Tag: மோசடி
150கோடி மோசடி தம்பதிகள் கைது
150கோடி மோசடி தம்பதிகள் கைது
150கோடி மோசடி தம்பதிகள் கைது ,நிதி மோசடி செய்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரைவெல்த் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை தருவதாக கூறி 160 கோடி ரூபாயை மோசடி
செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
அதன் பணிப்பாளர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் 2021 இல் படகில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது.
பின்னர் சர்வதேச பொலிஸாரின் ஊடாக சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டதுடன், விசாரணையின் போது, சந்தேகநபர்
தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் வேதநாயகம் பகுதியில் தரையிறங்கிய போது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது.
பின்னர் சுமார் மூன்று வருடங்கள் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
முதலில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது 14 வயது மகனும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
எனினும், அவரது மனைவி இலங்கை வரமுடியாது என்று அங்கு அலைக்கழித்ததைத் தொடர்ந்து, அவரும் வேறு விமானம் மூலம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அதன்படி, அவரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், ஈவுத்தொகையை செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சம்மாந்துறை, கல்முனை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிம்களை குறிவைத்து மேற்படி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அருச்சுனா பண மோசடி அம்பலம்
அருச்சுனா மோசடி அம்பலம்
அருச்சுனா பண மோசடி அம்பலம், அர்ச்சனா ராமநாதன் உடைய சமீப நாட்களாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சம்பவங்கள் மிகப்பெரும் பேசு பொருளாக இடம் பெற்று வருகின்றது .
இவ்வாறான நிலையில் அவர் ஊடாக சேர்க்கப்பட்ட பல மில்லியன் பணம் தொடர்பாக தற்போது பல காட்சிகள் வெளியாகி வருகின்றன.
நன்கொடையாகவும் அரசியல் தேவைகளுக்காகவும் பெற்றுக் கொண்ட பணத்தினை அதற்கு பயன்படுத்தாமல் தனது தனிநல சேவைக்காக பயன்படுத்தி வருகின்ற குற்றச்சாட்டுகளே தற்போது அதிமாகி வருகிறது .
அதனை அடுத்து அர்ச்சுனா அவர்களுக்கு மக்கள் வழங்கிய பணங்கள் பற்றி சான்றுகளும் ,ஆதாரங்கள் என்பன தற்போது வெளியாக ஆரம்பித்திருக்கிறது .
அவ்வாறு வெளியாகியுள்ள அந்த பண பற்று சீட்டுக்கள் தொடர்பாகவும் வேறு பல விடயங்கள் தொடர்பாகவும் அவர் அதற்கு பதிலளிக்காமல்
தற்பொழுது மௌனமாக இருப்பதும் தனது வங்கிகளில் கோடிக்கணக்கான காசுகளை வைத்துள்ளதான விடயங்களும் தற்போது வெளியாகி கொண்டிருப்பதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களுடைய மனங்களில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் நேர்மை உள்ளவராக இருக்கப்பட வேண்டும்.
பணத்தினை மையமாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த அர்ச்சுனா எம்பி மக்களுக்கு சேவை செய்வாரா?
அல்லது அரசியல் கட்சிகளை போல தனது தேவைக்காக செயல்படுவாரா என்பதை மக்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .
சொல்வது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி
அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி
அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி ,அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி,யாழ்ப்பாண மருத்துவமனையில் பணிபுரிந்த நாகநாதன் என்கின்ற மருத்துவர் ஒருவருக்கு நடந்த மிக மோசடியான கண்ணீர் கதை ஒன்றை தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார் .
மன நோய் பாதிக்க பட்டதாக தெரிவித்து அவரது வேலை பறிக்க பட்டது ,அவ்வாறான வேளையில் தனது மனைவி கர்ப்பிணியாக இருந்த பொழுதும் தனது வேலை திட்டமிட்டு பறிக்க பட்டதாக தெரிவித்துள்ளார் .
மிகவும் கடின பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .அதேவேளை தமக்கு எதிராக வருபவர்களை மன நோயளிகளாக சித்தரிப்பது என்பது தொடர்பாக இந்த செவ்வியின் ஊடக தெரிவித்துள்ளார் .
மருத்துவர் நிர்மலன் ,மற்றும் நரம்பியல் பேராசிரியர் அசனி அரசலிங்கம் போன்றவர்களும் சத்திய மூர்த்தியினால் பழிவாங்க பட்டுள்ளதாக இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது .
காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே .
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி கிடைத்தவெற்றி
சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி கிடைத்தவெற்றி
சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி கிடைத்தவெற்றி ,சத்திரசிகிச்சை பிரிவிற்கு மின்பிறப்பாக்கி இல்லாமைமூட பட்டிருந்த அந்த பகுதியை மின்பிறப்பாக்கி வழங்கப்பட்டு தற்காலிகமா இயங்க வைக்க பட்டுள்ளது .
வாடகைக்கு அமர்த்திய மின்பிறப்பாக்கி இந்த அமருத்துவ மனைக்கு வழங்க பட்டுளள்து .
அவ்வாறு வழங்க பட்டுள்ள மின்பிறப்பாக்கிக்கு நாள் வாடகை பணம் வழங்க வேண்டும் ,அதில் கூட மோசடி புரியும் நோக்கில் இவ்வாறு திட்டமிட்டு பெறப்பட்டுள்ளது
ஊழல் வாதியாக விளங்கி வரும் அங்கஜன்
ஊழல் வாதியாக விளங்கி வரும் அங்கஜன் இந்த மின்பிறப்பாக்கியை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர் .
இந்த அங்கயன் தான் அருச்சுன என்ற மருத்துவரை ,மோசடி நாயகி ஆளுனருடன் இணைந்து மருத்துவரை ,அவன் ,என்ற ஒற்றை சொல்லில் பேசிய படி இருந்தார் .
மக்களுக்கு சேவை செய்திட வந்த அரசியல் வியாபாரிகளை மக்கள் இவ்விடத்தில் இந்த சொல்லாடல்கள் ஊடக இவ்வாறன மிரடடல் விடுகின்றனர் என்பதை உணர வேண்டும் .,
மிரட்டல் லாடும் தொனியில் அங்கயன் பேச்சு இடம்பெற்றுள்ளது .என்பதை உலக மக்கள் கண்காணித்து கொண்டுள்ளனர் என்பது இந்த அரசியல் விபாபரிகள் புரிந்து கொண்டால் சரி .
இந்த வெற்றிக்கு காரணம் ஐயா மா மனிதன் , மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களே .,அவருக்கே இந்த புகழ் சென்றடையட்டும் ,அத்துடன் போராடிய ,மக்களுக்கும் இவ்வேளை எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம் .
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது
மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது
இலங்கையில் மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது ,. இலங்கையில் இரண்டு கொட்டல்கள் தங்கி இருந்து மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்தடைந்த இந்த மோசடி கும்பல் அங்கு மிக நுட்பமான கணனிகளை பயன்படுத்தி இலங்கை மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட தொடர்புகளை மேற்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆசை வார்த்தை
சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அவருடைய தொலைபேசிக்கு வாயிலாகவும் தொடர்புகளை மேற்கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி பல மோசடிகள் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது .
தற்பொழுது இலங்கையின் குற்றவியல் றையில் கைது செய்யப்பட்ட இந்த வெளிநாட்டு மோசடி நபர்கள் மீது தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது .
சமீப நாட்களாக இலங்கையில் வட கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் காணப்பட்டன.
மக்கள் தொலைபேசி இலக்கங்களுக்கும் குறும் செய்தி அனுப்பப்படுகின்றது.
அவ்வாறு அனுப்பப்படுகின்ற விடயத்தில் மிக முக்கியமான தொலைபேசிகள் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளது .
எனவே இதனை பெற்றுக் கொள்ளுங்கள் உங்கள் முகவரியை சரி பார்த்துக் கொள்ளுங்கள் என பல விடயங்களை அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அனுப்ப படும் பாசலுக்கு கட்டணம் அறவிடுவதற்காக அவர் தமது வங்கி விவரங்களை செலுத்துவது ஊடாக அதில் உள்ள பணத்தை இந்த கும்பல் திருடி விடுகின்றது .
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை சந்தித்து வருகின்ற்னர்.
இவ்வாறான நிலையில் மக்கள் புகார்கள் காவல்துறைக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் தற்பொழுது இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளது .
கொழும்பை அண்மித்த பகுதியில் தங்கியிருந்த 30 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள .
இந்த இரண்டு அணிகளும் ஒன்றுபட்டு செயல்பட்டதாகவும் இருவரும் ஒரு அணிகளாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட அந்த 30 நபர்களூடாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது .
லட்சம் ரூபாய்கள் கொள்ளை
விசாரணை முடிவில் எத்தனை லட்சம் ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது தொடர்பாக எவ்வாறு இந்த நூதன கொள்ளையில் இவர்களை ஈடுபட்டார்கள் என்ற விடயம் தெரிய வருமான எதிர்பார்க்கப்படுகிறது .
இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுடைய விவரங்களும் அவர்கள் பெறப்பட்ட பணத்தினை அல்லது திருப்பி அனுப்பக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம் என தெரியவருகின்றது.
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

பெண்களை வைத்து நடந்த மோசடி
பெண்களை வைத்து நடந்த மோசடி
பெண்களை வைத்து நடந்த மோசடி ,வேலை பெற்று தருவதாக தெரிவித்து பெண்களை அடைத்து வைத்து பாலியல் வீடியோக்கள் எடுத்து விற்பனை செய்த தம்பதிகள் மடக்கி பிடிப்பு .
இலங்கையில் வெளிநாடு செல்வதற்கான வேலைவாய்ப்பு நிலையம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக விளம்பரத்தை நடத்தி கவர்ச்சிகரப் பெண்களை தமது வீட்டுக்கு அழைத்து தம்பதிகள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது .
பாலியல் தொல்லை
இவ்வாறு பாலியல் தொல்லைகளில் தொந்தரவுகளை வழங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
சில நாட்களுக்கு முன்னதாக இந்த விளம்பரத்தை கண்ணுற்ற பெண்கள் இருவர் அந்த நிறுவனத்துக்கு சென்று தமது விண்ணப்பங்களை கோரி இருந்தனர் .
அதனை அடுத்து வீட்டுக்கு அழைத்த அந்த தம்பதியினர் அவர்களுக்கு வேலை பார்ப்பதாக வேலை பெற்று தருவதாக தெரிவித்து பாலியல் வீடியோக்களை எடுத்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து இவர்கள் இருவரும் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து நுகோடை போலீசார் தமது விசாரணகளை ஆரம்பித்து கைது செய்திருக்கின்றனர் .
பெண்களை இவ்வாறு விற்பனை
இதுவரை இவர்கள் பல்வேறுபட்ட பெண்களை இவ்வாறு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த நான்கு வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை ஏமாற்றி பாலியல் காணொளிகளை பிடித்து, சந்தையில் பெற்று பல கோடிகளை சம்பாதித்துள்ள தான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவத்தை அடுத்து தற்பொழுது இலங்கை போலீசார் குற்றப்பிரிவினை இணைந்து பாரிய விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர் .
விசாரணை முடிவிலேயே எத்தனை பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்ட என்பது தொடர்பாகவும், எவ்வாறு வீடியோக்கள் எடுத்து எங்கு விற்பனை செய்தது என்பது தெரிய வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடயம் தற்பொழுது இலங்கை மக்கள் மத்தியில் வரும் பர பரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

அரச துறையில் ஊழல் மோசடி
அரச துறையில் ஊழல் மோசடி
அரச துறையில் ஊழல் மோசடி ,ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தெரிவித்தார்.
அரசியல் பொறிமுறையால் கொள்கை வகுக்க மாத்திரமே முடியும் எனவும் அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரச உத்தியோகத்தர்கள்
மக்களுக்கான தமது கடமையை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில்
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி,
“வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு இதுவரை பொதுமக்களின் நலன்களுக்காகப் பாரிய பணிகளைச் செய்துள்ளது. வெளிப்படையான
மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்க பொறிமுறையை வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அது தொடர்பாக, அரசதுறையின் செயல்பாடு குறித்து, துறைசார் மேற்பார்வைக் குழு ஆய்வு செய்து வருகிறது.
உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை
இதன்போது உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறைக் கட்டமைப்பு, அமைச்சுகள் போன்ற அனைத்து அரச நிறுவனங்களின் வருடாந்த செயல்திறன் அறிக்கைகளை ஆய்வு செய்கிறோம்.
ஆனால் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளின்படி, சில நிறுவனங்களின் செயல்திறன் 23 வீதமாகவே இருக்கிறது.
இதற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, பல்வேறு பதில்கள் கிடைத்தன. எவ்வாறாயினும், இந்நிலைமையைத் தவிர்க்கும் வகையில் அண்மையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில்
அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண, மாவட்ட, பிரதேச செயலாளர்கள் உட்பட மக்களுடன் நெருக்கமாக செயற்படும் அரச அதிகாரிகளுக்கான விசேட செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டது.
அதன்போது மக்களுக்கு எவ்வாறு திறமையான மற்றும் நட்புறவான சேவையை வழங்குவது என்பது குறித்து அவர்களுக்கு தெரிளிவூட்டப்பட்டது.
மக்களுக்கு தங்கு, தடையற்ற சேவை
மேலும், மக்களுக்கு தங்கு, தடையற்ற சேவையை வழங்க அரச ஊழியர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான
அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியது.
அடுத்த வருடமும் சம்பளம் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் அரச ஊழியர்கள், மக்களுக்கான கடமையை முறையாக நிறைவேற்ற வேண்டும்.
கண்ணீருடன் வரும் மக்களை சிரித்த முகத்துடன் திருப்பி அனுப்பும் வகை
அரசியல் பொறிமுறையால் கொள்கையை உருவாக்க முடியும். அரச நிறுவனத்திற்கு கண்ணீருடன் வரும் மக்களை சிரித்த முகத்துடன் திருப்பி அனுப்பும் வகையில் அரச சேவை செயல்பட வேண்டும்.
மேலும், அரசதுறையில் ஊழல் மோசடிகளைத் தடுக்கும் வகையில், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை நடத்த அவசியமான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள முறைகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்களையும் நாம் ஆரம்பித்துள்ளோம்.
அரச பொறிமுறை திறம்பட செயல்பட
அரசபொறிமுறை திறம்பட செயல்படுவதற்கான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். மேலும், வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரச உத்தியோகத்தர்களின் கடமைகள் தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வெளிப்படையான மற்றும்
பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி மேலும் தெரிவித்தார்.
Featured
மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள்
மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள்
இலங்கையில் இன்றைய பிரதான எதிர்கட்சியாக விளங்கும் ,சஜித் பிரேமதாசா மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள் விடயம் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .
தேர்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசையால் காட்சிகள் ,இப்பொழுது எதிர் காட்சிகளை அல்லது பிரதான காட்சிகளை பந்தாட , குற்ற சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர் .
ஆள துடிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பிக்கள் ,ஆளும் ரணில் ஆட்சியில் ,தமது தொகுதிகளுக்கு ஒதுக்க பட்ட நிதியை பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தமது கட்சி தலைமையின் முடிவு இன்றி நிதியை பெற்றுள்ளது ,கட்சிமீறல் நடவடிக்கை என குற்றம் சுமத்த பட்டுள்ளது .
வெளிவரும் ஊழல் மோசடிகள்
மக்களை தேடி வந்து ஒட்டு வாங்க துடிக்கும் காட்சிகள் தற்போது , எதிரிகளின் ஊழல் மோசடி கையில் எடுத்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மக்களை சந்தித்து மக்கள் பிரச்சனைகளை தீர்க்க மறுத்து ,தமது அரசியலில் ஈடுபடும், இந்த குழுக்கள் தற்போது ,குழுவாத அரசியல் வீசி வருகின்றனர் .
Featured
நடிகை மோசடி சொத்து முடக்கம்
நடிகை மோசடி சொத்து முடக்கம்
நடிகை ஷில்பா ஷெட்டி மோசடி வழக்கில் அவரது 97 கோடி சொத்து முடக்கம்,திரை பிரபலங்கள் நடிகை செயலினால் அதிர்ச்சி .
பிட்காயின் மோசடியில் ஷில்பா ஷெட்டி
பிட்காயின் மோசடியில் நாடிகை ஷில்பா ஷெட்டி ஈடுபட்டதாக தெரிவித்து வருமானவரி நடத்திய சோதனையின் பொழுதே மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது .
தனது திரையுலக புகழை மைய படுத்தி, இவர் இந்த பிட் கொயின் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உக்ரைனில் பிட்காயின் Mining Farm
உக்ரைனில் பிட்காயின் Mining Farm அமைக்க ராஜ் குந்த்ரா 285 பிட் கொயினை வாங்கியுள்ளார் .
அதன் இன்றைய சந்தை மதிப்பு 150 கோடி ரூபாய் என தெரிவிக்க பட்டுள்ளது .திட்டமிட்டு பிட்கொயின் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் வழக்கு தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
நடிகை கோடி சொத்து பறிமுதல்
இந்த மோசடி வழக்கின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு, புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா பறிமுதல் செய்ய பட்டன .
அவற்றுடன் கணவர் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்குகளும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
இந்திய திரையுலகில் நடிகை ஷில்பா ஷெட்டி சொத்துக்கள் பறிமுதல் செய்ய பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதால் ,மேலும் பல திடுக்கிடும் விடயங்கள் வெளிவர கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இவர்களானால் பாதிக்க பட்டவர்கள் வழங்கிய இரகசிய தகவலை அடுத்தே, இந்த வேட்டையில் அமுலாக்கள் பிரிவு ஈடுபட்டு ,இந்த பறிமுதல் செய்த்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நரேந்திர மோடி ஆடசியில் நடக்கும் மிரட்டல்
நரேந்திர மோடி ஆட்சியில் இவ்வாறு பிரபலகள் மிரட்டப்பட்டு அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்ய பட்டு வருவதாக ,சில சமூகவலை பதிவுகள் தெரிவிக்கின்றன .
பல அரசியல்வாதிகள் வீடுகள் ,தொழில் நிறுவனங்கள் வீடுகளில் நடத்த பட்ட அமலாக்க படையின் தேடுதலின் பொழுது, கோடி கணக்கில் பணம் வாங்க பட்டதான செய்திகள் வெளியான நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதனால் நடிகை ஷில்பா ஷெட்டியம் அரசியல் பழிவாங்கல் ஊடாகவே பழிவாங்க பட்டுள்ளனர் எனவும் ,ஏனைய திரை பிரபலங்களுக்கும் இதன் ஊடாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நான் மோசடி ஏதும் செய்யவில்லை மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக பதவியேற்ற நாளிலிருந்து எவ்வித மோசடியில் ஈடுபடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .
இலங்கை அரசியலில் தேர்தல் சூடுபிடிக்கவுள்ள நிலையில்,காட்சிகள் மாற்றமடைந்து வருகின்றன .
அவ்வாறன நிலையில் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார் .
இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக அங்கம் வகிக்கும் பொழுதே நாட்டில் தொடர் குண்டுகள் வெடித்தன .
கொழும்பு தேவாலயங்கள் முதல் குண்டுகள் வெடித்தன .
அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று மைத்திரிபால சிறிசேன பதவி விலகவில்லை .
மாறாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று பேசும் பொழுதே மைத்திரிபால சிறிசேன நான் மோசடியில் ஈடுபடவில்லை என தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் .
Featured
சவூதிக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபர்
சவூதிக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபர்
சவூதி அரேபியாவுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி இருவரிடம் 160,000 ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு – இருதயபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நேற்று (18) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 100,000
ரூபாவும் இன்னொருவரிடம் 60,000 ரூபாவையும் பெற்றுக் கொண்டு கடந்த 7 மாதங்களாக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றி வந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
சவூதிக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபர்
இதனையடுத்து குறித்த போலி முகவரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்த பொலிஸார் விசாரணையின் பின்னர் மோசடியில் ஈடுபட்ட அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரை இன்று சனிக்கிழமை மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்by நிருபர் காவலன்
- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்ததுby நிருபர் காவலன்
- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்by நிருபர் காவலன்
- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைதுby நிருபர் காவலன்
- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலிby நிருபர் காவலன்
வவுனியா கணேசபுரத்தில் உதவித் திட்ட பதிவுகளில் மோசடி எனத் தெரிவித்து மக்கள் போராட்டம்
வவுனியா கணேசபுரத்தில் உதவித் திட்ட பதிவுகளில் மோசடி எனத் தெரிவித்து மக்கள் போராட்டம்
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – மன்னார் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.
இன்று (28.06) காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை சுமார் ஒன்டரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அவ் வீதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
வவுனியா கணேசபுரத்தில் உதவித் திட்ட பதிவுகளில் மோசடி எனத் தெரிவித்து மக்கள் போராட்டம்

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தினை சேர்ந்த மக்களினால் இவ் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவல வாயில் முன்பாக காலை 9.30 மணியளவில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 30 நிமிடங்களின் பின்னரும் எவ்வித அதிகாரிகளும் போராட்ட இடத்திற்கு வருகை தராமையினையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக அவ்வீதியுடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியினை விட்டு செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த பெரியகட்டு கிராம சேவையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி மேல்முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தன்னால் இயன்ற உதவிகளை தாம் செய்வதாகவும் தெரிவித்தமையினையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் பொதுமக்கள் வீதியினை விட்டு வெளியேறினர்.
ரோஹிதவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி
ரோஹிதவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடனட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர் இணையத்தளத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம் நேற்று அறிவித்துள்ளனர்.
ரோஹிதவின் கிரெடிட் கார்டில் இருந்து 387 அமெரிக்க டொலர் பெறுமதியான நான்கு இணையப் பரிவர்த்தனைகளை யாரோ ஒருவர் மேற்கொண்டுள்ளதாக மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 7, விஜேராம மாவத்தை, இலக்கம் 117 இல் வசிக்கும் ரோஹித ராஜபக்ஷ, மார்ச் 3 ஆம் திகதி மாத்தறைக்கு சென்று கொண்டிருந்த போது தனது கடனட்டை காணாமல் போனதாக நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பரிவர்த்தனை தொடர்பான வங்கி கணக்கு அறிக்கைகளை வழங்குமாறு தனியார் வங்கியின் தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி: இலங்கையர்கள் உட்பட 15 பேர் கைது
இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி: இலங்கையர்கள் உட்பட 15 பேர் கைது
இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி தொடர்பாக இலங்கையர்கள் உட்பட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பிரஜைகளை உள்ளடக்கிய கடவுச்சீட்டு மோசடி தொடர்பான விசாரணையில் இந்திய பொலிஸார் மற்றும் கடவுச்சீட்டு அதிகாரிகள் உட்பட
41 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழக அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை பிரஜைகள் சிலர் வெளிநாடு செல்வதற்காக இந்திய கடவுச்சீட்டுகளை பெற முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தமிழ்நாடு
காவல்துறையின் கியூ பிராஞ்ச் மதுரை பிரிவு விசாரணை நடத்தி வந்ததாகவும் இது தொடர்பாக 2019 செப்டம்பரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவு சீட்டினை வாங்கியது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 5 போலிஸ் அதிகாரிகள், 14 கடவுசீட்டு
அதிகாரிகள், 2 தபால் துறை ஊழியர்கள் உள்பட 41 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த வழக்கு தொடர்பாக மொத்தம் 15 பேர் (நான்கு இலங்கை தமிழர்கள் மற்றும் 11 பயண முகவர்கள்) இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய காவல் உதவி ஆணையாளர்
(உளவுத்துறை) மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மதுரை ஆட்சியர் இந்த ஆண்டு மே மாதம் ஒப்புதல் அளித்த நிலையில், அந்தந்த திணைக்கள
ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் அஞ்சல் துறைகள் தமது அனுமதியினை வழங்கி உள்ளது.
அதனை தொடர்ந்து 2021 டிசம்பரில் 14 கடவுச்சீட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில்,
இதுவரையில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை எனவும், கியூ பிராஞ்ச் விசாரணை முடிந்து 41 பேருக்கு எதிரான இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், 124 கடவுச்சீட்டுகளை கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் 51 பேர் இந்திய கடவுச்சீட்டினைபெற்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மொத்த 175 கடவுச்சீட்டுக்களில் 28 இலங்கைத் தமிழர்களால் போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டினை பெற்றுள்ளதாக இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் 30 கடவுச்சீட்டுகள் நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது எனவும் மீதமுள்ள 117 பேரில் 116 பேர் இந்திய நாட்டினரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
தயாரிப்பாளர் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார்.
மன்னர் வகையறா’ படத்தின் தயாரிப்பாளர் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார்.
நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் மகள் புகார்
விமல் – தயாரிப்பாளர்கள் மகள் ஹேமா
நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும்
திரைப்பட விநியோகிஸ்தர் கங்காதரன் ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விமல் நடிப்பில் ’மன்னர் வகையறா’ என்ற படத்தின் ஆரம்ப
தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசன் அவர்களின் மகள் ஹேமா இன்று (25-04-2022) காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விமல் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியதாவது,
பொருள் : ரூபாய் 1,73,78,000/- திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, திருப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்து, இறைச்சி கடைகள் நடத்தி, அதன் பின்னர் சிறிய சிறிய
தொழில்கள் செய்து தன்னை ஒரு தொழில் அதிபராக நிலை நிறுத்தி கொண்டவர் மறைந்த என் தந்தை கணேசன். சினிமா மீது தீராத ஆவல் கொண்டிருந்த அவரை
மூளைச்சலவை செய்து ” மன்னர் வகையறா ” என்ற திரைப்படத்தை துவக்க வைத்தவர் நடிகர் விமல்.
படத்தின் பட்ஜெட்டை ரூ. 5 கோடி என்றும், ரூ. 1.5 கோடி மட்டும் முதலீடு செய்தால் மீதி தொகையை சினிமா உலகத்திற்குள் கடனாக பெற்று கொள்ளலாம் என்றும் நடிகர் விமல் அளித்த உத்தரவாதத்தை நம்பிய எனது தந்தை சென்னைக்கு வந்து ஒரு
அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வைத்து கொண்டு பட தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தார். அப்போதே எங்கள் குடும்பத்திற்குள் கலகம் ஆரம்பமாகிவிட்டது. நானும்
எனது தாயாரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் எங்கள் பேச்சை கேட்காமல் விமல் போன்ற மண் குதிரைகளை நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார்.
விமல்
விமல்
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டுக்கோட்டையில் படப்பிடிப்பு துவங்கியது. 60 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, ஆறு மாத காலத்திற்குள் படத்தை வெளியிட்டு விட்டு, பின்னர் சினிமாவிற்குள் கால் வைக்க மாட்டேன் என எனது
தந்தையும் எங்களுக்கு உறுதி அளித்ததால் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பணிகளை பார்வையிட எனது அம்மாவும் சம்மதித்தார்.
17 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருந்த வேளையில், விமலுக்கும் கதாநாயகிக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டை வர, இரண்டு நாட்கள் படப்பிடிப்பு
நடைபெறாமல் இருந்ததால் மனம் வெறுத்து போன என் தந்தை அதற்கு மேல் படப்பிடிப்பை தொடர மனமில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்ய சொல்லிவிட்டு திருப்பூருக்கு வந்துவிட்டார்.
அதன் பிறகு சில நாட்கள் கழித்து என் தந்தையை சந்தித்த விமலிடம் ” உன்னை நம்பி தான் இந்த துறைக்கு வந்து முதலீடு செய்தேன். தனி மனித ஒழுக்கம் இல்லாத உன்ன நம்பி மேற்கொண்டு ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. இந்த படம் அப்படியே
கிடக்கட்டும். என் நஷ்டத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுகட்டி விடுவேன் ” என்று கூறி மேற்கொண்டு படத்தை தயாரிக்க விருப்பமில்லை என்று ஆணித்தரமாக
சொல்லிவிட்டார். சில நாட்கள் கழித்து அப்பாவை சென்னைக்கு அழைத்த விமல், இந்த படத்தை நம்பி தான் எனது எதிர்காலம் உள்ளது. எனவே படத்தை நானே மேற்கொண்டு தயாரித்து, படத்தை வெளியிட்டு விட்டு, நான் செலவு செய்த தொகை போக
மீதமிருக்கும் தொகையில் தங்கள் தொகையை தங்களிடம் கொடுத்து விடுகிறேன் என கூறியதாலும், விமலின் எதிர்காலம் இந்த படத்தில் இருக்கிறது என்பதாலும் விமலின்
யோசனைக்கு என் தந்தை ஒப்புகொண்டு 10.03.2016 அன்று ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.
தயாரிப்பாளர்கள் மகள் ஹேமா
தயாரிப்பாளர்கள் மகள் ஹேமா
மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஒப்பந்தத்தை பெற்று கொண்ட பின்பு ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை விமல் படத்தை ஆரம்பிக்காமல், படத்தின் மீது கடன் வாங்கி
ஊதாரித்தனமாக செலவு செய்து வந்ததால், ஜூன் மாதம் 15 ஆம் தேதி விமலை சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்து தரும்படி கேட்டார் அப்பா. அதற்கு மறுத்து விட்டார் நடிகர் விமல்.
இதனால் ஜூன் மாதம் 17 ஆம் தேதி முறைப்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார் எனது தந்தை. திரையுலகுக்கு எனது தந்தை புதியவர்
என்பதாலும், விமல் ஒரு முக்கிய பிரமுகர் என்பதாலும் எனது தந்தைக்கு சாதகமான பதில் சங்கத்திலிருந்து வரவில்லை. இதனால் மனம் உடைந்து போன என் தந்தை அமைதியாகிவிட்டார்.
அதன் பிறகு படத்தை தயாரித்து, வெளியீட்டிற்கு விமல் தயாரான போது, விமலை சந்தித்து தான் முதலீடு செய்த தொகையை திருப்பி கேட்டார் அப்பா. விமலிடமிருந்து
சாதகமான பதில் வராததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எனது தந்தை (வழக்கு எண் : C.S.No.58/2018)
இந்த வழக்கின் காரணமாக படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு எனது தந்தையுடன் சமரசம் செய்து கொண்ட நடிகர் விமல் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக சென்னை
உயர்நீதிமன்றத்தில் Memorandum of Settlement (ஆவண எண் : 7782/2018) தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி எந்த தொகையையும் இதுவரை
விமல் திருப்பித்தரவில்லை. பணத்திற்கு ஈடாக தருவதாக சொன்ன கால்ஷீட்டையும் தரவில்லை.
இந்நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி படத்தின் மற்ற மொழி டப்பிங் உரிமைகள் என் தந்தை வசம் வந்துவிட்டது. ஆனால் என் தந்தைக்கு
தெரியாமல் 21.06.2019 அன்று படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வேறொருவருக்கு விற்று எங்களை மோசடி செய்துவிட்டார் நடிகர் விமல்.
எனவே ஐயா அவர்கள் மோசடி செய்த நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு சேர வேண்டிய ரூபாய்.1,73,78,000/-
தொகையை பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடி-4 பேர் கைது
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடி-4 பேர் கைது
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என,
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நேற்று நிறைவடைந்தது. பரீட்சார்த்திக்குப் பதிலாக பரீட்சை எழுதிய குற்றச்சாட்டில்
நேற்றைய தினம் , 21 வயதுடைய இளைஞன் பலாங்கொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் புதியவகை மோசடி – மக்களே எச்சரிக்கை -SCAM warning
இங்கிலாந்தில் புதியவகை மோசடி – மக்களே எச்சரிக்கை -SCAM warning
பிரிட்டன் புறநகர் பகுதியான Yorkshire பகுதியில் வசிக்கும் மக்கள் பலருக்கு மோசடி கும்பல் ஒன்று இலக்கு வைத்து அவர்களது nationa
l insurance numbers.பெற்று மோசடி செய்த்துள்ளது அம்பலமாகியுள்ளது
குறித்த நபர்கள் கைபேசியில் அழைத்து அவர்களது இன்சூரன்ஸ் இலக்கம் பிழையாக உள்ளது எனவும் புதியவை சரியானதை
அனுப்பி வைக்கிறோம் என கூறி பழைய இலக்கத்தை கேட்டு அதன் ஊடாக மோசடி இடம் பெற்றுள்ளது
அழைத்த நபர் மீது சந்தேக அடைந்த நபர்கள் சிலர் அவர்களது குரலை பதிவு செய்து பொலிசாருக்கு தெரிய படுத்திய நிலையில்
,போலீசார் வழங்கிய வழி காட்டலின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
மக்களே இவ்வாறு யராவது அழைத்தால் அவர்களுக்கு உங்கள் விபரங்கள் எதனையும் தெரிவித்து விடாதீர்கள் ,எச்சரிக்கை
,இவ்வாறான அழைப்பு வந்தால்உடனே பொலிஸாருக்கு தெரிய படுத்துங்கள்
லண்டனில் கள்ள வங்கி அட்டை மோசடி – சிக்கிய கும்பல் – ஆடம்பர வாழ்க்கை அம்பலம்
லண்டனில் கடந்த 14 மாதங்களுக்கு மேலாக போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் ஊடாக மக்களின் வங்கி விபரங்களை திருடி அதன் ஊடாக பணத்தை திருடி ஆடம்பர
வாழ்ககை வாழ்ந்து வந்த வாலிப கூட்டம் ஒன்றை குற்ற தடுப்பு பிரிவினர் மடக்கி பிடித்தனர்
ஆடம்பர வாழ்க்கை
ஐந்து நட்சத்திர விடுதி மற்றும் ரோலெஸ்க்ஸ் கைக் கடிகாரம் ,ஆடம்பர கார்கள் ,உல்லாச விடுதிகளில் விடுமுறை என சுற்றி திரிந்த கும்பலே வசமாக சிக்கியுள்ளது
அதிக விலை கூடிய ரோலெக்ஸ் கைக் கடிகாரம் ஒன்றை கொள்வனவு செய்திட சென்ற பொழுது மேற்படி கும்பல் சிக்கியுள்ளது
,கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்படி திடுக்கிடும் விபரங்கள் வெளியாகியுள்ளது
வாலிப திருடர்கள்
இந்த கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் 23 முதல் 32 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது ,இதில் அனைவரும் முஸ்லீம்கள் என்பதும் தெரிய வந்துள்ளது
குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணையின் பின்னர் அனைவரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,போலீஸ்
விசாரணைகளில் 90,000 பவுண்டுகள் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது
எனினும் இதனை விட மோசடிகள் அதிகமாக இருக்கலாம் என நம்ப படுகிறது ,
ஓசியில உடம்பு வளர்க்கும் கூட்டம் அப்பாவி மக்கள் விபரங்களை திருடி அதன் ஊடே இந்த ஆடம்பர வாழ்க்கையை
அனுபவித்திருக்கின்றனர் ,வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும் என கூறியே விபரங்களை பெற்று இந்த மோசடியில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது
மக்களே உசார்
மக்களே உசார் தொலைபேசி வாயிலாக யாராவது இவ்வாறு முனைந்தால் எதுவும் தெரிவிக்காதீர்கள் ,வங்கிக்கு நேரடியாக சென்று செய்து கொள்ளுங்கள்
இவர்களிடம் மோசம் போன அனைவரும் ,அழைத்தவர்கள் யாவரும் வங்கியில் உள்ளவர்கள் என தெரிந்தே தமது வங்கி விபரங்களை தெரிவித்தன் விளைவே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
சிக்கிய 200 மில்லியன் வாகன இறக்குமதி -பழி வாங்கும் கோட்டா
மைத்திரி ஆட்சியின் முக்கிய புள்ளிகளை பழிவாங்கும் கோட்டா -கிளறப் படும் இறக்குமதிகள் -தலைதெறிக்க ஓடும் முதலைகள்
வாகன இறக்குமதி
இலங்கையில் கடந்த நல்லாட்சி வேந்தர் மைத்திரியின் ஆட்சி காலத்தில் கொழும்பு துறைமுகம் வழியாக இருநூறு மில்லியன்
ரூபா பெறுமதியான ஆடம்பர வாகனங்கள் இறக்குமதி செய்ய பட்டுள்ளன
திருடப் பட்ட வரிப்பணம்
இவ்விதம் இறக்குமதி செய்யப் பட்ட வாகனங்களுக்கு வரி செலுத்தப்படாது திருட்டுத்தனமாக நாட்டுக்குள் எடுத்துவரப்பட்டுள்ளன ,
புலிப் பீதியில் சிங்கள இராணுவம்
சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய ப்பட்ட நான்கு கொண்டேனர்களில் இந்த வாகனங்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளன
பழிவாங்கும் கோட்டா
அது தொடர்ப்பன புதிய விசாரணைகளை ஆளும் கொள்ளையடி மன்னர் கோட்டா ஆட்சியில் உள்ளாக்க பட்டுள்ளன ,
தம்மை கடந்த மைத்திரி ஆட்சியில் பழிவாங்கிய முக்கியஸ்தர்களை இலக்கு வைத்து இந்த பழிவாங்கும் மிரட்டும் ஆட்டத்தை கோட்டா ஆரம்பித்துள்ளார்
சர்வாதிகார மிரட்டல்
லிபியாவில் கடாபி போன்ற சர்வாதிகார ஆட்சியை நோக்கி கோட்டபாய நகர்ந்து வருகிறார் ,தனது இருப்புக்கும் ,காவலுக்கும்
நம்பிக்கை தரும் இராணுவ தளபதிகள் உள்ளனர் எனவும் அவர்கள் தன்னை ஒரு போதும் கைவிட மாட்டார்கள் என கோட்டா நம்புகிறார்
அதுவே இந்த ஆடுகள ஆட்டத்திற்கான முனைப்பாக காணப்படுகிறது
பிரிட்டனில் 600.000 பவுண்டுகள் மோசடி செய்த கும்பல் மடக்கி பிடிப்பு
பிரிட்டனில் பணமோசடியில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் – வீடு புகுந்து மடக்கி பிடித்த இரண்டு மாவட்ட போலீசார் ,தொடரும் விசாரணைகள்
பிரிட்டனில் நீண்ட காலமாக மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல்
ஒன்றை கென்ட் மற்றும் மீட்பான்ட் காவல்துறையினர் இணைந்து மடக்கி பிடித்துள்ளனர்
மூன்று வருடங்களாக இந்த மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது
மேலும் இவர்களது கார் ,வீடுகள் பணம் ,வாகனங்கள் என்பன மீட்க
பட்டுள்ளன ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன


































