Tag: விவசாயி
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ. 1.2 பில்லியன் ஒதுக்கீடு
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ. 1.2 பில்லியன் ஒதுக்கீடு
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ. 1.2 பில்லியன் ஒதுக்கீடு
நீல்வலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உப்புநீர்த் தடுப்பணையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, 2026 ஆம்
ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்
ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ரூ. 1,200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் வேளாண் காப்பீட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் உப்புநீர் ஊடுருவுவதைத்
தடுப்பதற்காக 2019 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தத் தடுப்பணையால், பல
ஆண்டுகளாக நெல் சாகுபடியில் தொடர்ச்சியான சேதம் ஏற்பட்டுள்ளதாக வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாரியத்தின்படி, திக்வெல்ல, கம்பூருபிட்டிய, கெக்குனதுர, மடிஹா, மாலிம்படா, மேட உயங்கொட, கலல்லா மற்றும் வில்பிட்டா உள்ளிட்ட
பகுதிகளில் உள்ள நெல் நிலங்கள் 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.
2019 யாழா பருவத்திலிருந்து 2022 யாழா பருவம் வரை, தொடர்ச்சியாக ஏழு சாகுபடிப் பருவங்களில் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
முந்தைய அரசாங்கங்களிடம் விவசாயிகளும் விவசாய அமைப்புகளும்
முந்தைய அரசாங்கங்களிடம் விவசாயிகளும் விவசாய அமைப்புகளும் தங்கள் கவலைகளை எழுப்பியிருந்தபோதிலும், அப்போது போதுமான
நடவடிக்கை எடுக்கப்படாததால் நிலைமை மோசமடைந்தது என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
இருப்பினும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்குவதன் மூலம், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வாரியம் மேலும் தெரிவித்தது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

எங்கள் சின்னம் விவசாயி ஒட்டு போடு |நாம் தமிழர் சின்னம் பாடல் |சீமான் பாடல் 190
எங்கள் சின்னம் விவசாயி ஒட்டு போடு |நாம் தமிழர் சின்னம் பாடல் |சீமான் பாடல் 190
எங்கள் சின்னம் விவசாயி ஒட்டு போடு |நாம் தமிழர் சின்னம் பாடல் |சீமான் பாடல் 190
எங்கள் சின்னம் விவசாயி ஒட்டு போடு
எங்கள் சின்னம் விவசாயி ஒட்டு போடு தமிழகத்தில் நாம் தமிழர் கடைசி 2026 இல் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறவேண்டும்
நாம தமிழர் கட்சியின் விவசாய சின்னம் பாடல் ஒன்று வன்னி மைந்தன் அவர்கள் தமது வன்னி மைந்தன் டிக் டாக் மூலம் வெளியீடு செய்துள்ளார் .
நாம் தமிழர் கட்சி
இந்த படலானது நாம் தமிழர் கட்சியின் தேர்தலுக்கு வலுவூட்டுதும் வகையில் புரட்சிகரமாகி அமைக்க பட்டுள்ளது .
மேலும் வரும் நாட்களில் நாம தமிழர் விவசாய சின்னம் தொடர்பிலான பாடல்கள் வெளியிட படும் என வன்னி மைந்தன் அவர்கள் தெறிவித்துள்ளார் .
வெல்லட்டும் நாம் தமிழர் ஆளட்டும் தமிழர் நல் ஆட்சி
விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் விஜய்
விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் விஜய்
விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் விஜய் ,நெல் கொள்முதல் நிலையங்களில், டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு 40 இந்திய ரூபா என பல கோடி ரூபாய் கொமிஷனாகப் பெறப்படுகிறது.
இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்
இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று மதியம் நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன்பின், மாலை 5 மணி அளவில் திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதன்போது அவர் உரையாற்றுகையில்,
டெல்டா பகுதியில இருக்கற விவசாயிங்க ஒரு கொடுமைய அனுபவச்சிகிட்டு இருக்காங்க. அதுபற்றி புகார் ஒன்று வந்தது.
அது என்னன்னா, இந்த மாவட்டத்துல இருக்கிற நெல் கொள்முதல் மையங்கள்ல ஒரு மூட்டைக்கு 10 ரூபா கொடுக்கறாங்க. ஆனா, அதுக்கு மேல 40 ரூபா கொமிஷன் வாங்கறாங்க.
ஒரு டன்னுக்கு 1,000 ரூபா கொமிஷன். நீங்க கணக்கு போட்டு பாத்தீங்கனா, கடந்த நான்கரை வருடங்கள்ல இந்த டெல்டா பகுதி விவசாயிங்க கிட்ட இருந்து கொமிஷனா பல கோடி புடுங்கி இருக்காங்க.
இதை வேற யாராவது சொல்லி இருந்தாகூட நான் நம்பி இருக்க மாட்டேன். ஆனா, எங்கிட்ட சொன்னதே விவசாயிங்கதான். விவசாயிங்க பொய் சொல்ல மாட்டாங்க.
கேள்வி மேல் கேள்வி கேட்கிறேனே என யாரும் நினைக்காதீங்க
கேள்வி மேல் கேள்வி கேட்கிறேனே என யாரும் நினைக்காதீங்க. தீர்வைத் தேடி தீர்வை நோக்கி போவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் லட்சியமே.
எங்கள் தேர்தல் அறிக்கையில் இதை விளக்கமாக தெரிவிப்போம். இந்த பொய்யான தேர்தல் அறிக்கையை நாங்கள் கொடுக்கவே மாட்டோம்.
எது நடப்பதற்கு சாத்தியமோ எது உண்மையோ அதை மட்டுமே சொல்லுவோம், அதை செய்வோம் என்றார்
விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு
விவசாயிகளுக்கு நஷ்டம் ஈடு
விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வல்லம் மற்றும் யானை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்பொழுது நஷ்ட ஈடு வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
சிறுபோக பயிற்சிகள் ஈடுபட்டு அந்த காலப்பகுதியில் வெள்ளம் மற்றும் யானை தாக்குதல் ,காலநிலை காரணமாக அழிவுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கான நஷ்ட ஈட்டை அரசாங்கம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடு தொடர்பான அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் .
தாங்கள் இதுபோன்று அரசு தமக்கு உதவினால் தாங்கள் இது வரும் காலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி செயல்முறை ஆக்கப்படுத்தலாம் என்பதாக விவசாயிகள் கருத்தாக இருக்கிறது.
இலங்கை உடைய பொருளாதார வீழ்ச்சி கொண்டுள்ள நிலையில் தன்நிறவு பொருளாதரத்தில் இலங்கை முன்னுரிமை பெற்றால் மட்டுமே ,
அதனுடைய பொருளாதார இழப்பிலிருந்தும் பணவீக்கத்தில் இருந்தும் நாட்டை காப்பாற்ற முடியும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கின்றது .
இவ்வாறான வேளையில் இவ்வாறு இழப்பீடுகள் தொடர்பாக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விவசாயிகளுக்கு இலவச உரம்
விவசாயிகளுக்கு இலவச உரம்
விவசாயிகளுக்கு இலவச உரம் ,விவசாயிகளுக்கு எதிர் வரும் இரண்டு போங்களுக்கான இலவசமாக உரம் வழங்க உள்ளதாக இலங்கை ஆளும் அரசு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார் .
சில மாதங்களில் இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது விவசாயிகளுக்கு உரத்தை தாங்கள் இலவசமாக வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
மகிழ்ச்சியில் விவசாயிகள்
இந்த அறிவிப்பால் மக்களை குஷி படுத்தி அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள ஒரு தந்திரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது .
ஆளும் தேசிய கட்சி எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட இலவச உரமாகவே இதனை எடுத்து கொள்ள முடிகின்றது.
தொடராக மக்களுக்கு இலவசமாக பல சலுகைகளை வழங்கி வருவதுடன் ,வெள்ளங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடுகள் புபுனர்நிர்மாணம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுகள் என்பனவற்றையும் அரசு தாரளமாக வழங்கி வருகின்றது .
இரண்டு போகங்களுக்கு விவசாயத்திற்கு இலவச உரம்
அதன் அடிப்படையில் எதிர்வரும் இரண்டு போகங்களுக்கான உரத்தினை தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை அரசு இவ்வாறு அறிவித்துள்ளது .
பல்வேறுபட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அறிவிக்கப்பட்டதன் படி தொடர்ந்து இந்த இலவசங்களை ஐக்கிய தேசியக் கட்சியி அரசாங்கம் வழங்குமா ,அல்லது தேர்தல் முடிந்தவுடன் அவற்றை காற்றில் மறந்து விட்டு பறந்து விடுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
சோறு போடும் விவசாயியின் நெல்
சோறு போடும் விவசாயியின் நெல்
இன்று சோறு போடும் விவசாயியின் நெல் முதலாலிமார்களுக்கு வழங்கப்பட்டு, முதலாளிமார்கள் போஷிக்கப்பட்டு வரும் செயற்பாடு நடந்து வருகிறது.
இந்த ஏகபோகத்தை உடைத்து, விவசாயிக்கு வளமான சமகாலத்தையும், எதிர்காலத்தையும் உருவாக்கி, விவசாயியை மையமாக வைத்து கிராமம், நகரம், நாட்டைக் கட்டியெழுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மோசடி மிக்க வியாபாரி
கடன் மீளச்செலுத்த முடியாத மோசடி மிக்க வியாபாரிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மோசடி மிக்க வியாபாரிகள், பணக்காரர்களின் பக்கமல்லாது விவசாயினதும் சாதாரண மக்களினதும் நலன்களின் பக்கம்
இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் விவசாயிகள் பெற்ற கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டு, விவசாயி பாதுகாக்கப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட விவசாயிகள் மாநாடு நேற்று (02) திருகோணமலை, கந்தளாய் நகரில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாயிகளின் நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுக்க ஜனாதிபதி செயலணி,
உலக விவசாயம் பன்முக ரீதியாக வளர்ச்சி
உலக விவசாயம் பன்முக ரீதியாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், எமது நாட்டிலுள்ள விவசாயி நாளுக்கு நாள் ஏழ்மை நிலைக்கு ஆளாகி வருகிறார்.
விவசாய துறைக்கான, திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், அதிகாரிகள் இருந்தும் விவசாயத்துக்கு முறையான தேசிய கொள்கை இல்லாததே இத்துறை பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நாட்டின் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபித்து, மாவட்ட மட்டத்திலும், கமநல மத்திய நிலையங்கள், விவசாய அமைப்புகள்
மட்டங்களிலும் விவசாயியை முன்னேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைவரினதும், நாட்டு மக்கள் அனைவரினதும் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு இட்டுச் செல்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.
கோட்டாபய ராஜபக்ச எடுத்த ஒருதலைபட்சமான தீர்மானத்தால் விவசாய விளைச்சலும் விவசாய உற்ப்பத்திகளுக்கான விலைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.
விவசாய நிலங்களில் இருந்து டொலர்களை ஈட்டும் யுகத்தை உருவாக்குவோம்,
விவசாய நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். உற்பத்தித் தரத்தை உயர்த்தி, விவசாயப் பொருட்கள் நாட்டில் நுகர்வுக்குப் பயன்படுத்தப்படுவது போல, ஏற்றுமதி விவசாயத்துக்கு இட்டுச்சென்று,
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஏற்றுமதி மூலம் வருமானம் பெற்று டொலர்களை ஈட்டும் சூழல் உருவாக்கித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயிகளின் அறுவடை
விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலை,
பெரும் விளைச்சலை ஒரே நேரத்தில் சந்தையில் போடாமல், விலையைக் குறைக்காமல் விவசாயிகளுக்கு நியாயமான விலையும், நுகர்வோருக்கு நியாயமான விலையும் கிடைக்கும் வகையில் முறையான சேமிப்பு களஞ்சிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இதுதவிர, ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி களைநாசினி தெளிக்கும் திட்டத்தையும், பயிர்ச்செய்கை அறிவுறுத்தல்களை கையடக்கத்
தொலைபேசி வழியாக பெற்று, பயிர்களை விற்பனை செய்யக்கூடிய பொதுவான விவசாயப் பயன்பாட்டு முறையையும் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்காக பிரத்தியேக வங்கி,
விவசாயிகளுக்கு சரியான மூலதன அணுகலைப் பெறுவதற்கு நிதி வசதிகளுடன் கூடிய வங்கிக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.
தேசிய நிலப் பயன்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு யானை – மனித மோதலை குறைக்க புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
பயிர் சேதத்திற்கு பயிர் இழப்பீட்டு முறைகள் மற்றும் சொத்து சேதத்திற்கு புதிய காப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்துவோம். இதன் ஊடாக விவசாயிகளைப் பலப்படுத்துவோம்.
தட்டுப்பாடு இல்லாமல் உரம் வழங்கப்படும்,
அழிந்து வரும் விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். நமது ஏற்றுமதி பயிர்களுக்கு சர்வதேச சந்தையை இழந்து வருகிறோம்.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு விவசாயத்தை முன்னேற்க இரசாயன உரங்கள் தேவை.
நெல், மரக்கறிகள், பழங்கள், ஏனைய பிரதான பயிர்கள், தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் ஏற்றுமதி பயிர்களுக்கு உரங்கள் தேவை.
சகல பயிரின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வப்போது உரம் இட வேண்டியிருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த உரத்தை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கும்.
விவசாயிகள் எதிர்நோக்கி வரும் அவல நிலையை முடிவுக்குக் கொண்டு வருவோம்.
பாதுகாப்பு உத்தியோகத்தர்
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது,
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பெருமளவு பங்களிப்பை வழங்கிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பலர் இவர்களை மறந்துவிட்ட போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை மறந்துவிடவில்லை.
இவர்களுக்கு 30 இலட்சம் ரூபா வழங்கி ஓய்வூதியம் இல்லாமல் சேவை நீக்கம் செய்ய அரசாங்கம் எடுத்த திட்டத்தை பாராளுமன்றத்தில்
வெளிக்கொணர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியே அதனை தோற்கடித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
நெல் விவசாயிகளுக்கு உர மானியம்
நெல் விவசாயிகளுக்கு உர மானியம்
2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஹெக்ரெயார்களுக்கு 15,000 ரூபாய் நிதி மானியமாக வழங்கப்படவுள்ளது.
குறித்த வைப்புத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் மேலே
விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கி
விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கி
வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குரங்கு, மயில், மர அணில் போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளுக்கு 268 வாயு துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு
அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு
உரப் பிரச்சினை காரணமாக குறைந்த அளவிலான அறுவடையைப் பெற்ற விவசாயிகளுக்கு
நட்டஈடு வழங்குவதில் தாமதம் ஏற்படாது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (22) நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இழப்புக்கள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கமைய அவர்களுகான நட்டஈட்டுத் தொகையை கட்டாயமாக வழங்க
அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
வைரலாகும் சீமான் – விவசாயி புதிய பாடல் – வீடியோ
வைரலாகும் சீமான் – விவசாயி புதிய பாடல் – வீடியோ
நாம் தமிழர் கட்சியின் வெற்றியை இலக்கு வைத்து அவர்கள் விவசாயி சின்னத்தை மைய படுத்தி பல புதிய பாடல்கள் தயாரிக்க பட்டு வெளியாகிய வண்ணம் உள்ளன ,
அவ்வாறான பாடல் ஒன்று இப்பொழுது இளங்கோ செல்லப்பா
இசையிலும், மறத்தமிழ் வேந்தன வரிகளில் , மதுர குரலோன் பாவேந்தன் ஒலியில் முழங்கியுள்ளது
தமிழா ஒன்றிணைந்து வடமிழு ,இந்த பாடல்களை பரப்பிடு
வாழ்த்துக்கள் ,தொடரட்டும் உங்கள் பணிகள்

























