சிறுவனை தாக்கிய டீச்சர் ரவுடிகளாக மாறும் டீச்சர் வாத்தியார்கள்
Posted in இலங்கை செய்திகள்

சிறுவனை தாக்கிய டீச்சர் ரவுடிகளாக மாறும் டீச்சர் வாத்தியார்கள்

சிறுவனை தாக்கிய டீச்சர் ரவுடிகளாக மாறும் டீச்சர் வாத்தியார்கள்

சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் பாலகனை காட்டுமிரண்டிதனமாக தாக்கிய ஆசிரியை இவர் தானாம். இவர் கைது செய்யப்படும் வரை அதிகம் பகிருங்கள் வவுனியாவில் தாயில்லா பிள்ளையை தலை கால் தெரியாமல் தாக்கிய ஆசிரியை..


வவுனியா சுதந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் – 02 இல் கல்வி கற்கும் தாய் இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வரும் சசிக்குமார் சகிலன் என்ற பாலகனை ஆசியை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளார் .

குறித்த மாணவன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கொடூர ஆசிரியையை தந்தை தொடர்புகொண்டு பேசிய போது மிகவும் திமிராக பதிலளித்ததுடன் ‘ஆ, ஆ, தெரியாத உங்கள் பிள்ளையை அடிக்காமல் கொஞ்சுவார்களா?” என கேட்டுள்ளார்.


ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் சில மாணவர்கள் கல்வியில் மெல்லக் கற்பவர்களாக இருப்பார்கள் என்று அடிப்படை கூட தெரியாதவர்கள், சிறார்களை எவ்வாறு கையாள்வது என்ற உளவியல் தெரியாதவர்கள் ஆசிரியர்களாக இருப்பதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள்.

இவர்களைப் போன்றவர்களை ஆசிரியர்களாக தொடர விடுவது மிகவும் ஆபத்தானது என்ற அடிப்படையில் குறித்த ஆசிரியை மீது சரியான நடவடிக்கையை உயர் அதிகாரிகள் எடுக்க தவறும் பட்சத்தில் இவ்வாறான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முழு அழுத்தத்தையும் உரியவர்களுக்கு வழங்க என்னைப்போன்ற பலர் தயாராக உள்ளோம்.


எமது பிள்ளைகளை தாக்கும் அதிகாரத்தை யார் உங்களுக்கு தந்தது? சில அதிபர்கள் இராணுவ தளபதிகள் போலவும் சில ஆசிரியர்கள் இராணுவம் போலவும் நடந்து வருவது அண்மைக்காலமாக தொடர் கதையாகியுள்ளது இனி இவ்வாறானவர்களை புகைப்படத்துடன் வெளியிட்டு எமது பிள்ளைகளை காப்பற்ற வேண்டி வரலாம்..

மறக்க முடியா நட்பு காலம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மறக்க முடியா நட்பு காலம்

மறக்க முடியா நட்பு காலம்

திருவுடன் காந்தன் ரமேசுடன்
திருப்பங்கள் தந்திட்ட முரளியுடன்
அன்று பழகிய அக்காலம்
அடடா நினைவில் இனிக்கிறது

அன்பு செல்லா கண்ணனுடன்
அன்று அடித்த அரட்டையது
இன்றும் நினைவில் சிரிக்கிறது
இளமை காலம் இனிக்கிறது

பிரிக்கண்டல் பிரித் உண்பதற்கு
பிள்ளைகள் எங்கள் சண்டைக்கு
பஞ்சம் என்றும் இருந்ததில்லை
பழகிய நட்பில் பேதமில்லை

காதலில் திகழ்ந்த அக்காலம்
கனியா வயது முக்காலம்
எங்கள் நட்பில் உறவிருக்கும்
என்றும் வாயில் சிரிப்பிருக்கும்

முதலாளி சொன் கல கலப்பும்
முத்துலிங்கண்ணை பர பரப்பும்
கனகண்ணை தெளிக்கும் கடிகளுக்கும்
காதுக்கு என்றும் பஞ்சம் இல்லை

அன்றந்த தோட்டத்து வாழ்விருக்கே
அதுபோல் சுகம் எங்கிருக்கோ
விரைவில் யாவரும் ஒன்றிணைவோம்
விடுகதை பேசி மகிழ்ந்திடுவோம் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-04-2024

ஹொலண்ட்ல தோட்டத்தில் வேலை புரிந்த நம் தோழர் நினைவுகளை எண்ணிய பொழுது

ஹொலண்ட் மொழியில்
பிரிக்கண்டல் – சோசஸ்
பிரித்- சிப்ஸ் ,உருளை கிழங்கு பொரியல்

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் 4 பேர் அவுட் எரியும் இஸ்ரேல் தளங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் 4 பேர் அவுட் எரியும் இஸ்ரேல் தளங்கள்


இஸ்ரேல் இராணுவ தளபதிகள் 4 பேர் அவுட் எரியும் இஸ்ரேல் தளங்கள்

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் 4 பேர் அவுட்,தெற்கு காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவத்தினர் சுற்றிவளைத்து தாக்குதல் , எரியும் இஸ்ரேல் தளங்கள்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ரஷ்ய ராணுவ சரக்கு விமானம் தீப்பிடித்து விபத்து
Posted in உலக செய்திகள்

பிரித்தானியாவில் பல விமான சேவைகள் திடீரென ரத்து

பிரித்தானியாவில் பல விமான சேவைகள் திடீரென ரத்து

மோசமான வானிலை காரணமாக பிரித்தானியாவில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

“கெத்லீன்” புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்புகளுக்கு அமைய விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பிரித்தானியாவில் சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மோசமான வானிலையால் ஸ்கொட்லாந்திலும் ரயில் மற்றும் படகு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காற்றின் நிலை காரணமாக, இங்கிலாந்தின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நெருக்கடியில் விஜயதாச ராஜபக்ஷ என்னுடன் இணைந்தார்
Posted in இலங்கை செய்திகள்

நெருக்கடியில் விஜயதாச ராஜபக்ஷ என்னுடன் இணைந்தார்

நெருக்கடியில் விஜயதாச ராஜபக்ஷ என்னுடன் இணைந்தார்

அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் விஜயதாச ராஜபக்ஷ நாட்டிற்காக தன்னுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் சட்டத்தரணி வாழ்வின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

விஜயதாச ராஜபக்ஷவிடம் பயிற்சி பெறும் மற்றும் பயிற்சி பெற்ற கனிஷ்ட சட்டத்தரணிகளால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை அரசியலிலும் சட்டத்துறையிலும் தனித்துவமான பங்களிப்பை வழங்கும் விஜயதாச ராஜபக்ஷ, இலக்கியவாதி, எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் கலைஞராக ஆற்றிய பணிகளுக்காக இதன்போது ஜனாதிபதியினால் பாராட்டப்பட்டார்.

இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை

இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை

இலங்கையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவருக்கு நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டதால் இந்திய விமானப் படையின் ஹெலி அவரை மீட்டு சென்னை வைத்தியசாலையில் சேர்த்துள்ளது.

இலங்கையில் இருந்து புறப்பட்ட நீண்ட நாள் படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடன் சென்றவர்கள் நடுக்கடலில் உதவி கோரினர். இதனால் அதன் அருகே சென்ற இந்தியக் கடற்படையினர் தகவலை இந்திய விமானப் படையினருக்கு வழங்கினர்.

இதையடுத்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலி சம்பவ இடத்துக்கு வந்தது. அதில் இருந்த விமானப் படையினர் மேற்படி இலங்கை மீனவரை மீட்டு சென்னை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவரின் விபரம் உடனடியாகச் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் நேற்று (06) இரவு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

மாவனெல்லை பதியதொர பிரதேசத்தில் தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதன்படி பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இதன்போது தகராறில் ஈடுபட்ட நபர், பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, ​​மற்றுமொரு பொலிஸ் அதிகாரி வானத்தை நோக்கிச் சுட்டதாகவும், பின்னர் குறித்த நபர் அந்த பொலிஸ் அதிகாரியையும் தாக்க முற்பட்ட போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலை நடத்த வந்த நபரின் தந்தை இலக்காகி மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

வரி அதிகரிக்க படும் - வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

அரசியல் கட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்

அரசியல் கட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்

கட்சியின் தேவைக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்கவன்றி பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்ட சட்டத்தரணிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இங்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நான் இங்கு வரவில்லை. ஜனாதிபதியாக உங்கள் அனைவருக்காகவும் பணியாற்றுகின்றேன். இப்போது நாம் பாரம்பரியமாக நினைத்த காலம் முடிந்துவிட்டது. பாரம்பரிய அரசியலின் காரணமாகவே இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.

நாட்டின் தேவைக்கேற்ப கட்சி அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். கட்சி அமைப்பின் விருப்பப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அதைச் செய்யப் போனதால்தான் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனை யாரும் பொறுப்பேற்கவில்லை. கடைசிவரை யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை.

இது குறித்து முக்கிய கட்சிகள் ஒன்று கூடி கலந்துரையாடுவது நல்லது என்று நான் நம்புகிறேன். பழைய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் அடிப்படையில் கிராமங்கள் கட்டியெழுப்பப்பட்டன. ஆனால் தற்போது பல புதிய கட்சிகள் உருவாகியுள்ளன. அடுத்த தேர்தலில் இதெல்லாம் மாறலாம். கட்சிகளைப் பற்றி சிந்திக்காமல் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். இல்லையேல் பிரிவுதான் ஏற்படும் என்றார்

ஹவுதிகள் தாக்குதலில் கப்பல் சேதம் இஸ்ரேலில் மக்களுக்குள் புகுந்த கார்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதிகள் தாக்குதலில் கப்பல் சேதம் இஸ்ரேலில் மக்களுக்குள் புகுந்த கார்


ஹவுதிகள் தாக்குதலில் கப்பல் சேதம் இஸ்ரேலில் மக்களுக்குள் புகுந்த கார்

ஹவுதி போர் படைகள் நடத்திய திடிர் தாக்குதலில் கப்பல் சேதம்,அதிரும் ,
செங்கடல் இஸ்ரேலில் மக்களுக்குள் புகுந்த கார் ,பலர் காயம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
கணவன் பின்சென்ற மனைவி ஊரில் சோகம்
Posted in உலக செய்திகள்

கணவன் பின்சென்ற மனைவி ஊரில் சோகம்

கணவன் பின்சென்ற மனைவி ஊரில் சோகம்

இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படியான சம்பவமொன்றே கடலூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது,

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சூரியன்பேட்டையை சேர்ந்தவர் கந்தன்(வயது 48). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்த இவரது மனைவி ரமாவள்ளி(40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவுகாரணமான கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தன் சிகிச்சை பலன் இன்றி வௌ்ளிக்கிழமை (05) பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கான இறுதி சடங்கு அன்று மாலை நடைபெற்றது.

கணவன் இறந்து போனதால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ரமாவள்ளி அவரது வீட்டின் கழிவறையில் திடீரென்று தன்னுயிரை மாய்க்க முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ரமாவள்ளியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் சனிக்கிழமை (06) அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நடுவீரப்பட்டு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மரத்தால் வந்த வினை ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கள்ளக்காதலால் விபரீதம் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை

கள்ளக்காதலால் விபரீதம் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நபரொருவரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பாணந்துறை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபருக்கும் அவரது மனைவிக்கும் 15 வருடங்களாக தொடர்பு இருப்பதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் தனது கள்ளக்காதலனுடன் இருப்பார் என்ற சந்தேகத்தில் தான் இந்தக் கொலையை செய்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமக்கு 24 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகள்கள் இருப்பதாகவும், அவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் தான் இந்த குற்றத்தை திட்டமிட்டதாகவும் சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், பெல்லந்தரை சந்தி பகுதியில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்து சென்று பொரலஸ்கமுவ, தேவலமுல்ல பிரதேசத்தில் வைத்து மன்னா கத்தியால் அவரின் கழுத்தில் தாக்கி கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கொலையை செய்துவிட்டு தப்பிச் செல்லும் போது தனது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக சந்தேநபர் தெரிவித்துள்ளதுடன், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்திய மன்னா கத்தி பிரிவென வீதியில் உள்ள வடிகாலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கடந்த 2ஆம் திகதி இரவு இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புதிய திட்டம் நடைமுறை

இலங்கையில் புதிய திட்டம் நடைமுறை

கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது மனைவிக்கு கணவன் துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த திட்டம் அரசாங்க வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

அதன்படி, பிரசவத்திற்கு ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தினூடாக தாய்மார்களுக்கு ஏற்ற சூழலில் குழந்தை பிறக்க வழிவகுப்பதோடு, பிரசவத்தின்போது தந்தை துணையாக இருக்க வாய்ப்பளிக்கிறது.

மனைவி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மனைவி

மனைவி

காகம் போல தினம் கரைவாள்
கடமை சோரா தினம் காய்வாள்
இல்லா நிலையில் இல்லம் வாடாள்
இருப்பதை வைத்தே இயக்கி போவாள்

அன்பு அதிகம் கொள்வாள்
அதனால் அதிகம் எரிவாள்
பண்பு தினம் பொலிவால்
பாயிலே தினம் ஓய்வாள்

பத்து மாதம் சுமப்பதுவும்
பணிவிடைகள் தினம் செய்வதும்
சத்தி வாய் வயிறோடும்
சளைக்கா வீடு உழைப்பதுவும்

எண்ணையில் மனம் வியக்கிறது
எப்படி இவளால் முடிகிறது
பாவம் செய்த ஓர் பிறப்பு
பாவை இவளின் பொறுப்பு

உணவு கொஞ்சம் இருந்தாலும்
ஊட்டி பிள்ளை வளர்ப்பதுவும்
பட்டினி கிடப்பதை மறைப்பதுவும்
பழகி போன வாழ்வாகும்

போதையில் கணவன் அடிப்பதுவும்
பொல்லாமை நெஞ்சு வீசுவதும்
எல்லாம் சகித்து வாழ்வதும்
எப்படி இவளால் முடிகிறது

பெண்ணாய் பிறந்தவர் பாவமடா
பெரும் துயர் கடக்கிறார் நாளுமடா
அன்பை கொஞ்சம் காட்டுங்கடா
அறத்தை நாட்டி வாழுங்கடா ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-04-2024

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்


அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை கடும் எச்சரிக்கை .#


தாக்க பறந்த போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,வெடித்து பறக்கும் ரஷ்யா உக்ரைன் ,இஸ்ரேல்,பாலஸ்தீன உக்கிர யுத்தம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
தாயால் கொலையாளியான மகள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

தாயால் கொலையாளியான மகள்

தாயால் கொலையாளியான மகள்

கர்ப்பத்தில் அன்னை போதை உண்டாள்
கருவிலே பிள்ளை சிதையானாள்
குன்றிய மூளை வளர்வினால்
குற்றியே நண்பியை கொன்று நின்றாள்

இத்தகை இடர் இவள் புரிந்தால்
இதற்கு தாயே துணை நின்றாள்
பார்க்கையில் கண்ணீர் ஓடிகிறது
பாவை நிலை எண்ணி கலங்கிறது

அன்பிலா அன்னை வளர்த்து விட்டால்
அகிலத்தில் அந்தோ துடித்து விட்டாள்
விட்டு விலகிட பின்னடித்தாள்
விதியென்ற சதியிலே சிக்கி விட்டாள்

கொடும் துயர் சிறை சென்று விட்டாள்
கொடுமையாய் இறந்திட காத்திருக்காள்
வன்மத்தை நெஞ்சிலே தாங்கி விட்டால்
வலிகளை வாழ்வில் யார் தடுப்பார்

இத்தகை நிலை இனி வேண்டாம்
இவ் நிலை இன்றே தடுக்க வேண்டும்
இவ் வையம் ஆளும் மாந்தர்களே
இரங்கி இறவா அன்பாக வேண்டும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-04-2024

யுடுப்பர் தோழர் சரவணன் டீகோட் ,பதிந்த குற்ற காட்சி ஒன்றை பார்த்து கலங்கிய பொழுது

வீடியோ
https://www.youtube.com/watch?v=x1_dT-k7qn8

தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய இரண்டு கிலோ தங்கம்
Posted in இலங்கை செய்திகள்

கடல் வழியாக கடத்தப்பட்ட பாரியளவான தங்கம் சிக்கியது

கடல் வழியாக கடத்தப்பட்ட பாரியளவான தங்கம் சிக்கியது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ கிரோம் எடை கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதி கடலுக்கு அடியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதனை கடத்திச் சென்ற மூவரை கைது செய்து இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் இலங்கையிலிருந்து படகு மூலம் சமீப காலமாக தமிழகத்திற்குள் அதிக அளவு தங்கம் கடத்தி செல்லப்படுகின்றது.

இதையடுத்து இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கவும், அந்நிய ஊடுருவலை கண்காணிக்கவும், இந்திய கடலோர கடற்படை, இந்திய கடற்படை மற்றும் சுங்கத்துறை என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடல் வழியாக கடத்தப்பட்ட பாரியளவான தங்கம் சிக்கியது

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை இலங்கையிலிருந்து படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மண்டபம் கடலோர காவல் படையினருடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வேதாளை அடுத்த சிங்கி வலை குச்சு அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள முயல் தீவுக்கும், மணாலி தீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த படகைச் சுற்றி வளைக்க முயன்ற போது படகில் இருந்த நபர்கள் கடலில் ஒரு பொதியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

இதையடுத்து மத்திய வருவாய் துறை புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் வேதாளை பகுதியைச் சேர்ந்த ஹாஜா செரீப், ஹம்துன் திஸ்தர்,ஹெரோஸ் அலி என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூவரையும் படகுடன் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தாங்கள் இலங்கையில் இருந்து படகில் தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாகவும் அதிகாரிகளை கண்டதும் கடலில் வீசியதாகவும், கடலில் பொதியை வீசிய இடத்தை ஜி.பி.எஸ் கருவியை கொண்டு அடையாளப்படுத்தி வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்ததாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் வியாழன் மாலை வரை தங்கத்தை கடலுக்கு அடியில் தேடி கிடைக்காததால் நேற்று வெள்ளி காலை முதல் தொடர்ந்து கடலுக்கு அடியில் ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் தங்கம் அடங்கிய பொதியை தேடி வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (5) மாலை 3.00 மணியளவில் கடலில் வீசப்பட்ட தங்கம் அடங்கிய பொதி கிடைத்ததையடுத்து தங்க கட்டிகளை இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமுக்கு எடுத்து சென்று எடை போட்டு பார்த்ததில் அதில் 5 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

இதன் இந்திய மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கலாம் என மத்திய வருவாய் துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்கம் யாருக்காக இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து கைது செய்யப்பட்ட மூவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலை பலமுனைகள் ஊடாக தாக்க ஈரான் திட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை பலமுனைகள் ஊடாக தாக்க ஈரான் திட்டம்


இஸ்ரேலை பலமுனைகள் ஊடாக தாக்க ஈரான் திட்டம்

இஸ்ரேலை பலமுனைகள் ஊடாக தாக்க ஈரான் இராணுவம் திட்டம் இடுவதாக அறிவிப்பு .

இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் இராணுவம் சூளுரை ,பதட்டத்தில் நாடுகள்

ஈரான் ,இஸ்ரேல் , நேரடியாக மோதும் அபாயம் காணப்படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பாஜ க வை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்த தமிழக முதல்வர்
Posted in உலக செய்திகள்

பாஜ க வை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்த தமிழக முதல்வர்

பா.ஜ.க.வின் வாஷிங் மெஷின்’பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது Indian Express நாளேடு.


பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.
10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?


“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ…

ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!
மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!

இவ்வாறு தனது முக நூல் பதிவில் வெளியிட்டு உள்ளார் .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எரிகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எரிகிறது


இஸ்ரேல் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எரிகிறது

இஸ்ரேல் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எரிகிறது .


இராக் போர் படை புலிகள் நடத்திய விமான தாக்குதலில் மிக பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் நகரங்கள் இராணுவ தளங்களைதாக்கிய ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் இராணுவ தளங்களைதாக்கிய ஹிஸ்புல்லா


இஸ்ரேல் நகரங்கள் இராணுவ தளங்களைதாக்கிய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் நகரங்கள் இராணுவ தளங்களை இலக்கு வைத்து
ஹிஸ்புல்லா தாக்குதல் ,உச்சம் பெற்றுள்ள தாக்குதல்கள்

video

Error: View 9293b2au4w may not exist