சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி
Posted in இலங்கை செய்திகள்

சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி

சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி

சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி யாகி உள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.Woman dies due to cooking gas leak

மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி அரபா வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு Gas for making tea

தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு சிலிண்டரை அவர் பயன்படுத்திய போது ,அது திடீரென வெடித்து சிதறியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் எரி காயங்களுக்கு உள்ளான பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .

பின்னர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் Great anxiety among the people

மேற்படி எரிவாயு கசிவால் பெண் கருகி இறந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பெண்ணினுடைய மரணம் தொடர்பாக விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.

சமையல் எரிவாயு எப்படி கசிந்தது என்பது தொடர்பிலும் அது எப்படி வெடித்து சிதறியது .

என்பது தொடர்பிலும் இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விபத்து மரணமா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலையா என்பது தொடர்பாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம்

யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம்

யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம் அடைந்துள்ளதா யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.Youth injured in sword attack in Jaffna

திடீரென மார்ம நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் Suddenly, a sword attack by religious people

மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் மீது திடீரென மார்ம

நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயம் அடைந்த வாலிபன் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 35 வயது உடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த வாள்வெட்டு காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வாள்வெட்டிற்கான காரணம் இருதரப்புக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடே காரணமென போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனவே வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் எங்கும் போலீசார் ராணுவம் Police and military everywhere in Jaffna

யாழ்ப்பாணம் எங்கும் போலீசார் ராணுவம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் வந்து மக்களுக்கு முன்பாக இந்த வாள்வெட்டுதாக்குதலை நடத்த பட்டுள்ளது .

அது வரை காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

எனவே இந்த வாழ்வட்டு தாக்குதலின் பின்புலத்தில் அரசியல் மறைந்திருப்பதும் அரசியல்வாதிகள் ஆதரவு இருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது.

அனுரா அரசில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து

இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து

இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து ,இலங்கை நேபாள விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. Sri Lanka-Nepal flight services cancelled

அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் Protest against the government

நேபாளத்தில் அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை அடுத்து விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆளும் ஆட்சியாளருக்கு எதிராக இந்த போராட்டங்கள் இடம்பெற்று வருவதால் அவை வன்முறையில் மாறி

விமானங்களுக்கு சேதங்கள் ஏற்படுத்திவிடலாம் என்ற காரணத்தினால். இந்த போக்குவரத்து தற்காலிகமாக தடை நிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து தற்காலிகமாக தடை Traffic temporarily suspended

இதனை அடுத்து நேபாளம் இலங்கையில் இருந்து சென்று வந்த பயணிகள் தற்போது மிகப்பெரும் அவதியில் சிக்கியிருக்கின்றனர் .

இலங்கையின் விமான சேவைகள் நேபாளத்தில் அமைதி ஏற்பட்ட பின்னரே முழுமையாக ஆரம்பிக்கப்படும் என இலங்கை அரச அதிகாரிகளினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக அழைப்பு
Posted in விசேட செய்திகள்

இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக அழைப்பு

இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக அழைப்பு

இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக அழைப்பு ,இஸ்ரேலிய ஆட்சியின் அப்பட்டமான குற்றங்களை, குறிப்பாக தோஹாவில் ஹமாஸ் அதிகாரிகள் மீதான வான்வழித் தாக்குதலை .

இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட வேண்டும்

தீவிரமாகவும் திறம்படவும் கண்டனம் செய்வதில் இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் அழைப்பு விடுத்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை கத்தார் எமிர் தமீம் பின் ஹமாத் பின் கலீஃபா அல் தானியுடன் தொலைபேசி உரையாடலின் போது, ​​இஸ்ரேலிய ஆட்சியின்

ஆக்கிரமிப்புக்கு ஜனாதிபதி பெஷேஷ்கியன் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார், மேலும் கத்தாருடன் ஈரானின் ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்தினார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்ட கட்டமைப்புகளை புறக்கணித்ததற்காக இஸ்ரேலிய ஆட்சியை பெஷேஷ்கியன் விமர்சித்தார்,

அத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவால் ஆதரிக்கப்படுகின்றன என்பதை வலியுறுத்தினார்.

இஸ்ரேலிய ஆட்சி சுய பாதுகாப்பு

இஸ்ரேலிய ஆட்சி சுய பாதுகாப்பு என்ற சாக்குப்போக்கின் கீழ் முழு பிராந்தியத்தின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை சீர்குலைக்கிறது, தயக்கமின்றி அட்டூழியங்களைச் செய்கிறது என்று அவர் கூறினார்.

இந்த மீறல்களுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்,

இஸ்ரேலின் ஆட்சியின் மேலும் ஆக்கிரமிப்பைத் தடுக்க கூட்டு கண்டனம் அவசியம் என்று வலியுறுத்தினார்.

இஸ்லாமிய நாடுகளிடமிருந்து ஒருங்கிணைந்த பதில்

நடந்துகொண்டிருக்கும் குற்றங்களை திறம்பட நிவர்த்தி செய்வதற்கும் எதிர்ப்பதற்கும் இஸ்லாமிய நாடுகளிடமிருந்து ஒருங்கிணைந்த பதில் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த பிராந்திய நிலைப்பாட்டின் முக்கியத்துவத்தை கத்தார் அமீர் ஒப்புக்கொண்டார்,

யூத பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ஆக்கிரமிப்புக்கு வரம்புகள் இல்லை என்பதை எடுத்துக்காட்டினார்.

ஹமாஸ் அதிகாரிகளுடனான சமீபத்திய கலந்துரையாடல்கள் அமெரிக்காவின் போர்நிறுத்த முன்மொழிவுக்கு சாதகமாக பதிலளிக்க

விருப்பம் இருப்பதை வெளிப்படுத்தியதாகவும், அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்க மட்டுமே விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

யூத அட்டூழியங்களைத் தடுக்க ஈரானுக்கும் பிற இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து தொடர்பு கொள்ளும் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல்
Posted in விசேட செய்திகள்

ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல்

ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல்

ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல் ,ஹமாஸ் பேச்சுவார்த்தை குழு மீது கட்டாரில் வைத்து வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது . Attack on Hamas leaders

தாக்குதலில் ஹமாசின் பேச்சு வார்த்தை குழு பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக வந்திருந்தது .

இஸ்ரேல் மோசட் உளவுத்துறை

அவர்களை இஸ்ரேல் மோசட் உளவுத்துறை வான்வழி தாக்குதலை நடத்தி படுகொலை புரிந்து இருந்தது.

இதில் அந்த பேச்சுவார்த்தைக்குள் அங்கம் பெற்ற மிக முக்கியமான சிலர் பலியாகியும் அதனுடைய தலைவர் தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்து பல்வேறுபட்டவர்களையும் தளபதிகளையும் படுகொலை செய்து வருகிறது .

எம்மால் யாரையும் படுகொலை செய்ய முடியும் மொஸாட் சவால் Mossad Challenge: We can assassinate anyone

அந்த வகையில் தற்போது கட்டாருக்கு நுழைந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதால் எங்கும் எப்போதும் எம்மால் யாரையும் படுகொலை செய்ய முடியும் என மொஸாட் சவால் விட்டு தனது படுகொலை வேட்டையை நடத்தி வருகிறது .

ஆகவே இந்த படுகொலை நடவடிக்கை என்பது உலக நாடுகளையும் மிரள வைத்து செயலாற்றி வருவதாக பார்க்கப்படுகிறது .

எங்கும் எப்பொழுதும் எந்த நாட்டினுடைய தலைவரையும் தளபதிகளையும் எங்களால் போட்டுத் தள்ள முடியும் என்பதாக இஸ்ரேல் பகிரங்கம் மிரட்டல் விட்டு உலகையே விரலை விட்டு வருவதை காணமுடிகிறது .

இந்த தாக்குதல் ஹமாஸ் மற்றும் மரபு நாடுகளுக்கு மட்டுமில்ல உலக நாட்டினுடைய மிக முக்கிய மூளைகளுக்கு எச்சரிக்கை என்பதாக எடுத்துக் கொள்ள முடிகிறது .

இந்தியாவில் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியாவில் நிலநடுக்கம் ,இந்தியாவில் ஏற்பட்ட நிலடுக்கம் காரணமாக ஐந்து பேர் பலியாகி 3க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .Earthquake in India

ஹிமாலயா பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு Landslide in the Himalayan region

இந்தியாவின் அதி உயரமான பகுதியாக காணப்படும் சீனா இந்திய எல்லையில் அமைந்துள்ள ஹிமாலயா பகுதியில்

இடம்பெற்ற நிலச்சரிவு சிக்கிய இந்த மக்கள் பலியாகியும் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலச்சரிவில் 100க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து தர மட்டமாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணி Rescue operations continue in affected areas

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்னரே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 380க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி 400க்கு மேற்பட்ட ஒரு காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா என்ற கேள்வியை தமிழர்கள் மீளவும் எழுப்பியுள்ளனர் .

இலங்கை முழுவதும் சிங்கள மயமாக்களுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் தமிழர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .

இலங்கை அரச இராணுவம்

அரச நிர்வாகிகள் முதல் இலங்கை அரச இராணுவம் வரைக்கும் தமிழர்கள் அடக்கி ஆட்கொள்ள பட்டு நசுக்க பட்டு வருகின்றனர் .

இப்பொழுது தமிழர்கள் துப்பாக்கி முனையில் வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது .

சுதந்திரம் அற்ற தேசத்தில் சுத்தித்திரமாக வாழும் நிலை எப்பொழுது ஏற்படும் என்பதே தமிழ் மக்கள் கேள்வியாக உள்ளது .

புலிகள் அந்த மண்ணில் வாழ்ந்த பொழுது அச்சமற்ற சிறந்த வாழ்வியல் காணப்பட்டது .

ஆனால் இன்று எப்பொழுது யார் கடத்த படுவார்கள் காணாமல் போவார்கள் என தெரியாத நிலை காணப்படுகிறது .

இதனை தடுத்து நிறுத்தி தமிழர்கள் வாழும் உரிமை யார் பெற்று கொடுப்பார்கள் என்பதே ஒட்டுமொத்த தமிழரின் எதிர் பார்ப்பாங்க உள்ளது .

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை
Posted in இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை ,காங்கேசன்துறையிலிருந்து கோட்டைக்கு செல்லும் மதியம் 1.30 புகையிரதத்தில் முன்பதிவு செய்த நால்வர் யாழ்ப்பாணத்திலிருந்த ஏறியிருக்கின்றனர்.

காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள்

ஆனால் அவர்கள் முன்பதிவு செய்து பயணச்சீட்டுக்களை பெற்றிருந்த ஆசனங்களில் காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள் அமர்ந்து வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் முன்பதிவு செய்த நான்கு தமிழர்களும் பயணச்சீட்டைக் காட்டி, அது தம்மால் முன்பதிவு செய்யப்பட்டது எனவும், ஆசனத்தை விட்டுத்தருமாறு கேட்டபோது,

தாமும் முன்பதிவு செய்துதான் புகையிரத த்தில் பயணிக்கிறோம் எனவும் தாம் முன்பதிவு செய்த ஆசனங்கள் வேறொரு பெட்டியில் இருப்பதாகவும், தமிழர் நால்வரும் அந்த ஆசனங்களில் அமர்ந்து வருமாறும் கூறியிருக்கின்றனர்.

தாம் முன்பதிவு செய்துள்ள ஆசனத்தை தம்மிடமே ஒப்படைத்துவிட்டு, நீங்கள் முன்பதிவு செய்த ஆசனங்களுக்கே சென்று அமருங்கள் என யாழ்ப்பாணத்தவர்கள் கோரியபோதும் அதற்கு சிங்களவர்கள் செவிசாய்க்கவில்லை.

சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்

இதனையடுத்து புகையிரத பரிசோதகர்களிடம் இந்த விடயத்தை பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தபோது சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்

புகையிரதம் நிறுத்தப்பட்டு சிங்களவர்களை அவர்கள் முன்பதிவு செய்த ஆசனத்தில் சென்று அமருமாறு புகையிரத பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதனை ஏற்காத சிங்கள பயணிகள், தாம் அரசியல் செல்வாக்குடையவர்கள் என்றும் தம்மோடு பகைத்துக்கொண்டு யாரும் புகையிரத த்தில் பயணித்து கொழும்பு வரமுடியாது எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளால் 30நிமிடம் வரை சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்க்க்கப்படதாகவும்,

சிங்கள பயணிகள் அடாத்தாக அமர்ந்த ஆசனங்களிலேயே தொடர்ந்தும் பயணம் செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்

கெஹலியவின் வழக்கு நிறைவு
Posted in இலங்கை செய்திகள்

கெஹலியவின் வழக்கு நிறைவு

கெஹலியவின் வழக்கு நிறைவு

கெஹலியவின் வழக்கு நிறைவு ,நிதி மோசடி தொடர்பான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட

கொழும்பு பிரதான நீதவான்

வழக்கை நிறைவுறுத்துவதாக கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று (9) அறிவித்தார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கை தொடர்ந்துள்ளதால், கொழும்பு நீதவான்

நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறைவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அதன்படி, பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள்

இதன்போது நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக

கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடியும் என தெரிவித்தனர்.

அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் தொடரப்பட்ட குறித்த வழக்கின் நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடிவு செய்த பிரதான நீதவான்,

பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட முன்னாள்

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

அமைச்சராக இருந்த காலத்தில் 97 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வங்கிக் கணக்குகள், ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வாகனங்களை சட்டவிரோதமாகப் பெற்றதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தாய்லாந்து பிரதமருக்கு ஓராண்டு சிறை
Posted in உலக செய்திகள்

தாய்லாந்து பிரதமருக்கு ஓராண்டு சிறை

தாய்லாந்து பிரதமருக்கு ஓராண்டு சிறை

தாய்லாந்து பிரதமருக்கு ஓராண்டு சிறை ,தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தாய்லாந்து உயர் நீதிமன்றம்

அவர் மீதான முன்னைய குற்றச்சாட்டுக்களுக்கு ஒருவரும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தாய்லாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாய்லாந்தின் மிகப்பெரிய பணக்காரரும் அரசியல்கட்சித் தலைவருமான தக்சின் ஷினவத்ரா அந்நாட்டின் செல்வாக்கு மிக்கவராக கருதப்படுகிறார்.

தாய்லாந்து பிரதமராக பதவி

2001 முதல் 2006 வரை தாய்லாந்து பிரதமராக பதவி வகித்த அவர் 2007ம் ஆண்டு பியூ தாய் எனும் கட்சியைத் துவங்கினார்.

ஆட்சியை இழந்த தக்சின் ஷினவத்ரா மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து 2009ம் ஆண்டு தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மொண்டெனேகுரோ-வுக்கு தப்பிச் சென்ற ஷினவத்ரா சுமார் 15 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ம் ஆண்டு தாய்லாந்து வந்தார்.

பியூ தாய் கட்சி ஆட்சி

பியூ தாய் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் அவர் மீதான வழக்கில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த சிறை தண்டனை தாய்லாந்து மன்னரால் ஒரு வருடமாக குறைக்கப்பட்டது.

கால் நூற்றாண்டாக தாய்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தி வரும் கோடீஸ்வரரான தக்சின் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே சிறைச்சாலையில் இருந்த நிலையில் வைத்திய சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தண்டனையை அனுபவித்து வந்தார்.

6 மாதங்களில் விசேட பிணை

பின்னர், 6 மாதங்களில் விசேட பிணையில் வெளியே வந்த தக்சின் ஷினவத்ரா தாய்லாந்து அரசியலில் மீண்டும் செல்வாக்கு செலுத்தினார்.

இந்த நிலையில் செப்டம்பர் 4 ஆம் திகதி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தாய்லாந்து பாராளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவரது கட்சி தோல்வி அடைந்தது.

அவருக்கு எதிரான விசாரணை

இதனை அடுத்து அவருக்கு எதிரான விசாரணையின் போது ஏற்கனவே வைத்தியசாலையில் இருந்தபடி தண்டனையை அனுபவித்ததால் அது தண்டனையாக கருதப்படாமல் ஓராண்டு தண்டனையை விதிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன
Posted in இலங்கை செய்திகள்

கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன

கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன

கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன ,ஐஸ் உற்பத்தியுடன் தொடர்புடைய மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களைக்

கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் செயல்பாட்டில் ஓர் முன்னேற்றமாக அமைந்து காணப்படுகின்றது. இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டதுடன் பல

கேள்விக்குரிய விடயங்கள் வெளிவருவதனால், அரசாங்கம் இந்த விடயத்தின் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த 2 கொள்கலன்களும் துறைமுகத்திலிருந்து எவ்வாறு வெளியே வந்தன என்பதுதான் இங்குள்ள கடுமையான பிரச்சினையாக காணப்படுகின்றன.

சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டில் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளினது பரவல் தொடர்பிலான தகவல்களை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.

இந்த இரண்டு கொள்கலன்கள் குறித்தும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டிற்கு ஏலவே தகவல்களை தெரிவித்தனவா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டி காணப்படுகின்றது.

இந்த புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்ற திகதி, தகவல் குறித்து விசாரணைகளை நடத்திய நபர்கள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பிரிவு, இந்த பரிசோதனைகளுக்குப் பிறகும், ஐஸ் உற்பத்திக்கான

மூலப்பொருட்கள் அடங்கிய இந்த இரண்டு கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனவா போன்ற தகவல்களை அறிந்து கொள்வது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினது ஒன்றியத்தினருடன் நேற்று (08) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தால், விடுவிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பிலான உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

சர்வதேச புலனாய்வு அமைப்புகள் இது குறித்த தகவல்களை தெரிவித்த பின்னர், குறித்த கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதா ? இந்த கொள்கலங்களை விடுவிப்பதற்கு ஏதுவாக அமைந்து

காணப்பட்ட விடயங்கள் யாவை? அதே போல் சமீபத்தில் பரிசோதனை மேற்கொள்ளாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களும் இதைச் சேர்ந்ததா ? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

போதைப் பொருள் உற்ப்பத்திக்கான மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்கப்பட்டமை குறித்தான சகல தகவல்களையும் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும்.

இந்த மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைச் சுற்றியுள்ள கேள்விகளுக்குரிய உண்மைகளை வெளிக்கொணர முடியும்.

இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி வேறுபாடு இல்லாமல் போதைப்பொருள் அச்சுறுத்தலின் பரவலைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தப் பயணத்தின் போது உண்மையான தகவல்களை பொதுமக்களுக்குத் தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொலைச் சம்பவம் மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கொலைச் சம்பவம் மூவர் கைது

கொலைச் சம்பவம் மூவர் கைது

கொலைச் சம்பவம் மூவர் கைது ,இரட்டை கொலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.

புலனாய்வுப் பணியக அதிகாரிகள்

இது தொடர்பான விசாரணையை தகுற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று (08) விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் எம்பிலிபிட்டிய பகுதியில் குறித்த 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்கள் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பின்வரும் ஆதங்கள் மற்றும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட துப்பாக்கிச் சூட்டில் உஷி வகை துப்பாக்கி 09 மிமீ

அளவிலான கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது

09 மி.மீ அளவிலான கைத்துப்பாக்கி

09 மி.மீ அளவிலான கைத்துப்பாக்கிக்கு பயன்படும் 53 தோட்டாக்கள்

T56 ரக 19 தோட்டாக்கள்

T56 ரக 2 வெற்று தோட்டாக்கள்

ஒரு ஜோடி கைவிலங்கு

300 கிராம் ஹெராயின் என்பனவற்றை தங்காலை குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜித பிணையில் செல்ல அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

ராஜித பிணையில் செல்ல அனுமதி

ராஜித பிணையில் செல்லஅனுமதி

ராஜித பிணையில் செல்ல அனுமதி ,ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் .

கொழும்பு நீதவான் நீதிமன்றம் Colombo Magistrate’s Court

ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க

உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் Bribery and Corruption Commission officials

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள்

முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு

இன்று (09) காலை சிறைச்சாலை அதிகாரிகளால், அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

நாட்டில் கடும் மழைபெய்யும் சாத்தியம்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் கடும் மழைபெய்யும் சாத்தியம்

நாட்டில் கடும் மழைபெய்யும் சாத்தியம்

நாட்டில் கடும் மழைபெய்யும் சாத்தியம் ,நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (9) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.Heavy rains possible in the country

பலத்த மழை பெய்யக்கூடும் Heavy rain possible.

சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் Thunderstorms are expected.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் , நடத்திக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது .Israel attacks Lebanon

லெபனான் கிஸ் புல்லா போர்படை Lebanese Kisfullah Brigade

தெரிவு செய்யப்பட்ட லெபனான் கிஸ் புல்லா போர்படைகளின் இலக்குகளை இலக்கு வைத்து,

தமது ட்ரோன் மற்றும் போர் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருவதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது .

தெரிவு செய்யப்பட்ட 12 இலகுககள் மீது தங்கள் கடும் தாக்குதே நடத்தியதாகவும் ,அதில் இஸ்ரேல் போர்படை வீரர்கள் பலர் பலியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முக்கியமான தளபதிகள் இலக்கு Target important commanders

மிக முக்கியமான தளபதிகள் இலக்கு வைத்து அவர்கள் மீது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, வழமை போன்று யூத ராணுவம் அறிவித்துள்ளது .

எனினும் எதிரி படைகள் நடத்திய இந்த தாக்குதலில், தமது தரப்பில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக வெளியாகவில்லை .

இந்த தாக்குதல்களில் யார் பலியானார்கள் என்பது தொடர்பாக, லெபனான் கிஸ் புல்லா போர்ப்படைகள் இதுவரை எதனையம் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு செய்துள்ளது.

யூத படைகளின் முக்கிய இராணுவ இலக்குகள் கேந்திர நிலையங்களை இலக்கவைத்து, ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர் படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .

ஏமன் ஹவுதிகளின் ஊடகப் பேச்சாளர்

இவ்வாறு ஏமன் ஹவுதிகளின் ஊடகப் பேச்சாளர் யாகா சாரீ தெரிவித்துள்ளார்.

யூத படைகளின் மிக முக்கியமான விமானத்தளங்கள் மற்றும் இரு இ ராணுவ நிலைகளை இலக்கு வைத்து தட்ரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

இஸ்திரேலிய அரச பயங்கரவாத படைகள்

இதனால் மிகப்பெரும் இழப்பினை இஸ்திரேலிய அரச பயங்கரவாத படைகள் சந்தித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அப்பாவி காசா மக்களை படுகொலை செய்யும் எதிரி படைகளை இலக்கு வைத்து தமது நெருப்பு தாக்குதல் நடத்தி வருவதாக அவர் அறிவித்துள்ளார்.

பதிலுக்கு பதிலடி தாக்குதலை எமன் ஹவுதி அன்சார் அல்லா போர் படை இராணுவம் நடத்தி கொண்டுள்ளது

நான்கு இஸ்ரேல் படைகள் பலி
Posted in உலக செய்திகள்

நான்கு இஸ்ரேல் படைகள் பலி

நான்கு இஸ்ரேல் படைகள் பலி

நான்கு இஸ்ரேல் படைகள் பலி யாகி உள்ளதாக இஸ்திரேலிய அரச இராணுவ அறிவித்துள்ளது. Four Israeli soldiers killed

ஹமாஸ் போர்படை வீரர் Four Israeli soldiers killed

பாலஸ்தீனம் காசா பகுதியில் ஹமாஸ் போர்படை வீரர்களுக்கும் இஸ்திரேலிய படைகளுக்கு இடையில் நடந்த

சண்டையில் 4 இஸ்திரேலியா படை இடைநிலை தளபதியின் உள்ளிட்டவர்கள் பலியாகி உள்ளார்கள்.

இவர்கள் 401 ஆர்மட் 52வது பட்டாலியனை படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்கள் வாழ்விடங்களை அழித்து இனப்படுகொலை Genocide by destroying the habitats of the Palestinian people

பலஸ்தீன மக்கள் வாழ்விடங்களை அழித்து இனப்படுகொலை வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த படைகளை இலக்கு வைத்து திடீர் சுற்றி வளைப்பு தாக்குதலை கமாஸ் போர்படை வீரர்கள் நடத்தினர்.

இதன் பொழுதே இஸ்ரேலிய இராணுவத்தின் அதிகாரிகள் தரத்திலான நான்கு சிப்பாய்கள் பலியாகி உள்ளார்கள்.

இந்த சிப்பாய்கள் நீண்ட நெடுங்கால யுத்தத்தில் ஈடுபட்டு அனுபவம் கொண்டவர்கள் எனவும் அவ்வாறான மிக முக்கியமான தளபதிகளே பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா |ஆட வைக்கும் பாடல் |லண்டனில் பிறந்த 14 வயது சிறுவன் கம்பியூட்டர் ஜீ எழுதிய மூன்றாவது SONGS

பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே
பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே

லண்டனில் பிறந்த 14 வயது சிறுவன் கம்பியூட்டர் ஜீ எழுதிய மூன்றாவது பாடலாக

இங்கிலாந்து பொண்ணா என்ற பாடல் இன்று வெளியீடு செய்ய படுகிறது .

மதுரக்குரலோன் – பாவேந்தன் குரலில் ,இளங்கோ செல்லப்பா இசையில் ,

கம்புயூட்டர் ஜீ வரிகளில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக வெளியீடு செய்ய பட்டுள்ளது .

CLICK HERE VIDEO

மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம்
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம்

மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம்

மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டிலிருந்து தற்போது வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகை Privilege given to former presidents

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் பல ரத்து செய்யும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதிகள் அரசினால் வழங்கப்பட்ட அரச வீடுகள் மற்றும் ஆடம்பர பங்களாக்கள் அனுபவிக்க முடியாத சட்ட மூலம் கொண்டுவரப்படுகிறது .

அத்துடன் அதற்கான பாதுகாப்பு மற்றும் ஏனைய சலுகைகளும் நீக்கப்படுகிறது.

வேறு எதுவுமே அவர்கள் பெற்றுக்கொள்ள முடியாதவாறு புதிய சட்டமூலத்தை அரசு மேற்கொண்டு வருகிறது .

இதனால் முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவித்து வந்த சலுகைகள் பல நிறுத்தப்படுகின்றன .

ஆடம்பரமாக வாழ்ந்து வந்த மஹிந்த

இதனால் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த மஹிந்த அரச வீட்டில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ வெளியேறி தற்போது தமது சொந்த வீட்டில் குடிகொள்ள சென்று கொண்டிருக்கிறார் .

இந்த நிலவரம் என்பது மிகப் பெரும் இடரை ஏற்படுத்தி உள்ளதான தகவல் வெளியாகியுள்ளது

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்
Posted in இலங்கை செய்திகள்

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள் நிலவரத்தால் பயணிகள் பெரும் அச்ச நிலையில் உறைந்துள்ளனர். Sri Lankan buses are life-giving

பொது பயணிகள் போக்குவரத்து பேருந்து Public passenger transport bus

இலங்கையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பொது பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகள் மக்கள் உயிர் குடிக்கும் எமனாக மாறியிருக்கிறது .

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வரும் பேருந்து விபத்துக்களினால் மக்கள் பலியாகி வருகின்றார்கள் .

தொடரும் இந்த பேருந்து விபத்துக்கள் ஏன் இடம்பெறுகிறது இதன் பின்னணியில் உள்ளது யார் என்பது தொடர்பாக இதுவரை இலங்கை காவல்துறை எதனையும் தெரிவிக்க மறுத்து வருகிறது .

தொடரும் பேருந்து விபத்துக்கள் Bus accidents continue

இடைவிடாது தொடரும் பேருந்து விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது? அதற்கான அடிப்படை காரணம் என்ன.

என்பதை கூட ஆராய்ந்து விளக்க முடியாத நிலையில் இலங்கை காவல்துறை சிக்கி இருக்கிறது.

பயணிகளை ஏற்றியபடி வேகமாக பயணிக்கும் தனியார் பேருந்து அரச பேருந்துகள் என்பன போட்டி போட்டு வீதியில் ஓட்ட போட்டி நடத்துகிறது .

இதன் காரணமாக அப்பாவி பொதுமக்கள் அவர்கள் வியாபார போட்டியில் சிக்கி பலியாகி வருவதாகவே தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு அரச நிர்வாகமும் அதன் இயக்கமும் தான் காரணமென மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றார்கள்.