முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்
Spread the love

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார் ,முல்லைத்தீவு பகுதியில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்ட சடலத்தை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று வியாழக்கிழமை (22) மாலை மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .