Tag: விற்பனை
பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை
பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை
பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை ,மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அசுத்தமான தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கூறினார்.
“சில இறக்குமதி நிறுவனங்கள் கணிசமான வருவாய் ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயல்படாமல் போய்விட்டன” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும் என்றும், மோசடிகளைத் தடுக்க வலுவான விதிகள் மற்றும் விதிமுறைகள் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.
கார் விற்பனைக்கு அர்ச்சுனா|வீடு தேவை |வறுமையில் வாடுவதாக அறிவிப்பு
கார் விற்பனைக்கு அர்ச்சுனா|வீடு தேவை |வறுமையில் வாடுவதாக அறிவிப்பு
கார் விற்பனைக்கு அர்ச்சுனா|வீடு தேவை |வறுமையில் வாடுவதாக அறிவிப்பு,முழுமையான விபரம் காணொளியில் உள்ளது .
ஆயுதங்கள் விற்பனை செய்த அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா தடை
தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்த அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது..வானுக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ததற்காக அமெரிக்காவின் ஒன்பது பாதுகாப்பு நிறுவனங்கள் மீது சீனா தடைகளை விதித்துள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை இந்த நடவடிக்கைகளை அறிவித்தது. தைவான் மீதான அழுத்தத்தை சீனா
தொடர்ந்து எழுப்பி வருவதால், வாஷிங்டன் அதன் சுதந்திரப் பிரகடனங்களுக்கு ஆதரவை நிறுத்த வேண்டும் என்று கோருவதால் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
சீனா தனது பிராந்தியத்தில் உள்ள ஒன்பது நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும், சீனாவை தளமாகக் கொண்ட மக்கள் அல்லது
நிறுவனங்களுடனான அனைத்து பரிவர்த்தனைகளையும் உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதை தடை செய்வதாகவும் அமைச்சகம் கூறியதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், “சீனாவின் தைவான் பிராந்தியத்திற்கு” அமெரிக்க ஆயுத விற்பனை “ஒரு-சீனா கொள்கையை தீவிரமாக மீறியது …
சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை மீறியது” மற்றும் “சீனா-அமெரிக்க உறவுகளை சேதப்படுத்தியது” என்று கூறினார்.
ஒரு செய்தி மாநாட்டில் பேசிய லின், பெய்ஜிங் நிறுவனங்களுக்கு எதிராக “உறுதியான எதிர் நடவடிக்கைகளை” எடுத்து வருவதாகக் கூறினார்.
சியரா நெவாடா கார்ப்பரேஷன், ஸ்டிக் ரடர் எண்டர்பிரைசஸ், க்யூபிக் கார்ப்பரேஷன், எஸ்3 ஏரோஸ்பேஸ், டிகாம் லிமிடெட் பார்ட்னர்ஷிப்,
டெக்ஸ்ட்ஓர், பிளானேட் மேனேஜ்மென்ட் குரூப், ஏசிடி1 ஃபெடரல் மற்றும் எக்ஸோவேரா ஆகிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
F-16 போர் விமான பாகம் விற்பனை
F-16 போர் விமான பாகம் விற்பனை
F-16 போர் விமான பாகம் விற்பனை ,நெதர்லாந்து உக்ரைனுக்கு F-16 போர் விமானத்தின் பாகங்களை வழங்க உள்ளது
நெதர்லாந்து உக்ரைனுக்கு F-16 போர் விமானத்தின் பாகங்களை வழங்க உள்ளது.
தெஹ்ரான், செப். 07 (எம்என்ஏ) உக்ரைனின் எஃப்-16 போர் விமானங்கள் மற்றும் வான்-விண் ஏவுகணைகளை பராமரிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் பொருட்களை நெதர்லாந்து வழங்கப் போகிறது என்று நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ரூபன் பிரேகெல்மன்ஸ் தெரிவித்தார்.
ஏஜென்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமான தளத்தில் நடந்த உக்ரைனின் பாதுகாப்பு குறித்த தொடர்புக் குழுவின் கூட்டத்தில், பிரேகெல்மன்ஸ் உக்ரைனுக்கு உதவியை அறிவித்தார்.
“F-16 விமானத்திற்கு ஆதரவு பொருட்கள் மற்றும் பராமரிப்புக்கான உதிரி பாகங்கள் தேவை, இல்லையெனில் அவை பறக்க முடியாது. நெதர்லாந்து EUR 80 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை வழங்கும். பெரிய அளவிலான உதிரி பாகங்கள் தவிர, ஜெனரேட்டர்கள், சிறிய வாகனங்கள், அத்தியாவசிய பராமரிப்பு பொருட்கள், சிறப்பு கருவிகள் மற்றும் படிக்கட்டுகள் ஆகியவை இதில் அடங்கும். வான்வழி ஏவுகணைகள் மூலம், உக்ரைன் எதிரி விமானங்களை வீழ்த்த முடியும்” என்று அமைச்சர் கூறியதாக இன்டர்ஃபாக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
செயல்பாட்டுப் பாதுகாப்புக் காரணங்களுக்காக, சம்பந்தப்பட்ட அளவுகள் அல்லது வகைகளைப் பற்றிய எந்த விவரத்தையும் அமைச்சர் வழங்கவில்லை.
திட்டமிடப்பட்ட டெலிவரி நேரம் குறித்தும் அவர் கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் பொருட்கள் விரைவில் உக்ரைனை சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.
கூடுதலாக, உக்ரைனுக்கான சர்வதேச நிதியம் (IFU) இந்த வார தொடக்கத்தில் உக்ரைனுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட 1 பில்லியன் பவுண்டுகளை தாண்டிவிட்டதாக அறிவித்தது. ஐக்கிய இராச்சியத்தால் நிர்வகிக்கப்படும் இந்த நிதியில் நெதர்லாந்து ஒரு பங்குதாரராக உள்ளது.
கோடைகாலத்திற்கு முன், நெதர்லாந்து IFU மூலம் உக்ரைனுக்கான ட்ரோன்களை வாங்குவதற்கு பங்களித்ததாக அறிவித்தது, மேலும் இன்றுவரை அந்த நிதிக்கு நாடு 125 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது. குறிப்பிடப்பட்ட அனைத்துத் தொகைகளும் உக்ரைனுக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற உதவி நிதிகளால் மூடப்பட்டிருக்கும்
சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு
சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு
சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு ,அருமை எங்களின் உயிரோடு உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அருமை தாய்த்தமிழ் உறவுகளே விக்கிரவாண்டி தொகுதியிலே வாழ்கிற எங்கள் இனமான சொந்தங்களே .
வெற்றி ஒன்றே இலக்கு என்று அயராது களத்தில் நின்று உழைக்கிற ,என் உயிரினும் இனி என் உடன் பிறந்தார்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் வணக்கம் .
என் தம்பி கேட்டது மாதிரி ,இது இடைத்தேர்தல் தானே இதுல கூட நீங்க தனித்து நிக்க மாட்டேங்கறீங்க,
இதுக்கு ஒரு படையை திரட்டிட்டு வர்றீங்களே என்கிற மாதிரி என் அன்பு மக்கள் இந்த களத்தை இந்த அரசியல் நிலையை உங்கள் பிள்ளைகள் எடுத்து வைக்கிற அரசியல் கோட்பாடுகளை கருத்துக்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும் ,
சூடு பறக்கும் விக்கிரவாண்டி தேர்தல்
கூர்ந்து நோக்க வேண்டும் என்பது இந்த அன்பு மகனுடைய வேண்டுகோள் .
எல்லோரும் கூட்டணி வைத்து களத்தில் நிற்கும் போது நாங்கள் மட்டும் ஏன் தனித்து நிற்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றால்,
நாங்கள் கொண்டிருக்கிற நோக்கமும் கணமும் தனித்துவமானது ,அதனால் தனித்து நிற்க வேண்டியது இருக்கிறது .
கவியரசு கண்ணதாசன் அவர்கள் உன் வாழ்வில் ஏதாவது ஒரு இடத்தில் நீ சமரசம் செய்து விட்டால் ,உன் வாழ்நாள் முழுக்க நீ சமரசம் தான் செய்து கொண்டிருக்கிற வேண்டும் என்கிறார் .
சமரசம் என்பதற்கு நான் சொல்கிறேன் ,இப்ப கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் என்பது எல்லோருக்கும் தெரியும் .
ஆனால் திமுக கட்சிகளால் எங்கள் அளவிற்கு துணிந்து தெளிந்து ஒரு கருத்தை எடுத்து வைக்க முடியவில்லை .
தவறு என்று தெரிந்தும் சகித்துக் கொள்ளக்கூடிய அவல நிலைக்கு கூட்டணி என்பதாலேயே வந்து தனித்துவத்தை இழந்து விடுகிறார்கள் .
சிறப்பான நடவடிக்கை எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின், இப்படித்தான் பேச வேண்டியது இருக்கு ,சிறப்பான நடவடிக்கை எடுத்திருந்தால் எப்படி கள்ளக்குறிச்சியில் இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கும்.
போது நடவடிக்கை எடுத்திருந்த அந்த கள்ளக்குறிச்சியில் இந்த நிகழ்ச்சியை 65 இறந்து இருக்க மாட்டானே.
இவர்கள் நடவடிக்கை என்பது என்ன .மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றுவது காவல்துறை அதிகாரியை பணியிடமாவது .
அல்லது இடைக்கால வேலை நீர் தமிழர் செய்வது இதுதான் இரும்பு கரம் கொண்டு கொடுக்கும் உண்மையிலேயே பஞ்சு மிட்டாய் பஞ்சு மிட்டாய் போதை பொருள் இருக்காது என பேசியுள்ளார் .
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

தேயிலை சாயம் மதுபானமாக விற்பனை
தேயிலை சாயம் மதுபானமாக விற்பனை
தேயிலை சாயம் மதுபானமாக விற்பனை ,யாழ்ப்பாணம் நெடுந்தி பகுதியில் நபர் ஒருவர் தேயிலைச் சாயத்தை மதுபானதிற்குள் கலந்து அதனை மதுபானமாக விற்பனை செய்துள்ள சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
நெடுந்தீவை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 10 மதுபான போத்தர்கள் போலீசார் பெற்றுக்கொண்டனர் .
அதன் பொழுது அந்த மதுபான போதல்களை சோதனை செய்து பார்த்த பொழுது அதில் சில போத்தல்களில் தேயிலை சாயத்தை கலந்து அதனை மதுபானமாக ஏமாற்றி விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்ற காவல்
அவர் நீதிமன்ற காவல் எடுக்கப்பட்டு நீதி விசாரணை உள்ளாக்கப்பட்டார் .
அதனை அடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட மேற்படி விடயத்தினை அடுத்து தற்போது அந்த நபர் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வருகின்றார் .
உணவு பண்டங்களில் கலப்புகளை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி வந்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இவருக்கு பல ஆண்டு சிறை தண்டனையும் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான உணர்வு நுகர்வு மோசடிகளில் பலர் ஈடுபட்டு வருவது இதன் ஊடாக மீளவும்அம்பல உள்ளது.
- ரத்மலானா பொருளாதார மையம் அருகே தீ

- காட்டுத்தீயைத் தொடர்ந்து பாறைச்சரிவு அபாயம்

- 305 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

- லாரி மோட்டார் சைக்கிள் மோதல் இருவர் பலி

- போலீசார் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

- தீவின் சில பகுதிகளில் பல சுற்று மழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

வெள்ளத்தில் இறந்த கோழிகள் விற்பனை
வெள்ளத்தில் இறந்த கோழிகள் விற்பனை
வெள்ளத்தில் இறந்த கோழிகள் விற்பனை .இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பறவைகள் மற்றும் விலங்குகள் என்பன நீரில் அடித்துச் செல்லப்பட்டு வருகின்றன.
இவ்வாறு களனி ஆற்றின் கரை பகுதியாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விலங்குகள் கோழிகள் உள்ளிட்டவை சடலங்கலாக மிதந்து வருகின்றன.
இலங்கை நுகர்வு அமைச்சு எச்சரிக்கை
அவ்வாறு வெள்ள நீரில் அடித்து செல்லப்படுகின்ற கோழிகளை எடுத்து சில கும்பல்கள் அதனை சுத்தம் செய்து பொது மக்களுக்கு உணவு பண்டங்களாக விற்பனை செய்து வருவதாக இலங்கை நுகர்வு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது .
இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கோழிகளை உண்பதால் அதில் துர்நாற்றங்கள் வீசுவதாகவும், நோய்க்கிருமிகள் உள்ளதாகவும் எனவே கோழிகளை விரும்பி உண்ணும் மக்கள் ,இவ்வலை மிக அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்த கோழிகளை உண்கின்ற பொழுது அதில் இருக்கின்ற தொற்றுநோய் மக்களுக்குள் பரவி உயர் ஆபத்துக்களை ஏற்படுத்தும் .
நீரில் அடித்துச் செல்லப்பட்ட கோழி விற்பனை
எனவே இவ்வாறான காலப் பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கோழிகளை சில கும்பல்கள் விற்பனை செய்து வருவதாகவும் ,அதனால் மக்களுடைய உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது .
இவ்வளோ மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது .
நாட்டுக் கோழிகளே இவ்வாறு பெரும்பான்மையாக வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
அதனால் கோழிகள் மற்றும் விலங்குகள் உள்ளிட்டவற்றை உண்பதை மக்கள் தவிர்த்து வருமாறு அதன் ஊடாக சூட்சுமமாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே கோழி பிரியர்கள் மற்றும் விலங்கு பிரியர்களே இக்காலத்தில் மிக அவதானமாக செயல்படுங்கள்.
நீங்கள் உண்ணுகின்ற அந்த உணவில் நோய்கள் காணப்படுகின்றன அவற்றை உண்ணுகின்ற போது உங்கள் உடல் உறுப்புகள் சேதம் அடைந்து உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக சுகாதார அமைச்சும் நுகர்வோர் அமைச்சும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது .
- ரத்மலானா பொருளாதார மையம் அருகே தீ

- காட்டுத்தீயைத் தொடர்ந்து பாறைச்சரிவு அபாயம்

- 305 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

- லாரி மோட்டார் சைக்கிள் மோதல் இருவர் பலி

- போலீசார் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

- தீவின் சில பகுதிகளில் பல சுற்று மழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ள செயல் இலங்கை அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆட்சியாளர்களுக்கு ஆதரவை தருவிக்க ,சாராய கடை நடத்துவதற்கான அனுமதி பாத்திரத்தை கோரியுளளார் .
அவரது கொறிக்கியை ஏற்றுக்கொண்ட ஆளும் அரசு ,அவருக்கு இரண்டு அனுமதி பத்திரங்கள் வழங்கி உள்ளதாம் .
அதனை இரண்டு கோடிக்கு அந்த தமிழ் அரசியல்வாதி ,சாராய கடை வார்த்தர்களிற்கு விற்பனை செய்துள்ளார் .
விலை போகும் தமிழ் அரசியல்வாதிகள்
மேற்படி சாராயக் கடை நடத்துவதற்கான அனுமதி பத்திரம் இரண்டு கோடிக்கு பெற்று கொண்டவர்கள் ,புத்த பிக்குவிடம் சிக்கிய நிலையில் ,அது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் காதுக்கு எட்டியுள்ளது .
அவர் அதனை உடைத்து வெளியிட்ட நிலையில் ,ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
காற்றில் பறந்த தமிழ் உரிமைகள்
தமிழர் உரிமைக்கு குரல் கொடுப்பதாக பேசி கொள்ளும் ,தமிழ் அரசியல்வாதிகள் ,தமது குடும்ப பொருளாதாரத்தில் , நலனில் அக்கறை செலுத்தி ,மக்களை ஏமாற்றி பிழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை மேற்படி விடயம் காண்பிக்கிறது .
கட்டி கொடுப்பதும் ,கூட்டி கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ள சில தமிழ் எம்பிக்கள் செய்திடும் இவ்விதமான ,இழி செயல்கள் ஊடாக அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இழிநிலை ஏற்படுவதாக சுட்டி காட்ட படுகிறது .
எவர் எப்படி போனால் நமக்கு என்ன பணம் வந்தால் சரி மாப்புள்ள ,நீங்க சாராய கடையை திறவுங்கள் .
குடி மகன்கள் குடித்து விட்டு ,உங்களுத்தான் குடி மகன்கள் குத்துக்கரணம் அடித்து ஒட்டு போடுவார்கள் சாமியோ .
Featured
காணி மோசடி செய்து விற்பனை
காணி மோசடி செய்து விற்பனை
காணி மோசடி செய்து விற்பனை வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார்.
அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்ததுடன், மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார்.
மற்றைய துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக கொடுத்து , அதனை மீள அறுதியாக பெற்றுள்ளார்.
காணி உரிமையாளர்
இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, மன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
Featured
அரச வெளியீட்டு விற்பனை நிலையத்திற்கு பூட்டு
அரச வெளியீட்டு விற்பனை நிலையத்திற்கு பூட்டு
நாரஹேன்பிட்டியில் உள்ள அரச வெளியீட்டு விற்பனை நிலையம் ஏப்ரல் 15 ஆம் திகதி மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
கையிருப்பு மற்றும் சில உள் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், மறுநாள் (16) வழக்கம்போல் கருமபீடம் திறக்கப்படும்.
Featured
கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை இன்று (29) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜே.சமீரா (38 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் பல வருடங்களாக கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், கஞ்சா போதை பொருட்களை பல தடவைகள் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
இதே நேரம் தொடர்ந்தும் குறித்த பெண் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு பல கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரம் மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நாகத்தன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சந்ரசிறி உட்பட அவரின் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது 52,160 மில்லிகிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்
2000 விற்பனை செய்யப்படும் இளநீர்
2000 விற்பனை செய்யப்படும் இளநீர்
ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, இரண்டாவது இளநீர் செய்கை கிராமம் முருதவெல ரலுவ கிராமத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நேற்று (25) இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது.
ஏற்றுமதிக்கு இளநீர் பயிரிடும் முதல் கிராமம் கடந்த ஆண்டு கீழ் முருதவெலியில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இவ்விரு கிராமங்களிலும் 10,000 இளநீர் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி காணப்படுவதாகவும், மேலும் பல நாடுகளில் இருந்து எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு அதிக கேள்வி இருப்பதாகவும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர்கள் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டில் இளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் (2023) எதிர்பார்த்த வருமானம் ஆறு பில்லியன் ரூபாவாகும்.
2000 விற்பனை செய்யப்படும் இளநீர்
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இளநீர் ஒன்றின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு அமைய 2000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இளநீர் இலங்கையின் பூர்வீகப் பயிராகும், பல நாடுகள் இளநீர் பயிரிட முயன்றாலும், இலங்கையில் இளநீர் போன்று அதிக சுவை இல்லாததால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதன் காரணமாக, உள்நாட்டு இளநீருக்கு உலகச் சந்தையில் இலங்கையின் ஏகபோக உரிமை இன்னும் உள்ளது.
இந்த சூழ்நிலையில் இருந்து அதிகபட்ச இளநீரை அறுவடை செய்வதற்காக, குறிப்பாக முருதவெல பிரதேசத்தில் உள்ள பல கிராமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, இரண்டாவது இளநீர் செய்கை மாதிரி கிராமமாக ரலுவ கிராமம் நிறுவப்பட்டுள்ளதுடன் அங்குள்ள விவசாயிகளுக்கு 1,600 இளநீர் கன்றுகளை நேற்று விவசாய அமைச்சர் வழங்கி வைத்தார்.
சிரியாவுக்கு நவீன ஏவுகணைகள் விற்கும் ரசியா
சிரியாவுக்கு நவீன ஏவுகணைகள் விற்கும் ரசியா
சிரியா நாட்டிற்கு ரசியா நவீன் S-300, S-400 to Syria ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்ம் கைச்சாத்திட்டுள்ளது.
எதிர் வரும் ஆறுமாதங்களுக்குள் ஏனைய இந்த ஏவுகணைகள் சிரியாவுக்குள் நிறுத்த படும்.
வான் மறிப்பு ஏவுகணைகளை சிரியா ரசியாவிடம் இருந்து வாங்கி குவிகிறது.
ரசியா வின் இந்த ஏவுகணைகள் சிரியாவின் களத்தில் முறையாக வேலை செய்யவில்லை என்கின்ற குற்ற சட்டு முன் வைக்க
பட்ட நிலையில் இந்த வான்மறிப்பு ஏவுகணைகள் விற்பனை இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது.
உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு
உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது
உணவகங்களின் விற்பனையாகும் உணவு பொருட்களின் விலை பத்து ரூபாவால் அதிகரிக்க படுகிறது
எரிபொருள் உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக இவையும் அதிகரிக்க படுகிறது ,
பாண் ஒன்றின் விலை 180 ரூபாவாக அதிகரித்துள்ளது
விலை இவ்விதம் அதிகரித்து செல்லும் பொழுது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்
ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்
இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன் இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்
உலகின் அதிகம் உயரவும் உடைய விஸ்கி பாட்டில்
உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25-ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகத்தை சேர்ந்த இந்த பாட்டில் 5 அடி, 11 இன்ச் அளவையும், 311 லிட்டர் கொள்ளவை கொண்டுள்ளது. இந்த விஸ்கிக்கு ‘தி
இண்ட்ரிபிட்’ என பெயரிடப்பட்டுள்ளது. எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் இந்த பாட்டில் ஏலத்திற்கு வருகிறது. இது சாதாரண 444 சாதாரண விஸ்கி பாட்டில்களுக்கு ஒப்பான மதுவை கொண்டுள்ளது.
இதுகுறித்து வேல்ஸ் ஆன்லைன் என்ற இணையதளம் கூறுகையில், இந்த பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் 14 கோடி விலையை கொண்டது. அதிக விலைக்கு விற்கப்படும்
விஸ்கி என்ற உலக சாதனையை இந்த பாட்டில் படைத்துள்ளது. கடந்த வருடம் கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இந்த பாட்டில் இடம்பிடித்தது. இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன்
இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி மருத்துவ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
டுவிட்டரை விலைக்கு வாங்கும் Tesla CEO Elon Musk
டுவிட்டரை விலைக்கு வாங்கும் Tesla CEO Elon Musk
உலகில் கார் உற்பத்தியில் முக்கிய செல்வந்தராக விளங்கி வரும் Tesla CEO Elon Musk
டுவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய முதலாளியாக வருகிறார்
இவர் டுவிட்டரை 42 பில்லியன் டொலர் கொடுத்து விலைக்கு வாங்குகிறார்
இதனால் அதன் மதிப்பு உயரும் என எதிர் பார்க்க படுகிறது ,தடைகள் ,திறந்தவெளி விவாதங்கள்
என ஐந்து முக்கிய நிகழ்வுகளை மாற்றிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்
இது பேஸ்புக்கிற்கு எதிராக டுவிட்டர் உருவெடுக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது என கூறலாம்
உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவி- அமெரிக்கா அறிவிப்பு
உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவி- அமெரிக்கா அறிவிப்பு
ரஷிய போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா ஏற்கனவே வழங்கியுள்ளது.
உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி – அதிபர் ஜோ பைடன் ஒப்புதல்
ரஷியா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள்,
ராக்கெட்டுகள், மருந்துப் பொருட்கள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது
புலிகளுக்கு ஏவுகணைகள் விற்ற நபர்கள் அமெரிக்காவில் கைது
புலிகளுக்கு ஏவுகணைகள் விற்ற நபர்கள் அமெரிக்காவில் கைது
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு
ஏவுகணைகள்,ரொக்கட்,இயந்திர துப்பாக்கி , automatic weapons, rockets, machine guns and surface-to-air missiles ஆயுதங்கள் என்பனவற்றை
விற்பனை புரிந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஆயுத முகவர் ஒருவர் உள்ளிட்ட
மூவரை அமெரிக்கா உளவுத்துறையினர் கைது செய்துள்ளனர்
இவர்கள் மியன்மாரில் உள்ள கிளர்ச்சி படைகளிற்கும் ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
அமெரிக்கா குடியுரிமை பெற்ற இவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டு
விசாரணைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்
- ரத்மலானா பொருளாதார மையம் அருகே தீ
- காட்டுத்தீயைத் தொடர்ந்து பாறைச்சரிவு அபாயம்
- 305 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
- லாரி மோட்டார் சைக்கிள் மோதல் இருவர் பலி
- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
- போலீசார் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
- தீவின் சில பகுதிகளில் பல சுற்று மழை
- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு
- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- தெற்கு லெபனானில் வெடிகுண்டு தாக்குதல்
- ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்கா படைகள் பலி
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி பட்ஜெட்
உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்
ரஷியா- உக்ரைன் இடையே போர் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களும் பேரழிவை சந்தித்துள்ளன. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தது. அதன்படி, உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன்
டாலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.
ரஷிய படையை எதிர்த்துப் போராட ஏவுகணைகளை வழங்கும்படி உக்ரைனிய ராணுவத்தினர் உதவிக் கோரினர்.
இந்நிலையில், 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன்
ஒப்புதல் அளித்துள்ளதாக நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் விற்பனை நிலையம்
தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் விற்பனை நிலையம்
சுய தொழில் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் நோக்கில் இராஜாங்க
அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நுவரெலியா பருவகால கொள்வனவு தொகுதியில் பிரஜா ஷொப்பிங் விற்பனை குடில் இன்று (20.04.2021) ஆரம்பிக்கப்பட்டது.
பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பளார் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டின் மூலம் பல
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் மற்றும் முதலீட்டாளர்களை கவருவதை இலக்காக கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.







































