Posted in இலங்கை செய்திகள்

மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு

மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை தொடர்ந்து


ஈராக்,நோர்வே,அவுஸ்ரேலியா நாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் மறு

அறிவித்தல் வரை
அடித்து பூட்ட பட்டுள்ளது

இவை எதிர் வரும் முப்பதாம் திகதியுடன் மூட படும் என இலங்கை

வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது


குறித்த தூதரகங்கள் நிதி நிலை கருதி இந்த அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    தப்பி ஓடிய அவன்கார்ட் தலைவரை இண்டர்போல் கைது செய்ய வேண்டும் – பாரளுமன்றில் சண்டை

    தப்பி ஓடிய அவன்கார்ட் தலைவரை இண்டர்போல் கைது செய்ய வேண்டும் – பாரளுமன்றில் சண்டை

    இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாயவினால் சர்வதேச அளவில் ஆயுத விற்பனை புரிந்து வந்த


    நிசங்க சேனாதிபதியை இண்டர்போல் மூலம் கைது செய்யும் ஆணையை பிற்ப்பிக்க

    வேண்டும் என் பாராளுமன்ற உறுப்பினர் Vijitha Herath தெரிவித்தார்

    இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கோட்டாவுக்கு பெரும்

    நெருக்கடியை தோற்றுவித்துள்ளது

      கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
      Posted in இலங்கை செய்திகள்

      போராட்ட காலத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

      போராட்ட காலத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

      கடந்த தினம் திக்வெல்ல, ஹிரிகெட்டிய பகுதியில் நடமாடிய நபர் ஒருவரை பின்

      தொடர்ந்து ஊந்துருளியில் வந்தவர்கள் அவரை சரமாரியாக சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்

      இந்த படுகொலைகள் காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,போலீஸ்

      விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

        Posted in இலங்கை செய்திகள்

        அரசியல் கொள்ளையர்கள் தப்பிக்காது இருக்க – விமான நிலையம் மூடிவிட கோரிக்கை

        அரசியல் கொள்ளையர்கள் தப்பிக்காது இருக்க – விமான நிலையம் மூடிவிட கோரிக்கை

        இலங்கையில் அளவும் அடச்சியில் அங்கம் வகித்த பல அரசியல் பிரமுகர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டனர்


        இவ்வாறானவர்கள் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க இலங்கை விமான

        நிலையங்களை மூடிவிட வேண்டும் என விஜித ஹேரத் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்

        மிகவும் பர பரப்பன வேளையில் பாரளுமன்றம் கூடியபோது மிக காரசாரமான வாதங்கள் அங்கு இடம்பெற்றுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          குத்துகாரணம் அடித்த லொறி – மூவர் காயம்

          குத்துகாரணம் அடித்த லொறி – மூவர் காயம்

          இலங்கை நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியொன்று,

          நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று

          குத்துகாரணம் அடித்த நிலையில்
          மூவர் காயமடைந்துள்ளனர்


          வேகமாகப்பயணித்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது

          குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
          லொறி பலத்த சேதமடைந்துள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறை நீக்க பட வேண்டும் -சஜித்

            நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறை நீக்க பட வேண்டும் -சஜித்

            இலங்கையில் நிறைவேற்றி அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை நெகேக்கஸ் பட வேண்டும் என
            சஜித் தெறிவித்துள்ளார்

            இவ்விதம் அவை நீக்க பட்டால் பல அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு கிட்டு என்பது இவர் கூற்று

              Posted in உளவு செய்திகள்

              வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

              வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

              இலங்கையில் ஆளும் இனவாத அரசன் மகிந்தா ராஜபக்ச குடும்ப ஆட்சி அழிவின் விளிம்பில் சிக்கி தவிக்கிறது


              சுருங்க சொல்லபோனால் முற்று புள்ளி வைக்க பட்டுள்ளது

              அந்த கட்சிகள் இலங்கையை மீளவும் பங்கு போட்டு ஆள முடியாத நிலை

              தோற்றம் பெற்றுள்ளது வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளை பிரித்து இனவாதம்

              ஏறி ஊளை இட்டவர்கள் இன்று ஊழியில் ஆடும் நிலையில் சிக்கியுள்ளனர்

              சிங்கள மக்களே தமக்கு போதும் எனவும் ,முசுலீம் ,தமிழர்களை ,ஓரங்கட்டி

              அதர்மத்தில் ஆடியது ,தொலை தூர அரசியல் பார்வை இல்லாது தம்பட்டம் அடித்தது

              அதுவே இன்று வீழ்ந்து அழியும் நிலைக்கு வித்திட்டுள்ளது ,தற்போது புதிய

              அரசு ஒன்று உதயமாக உள்ளது ,இந்த ஆட்சியின் அமர்விலும் ,தமிழர் தரப்பு பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும் ,

              இங்கே தமிழர் வாக்குகள் பெரும் இடம் பிடிக்கும் ,இம்முறை தமிழர்கள் மகிந்தாவால் பிரிக்க பட்ட வடக்கு கிழக்கை இணைத்து ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண முனையலாம்,

              அதற்கு அணைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டிய

              தேவை உள்ளது,தமிழ் காட்சிகள் தமக்குள்ள உள்ள உள் கட்சி மோதல்களை தவிர்த்து ஒன்று பட்டு செயலாற்ற வேண்டும்

              அவ்வாறு தவறின் இழந்த உரிமைகள் மீள எம்மால் மீள் எப்பொழுதும் பெற்று

              கொள்ள முடியாத நிலை ஏற்படுவதுடன் ,சிங்கள மக்கள் கொதிப்பை போன்று தமிழர் எம்பிக்கள் வீடுகள் முற்றுகை இட படும் நிலையும் ஏற்படலாம்

              வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

              எனேவ இந்த கால நிகழ்வுகளை ஒரு பாடமாக எடுத்து, தமிழ் கட்சிகள் வடக்கு கிழக்கை இணைக்க முயலவேண்டும்

              இணைந்து ஒன்றுபட்ட தமது ஆதரவையும் ,சிங்கள அரசுடன் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்

              மகிந்த குடும்பத்திற்கு எதிரான எதிரி அலை தனி சிங்கள மக்கள் , வாக்கு வங்கியாக சிலவேளை மாற்ற பெறலாம் ,

              ஆனலும் வருகின்ற ஆட்சியாலும் உடனடியாக விரிவான முறையில் வீழ்ந்து போன பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்றால் அது சாத்தியமல்ல

              மீளவும் மகிந்த குடும்பத்தாரை போல அவர்கள் ஆட்சியும் மிக மோசமாக கவிழ்க்க படலாம் ,ஆகையால் ஆள வரும் ஆட்சியின்

              துறை சார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் முக்கிய துறைகளை ஆட்சி செலுத்தும் பொழுதே நாடு மீள நிலைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்

              வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திடும் அச்சம் இல்லாத நாடாக

              இலங்கை மாற்றம் பெறும் பொழுதே வீழ்ந்த பொருளாதாரம் மீள எழுந்திடும் நிலை ஏற்படும்

              வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

              இதில் வெளிநாட்டு தமிழர்கள் பங்களிப்பு காத்திரமாக அமையும் ,எனவே

              கூட்டமைப்பிற்குள் உள்ள பிளவுகளை உடனே சரி செய்து ,அனைத்து தமிழ்

              கட்சிகளை ஒன்றிணைத்து செல்ல வேண்டிய கால தேவை எழுந்துள்ளது

              அவசரமும் ,அவசியமான இந்த செயல் நோக்கி தமிழர் கட்சிகள் செல்லட்டும்,வரலாற்றை புதியதாக எழுதும் காலத்தை உருவாக்குங்கள்

              தமிழினம் அதை எதிர் பார்க்கிறது ..விட்டு கொடுப்பதால் எவரும் கெட்டு போவதில்லை !

              எதிரி வீழ்ந்து கிடைக்கும் பொழுது அதில் ஏறி நாம் சவாரி செய்து எமது எதிர்

              காலத்தை எதிரிகளிடம் இருந்தே எடுத்து செல்ல வேண்டும்

              மனம் மாற்றம் இங்கே மன்றில் ஏற்படும் ,ஒன்று பட்டால் தமிழருக்கு வாழ்வு உண்டு

              ,சிந்திக்குமா நம்ம கட்டெறும்பு தமிழர் கட்சிகள் ..?

              • வன்னி -மைந்தன்
              Posted in உளவு செய்திகள்

              இலங்கை அழிவது எப்படி -புலிகள் சொன்ன மர்மம்

              இலங்கை அழிவது எப்படி -புலிகள் சொன்ன மர்ம – வீடியோ

              இலங்கை அழிவது எப்படி என அதே சிங்களவர்களால் எதிரியாக பார்க்க பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் ஆரூடம் கூறிய விடயங்கள் இப்பொழுது வெளியாகியுள்ளது

              ஈழ தமிழர் தரப்பை பேச்சுவார்த்தை என்ற வலைக்குள் எவ்விதம் சிக்க வைத்து,சிங்கள பவுத்த பேரினவாத எதிரிகள் பந்தாடினரோ ,அந்த எழுச்சிமிகு தேசிய போராட்டத்தை நசுக்கினர் என்பதும் ,

              அதற்காக அவர்கள் கையாண்ட யுக்திகள் ,திட்டங்கள்,தந்திரம் என்ன என்பது .தொடர்பான விடயங்கள் இந்த காணொளியில் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது

              இலங்கை அலைவது எவ்வாறு என தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்த விடயங்கள் இப்போது சிங்கள ஆட்சிகளை தலைகீழாக கவிழ்க்கும் நிலைக்கு வித்திட்டுள்ளது

              மகிந்த ராஜபக்சே குடும்பம் மற்றும் கடந்த கால ஆட்சியாளர்களை கொண்டாடிய அதே சிங்கள மக்கள் ஆட்சிகளை கவிழ்க்க முன் வந்துள்ளதும்,புலிகள் கோடிட்ட அந்த கால கணக்கில் பொதிந்துள்ளது

              எதிர் கால கால கடிகாரத்தை காட்சி பிழையின்றி எழுதிய புலிகளின் திறன் சார் முலைகளின் செயல் நோக்கு தெளிவாகத்தான் வீழ்ந்துள்ளது என்பது இன்றைய நிகழ்கால இலங்கை தேசத்தின் அழுகுரல் பொருளாதார நெருக்கடி கட்டியம் இடுக்கியது

              உலக தமிழர்களே இலங்கை எவ்வாறு வீழ்ச்சியுறும் என அவர்கள் கோடிட்ட சான்றுகளை சற்றே கேட்டு கடத்தி செல்லுங்கள் ,வரலாறு ஒன்றை எழுதும்,அதுவே ஒன்றை அழிக்கும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்


              இந்த பச்சை புலிகள் கூறும் விடயங்கள் நிதர்சனமாக பொருந்துகிறது

              வரலாற்று சான்றுகளில் இருந்து கற்று கொண்ட பாடஙக்ளின் அடிப்படையில் புலிகள் நகர்த்திய விடுதலை தேசத்தின் கனவு இன்று காணாமல் போனாலும் தமிழீழ விடுதலை புலிகள் கூறிய விடயங்கள் தெளிவாகத்தான் உள்ளது

              வரலாற்று படிமங்களில் இருந்து வாழ்வை கற்று கொண்டவன் அந்த வரலாற்று வழியே தடம் புரண்டு ஓடினால் அதில் வெற்றி பெறுவான் என்பதற்கு இந்த விடயம் முன்னுதாரணமாக உள்ளது

              காலம் கடந்து போனாலும் அந்த கணிப்புக்கள் பொய்த்து வில்லை என்பதை புலிகளின் அரசியல் வரலாற்று துறை வெளிக்கொண்டு வந்த விடயங்கள் தெளி நிலையின் உச்சத்தை காட்டி செல்கிறது

              • வன்னி மைந்தன் –

              இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

              https://www.youtube.com/watch?v=-81AqUo8Xbw&t=155s
              Posted in இலங்கை செய்திகள்

              மத்திய வங்கி ஆளுநர் கிரிமினல் குற்றவாளி – -தயாராகும் சிறை

              மத்திய வங்கி ஆளுநர் கிரிமினல் குற்றவாளி – -தயாராகும் சிறை

              இலங்கை மத்திய வங்கி ஆளுநராக விளங்கி நாட்டில் ,பட்டினி பஞ்சம்

              ஏற்படவும் ,பொருளாதாரம் கெட்டு நாடு சீர்குலைய காரணமக விளங்கிய

              கோட்டாவின் அடிமை Ajith Nivard Cabraal கிரிமினல் குற்றாவளி என சஜித்

              பிரேமதாச தெரிவித்துள்ளார் ,இவரது கூற்றை ஜேவிபி அனுராவும் தெரிவித்துள்ளார்

              கோட்டா ஆட்சி இழந்து வீடு எசெல்லும் நிலையில் புதிய தேர்தல் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

              அவ்விதம் புதிய ஜனாதிபதி நாட்டில் ஆட்சி பீடம் ஏறினால் மத்திய வாங்கி

              ஆளுநராக இருந்து தனது பொறுப்பில் இருந்து விலகியவர நீதிமன்றில்

              முன்னிலை படுத்த பட்டு சிறைவாசம்
              அனுபவிக்க நேரிடும் எனவும், அப்போது இவர் ஊடக கோட்டா ,மகிந்த ஊழல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

                Posted in உளவு செய்திகள்

                இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

                இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

                இலங்கையில் கிட்ட தட்ட 13 ஆண்டுகளுக்கு உள்ளாக ஆட்சி புரிந்து வரும்
                ராஜபக்ஸ குடும்பம் இரண்டு லட்சம் மில்லியன் டொலர்களை கொள்ளையடித்துள்ளது

                என புதிய உள்ளக கசிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,இவ்வாறு கொள்ளையடித்த சொத்துக்கள் உலக நாடுகளில் பலவற்றில் முதலீடு செய்ய பட்டுள்ளன

                அவை கொட்டல்,விமானம்,வீடுகள்,எரிபொருள் நிலையங்கள் என பலவற்றிலும் முதலீடு செய்ய பட்டுள்ளது

                அமர போகும் தலைமை கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்ப சொத்துக்களை அரசுடைமையாக்கி மக்கள் போராட்டங்களுக்கு தீர்வு எழுதும் என ஏதிர் பார்க்க படுகிறது

                புதிய ஆட்சி இவர்களது அனைத்து கொள்ளைகளையும் புட்டு புட்டு வைக்கும் எனவும் , அவை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

                மக்கள் எதிர் பார்க்கும் இந்த கொள்கை நிலைப்பாட்டை அலுப்போகும் அரசியல் தலைமைகள் மக்கள் மனதின் கோப கொந்தளிப்பை ஏற்று பணியாற்றுமா என்பது சநதேகமே

                இலங்கை மக்கள் வாழ்வியல் மற்றும்நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கு ஆட்சி செய்திட ஆண்ட அல்லது அரசியல் கட்சிகளில் முதன்மை நபர்களாக விளங்குபவர்கள் புரட்சிகர சிந்தனையுடன் செயல் ஆற்றும் நிலையில் இல்லை என்பதே யதார்த்தம்

                இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

                இவ்விதமான அரசியல் ஊழல் நிறைந்த அரசியல் வதிகளே நாட்டில் கொழுத்து பருத்து உள்ளனர்

                கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை லஞ்சத்தில் ஊறிக் கிடப்பதால் அந்த அழுக்கு ஓடையில் இருந்து இவர்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பது யானைக்கும் மீசை என்பது போலாகும்

                இரண்டு லட்சம் டொலர்களை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட மகிந்த ராஜபக்சே குடும்பம் அதன் பரம்பரை ஆட்சியில் இல்லா விட்டாலும் ஆள்வதற்கு ஏற்ற பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்

                இவ்வாறான குடும்ப ஆட்சி எதிர் வரும் காலங்களில் இலங்கையில் இடம்பெறா வண்ணம் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்க பட வேண்டும் ,அது தவறின் நாடு சோமாலியா போன்று மாற்றம் பெறுவதை தடுக்க முடியாது

                Posted in இலங்கை செய்திகள்

                பிள்ளையான் வீடு முற்றுகை – பரவும் கோட்டா எதிர்ப்பு போர்

                பிள்ளையான் வீடு முற்றுகை – பரவும் கோட்டா எதிர்ப்பு போர்

                மட்டக்களப்பில் உள்ள தேசத்துரோகி பிள்ளையான் மற்றும் அவரது

                அலுவலகம் என்பன மக்களினால் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

                கோட்டாவே வீட்டுக்கு போ அவரின் அடியாள் வீட்டுக்கு போ என இந்த முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன ,


                தொடர்ந்து நாடெங்கிலும் இந்த போராட்டம் வெடித்து பறக்கிறது


                வேறு வழியின்றி ஆட்சியை இழந்து மகிந்த சகோதர்கள் ஓடும் நிலை ஏற்பட போகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  மகிந்தா,கோட்டா பதவி விலகு உக்கிரம் பெறும் போர் – பிரதமர் இல்லாம முன்பாக இராணுவம் குவிப்பு

                  மகிந்தா,கோட்டா பதவி விலகு உக்கிரம் பெறும் போர் – பிரதமர் இல்லாம முன்பாக இராணுவம் குவிப்பு

                  இலங்கையில் ஆளும் சகோதரர்களான மகிந்தா ,கோட்டா உடனே தமது

                  அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என மக்கள் மூன்றாவது நாளாக

                  தொடர்ந்து போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

                  நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த போராட்டம் உச்சம் பெற்றுள்ள

                  நிலையில் தற்போது மகிந்த அதிகார காரியாலய இல்லம் முன்பாக

                  இராணுவம் குவிக்க பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போட பட்டுள்ளது

                  கூட்டாட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வருமாறு அழைப்பு விடுத்த போதும்

                  அது பயனளிக்காத நிலையில் தற்போது


                  ஆட்சி கவிழும் நிலையில் உள்ளதால் நாட்டில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது

                    Posted in Uncategorized

                    புலி தளபதிகள் வீழ்ந்த நாளில் தள்ளாடும் கோட்டா அரசு

                    புலி தளபதிகள் வீழ்ந்த நாளில் தள்ளாடும் கோட்டா அரசு

                    கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன். இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி

                    தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு

                    இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

                    தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது. தீபனை இயக்கத்தில் சேர்த்த

                    மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய

                    காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

                    1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும். இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார். 1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

                    அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

                    1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள். இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

                    பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை. 1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

                    தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச் சமருக்குத்தலைமை தாங்கினார்.

                    தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக் கொடுத்தது. இந்த‌ இரண்டு ரி 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

                    1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

                    1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

                    1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

                    சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

                    யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல் மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது

                    முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.

                    தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்

                    கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

                    ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும்

                    நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

                    இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண்

                    அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

                    இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக

                    நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு

                    வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத் தவறிவிட்டார்.

                    1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத

                    அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

                    1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

                    ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத்

                    தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம். இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம்

                    பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.

                    குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம்

                    கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன். 2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம்

                    படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.

                    அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள் (2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன். கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம்

                    திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக

                    திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.

                    25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை

                    நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே

                    வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது

                    எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பது .

                      Posted in Uncategorized

                      எம்பி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்

                      எம்பி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்

                      ஆளும் கோத்தபாயவின் ஆட்சிக்கு எதிராக நாடெங்கும் மக்கள் போராட்டம்

                      நடத்தி வருகின்றனர்

                      இவ்வாறான கால பகுதியில் கேகாலை மாவட்டத்தில் உள்ள கனக கேரத்தின்

                      வீடு முற்றுகைக்கு உள்ளாக்க பட்டது

                      மக்கள் சுற்றிவளைத்த நிலையில் வீட்டில் தங்கி இருக்க முடியாத நிலையில்

                      அவர் அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் கண்டிக்கு தப்பி ஓடியுள்ளார்

                      தொடர்ந்து பல எம்பிக்கள் வீடு முற்றுகைக்கு உள்ளாகி பட்டு வருகினறமை குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஒரு அமெரிக்கா டொலர் 300 ரூபாவை எட்டியது

                        ஒரு அமெரிக்கா டொலர் 300 ரூபாவை எட்டியது

                        இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்ட பண

                        வீக்கம் காரணமாக
                        ஒரு அமெரிக்கா டொலர் இலங்கை ரூபாவுக்கு 300 ஆக எட்டி பிடித்துள்ளது

                        இந்த பணவீக்கம் மேலும் மூன்று மத காலத்திற்கு அதிகரிக்க கூடும் என

                        எதிர்வு கூறப்பட்டுள்ளது

                        வெளி நாடுகளில் உள்ள மக்கள் முண்டியடித்து பணத்தை அனுப்புவதில்

                        தீவிரம் காட்டி வருகின்றனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு

                          இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு

                          இலங்கையில் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வரும்நிலையில் முப்படையினரும்


                          அரசுக்கு எதிராக திசை திரும்பும் நிலை தோற்றம் பெற்றுள்ளதால்


                          இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மகிந்தா கோட்டாவை வீட்டு காவலில்

                          வைத்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற நிலை ஏற்படலாம் என கணிக்க பெறுகிறது

                          இவ்விதமான போராட்ட காலங்களில் சில நாடுகளில் இராணுவம் ஆட்சி நிலை

                          நிறுத்த பட்டு பின்னர் ஜனநாயக அரசியல் தோற்றம் பெற்றது வரலாறாகி உள்ளது

                          இதனை மைய ப்படுத்தியே இந்த போராட்டம் வெடித்து வருவதால் இராணுவ

                          அடச்சியின் மூலம் கோட்டா ஆட்சி அகற்ற பட்டு ஜனநாயக அரசியல்

                          திரும்பலாம் என எதிர் பார்க்க படுகிறது ,நிகழ்கால சம்பவங்கள் பல


                          திசை மாறும் புதிய வரலாற்றை இலங்கையில் எழுதும் காலமாக இது மாற்றம் பெரும் என எதிர்பார்க்கலாம்

                            Posted in உலக செய்திகள்

                            ஈராக்கில் உள்ள துருக்கி இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல்

                            ஈராக்கில் உள்ள துருக்கி இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல்

                            ஈராக் மொசூல் பகுதியில் நிலைகொண்டுள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan

                            முகாம் மீது பாரிய தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                            இந்த தாக்குதலின் பொழுது அந்த முகாம் பாரிய சேதம் அடைந்துள்ளதாக

                            தெரிவிக்க படுகிறது

                              Posted in உலக செய்திகள்

                              இஸ்ரேல் தலைநகர் அருகில் குண்டு வெடிப்பு

                              இஸ்ரேல் தலைநகர் அருகில் குண்டு வெடிப்பு

                              இஸ்ரேல் தலைநகர் Tel Aviv பகுதியில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது


                              இந்த குண்டு வெடிப்பால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை

                                Posted in இலங்கை செய்திகள்

                                மகிந்தா குடும்பத்திற்குள் வெடித்த சண்டை

                                மகிந்தா குடும்பத்திற்குள் வெடித்த சண்டை

                                இலங்கையில் ஆளும் கோட்டாபயா ஆட்சிக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்த

                                நிலையில் இவரது ஆட்சியில் அமைச்சர்களாக அங்கம் வகித்த பசிலுக்கும்

                                மகிந்தவுக்கு இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன

                                மேலும் ,பீரிஸ்,தினேஸ்குணவர்தன ,பசில் ஆகியோர் ராஜீனமா கடிதத்தில்

                                கையொப்பம் இடைவில்லை என தெரிவிக்க படுகிது

                                இதனால் அங்கு பெரும் மோதல் வெடித்த நிலையில் இன்று கோட்டாவை மகிந்தா சந்திக்கிறார்
                                இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது

                                அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற பொழுதும் அதனால்

                                ஏற்பட போவது ஏதும் இல்லை என்பதே இன்றைய களநிலவரமாக உள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மத்திய வாங்கி ஆளுநர் பதவி விலகி ஓட்டம் – தள்ளாடும் கோட்டா அரசு

                                  மத்திய வாங்கி ஆளுநர் பதவி விலகி ஓட்டம் – தள்ளாடும் கோட்டா அரசு

                                  இலங்கையில் பொருளாதரத்தை நிர்ணயம் செய்திடும் நிலையில் உள்ளது

                                  மத்திய வங்கி ஆகும் ,இதன் ஆளுநர் ர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை இராயீனமா செய்துள்ளார்

                                  இதனால் மத்திய வங்கிக்கு புதிய ஒருவரை நியமிக்க வேண்டிய நிலையில் கோட்டா தள்ள பட்டுள்ளார்

                                  புதிய அமைச்சர்கள் ,புதிய ஆளுநர்கள் நியமிக்க பட்டாலும் நாடு தற்போது

                                  உள்ள நிலையினை சமாளிக்க முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது