இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கைதிகளைப் பார்வையிட அனுமதி

கைதிகளைப் பார்வையிட அனுமதி

ரமழான் மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டு தினங்களை முன்னிட்டு சிறைச்சாலைக் கைதிகளை பார்வையிடுவதற்காக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஊடக பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, எதிர்வரும் 11 ஆம் திகதி ரமழான் பண்டிகையினை முன்னிட்டு இஸ்லாமிய மதக் கைதிகளுக்கு மாத்திரம் உறவினர்களை பார்வையிடுவதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை கைதிகளுக்காக உறவினர்களினால் கொண்டுவரப்படும் இனிப்பு வகை உணவுகள், உணவு மற்றும் சுகாதார பொருட்களை தற்போதுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக பாதுகாப்பு

நடைமுறைகளுடன் வழங்குவதற்காக அனைத்து சிறைச்சாலைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேன் கவிழ்ந்ததில் மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வேன் கவிழ்ந்ததில் மூவர் காயம்

வேன் கவிழ்ந்ததில் மூவர் காயம்

ஹரகமவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று ஹங்குந்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லூல்கந்துரை பிரதேசத்தில் வைத்து குன்றின் மீது கவிழ்ந்ததில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சாரதியிடம் வேன் ஓட்டுவதற்குத் தேவையான கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் , வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவுடன் அவர் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

மேலும் படுகாயமடைந்த இரு பெண்களையும் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

இஸ்ரேல் கண்காணிப்பு முகாம் சிதறியது எரியும் ஏவுகணை கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கண்காணிப்பு முகாம் சிதறியது எரியும் ஏவுகணை கப்பல்


இஸ்ரேல் கண்காணிப்பு முகாம் சிதறியது எரியும் ஏவுகணை கப்பல்

ஹிஸ்புல்லா சிரியா போர் படைகள் அடியில் இஸ்ரேல் கண்காணிப்பு முகாம் சிதறியது ,எரியும் ஏவுகணை கப்பல் ,வெடித்த உச்ச மோதல் ,

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஐநா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஐநா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு

ஐநா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு

தமிழர் உரிமை செயலரங்கம்
ஐ.நா வும், தமிழர் உரிமை செயற்பாடுகளும்
“ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு”


13/04/2023*சனிக்கிழமை
ஈழம்&தமிழ்நாடு 19:30PM
பிரித்தானியா 15:00PM
பிரான்ஸ் 16:00PM
கனடா&அமெரிக்கா 10:30AM (Eastern Time)


ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 18 தொடங்கி ஜூலை 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

தமிழர்கள் நாம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தெளிவூட்டப்படும் இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டு தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இணையவழி செயலரங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்
Join Zoom Meeting

Meeting ID: 854 4168 6041
Passcord : 232425
நன்றி
உலகத் தமிழர் இயக்கம்
பாரதி அமைப்பு

ஐவர் படுகொலை - இரண்டு பெண்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது

விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது

20 விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களுடன் பல்வேறு தொடர்புகளை வைத்து குற்றச் செயல்களுக்கு உதவி செய்த சந்தேகிக்கப்படும் 10 பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று (07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று (07) வரையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை சேர்ந்த 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாமல் ஜனாதிபதியாக இன்னும் காலவகாசம் தேவை
Posted in இலங்கை செய்திகள்

நாமல் ஜனாதிபதியாக இன்னும் காலவகாசம் தேவை

நாமல் ஜனாதிபதியாக இன்னும் காலவகாசம் தேவை

தனது மகன் நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ராஜபக்ச, தனது மகன் இன்னும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட தனது மகனுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக தான் கருதுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஒரு வேட்பாளரை முன்னிறுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்கவில்லை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் கட்சி சரியான நேரத்தில் கலந்துரையாடும் எனவும் தெரிவித்தார்.

கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்மடியில் இருந்து குதிப்பு வீடியோ
Posted in உலக செய்திகள்

கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்மடியில் இருந்து குதிப்பு வீடியோ


கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்|மடியில் இருந்து குதிப்பு

கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன் | மடியில் இருந்து குதிப்பு |கள்ள காதல் லீலை

கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்,கணவன் வீடில்லா நேரம் கள்ள காதல் விளையாட்டு , திடீரென கணவன் வீடு வந்ததால் சிக்கிய மனைவி காதல் லீலைகள்

வீடியோ

https://www.youtube.com/watch?v=REB_ejDL29o
Error: View 9293b2au4w may not exist
நெதன்யாகுவுக்கு நெருக்கடி அமைச்சர்களுக்குள் அடிதடி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன்யாகுவுக்கு நெருக்கடி அமைச்சர்களுக்குள் அடிதடி


நெதன்யாகுவுக்கு நெருக்கடி அமைச்சர்களுக்குள் அடிதடி

நெதன்யாகுவுக்கு நெருக்கடி அமைச்சர்களுக்குள் அடிதடி .


இராணுவ விலகலை அடுத்து சிக்கிய நெதன்யாகு ,ஆரம்பமாகும் ஆட்சி கவிழ்ப்பு

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
உடைந்த காதல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உடைந்த காதல்

உடைந்த காதல்

இதயம் கனக்கும் இரவுக்குள்ளே
இதயமே உன்னை தேடுகிறேன்
வடியும் கண்ணீர் துளிகளுக்கு
வார்த்தைகள் தேடி அலைகின்றேன்

உடைந்த உள்ள நின்மதிக்கு
உயிரே காரணம் தேடுகிறேன்
அடர்ந்த காட்டின் நடுவினிலே
அலைவதாய் எனக்குள் உணர்கின்றேன்

வழியில் வந்து சதி செய்தார்
வகையை இங்கே தேடுகிறேன்
வலியில் நெஞ்சு துடிக்கையிலே – உன்
வார்த்தைகள் வருடி துடிக்கின்றேன்

இல்லா இந்த இடைவெளியில்
இதயமே உன்னை புரிகின்றேன்
அதிகம் அன்பை பொழிந்ததுவே
அன்பே அது நீ என்கின்றேன்

இடையில் நுழைந்த இடையூறால்
இதயம் இரண்டு பிரிந்ததுவே
புரிதல் ஒன்றில் கிழிந்ததினால்
புண்ணாய் இதயம் மாறியதே ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-04-2024

ஓட ஓட அடித்த ஹமாஸ் காயமடைந்தவர்களை அள்ளி செல்லும் உலங்குவானூர்தி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஓட ஓட அடித்த ஹமாஸ் காயமடைந்தவர்களை அள்ளி செல்லும் உலங்குவானூர்தி


ஓட ஓட அடித்த ஹமாஸ் காயமடைந்தவர்களை அள்ளி செல்லும் உலங்குவானூர்தி

ஓட ஓட அடித்த ஹமாஸ் காயமடைந்தவர்களை அள்ளி செல்லும் உலங்குவானூர்தி ,
ஹமாஸ் கொட்டைகளை பிடிக்க சென்ற இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பு

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
படகு விபத்தில் 90 பேர் பலி
Posted in உலக செய்திகள்

படகு விபத்தில் 90 பேர் பலி

படகு விபத்தில் 90 பேர் பலி

மொசாம்பிக் கடற்பரப்பில் படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 90 பேர் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்புலா மாநிலத்தில் உள்ள தீவு ஒன்றுக்கு அருகில் மீன்பிடிக் கப்பல் ஒன்றே இவ்வாறு மூழ்கியதாக கூறப்படுகிறது.

அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறக்கப்பட்ட மேம்பாலம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறக்கப்பட்ட மேம்பாலம்

கொழும்பு கொம்பனி வீதி, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தையை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

இத்திட்டம் விரைவில் முழுமைபடுத்தப்படவுள்ளதுடன் அதற்கான மொத்தச் செலவு 5,278,081,272.43 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Error: View 9293b2au4w may not exist
நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல
Posted in இலங்கை செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியல்

கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சந்தேகநபர்கள் 7 பேரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று (08) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அங்கு முதலாம், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஐந்தாவது சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், 10 ஆம் மற்றும் 11 ஆம் சந்தேக நபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஒன்றுகூடிய சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்
Posted in இலங்கை செய்திகள்

ஒன்றுகூடிய சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்

ஒன்றுகூடிய சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தற்போது கொழும்பில் ஒன்றுகூடியுள்ளனர்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டார்.

சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, இன்று (08) காலை 10 மணிக்கு அரசியல் குழுவின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், கட்சியின் சிரேஷ்ட உபதலைவருக்கு இவ்வாறு அரசியல் பீட கூட்டத்தை அழைப்பதற்கு சட்டரீதியாக எந்த தகுதியும் இல்லை என கட்சியின் பொதுச் செயலாளர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மஹிந்த லசந்த துமிந்த ஆகியோருக்கான தடை நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த லசந்த துமிந்த ஆகியோருக்கான தடை நீடிப்பு

மஹிந்த லசந்த துமிந்த ஆகியோருக்கான தடை நீடிப்பு

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக அந்த அமைச்சர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இன்று (08) அழைக்கப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகளில் பிரதிவாதிகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, பதில் பொதுச் செயலாளர் சரதி துஷ்மந்த மித்ரபால உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நியாயமான ஒழுக்காற்று விசாரணையின்றி தம்மை கட்சியில் இருந்து நீக்கி கட்சி செயற்குழு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரி சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் முற்றாக விலகல் வென்ற ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் முற்றாக விலகல் வென்ற ஹமாஸ்


காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் முற்றாக விலகல் வென்ற ஹமாஸ்

காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் முற்றாக அங்கிருந்து விலகல் ,
ஹமாஸ் விதித்த டிமாண்டை அடுத்து படைகள் விலகல் ,வென்ற ஹமாஸ் ,
மகிழ்ச்சியில் பாலஸ்தீன மக்கள்

video

Error: View 9293b2au4w may not exist
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு விமானப்படை விசேட விசாரணை

துப்பாக்கிச் சூடு விமானப்படை விசேட விசாரணை

இன்று (08) அதிகாலை பாதுக்கை, அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விமானப்படை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விமானப்படை ரக்பி அணியில் இணைந்திருந்த விமானப்படை கோப்ரல் ஒருவரே உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுக்கை – அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ​​பொலிஸ் வீதித் தடைக்கு அருகில், உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றதுடன் அதனை செலுத்தியவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொலிஸார் பதிலுக்கு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் இலங்கை விமானப்படையின் வீரர் என பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹொரணை – தல்கஹவில பிரதேசத்தில் நேற்று (07) துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இவரே என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுப்பு

சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுப்பு

கண்டி, கட்டம்பே பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் கராஜில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டபோது, உயிரிழந்தவரின் கால்கள் மற்றும் கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருந்த நிலையில் அவர் முகத்தில் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மெனிக்கின்ன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது, ஆலயத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த சிவில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி 800 பேர் பலி

நீரில் மூழ்கி 800 பேர் பலி

நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“வழக்கமாக நாளாந்தம் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். எங்களின் தகவல்களின்படி வருடாந்தம் 700 – 800 பேர் இவ்வாறு இறக்கின்றனர். பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அறிமுகமில்லாத இடங்களில் குளிக்கும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தாக்குதல் 600 இஸ்ரேல் ஆமி பலி ஈராக் விமானங்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதல் 600 இஸ்ரேல் ஆமி பலி ஈராக் விமானங்கள் தாக்குதல்


ஹமாஸ் தாக்குதல் 600 இஸ்ரேல் ஆமி பலி ஈராக் விமானங்கள் தாக்குதல்

ஹமாஸ் தாக்குதல் 600 இஸ்ரேல் ஆமி பலி ,பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் இன்றைய நிலவரத்தில் ,ஈராக் விமானங்கள் தாக்குதல்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist