Tag: யாழ்ப்பாணத்தில்
யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ,யாழ்ப்பாணம் அறியாலை பகுதியில் குப்பைமேடு அமைக்கும் பிரச சபையின் நிலைப்பாட்டுக்கு எதிராக அரியாலை வாழ் மக்கள் தமது கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
குப்பைமேடு அமைக்கப்படுவதால்
இந்த குப்பைமேடு அமைக்கப்படுவதால் அங்கு துர்நாற்றங்கள் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் சூழல் பாதுகாப்புக்கு அது விளைவை ஏற்படுத்தும் என்பதால்
பிரதேச சபையில் என்ன நடவடிக்கைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
எனவே அந்தப் பகுதி பிரசபை தவிசாளர் வருகை தர வேண்டும் என தெரிவித்ததை எடுத்து மயூரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார் .
அவருக்கு மக்கள் மகயர் கையெழுத்ததாக தெரிவிக்கப்படுகிறது .குறித்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய பிரதேச சபை மக்கள்
மக்கள் உரிய வாழ்வியலுக்கு அழிவை ஏற்படுத்துகிற நடவடிக்கை
வாழ்விடங்கள் அன்பிற்கு பகுதியில் குப்பைகளை கொட்டி நோய்களை ஏற்படுத்தி அதனால் அந்த மக்கள் உரிய வாழ்வியலுக்கு அழிவை ஏற்படுத்துகிற நடவடிக்கை ஈடுபட்டுள்ளார்கள்.
எனவே அரசியல்வாதிகள் ஊடகங்கள் முன்னாக வாழ்ந்து பதிலளிக்க மறுத்து தப்பி ஓடி வருகின்றனர் .
இவ்வாறான மக்களுக்கு குந்தகமான விடயங்களை செய்து வருகிறது எனவே இந்த தவிசாளர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது தொடர்பாக மக்கள் தெரிவிக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன .
இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக உடனடியாக எதுவும் தெரியவில்லை .
சடலம் தற்பொழுது மருத்துவமனையில்
மீட்கப்பட்ட சடலம் தற்பொழுது மருத்துவமனையில் வைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் எவ்வாறு அங்கு இறந்த நிலையில் மீட்க பட்டது என்பது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது படுகொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை .
தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் விசாரணையின் முடிவில் மேலதிகமான விடயங்கள் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகிறது .
இலங்கையில் இறுதி யுத்தம்
இலங்கையில் இறுதி யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தற்பொழுது பரவலாக மனித சடலங்கள் தமிழ் பகுதியில் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கிற விடயம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
நீண்ட நெடுங்காலமாக இதே பகுதியில் வசித்து வந்த இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள்உலவுகிறது .
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் படுகொலை செய்யப்பட்டிருந்தால் குற்றவாளி விரைவில் கண்டுபிடிக்கப்படுவார் என சொல்கிறது இலங்கை காவல்துறை.
யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் பரித்துறை பகுதியில் போதைத்து அதிகம் பாவித்த காரணமாக உயிரிழந்த நிலையில் ,31 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதில் அதிக போதைக்கு அடிமையாகி, அதற்கு உள்ளான நிலையில் இவர் மரணமாகி உள்ளதாக தெரிய வருகிறது.
சடலம் மீட்கப்பட்டு தற்பொழுது உடல் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் தமிழ் பகுதியில் அதிகரித்து வரும் போத வஸ்து கலாச்சரத்தினால் ,இவ்விதம் பல இளைஞர்கள் வழி தவறிய சென்று உயிரிழந்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இவ்விதம் அதிக போதைக்கு உள்ளான நிலையில் ,31 வயதில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட இந்த , இளம் வாலிபர் உடைய செயல் என்னவென்பது கூறுவதாக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்துக்குள் போதைகளை புகுத்தி அதை பயன்படுத்த உள்ளாக்கி அதனூடாக படுகொலை நடவடிக்கை ஆரம்பித்துள்ளது, வெளியில் தெரியாத ஒரு இனப்படுகொலை தான் என பார்க்கலாம்.
எவ்வாறு தொடரும் இந்த மொழியில் தெரிய முடியாத இந்த இனப்படுகொலைகளை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பொருள் ஆகிறது.
ஆகவே எமது கலாச்சார பத்திரமான யாழ்ப்பாணத்தில் இவ்விதமான மரணங்கள் தொடர்வதையும் சடலம் மீட்கப்படுவதை தடுக்க வேண்டுமாக இருந்தால், மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதாகவே இதன் ஊடாக பார்க்க முடிகிறது.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் கனடாவில் கைது
யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் கனடாவில் கைது
யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் கனடாவில் கைது யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஜந்தன் என அழைக்கப்படும் பிரசன்ன என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த போது கனேடிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான குறித்த இலங்கையர் மேலதிக விசாரணைகளுக்காக பிரான்ஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43682 பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43682 பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43682 பாதிப்பு யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிக்கையிட்டுள்ளது.
இரவு 7.30 வரையிலான நிலவரப்படி 12,970 குடும்பங்களை சேர்ந்த 43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் 129 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் 66 பாதுகாப்பு இடைத்தங்கல் முகாம்களில் 1,634 குடும்பங்களை சேர்ந்த 5ஆயிரத்து 793 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால்
பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால்
பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால் ,யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.<
யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் ,யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி எரியூட்டிய சம்பவத்தின் பெயரில் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று வாலிபர் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் போலீசார் விரும்புராய் பகுதியைச் சேர்ந்த 21 வயது ரவுடிகள் கைது செய்துள்ளதாக த அறிவித்திருக்கின்றனர்.
கைதானவர்களை நீதிமன்றதில் பார்ப்படுத்தும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுகின்ற பல வாள்வெட்டு குழுக்களினால் அனுப்பி வைக்க படும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .
இவ்வாறான ரவுடிகள் மக்களது இயல்பு வாழ்வுக்கு சுதந்திரத்திற்கும் தடைகளை விதிக்கும் நடவடிக்கையே இவ்வாறான வாள்வெட்டில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.
21 வயது உடைய இவர்களினால் உழைத்து உண்ண முடியாத இவர்கள் அப்பன் காசிலும் அம்மாவின் காசிலும் ,அண்ணன் காசிலும் வெளிநாட்டு காசிலும் வாழ்க்கை அனுபவிக்கும் இந்த கூட்டங்கள்,
ரவுடிகளாக மாற்றம் பெற்றுள்ளது எவ்வாறான சீர்கேடித்தனமான நிலையில் எங்கள் யாழ்ப்பாணம் செல்கிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்.
அழகான தாய்மண்ணாக அகிம்சனுடைய அறத்தின் மாவட்டமாக விளங்கி வந்த யாழ்ப்பாணம், இந்த காசாப்பு கந்தா போதை வைத்து வாழ வெட்டுக்கள் இவர்களை அழைத்துச் சென்றது யார் என்று கேள்வி தான் எழுப்பப்பட்டுள்ளது.
முறையற்ற நிர்வாகமும் முறையேற்ற பிள்ளை வளர்ப்புகளுமே இவ்வாறான கட்டாக் காலி ரவுடிகளாக காலடியில் வா ;வாழும் குழுக்களாக வலம் பெறுகின்ற இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்துரைக்கின்றனர் .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது
வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது
யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் நபர் கைது ,யாழ்ப்பாணத்தில் வாழுங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
பதிவு செய்யப்படாத வாகனம் ஒன்றில் இருந்து 5 வாள்களை ஏற்றுக்கொண்டு சுற்றி நபரையே தற்பொழுது வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர் .
வாகனத்தை கண்டு அதனை சோதனை இட்ட பொழுதே மேற்படி வாள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு குழுக்களின் ஆதரவுடன் வாழ்ந்து சம்பவங்கள் அதிகரித்த காணப்படுகின்றன.
வெளிநாடுகளில் உள்ள வாள்வெட்டு குழுக்கல்
இந்த வாள்வெட்டு சம்பவத்தின் பின்புறத்தில் வெளிநாடுகளில் உள்ள வாள்வெட்டு குழுக்களும் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்ற .
தற்போது இந்த வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
அவரது வீட்டை சோதனை செய்த பொழுது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ,மேலும் பல விடயங்கள் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்துறை தெரிவித்து வருகின்றனர் .
மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா
யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா
யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா ,சஜித் பிரேமதாசா ஐங்கயன் திடீர் சந்திப்பு .
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணத்திற்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார் .
அங்கு பாடசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்ற பொழுது ஐங்காயனை சந்தித்துக் கொண்டார் .
இருவரும் ஒன்றாகச் சந்தித்து அரசியல் நிலவரங்கள் தொடர்பாக பேசப்பட்டதான விடயங்கள் வெளியாக இருக்கின்றன.
பிரேமதாசாவுக்கு அங்கயன் ஆதரவு .
எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு அங்கயன் யாழ்ப்பாணத்தில் இருந்து மிகப்பெரும் ஆதரவை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது .
ரணில் அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தை போட்டி போடுகின்றார் .
எனவே அந்த இடத்தை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் எவரும் இல்லை ,அதனால் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ,ஐங்கயன் ராமநாதனை களம் இறக்க உள்ளதாக தெரிய வருகின்றது .
இந்த நிகழ்வில் பேசிய அவர்கள் எதிர் வருகின்ற தேர்தலில் தாங்கள் ஒன்று இணைந்து பயணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் .
தமிழ் மக்களுக்கு பாரிய நன்மை
அதன் ஊடாக தமிழ் மக்களுக்கு பாரிய பலன்களையும் நன்மைகளையும் தாங்கள் ஏற்படுத்தி தருவோம் என்ற விடயத்தினை அறிவித்துள்ளனர் .
ஆட்சி கட்டில் ஏறும் வரைக்கும் இவ்வாறானவர்கள் இவ்வாறு உரைப்பதும் ,ஜனாதிபதி ஆனதும் ,தமிழர்களை மறந்து அவர்களை எட்டி உதைக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் .
ஆண்டாண்டுகளாக ஆளுகின்ற ஜனாதிபதி வர்க்கமும் சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களும் இவ்வாறு ஈடுபட்டு வருகின்றனர் .
அவ்வாறான ஒரு நிலைக்கு தற்பொழுது சஜித் பிரேமதாசாவும் தள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசாவை அதிகம் நம்புவதற்கு,பிரேமதாசாபோன்று நல்லெண்ணெத்தை வெளியிட்டு தமிழர்களுக்கு ஒரு தீர்வு ஐயா வழங்குவார் என்பதாக இன்றும் நம்புகின்றனர் .
மேலும் அவர்களும் ஆதரவாக காணப்படுகிறார் .
அவரது சிந்தனைகள் வேறு விதமாக இருக்க கூடும் எனும் தமிழ் மக்கள் நம்புவதே அவருக்கு ஆதரவு அளிப்பதற்காக ,தமிழர்கள் இன்றுவரை முயற்சிகளையும் முன் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றது குறிப்பிடத்தக்கது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை
யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை
யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை ,யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவிகளுடன் துர்நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் , தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவிகளுடன் தவறாக நடந்து கொண்டதாக
ஆசிரியர் கைது
பாதிக்கபப்ட்ட மாணவி ஒருவரின் பெற்றோர்களால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்க்கமைய, ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார் .
குறித்த ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கபட்டுள்ள நிலையில் மன்றில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விசாரணை அறிக்கை
மேலும் , சம்பவம் தொடர்பில் திணைக்களம் ஊடான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் , விசாரணை அறிக்கை கல்வி
அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , ஆசிரியருக்கு தனது பணியினை தொடர தடை விதிக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பற்று வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித சலனம் ஏற்பட்டுள்ளது
மாணவ்ர்களை ஆசிரியர்கள் இவ்விதம் நடத்தி கொள்வது போதை பொருள் காலாசாரார்த்தின் சீரழிவு என தெரிவிக்க படுகிறது .
Featured
யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு,யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யால்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில்அதிக வெப்பமான காலநிலை
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை காணப்படுகிறது. ஒரு மனிதனின் உடலானது 40.5 சென்டிகிரேட் அல்லது 105 பரனைட் வெப்பத்தையே தாங்கும். அதனை தாண்டும் போது, தீவிரமான பாதிப்புகள் ஏற்படும்.
அதனால் வியர்வை அதிகரிப்பு , வியர்குருக்கள் போடுதல் , போன்றவை ஏற்படும். வியர்வை அதிகரிப்பால் , உடலில் நீரின் அளவு குறைவடைந்து , மயக்கம் ஏற்படும்.
இந்நிலை தொடர்கின்ற போது “ஹீட் ஸ்ரோக்” ஏற்படும். அத்துடன் , சிறுநீரகம் , இருதயம் , சுவாசப்பை போன்றவை செயல் இழக்கும்.
மூளை செயல் இழந்து மயக்கம்
அதேவேளை குருதி சிறுதட்டுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து , உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்படும். மூளை செயல் இழந்து மயக்கம் ஏற்படும் சம்பவங்களும் நிகழும்.
யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 05 பேர் “ஹீட் ஸ்ரோக்” காரணமாக உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
அவர்களின் உயிரிழப்புக்கு அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலைமைகள் காரணமாக இருந்தாலும் , அதிகரித்த வெப்ப நிலையே நோயினை தீவிரப்படுத்தி அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகும்.
வெப்பத்தின் பேராபத்தான நிலை
எனவே, எம்மை வெப்பத்தின் பேராபத்தான நிலையில் இருந்து எம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும்.
” ஹீட் ஸ்ரோக்” வரமால் தடுக்க குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய நீராகாரங்களை வழங்க வேண்டும்.
வயதானவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே அவர்களுக்கு தொடர்ச்சியாக நீராகாரங்களை வழங்க வேண்டும்.
குறிப்பாக தர்ப்பூசணி , வெள்ளரிப்பழம் , தோடம்பழம் போன்ற பழங்களை உண்ண வேண்டும். குளிர்ந்த நீரினால் , முகத்தை கழுவ வேண்டும்.
கண் புருவங்களை அடிக்கடி நீரினால் கழுவிக்கொள்ள வேண்டும். அதன் ஊடாக உடலின் வெப்ப நிலையை தணிக்க முடியும்.
உடலின் வெப்ப நிலையை குறைப்பதன் ஊடாகவே “ஹீட் ஸ்ரோக்” வராமல் தடுக்க முடியும் என தெரிவித்தார்
Featured
யாழ்ப்பாணத்தில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம்
யாழ்ப்பாணத்தில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அராலி பகுதியில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம் ,யாழ்ப்பாணத்தில் நடந்த கத்தி வெட்டு சம்பவைத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைவு .
தமிழர்களின் கலாச்சார பட்டினமாக விளங்கி வரும் யாழ்ப்பாணத்தில் ,தனக்கு வாழ்வு கொடுத்த மனைவியை கத்தியால் கோரமாக வெட்டிய கணவன் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கணவன் மனைவியை சமையலறை கத்தியை கொண்டு வெட்டியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன .
மனைவி இரத்த வெள்ளத்தில் மிதக்க கணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் ,அயலவர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ,மனைவி அனுமதிக்க பட்டுள்ளார் .
மனைவியிடம் நடந்த கத்தி வெட்டு தாக்குதல் சம்பவத்தை விசாரித்த போலீசார் ,மனைவியை தாக்கிய கணவனை கைது செய்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .
சற்றும் எதிர்பாரத விதமாக நடந்த மனைவி மீதான கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கொலை குற்றச்சாட்டில் கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என தெரிய வருகிறது .
Featured
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். மாநகர எல்லையில் வைத்து 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணத்தில் ஞான வைரவர் ஆலயம் முன்பாக புத்தர் சிலை
யாழ்ப்பாணத்தில் ஞான வைரவர் ஆலயம் முன்பாக புத்தர் சிலை
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் உள்ள ஞான வைரவர் ஆலயத்தின் முன்பாக புத்தர் சிலை ஒன்று முளைத்துள்ளது .
குறித்த ஆலயத்தை பார்த்து கொண்டிருக்கும் வகையில் இந்த புத்தர் சிலை வைக்க பட்டுள்ளது .
ஆளும் ரணில் விக்கிரமசிங்க ஆடசியில் தமிழர் பகுதிகளில் இவரது புத்தர் சிலைகள் தொடராக முளைத்த வண்ணம் உள்ளது .
தமிழர் பகுதிகள் திட்டமிடப்பட்ட இன சுத்திகரிப்புக்கு உழைக்கும் நோக்குடன், இவ்வாறான செயல்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

யாழ்ப்பாணத்தில் பேரூந்து தீ வைத்து எரிப்பு
யாழ்ப்பாணத்தில் பேரூந்து தீ வைத்து எரிப்பு
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே பேருந்து தீப்பிடித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
by நிருபர் காவலன் - தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
by நிருபர் காவலன் - தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
by நிருபர் காவலன் - வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
by நிருபர் காவலன் - ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
by நிருபர் காவலன்
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு , குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த போதிலும் , அவர் பொலிஸ் நிலையம்
செல்லாததால் , வியாழக்கிழமை குறித்த நபரை கைது செய்வதற்கு , பருத்தித்துறை பொலிஸார் , அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் அதிரடியாக கைது
இதன் போது அவர் பொலிஸாருடன் முரண்பட்டு , பொலிஸர்ரை தாக்கியும் உள்ளார். அதனை அடுத்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , அச்சுவேலியில் இருந்து மேலதிக பொலிஸார்
அங்கு விரைந்து , பருத்தித்துறை பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappaby நிருபர் காவலன்
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappaby நிருபர் காவலன்
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்by நிருபர் காவலன்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONGby நிருபர் காவலன்
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONGby நிருபர் காவலன்
யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் வீடொன்றின் கூரையை பிய்த்து ,
இறங்கிய திருடர்கள் அங்கிருந்த 22 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர் .
இரு பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவேளை ,வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள் சத்தம் இன்றி நகைகளை திருடி தப்பி சென்றுள்ளனர்
பாதிக்க பட்ட பெண்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்ய பட்ட நிலையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணத்தில் 5 சந்தேக நபர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் 5 சந்தேக நபர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் வீட்டினை சேதப்படுத்தி தீவைத்து ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் பொலிஸராரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேபோல் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸராரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 5 சந்தேக நபர்கள் கைது
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொ. மேனன் தலைமையின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்கென யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி போலி இலக்கத்தகடுகளை மாற்றி பயன்படுத்தியமை தெரியவந்ததுள்ளது.
சில போலி இலக்கத்தகடுகளும் வன்முறைச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் நவாலி, மானிப்பாய், காரைநகர், விசுவமடு பகுதிகளைச் சேர்ந்த 24 தொடக்கம் 26 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்டப்டனர்.
மேலும் மூன்று சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல்| இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும்.
அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நகர பசார் வீதி வர்த்தகர்களுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல்| இலங்கை செய்திகள்
யாழ். நகரப் பகுதியில் உள்ள பசார் வீதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பசார் வீதியில் ஒரு வழிப் பாதை காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத் தரிப்பிடம் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக ஆராயப்பட்டது.
வீதியில் இருமருங்கும் ஒவ்வொரு தினமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வாகனத் தரிப்பிட வசதியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.
வாகனங்கள் தரிக்க விடப்படும்போது வர்த்தக நிலையங்களுக்குச் மக்கள் செல்லக்கூடியவாறு வர்த்தக நிலையங்கள் முன்பாக இடைவெளி விட்டு வாகனங்களைத் தரிக்க வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று வர்த்தகர்களால் கோரப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட பொலிஸார், இது தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல்| இலங்கை செய்திகள்
வெளிமாவட்டங்களில் இருந்து யாசகம் பெற வருவோரும், சாம்பிராணி விற்க வருவோரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்கின்றமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அவர்கள் மக்களை கட்டாயப்படுத்தும் விதமாக நடந்து கொள்வதால் மக்கள் வர்த்தக நிலையங்களுக்கு வராது அங்கிருந்து விலகிச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது.
அவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வர்த்தகர்களால் கோரப்பட்டது.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சந்திப்பில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர், வர்த்தகர்களிடம் கப்பம் கோருதல் அல்லது வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எந்தவிதத் தயக்கமும் இன்றி முறையிடலாம் என்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கோ அல்லது பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கோ முறையிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முறைப்பாடுகள் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வர்த்தகர்கள் முறைப்பாடு செய்வதற்கு எந்தவிதத் தயக்கமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குரிய
அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் சீனாவின் ஆதிக்கம் கவலை கொள்ளும் இந்தியா
யாழ்ப்பாணத்தில் சீனாவின் ஆதிக்கம் கவலை கொள்ளும் இந்தியா
தமிழர் பகுதியான வடக்கு யாழ்ப்பாண தீவக பகுதியில் ,சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக இந்தியா கவலை வெளியிட்டுள்ளது .
இந்தியா இலங்கைக்கு பாரிய உதவிகளை புரிந்த பொழுதும் ,தற்போது சீனாவின் வாலை பிடித்தவாறு இலங்கை பயணிக்கிறது .
சீனா முக்கிய பகுதிகளை ,ஆக்கிரமித்து ,இந்தியாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது .
இவற்றை கருத்தில் கொள்ளாது இந்தியா பயணிப்பது ..இந்தியாவுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனப்படுகிறது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்





















































