14 சுரங்கத் தொழிலாளர்கள் பலி
14 சுரங்கத் தொழிலாளர்கள் பலி தென்னாப்பிரிக்காவின் கைவிடப்பட்ட சுரங்கத்தில் 14 சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர் என காவல்துறை தகவல்
வடமேற்கு மாகாணத்தில் உள்ள ரஸ்டன்பர்க் அருகே உள்ள ஒரு கைவிடப்பட்ட சுரங்கத்தில்
வடமேற்கு மாகாணத்தில் உள்ள ரஸ்டன்பர்க் அருகே உள்ள ஒரு கைவிடப்பட்ட சுரங்கத்தில் 14 சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும்,
மேலும் பலர் காயமடைந்ததாகவும் தென்னாப்பிரிக்க காவல்துறை செவ்வாயன்று தெரிவித்தது.
காவல்துறை மேலதிக விவரங்களை அளிக்கவில்லை. ஒரு மூத்த மாகாண காவல்துறை அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்.
சிறு அளவிலான திருட்டு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மூலம் சட்டவிரோத சுரங்கத் தொழில் பல தசாப்தங்களாக தென்னாப்பிரிக்காவை வாட்டி வதைத்து வருகிறது.
வழக்கமாக, ஆவணங்கள் இல்லாத சுரங்கத் தொழிலாளர்கள், வர்த்தக சுரங்கத் தொழிலாளர்களால் கைவிடப்பட்ட சுரங்கங்களுக்குள் நுழைந்து,
அங்கு எஞ்சியிருப்பவற்றை வெட்டி எடுக்க முயல்கின்றனர்
அங்கு எஞ்சியிருப்பவற்றை வெட்டி எடுக்க முயல்கின்றனர். அவர்களில் சிலர் வன்முறைக் குற்றக் கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
சட்டவிரோத சுரங்கத் தொழிலால், அரசாங்கத்திற்கும் சுரங்கத் தொழிலுக்கும் ஆண்டுதோறும் விற்பனை இழப்பு,
வரிகள் மற்றும் உரிமத்தொகைகள் வடிவில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் செலவாகிறது.







