ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

பெண்வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ,யாழ்ப்பாணம் பருத்துறை ஆதார வைத்திய சாலையின் விடுதியில் தங்கி இருந்த பொன்னியல் நோய் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

பெண் வைத்தியர் சடலமாக மீட்க பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கடும் மன அழுத்தம் காரணமாக அதிகளவு மயக்க மருந்தை உடலில் செலுத்தியதே இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தனிப்பட்ட நபர் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாக வழங்கப்பட்டது.அதனால் இவர் வேறு வழியின்றி இவ்வாறான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல்கள் வழியாக இருக்கின்றன.

முப்பது வயதுடைய இளம் மருத்துவரை இவ்வாறு பலியாகி உள்ளார் .

கனவுகளை சுமந்து மருத்துவராகி

பெற்றவர்களின் கனவுகளை சுமந்து மருத்துவராகி தனது கடமையை பொறுப்பேற்ற இளம் பெண் ஒருவர் அதிக மன உளைச்சல் மேலதிகாரியினால் வழங்க பட்டதன் காரணமாக தற்கொலைக்கு சென்றுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் பல மருத்துவர்களின் அடக்கு முறையினால் பல தாதிகள் மருத்துவர்கள் சொல்லென இடர்களை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது .

தனிநபர் பழிவாங்குதல்

நிறைவேற்ற பணிப்பாளராக மருத்துவமனைகள் இருக்கும் அதிகாரிகளினால் கீழ் நிலையில் பணியாற்றுகின்ற மருத்துவர்கள் தாதிகள் மீது கடும் தாக்குதல் தனிநபர் பழிவாங்குதல் மற்றும் சொல்லென இடர்களை அவர்கள் சந்தித்து வருவதாக அங்கு பணி புரிகின்ற பலர் இவ்விதம் குற்றம் சுமத்தி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

காயங்களுடன் வாலிபன் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காயங்களுடன் வாலிபன் மீட்பு

காயங்களுடன் வாலிபன் மீட்பு

அடி காயங்களுடன் வாலிபன் மீட்பு .வாழைச்சேனை போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வாலிபன் ஒருவர் ரத்த காயத்தில் துடித்துக் கொண்டிருந்த பொழுது மீட்கப்பட்டுள்ளார் .

பேருந்து ஒன்றில் பயணித்த பொழுது பேருந்து ஒன்று தரிப்பிடம் ஒன்றில் தடுத்து நின்ற பொழுது அதில் பயணித்த இவருக்கும் சக பயணி ஒருவருக்கு முறையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த வாய் தர்க்கம் முற்றி அடிதடியில் முடிந்துள்ளது.

கூட வந்த பயணி இவரை கடுமையாக பொல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் .

இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த குறித்த வாலிபனை கண்ட மக்கள் அவரை மீட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .

இந்த இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவத்துக்கான காரணம் உடனடியாக முழுமையாக தெரிய வரவில்லை .

தற்பொழுது காயம் அடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இலங்கை காவல்துறை உடனடி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்த வன்முறை தாக்குதலுக்கான காரணம் தெளிவாக தெரியாத பொழுதும் இவர்கள் இடையில் முன்னர் பகைமை இருந்திருக்க கூடும் என்கின்ற வகையிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மேற்படி சம்பவம் புத்தளம் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் வாள் வெட்டு சம்பவங்கள் இவ்வாறான, தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது குறிப்பிட தக்கது .

மாணவி சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மாணவி சடலமாக மீட்பு

மாணவி சடலமாக மீட்பு

மாணவி சடலமாக மீட்பு ,காணாமல் போன மாணவி ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

காணாமல் போன மாணவி ஒருவரே தற்பொழுது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

மகள் காணாமல் போனதை அடுத்து காவல்துறை நிலையத்தில் பெற்றவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

காவல்துறையினர் துரித விசாரணை

அந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை காவல்துறையினர் துரித விசாரணைகளை ஆரம்பித்தனர் .

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் இறுதியில் தற்பொழுது காணாமல் போன இந்த மாணவி சுடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர் .

கண்டி பகுதியில் காணாமல் போயிருந்த இந்த மாணவியே தற்பொழுது சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவி தவறான முடிவை எடுத்து தன் உயிரை தானே மாய்த்துள்ளதான தகவல் தெரிவிக்கின்றன.

அவ்வாறு ஏன் இவர் செய்தார் என்பது தொடர்பான விசாரணைகளை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ பரிசோதனை

மீட்கப் பட்ட சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .

அந்த மருத்துவ பரிசோதனை முடிவில் மாணவிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விடையங்கள் தெரிய வருமென எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கையில் இவ்வாறு காணாமல் போகின்ற பல மாணவிகள், ஆண் பெண்கள், சடலமாக மீட்க்கப்பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலுக்கமைய திகன, அம்பகோட்டே பகுதியில் இருந்து இரு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அடையாளம் காண முடியாத அளவிற்கு அழுகிப் போயுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்தெனிய பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டுள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில், தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பெண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு ,கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில்

அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட 4 அடி 09 அங்குல உயரமுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடையை (கவுன்) அவர் அணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையில் நாள் தொடரும் இடம்பெற்று வரும் இவ்விதமான மர்ம படுகொலைகள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது .

இந்த கொலைகளின் பைபுலத்தில் உள்ளவர்கள் யார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

யாழில் வெடிமருந்துகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வெடிமருந்துகள் மீட்பு

யாழில் வெடிமருந்துகள் மீட்பு

யாழில் வெடிமருந்துகள் மீட்பு ,யாழ்ப்பாணம், வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள்

மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட வெடி பொருட்கள்

மீட்கப்பட்ட வெடி பொருட்களையும் , கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம்

ஒப்படைக்கப்படைத்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, 12 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ

விசேட அதிரடி படையினர்

இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் 03 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் , ஆர்.பி.ஜி எறிகணைகள் 08 மற்றும் 60 எம்.எம். மோட்டார் எறிகணைகள் 12 என்பவை மீட்டமை குறிப்பிடத்தக்கது.

மீன்பிடி தேவைக்கு குறித்த வெடிபொருட்கள் உடைமையில் வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு

தெஹிவளையில் கட்டிடமொன்றில் இன்று (06) புதன்கிழமை காலை கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில், கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்

ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தெஹிவளை பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு

பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டு மீட்கப்பட்டது.

இலக்கம் 124 அனகாரிக தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் கைவிடப்பட்ட நிர்மாணத் தளமாகவே உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக மீட்பு

மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக மீட்பு

பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த மண்சரிவில் காணாமற்போயிருந்தனர்.

அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமற்போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் அரச செலவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

4 பிள்ளைகளின் தாயின் சடலம் களப்பிலிருந்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

4 பிள்ளைகளின் தாயின் சடலம் களப்பிலிருந்து மீட்பு

4 பிள்ளைகளின் தாயின் சடலம் களப்பிலிருந்து மீட்பு


மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயின் சடலம் நுரைச்சோலை ஷெடபொல களப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷெட்டபொல மன்பூரிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய செபஸ்டியன் உர்சுலா என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 பிள்ளைகளின் தாயின் சடலம் களப்பிலிருந்து மீட்பு

மீனவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் தலையில் இரண்டு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணைக் கொன்ற பின்னர், அவளிடம் இருந்து கிட்டத்தட்ட 20,000 ரூபாய், உடைகள் மற்றும் தங்க நெக்லஸ், ஒரு தங்க மோதிரம், மருந்து, அலைபேசி ஆகியவற்றை ஒரு பையில் வைத்து சதுப்புநிலக் காட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். .

மன்னாரில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

மன்னாரில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண மன்னார் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

உயிரிழந்தவர் சுமார் 30 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க 4.8 அடி உயரம் கொண்ட ஆண் எனவும், கருப்பு நிற நீள கை சேட், கருப்பு நிற அரைக்காற்சட்டை மட்டும் நீல நிற பெட்டி சாரம் அணிந்திருந்ததாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

மேலும் அவர் அணிந்துள்ள கருப்பு நிற அரைக் காற்சட்டையில் (SRI LANKA CRICKET ) என எழுதப்பட்டுள்ளது.

மேலும் அவருடைய கருப்பு நிற நீள கை சேட் பொக்கட்டில் 120 ரூபாய் பணம் காணப்பட்டுள்ளதோட, குறித்த பொக்கட் குண்டுப்பின்னினால் குத்தப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தின் முன் பக்கம் தட்டையாகவும் பின் பக்கம் முடியும் காணப்படுகின்றது.

எனவே குறித்த சடலம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அல்லது அடையாளம் காண விரும்புபவர்கள் மன்னார் பொலிஸ் நிலையம் அல்லது மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையுடன் தொடர்பை ஏற்படுத்துமாறு மன்னார் பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன

காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் தவறி விழுந்து நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் இன்று (23) காலை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தூர், கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயதான பாஸ்கரன் திலக்சன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கைகள் தங்கூசி வலையினால் பின்னப்பட்டிருப்பாதலும் முகத்தில் காயங்கள் இருப்பதாலும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தவறி விழுந்து காணாமல் போன நிலையில் நேற்று மாலை முதல் அவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றன.

காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

இந்நிலையில் தவறிவிழுந்த இளைஞனை தேடும் பணியில் இரவு முழுவதும் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் முயற்சி பலனளிக்காத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரு இளைஞன் தவறி விழவே ஏனையவர்கள் அச்சத்தில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தப்பி சென்ற இளைஞர்கள் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

கேரளா கஞ்சா 543 கிலோ மீட்பு

கேரளா கஞ்சா 543 கிலோ மீட்பு

உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாடு கடற்பிரதேசத்தில் இருந்து 543 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா இன்றைய இலங்கை மொத்த பெறுமதி 120 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி கடற்படையினர் ​நேற்று வழமை போல உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னப்பாடு – பெரியபாடு கடற்பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, கடலில் சில பொதி செய்யப்பட்ட சில மூடைகள் மிதந்துபொண்டு வருவதனை அவதானித்த கடற்படையினர் அதனை கைப்பற்றி பார்வையிட்டுள்ளனர்.

இதன்போதே, கேரளா கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடலில் மிதந்து வந்த அனைத்து பொதிகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு

173 மூடைகளில் ஒரு கிலோ வீதம் அடைக்கப்பட்டிருந்த 543 கிலோ கிராம் (ஈரமான எடை) கேரளக் கஞ்சா பொதிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த கேரளா கஞ்சாவை கடல்மார்க்கமாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த சந்தேக நபர்கள், அதனை கரைக்கு கொண்டு வர முடியாமல் கடலிலேயே வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என தாம் நம்புவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கேரளா கஞ்சா 543 கிலோ மீட்பு

மேற்படி கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டமையை அடுத்து, சின்னப்பாடு – பெரியபாடு பகுதியில் கடற்படையினர் மேலதிக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடப்பு பொலிஸாரிடம்
ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

இலங்கைக்கு கடத்த பட்டு வரும் பெருமளவிலான கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் மீட்ப பட்டு வருவதுடன் இவ்வாறான கஞ்சா கடத்தல் முறியடிக்க பட்டு வருகிறது .

அவ்விதம் இருந்தும் இந்த கேரளா கஞ்சா கடத்தல் தொடர்ந்த வண்ணம் உள்ளமை போலீசார் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    காணாமல் போனவர் சடலமாக மீட்பு

    காணாமல் போனவர் சடலமாக மீட்பு

    இலங்கை களுத்துறை களுகங்கையில் வீழ்ந்து காணாமல் போன பதினேழு வயது வாலிபன் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்

    காணாமல் போனவர் சடலம் களுத்துறை தெற்கு காவல்துறையினரால் மீட்க பட்டுள்ளது ,

    இவ்வாறு காணாமல் போனவர் அருவியில் தானே குதித்தாரா அல்லது திட்டமிட்டு யாராவது தள்ளி விட்டனரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    சடலமாக மீட்க பட்ட வாலிபர் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,

    இலங்கையில் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்க பபடும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது ,


    இந்த சடலங்கள் மீட்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது

    இலங்கையில் தொடராக நீர் நிலைகளில் இருந்து மனிதர்கள் சடலமாக மீட்க பட்டு வருகிறது

    இவ்வாறு சடலமாக மீட்க படும் சடலங்கள் தொடர்பில் மக்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது ,நாள்தோறும் நீர் நிலைகளில் காணாமல் போனவர்கள் சடலமாக மிதப்பது எப்படி என மக்கள் மன்றம் கேள்வி எழுப்புகிறது

    காணாமல் போனவர் சடலமாக மீட்பு

    இந்த தொடர் படு கொலைகளுக்கு பின்னால் செயல்படுவது யார் .காணாமல் போவது எவ்வாறு தொடர்கிறது

    ஏன் இந்த கொலைகள் இடம்பெறுகிறது ,நீர் நிலைகளில் சடலமாக மீட்க படும் வரலாறு முடிவுக்கு வருமா ,,? இதுவே மக்கள் கேள்வியாக உள்ளது

    கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் தொடராக நீர் நிலைகளில் ஆண் பெண்கள் சடலமாக மீட்க பட்டு வருகிறது ,

    கடத்தல் காணாமல் போனவர்கள் பின்னர் சடலமாக மீட்க படுவது தொடர்பாக இலங்கை காவல்துறையால உரிய நடவடிக்கை மேற் கொள்ள படவில்லை

    தொடர்ந்து இடம்பெற்று வரும் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் அதன் தொடர கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதும்

    எதிர்கால வாழ்வியை கேள்விக்கு உள்ளகக்கியுள்ளது காணமல் போதல் சம்பவங்கள் ,தோற்றம் காணாமல் போகும் நடவடிக்கை அதனை தடுக்க அரசுக்கு மேற்கொண்ட விடயம் என்ன என்ற மக்கள் அதாங்க கேள்விகள் தொடர்கின்றன

    படு கொலையின் இரட்ஷகனாக ஆளும் கோத்தபாய ராஜபக்சே விளங்கி வருகிறார் ,இவரே இந்த காணாமல் போனவர் சடலங்களாக மீட்க படும் பின்புலத்தில் உள்ளதான சந்தேகம் வலுத்துள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      காணமால் போனவர் சடலமாக மீட்பு

      காணமால் போனவர் சடலமாக மீட்பு

      வீட்டில் இருந்து காணாமல் போனவர் ,கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட்டுள்ளார்

      குடும்பஸ்தரின் சடலம் ஒன்றே இவ்வ்ரு மீட்க பட்டு ,பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

      அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் கடந்த வியாழக்கிழமை (2) மாலை காணாமல் போயிருந்தார்

      இவ்வாறு காணமல் போன நிலையில் பொது மைதானத்தில் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.

      இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டு தடயப்பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.

      காணமால் போனவர் சடலமாக மீட்பு

      குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள்

      இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

      மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

      இலங்கையில் தொடராக காணாமல் போபவர்கள் இவ்வாறு சடலமாக மீட்க பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததன் பின்னர் நீர் நிலைகளில் மர்மமான முறையில் மக்கள் சடலங்கள் மீட்க படுகிறது

      இது தமிழர் பகுதியை மட்டும் இன்றி தென் இலங்கை ஆதிக்க வெறி சிங்களவர்கள் வசிக்கும் பகுதியிலும் சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன

      அணைத்து மரணங்களும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுதே ஓரே விதமான முறையில் மரணங்கள் உள்ளதே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

      இவை திட்டமிடப்பட்ட குழு ஒன்றினால் மேற் கொள்ள படும் மர்ம படு கொலைகளின் பின்புலம் என கருத படுகிறது

      ஜே ஆர் ஜேவர்தனா இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய பொழுது ஜேவிபி சகோதர படுகொலையை ஆரம்பித்து வைத்தார் ,நீர் நிலைகளில் மிக கோரமான முறையில் ஜேவிபி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அடித்து வீச பட்ட நிலையில் அந்த ஆண் பெண் சடலங்கள் மீட்க பட்டன

      அது போலவே இப் பொழுது இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .-வன்னி மைந்தன் –

        Posted in இலங்கை செய்திகள்

        உடையார் கட்டில் புலிகளினால் புதைக்க பட்ட டீசல்,பெட்ரோல் மீட்பு- இராணுவம் குவிப்பு

        உடையார் கட்டில் புலிகளினால் புதைக்க பட்ட டீசல்,பெட்ரோல் மீட்பு- இராணுவம் குவிப்பு

        உடையார்கட்டு பகுதியில் இறுதி போர் உக்கிரம் பெற்ற காலத்தில் புலிகள் அமைப்பினால் பதுக்கி வைக்க பட்ட எரிபொருள் கலங்கள் மீட்க பட்டுள்ளன

        போர் உக்கிரம் , பெற்று இலங்கை சிங்கள படைகள் முன்னேறி வந்த நிலையில் மக்கள்; வீடுகளில் வெட்ட பட்ட பதுங்கு குளிகளுக்குள் இந்த பொருட்கள் பதுக்கி வைக்க பட்டன

        தற்போது உரிமையாளர்களினால் அந்த புட்டி பகுதி மண் நிரவப்பட்ட பொழுது ,மேற்படி கலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளது

        மேற்படி விடயம் குற்ற புலனாய்வு துறையினருக்கு தெரிய வந்த நிலையில் ,குறித்த வீடு சுற்றி வளைக்க பட்டு இராணுவம் குவிக்க பட்டுள்ளது

        மேலும் நீதிபதி ஒருவர் தலைமையில் அந்த அகழ்வு பணிகள் கண்காணிக்க படுவதாக தெரியவருகிறது ,

        குறித்த பகுதியில் விடுதலை புலிகளின் பல்வேறு பட்ட அமைப்பின் முகாம்கள் நிர்வகிக்க பட்டு இருந்தன என்பது இங்கே கவனிக்க தக்கது

        போர் முடிந்த 13 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இவ்விதமான தடய பொருட்கள் தற்போது வரை கண்டு
        பிடிக்க பட்டு வருகிறது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

        தற்போது குறித்த வீட்டார் ,விசாரணை வளையத்திற்குள் முடக்க பட்டுள்ளனர் ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

          செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

          கணேசபுரம் காட்டுப்பகுதியில் 16 வயது பெண் சடலம் மீட்பு

          கணேசபுரம் காட்டுப்பகுதியில் 16 வயது பெண் சடலம் மீட்பு

          நேற்று மாலை, குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

          இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

          இந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்று புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

          குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதுடன், அந்தப் பகுதியில்

          இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

          சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            தந்தை மகள் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

            களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மர்மமான முறையில்

            உயிரிழந்த இருவரின் சடலங்கள் நேற்று (30) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

            உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

            களுத்துறை, ஹீனடியங்கல சிசில உயன பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க

            சுனில் ஜயசிங்க மற்றும் அவரது 33 வயது மகள் சசித்ரா ஹன்சமலி ஜயசிங்க ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

            தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலும், மகள் அறையின் தரையில் சடலமாக

            கிடந்ததாகவும் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

            களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனையின் பின்னர்


            சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

              Posted in இலங்கை செய்திகள்

              தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் சடலம் மீட்பு

              தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் சடலம் மீட்பு

              முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

              அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை துரைரட்ணசிங்கம் (65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

              குறித்த குடும்பஸ்தர் நீண்ட காலமாக தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

              சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

              தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் மீட்க பட்ட சடலம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                Posted in Uncategorized

                கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு

                கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு

                சென்னை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 1000 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

                சென்னை இரட்டை கொலை: கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு
                தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணன் கைப்பற்றப்பட்ட நகைகளை பார்வையிட்டார்

                சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55).

                தொழில் அதிபரான ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலையில் சென்னை திரும்பினர்.

                இந்த நிலையில் இருவரும் கொடூரமாக தங்களது கார் டிரைவரால் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் பகுதியை மட்டுமின்றி சென்னை மாநகரையே அதிர வைத்துள்ளது.

                இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

                தொழில் அதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனுராதாவும், அமெரிக்காவில் உள்ள தங்களது மகள் சுனந்தாவை பார்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

                க ொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த், அனுராதா

                கர்ப்பிணியாக இருந்த மகளுக்கு குழந்தை பிறந்ததும் சில மாதங்கள் அமெரிக்காவிேலயே தங்கி இருந்த கணவன்-மனைவி இருவரும் அமெரிக்காவில்

                இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். இருவரையும் அவர்களது டிரைவர் கிருஷ்ணா மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.

                அங்கு வைத்து தனது நண்பர் ரவி என்பவருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் திடீரென தாக்கிய டிரைவர் கிருஷ்ணா இருவரையும் வீட்டில்

                வைத்தே துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். ஏற்கனவே வீட்டில் இருந்த நகைகளை மூட்டை கட்டி வைத்திருந்த டிரைவர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவியும், தொழில்

                அதிபரையும் அவரது மனைவியையும் விடியும் முன்னர் ஒன்றாக புதைப்பதற்கு முடிவு செய்தனர்.

                தொழில் அதிபர் ஸ்ரீகாந்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள சூலேரிகாட்டில் பிரமாண்ட பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு உடலை

                கொண்டு சென்று புதைப்பதற்கு முடிவு செய்தனர். இதன்படி ஸ்ரீகாந்தின் காரிலேயே 2 பேரின் உடல்களையும் மூட்டை கட்டி தூக்கி போட்டனர். பின்னர் மயிலாப்பூரில் இருந்து

                மின்னல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு நெமிலிச்சேரி பண்ணை வீட்டுக்கு சென்றனர்.

                அங்கு ஸ்ரீகாந்த், அனுராதா இருவரின் உடல்களையும் பெரிய குழி தோண்டி புதைத்தனர்.

                பின்னர் கொள்ளை அடித்த நகைகளுடன் தப்பிச் சென்ற கிருஷ்ணா அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

                கொலையாளிகளை கைது செய்து விசாரணை நடத்திய பிறகே இருவரும் கொன்று புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இருவரும் நேற்று மாலை 6.30 மணி அளவில்தான் பிடிபட்டனர். இதன் பின்னர் உடனடியாக உடல்களை தோண்டி எடுக்க முடியவில்லை.

                இதைத் தொடர்ந்து இன்று காலையில் இருவரின் உடல்களும் புதைக்கப்பட்ட பண்ணை தோட்டத்துக்கு போலீசார் கொலையாளிகளை இன்று பிற்பகலில் அழைத்துச் செல்கின்றனர். உடல்கள் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.

                தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் மிகவும் வசதி படைத்தவர் ஆவார். ஸ்ரீகாந்தும் அவரது மனைவி அனுராதாவும் தங்களது மகள் சுனந்தாவை அமெரிக்க மாப்பிள்ளைக்கு

                திருமணம் செய்து கொடுத்திருந்தனர். மகளுக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தில் 3 மாதங்கள் அமெரிக்காவில் பொழுது போக்கி விட்டு இருவரும் சென்னை திரும்பி இருந்தனர்.

                இந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடங்கும் முன்னரே இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மகள் சுனந்தாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

                அவரும், ஸ்ரீகாந்த் அனுராதாவின் உறவினர்களும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

                இந்த கொலை வழக்கில் துப்பு துலங்கியது எப்படி? என்பது பற்றி தென்சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

                மயிலாப்பூரைச் சேர்ந்த தம்பதியை கொலையாளிகள் இருவரும் திட்டம் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து நேற்று அதிகாலையில்

                ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் வீடு திரும்பியதும், முதல் மாடியில் வைத்து மனைவி அனுராதாவை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்றுள்ளனர். கீழ் தளத்தில் வைத்து ஸ்ரீகாந்தை கொன்றுள்ளனர்.

                பின்னர் இருவரது உடலையும் போர்வையில் சுற்றி காரில் எடுத்துச் சென்று மாமல்லபுரம் அருகே உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்.

                இந்த கொலை சம்பவத்தில் டிரைவர் கிருஷ்ணா, அவரது நண்பரான டார்ஜிலிங்கை சேர்ந்த ரவிராய் இருவரும் ஈடுபட்டுள்ளனர். நகை பணத்துக்கு ஆசைப்பட்டு இருவரும்

                இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளிடமிருந்து 1000 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

                இதன் எடை 9 கிலோவாகும். 60ல் இருந்து 70 கிலோ வரையில் வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

                நேற்று மதியம் 1 மணி அளவில் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது எங்களுக்கு தெரிய வந்தது. உடனயாக தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

                போலீஸ் பிடியில் சிக்காமல் எப்படியாவது நேபாளத்துக்கு தப்பிச் சென்று விட முடிவு செய்து காரில் வேகமாக சென்றனர். 6 அல்லது 7 மணி நேரம கழித்திருந்தால் நேபாளம் சென்றிருப்பார்கள்.

                ஆனால் அதற்குள் ஆந்திரா போலீசாரின் துணையுடன் கொலையாளிகள் இருவரையும் பிடித்து விட்டோம்.

                  Posted in Uncategorized

                  சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

                  சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

                  சீனாவில் பாரிய கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதற்குள் வசித்த 53 மக்கள் பலியாகினர்

                  இதுவரை பத்து சடலங்கள் மீட்க பட்டுள்ளன

                  இந்த விபத்துக்கு காரணமாக விளங்கிய ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


                  தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன