலை – நடந்தது என்ன – விசாரணையில் பொலிஸ்
இலங்கை மாத்தறை பகுதியில் நீரோடை ஒன்றுக்குள் அழுகிய நிலையில் மனித தலை ஒன்று மிதந்து வந்துள்ளது ,
இதனை கண்ணுற்ற மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் மேற்படி நபரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
கோட்டா ஆட்சியில் ஆறுகளில் இவ்விதம் மனித சடலங்கள் மிதந்து வருகிறது ,இது கொலையா
,அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்










