கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை
கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு,
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் கடுமையான மின்னல் குறித்த அம்பர் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இன்று (15) காலை 10.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும்.
வானிலை ஆய்வு மையத்தின்படி, பாதிக்கப்பட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்மையகம் எச்சரித்துள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதம் மற்றும் காயங்களின் அபாயத்தைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







