Tag: மனம்
மனம் உடைந்த அர்ச்சுனா
மனம் உடைந்த அர்ச்சுனா
மனம் உடைந்த அர்ச்சுனா ,எனக்கேன் வம்பு..
இது சாதாரண தமிழன்…
வம்புகள் தானே பார்த்துக் கொள்ளலாம்..
இது இராமநாதன் அர்ச்சுனா..
இதுவரை கிடைத்த நற்பெயருடன் லண்டன் வா கனடா வா பிரான்ஸ் வா என்கிறது உறவு..
இல்லை இங்கேயே செத்து விடுகிறேன் என சொல்கிறது அப்பாவின் ஆன்மா..
மனமுடைந்து கேட்கிறேன்..சோறு தானே உண்கிறீர்கள்..
நான் இவ்வாறே விட்டுவிட்டு ஓடிப்போகிறேன் என்று சொல்லிக் கொள்வோம்..
இனியும் உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை உண்டா?
வீடு பிளந்து போய் இருக்கிறது..
சுமந்திரன் என்ன செய்கிறார்?
சாணக்கிய பரமாத்மா எங்கே?
அங்கஜன் ராமநாதன் எங்கே?
சித்தார்த்தனுக்கு whatsappபில் பிடிஎஃப் ஓபன் பண்ண தெரியாதா?
மனதுக்குள் அழுகிறேன்..இவ்வாறு முகநூலில் அர்ச்சுனா மனம் உடைந்து எழுதியுள்ளார் .
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
சிறகை ஒடித்தேன்
சிறையில் அடைத்தாய்
ஏது செய்தேன்
என்று என்னை இழிந்தாய்
வலிகள் தாங்கி வாடி துடித்தேன்
விழியின் நீரில் உள்ளே குளித்தேன்
உணவு இன்றி ஒருநாள் தவித்தேன்
உறவை எண்ணி வெந்து தணிந்தேன்
உந்தன் திட்டம் இங்கு வென்றது
உள்ளம் இரண்டாய் இன்று ஆனது
காதல் ஒன்று முடிவு கண்டது
காலம் ஆறா காயம் தந்தது
நாளை சரிதம் வாழ்வு எழுதும் -உந்தன்
நக்கல் எல்லாம் இங்கே கிழியும்
உன்னை போல உன்னை வதைக்க
உள்ளம் என்னால் இன்று முடியும்
பழிகள் வாங்கும் நிலையில் இந்த
பாவி மனம் முனையவில்லை
செய்த வினையின் செயல்கள் பெறுவீர்
செவந்து விழிகள் நீரும் தவிப்பீர்
வாழ்வில் வசந்தம் இன்று இருண்டது
வழியை மாற்றும் நிகழ்வு நடந்தது
ஏதும் செய்தும் இன்று தோற்றாய்
எரியும் தணலில் ஒளியை காண்பாய் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 18-04-2022
எப்படி சொல்வேன்
எப்படி சொல்வேன்
எழுதாத தாள் மேலே – உனை
எழுத வைத்த பேரழகே
தொலையாமல் இருக்குமா – மனம்
தொலைத்து விட்டேன் உன் மேலே
உடையாத பாறையாய்
உச்சி மலை இருந்தென்னை
கன்ன குழி சிரிப்பழகில்
கடைந்து விட்டாய் நீ என்னை
இடை பிடிக்கும் உன் விரலின்
இடையிலே என் விழிகள்
ஊடுருவி பார்க்குதடி
உடல் பரவசம் ஆகுதடி
வேர்க்காத உன் உதட்டில்
வேலை ஒன்று செய்திடவா ..?
சந்தனத்து உடல் அழகை
சாயும் காலம் மென்றிடவா ..?
இல்லாத மார்புக்கு
இடையில் என்ன சாளரமோ ..?
உடையாத பூவுக்குள்
உள்ளே என்ன எந்திரமோ ..?
எப்படி சொல்வேன்
மார்பு தடவும் கூந்தலின்
மல்லிகை வாசத்தை
முகர்ந்து பார்க்க துடிக்கிறதோ
முன்னுள்ள நுரையீரல் …?
வாலிபத்தை நோகடித்து
வாசல் வந்து நின்னவளே
நாள் ஒன்று வீனாகி
நலிந்து போனேன் என்னவளே
இச்சைக்கு வரி வைத்து
இயங்கும் உலகிலே
நீதி கேட்பீரா
நின்று பதில் சொல்வீரா …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 22-08-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்









