Tag: அர்ச்சுனா
அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்
அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்
அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம் ,இப்போது தான் மனம் இரண்டாய் பிளந்து கிடக்கிறது..
11 வழக்குகளையும் தாண்டி 118 வது நாளாக தெளிவாக ஓடிக் கொண்டிருக்கிறேன்..
ஒவ்வொரு துரோகங்களையும் முதுகிலிருந்து கத்திகளாக கழட்டும் போது நெஞ்சம் வலிக்கிறது..
செலஸ்தீன் அண்ணாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துரோகத்திற்கான வரலாறு..
செலஸ்டின் அண்ணாவுக்கு நான் என்ன செய்தேன்?
மீண்டும் தம்பி ராசா?தம்பி லோக்கல் அரவிந்த்?அஜித்?கிஷோர்?
மது பிளாக்?இவர்களில் யாராவது சொல்லட்டும் நான் இவர்களுக்கு தீங்கிழைத்து இருக்கிறேன் என்று?
எல்லா தடைகளையும் தனியாக ஒருவன் தாங்கிக் கொண்டு 117 ஆவது நாளாக இன்றுவரை உங்கள் மத்தியில் நிற்கும் போது ஒன்றாக படித்த மருத்துவ சமூகமே நீதித்துறையுடன் சேர்ந்து முதுகில் குத்தும் போது?
பக்கத்தில் நிற்க வேண்டியவர்கள் முதுகில் குத்தி விட்டு தள்ளி நிற்கிறார்கள்?
அரசாங்கம் வஞ்சிக்கிறது என்று நினைத்தேன் சாவகச்சேரியில் இருந்து வெளியேறும் போது!
ஒன்றாக படித்த மெடிக்கல் அட்மினிஸ்ட்ரேஷன் எனக்கு எதிராக நிற்கிறது என்னை ஃபெயில் ஆக்கி கைதட்டி சிரித்துக்கொள்கிறது..
அப்போது கூட வலிக்கவில்லை..
ஆனால் ஒன்றாக நிற்கிறேன் ஒன்றாக சாப்பிடுவோம் ஒன்றாக தோளோடு போவோம் என்று சொன்னவர்கள் இப்போது தனித்தனி வீடியோக்கள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
இதனையும் தாண்டி ஒருவன் நிற்கிறான் என்றால் ..
அதற்குப் பின்னாலும் எனக்காக சில பேர் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..
அது எனக்காக வந்த எனக்காக நீதிமன்றத்தில் என் சார்பில் நின்ற தங்கை கௌசல்யாவில் தொடங்கி மயூரன் வினோ பாரதி சஞ்சு விக்கி அண்ணா வன்னி மைந்தன் தளபதி சபே சோதி அக்கா நேசன் அண்ணா உதயா அண்ணன் எனது சொந்த சகோதரர்கள் மற்றும் தமிழ் என்ற உணர்வில் நிற்கும் தமிழனாய் பிறந்த ஒவ்வொரு மானிடனும் எனக்காக நிற்கிறான்..
அந்த ஒரு அரவணைப்பே போதும்..
ஜெயில் என்ன மரண தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்..
வைத்தியர்கள் அநீதி செய்கின்றார்கள் என நான் சொல்லவில்லை..
தாங்களாகவே ஓடிப்போய் வழக்குகளை போட்டு கொண்டார்கள்..
நீதிமன்றமும் சட்டவாளர்களும் வைத்தியர்களும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி ஒன்றாக உணவருந்தி விட்டு ஒரே ஒருவனை குரல்வளையை போட்டு நசுக்கும் போது அது நீதிமன்ற அவமதிப்பு என்று சொன்னால் கூட எத்தனை வருடங்கள் எழுத முடியுமோ அத்தனை வருடங்கள் எழுதிக் கொள்ளுங்கள்..
தூக்கு தண்டனை எழுத முடியுமோ அதை கூட எழுதிக் கொள்ளுங்கள்..
எழுதிய பேனைகளை உடைக்கும் போது நீங்கள் உடைப்பது பேனையல்ல..
தமிழனின் குரல்வளைகளை என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
துரோகிகள் ஆகவே வாழ்ந்து பழகிப்போன தமிழினம் ஒருபோதும் நீதிக்கு தோள் கொடுக்காது..
அதற்காக அது அநீதி என தெரிகின்றபோது நீதிமன்றம் மட்டும் அல்ல தூக்கு மேடையிலும் சொல்லிக் கொள்வேன் அது அநீதி என்று!
சாகத் துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை என்பதை மறுமுறை ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்..
மருத்துவ துறையாக இருக்கட்டும் நீதித்துறையாக இருக்கட்டும்..
அநீதி என்பதை அநீதி என்று சொல்லுவதற்கு எதற்காக நான் பயப்பட வேண்டும்?
ஒன்றாக கிரிக்கெட் விளையாடிய அவர்களும் ஒன்றாக உணவு உண்டவர்களும் வழக்கு போட்டவர்களும் அவர்கள் தான் வழக்கை விசாரிப்பவரும் அவர்கள்தான்..
ஆனால் தன்னந்தனியாக நிக்கிறேன்..
கனம் நீதிபதியிடம் ஒரே ஒரு கேள்வி..
அன்று வெள்ளிக்கிழமை..
எல்லா வைத்தியர்களும் வைத்தியசாலையை விட்டு வெளிநடப்பு செய்த போது டிப்பரில் அடிபட்டு ஒரு தந்தையும் மகளும் கைகால் சிதைந்து ஏழு மணி அளவில் கிளிநொச்சி அம்புலன்ஸில் சாவகச்சேரிக்கு கொண்டு வந்த போது…
தாங்கள் நியாயமான வழக்குகள் என சொல்லிக் கொள்கின்ற அதே வழக்குதாரிகள் தான் யாழ்ப்பாணம் சுகாதார பிராந்திய பணிமனையில் ஒலிவாங்கிகளுக்கு முன்னாள் நின்று அவர்களுடைய உரிமைகள் பற்றி கதைத்துக் கொண்டிருந்தார்கள்..
அவர்கள் பக்கம் பக்கமாக எழுதி வாசித்துக் கொண்டிருந்தார்கள்..
ஐயா..
நீங்கள் அதைப் பார்க்கவில்லையா..
உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறது..
உங்களுக்கும் ஒரு அழகான மனைவி இருக்கிறார்..
அவர்கள் அன்று கால் சிதைந்து வந்திருந்தால்..
நீங்கள் என்னை நீதிமன்றத்திற்கு கேட்டு இருப்பீர்களா?? எல்லா வைத்தியர்களும் போனபோது நீர் ட்ரீட் பண்ண வேண்டியது உமது கடமை என்று..
கணம் நீதிபதி அவர்களே நான் ஒரு வைத்திய நிர்வாகி..
அன்று நான் எனக்கென்ன என்று நின்று இருக்கலாம்..
அப்போது அவர்கள் குருதிப்போக்காலே செத்து இருப்பார்கள்..
எனக்கு வழக்கு வந்திருக்காது..
அந்த 25 வைத்தியர்கள் தான் வழக்கில் அடைபட்டு இருப்பார்கள்.
அன்று நானும் எஞ்சி இருந்த மருத்துவ தாதியார்களும்தான் அந்த உயிரை காப்பாற்றினோம்..
அந்த உயிர் அன்று போயிருந்தால் எல்லாருக்கும் ஒரு செத்த வீடு.
அந்தக் குடும்பத்தை சற்று நினைத்துப் பாருங்கள்..
அங்கே ஒரு 18 வயது பெண் பிள்ளையை இழந்திருப்பார்கள்..
ஒரு தந்தையை ஒரு மனைவி இழந்து இருப்பார்…
இப்போது சொல்லுங்கள் அந்த உயிர்களை மட்டுமல்ல அந்த 25 வைத்தியர்களையும் காப்பாற்றியது யார்?
தொழிற்சங்க போராட்டம் என்று கொலை செய்யும் துணிந்தவர்களை நியாயமான வழக்குகள் என்று நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள்?
ஆம் என்னை அச்சுறுத்தினீர்கள்? அதில் என்ன சந்தேகம் இருக்கிறது..
வழக்கினை விசாரிக்காமலே வைத்தியசாலையை விட்டு வெளியே போகுமாறு நீங்களே சொல்கிறீர்கள்..
முதலில் ஒரு வழக்கினை விசாரிக்க வேண்டும்..
வைத்தியசாலை அத்தியாசகர் யார் என்பதை சுகாதார அமைச்சு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்..
அதன் பின்பு தானே ஐயா நீங்கள் முடிவெடுக்க முடியும் நான் வைத்தியசாலை வைத்திய அர்ச்சகர் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளேன் என்று?
லண்டனில் இருந்து படித்து விட்டு வந்து யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் சேர்ந்து ஒரு துடுப்பாட்ட மாட்டை கூட பிடிக்கத் தெரியாதவர்கள் இன்று லோயர்களாக நிற்கிறார்கள்.
உங்கள் கணம் நீதிமன்றத்தின் முன் அவர்கள் என்னை அவமானப்படுத்தும் போது திருப்பி ஒரு வசனம் கதைப்பதற்கு கூட தாங்கள் என்னை அனுமதிக்கவில்லை..
குற்றத்தை விசாரிக்காமலே குற்றம் ஆனவன் என நீங்கள் நினைத்து விட்டீர்கள் ஏனெனில் அவர்கள் உங்களுடைய கிரிக்கெட் ஆட்டத்தின் நண்பர்கள் அல்லவா…
நல்ல காலம் நான் வைத்தியர்களுக்காக விளையாடவில்லை..
நானும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் சோப் போல் ஹார்ட் போல் இரண்டும் விளையாடினேன்..
நீதிபதி என்று பார்க்காமல் கூட பவுன்சர் அடித்திருப்பேன்…
முடியாவிட்டால் ஒரு புல் டோஸ்ட் ஆவது போட்டு இருப்பேன்…
எங்களுக்கு முதுகின் பின் கதைக்க தெரியாது..
ஆனால் இலகு தமிழில் நன்றாக கதைக்க தெரியும் தங்கள் மேல் நீதிமன்றம் என்னை கதைக்க கூட அனுமதிப்பதில்லை…
ஒரு குற்றவாளியை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலே சட்டம் தெரிந்தவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் ஒரு கரையில் கத்தும் போது நான் கை உயர்த்தினால் உமக்கு கை உயர்த்த கூட அனுமதி இல்லை அடைப்பேன் என்று சொல்லும் உங்கள் நீதி…
வாழ்க நீதிமன்றம்..
கனம் நீதிபதி அவர்களே..
உங்கள் மகன் உந்துருளியில் விழுந்து காதலும் மூக்காலும் இரத்தம் ஒழுக அன்று வெள்ளிக்கிழமை வந்திருந்த குழந்தையாக இருந்தால்..
அப்போது நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்..
25 வைத்தியர்களுக்கும் எதிராக தாங்கள் அப்போதே ஒழுக்காளற்று நடவடிக்கை எடுத்திருக்க மாட்டீர்களா?
எனக்குத்தானே வருகின்றபோது எல்லாரும் நினைத்துக் கொள்வார்கள் அது இரத்தம் என்று..
அடுத்தவனுக்கு வரும்போது அது தக்காளி தொக்கு தானே ஐயா..
இதே நீதிமன்ற நீதிபதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன் நெஞ்சு வலி என்று ஒரு மாலை நேரம் 5 மணி அளவில் வந்திருந்த போது ETU வில் பார்க்க வேண்டிய வைத்தியர்கள் இருக்கவில்லை..
அன்றைய நாள்..
நான் ஈ டி உவிலும் வேலை இல்லை..
நான் ஒரு குழந்தை மருத்துவனாக முதலாம் ஓட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன்..
அன்று வந்த நீதிபதி எந்த வைத்தியரும் பார்க்காமல் 30 நிமிடங்களுக்கு மேல் நெஞ்சு வலியுடன் துடித்துக் கொண்டிருந்தார்..
அப்போது நான் பெர்மனெண்டாகவே குவாட்டர்ஸில் இருந்ததால் என்னிடம் உடனடியாக ஓடி வந்து சொன்னார்கள் ஒருவர் நெஞ்சுவலிகள் இருக்கிறார் வந்து பார்க்க இயலுமா என்று..
ஐயா சட்டம் கதைப்பதாக இருந்தால்..
நான் அன்று சொல்லி இருக்கலாம்..
நான் முதலாம் வோட்டில் வேலை..
ஆதலால் பார்க்க முடியாது என்று..
எனக்கு அன்று சென்று அவருடைய ஷர்ட் கழட்டுமாறு கூறியபோது தாதிகள் ஒரு மாதிரி நெளிந்தார்கள்..
நான் அவரை சொன்னேன் தயவுசெய்து சேட்டை கழட்டுங்கள் அப்போதுதான் இசிஜி போட முடியும் என்று..
அவர் ஷூட்டை கழட்டிய போது நான் ஸ்க்ரீன்களை போட்டு மறைத்து கொண்டேன்..
மற்றக்கட்டிலில் பெண்மணிகள் இருந்தார்கள்..
அன்று நான் அவருக்கு மருத்துவம் செய்யாது விட்டிருந்தால்..
அன்று நான் யாரோ ஒருவர் தானே என எனது வேலையை பார்த்துக் கொண்டிருந்திருந்தால்..
அந்த நீதிபதி இழக்கப்பட்டிருப்பார்..
சட்டமும் நீதியும் வெளியே கதைக்கலாம்..
நான் அங்கு வேலை இல்லை என சொல்லிவிட்டு நடந்து போய்விட்டிருக்கலாம்..
ஆனால் ஒரு நீதிபதியின் வீட்டில் சாவு விழுந்திருக்கும்..
ஒரு நீதிமன்றமே கலங்கி போயிருக்கும்..
இது பொய் என்றால்..
தயவுசெய்து 2019 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக இருந்த நீதிபதியிடமே போய்க் கேளுங்கள்..
அவர்தான் என்னுடைய விவாகரத்து வழக்கையும் தன்னுடைய தனிப்பட்ட அறையில் கூப்பிட்டு விசாரித்தார்..
அவர்களும் நீதிபதிகள் தான்..
அவர்களும் கடவுள்கள்தான்..
இதை நான் எழுதுகிறேன் என்பதற்காக 26 ஆம் தேதி நான் வராமல் விடப்போவதில்லை..
எப்படியும் உங்களோடு தோல் நின்று படமெடுத்த சட்டத்தரணிகள் இவற்றையும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொண்டு வருவார்கள்.
அப்போது நீங்கள் சொல்லுவீர்கள்..
நீங்கள் மனத்தியாலகணக்காக எழுதுவதை நான் வாசிக்க வேண்டுமா என்று.
ஆம்..
தீர்ப்பு வழங்குவதாக இருந்தால் ஒரு விடயத்தை தீர விசாரிக்க வேண்டும் என்பது நீதி என்பது பொதுமக்களுக்கு தெரியும்..
ஒருவன் வழக்கினை இடும் போது அவனைப் பார்த்து பொய் வழக்கு இடுவே ஆனால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என தாங்கள் கூறும் போது எனது நெஞ்சம் சில்லிட்டு போனது..
ஒரு வழக்கை விசாரிக்காமலே பொய் வழக்கு என தீர்மானிக்கும் தங்களுடைய மேலான திறமையை நான் எங்கே சென்று வஞ்சுவது..
வைத்திய சாலையில் உள்ள நோயாளர்களை உள்ள தாதியர்களை உள்ள ஊழியர்களை ஒரு தரப்பு விருத்தி கடிதம் கொண்டு வந்து தங்களிடம் தரும் போது அதையும் வேண்டிப் பார்க்கிறீர்கள்..
மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நான் அதற்குரிய கடிதத்தை கொண்டுவந்து நீட்டும் போது அதை எதிர் தரப்பு சட்டத்தரணிகள் சொல்லுகிறார்கள் அவற்றை கதைக்கின்ற அடிப்படை உரிமை கூட குற்றம் சாட்டப்பட்டவருக்கு இல்லை என்று.
அப்படி என்றால் ஐயா..
நாங்கள் வைத்தியம் பார்க்கும்போது..
நோயாளிகளிடம் சொல்ல வேண்டும் நீங்கள் கதைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்று..
எனது மருத்துவம் சொல்லிக் கொள்கிறது..
மீண்டும் சொல்கிறேன் எனது மருத்துவம்..
நோயாளிகளை மாத்திரமே சிகிச்சை அளிக்க வேண்டுமே ஒழிய நோயாளிகளின் ரிப்போர்ட்களை அல்ல என்று..
ஏனோ தெரியவில்லை..
இன்று வரை மனம் சொல்கிறது..
நீதி கிடைக்கும் என்று..
இல்லை அந்த நீதி மறுக்கப்பட்டால் அதற்கு உயரிய உயரிய நீதிமன்றங்களை நாடவேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது..
எனக்கு வந்த லோயரே என்னைப் பற்றி முகப்புத்தகத்தில் எழுதும் போது..
அவரை நான் விலக்கி இருக்கிறேன்..
எனது மருத்துவ தர்மத்தில் ஒரு நோயாளி தனது உடம்பை கொண்டு வந்து எனது கைகளில் எடுக்கும்போது அவனை முட்டு முழுதாக ஏற்றுக் கொள்கிறேன்..
நீதி மருத்துவத்திற்கு மேலானது..
ஆனால் நீதியே குரல்வலையை நசுக்க கூடாது அல்லவா..
எனக்கு நீதிமன்றத்தில் கதைக்கின்ற உரிமை இல்லாதபோது..
எனது நியாயத்தை சொல்ல முடியாத போது..
நான் எங்கே சென்று சொல்லுவேன்..
பொதுமக்கள் இதைக் கேட்கட்டும் வாசிக்கட்டும்..
எனக்குத் தண்டனை தூக்கும்படியாக இருந்தால் கூட ராமநாதன் அர்ச்சுனா சிரித்துக்கொண்டே செல்வான்..
முடிந்தால் எழுதிவிட்டு உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்கள்..
உங்களுக்கு என்ன ஐயா..
யாழ் போதனா வைத்தியசாலை சென்றால் வைத்தியசாலை நிர்வாகி சத்தியமூர்த்தியே வந்து உங்களை உள்ளே அழைத்துச் செல்வர்.
ஆனால்..
இதை வாசிக்கின்ற ஒரு தமிழன் வாயிலில் லைனில் தான் நிற்க வேண்டும்..
அவன் ஒப்பிடியில் இருந்து மருந்து எடுத்து வரும்போது வீட்டில் உலை வைத்திருக்க மாட்டார்கள்..
இதை வாசிக்கின்ற ஒவ்வொருவனும் நிலத்திலே தான் படுக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் செல்லும்போது பஞ்சு மெத்தை தருவார்கள்..
முதலாவது கட்டிலில் விடுவார்கள்..
நீங்கள் இருமு முன்னரே உங்களுக்கு ஆவி பிடிப்பார்கள்..
வயிறு நோகின்றது என மெல்லமாக சொன்னாலே 12 மருத்துவர்கள் உங்களை சுற்றி நிற்பார்கள்.
ஆனால் பாமர தமிழனுக்கு..
அது கொலையே நடந்தால் கூட..
ஒவ்வொரு சிந்துஜாவாக மட்டுமே மாறிக்கொள்ளலாம்..
சிந்துஜாவின் கணவன் கூட இப்போது சிந்துஜாவுடன் சேர்ந்திருக்கிறான்..
அதற்கான நீதி எங்கே?
அந்தக் குழந்தைக்கான அம்மா அப்பா எங்கே?
அதை என்ன நடந்தது என்று பார்க்க சென்ற என்னை வைத்தியரிடம் கேட்டுவிட்டு உள்ளே சென்ற என்னை உங்கள் மீது ஐந்து நாள் சிறைச்சாலைகள் அடைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டது..
ஆனால்..
எனது வைத்திய சாலையில்.
நான் நிர்வகிக்கின்ற வைத்திய சாலையில் உங்களுடைய நண்பன் கிரிக்கெட் கேப்டன் மன்னிக்கவும் வைத்தியர்களுடைய கிரிக்கெட் கேப்டன் உள்ளே வந்து அடித்து விழுத்தி என்னுடைய மொபைல் போனை பார்த்து என்னுடைய காசைப் பறித்து எனக்கு எதிராகவே வழக்கு போட்டு தங்களிடம் வந்த போது..
தாங்கள் ஜெயிலுக்கு அனுப்பவில்லை…
ஏன் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு கூட வரவில்லை..
ஏனெனில் உங்கள் நண்பன் ஆயிற்றே..
அவரை நீங்கள் அரெஸ்ட் பண்ணுமாறு ஒருநாளும் சொல்லப்போவதில்லை..
இதே உங்களுடைய நீதிமன்றத்தில் இன்னொருவர் வந்து உங்களை அடித்து விழித்தியிருந்தால்..
உங்கள் தொலைபேசியைப் பறித்து அதை போலீஸ் நிலையத்தில் நிலத்தில் கிடந்ததாக கொடுத்திருந்தால் தங்களுக்கு எவ்வாறு இருந்திருக்கும்?
அப்போது கூட நீங்கள் நீதிமன்றத்தில் வைத்து என்னை கேட்கிறீர்கள் ஒருவரை படம் எடுக்க செல்லும்போது போனை பார்த்து அடிப்பதில் இன்னொரு பிழை இருக்கின்றது என்று?
நான் தமிழன் என்று சொல்லவே வெட்கி தலைகுனிகிறேன்..
2021 ஆம் ஆண்டு சாவகச்சேரி வைத்திய சாலையை விட்டு நான் வெளியேறும் போது எல்லாரிடமே சொன்னேன் நான் இறந்தால் கூட எனது உடலை ஆணை இரவு தாண்டி இங்கால் கொண்டு வர வேண்டாம் என்று…
ஆனால் இந்த முறை மருத்துவ நிர்வாகியாக மாறிய போது ஒவ்வொரு நண்பனும் அடித்து கேட்டான். மச்சான் சாவத்திரி ஹாஸ்பிடல் மாற்ற முடியாதா?
நீயும் வராவிட்டால் யார் மச்சான் இதை மாற்றுவது என்று?
சொன்னவனை தேடிக் கொண்டிருக்கிறேன்..
கௌரிசன்..
இப்போது சித்தருடன் சேர்ந்து நிற்கிறான்..
வாழ்க்கை..
ஒரு வட்டம்..
இன்னும் 20 வருடம் தான் வாழ்வேன்..
ஆனால்..
அவை சிறைச்சாலையில் என்றால் கூட உண்மையை சொல்லிவிட்டு உள்ளே போனவன் என்ற பெயருடனே வாழுவேனே தவிர கை கால்களில் விழுந்து கெஞ்சி அழுது மானமற்ற தமிழனாக வாழ மாட்டேன்
நான் மேதகு எனப்படுகின்ற ஒரு தெய்வத்தை பார்த்து வளர்ந்தவன்..
நாங்களும் அங்கே வளர்ந்ததாக சொல்லிக் கொள்கிறார்கள்..
நல்ல காலம் மேதாகு உயிருடன் இல்லை.. என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
அவரின் நீதிமன்றத்தில் இவ்வாறு நடந்ததில்லை..
எனது தந்தை அவரின் நீதி கட்டமைப்பில் ஒரு பெரிய பங்கு வகித்தவர்..
ஒரு இளம் ஆசிரியையை முள்ளியவளையில் பாலியல் வன்முறை கொலை செய்ததற்காக நான் நினைக்கிறேன் விசுவா நடுவில் வைத்து மின்கம்பத்தில் இணைக்கப்பட்டு அந்தப் பெரிய போராளி சுடப்பட்டர்..
அப்போது கூட நீங்கள் அங்கே தான் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..
எழுதலாம் எழுதிக் கொண்டே போகலாம்..
என்ன..
நீங்கள் மறுபடியும் சொல்வீர்கள் இவற்றையெல்லாம் வாசித்துக் கொண்டிருப்பதால் எனக்கு வேலை என்று..
வைத்தியர்கள் போட்ட வழக்குக்கு மேலாக வழக்கை போடும்படி உபதேசிக்கும் தாங்கள்..
வைத்தியசாலையில் வந்து அடிக்கும்போது கூட உங்களுடைய கிரிக்கெட் மேட்சின் நண்பனை இன்றுவரை அரெஸ்ட் பண்ணவில்லை..
அது ராஜகாரிய வதகிரிமை இல்லையா ஐயா..
அன்னார் நீதிமன்றத்தில் நீதி ஒன்று..
சாவகச்சேரி நீதிமன்றத்தில் நீதி ஒன்று..
வாழ்க தமிழினம்..
சமூகத்தின் முன்னோடிகளாக வாழ வேண்டியவர்களே சமூகத்தின் குரல்வளையை நெறுத்திக் கொண்டிருக்கிறார்கள்..
எனக்கு இப்போது நம்பிக்கை இருக்கிறது…
நான் என்றாவது ஒருநாள் சிறையில் இருந்து வெளியால் வந்தால்..
அப்போது என்னுடன் தமிழினமே நிற்கும்..
இப்போது கூட நிற்கிறது..
புரியவில்லை என்றால் அயல் வீட்டில் உள்ள குழந்தை இடம் கேட்டுக் கொள்ளுங்கள்..
சில வேளைகளில் உங்களுடைய மனைவியும் உங்களுடைய குழந்தைகளும் என்னுடைய லைவை பார்த்துக் கொண்டிருப்பார்கள்..
அவர்களிடம் கேளுங்கள்..யார் குற்றம் இழைத்தவன்..யார் நிரபராதி..
நீதிக்கான தேடலில் என்னை இழந்தாலும்.
எனது தமிழினத்தை அழிக்க விடமாட்டேன்..
உங்கள் முன்னாலே உங்களுடைய சட்டவாளர்கள் சொல்லிக் கொள்கிறார்கள் வடிவேல் போல் இருக்கிறார் என்று..
ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என நிரூபிக்க முடியாத ஒருவரை ஒரு சட்டவாளர் வந்து அவ்வாறு கதைக்கும் போது உங்களுடைய கனமான நீதிமன்றம் சிரித்துக் கொண்டது…
இவையெல்லாம் வெளியே தெரிய வாய்ப்பில்லை..
நான் இதுவரை இவ்வாறான ஒரு நீதிமன்றத்தை பார்க்கவில்லை..
யாழ் நீதிமன்றத்திற்கு கூட சென்றேன்..
நீதிபதி மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்.
ரெட்ட தெளிவாக சம்பந்தப்பட்ட சட்டவாளரிடம் சொன்னார் நீங்கள் கதைக்க வேண்டாம் என்று..
நீதி சாகவில்லை..
மேல் நீதிமன்ற நீதி அரசர் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவரே தமிழினத்தை அழித்து இதுவரை அரசியல் செய்து கொண்டிருக்கும்போது.
தங்களுக்கு மிகவும் நீண்ட பாதை இருக்கிறது..
தாங்களும் ஒரு அரசியல்வாதியாக வந்தால் எமது இனம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
அரசியல் மேடையில் நானும் நிற்பேன்..
மன விரக்த்தியுடன் எழுதவில்லை..
மனமுடைந்து எழுதுகிறேன்.
எனது கொழும்பில் உள்ள சட்டவாளர் சொல்லி இருக்கிறார், தங்களுக்கும் முறைப்பாட்டாளருக்கும் சமூக தொடர்பு இருப்பதால் தாங்கள் ஏதோ ஒரு செக்ஷனின் படி நீதிபதியாக இருக்க முடியாது என்று..
அந்த செக்ஸன் எல்லாம் எனக்கு தெரியாது ஐயா..
அவரே வந்து சொல்லுவார்..
அல்லது மேலும் மேலும் நீதிமன்றங்களை நாங்கள் நாடுவோம்..
மறுபடியும் சொல்கிறேன்..
சாகத் துணிந்தவனுக்கு தூக்குமடையும் பஞ்சு மெத்தையே.
நீங்கள் தூக்குமடையையே எழுதி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..
ஆனால் உங்களுடைய குடும்பத்திடம் ஒருமுறை ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள்..
உங்களுடைய அழகான மனைவியும் அழகான குழந்தைகளும் நன்றாக வாழ்வார்கள்.
ஆனால் ஏனைய வீதியிலும் பூநகரி வீதியிலும் வாழைப்பழம் வீக்கம் எனது தமிழினம் எப்போது நிமிர்ந்து வாழ்வது?
தாங்கள் என்னை உயிருடன் விடும் பட்சத்தில்..
என்னும் ஒரு 20 வருடங்கள் தமிழனுக்காகவே வாழ்ந்து போவேன்…
முடிந்தால் நான் கூட்டமானவன் என எபரையாவது நிரூபிக்க சொல்லுங்கள்..
தமிழனுக்கு ஆக சாக துணிந்தவன்.
மாறாக வீழ்த்தவே முடியும். எனவே பொருளாதார வீழ்ச்சியை விரும்பாதவர்கள் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, திருக்கோவிலுக்கு அபிவிருத்தியும் கிட்டாது.” என்றார்.
இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் தந்து முகநூலில் பதிவிட்டுள்ளார் ,இந்த பதிவில் வன்னி மைந்தன் ஆகிய என்னையும் சுட்டி காட்டியுள்ளார் ,அதற்கு மிக்க நன்றி அர்ச்சுனா ,என்றும் உங்களோடு நிற்போம் கவலை விடுங்கள் .
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

அர்ச்சுனா உருக்கம் பசியோடு பார்த்தீபன் இருக்கிறான்
பசியோடு பார்த்தீபன் இருக்கிறான் அர்ச்சுனா உருக்கம்
அர்ச்சுனா உருக்கம் பசியோடு பார்த்தீபன் இருக்கிறான் என தனது முகநூல் பதிவில் தியாக தீபம் திலீபன் நினைவில் உருகி பேசியுள்ளார் .
தியாக தீபம் திலீபன் நினைவை பகிர்ந்து அவரது நிழல்படத்தை பதிவிட்டு ,அதிலே பார்த்தீபன் இன்னும் பசியோடு தான் இருக்கிறான் என குறிப்பிட்டுள்ளார் .
ஆழ நெஞ்சத்தில் அகிம்சாவாதியின் அன்பு அர்ச்சுனா மனதில் பட்டு தெறிப்பதை இந்த விடயம் எடுத்து காண்பித்துள்ளது .
இந்தியா இராணுவத்தின் பாசிச வெறிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ,வீர தளபதி திலீபன்நீரும் இன்றி உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை அவர் ஆகுதியாக்கி கொண்டார் .
வரலாறு வரலாற்று நாயகர்களை வாழ்த்திய படியே பயணிக்கிறது .வலிகளோடு தமிழர் நெஞ்சங்களுக்கு நடக்கிறது .
அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்
அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா
வைத்திய அத்தியட்ச்சகர்
ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
திரு சீமான் அவர்கள்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு
இந்தியா
அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கும் எமது தொப்புள்கொடி உலக வாழ்த்தமிழ் மக்களுக்கும் இலங்கையிலிருந்து உங்கள் தம்பி தமிழுள்ள தாயத்தில் இருந்து எமது மக்கள் சார்பாக ஒரு அன்பு கடிதம்…
அண்ணா.
நாங்கள் இறைவனின் கிருபையால் நன்றாக இருக்கிறோம். நீங்களும் எமது புலம்பெயர் ஈழ மைந்தர்களின் கிருபையால் மிகவும் நன்றாக இருக்கின்றீர்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.
எல்லாம் வல்ல எனது இனத் தலைவனின் இறைவனின் பாதத்திற்கும் சிரம் தாழ்த்தி தாயகனவிலே தங்கள் உயிரையும் உடலையும் வித்திட்டு விதியாகிப்போன எனது அக்கா அண்ணா தம்பி தங்கைகளுக்காக இந்த மடலை உங்களின் கவனத்திற்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். .
தமிழனாய் பிறந்ததற்காகவும் தமிழனுக்காய் பிறந்ததுக்காகவும் பெருமையாய் தங்களுக்கு ஒரு கடிதம்.
1983 இல் தொடங்கிய தமிழின வேட்கை கடந்த 40 வருடங்கள ஆகியும் எங்கே செல்கின்றோம் இதனை தேடுகின்றோம் எனத் தெரியாமலே பிறந்ததிலிருந்து இன்றுவரை நாடோடியாய் அலையும் ஒரு இனத்தின் ஆண் மகன் இதயத்தில் இருந்து இடத்தினை பிழிந்து எடுத்து கடைசியாய் கண்ணீருடன் எழுதிக் கொண்டிருக்கும் மடல் இது..
உலகமே திரண்டு 2009ல் எனது தலைவணையும் எனது தனயன் களையும் எனது தமிழினத்தையும் கந்தக காட்டில் புதைத்துக் கொண்ட ஒரு இனத்தின் தந்தையை இழந்த ஒரு குழந்தையின் ஏக்க மடல் இது….
நாடினை இழந்தோம் வீடினை இழந்தோம் தாயினை இழந்தோம்..
தந்தையினை இழந்தோம் சுமக்காய் போராடிய 44,000 உறவினை இதே மண்ணில் விட்டுடலாய் புதைத்தோம்..
கடைசியில் எமது தலைவணையும் இழந்து இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவனின் தேடிக் கொண்டிருக்கிறோம்..
உங்களுக்கும் தமிழக தொப்புள் கொடி உறவுகளுக்கும் எமது கூக்குரல் கேட்காது..
ஏனெனில் நாம் தமிழர் ஆயிற்றே..
எனது இனம் அணுவணுமாய் பிளக்கப்பட்டு ஒரு இனப்படுகொலையை அரங்கேற்றிய பேரினம் உங்களை ஆதரவாக பற்றிக் கொண்டிருப்பதை அறிந்தும் உங்களை நம்பிய எனது புலம்பெயர் இரத்தங்கள் உங்களுக்கு பணம் சேர்த்து அனுப்புவதை தெரிந்தும் தெரியாமல் இங்கும் ஒரு பானை
சோற்றிற்கும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றோம்…
ஏனெனில் நாம் தமிழராயிற்றே..
மூன்று தசாப்தங்களாக பேரினம் எம்மை அணு அணுவாய் சிதைத்தது..
இருந்தும் உயிர்ப்புடன் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் ஏனெனில் நாமும் தமிழர் ஆயிற்றே…
என் தனையன்..
எம் இன தலைவன் மேதகு..
மற்றும் மறவன் துணை சென்ற என் அண்ணாவும் அக்காவும் என் கொடியும் என் தேசியக் கொள்கையும் உனக்கு..
உன் தமிழ்நாட்டு அரசியலுக்கு பேசுபொருள் தான்..
நீ உண்ட ஆமை கறியும் தலைவனை பாசறையும் உனக்கு அரசியல் ஆணிகள்..
ஏனெனில் நீயும் தமிழன் ஆயிற்றே..
அண்ணனின் காலத்தில்..
ஈழத்தில் பிறந்த இந்த மருத்துவனின் குரல் உனக்கு கேட்கின்றதோ இல்லையோ..
என் தமிழ் இனத்திற்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது..
என் தமையன் உன்னடி வந்தது..
என் உறவுகள் உன் பால் சிரம் தாழ்த்தியது..
என் தலைவனில் மூச்சுக்காற்றை நீ சுவாசித்து இருக்கிறாய் என்பதற்காக மட்டுமே அன்றி..
தமிழினத்தையும் தலைவனையும் மண் கொண்ட வித்துடல்களையும் மரணித்த வேங்கைகளையும் உனக்கு அடைமானம் வைக்க அல்ல..
உன் அரசியலுக்காய் பாவிக்க அல்ல..
தமிழில் எழுதி இருக்கிறேன்..
முடிந்தால் வாசித்துக் கொள்..
என்னிடம் என் தேசம் என் தேசியத் தலைவன் என் மாவீரர் வரலாறுகளின் உலகத் தமிழர் இனத்திற்குரியது…
என் கொடி அது என் தலைவனுடையது..
என் உயிரிலும் மேலானது..
அதை உன் அரசியலில் இருந்து மீண்டும் எனது மூச்சுக்காற்றுகளுக்கு மீட்கும் ஓர் நன்னாளை பார்த்து ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழினதும் நெறிக்கப்பட்ட குரல்வலைகளில் இருந்து அன்புடன் கேட்கிறேன்..
என் இனத்தை எங்களை நாங்களாகவே ஆளவும் வாழவும் இடம் கொடு..
இப்படிக்கு அன்புடன்..
இராமநாதன் அர்ச்சுனா
தலைவனின் பாசறையில் இருந்து.
இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் சீமான் அண்ணா அவர்களுக்கு எழுதிய கடிதத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார் .
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

அர்ச்சுனா காவல்துறை மோதல்
அர்ச்சுனா காவல்துறை மோதல்
அர்ச்சுனா காவல்துறை மோதல்.வீதி சோதனை காவல்துறையினர் மறித்து அர்ச்சுனாவுக்கு செய்த விடயம் அம்பலமாகியுள்ளது .
தகாத வார்த்தையால் போலீசார் அர்ச்சுனா இராமநாதன் அவர்களை இலங்கை காவல்துறை திட்டிய விடயங்கள் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்டுள்ளார் .
அந்த விடயம் தொடர்பாக இந்த காணொளியில் வெளியிட்டுள்ளார் .
சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்
சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம் ,
சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம் ,தமிழர் கட்சியின் சீமான் செயல்பாடுகள் தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படையாக பலவிடயங்களை வெளியிட்டுள்ளார் .
அதன் முக்கிய பகுதிகள் இந்த காணொளியில் .உள்ளது
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

சீமான் அர்ச்சுனா மோதல்
சீமான் அர்ச்சுனா மோதல்
சீமான் அர்ச்சுனா மோதல் ,போக்கு தீவிரமடைந்து வந்த நிலையில் அவை தற்போது முற்று பெற்றுள்ளதாக கடந்த தினம் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு பேசுபொழுது சீமானுடன் தான் பேசியதாகவும் அதன் பின்னர் தனது நிலைப்பாடு எப்படி உள்ளது என்கின்ற விடயத்தை தெளிவாக அர்ச்சுனா இராமநாதன் விளக்கியுள்ளார் .
சீமானுடன் நட்புறவாக அரசியலை எடுத்து செல்ல உள்ளதாகவும் ,ஆனால் அவர் பயன் படுத்தும் புலிகளது சிந்தனைகள் ,எவற்றையுய்ம் தான் பயன்படுத்த மாட்டேன் என தெரிவித்துள்ளார் .
காலம் கணிக்கின்ற பொழுது அதனை அவ்விடத்தில் சிறந்த முறையில் செய்து கொள்வேன் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .
இதனை அடுத்து தற்பொழுது சீமான் அர்ச்சுனா இடையில் நிலவிய முறுகல் மோதல் நிலை தவிர்க்க பட்டு மென் போக்குடன் கூடிய அரசியல் பயணம் பயணிப்பதாக அறிய முடிகிறது .
எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா
எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா
எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா ,கடவுளை நம்பவில்லை ஆனால்
எவன் ஒருவன் தமிழின வேட்கையில் தன்னை ஆகுதியாகி கொண்டானோ அவனின் ஆன்மா சாந்தி அடையாமல் எம்மை சுற்றி கொண்டிருக்கின்றது என்பதை இன்றுடன் நம்புகிறேன்.
முதலில் வழக்கு கூறப்பட்டு பின்பு திருப்பி எடுக்கப்படும் என சொன்னபோது ஒரு மணித்தியால இடைவெளி இருந்தது..
அந்த ஒரு மணித்தியால இடைவெளியில் தான் அந்த கடிதம் என் கைக்கு வந்து சேர்ந்தது…
எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது என்னுடன் தொலைபேசியில் கதைத்தவர்கள் அவற்றை எல்லாம் அனுப்பி வைப்பார்கள் என்று..
ஐயா..
உங்கள் ஊர் தெரியாது பெயர் தெரியாது..
உங்கள் கால்களுக்கு என் கைகளால் கரம் கூப்பி தொழுகின்றேன்..
நீங்கள் அந்தக் கடிதத்தை இன்று எனக்கு அனுப்பி வைத்திருக்காவிடில்..
இன்றும் குற்றவாளிகள் கூட்டில் குற்றவாளியாகவே நின்றிருப்பேன்..
தாங்கள் தொலைபேசியில் அழைத்து கதைத்த போது நான் அவற்றை பெரிது படுத்தவில்லை..
ஏனெனில் இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த பொது விடயங்கள்..
ஆதலால் நான் நடவடிக்கை எடுத்தேன் ஆனால் ஆதாரங்களை சேர்க்கத் தோணவில்லை..
அவர்களே தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டு இப்போது கட்டாயம் சமாதானத்திற்கு வருவார்கள்..
இறந்து போன அந்த உடலங்கள் குளிர அறைகளில் அழுது கொண்டிருந்தது கடவுளுக்கு கேட்டிருக்கிறது..
இல்லை இல்லை..
எங்கள் கடவுளர்களுக்கு கேட்டிருக்கிறது..
மாவீரர்கள் கடவுள் அல்ல..
அவர்கள் இந்த மண்ணுக்கு கொடுத்தது உயிரை அல்ல..
ஏதோ ஒரு வகையில் ஒரு மாவீரனின் பிள்ளை என்ற விதத்தில் நானும் அவர்களுக்கான நீதியின் தேடலில் உங்களுடன் இணைந்து இருக்கிறேன்..
என்றோ ஒரு நாள்..
எமக்காக தங்களது உயிர்களை எவரவர் ஆகுதியாக்கி கொண்டார்களோ..
அவர்களின் ஆன்மாக்களுக்கு நான் பதில் சொல்லியே ஆகுவேன்..
அதுவரை..தமிழால் ஒன்றிணைவோம்..இவ்வாறு அர்ச்சுனா தனது முகநூலில் பதிவிட்டுளளார் .
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி
முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி
முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி ,முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய முகவரி
நீங்கள் தரும் ஒவ்வொரு தகவல்களும் நீதிக்கான தேடலுக்கு உதவி செய்யும்.
கீழே உள்ள முகவரிக்கு உங்கள் ஆதங்கம் ,கருத்துக்கள் என்பனவற்றை அனுப்பி வைக்கும் படி வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
Dr Ramanathan Archchuna
28/1 Buthgamuwa Road
Kalapaluwewa
Rajagiriya
T.p
0094 772249924
0094 775456126
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

அர்ச்சுனாவுக்கு இப்படியும் கோபம் வருமா
அர்ச்சுனாவுக்கு இப்படியும் கோபம் வருமா
அர்ச்சுனாவுக்கு இப்படியும் கோபம் வருமா,வைத்திய கலாநிதி மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது உடன்பிறந்த சகோதரன் ரகுராம் இராமநாதன் தொடர்பாக பேசிய விடயம் கோபத்தை ஏற்படுத்தியது ,வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் நடந்த விடயம் .
மக்கள் ஆதரவு பெருகியதால் எதிரிகள் கலக்கம் .காணொளியில் முழுமையான விடயங்கள் பார்க்கவும் .
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அவனை நாங்கள் பின் தொடர்வோம்
எதுகை மோனைக்கு ஏன் சீற்றம்
ஏனோ உனக்கு தடு மாற்றம்
கத்தும் கடலே அமைதி கொள்
கரு வானமே இவரை பார்த்து கொள்
எத் துயர் நீ எறிந்தாலும்
எங்கள் வீரனை நாம் தொடர்வோம்
குரைக்கும் நாய்கள் வாசலிலே
கூவியே இன்று என் கண்டார்
அன்பு செலுத்தும் மக்கள் முன்
அகிலத்தில் எவர் முன் வருவார்
கொத்தி எறியும் கோடாரி
கொண்டை கழன்று விழுந்துவிடும்
அடுப்பில் எரியும் அவ்வேளை
அட டா சாம்பலாய் மாறிவிடும்
விட்டு களத்தை ஓடி விடு – நாம்
விடுதலை பெற்றிட விட்டு விடு
பற்றி எரியும் பார் முன்னால்
பகைவா இன்றே ஓடி விடு ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-09-2024
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்
அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்
அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன் ,நமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான எந்த ஒரு மேலதிக கருத்துக்களும் நண்பன் மயூரன் சிவப்பிரகாசம் அவர்களுடன் இணைந்தே வெளியிடப்படும்.
எனது அரசியல் சம்பந்தமான பேச்சாளராக மயூரன் சிவப்பிரகாசம் தொடர்ந்து பயணிப்பான்.
எனது நண்பனுக்கு அவனது அரசியல் பயணத்திற்கு உதவ விரும்பும் சாவகச்சேரியின் அன்பு பெருமக்கள் அவனுடன் நீங்கள் தொடர்பு கொண்டு மேலதிகமான உங்கள் ஆதரவினை தெரிவிக்கலாம்.
நன்றி
இப்படிக்கு வைத்திய கலாநிதி
இராமநாதன் அர்ஜுனா.
என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்
அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்
அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம் ,ஐயோ அண்ணா..
நான் கண்விழித்துப் பார்த்தபோது ஒருவர் என்னை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் சோட்சுடன் படுத்து இருந்தேன்..
இருவர் தலைமாட்டிலும் கதவுக்கு வெளியாலும் நின்று இருந்தார்கள்..
நான் நினைத்தேன் இவர்கள் திட்டமிட்ட ரீதியில் என்னை மீண்டும் அரெஸ்ட் பண்ணத்தான் வந்திருக்கிறார்கள் என்று..
நித்திரையில் கண்ணால் முடித்த போது நான் வேறு என்னத்தை கற்பனை பண்ண முடியும்..
ஆதலால் தான் நீங்கள் எவ்வாறு எனது குவாட்டர்ஸின் கதவை உடைத்தீர்கள் என்று கேட்டேன்..
அது சட்டப்படி முரணானது..
ஆனால் எனக்கு நான் நித்திரையாக போனவுடன் இவ்வளவு விடயம் நடந்ததை இப்போதுதான் ஒன்றாக யூடியூபில் பார்த்தபடி போய்க்கொண்டிருக்கிறேன்..
காலை 8 மணிக்கு போலீஸ் தலைமை அதிகாரிக்கு கால் பண்ணி மன்னிப்பும் கோரி எவ்வாறு இது நடந்தது யார் இதை உடைக்க சொன்னார்கள் எனக்கு எதுவுமே தெரியாது என்று அவரிடம் சொன்னபோது நீங்கள் வந்து ஒரு ஸ்டேட்மெண்ட் ஒன்றை போலீசில் கொடுத்து விடுங்கள் உங்களை பாதுகாக்க தான் கதவை உடைத்தோம் என கேட்டார்கள்..
ஆம் என்று சொல்லி இருக்கிறேன்..
இது ராமநாதன் அர்ஜுனா அண்ணா தயவுசெய்து யோசித்து விட்டு கருத்தை பகிருங்கள்..
தம்பி ராஜா அண்ணா இன்று வரை ஒன்றுக்கொன்று முரணாக எனக்கு சார்பாகவும் எனக்கு எதிராகவும் கருத்தை வெளிவிட்டு கொண்டிருப்பது எனக்கு நன்றாக தெரியும்…
மன்னார் கோட்சில் கூட அவர் அங்கு நின்று பிரச்சனை பட்ட போது நீதிமன்ற அவமதிப்பு என்று மறுபடியும் நான் உள்ளே போய் இருப்பேன்..
அவர் வயது முதிர்ந்தவர் உணர்ச்சிவசப்பட்டு கார்த்தி குளரி ஒன்றையும் செய்யக்கூடாது..
ஏற்கனவே எட்டு வழக்குகளை வைத்துக் கொண்டிருக்கிறேன்..
இனி மறுபடியும் வைத்தியசாலை குவாட்டர்ஸில் நான் உள்ளே இருந்து திட்டமிட்ட ரீதியில் இவற்றையெல்லாம் செய்தேன் என்று யூட்யூபில் எழுதிக் கொண்டிருப்பார்கள்..
அதனால் தான் எனக்கு கோபம் வந்தது..
எனக்கு இதுவரை உள்ள வழக்குகள் போதும்.
வைத்திய சாலையில் உள்ளே லைப் போடக்கூடாது என்று அவருக்குத் தெரியாதா..
நான் சூசைட் பண்ண போகிறேன் என்று தனக்கெல்லாம் சொல்லி இருக்கிறேன் என்று முட்டாள்தனமாக சொல்லி இருக்கிறார்..
ஒருவரில் உதவி செய்கிறோம் என்று உரிமை எடுத்து அவரை தலைகீழாக மாற்றுவது முட்டாள்தனம்..
எனக்கும் தம்பி ராஜா எனப்படுகின்ற சம்பந்தப்பட்ட நபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர் எனது ஆதரவாளராக நான் எந்தக் கூட்டத்திலோ எந்த யூடியூப்பிலும் எந்த நேர்காணல் கருத்து தெரிவிக்கவில்லை..
இந்த நிமிடத்தில் நான் யாரையாவது எனது ஆதரவாளர் என்று சொல்லும்போது அவர்கள் செய்கின்ற முட்டாள்தனமான வேலைகளுக்கு எல்லாம் நான் தான் நீதிமன்றத்தில் பதில் சொல்லிக் கொள்ள வேண்டி இருக்கும்..
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.
என் மீது வைத்திருந்த அன்பு என்றே சொல்லிக் கொள்வோம்..
அதை எப்போது கண்டிக்காவிடில் நாளை ஒரு போலீசாருக்கு அடித்து விட்டு சொல்லுவார்கள் அர்ச்சுனாவில் உள்ள அன்பால் அடித்தோம் என்று..
வன்முறையையும் தனிப்பட்ட விளம்பரங்களையும் என்னால் அனுமதிக்க முடியாது அவ்வாறாயின் அரசியல் செய்ய முடியாது அது சாணக்கியன் சுமந்திரன் அரசியல்..
இது இராமநாதன் அர்ச்சுனாவின் அரசியல்..
யாரும் என்னை தெரியும் என்னுடன் பழக்கம் இவருக்கு காசு போடுங்கள் என்று இன்றுவரை காசு சேர்க்கவில்லை..
யாரும் நான் இவரின் நண்பன் என்று சொல்லி இன்றுவரை மார் தட்டிக் கொள்ளவில்லை..
அவரவர் தகுதிக்கேற்ப அவரவர் என் மீது கொண்ட பாசத்திற்கு ஏற்ப நியாயமானதாக என்ன உதவி கேட்டாலும் செய்யலாம்..
அர்ச்சுனாவை தெரியும் என்பதற்காக வித்தியா படுகொலை போல் போலீசாருடன் ஒருபோதும் சொல்லப்போவதில்லை அவரை விட்டு விடுங்கள் என்று..
என்னை பின்தொடர்புலுக்கு கனிவான வேண்டுகோள் தயவுசெய்து தங்களுடைய சுயலாபத்திற்காக பின் தொடர வேண்டாம்..
உங்களுக்கு தமிழினத்தின் பால் அன்பு இருக்குமாயின் நீங்கள் என்னுடன் நிக்கலாம் நான் உங்களுடன் உயிரைத் தந்து நிற்பேன்..
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்
அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்
அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம், கடந்த தினம் இரவு அர்ச்சுனா இராமநாதனனுக்கு நடந்தது என்ன ..?
மக்கள் பதட்டம் அடைந்தது ஏன் ? எதற்காக மக்கள் காவல்துறைக்கு அழைத்து அவர் தனது அறைக்குள் உள்ளாரா என பார்க்க வைத்தார் என்ற விடயம் பேசு பொருளாக்க பட்டுள்ளது .
எனவே அது தொடர்பான கட்சிகளுடன் இதோ கீழ் உள்ள காணொளியை மக்களே பாருங்கள் , வன்னி மைந்தன் டிக் டாக் லைவ் இல் நடந்தது என்ன .முழுமையன விடயம் இதோ
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை
அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை
அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை ,மருத்துவர் அர்ச்சுனாவுக்கு என்ன நடந்தது அறை திறக்க படவில்லை .
கைது செய்யப்பட்டாரா அல்லது அவர் ஏதும் செய்து கொண்டாரா என்பது தொடர்பாக தெரியவில்லை .
மக்கள் தற்போது பெரும் ; பதட்டத்தில் உறைந்து கொண்டுள்ளனர்
மனம் உடைந்த அர்ச்சுனா
மனம் உடைந்த அர்ச்சுனா
மனம் உடைந்த அர்ச்சுனா ,எனக்கேன் வம்பு..
இது சாதாரண தமிழன்…
வம்புகள் தானே பார்த்துக் கொள்ளலாம்..
இது இராமநாதன் அர்ச்சுனா..
இதுவரை கிடைத்த நற்பெயருடன் லண்டன் வா கனடா வா பிரான்ஸ் வா என்கிறது உறவு..
இல்லை இங்கேயே செத்து விடுகிறேன் என சொல்கிறது அப்பாவின் ஆன்மா..
மனமுடைந்து கேட்கிறேன்..சோறு தானே உண்கிறீர்கள்..
நான் இவ்வாறே விட்டுவிட்டு ஓடிப்போகிறேன் என்று சொல்லிக் கொள்வோம்..
இனியும் உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை உண்டா?
வீடு பிளந்து போய் இருக்கிறது..
சுமந்திரன் என்ன செய்கிறார்?
சாணக்கிய பரமாத்மா எங்கே?
அங்கஜன் ராமநாதன் எங்கே?
சித்தார்த்தனுக்கு whatsappபில் பிடிஎஃப் ஓபன் பண்ண தெரியாதா?
மனதுக்குள் அழுகிறேன்..இவ்வாறு முகநூலில் அர்ச்சுனா மனம் உடைந்து எழுதியுள்ளார் .
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

அர்ச்சுனா
அர்ச்சுனா
நான் உன் உறவு நம்படா
நான் கூட வருவேன் எண்ணடா
தோல்வி கண்டு தளராதே
தோற்று நீ போகாதே
வழி வரும் தடை கண்டு வாடாதே
வலி எல்லாம் வெற்றி தான் கலங்காதே
எதிரே பகை வரின் தளராதே
என்றும் நாம் இருப்போம் சோராதே ..
திடல் இருக்கு விளையாடு
திட்டம் இருக்கு அடி போடு
வீர மகன் நீ தானே
விளையாடு விவேகம் நாட்டு
எவன் வருவான் எழு பார்ப்போம்
எழுவாய் பயனிலை முன் காப்போம்
தடை போட்டார் தடை உடை
தரணியில் உன் புகழ் விதை..
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்
அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்
அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில் ,அன்பு தம்பி வன்னி மைந்தன் மற்றும் தம்பி ரகுராம் அவரகட்கு.
உங்கள் அர்ச்சுனா பற்றிய உரையாடல் கேட்டேன்! தமிழ் அரசியல் ஊழல் வாதிகள் அவர்களுக்கு உதவிடும் சிவில் சேவை அமைப்புக்கள், இதில் மதத்தலைவர்களும் அடங்கும். இந்த நிலமைகளை நிதானமாக ,அவதானமாக கவனித்த தம்பி தேசிய தலைவர் அவர்கள் கூறிய இறுதி வார்த்தைகளில் இதுவும் ஒன்று.
எங்கள் எதிர்கால அரசியலை எமது இளைஞர்களின் கையில் ஒப்படைக்கின்றேன் என்பதுதான்?.
ஆகவே இப்போது நடப்பது அதுதான். அதை செயல்படுத்த எங்களுக்கு ஒரு இளைஞன் கிடைக்கமாட்டானா என்று கடந்த 15 வருடமாக காத்திருந்த எமக்கு கிடைத்த விடி வெள்ளி வைத்தியர் அரச்சுனா.
ஒவ்வொரு தன்மானமுள்ள தாயகத்தில் உள்ள தமிழனும்,புலம்பெயர் உறவுகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எமது பேரவா! தமிழர் ஒற்றுமை பேணப்படவேண்டும் என்றால் பொது வேட்பாளருக்கு,அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ அவர்களுக்கு வாக்களிப்போம்.
ஆனால் அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் கல்விமான்களான இளைஞர்களை தேர்தலில் நிறுத்துவோம்.
எங்கள் சிந்தனை என்ன என்றால் வடக்கு, கிழக்கில் இப்போதுள்ள மருத்துவ மாபியாக்களை,இவர்களுக்கு துணையாய் இருக்கும் ஊழல் அரசியல்வாதிகளை,அரசியல்வாதிகளின் குடையின் கீழ் இயங்கும் சிவில் அமைப்பினரை, குருமாரை துடைத்தெடுத்து கள்ளங் கபடமற்ற ,வெளிப்படைத்தன்மையாகப்பேசும் டாக்டர்.
அர்ச்சனாவின் தலமையின் கீழ் நிரந்தரமான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது பேரவா.
2009 இதன் பின் சலித்துப்போயிருந்த எமக்கு இன்று அர்ச்சுனா ஒரு நம்பிக்கை விடி வெள்ளி.
ஆகவே, உங்களைப் போன்றவர்கள் அர்ச்சுனாவின் சிந்தனைகளை உள்வாங்கி அவருக்கு எதிராக செயல்படும் மாபியாக்களுக்கு துணை போகாமல் தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எமது பேரவா.
ஆகவே படித்த பண்புள்ள,மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடிய பட்டதாரிகளை பாராளுமன்றம் அனுப்புவோம்.
அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்: . எனது மனைவி வீட்டில் இருந்து 5வது வீடு அர்ச்சுனாவினுடைய அப்பா வீடு. இவர்கள் பெரிய விழானை பூர்வீகமாக கொண்டவர்கள்.
அர்ச்சுனாவினுடைய சித்தப்பா என்னுடன் இளவாலை புனித கென்றி அரசர் கல்லூரியில் படித்தவர்.அர்ச்சுனா இப்போது வலம் வரும் தட்டுவாணிகளைப்போல் அல்ல.
யாழ்ப்பாணம் ராணி தியேட்டர் ,ஶ்ரீதர் தியேட்டர்,ஹரன் தியேட்டர். உரிமையாளர் திரு. இரத்தின சபாபதியின் பேரன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வடக்கிலும், கிழக்கிலும் 146 பேரூந்துகளை வைத்து பஸ் கம்பனி நடத்திய நாகலிங்கத்தின் பேரனாவார்.
யாழ். ஸ்ரான்லி வீதியில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் மகேந்திரா அன் கம்பனி திரு. நித்தியானந்தத்தின் மருமகனாவார்.இவர் உறவினர்கள் அகதிகளாக பிரித்தானியா சென்றவர்கள் அல்ல.1960 முன்பதாகவே அங்கு குடியேறியவர்கள்.
அர்ச்சுனா வாய்திறந்தால் கோடியாக கொட்டி கொடுப்பதற்கு உறவினர்கள் தயாராக இருக்கின்றார்கள்.ஆனால் அவரது நேர்மை, பணிவு,ஒளிவு மறைவு இன்மை, கல்வித்தகமை,தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பாசம் இதனால் அவர் எதைக்குறித்தும் அலட்டிக்கொள்ளவில்லை.
ஆம் அன்பான உறவுகளே! எம் சமூக நீதிக்காக அர்ச்சனா வழியில் போராடுவோம்.”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்பதை மன்னாரில் கண்ணால் கண்டோம்.கலந்து கொண்ட அனைத்து உள்ளங்கட்கும் நன்றி!.
மருத்துவ பராமரிப்பு இல்லாமல் எம்மை விட்டு பிரிந்த எம் அன்பு மகள் சிந்தூஜா,அவர் கணவர் மரியராஜிற்காக நாம் இறைவனிடம் வேண்டுவோம்.
இதை எல்லாவற்றையும் தன் இதயத்தில் சுமந்து வலிதாங்கிய எம் அன்பு மகன் டாக்டர். அர்ச்சுனாவின் நெஞ்சுரத்திற்கு நன்றி கூறுகின்றேன்.
டேவிட் அந்தனி( பிரான்ஸ்சிலிருந்து) என்ற வாசகர் அர்ச்சுனா உடன்பிறந்த அண்ணா ரகுராம் பேச்சு கேட்டு வாசகர் ஒருவர் எழுதிய மடல் இது .
நன்றி டேவிட் அண்ணா .
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு
அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு
அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு, வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் மற்றும் பொது வேட்பாளர் பா ,அரியேந்திரன் ஆகியோர் எமது டிக் டாக் நேரலையில் கடந்த தினம் இரவு சந்தித்து பேசினர் .
இதன் பொழுது எதிர்கால நடவடிக்கை ,மற்றும் அர்ச்சுனா ஆதரவு தொடர்பாக பேச பட்டது .
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்விதம் தாங்கள் பணியாற்ற போகிறோம் என்பது தொடர்பாக பொது கட்டமைப்பு அதனை வழிகாட்டும் எனவும் அதன் அடிப்படையில் எமது பரப்புரைகள் ,மக்கள் சநதிப்புக்கள் நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது .
முதன் முதலாக பொது வேட்பாளர் பா, அரியேந்திரன் மற்றும் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் ,பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஞானமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
முதன் முதலாக மக்கள் நேரலையில் இவர்கள் சநதிப்பு இடம்பெற்றுள்ளது கண்டு மக்கள் பெரும் மகிழ்வடைந்தனர் .
வன்னி மைந்தன் அழைப்பை ஏற்று கொண்டு வன்னி மைந்தன் tiktok நேரலையில் கலந்து கொண்டு சிறப்பித்த உங்களுக்கு, எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
இவ்வேளை இவர்களை இணைய பேருதவி புரிந்த ஏற்பாட்டு குழுவிற்கும் இவ்வேளை எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா
அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா
அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா ,கஜேந்திரன் பொது வேட்பாளரை அசிங்கப்படுத்துகிறார் அர்ச்சுனா ,எமது இலங்கையின் வரலாற்றை 2024 ஆம் ஆண்டு தேர்தல் புரட்டிப்போட போகிறது.
தமிழரின் ஆதரவு இல்லாமல் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் தனி சிங்கள வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க வெல்லப் போவது நிச்சயம்.
அனுரா சிறைபிடிக்கப்படுவார் கொல்லப்படுவர் என்பது முட்டாள்தனமான எதிர்கூறல் அல்ல.
இந்த வேளையிலே தமிழர் நாம் பேரின வாத கட்சிகளுக்கு அடிபணிந்து போகாமல் வாக்கு பலத்தை ஒற்றுமையை எப்போது பொது வேட்பாளருக்காக காட்டுகிறோமோ அப்போதுதான் சர்வதேச தலையீடின் போது தமிழருக்கான நியாயம் கிடைக்கும்.
இதைப் புரிந்து கொள்ளாமல் தயவு செய்து எந்த ஒரு சிங்கள ஜனாதிபதிக்கும் விலை போக வேண்டாம்.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது அரியனேந்திரன் அவர்கள் காசுக்கு விலை போய் சஜித்துடன் நிக்க மாட்டார் என்று.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தனது வாய் மூலம் சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பாராக இருந்தால் தமிழனாக அடையாளப்படுத்தி அவரை நாங்கள் வைத்திருக்கும் போது விலை போவாராக இருந்தால் எந்த தமிழனும் செல்லுபடியாக கூடிய வாக்குகளை இடுவதில் அர்த்தமில்லை.
அரியனேந்திரன் அவர்களை தெரிவது செய்தவர்களில் எனக்கு முற்றிலும் நம்பிக்கை இருக்கிறது.
குதிரை கஜேந்திரன் இப்போது பொது வேட்பாளரை அசிங்கப்படுத்த அங்கேயும் இங்கேயும் ஓடுகிறது.
பொது வேட்பாளருடன் நிற்பவர்கள் குதிரை கஜேந்திரனை அவதானித்து வைத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் எதிர்கூறல் பிழையாக இருக்கும் என்றால் தங்களின் மதிப்பிற்குரிய கருத்தினை கீழே பதிவிடலாம்.
கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு.
தயவுசெய்து பகிருங்கள். என அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா
விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா
விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா ,வைத்தியர் ஷாஃபியும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவும்.
எவ்வாறு வைத்தியர் ஷாப்பியை சுகாதார அமைச்சு மூன்று வருடங்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பி மீண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மன்னிப்பு கோரி சேவையில் இணைத்துக் கொண்டதோ..
எவ்வாறு சாஃவி அவர்களின் உன்னதமான மருத்துவ சேவையை சுகாதார அமைச்சு கேள்விக்குறியாக்கியதோ..
அவ்வாறே..
சுகாதார அமைச்சு இன்றோ நாளையோ எனக்கு கட்டாய விடுமுறை அளிக்க இருப்பதாக அறிகிறேன்..
அப்படியாயின் அந்த நாளிலிருந்து யாழ்ப்பாணத்தில் இலவச மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கப்படும்..
யாராவது பிரைவேட் வைத்திருப்பவர்கள் விரும்பினால் தொடர்பு கொள்ளவும்..
நான் எந்த கட்டணமும் இன்றி நோயாளர்களை பார்வையிடுவேன்..
உங்களுடைய கட்டணங்களையும் மருந்து செலவுகளையும் அறவிட்டு கொள்ளுங்கள்..
அசாத் அவர்களின் தொலைபேசி உரையாடலை நான் வெளியிட்ட பின்பும் மன்னார் நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் அல்லது குற்றம் இழைத்தவன்
என்று நிரூபிக்கப்படாத விடத்தும் சுகாதார அமைச்சு என்னை குற்றம் செய்தவர் என கட்டாய விடுமுறை அளிக்க இருப்பதாக அறிகின்றேன்..
நல்ல விடயம்..
சுகாதார அமைச்சுக்கு..
அமைச்சின் செயலாளருக்கும்..
நாட்டின் மாண்புமிகு மிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும்..
என்னை கொண்டு வருவேன் என்று ஏமாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்த்த அவர்களுக்கும்.
சும்மா ஒரு..
எப்படி வசதி?
இப்படிக்கு
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா…இவ்வாறு முகநூலில் பதிவு ஒன்றை அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்டுள்ளார் .



































