மசாஜ் நிலையம் சென்றவருக்கு நேர்ந்த சோகம்
Posted in இலங்கை செய்திகள்

மசாஜ் நிலையம் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

மசாஜ் நிலையம் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

மசாஜ் நிலையம் சென்றவருக்கு நேர்ந்த சோகம் ,நபர் ஒருவரை பம்பலபிட்டியிலுள்ள மசாஜ் நிலையத்திற்கு அழைத்து அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு மில்லியன் ரூபாய் தொகையை பணப்பரிமாற்றம்

செய்யுமாறு வற்புறுத்திய தம்பதி உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட நபருக்கு உடல் மசாஜ் செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் வந்தவுடன் சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவர் மசாஜ் நிலையத்தை அடைந்ததும், ஒன்லைன் மூலம் வங்கியிலிருந்து 1 மில்லியன் பணத்தை அனுப்புமாறு குறித்த தம்பதியினர் அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்கள் குறித்த நபரின் பணப்பையில் இருந்து 15,000 ரூபாய் பணத்தையும் திருடியுள்ளனர்.

குற்றத்திற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியுடன் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 44 மற்றும் 54 வயதுடைய தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அடுத்து, சம்பவம் தொடர்பில் இரத்மலானை மற்றும் கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 23 வயதுடைய மேலும் நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணவன் பின்சென்ற மனைவி ஊரில் சோகம்
Posted in உலக செய்திகள்

கணவன் பின்சென்ற மனைவி ஊரில் சோகம்

கணவன் பின்சென்ற மனைவி ஊரில் சோகம்

இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படியான சம்பவமொன்றே கடலூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது,

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சூரியன்பேட்டையை சேர்ந்தவர் கந்தன்(வயது 48). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்த இவரது மனைவி ரமாவள்ளி(40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவுகாரணமான கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தன் சிகிச்சை பலன் இன்றி வௌ்ளிக்கிழமை (05) பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கான இறுதி சடங்கு அன்று மாலை நடைபெற்றது.

கணவன் இறந்து போனதால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ரமாவள்ளி அவரது வீட்டின் கழிவறையில் திடீரென்று தன்னுயிரை மாய்க்க முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ரமாவள்ளியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் சனிக்கிழமை (06) அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நடுவீரப்பட்டு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.