செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்

செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்

யாழ்ப்பாணம் செம்மணியில் கைக்குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் மூன்று எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவை உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் , அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ,

இதுவரையில் ஆடை , அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால் , அவை வெற்று உடல்களாகவே புதைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில்

கட்டளைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த புதைகுழிகள், 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் படுகொலைக்கு பின்னர்,

இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 1999ம் ஆண்டு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திலேயே உள்ளன.

அப்போது, 15 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டன, இதில் சிலர் கண்ணை கட்டிய நிலையில் மற்றும் கைகளைக் கட்டிய நிலையில் இருந்தனர்,

இது அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக்கிறது.

இந்த புதுப்பட்ட கண்டுபிடிப்பு, கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை மீண்டும் வெளிக்கொணர்கிறது.

அதே நேரத்தில், பல ஆண்டுகளாக நீடித்து வரும் நீதியின் தேடலை மீண்டும் தூண்டுகிறது. மாற்றம் மற்றும் நியாயத்தை எதிர்பார்க்கும் குடும்பங்கள், சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன.

இந்த நிலையில், சரியான மற்றும் முழுமையான விசாரணைகள் நடைபெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன் சரண்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண்

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண்

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண் ,மனைவியின் தலையை அறுத்து பொட்டலம்கட்டி பொலிஸில் சரண்டைந்த கணவனால் வவுனியா பரபரப்பாகியுள்ளது.

மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்து சென்ற கணவன்

மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளியங்குளம், நொச்சிக்குளம்- அனந்தர்புளியம்குளம் பகுதியை 32 வயதுடைய சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

இன்று (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன், மனைவியை கொலைசெய்து, நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,

கள்ள காதல் மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், குறித்த ஆசிரியையுடன் காதல் திருமணம் செய்துள்ளார்.

ஆனால், ஆசிரியை இளைஞன் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கணவன் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவர் பேசி தீர்த்துவிட்டு சுமுகமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியையுடன் தொடர்பிலிருந்ததாக கூறப்பட்ட இளைஞன், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கணவனுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் தாங்காத கணவன், மனைவியின் சகோதரனிடமும் இதை கூறியுள்ளார்.

பின்னர், இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி, மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

அவ்வேளையில், நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், கழுத்தை வெட்டி, பிளாஸ்ரிக் பையில் வைத்து, புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது ,லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமேலே கிண்ணியா போலீஸ் நிலையத்திற்கு பணியாற்று போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது லஞ்சம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வயது சிறுவன் ஒருவன் சாரதி அனுபவிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணை குழுவுக்கு தகவல் வழங்கியது அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்பொழுது குறித்த போலீஸ் அதிகாரி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆயராக்க பட்டு பின்னர் எதிர்வரும் மாதம் ஒன்பதாம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓடிய நபர், இவரை பழிவாங்கும் நோக்குடன் இந்த லஞ்ச ஊழல் ஆணைகுழுவில் சிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

முறையான முறையில் இவரை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தால், இந்த அதிகாரி லஞ்ச ஒழிப்பு குற்றச்சாட்டில் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமா.

எனவே சிலர் விரிக்கும் வலையில் இவர்களாகவே விழுந்து சிக்கி விடுவது இதன் ஊடாக தெரிய வருகிறது.

நீண்ட நெடுங்காலம் காலமாக லஞ்ச ஊழல் பெற்று பருத்து கொழுத்து வந்த அதிகாரியே இன்று இந்த விடயத்தில் சிக்கி இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு

நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு

இலங்கை நாடுமுழுவதும் விஷேட சுற்றிவளைப்பு மேற்கொண்டு பொலிஸார் சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது

போதைப்பொருட்களுடன் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 178 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 131 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 158 பேரும்,

மதனமோதக போதைப்பொருளுடன் 03 பேரும், கஞ்சா செடிகளுடன் 05 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 208 கிராம் 870 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 289 கிராம் 962 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும்,

01 கிலோ 118 கிராம் 761 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 26 கிராம் 400 மில்லிகிராம் மதனமோதக போதைப்பொருளும், 9072 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சுற்றிவளைப்பின்போது கைதானோர் எந்தெந்த மாவட்டத்தின் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.

ஆனாலும் குறைவானவர்களையே கைது செய்திருக்கின்றார்களோ என எண்ணத்தோன்றுகின்றது,. ஏனெனில் நாடு முழுவதும் கஞ்சா பாவனையில் இருக்கும்போது,

கைதானவர்களின் எண்ணிக்கையும் கைதான போதைப்பொருட்களின் அளவுகளும் குறைவாகவே காணப்படுகின்றது.

மீண்டும், தொடர்ந்தும் இவ்வாறான சுற்றிவளைப்புக்களின் மூலமும் திடீர் சோதனைகளின் மூலமும் போதையை ஓரளவேனும் கட்டுக்குள் கொண்டு வரலாமோ என எண்ணத் தோன்றுகின்றது.

பொறுத்திருந்து பார்க்கலாம் அனுர அரசு இந்த போதையை இல்லாதொழிக்க என்ன என்ன எல்லாம் செய்யப்போகின்றார்கள் என

பெண்ணை காணவில்லை தேடும் பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

தேடும் பொலிஸ் பெண்ணை காணவில்லை

தேடும் பொலிஸ் பெண்ணை காணவில்லை

தேடும் பொலிஸ் பெண்ணை காணவில்லை , நடக்கும் மர்ம கடத்தல்கள் காணாமல் போதல் என்பன இடம்பெற்றவண்ணம் உள்ளது .

திருகோணமலை மாவட்டத்தின் வேறு பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தற்பொழுது இலங்கை காவல்துறை தெரிவிக்கின்றனர்.

பெண்ணே காணவில்லை

அதன் அடிப்படையில் 53 வயது உடைய பெண்ணே. தற்போது காணாமல் போய் உள்ளதாகவும் இவருக்கு என்ன நடந்தது என்பது.

தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

இந்தப் பெண் சில நேரங்களில் மன அழுத்தம் காரணமாக, மறந்து போய் எங்கேயோ சேர்ந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி வழி மாறி சென்று இருந்தால் இவரை அடையாளம் கண்டவர்கள் தமக்கு அறிவிக்கும்படி ,அவரது கணவன் மருமகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

குடும்ப பெண்ணை கடத்தல்

இவர் உண்மையில் கடத்தப்பட்டாரா அல்லது காணாமல் ஆக்கப்பட்டாரா ,அல்லது இடம் உங்களுக்கு மாறி சென்றாரா ,அல்லது மாறி சென்றாரா என்பது தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றனர் .

படத்தில் உள்ள பெண்ணை யாராவது கண்ணுற்றால் , உடனடியாக போலீசாருக்கும் அல்லது அவருடைய பிள்ளைகளுக்கோ அறிய தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்வரும் தொலைபேசி இலக்கம் ஊடாக அவர்கள் தகவலை வழங்குமாறு வேண்டுதல் விடுக்கப்படுகிறது.

எனவே குடும்ப உறவுகளே மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமா இருங்கள் .

யாழில் கடத்தப்பட்ட யுவதி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கடத்தப்பட்ட யுவதி

யாழில் கடத்தப்பட்ட யுவதி

யாழில் கடத்தப்பட்ட யுவதி யாழில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளதோடு இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை (22) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர்.

பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.

பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர்.

இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும்,

இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை பிரிக்க முடியாது, அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவ்வாறான பின்னணியில் வழக்கு நிறைவடைந்து வரும்போது பிற்பகல் 4.37 மணியளவில் பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

இந்நிலையில் இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸார் குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

யுவதியை கடத்திச் செல்லும் காணொளியானது அந்த பகுதியில் காணப்படும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன

லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன

லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன லண்டன் குடும்பம் ஒன்று திருகோணமலையில் ஒரு ஏமாற்று கொள்ளைக்கார குடும்பத்திடம் சிக்கியுள்ளனர். இக் குடும்பத்திற்கு நடந்தது என்ன?

திருகோணமலையிலுள்ள சுலக்சனா (பெயர் மாற்றம்) ஒன்லைன் zoom tuition கிளாஸ் எடுக்க முன்வந்ததன் மூலம் லண்டன் குடும்பம் அறிமுகம் ஆனது.

அதன் மூலம் அறிமுகம் ஆன பின் ஸ்ரீலங்கா வந்த போது இவர்களது வீட்டிற்கு சென்று தங்கினர்.

திட்டமிட்ட சுலக்சனா அவரது அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் இந்த லண்டன் குடும்பத்திடம் 10 இலக்சம் ரூபாயினை கேட்டுவாங்கியுள்ளனர்,

10 லட்சம் பணம் வாங்கி பின்பு தருவதாய் ஏமாற்றி குடும்பம் ஆக மோசடி செய்தது. பின்பு மொத்த குடும்பமும் wats up இல் லண்டன் நம்பரை Block செய்துள்ளதாக லண்டன் குடும்பம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த லண்டன் குடும்பம் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்திருக்கின்றனர்.

ஆனால் பொலிசார் கருத்தில் எடுப்பதில்லை என மட்டக்களப்பு இரகசியம் உள் பெட்டிக்கு தெரியப்படுத்தி உள்ளனர். இருந்தபோதிலும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.

இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கவனமாய் செயட்படவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

இந்த குடும்பம் பலரை இவ்வாறு இலக்கு வைத்து செயற்பட்டு வருகிறது என தற்போது தெரியவந்துள்ளது.

முன்பு பிரான்ஸ் இல் இருந்து வந்த ஒரு குடும்பத்தினரிடமும் மேற்படி முறையில் பணம் வாங்கிய குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ள நிலையில், தற்போது லண்டன் குடும்பம் ஏமாறியுள்ளது.

பொலிசார் மோசடி குடும்பத்திற்கு சார்பாக செயற்பட்டு வருகின்றனர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக முகநூல் பக்க செய்திகள் படங்களோடு செய்திகள் வெளியிட்டுள்ளன.

5000 பொலிஸ் அதிகாரிகளை பணியில் சேர்க்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

5000 பொலிஸ் அதிகாரிகளை பணியில் சேர்க்க நடவடிக்கை

5000 பொலிஸ் அதிகாரிகளை பணியில் சேர்க்க நடவடிக்கை

5000 பொலிஸ் அதிகாரிகளை பணியில் சேர்க்க நடவடிக்கை ,இந்த ஆண்டு (2025) இலங்கை பொலிஸ் சேவையில் 5,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2,000 அதிகாரிகளை மிக விரைவாக பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 3,000 பேர் டிசெம்பரில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளிடையே திங்கட்கிழமை (21) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்கமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பொலிஸ் அதிகாரிகளின் சேவையை மிகவும் திறமையாகவும், திறம்படவும் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை பொலிஸ் சேவைக்கு தனி சம்பள அமைப்பை தயாரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் ,தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் டி.எம்.யு.எம். திசாநாயக்க, விசேட பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஏ.ஜே. விஷாந்த, பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு, மேலதிகமாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவருக்கு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ்

லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ்

லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ் செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது .

வாகன சாரதிகள் சாலை கட்டுப்பாடுகளை மறந்து வாகனம் , போதை தூக்கத்தில் வாகனத்தை ஒட்டி செல்வதால் நாள் தோறும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன .

வீதிக்கு வீதி போலீசார் குவிக்க பட்டுள்ள பொழுதும் ,இவ்விதம் இடம்பெறும் வாகன விபத்துக்களை தடுக்க முடியவில்லை .

காட்டன் பகுதியில் புண்ணாக்கு ஏற்றி சென்ற லொறி ஒன்றே சாலையை விட்டு தடம் புரண்டது விபத்தில் சிக்கியது .

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் ,யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் திங்கட்கிழமை (17) நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது

வழக்கு ஒன்றை இல்லாது செய்வதாக கூறி, யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரின் மகன் ஒருவர்

20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் இலஞ்சம் வழங்கியவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த வகையில் குறித்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் இலஞ்சம் பெற்ற நபரை கைது செய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (17) முன்னிலையாகினர்.

இதன்போது குறித்த சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கேகாலை உப பொலிஸ் பரிசோதகர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கேகாலை உப பொலிஸ் பரிசோதகர் கைது

கேகாலை உப பொலிஸ் பரிசோதகர் கைது

கேகாலை உப பொலிஸ் பரிசோதகர் கைது ,பொலிஸ் கெப் வண்டியை முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றத்திற்காக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் நேற்று (27) வரகாபொல, தொலங்கமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது சந்தேகநபர் குடிபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கேகாலை மொலகொட பகுதியைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஆவார், இவர் கேகாலை பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வருகிறார்.

சந்தேகநபர் கேகாலை பொலிஸ் நிலையத்திலிருந்து அம்பேபுஸ்ஸவுக்கு அலுவலக வேலைக்காக கேகாலை பொலிஸுக்கு சொந்தமான கெப் வண்டியில் பயணம் செய்திருந்தார்.

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கலிகமுவ, கொப்பேவல பகுதியில் இவ்வாறு பயணித்த பொலிஸ் பரிசோதகர் எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு, உப பொலிஸ் பரிசோதகர் வரகாபொல நோக்கி வண்டியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.

விபத்தில் சிக்கிய நபரும் சம்பவ இடத்தில் இருந்த சிலரும் வரகாபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொலங்கமுவ பகுதி வரை கெப் வண்டியை வண்டியைத் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

பின்னர், வரகாபொல பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வரகாபொல பொலிஸ் அதிகாரிகள், சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகரை கெப் வண்டியுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோகதர் பின்னர் வரகாபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC)யின் அறிவுறுத்தலின் பேரில் வரகாபொல ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரிடம் முற்படுத்தப்பட்ட போது அவர் குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் வரகாபொல பொலிஸாரால் கேகாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அமைச்சர் மீது நாமல் கடும் விமர்சனம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அமைச்சர் மீது நாமல் கடும் விமர்சனம்

பொலிஸ் அமைச்சர் மீது நாமல் கடும் விமர்சனம்

பொலிஸ் அமைச்சர் மீது நாமல் கடும் விமர்சனம் ,நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, எமது குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுவதற்கே இந்த அரசாங்கம் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக குற்றம்சாட்டியுள்ளார்.

யோஷித ராஜபக்ஷவை இன்று (27) காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில், அப்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் தாம் என்றாலும், அதற்கான விலையை தனது சகோதரர் கொடுக்க வேண்டியிருந்தது என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

” ஏன் இதைச் செய்கிறார்கள் என்று என்னிடம் கேட்க வேண்டாம்.”

அதனை பிரதி பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் அமைச்சர் மற்றும் நாட்டின் ஜனாதிபதியிடம் கேளுங்கள்.

ஆனால், நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் செலவிட வேண்டிய நேரத்தை, அரசியல்வாதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வேட்டையாடுவதற்கு அரசாங்கம் பயன்படுத்துகிறது.

பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியது நான் தான். சிறைக்கு செல்வது எனது தம்பி.

நெடுஞ்சாலை வழியாக பெலியத்த வரை வந்து அவரைக் கைது செய்தது வீண். எங்களை வர சொன்னால் நாங்கள் வருவோம் அல்லவா.

எரிபொருளை நிரப்பிவிட்டு பெலியாத்தவுக்குச் சென்றது வீண்தானே. அழைத்திருந்தால் வந்து உங்கள் சாட்சியத்தை அளிப்போம்.

நாங்கள் தவறு செய்திருந்தால், அதை நீதிமன்றத்தில் நிரூபியுங்கள். ஊடகங்களுக்கு படம் காட்டி மக்களின் பணத்தை வீணாக்காதீர்கள்.

இந்த வழக்கை, ஊழல் தடுப்புக் குழுவின் செயலாளரான தற்போதைய பொலிஸ் அமைச்சரே தொடங்கினார்.

அவர் தனது கடந்த கால ஆதாரங்களைப் பயன்படுத்தி, இன்று அதே வழியில் தனது அரசியல் வேட்டையை செயல்படுத்த முயற்சிக்கிறார்.

அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அடக்கி, தனது சொந்த அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கிறது.

நாங்கள் தெளிவாகத் தவறு செய்திருந்தால், அந்தத் தவறை நீதிமன்றத்தில் நிரூபியுங்கள். “ஊடகங்களுக்கு படம் காட்டி பணத்தை வீணாக்காதீர்கள்.” என்றார்.

பொலிஸ் நிலையம் முன்பாக பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் நிலையம் முன்பாக பதற்றம்

பொலிஸ் நிலையம் முன்பாக பதற்றம்

பொலிஸ் நிலையம் முன்பாக பதற்றம் ,மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதேசத்தில் உள்ள சிலரை கைது செய்யப்பட்டதாகக் கூறி, மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் 100இற்கும் மேற்பட்டோர் கூடி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எங்கள் செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் விசாரித்த போது,

மொரட்டுவை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன் மின்பந்தல் கட்டப்பட்டு வருவதாவும், இதனால் அங்கிருந்த ஒரு குழு வீதியை மறித்து செயற்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனால், அவர்களை அந்தப் பகுதியிலிருந்து அகற்ற போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளை மக்கள் குழுவொன்று தடுத்துள்ளது.

இதன்போது, இரு பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டு தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதோடு, இதன்போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காக 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருப்பினும், கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மொரட்டுவை பொலிஸ் நிலைய வளாகத்திற்கு வருகைதந்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த அருட்தந்தை சிரில் காமினி உட்பட பல பாதிரியார்களும் வருகைதந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது
Posted in இலங்கை செய்திகள்

400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது

400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது

400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது , இலங்கை காவல்துறையினால் 400க்கு மேற்பட்டவர்கள் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர் .

இதில் இடம்பெற்ற தந்தையர் சுற்றிவழிப்பு சோதனையின் பொழுதே போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை அடுத்து நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திடீர் சோதனைக்காக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் ,

இந்த போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற ஆண் ,பெண் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர் .

வீடியோ

பலமான பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற வேளையில் ,இந்த கைது இடம் பெற்றுள்ளது .

வீதி விதிமுறைகளை மறந்து போதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்வது மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தி இருக்கிறது.

மனித சடலம் பொலிஸ் காரில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மனித சடலம் பொலிஸ் காரில்

மனித சடலம் பொலிஸ் காரில்

மனித சடலம் பொலிஸ் காரில், அமெரிக்காவில் போலீசாரின் கார் ஒன்றின் பின் ஆசனத்தில் இருந்து இறந்த நிலையில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


காவல்துறை அதிகாரியின் வண்டியின் பின் ஆசனத்தில் இறந்த நிலையில் மனித சடலம் எவ்வாறு அங்கு காணப்பட்டது.

என்பது தொடர்பாகவும் எவ்வாறு அந்த காருக்கு அந்த சடலம் எடுத்துவரப்பட்டது எனது எவ்வாறு இந்த சடலம் உள்ளே காணப்பட்டது .
வீடியோ

என்பது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போலீசார் ஒருவரை கைது செய்து வருகின்ற பொழுது அவர் வருவதற்கு முன்பாக இறந்து விட்டாரா

அல்லது கைது செய்தவரை பல பணி நேரமாக காருக்குள் இவர்கள் வைத்து செய்தார்கள் என்பது தொடர்பாக தற்பொழுது விசாரணையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் காவல்துறையினர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது பழமையான ஒன்றாக காணப்படுகிறது
.


பொலிஸ் உத்தியோகத்தர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் பலி

பொலிஸ் உத்தியோகத்தர் பலி

பொலிஸ் உத்தியோகத்தர் பலி வத்தேகம பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த வீதி விபத்து தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட காருடன் காரின் சாரதியும் மாத்தளையில் நேற்று கைது செய்யப்பட்டதாகவும், காரை மறைப்பதற்கு அவருக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 46 மற்றும் 48 வயதுடைய மாத்தளை மற்றும் உதிஸ்பத்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இராணுவ முகாமில் சுகயீனம்
Posted in இலங்கை செய்திகள்

54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 35 சிரேஷ்ட பொலிஸ்

அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தவிர 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ்.முத்துமால

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ் தெஹிதெனிய, நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற

குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை

மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் குறித்த பொலிஸ் அதிகாரி 270,000 ரூபா பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக கேட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முறைப்பாட்டாளரால் குளிரூட்டியை கொள்வனவு செய்த விற்பனை நிலையத்தின் முகாமையாளரின் கணக்கில் குறித்த தொகை வரவு

வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது செய்யப்பட்டுள்ளது.

64000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில்
Posted in இலங்கை செய்திகள்

64000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில்

64000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில்

64000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ,பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று (12) முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுமார் 64,000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் தேர்தல் நடைபெறும் நாளிலும், அதற்கு மறுநாளிலும், தேவைப்பட்டால், அதற்குப் பின்னரும் பொலிஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சுமார் 64,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3,200 உத்தியோகத்தர்கள் கடமைக்காக தயாராக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.