Tag: கெஹலிய
கெஹலியவின் வழக்கு நிறைவு
கெஹலியவின் வழக்கு நிறைவு
கெஹலியவின் வழக்கு நிறைவு ,நிதி மோசடி தொடர்பான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட
கொழும்பு பிரதான நீதவான்
வழக்கை நிறைவுறுத்துவதாக கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று (9) அறிவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கை தொடர்ந்துள்ளதால், கொழும்பு நீதவான்
நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறைவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.
அதன்படி, பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள்
இதன்போது நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக
கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடியும் என தெரிவித்தனர்.
அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் தொடரப்பட்ட குறித்த வழக்கின் நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடிவு செய்த பிரதான நீதவான்,
பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட முன்னாள்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
அமைச்சராக இருந்த காலத்தில் 97 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வங்கிக் கணக்குகள், ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வாகனங்களை சட்டவிரோதமாகப் பெற்றதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கெஹலியவின் பெயர் நீக்கம்
கெஹலியவின் பெயர் நீக்கம்
கெஹலியவின் பெயர் நீக்கம் ,கொழும்பு, வத்தேகம கல்வி வலயத்தின் கண்டி, குண்டசாலை பிரிவுக்குட்பட்ட ‘கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலை’ என்ற பெயரை உடனடியாக மாற்றுவதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று அனுமதியளித்துள்ளார்.
கண்டியில் உள்ள பாடசாலைகளில் ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை நீக்குமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து மாகாண கல்வி திணைக்களத்தின் கட்டமைப்பு குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இப்பாடசாலை இனி குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை என அழைக்கப்படும்.
இதேவேளை, மினிபே கல்வி வலயமான தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் பெயரை மாற்றவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வி அமைச்சின் 1996 ஆம் ஆண்டு சுற்றறிக்கை உயிருடன் இருக்கும் நபர்களின் பெயரை பாடசாலைகளுக்கு வைப்பதை தடை செய்துள்ளதாக வலியுறுத்தினார்.
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் கொள்முதல் ஊழலில் கெஹலிய ரம்புக்வெல்ல ஈடுபட்டிருந்த போதிலும், அவரது பெயரை பாடசாலைக்கு வைத்திருப்பது பொருத்தமற்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (02) கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று முன்னாள் அமைச்சரிடம் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.
ஈரான் அமெரிக்கா கடலில் போர்
39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா
ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப்
அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார்
ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
கெஹலியவிடம் சி ஐ டி விசாரணை
கெஹலியவிடம் சி ஐ டி விசாரணை
இலங்கைக்கு தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்திற்குச் சென்று இன்று (26) பிற்பகல் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் ஆஜராகியிருந்தது.
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, மேற்படி அமைச்சின்
மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் டொக்டர் கபில விக்ரமநாயக்க மற்றும் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கெஹலியவைக் கைது செய்ய வேண்டும்
கெஹலியவைக் கைது செய்ய வேண்டும்
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (24) தெரிவித்துள்ளார்.
”அவருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கெஹலியவின் அமைச்சு பதவியை மாற்றுவது மாத்திரம் போதாது” என தனது சமீபத்திய முகப்புத்தகப் பதிவில் பொன்சேகா பதிவிட்டுள்ளார்.
























