துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது அம்பேவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவரை நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

நுவரெலியா அம்பேவல 7 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸாருக்கு

குறித்த நபரின் வீட்டில் துப்பாக்கி இருப்பதாக நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த வீட்டை

சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான

நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்த தடை

இலங்கையில் சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்த தடை விதிக்க பட்டுள்ளது .

அவ்வைந்தாம் சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்தினால் ,அதை பயன் படுத்தியவர்களுக்கு 20 வருட சிறை தண்டனை வழக்கும் புதிய சட்டம் காண படுகின்ற பொழுதும் ,இவ்விதமான ஆயுதங்கள் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிட தக்கது .

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்
Posted in இலங்கை செய்திகள்

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம் ,வெளிவந்த 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி கருத்து தெரிவிக்கையில்,

தந்தை ஒரு மீன் வியாபாரி

எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன். கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3ஏ சித்திகளை பெற்றேன்.

நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம்.

எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம்.

எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன்.

அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்கும் போது கவனத்தை சிதறவிடாமல் கற்க வேண்டும்.

தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு

தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு. என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள்

மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

குறித்த மாணவியின் வெற்றியை கொண்டாடுவதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமது கிராமத்தில் அதன் கல்வி வளர்ச்சியை தந்து மகத்தான வெற்றி சாதஹனை மூலம் நிரூபித்துள்ள இந்த மாணவியின் செயல்பாடு கண்டு ,அந்த கிராம மக்கள் மத்தியில் மகிழ்வு ஏற்பட்டுள்ளது .

தனது பாடசாலைக்கும் அதன் மக்களுக்கும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை நிலை நாட்டி .

அந்த ஊர் செய்திகளில் முதண்மை இடம் பிடிக்க காரணமாக விளங்கிய மீன் வியாபாரி மகள் செயல்பாடு சாதனை தான் என சமூக வலைத்தளங்களில் பேச .படுகிறது

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள் நேற்று வெளியான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2023(2024) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா,

அன்பழகம் மீனுஜா ஆகியோர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

அதேபோல், அன்பழகன் மீனுஜா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதற்கமைய, வர்த்தக பிரிவு பெறுபேறுகளில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்னணி வகிக்கிறது​.

குறித்த மாணவிகளுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் மாணவர்கள் தற்போது அதி உயர் பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்தது வருவது ,கல்வியால் ரீதியில் அதி வளர்ச்சி கொண்டுள்ளதை இந்த மாணவர்கள் சாதனை விபரங்கள் எடுத்து காட்டுகின்றன .

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு ,காதல் தொடர்பை நிறுத்த கோரியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் தெற்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா பலி

சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை (30) இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த யுவதி நேற்று (31) அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

யுவதியின் தாயார் வெளிநாடு

உயிரிழந்த யுவதியின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்த நிலையில் இலங்கைக்கு வந்து 3 மாதங்கள் சென்றுள்ளதாகவும்,

யுவதி 2 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தங்கி இருந்த நிலையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய யுவதியின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுவதி இளைஞன் ஒருவருடன் காதல்

இந்நிலையில், யுவதி இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததை அறிந்த தாயார் யுவதியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி மீண்டும் 15 நிமிடங்களில் வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு வந்த யுவதி வீட்டினை சுத்தம் செய்த பின்னர் தனது தாயாருடன் சிறிது உரையாடிய பின்னர், தான் அலரி விதை உட்கொண்டு விட்டதாக தெரிவித்தனை அடுத்து உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பில் விசாரணை

உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பில் கல்முனை நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் படி, மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை

அத்துடன், சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் அரச பகுப்பாய்விற்காக சில உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்என்பது குறிப்பிட தக்கது .

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை
Posted in உலக செய்திகள்

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை ரஷ்யாவிற்கு ஆளில்லா வெடிகுண்டு விமானங்களினை விற்பனை புரிந்த ஈரான் நிறுவனர் மற்றும் ,அந்த விற்பனைக்கு உதவிய ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவருக்கு தடை

, ஆறு பேருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார ,தடை மற்றும் பயண தடை அவர்களின் சொத்து முடக்கம் என்பனவற்றை அறிவித்துள்ளது .

ரஸ்யாவுக்கு ஈரான் விற்பனை செய்யும் வெடிகுண்டு விமானங்களானவை உக்ரைன் போரில் உக்ரைன் மற்றும் ,ஐரோப்பிய , அமெரிக்கா நேசப் பாடுகளை திணறடித்து வருகிறது .

ஐரோப்பிய ஒன்றியம்


அதனால் சீற்றம் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்கள் மீதான தடைகளை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது .

ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையானது (EEAS) ஈரானைச் சேர்ந்த ஆறு தனிநபர்கள், ஆயுதக் குழுக்கள் மற்றும் நிறுவனங்களானவை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு விற்பனை செய்தனர் .

இதுவே மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறி மூன்று நிறுவனங்களுக்கு எதிராக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ளது.,

ஈரானின் பாதுகாப்பு மந்திரி

ஈரானின் பாதுகாப்பு மந்திரி பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா அஷ்டியானி மற்றும் ஈரானின் ஏவியேஷன் இண்டஸ்ட்ரீஸ் ஆர்கனைசேஷன் (ஐஏஐஓ) தலைவர் அஃப்ஷின் கஜே ஃபார்ட் ஆகியோரை ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தடை தொடர்பாக பட்டியலிட முடிவு செய்துள்ளது

இலக்கு வைக்கப்பட்டவர்கள் சொத்து முடக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பயணத் தடை க்கு உட்படுத்தப்படுவார்கள்.

கூடுதலாக, பட்டியலிடப்பட்டுள்ள சட்டப்பூர்வமான மற்றும் சட்ட பூர்வமற்ற நபர்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதி அல்லது பொருளாதார ஆதாரங்களை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலின் பின்னர் இந்த தடையை ஈரானுக்கு ஐரோப்பா விதித்துள்ளது .

பல தடைகள் ஈரான் மீது விதித்துள்ள பொழுதும் ,அது கடந்து ஈரான் சாதனை படைத்தது அமெரிக்காவுக்கு சவால்விட்டு நிமிர்ந்து நிற்பது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா இஸ்ரலினால் ஆக்கிரமிக்க பட்ட ,வடக்கு கிரியட் ஷமான ,மக்கள் குடியேற்ற பகுதிகள் ,மற்றும் அதன் அருகில் நிறுவப்பட்டுள்ள ,இஸ்ரேலிய படை நிலைகளை ,இலக்கு வைத்து ,ஹிஸ்புல்லா அமைப்பினர் ,கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்

நீண்ட தூர ரொக்கட்டை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர் .

இதில் மக்கள் மக்கள் வாழ்விடங்கள் ,மற்றும் இராணுவ படை நிலைகள் என்பனவற்றுக்கு, பலத்த சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளதாக லெபனான் போர் படைகள் .தெரிவித்துள்ளன .

ஆனால் இஸ்ரேல் படைகள் எத்னையும் தெரிவிக்கவில்லை .

வீடியோ

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹவுதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

இந்த தாக்குதலில் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது


வீடியோ

Error: View 9293b2au4w may not exist
நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலுக்கமைய திகன, அம்பகோட்டே பகுதியில் இருந்து இரு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அடையாளம் காண முடியாத அளவிற்கு அழுகிப் போயுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்தெனிய பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டுள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில், தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை
Posted in இலங்கை செய்திகள்

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை , குருநாகலில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற உரிமையாளர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இன்று (31) கைது செய்துள்ளது.

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்

குருநாகல் சூரதிஸ்ஸ மாவத்தையில் MMP என்ற பெயரில் இந்த சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இயங்கி வந்துள்ளது.

இங்கு, சவுதி அரேபியா, ஓமன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்சேர்ப்பு நடப்பது தெரியவந்துள்ளது.

அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 110 கடவுச்சீட்டுகள், வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கையில் இவ்வாறான சட்டவிரோத முகவர்களிடம் சிக்கி நூற்று கணக்கான மக்கள் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர் .

அவ்வாறு சிலர் வீடு வேலை செய்தவர்களினால் படுகொலை செய்ய பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

முட்டை கண்ணு பார்வை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

முட்டை கண்ணு பார்வை

முட்டை கண்ணு பார்வை

முட்டை கண்னு பார்வையாலே
முத்தம் தந்து போறவளே
மூக் குத்தி வெட்குதடி
முத்தம் இங்கே சொக்குதடி

கட்டியணைக்கும் போதிலே
கரும் கூந்தல் விலகுதடி
வெட்கம் இல்லா தழுவ
வென் இதழ் தீண்டுதடி

கன்னம் இரண்டை வருடவே – தங்க
கழுத்து தூண்டுதடி
வண்ண நிலா வாடவே
வாலிபம் அழைக்குதடி

சொல்லி சொல்லி ஆறவே
சொந்தம் உன்னை தேடுதே
பந்தம் உன்னில் படரவே
பாயும் இங்கே காயுதே

நிலவே என்ன தயக்கம்
நீயும் வந்திடு
நீளம் நாங்கள் கடக்கவே
நிகழ்வுகள் செய்திடு !

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-05-2024

படம் ஒன்றை பார்த்த பொழுது வடித்தது.

facebook கவிதை பக்கம் இதில் அழுத்துங்க

எரியும் எண்ணெய் வயல்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் எண்ணெய் வயல்கள்

எரியும் எண்ணெய் வயல்கள்


எரியும் எண்ணெய் வயல்கள் ரஸ்யாவுக்கு பலம்மில்லியன் இளப்பபு என தெரிவிப்பு .

உக்ரைன் அரச இராணுவத்தினர் மற்றும் கூட்டு படைகள் இணைந்து ரஷ்யா எண்ணெய் வயல்களை தாக்கின .

இந்த தாக்குதலில் ரஷ்ய எண்ணெய் வயல்கள் பற்றி எரிவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எதிரி நாடக விளங்கும் உக்ரைன்

எதிரி நாடக விளங்கும் உக்ரைன் நாட்டின் மிக முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவம், ஏவுகணை மற்றும் வெடிகுண்டு விமானம் வழியாக தாக்குதல் நடத்தி வருகிறது .

அவ்விதமான தாக்குதலில் பாதிப்படைந்த, உக்ரைன் முக்கியாய் தளங்கள் செயல் இழந்து காணப்படுகின்றன .

அதற்கு பதிலடியாகவே தற்போது உக்ரைன் திருப்பி தாக்குதல் பதிலடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .

சற்றும் எதிர்பாராத ஆழ ஊடுருவி நடத்த படும் தாக்குதலினால், ரஷ்ய உள்ளக கட்டமைப்பு பாதிக்க பாடலாம் என்கின்ற நிலை காணப்படுகிறது .

இவ்விதம் தொடர்ந்து உக்ரைன் தாக்குதல்கள் நீடித்து சென்றால், ரஷ்யா மிக கொடூர தக்குதல்களை ,உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து, நடத்த கூடும் என எதிர் பார்க்க படுவதால் பதட்டம் நிலவுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்காவில் பறவை காய்ச்சல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பறவை காய்ச்சல்

அமெரிக்காவில் பறவை காய்ச்சல்

அமெரிக்காவில் பறவை காய்ச்சல் ,அமெரிக்கா நாட்டின் பாற் பண்ணையில் பணி புரிந்தவர் ஒருவர் பறவை காய்ச்சல் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பரவி வரும் பறவை காய்ச்சல்

அமெரிக்கா நாட்டில் பரவி வரும் பறவை காய்ச்சல் தொற்று நோயினால் மூவர் பாதிக்க பட்டுள்ளதாக அமெரிக்க நாட்டு சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் தெரிவிக்க பட்டுள்ளது .


இந்த ஆண்டில் நடாத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இதுவரை மூவர் இவ்வாறான பறவை காய்ச்சல் தொற்று நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா நாட்டு சுகாதார அதிகாரிகளினால் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டின் மிச்சிகன் நகரில் இரண்டாவது மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று நோய்க்கான தொற்று அறிகுறிகள் இருப்பது அந்த நாட்டு சுகாதார அதிகாரிகளினால் உறுதி செய்யப்பட்டுள்ளது,

பறவைக்காய்ச்சல் தொற்று


இந்த ஆண்டு பறவைக்காய்ச்சல் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கா நாட்டில் மொத்த பறவைக்காய்ச்சல் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையை மூன்றாகக் கொண்டு வந்துள்ளது என்று அமெரிக்கா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வைரஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த தடுப்பு மருந்துகள் பலனளித்த பட்சத்தில்

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசத்தில் பறவைக் காய்ச்சல் தொற்று நோய்க்கான அறிகுறிகளில் இருந்து குணமடைந்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

  • நிலா தமிழ்
Error: View 9293b2au4w may not exist
எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்கள்


எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்கள்.

எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்கள் ஏவுகணைகள் அழிப்பு| டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு|ரஸ்யாவை தாக்க ஏவுகனை வழங்கும் அமெரிக்கா.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Posted in உலக செய்திகள்

ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க குற்றவியல் விசாரணையில் வணிக பதிவுகளை பொய்யாக்கிய 34 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

முன்னாள் அல்லது பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் குற்றத்திற்காக தண்டிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
அவருக்கு ஜூலை 11 அன்று தண்டனை நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சட்ட வல்லுநர்கள் அபராதம் விதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு என்று கூறுகிறார்கள்.

இந்த தீர்ப்பை “அவமானம்” என்று கூறிய டிரம்ப், வழக்கை விசாரித்த நீதிபதி மெர்சனை தாக்கியதாகத்தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்ப் எதிர்வரும் நவம்பர் தேர்தலில் ஜோ பிடனை தோற்கடித்து வெள்ளை மாளிகைக்கு திரும்ப வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த வழக்கின் மையத்தில்; இது தொடர்பாக ட்ரம்ப்புடனான பாலியல் ரீதியான என்கவுண்டர் என்று கூறப்படும் ஸ்டோர்மி டேனியல்ஸ் உட்பட 22 சாட்சிகளிடம் ஆறு வாரங்களாக நீதிமன்றம் விசாரணை நடத்தியது. 2016 தேர்தலுக்கு சற்று முன்னர் அவருடன் சர்ச்சையில் ஈடுபட்ட முன்னாள்

திரைப்பட நட்சத்திரத்திரமான டானியலை அமைதிப்படுத்துவதற்காக தனது முன்னாள் வழக்கறிஞர் மிஷல் ஹோஹனுக்கு கொடுத்த 130000 டொலர்

அமைதிப் பணத்தை மறைத்ததாக ட்ரம்ப் குற்றம் சாட்டப்பட்டார். 12 நீதிபதிகள் இரண்டு நாட்களாக விவாதித்து ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர் என்று கூறப்படுகின்றது.

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று(30) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக A9 வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் பதாகையும் தாங்கியவாறு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச விசாரணை ஒன்றே தேவை
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச விசாரணை ஒன்றே தேவை

சர்வதேச விசாரணை ஒன்றே தேவை

சர்வதேச விசாரணை ஒன்றே தேவை யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தராத சிங்கள அரசு தமிழர்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை. எனவே

காணாமல் ஆக்கப்பட்டோர்

காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் எமக்கு சர்வதேச விசாரணை ஒன்றே தேவை.என போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் நேற்று (30) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி நாங்கள் 15 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசாங்கம் இதுவரை எமக்கு உரிய தீர்வை வழங்கவில்லை.

கோபத்தை ஏற்படுத்தும் வகையில்

தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும் களப்பு நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என அரசு கூறுகிறது.

எமக்கு களப்பு நீதிமன்றத்தில் நம்பிக்கையே இல்லை. எமது ஒரே முடிவு சர்வதேச விசாரணையே எமக்கு தேவை.

வேறு எந்த தீர்விலும் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே எமக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்.இந்த நாட்டின் ஜனாதிபதியே இப்பிரச்சினைக்கு காரணமாக இருந்தவர்.

தமிழர்களின் பிரச்சினை

தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி இன்று பல வருடங்கள் கடந்து விட்டது.

ஆனால் இதுவரை ஒரு வித அனுசரணையும் அவர் செய்யவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மீண்டும் அவர் ஜனாதிபதியாக வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்பதில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க,சஜித் பிரேமதாச,அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை.

இவர்கள் மூவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தொடர்பில் எதையும் செய்ய மாட்டார்கள். யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும்

தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்காத சிங்கள அரசு எங்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என தெரிவித்தனர்.

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை
Posted in இலங்கை செய்திகள்

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை மதுக்கடையில் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பிபில பொலிஸாருக்கு நேற்று (30) காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் போகஹமடித்த – ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவராவார்.

உயிரிழந்தவர் மதுபானக்கடை ஒன்றை நடத்திவருவதாகவும், ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், குறித்த ஊழியர் இரும்பு கம்பியால் தாக்கி கொலையை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்

ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்

இந்தியாவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன் எனவும் ஜனாதிபதி தேர்தலில் விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்கு சாவடிக்கு இழுத்து செல்லவே பொது வேட்பாளர் நாடகம் நிகழ்த்தபடுவதாகவும் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடாத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோடிக்கு கையொப்பமிட்டு அனுப்பினார்

கடந்த காலத்தில் ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவர் முன்வந்து மோடிக்கு கையொப்பமிட்டு அனுப்பினார். 2016 ஆம் ஆண்டு ரணில் மைத்திரி கூட்டமைப்பு தயாரித்த ஒற்றையாட்சி வரைபினையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறாக விக்னேஸ்வரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்க்கும் இடையில் எந்தவித இடைவெளியும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியாவின் முகவராக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துகின்ற செயற்பாட்டிலேயே விக்னேஸ்வரன் தொடர்ந்து செயற்படுகின்றார்.

இன்று இந்திய மேற்குலக நாடுகளுக்கு ரணில் விக்கிரமசிங்வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற சூழல் இருக்கின்றது. தமிழ் இனம் சார்ந்த

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு வருகை தருகின்ற பொழுது அவருக்கு செங்கம்பளம் விரித்து இவர்கள் வரவேற்பது கண்டிக்கத்தக்கது.

பாராளுமன்ற தேர்தல்

விக்னேஸ்வரன் பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதை பிற்போடுவதை வரவேற்றிருக்கின்றார். ஆனால் குறித்த தேர்தல்கள் உரிய காலத்தில் நடாத்தப்பட வேண்டும் என்பது தமிழ் தேசிய

மக்கள் முன்னணியினுடைய நிலைப்பாடாக காணப்படுகிறது. தேர்தல் பிற்போடப்படுவது ஜனநாயக படுகொலையையே நிகழ்த்தும்.

தமிழ் மக்கள் பேரவையில் பல தேசியகருத்தியல்களை உள்ளடக்கி உள்ளே நுழைந்தார் ஆனால் இந்திய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அவர் செயற்பட்டார்.

உலகில் எங்கும் இல்லாத வகையில் ஒரு நீதியரசர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கி அதன் பின்னர் கொள்கை பற்றி பேசலாம் என தெரிவித்தார்.

இது ஒரு உலக அதிசயம்

இது ஒரு உலக அதிசயம். இந்தியா காலால் இடுகின்ற கட்டளையை தலையால் நிறைவேற்றுகின்றவர் தான் விக்னேஸ்வரன்.

ஆகவே இந்தியாவை பிடி கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர் பொதுவேட்பாளர் விடயத்தில் இந்தியா இல்லை என கூறினாலும் ரணில்

விக்கிரமசிங்கவை வெல்ல வைக்க வேண்டுமானால் தமிழ் மக்கள் வாக்கு வசாவடிகளுக்கு செல்ல வேண்டும் தமிழ் மக்களுக்கு அந்த மனநிலை இல்லை.

ஆகவே வாக்கு சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களிக்கும் மனநிலையை உருவாக்கவே இந்த பொதுவேட்பாளர் நாடகம் அரங்கேறியுள்ளது.

இன்று கூட்டமைப்பினர் சொல்லும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை.

இவ்வாறு மக்கள் வெறுப்படைந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக கூறியே விக்னேஸ்வரன் போன்றோர் செயற்படுகின்றனர்.

அவ்வாறு பொதுவேட்பாளர் யாரும் நிறுத்தபட்டால் கூட அவர் 72 மணித்தியாலத்திற்கு முதல் சொல்ல கூடும் எமது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களில் ஒரு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர் அவருக்கு வாக்களியுங்கள் என கூறி விலக கூடும்.

இல்லையெனில் இரண்டாவது விருப்பு வாக்கை சிங்கள வேட்பாளருக்கு வழங்க கூடும்.

இதன் காரணமாக எதிர் நிலையில் இருக்கூடிய மக்களின் மனநிலையை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லவே இந்த நாடகம் ஆடப்படுகன்றது என தெரிவித்தார்.

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண்
Posted in இலங்கை செய்திகள்

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண்

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண்

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இன்று தனது திருமண பந்தத்திற்கு தயாரான யுவதி ஒருவர், தனது திருமண ஆடை அலங்காரத்துடன் தனது ஆசிரிய நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.

இவ்வாறு வருகை தந்தவர் அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த திலினி என்ற யுவதி ஆவார்.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (30) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்
Posted in இலங்கை செய்திகள்

நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்

நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்


நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன் ,நமக்காக போராடி காயமடைந்த நிலையில் ,காணப்படும் முன்னாள் போராளிகளின் கண்ணீரை தனது கரம், கொண்டு துடைத்து இருக்கிறார் சட்ட ஆலோசகர் பிரியன் அவர்கள் .

பிரிட்டனில் மிக பெரும் சட்ட ஆலோசகர் பிரியன்

பிரிட்டனில் மிக பெரும் சட்ட ஆலோசகராக விளங்கி வரும் பிரியன் அவர்கள் வழங்கிய இந்த உதவி என்பது பாராட்டுதலுக்கு உரியது .

ஓம் பராசக்தி அறக்கட்டளையின் ஊடாக அதன் ஸ்தாபகர் ,சட்ட ஆலோசகரும் மனித நேயவாதியும் ,மக்கள் நல திட்டத்தில் தன்னை அர்ப்பணித்திருக்கும் பிரியன் அவர்கள் வழங்கியுள்ளார் .

போராளி குடும்பத்தின் நீர் தேவை

முன்னாள் போராளி குடும்பத்தின் நீர் தேவைக்கு ,ஓம் பராசத்தி அறக்கட்டளையின் ஊடக ,ஒரு லட்சத்து பத்து ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்க .பட்டுள்ளது

அந்த நிதி உதவியின் ஊடாக ,பாதிக்க பட்டு வாழ்வாதாரத்தில் திணறி கொண்டிருந்த ,காயமடைந்த போராளி அவர்களுக்கு இந்த நன்கொடை உதவி திட்டம் வழங்க பட்டுள்ளது .

இவ்வேளை ஓம்பராசக்தி அறக்கட்டளை நிறுவத்தாருக்கு எமது நன்றிகள்

வீடியோ