இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ

இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ

இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ ,இலங்கையில் புலி ஒரு கிலோ 2000 தற்பொழுது சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள திடீர் தட்டுப்பாடு காரணமாகவே உள்ளூர் சந்தைகளில் 2000 ரூபாய்க்கு புளி விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்தும் இலங்கையில் பொருளாதாரம் பலத்த வீழ்ச்சி நிலையை சென்று வருவதாலும் உள்ளூர் உற்பத்திகள் தடுக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே உள்ளூர் சந்தையில் இதனுடைய விலை உச்சம் பெறுகின்றது.

இவ்வாறு நாள்தோறும் பொருட்களின் விலை நாளுக்கு ஒவ்வொரு விலையாக காணப்பட்டால் அது மக்களுக்கு பெரும் இடர்களை ஏற்படுத்தும் என்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றன.

ஆனால் மக்களுடைய வாழ்வாதாரம் பொருளாதாரம் விலை வாசிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆளுகின்ற அனுரா ஆட்சி செயல்படவில்லை என்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

வீடியோ

சீனாவின் உடைய நோயானது தற்போது உலகளாவிய ரீதியில் பரவி விறகு கொண்ட நிலையில் அந்த நோய் இலங்கையில் வந்தால் இந்த விலைவாசிகள் இரண்டு மடங்கு அதிகரித்தால் இலங்கை நிலை என்பது தான் இப்பொழுதுள்ள கேள்வியாகும் .

5377 கிலோகிராம் சட்ட விரோத லஞ்ச் சீட்டுகள் அழிப்பு
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

5377 கிலோகிராம் சட்ட விரோத லஞ்ச் சீட்டுகள் அழிப்பு

5377 கிலோகிராம் சட்ட விரோத லஞ்ச் சீட்டுகள் அழிப்பு

கைப்பற்றப்பட்ட 5,377 கிலோகிராம் சட்ட விரோத லஞ்ச் சீட்டுகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் அழிக்கப்பட்டுள்ளன.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நுகர்வோர் அதிகார சபை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த லஞ்ச் சீட்டுகள்

கண்டுபிடிக்கப்பட்டதுடன், புத்தளத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வைத்து குறித்த லஞ்ச் சீட்டுகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை நேற்று (19) அழிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

சட்டவிரோத பொலித்தீன் லஞ்ச் சீட்டுகள் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தொடுக்கப்பட்ட 12 வழக்குகளின் வழக்கு

பொருட்களாக சேமித்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பொலித்தீன் லஞ்ச் சீட்டுகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி அமைச்சரவை அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி அமைச்சரவை அனுமதி

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி அமைச்சரவை அனுமதி

குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, இரண்டு மாதங்களுக்கு இனங்காணப்பட்ட 2.75 மில்லியன் குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம் நாட்டரிசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அமைச்சரவை தீர்மானம் மேலே.

Posted in இலங்கை செய்திகள்

கேரளா கஞ்சா 543 கிலோ மீட்பு

கேரளா கஞ்சா 543 கிலோ மீட்பு

உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாடு கடற்பிரதேசத்தில் இருந்து 543 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா இன்றைய இலங்கை மொத்த பெறுமதி 120 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி கடற்படையினர் ​நேற்று வழமை போல உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னப்பாடு – பெரியபாடு கடற்பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, கடலில் சில பொதி செய்யப்பட்ட சில மூடைகள் மிதந்துபொண்டு வருவதனை அவதானித்த கடற்படையினர் அதனை கைப்பற்றி பார்வையிட்டுள்ளனர்.

இதன்போதே, கேரளா கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடலில் மிதந்து வந்த அனைத்து பொதிகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு

173 மூடைகளில் ஒரு கிலோ வீதம் அடைக்கப்பட்டிருந்த 543 கிலோ கிராம் (ஈரமான எடை) கேரளக் கஞ்சா பொதிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த கேரளா கஞ்சாவை கடல்மார்க்கமாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த சந்தேக நபர்கள், அதனை கரைக்கு கொண்டு வர முடியாமல் கடலிலேயே வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என தாம் நம்புவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கேரளா கஞ்சா 543 கிலோ மீட்பு

மேற்படி கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டமையை அடுத்து, சின்னப்பாடு – பெரியபாடு பகுதியில் கடற்படையினர் மேலதிக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடப்பு பொலிஸாரிடம்
ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

இலங்கைக்கு கடத்த பட்டு வரும் பெருமளவிலான கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் மீட்ப பட்டு வருவதுடன் இவ்வாறான கஞ்சா கடத்தல் முறியடிக்க பட்டு வருகிறது .

அவ்விதம் இருந்தும் இந்த கேரளா கஞ்சா கடத்தல் தொடர்ந்த வண்ணம் உள்ளமை போலீசார் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .